பகுதி _ 5
சுபாங்கி அந்த வாழ்க்கை முறைக்கு தன்னை மெல்ல மெல்ல பழக்கபடுத்திக்கொண்டாள். காலையில் விழித்தவுடன் பின்புறம் மாட்டுக் கொட்டகை பக்கம் ஒரு வாக். அதன் பின் குளியல், உணவு.....
பின் பகல் முழுதும் பிரபாவதியின் புடவையைப் பிடித்துக்கொண்டு அத்தை.. அத்தை..என்று அவர் பின்னே சுற்றுவாள்.இரவும் அவருடன் அவர் அறையிலேயே உறங்கி விடுவாள். இரவானால் மிரண்ட குழந்தை போல தன்னிடம் ஒண்டிக்கொள்ளும் அவளை தனாவின் அறைக்கு போம்மான்னு சொல்லவும் அவருக்கு மனம் வரவில்லை. அவன் இயல்பாக இருந்தால் அனுப்பி இருப்பார் தான். அவன் தான் கடத்தி வந்து தாலி கட்டியதுடன் தன வேலை முடிந்தது என்பது போல் நடந்து கொண்டானே.பின்னும் ஏன் அவளை அனுப்ப வேண்டும்.. இருவருக்கும் சற்று காலம் தேவை என்பதை புரிந்து கொண்டவர் போல பிரபாவதியும் அவர்கள் தனிப்பட்ட விடயம் எதிலும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.
காலை உணவு.... அந்த நேரம் தான் அனேகமாக அவள் தனஞ்சயனை சந்திப்பது. சில வேளைகளில் முகிலனும் உடனிருப்பான்.அவன் இருந்தால் உணவு வேளை கலகலப்பாக கழியும்.
சுபிக்கு சரியாக அவனும் பேசுவான்.அவளுக்கு அவன் கூட பேசும் போது அவள் தம்பி பப்பு நினைவுக்கு வருவான்.அவள் கூட சரிக்கு சரி வாயடித்து போட்டி போடும் தம்பி......அவள் முகம் வாடினால் பொறுக்காத தம்பி......
ஹ்ம்ம்..அவன் இப்போது அவளைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருப்பான்...அவன் அக்கா இப்படி ஒரு செயலைச் செய்திருப்பாள் என்று நம்புவானா?? அப்புறம் விபு..விபாங்கி..அவள் தங்கை.இருவரும் நல்ல தோழிகள் போல எவ்ளோ க்ளோஸ் ஆக இருப்பார்கள்.அவள் அடி மனதின் அந்தரங்கம் தெரிந்த ஒரே ஆள் அவள்தானே!!!
அவர்கள் இருவரும் அவள் பேசினால் புரிந்துகொள்வார்கள்.ஆனால் அவர்கள் கூட அப்பாவைத் தாண்டி பேசுவது கடினம்.அதைவிடவும் கடினம் தனஞ்சயனைத் தாண்டி அவர்களுடன் அவள் பேச முயற்சிப்பது.
ஹ்ம்ம் இங்கு வந்த மறுநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு அனைவரும் தூங்கியபின் திருட்டுத்தனமாக வீட்டு லேன்ட் லைனில் இருந்து தங்கை விபுவின் எண்ணுக்கு அழைத்தாள்.ஆனால் மறுபுறம் கேட்டது தனாவின் குரல்.
என்னடா மேடம் அதிபுத்திசாலித்தனமாய் எந்த முயற்சியும் எடுக்க காணோமேன்னு நினைத்தேன் செய்துவிட்டாய்.ஏண்டி... என்னை என்ன அவ்ளோ கேனைன்னு நினைச்சியா?? என்று உறுமியவன் தொடர்ந்து
என்ன அப்பன் கூட பேசணும்னு தோணுதா?? நடந்த எல்லாம் சொல்லனும்னு தோணுதா?? ஒண்ணு பண்ணேன்... பேசாம உங்க வீட்டுக்கே போய் உங்க அப்பா கூட பேசிட்டே இரேன். எனக்கு நீ போறதில எந்த ஆட்சேபனையும் இல்ல. இந்த ஊருக்கு முன்னால உன்ன கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன் பண்ணிட்டேன்.
இப்போ நீ போய் உங்க அப்பன் வீட்டில இருந்தாலும் உன் பேரு இனி தனஞ்சயன் பொண்டாட்டி தாண்டி. அது எனக்கு போதும். உன் அப்பனின் நிம்மதிய குலைக்கவும் அந்த ஒரு வார்த்தை போதும்டி. என்றான் வன்மத்துடன்.
இதுக்கு மேல உன் அப்பனோட பேசணுமா இல்லையான்னு நீயே முடிவு பண்ணிக்கோ என்று அழுத்தமாய் உரைத்தவன் போனை வைத்துவிட்டான்.
அதன் பிறகு சுபாங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.எதற்கு சும்மா இருக்கும் சிங்கத்தை சொறிந்து விடணும் பின் அது மேலே விழுந்து பிறாண்டனும்.. வேணாம் என்று விட்டுவிட்டாள்.
தாய் தந்தை தம்பி தங்கை என்று வீட்டு நினைவு வரும் போது மிகவும் கஷ்டமாய் இருக்கும். அறையை பூட்டிவிட்டு உள்ளே இருந்து கண்ணீர் சிந்துவாள்.வெளியே அதுவும் தனா முன்பு கண்ணீர் சிந்திவிட்டால் அவள் சுய கௌரவம் என்னாவது?? அந்த முதல் நாளுக்கு பின் அவன் முன்பு தன வருத்தத்தை காட்டிவிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்
அப்படி அவள் மனது மிகவும் கஷ்டப்படும் வேளைகளில் பிரபாவதியின் அன்பும் பரிவும் முகிலனின் நகைச்சுவைப் பேச்சும் பெரிதும் இதம் கொடுத்தது நிஜம்.
முகிலனுக்கு அன்னை இல்லை.தந்தை மட்டும் தான். தனஞ்சயன் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு வசதியான குடும்பமே. சிறுவயதில் இருந்து தனா கூடவே வளர்ந்தவன் மா.எனக்கும் அவன் ஒரு பிள்ளை போலத்தான்.....என்று பிரபாவதி கூறி இருக்கிறார்.
அவன் தனா போல இல்லை.மிகவும் கலகலப்பானவன்.அவன் கூட பழகுவது சுபாங்கிக்கும் இலகுவாக இருந்தது. சொல்லப்போனால் அவன் மீது ஒரு சகோதர பாசமே வந்துவிட்டது.
என்ன சுபாங்கி அம்மையாரே !!!! தனிமைத் தவமோ?? தனியே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவளை முகிலனின் குரல் கலைத்தது.
ஹ்ம்ம் ..வேறு என்ன செய்வது முகிலண்ணா. எவ்ளோ நேரம் தான் அத்தை பின்னாலேயே சுற்றுவது. பாவம் அவர்களும் ஓய்வெடுக்க வேணாமா??
ஹ்ம்ம் நீ பக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு ஓய்வே தேவை இல்லை என்பார்கள். பாவம் சுபாங்கி அவர்கள். தனிமையில் ரொம்பவும் தவித்து போய் இருந்தார்கள். இப்போது நீ வந்ததும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.
ஹ்ம்ம்..ஏனாம் அத்தை கூட சற்று நேரம் அமர்ந்து பேச முடியாத அளவிற்கு உங்கள் உத்தம நண்பனுக்கு அப்படி என்ன வேலையாம்???
ஹ்ம்ம்...அவனுக்கு நிறைய வேலைகள் மா. தென்னத்தோப்பு, மாந்தோப்புன்னு அவற்றை பார்வையிடணும் அப்புறம் தும்புத்தொழிற்சாலை ,ஊறுகாய் பாக்டரி இதெல்லாம் பார்க்கணும் அதோட வயல்....இன்னும் வெளி வேலைகள் அவன் தனிப்பட்ட வேலைகள்னு..........
ஒஹ் ..உங்க பிரெண்ட் பெரிய ஆள்தான்னு சொல்லுங்க. அவள் குரலில் நக்கல் தெறித்தது.
ம்ம்... உன் புருஷன் ரொம்ப பெரிய ஆள் தான் மா.
காமெடி பண்ணாதீங்க முகிலண்ணா.
சுபாங்கி ...நீ புத்திசாலி. என்னதான் இருந்தாலும் நடந்தது நடந்துவிட்டது.
வெயிட் ....வெயிட்.. மீதிய நான் சொல்றேன்...அடித்தாலும் பிடித்தாலும் அவன் தான் இனி உன் கணவன். என்னவோ சொல்வாங்களே.....ஹ்ம்ம்....ஹான்... கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.... சோ ...அவன திருத்தி அவன் கூட நல்லபடியா வாழ ட்ரை பண்ணு. இது தான் இனி உன்னோட வாழ்க்கை...எக்ஸ்ட்ரா ..எக்ஸ்ட்ரா.... ..இத தானே சொல்ல வந்தீங்க??
சுபி....
வேணாம்..முகிலண்ணா..விட்டிருங்க....இப்போதைக்கு இத பத்தி எதுவும் பேச வேணாம்.
சரிம்மா உன் இஷ்டம். நீ புத்திசாலி பார்த்து நடந்துக்கோ..
அச்சோ ..அண்ணா..யார் இந்த பொய்ய உங்களுக்கு சொன்னது?? நா படு மொக்கு. லாஸ்ட் பெஞ்ச் பார்ட்டியாக்கும்.
ஹ ஹ.....சுபி..... தப்புதான் தாயே விட்டிரு. முகிலன் கைதூக்கி சரணடைவது போல் பாவனை செய்ய இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.
அந்த சிரிப்பை பார்த்தபடியே வீட்டினுள் நுழைந்த தனாவின் விழிகளில் சிறு குழப்பம் மின்னி மறைந்தது.
சுபாங்கி அந்த வாழ்க்கை முறைக்கு தன்னை மெல்ல மெல்ல பழக்கபடுத்திக்கொண்டாள். காலையில் விழித்தவுடன் பின்புறம் மாட்டுக் கொட்டகை பக்கம் ஒரு வாக். அதன் பின் குளியல், உணவு.....
பின் பகல் முழுதும் பிரபாவதியின் புடவையைப் பிடித்துக்கொண்டு அத்தை.. அத்தை..என்று அவர் பின்னே சுற்றுவாள்.இரவும் அவருடன் அவர் அறையிலேயே உறங்கி விடுவாள். இரவானால் மிரண்ட குழந்தை போல தன்னிடம் ஒண்டிக்கொள்ளும் அவளை தனாவின் அறைக்கு போம்மான்னு சொல்லவும் அவருக்கு மனம் வரவில்லை. அவன் இயல்பாக இருந்தால் அனுப்பி இருப்பார் தான். அவன் தான் கடத்தி வந்து தாலி கட்டியதுடன் தன வேலை முடிந்தது என்பது போல் நடந்து கொண்டானே.பின்னும் ஏன் அவளை அனுப்ப வேண்டும்.. இருவருக்கும் சற்று காலம் தேவை என்பதை புரிந்து கொண்டவர் போல பிரபாவதியும் அவர்கள் தனிப்பட்ட விடயம் எதிலும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.
காலை உணவு.... அந்த நேரம் தான் அனேகமாக அவள் தனஞ்சயனை சந்திப்பது. சில வேளைகளில் முகிலனும் உடனிருப்பான்.அவன் இருந்தால் உணவு வேளை கலகலப்பாக கழியும்.
சுபிக்கு சரியாக அவனும் பேசுவான்.அவளுக்கு அவன் கூட பேசும் போது அவள் தம்பி பப்பு நினைவுக்கு வருவான்.அவள் கூட சரிக்கு சரி வாயடித்து போட்டி போடும் தம்பி......அவள் முகம் வாடினால் பொறுக்காத தம்பி......
ஹ்ம்ம்..அவன் இப்போது அவளைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருப்பான்...அவன் அக்கா இப்படி ஒரு செயலைச் செய்திருப்பாள் என்று நம்புவானா?? அப்புறம் விபு..விபாங்கி..அவள் தங்கை.இருவரும் நல்ல தோழிகள் போல எவ்ளோ க்ளோஸ் ஆக இருப்பார்கள்.அவள் அடி மனதின் அந்தரங்கம் தெரிந்த ஒரே ஆள் அவள்தானே!!!
அவர்கள் இருவரும் அவள் பேசினால் புரிந்துகொள்வார்கள்.ஆனால் அவர்கள் கூட அப்பாவைத் தாண்டி பேசுவது கடினம்.அதைவிடவும் கடினம் தனஞ்சயனைத் தாண்டி அவர்களுடன் அவள் பேச முயற்சிப்பது.
ஹ்ம்ம் இங்கு வந்த மறுநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு அனைவரும் தூங்கியபின் திருட்டுத்தனமாக வீட்டு லேன்ட் லைனில் இருந்து தங்கை விபுவின் எண்ணுக்கு அழைத்தாள்.ஆனால் மறுபுறம் கேட்டது தனாவின் குரல்.
என்னடா மேடம் அதிபுத்திசாலித்தனமாய் எந்த முயற்சியும் எடுக்க காணோமேன்னு நினைத்தேன் செய்துவிட்டாய்.ஏண்டி... என்னை என்ன அவ்ளோ கேனைன்னு நினைச்சியா?? என்று உறுமியவன் தொடர்ந்து
என்ன அப்பன் கூட பேசணும்னு தோணுதா?? நடந்த எல்லாம் சொல்லனும்னு தோணுதா?? ஒண்ணு பண்ணேன்... பேசாம உங்க வீட்டுக்கே போய் உங்க அப்பா கூட பேசிட்டே இரேன். எனக்கு நீ போறதில எந்த ஆட்சேபனையும் இல்ல. இந்த ஊருக்கு முன்னால உன்ன கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன் பண்ணிட்டேன்.
இப்போ நீ போய் உங்க அப்பன் வீட்டில இருந்தாலும் உன் பேரு இனி தனஞ்சயன் பொண்டாட்டி தாண்டி. அது எனக்கு போதும். உன் அப்பனின் நிம்மதிய குலைக்கவும் அந்த ஒரு வார்த்தை போதும்டி. என்றான் வன்மத்துடன்.
இதுக்கு மேல உன் அப்பனோட பேசணுமா இல்லையான்னு நீயே முடிவு பண்ணிக்கோ என்று அழுத்தமாய் உரைத்தவன் போனை வைத்துவிட்டான்.
அதன் பிறகு சுபாங்கி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.எதற்கு சும்மா இருக்கும் சிங்கத்தை சொறிந்து விடணும் பின் அது மேலே விழுந்து பிறாண்டனும்.. வேணாம் என்று விட்டுவிட்டாள்.
தாய் தந்தை தம்பி தங்கை என்று வீட்டு நினைவு வரும் போது மிகவும் கஷ்டமாய் இருக்கும். அறையை பூட்டிவிட்டு உள்ளே இருந்து கண்ணீர் சிந்துவாள்.வெளியே அதுவும் தனா முன்பு கண்ணீர் சிந்திவிட்டால் அவள் சுய கௌரவம் என்னாவது?? அந்த முதல் நாளுக்கு பின் அவன் முன்பு தன வருத்தத்தை காட்டிவிடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்
அப்படி அவள் மனது மிகவும் கஷ்டப்படும் வேளைகளில் பிரபாவதியின் அன்பும் பரிவும் முகிலனின் நகைச்சுவைப் பேச்சும் பெரிதும் இதம் கொடுத்தது நிஜம்.
முகிலனுக்கு அன்னை இல்லை.தந்தை மட்டும் தான். தனஞ்சயன் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு வசதியான குடும்பமே. சிறுவயதில் இருந்து தனா கூடவே வளர்ந்தவன் மா.எனக்கும் அவன் ஒரு பிள்ளை போலத்தான்.....என்று பிரபாவதி கூறி இருக்கிறார்.
அவன் தனா போல இல்லை.மிகவும் கலகலப்பானவன்.அவன் கூட பழகுவது சுபாங்கிக்கும் இலகுவாக இருந்தது. சொல்லப்போனால் அவன் மீது ஒரு சகோதர பாசமே வந்துவிட்டது.
என்ன சுபாங்கி அம்மையாரே !!!! தனிமைத் தவமோ?? தனியே தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தவளை முகிலனின் குரல் கலைத்தது.
ஹ்ம்ம் ..வேறு என்ன செய்வது முகிலண்ணா. எவ்ளோ நேரம் தான் அத்தை பின்னாலேயே சுற்றுவது. பாவம் அவர்களும் ஓய்வெடுக்க வேணாமா??
ஹ்ம்ம் நீ பக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு ஓய்வே தேவை இல்லை என்பார்கள். பாவம் சுபாங்கி அவர்கள். தனிமையில் ரொம்பவும் தவித்து போய் இருந்தார்கள். இப்போது நீ வந்ததும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.
ஹ்ம்ம்..ஏனாம் அத்தை கூட சற்று நேரம் அமர்ந்து பேச முடியாத அளவிற்கு உங்கள் உத்தம நண்பனுக்கு அப்படி என்ன வேலையாம்???
ஹ்ம்ம்...அவனுக்கு நிறைய வேலைகள் மா. தென்னத்தோப்பு, மாந்தோப்புன்னு அவற்றை பார்வையிடணும் அப்புறம் தும்புத்தொழிற்சாலை ,ஊறுகாய் பாக்டரி இதெல்லாம் பார்க்கணும் அதோட வயல்....இன்னும் வெளி வேலைகள் அவன் தனிப்பட்ட வேலைகள்னு..........
ஒஹ் ..உங்க பிரெண்ட் பெரிய ஆள்தான்னு சொல்லுங்க. அவள் குரலில் நக்கல் தெறித்தது.
ம்ம்... உன் புருஷன் ரொம்ப பெரிய ஆள் தான் மா.
காமெடி பண்ணாதீங்க முகிலண்ணா.
சுபாங்கி ...நீ புத்திசாலி. என்னதான் இருந்தாலும் நடந்தது நடந்துவிட்டது.
வெயிட் ....வெயிட்.. மீதிய நான் சொல்றேன்...அடித்தாலும் பிடித்தாலும் அவன் தான் இனி உன் கணவன். என்னவோ சொல்வாங்களே.....ஹ்ம்ம்....ஹான்... கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.... சோ ...அவன திருத்தி அவன் கூட நல்லபடியா வாழ ட்ரை பண்ணு. இது தான் இனி உன்னோட வாழ்க்கை...எக்ஸ்ட்ரா ..எக்ஸ்ட்ரா.... ..இத தானே சொல்ல வந்தீங்க??
சுபி....
வேணாம்..முகிலண்ணா..விட்டிருங்க....இப்போதைக்கு இத பத்தி எதுவும் பேச வேணாம்.
சரிம்மா உன் இஷ்டம். நீ புத்திசாலி பார்த்து நடந்துக்கோ..
அச்சோ ..அண்ணா..யார் இந்த பொய்ய உங்களுக்கு சொன்னது?? நா படு மொக்கு. லாஸ்ட் பெஞ்ச் பார்ட்டியாக்கும்.
ஹ ஹ.....சுபி..... தப்புதான் தாயே விட்டிரு. முகிலன் கைதூக்கி சரணடைவது போல் பாவனை செய்ய இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.
அந்த சிரிப்பை பார்த்தபடியே வீட்டினுள் நுழைந்த தனாவின் விழிகளில் சிறு குழப்பம் மின்னி மறைந்தது.