• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பா. ரேஷ்மா

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
கதிரேசா ,கதிரேசா என்று குரல் வந்ததும் தூங்கிக் கொண்டிருந்த போதிலும் தன் அண்ணன் வந்திருப்பதை புரிந்துக்கொண்டார் கதிரேசன்.இதோ வந்துட்டேன் அண்ணே .மெல்ல வா தம்பி ஒன்னும் அவசரம் இல்ல.நம்ம வயலுல வேலைப்பாக்குற செல்லம்மா மகளுக்கு இன்னிக்கு திருமணமாம்

அதனால நம்ம தான் செல்லம்மா அன்னான் இடத்துல இருந்து மடபத்துல வேலை பாக்கணும்.பாவம் புருஷன் நம்ம நிலத்துலயே கம்பி தாக்கிஇறந்துட்டான்.ஒத்தப்புள்ளய வச்சுக்கிட்டு கஷ்டப்படுது இல்லையா? ஆமாண்ணே.அது இருக்கட்டும் மன்னி காலையில வெளியூர் போறதா என் மனைவி வேணிக் கிட்ட சொன்னங்கலாமே.

ஆமாம் கதிரேசா உங்க மன்னியோட

அம்மா நோய்வாய்ப்பட்டு கிடக்குறாங்க .நம்ம வயலுல இருந்து சில நெல்மணிகளையும்,தர்பூசணி பழங்களையும் பறித்து தரலாம்னு நினைக்கிறேன்.நீ என்ன நினைக்குறே ?நீங்களே முடிவு

பண்ணதுக்கு அப்புறம் ஏன் என்னிடம் கேக்குறீங்க அண்ணா?

நம்ம யாருக்கு கொடுக்கப் போறோம்

நம்ம மன்னி குடும்பத்துக்குத் தானே அதுக்குப் போய் என்கிட்ட கேட்டுட்டு

இருக்கீங்க இல்ல கதிரேசா முறைன்னு ஒன்னு இருக்கு அல்லவா?என்னதான் தாயா சேயா பழகினாலும் வாயும் வயிரும் வேறு வேறு தானே ?அந்த நிலத்துல உனக்கும் உன் மனைவிக்கும் உரிமை இருக்கு உன்கிட்ட ஒரு வார்த்தை கேக்குறது நல்லது. அண்ணே நீங்க என்ன செஞ்சாலும் என் நல்லதுக்கு தான் இருக்கும் என்றான் கதிரேசன்.நாம பேசிக்கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது கதிரேசா வயல் விஷயமா நம்ம ரெண்டு பேரையும் விவசாயிகள் சில பேர் கூப்பிட்டு இருக்காங்க.அது சம்மந்தமா. தான் நான் இங்கே வந்தேன் வா போவோம்.அண்ணேன் சற்று பொறுங்க .வேணிய அழைக்கிறேன்.வேணி,வேணி வெளியே வா!இதோ வந்துட்டேன்ங்க

வாங்க மாமா .ஒரு குவளை தேநீர் குடிச்சுட்டு போங்க. இருக்கட்டும்மா .நம்ம வீடு தானே.இன்னொரு நாள் வரேன்.கதிரேசனா அழைச்சுக்கிட்டு

போக தான் வந்தேன்.கதிரேசா போவமோ?போகலாண்ணே .வேணி வரேம்மா.ஆம் பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க .அண்ணா என்ன விஷயமா நம்ம கிட்ட பேசனுமாம்.தெரியலயே நானே அதுக்குத்தான் அவசர அவசரமா வந்தேன்.இதோ வயலே வந்துடுச்சே!

நம்மை வர சொன்ன விவசாயிகளிடமே கேட்போமே.

வணக்கம் ஐயா. வணக்கம் எது குறித்து பேச வந்தீங்க?ஐயா நம்ம நிலத்துக்கு பக்கத்துல உங்ககிட்ட வேலை செஞ்ச முத்தையாவோட நிலம் இருக்குல்ல அதை அவரு கத்தரிக்காய்,வெண்டைக்காய்னு சில காய்களை பயிரிட்டு வச்சுருக்காறு.அதனாலென்ன பிரச்சனை?ஐயா அந்த வயலை பல பேர் குத்தகைக்கு கேட்டாங்க.அவரு யாருக்கும் தர தயாரா இல்லைனு சொல்லிட்டாரு.ஆனா நம்ம கிராமத்துக்கு நகரத்துல இருந்து சிலப் பேரு வந்து முதையாவோட நிலத்துக்கு விலை பேசுறாங்கய்யா.அந்த நிலத்தை வாங்குறதுனால அவங்களுக்கு என்ன லாபம்?ஐயா அந்த நிலத்துல அவங்க நகரத்துல இருக்குறதுப்போல ஒரு துணிக்கடையோ அல்லது நகைக்கடையோ கட்டப்போறாங்கலாம்.

அதுமட்டுமில்லாமல் அந்த நிலத்தோட மதிப்பு 8 லட்சம் தான் ஐயா அதோட சேர்த்து எவ்வளவு வேணாலும் தரன்னு சொல்லிட்டாங்கய்யா.மகுடி ஊதுனா அதுக்கு வசப்படாத பாம்பு இருக்குமா ?முத்தையா அந்த மதிப்புக்கு கீழ கேட்டா கூட நிலத்தை கொடுத்துருவாரு ஐயா .அவரு நிலைமை அப்படி இருக்கு .என்ன சொல்றிங்க ஒன்னும் புரியலயே. அவரு மகளுக்கு திருமணம் செய்யப் போறாரு ஐயா. அதனால தான் நான் அப்படி சொன்னேன்.அந்த நிலத்துனால நகரக்காரங்களுக்கு

ஏற்படுற லாபத்தை விட அதிக நட்டம்

நமக்கு தான் ஐயா பயிர்கள் அனைத்தும் அழிஞ்சு போய்டுச்சுன்னா நம்ம கிராமத்தில இருக்குறவங்களுக்கு காயே கிடைக்காது .அதுமட்டுமின்றி நாம தான் நகரத்துக்கு போய் காய்கறிகளை வாங்கிட்டு வரணும்.அங்கிருந்து வருவதற்குள் காய்கள் நசுங்கி அல்லது அழுகி போகிடும்.நம்ம குழந்தைகளுக்கு மருந்து தெளிக்கப்பட்ட உணவு மட்டுமே கிடைக்கும். அதை சாப்பிட்டு அரோக்கியமில்லாமல் போகிடும் ஐயா. அங்கே 178 வருசமா இருக்கின்ற வேப்ப மரம் ,மாமரம் எல்லாம் அழிந்திடும்.காற்று கிடைக்காது.மழை வராது.வெப்பம் அதிகமாகும் .காற்று மாசுபாடு,வாகன போக்குவரத்து, நீர் பட்றாகுறை எல்லாம் அதிகமாகி நம்ம கிராமமே அழிந்து போயிடும் ஐயா. இதெல்லாம் ஏன் ராமசாமி என்கிட்ட சொல்றீங்க?ஐயா வேற ஒருத்தர் நம்ம முத்தையா நிலத்தை வாங்குறதுக்கு பதிலா நாமே வாங்கிக்கலாமே .அதனால நமக்கு ஒரு நட்டமும் இல்லையே!லாபம் தானே லாபம் .லாபம் தான் ஆனா முத்தையா ஒத்துக்கணுமே.அதெல்லாம் ஒத்துப்பாரு ஐயா.அவரு யாரு ,நீங்க தொழில் சொல்லிக் கொடுத்து வளர்ந்தவர் தானே .உங்க சொல்பேச்சு தட்ட மாட்டார் .நல்ல யோசனை ராமசாமி! கதிரேசா உன் மனசுல நீ என்ன நினைக்குறே?நீங்க எடுக்கிற முடிவு தான் என் முடிவும்.

தம்பி சம்மதம் சொல்லிட்டான். உங்க எல்லாருக்கும் சம்மதம் தானே!ஐயா எங்களுக்கு முழு சம்மதம் .அண்ணே ஆனா நம்ம கிட்ட போதுமான பணம் இல்லயே.நீங்க ஏன் ஐயா கவலைப்படுறீங்க.நாங்க எல்லாரும் இதுவரை உங்ககிட்ட வேலை டீஸ் நீங்க எங்க ஒருஒருத்தருக்கும் சேமிப்பு தொகையா( 20,000) இருபதாயிரம் வங்கியில் செலுத்தி வந்தீர்களே. அப்படி பார்த்தால் 30 பேருக்கும் எவ்வளவு வரும்?(6,00,000) ஆறு லட்சம்.வருது மனோகரா.சரி நான் இப்போ முத்தையாக் கிட்ட பேசுறேன் .நீங்க எல்லாரும் உங்க வயல் வேலையை முடிங்க .கதிரேசா நீ அந்த பழைய கணக்கு எல்லாத்தையும் பார்த்து (2,00,000) இரண்டு லட்சம் திரட்டி வை.நான் முத்தையா வீட்டுக்கு போய்ட்டு வரேன் .முத்தையா,முத்தையா என வேலுமணி கூற, யாருன்னு தெரியலயே என புலம்பிக்கொண்டே

வந்தார் முத்தையா. தன் முன்னாள் முதலாளியை பார்த்தவுடன், ஐயா வாங்கய்யா வணக்கம் ஐயா!உள்ளே வாங்க என கூற கொஞ்சம் பொறு முத்தையா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயமா பேச வந்தேன்.சொல்லுங்கய்யா .இதை கேட்டா நீ என்ன நினைப்பேன்னு

தெரியல .நீங்க கேட்டா என் உயிரையும் தர தயாரா இருக்கேன்.உங்க சம்பளத்தில் தான் இந்த அனாதையின் உயிரே பிழைச்சிருக்கு .இல்ல ,முத்தையா உன் நிலத்தை என் பெயருக்கு எழுதி வைக்க முடியுமா?உனக்கு என் சார்பில் 8 லட்சம் கொடுக்கிரேன்.ஐயா நான் நீங்க கேட்டு இல்லைன்னு சொல்ல முடியாது.எடுத்துக்கோங்க ஐயா. சரி

முத்தையா வந்தக் காரியம் முடிந்தது.நான் புறப்படுகிறேன்.இருங்கய்யா சாப்பிட்டுட்டு போங்க.இருக்கட்டும் முத்தையா அப்புறமா வரேன்.வீட்டை நோக்கி சென்றான் வேலு.அம்சா, அம்சா இதோ வரேன்.உள்ள வாங்க மாமா இந்த விஷயத்தை பற்றி உள்ள போய் பேசுனா தான் சரியா வரும்.நம்ம பழனிச்சாமி ஐயா மகன் முத்தையா இருக்கான் இல்ல அவன் நிலத்தை நான் வங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.இருங்க மாமா உங்களுக்கு சர்க்கரை எடுத்துட்டு வரேன்.அதெல்லாம் இருக்கட்டும் அம்சா .ஏன் மாமா எனக்கு ரொம்ப நாளா மாடி வீடு கட்டனும்னு ஆசை

மாமா .அதை நினைவேற்றப்போறீங்க.நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட அந்த நிலத்துல நாம வீடு கட்டப் போறதில்லை.விவசாயம் பண்ணப் போறோம்.என்னை கோபப்படுத்தாதீங்க மாமா விவசாயம் ,விவசாயம்னு அங்க ஒரு மாடி வீடு தான் கட்டணும்.புரிஞ்சிக்காம பேசாத அது நம்ம பணம் இல்லை.

விவசாயிகளோட சேமிப்பு பணமும்

கதிரேசனுடைய 1 வருஷ கணக்கு பணமும் அதுமட்டுமின்றி அதற்காக அவன் செய்த விவசாய வேலையும்,கடின உழைப்பும் அதிகம்.

அதுல போய் நாம வாழணும்னு நினைக்குறியே தப்பு இல்லையா?உங்க தம்பிக்கு ஒரு புள்ளையும் இல்ல ,குட்டியும் இல்ல.விவசாயிகள்

பெயரில் நீங்க தானே சேமிச்சு வெச்சீங்க. அது எப்படி பார்த்தாலும் நம்ம பணம் .நீங்க மத்தவங்களை

பத்தியே யோசிசிங்கன்னா நம்ம குழந்தை நாம இல்லாத போது நடுத்தெருவுல பிச்சை தான் எடுக்கும்.எப்படி சொன்னாலும் நான் ஒத்துக்கவே மாட்டேன்.அது ஏழைகளோட பணம்.நீங்க ஒற்றுக்கொள்ளவில்லை என்றளநானும் என் பிள்ளையும் அரளி விதையை அரைத்து குடித்து செத்துடுவோம்.சரி சம்மதிக்கிறேன் அம்சா.ஆனா இதுக் குறித்து யாருக்கிட்டயும் சொல்லக் கூடாது.புரிஞ்சிதா?என கூறிவிட்டுச் சென்றான்.வயலுக்கு சென்று முத்தையா நிலத்தை நான் வாங்க முத்தையா சம்மதித்துவிட்டார்.என வேலு சிரித்துக் கொண்டே சொல்ல அனைவரும் மகிழ்ந்தனர்.ஆனால் இந்த சிரிப்பிற்குள் ஆழ்ந்த சோகம் இருப்பதை யாரும் அறியவில்லை .

இரவு வேலுவும்,கதிரேசனும் வீட்டிற்கு சென்றனர்.வேணி கேட்டாள், ஏங்க உங்க அண்ணன் முத்தையா நிலத்தை வாங்கியிருக்காராம்.அந்த நிலத்துல வீடு கட்டப் போறாங்களாம் அம்சா அக்கா சொன்னாளே!என்னது வீடா?

அண்ணன் வீடு வாங்கியிருப்பது உண்மை.ஆனா அந்த நிலத்துல சில காய்களை பயிரிட போகிறோம்.மன்னி தவறாக சொல்லியிருப்பாள் என கதிரேஷன் கூறினான்.மறுநாள் ஆனது வழக்கம்போல வயலுக்குச் சென்றான்.அங்கிருந்த பயிர்கள்,மரங்கள் ஒன்றையும் காணவில்லை. உடனே ராமசாமி,எங்களை ஏமாற்றிவிட்டீர்களே ஐயா உங்களுக்கும் அந்த நகரகாரங்களுக்கும் என்ன வித்தியாசம்?எங்க பணத்தை எல்லாம் மோசம் பண்ணிட்டி ங்ளே

முத்தையாவையும் 5 லட்சத்திற்கும் மேலாக ஏமாற்றி விட்டிர்களே.இரு

ராமசாமி இதெல்லாம் அண்ணன் பண்ணியிருக்க மாட்டார்.ஐயா அந்த மரத்தை வெட்டுனவர் பெரிய ஐயா பேரத்தான் சொல்றார்.என்றார் ராமசாமி.வேலு வந்தார்.அண்ணே இந்த மரங்கலை எல்லாம் நீங்க தான் வெட்டச் சொன்னீங்க என ராமசாமி சொல்றரே.ஆமா கதிரேசா .

ஆனா நீங்க இதைப்பற்றி ஒண்ணுமே சொல்லலையே. நான் எவ்லோவோ சொல்லியும் உன் மன்னி கேக்கல. இந்த நிலத்துல ஒரு வீடு கட்டுங்க. இல்லையென்றால் அரளி விதையை அரைச்சு குடிபேண்ணு சொன்னா எனக்கு வேற வழி தெரியவில்லை என்னை மன்னித்து விடு தம்பி.அண்ணா உங்க நிலைமை எனக்கு புரிகிறது.

ஆனா கட்டப்போகிற அந்த ஒரு வீட்டால் இந்த கிராமத்தில் இருக்கின்ற 150 குடும்பங்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுமே. அதுமட்டுமில்லாமல் நம் வயலில் வேளைப் பார்க்கின்றவர்களின் சேமிப்பு பணம் அது .அதை எப்படி நாம் உரிமை கொண்டாடுவது?இந்த மண்ணின் தரம் மரங்கள் மற்றும் செடிகள் வளர்க்க மட்டுமே உரியது.

இங்கு வீடு கட்டினாலும் நிலைக்காது

என்றவுடன்,கதிரேசா என் வளர்ச்சி உணக்கு பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லிவிடு .மறைமுகமாக பேசி பேச்சை வளர்க்கதே.நன்றி கட்டவனே.உடனே வீட்டிற்கு சென்றிடு என்றான் வேலு.

உடனே வேலு வீட்டிற்கு சென்றான். அம்சா உன் ஆசைப்படி இன்னும் மூன்று மாதத்தில் நாம் மாடி வீட்டுக்கு குடிப்பெயரப்போகிறோம். மூன்று மாதம் ஆனது. புதிய வீட்டிற்கு சென்றனர்.பின் ஒரு வருடம் கடந்தது.ஒரு அரசாங்க அலுவலரிடம் இருந்து வேலுவுக்கு அழைப்பு வந்தது .உடனே அலுவலகத்திற்கு விரைந்தான்.ஐயா அம்சா பில்டிங்க்ல

இருந்து வர்றேன் .உங்ககிட்ட தான் சார் பேசணும்.நீங்க கட்டியிருக்க வீட்டோட மண்ணின் தரம் சரியில்லை.இப்படியே போச்சுன்னா ஒரு நாள் உங்க வீடு இடிந்து விழுந்துடும்.உங்கள் வீடு மட்டும் இடியாம பக்கத்தில் இருக்கும் வயல்கள் 10 வீடு என எல்லாம்

அழிந்துவிடும்.அதற்குள் ஒரு வெடிகுண்டை வைத்து இடித்திடலாம். வீடு இடியும் முன் காப்போம் என அரசாங்க அலுவலர் கூறி முடிப்பதற்குள் அம்சாவிடம் இருந்து வேலுவுக்கு அழைப்பு வந்தது.மாமா சுஜாதா வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.அருகிலுள்ள மருத்துவமனைக்கு உங்கள் தம்பி கதிரேசனை அழைத்துச் செல்கிறேன்.என கூறி அழைப்பை துண்டித்தாள். மருத்துவமனைக்குச்

சென்றனர்.உடனே வேலு பதரியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தான்.அண்ணா பொறுமையா வாங்க ,சுஜாவுக்கு உணவுப்பொருள் விஷமாகி(food poison) விட்டது.மருந்து தெளித்த காய்கறிகளை நீரில் கழுவாமல் அப்படியே சமைத்ததால் தான் இப்படி ஆகி இருக்கிறது.நீ அந்த பயிர்களை எல்லாம் அழிக்காமல் இருந்திருந்தால் நம் குழந்தைகள்

ஆரோக்கியமான உணவை உட்கொண்டிருந்திர்ப்பார்கள்.இது இயற்கையின் தண்டனை தான்.கதிரேசா நம்ம நிலத்தை வெடிகுண்டு வைத்து அளிக்கஅழிக்க வேண்டுமாம்.மண்ணின் தரம் சரியில்லையாம்.நீ அப்பொழுதே சொன்னதை நான் புரிந்துக் கொள்ளவில்லை.இது எனக்கு தேவை தான் கதிரேசா நம் முன்னோர்கள் பாரம்பரியமாக வளர்த்த மரங்களை வெட்டியிருக்க கூடாது.இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை அழிக்கும். நாம் இயற்கையை வளர்த்தால்,பல மடங்கு நமக்கு பலன் தரும் என்பது புரிந்தது கதிரேசா!ஏழைகளின் பணத்தில் அப்படி செய்திருக்க கூடாது.அண்ணா நானே அந்த பணத்தை விவசாயிகளிடம் கொடுத்துவிட்டேன்.அது இருக்கட்டும்.நான் உங்களிடம் ஒரு கட்டளையிடுகிறேன்.அதை நீங்கள் கட்டாயம் செய்தாக வேண்டும்.சொல் தம்பி!ஒவ்வொரு வருடமும் சுஜாதையின் பிறந்த நாளுக்கு பல பரிசுகளை தருகிறீர்கள்.ஆனால் செடி என்ற பரிசினை தர மறுக்கிறீர்கள்.இயற்கையின் தண்டனையிலிருந்து விடுபட இந்த பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.சுஜாதைக்கு ஒரு நிழலை

ஏற்படுத்தாத தாருங்கள்.குழந்தை மனதில் நஞ்சை விதைக்காமல் செடிகளின் விதைகளை விதைக்க சொல்லுங்கள் என்றான் கதிரேசன்.நாங்கள் கண்டிப்பா சுஜாதாவின் பிறந்தநாளுக்கு கட்டாயம் நிறைய விதைகளை தருகிறோம் என்றனர் குற்ற உணர்ச்சியில் இருந்த அம்சாவும் வேலுவும்.

கருத்து:மத வெறி வளர்த்தால் கல்லறைகள் தான் அதிகமாகும்.

ஆனால் மரம் செடி வளர்த்தால்

நம் சந்ததிகள் நலமாகும்.

***

நன்றி.