அத்தியாயம் 7
கோவிலில் கடவுள் முன் வேண்டி நின்ற வள்ளிக்கு கண்ணீர் வர, சிவா அவரருகில் மௌனமாய் கடவுளைப் பார்த்தபடி நின்றான்.
அவனுக்கும் வருத்தம் தான் என்றாலும் அன்னை இப்படி எண்ணி எண்ணி கலங்குவதை பார்க்கும் பொழுது தான் இன்னும் கவலையாய் இருந்தது அவனுக்கு.
இந்த சம்பவத்தை தான் மறந்து கடந்து வந்து விடுவது பின்னாளில் எளிது தான் ஆனால் இப்படி ஒரு அனுபவம் தன்னைப் பெற்றவருக்கு தேவையா என்று தான் மனம் அதிகமாய் அழுத்தியது சிவாவிற்கு.
"ம்மா! கொஞ்சம் சிரிங்களேன்! இங்கயும் இப்படி உட்காரவா கூட்டிட்டு வந்தேன்?" என்றான்.
"கடவுள் முன்னாடி அழுதா மனசுக்கு நல்லது தான். அப்போவாவது உன் அப்பாவை திருத்துவார்ல?" என்றார் கண்களை துடைத்தபடி.
"ஓஹ்! அப்போ அப்பாவை நினைச்சு தான் அழுத்திங்களா?" என்று சிரித்தான் அவன்.
"ப்ச்! மறந்துட்டேன் பாரு! மாலாக்கு ஒரு போனைப் போடு! நாம வந்திருக்கோம்னு சொன்னா வந்தாலும் வருவா" என்று வள்ளி சொல்ல,
"எதுக்கு? நீங்க மட்டும் அழுதது பத்தலையா? அவங்களும் என்னை பார்த்து பார்த்து அழுது நானும் அழவா? நாளைக்கு பேசிக்கலாம். எப்படியும் இந்த அறுந்த வாலு ஆபீஸ் முடிஞ்சதும் கால் பண்ணும் உங்களுக்கு. அப்புறம் பேசிக்கோங்க!" என்றான்.
"மாலாகிட்ட பேசிட்டா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் சிவா!"
"ம்மா! உங்க கஷ்டத்தை அவங்ககிட்ட சொல்லி அவங்களை கஷ்டப்பட வச்சுட்டு நீங்க பிரீ ஆயிடுறீங்க.. இது இப்படியே பழகி ஒரு வியாதியாவே ஆயிடுச்சு உங்களுக்கு. புரியுதா?" என்று கிண்டலாய் சிரிக்க,
"சும்மா சும்மா சிரிக்காத டா. அதுவும் இப்படி பொது இடத்துல. எவளோ இப்படி சிரிச்ச முகமா உன்னை பாத்து தான் கண்ணு போட்டுட்டா அதான் இப்படி ஆகி போச்சு!" என்று அன்னை சொல்ல, மௌனமாய் ஒரு புன்னகை சிவாவிடம்.
"நான் ஒரு இவ. நாய் பேய் கண்ணை விட தாய் கண்ணு தான் பிள்ளைக்கு மோசம்னு சொல்லுவாங்க. இருக்கட்டும் இன்னைக்கு வீட்டுல போய் நல்லா சுத்தி போடுதேன்.. அப்போ தான் மனசு கேட்கும்!"
"முப்பது வயசு ஆக போகுது எனக்கு. மூணு வயசு பையனை டிரீட் பண்ற மாதிரி ட்ரீட் பண்றீங்க ம்மா நீங்க!" என்றான் சிவா அன்பாய் அன்னையை பார்த்து.
"பெருமை பட்டுக்க வேண்டி தான் முப்பது தொட போகுதுன்னு. பேசாம போன வருஷமே கல்யாணத்தை முடிச்சு வச்சிருக்கலாம். ஒரு வருஷம் போகட்டும்னு நீ சொன்னனு அமைதியா இருந்தேன் பாரு. என்னை சொல்லணும்!" என்றார் அன்னை முறைத்து.
"அப்ப ஒரு வருஷம் முன்னவே இந்த இன்சிடென்ட் நடந்துருக்கும் பரவால்லையா?" என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு.
"இப்பதான சொன்னேன் சிரிக்காதன்னு!" என அதற்கும் அன்னை முறைக்க,
"வருதே!" என்று அதற்கும் அவன் புன்னகைத்தான்
சாப்பிட என்னென்ன வேண்டும் என்று சர்வரிடம் சொல்லிவிட்டு சிவா அமர்ந்து அலைபேசியை பார்க்கும் பொழுது வனிதா எண்ணில் இருந்து வந்திருந்த புகைப்படம் மற்றும் தகவல்களை பார்த்துவிட்டு அன்னையிடம் சிவா காட்ட,
"ஆமா டா! அன்னைக்கே மாலா சொன்னாளே டெல்லி மாப்பிள்ளை. இது தான் போல. பார்க்க அம்சமா தான் இருக்காரு. நம்ம அம்முக்கு பொருத்தமா தான் இருக்கும் இல்ல?" என்று கேட்டார் வள்ளி.
"ம்ம்! ஆனா டெல்லி.. அவ்வளவு தூரம் ஏன் ம்மா? வனிக்கு மாதிரி பக்கத்துல பார்க்கலாம் இல்ல?"
"ஏன் டா? பையன் நல்ல பையனானு விசாரிக்காமலா வினோ அண்ணே ஏற்பாடு பண்ணிருப்பாரு? எதுக்கும் நீ யார் மூலமாவது எதாவது தகவல் தெரியுதா பாரு. யாரையும் நம்பவும் பயமா இருக்கு. உன் அப்பா மாதிரி அவரும் தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்கவரு தான்!"
"அது சரி தான். ஆனா அம்மு வாய்க்கு அவளால பேசாம இருக்க முடியாது. அங்க போய் தனியா சமாளிக்கணுமே! நாமளே திடிர்னு பாக்கனும்னு நினச்சா கூட உடனே பாக்குற தூரமா?"
"உன்னை மாதிரி தான் டா மாலாவும் சொன்னா. அவளுக்கு அவ்வளவு ஒன்னும் விருப்பம் இல்ல அவ்வளவு தூரம் குடுக்க. அண்ணே பண்ணுற வேலை தான்"
"பார்த்து ம்மா! அந்த பொண்ணு உள்ள இருந்துட்டு வெளில வர மாட்டேன்னு சொன்ன மாதிரி அம்முவும் எதாவது செஞ்சி வச்சிட போகுது!" என்று சொல்ல, பக்கென்றது வள்ளிக்கு.
அவர் முகத்தை அதன்பின் தான் கவனித்தான் சிவா.
"ம்மா! நான் சும்மா சொன்னேன். எதுக்கு இவ்வளவு ஷாக்? அம்மு அப்படி பண்றவளா? பிடிக்கலைனா மாப்பிள்ளை முன்னாடி வந்து நின்னு எனக்கு உன்னை பிடிக்கல வெளில போடான்னு சொல்லிடுவா!" என்று சிரிக்க, கொஞ்சம் சிரித்த வள்ளிக்கு மகன் இதிலிருந்து எப்படி மீண்டு வர போகிறானோ என்ற கவலை மீண்டுமாய் சேர்ந்தது.
"சிவா! அம்மா பொண்ணு பார்க்கட்டுமா?" என மெதுவாய் கேட்க,
"ஓஹ்! பாருங்களேன்!" என்று சொல்லவும் அவர் முகம் பிரகாசமடைய,
"ஆனா கல்யாணத்தன்னைக்கு தான் நான் பொண்ணை பார்ப்பேன்" என்றதும் வள்ளி விழித்தார் புரியாமல்.
"நீங்க எந்த பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் எனக்கு ஓகே. ஆனா இந்த மாப்பிள்ளை பாக்குறது, பொண்ணு பாக்குறது, போட்டோ பாக்குறது, இப்படி எதுவும் எனக்கு வேண்டாம். அதெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க. பொண்ணு ஓகே சொல்லிச்சுன்னா சொல்லுங்க வந்து கல்யாணம் பண்ணிக்குறேன். ம்ம்?" என்றவனைப் பார்த்து பாவமாய் விழித்தார்.
"என்ன டா சொல்ற? கல்யாணம் பண்ணிக்குவ தானே?" பாவமாய் பார்த்து அன்னை கேட்க, மலர்ந்து சிரித்தவன்,
"ம்மா! தமிழ்ல தானே சொன்னேன்? பண்ணிக்குறேன்! ஆனா பொண்ணு உங்க விருப்பம்.. இனி உங்க பாடு!" என்று சொல்லி முடிக்கவும் உணவு வர, மலைப்பாய் பார்த்தார் மகனை அன்னை.
"பெரியவங்க கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோ ம்மா!" வந்திருந்த பெரியவர்களில் ஒருவர் சொல்ல, தனது வீட்டின் ஹாலில் சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களை ஒரு முறை பார்த்தவள் விழித்தாள் மகிமா.
"விழு டி!" வனிதா அருகில் வந்து காதின் ஓரமாய் சொல்ல,
"இதுல யார் பெரியவங்க? யார் காலுல விழனும்? யாருமே ஏன் எழுந்துக்கல?" என்றவளை அதிர்ச்சியாய் பார்த்த வனிதா,
"சபைக்கு நடுவுல போய் பொதுவா விழுந்து கும்பிடனும் மகி! விளையாடாத!" என்று சொல்ல,
"நான் விளையாடுற மாதிரி இருக்கா உனக்கு? ஆமா உன் கல்யாணத்துல இதெல்லாம் பண்ணல தானே? எனக்கு மட்டும் ஏன்?" என்றாள் கோபமாய்.
"அய்யோ மகி! அவங்க பழக்க வழக்கம் வேற இவங்க பழக்க வழக்கம் வேறயா இருக்கும். பேசாம போ டி!" என்றாள் அப்பா முறைக்க ஆரம்பித்து விட்டதை பார்த்து வேகமாய்.
"அப்போ நம்ம பழக்கம் என்ன வனி?" என்றவளை என்ன செய்ய என தெரியாமல் வனிதா விழிக்க, அருகில் வந்துவிட்டார் மாலா.
அடுத்த நொடி வேகமாய் கூட்டத்தின் நடுவே சென்றுவிட்டாள் மகிமா.
"ம்மா!" என்ற வனிதா பேசும் முன்,
"நீ போய் ஸ்வீட் எடுத்துட்டு வா வனி! அவளை நான் பார்த்துக்குறேன்!" என்றார் மாலா.
"கிழக்கு பார்த்து நில்லும்மா!" என்று ஒருவர் மகிமாவை சொல்ல, 'கிழக்கா?' என்று மகிமா அன்னையை பார்க்க, 'அந்த பக்கம் டி!' என வாயசைத்தாள் தங்கைக்கு வனிதா.
"ஓஹ்!" என்றவள் வனிதா கூறிய பக்கம் விழுந்து எழுந்து கும்பிட்டு நிற்க, தனக்கு நேராய் அந்த மாப்பிள்ளையானவன்.
இப்பொழுது காலையில் பார்த்த அந்த வீடியோ நியாபகம். சிவாவிற்கு என அவள் வைத்தது அவளுக்கே வந்து சேர்ந்திருக்க, தனக்கு தானே வைத்துக் கொண்டதை போல எண்ணம் தோன்றி மனதை புண்ணாக்கியது இந்த எண்ணங்கள்.
'முதல்ல அதை டெலிட் பண்ணனும்!' நினைத்தபடி நின்றவளை மாப்பிள்ளையானவனின் தங்கை வந்து அழைத்து ஓரிடத்தில் அமர வைக்க, தன்னை பொம்மையை போல வைத்து அவரவர் விருப்ப போல விளையாட ஆரம்பித்ததாய் தோன்றியது மகிமாவிற்கு.
அப்பொழுது தான் ஒரு நியாபகம் தோன்ற, சட்டென நிமிர்ந்து மாப்பிள்ளையை பார்க்க, அவனுமே இவளை தான் பார்த்திருந்தான்.
"கொஞ்சம் ஓகே தான்!" தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் சத்தத்தில்,
"எதாவது சொன்னிங்களா அண்ணி?" என்றாள் அருகில் இருந்தவள்.
"இல்ல இல்ல!" என வேகமாய் கூறி அன்னையைப் பார்க்க, முறைத்துக் கொண்டிருந்தார் மாலா.
மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் தங்களுக்குள் பேசி சம்மதம் கூறி மகிழ்ந்திருக்க,
"மேற்கொண்டு பேச வேண்டியதை பேசுங்க!" என்றார்.
"எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு. இப்பவே உறுதி பண்ணிக்கலாம். அர்ஜுன் இன்னும் இருபது நாள்ல டெல்லி போகணும்!அண்ணன் தம்பி நாலு பேர் நாங்க. எங்க வீட்டுக்கு ஒரே ஆண் வாரிசு அர்ஜுன். அதனால அவசரகதியா நடத்த முடியாது. போய்ட்டு ஆறு மாசத்துல வரட்டும். சிறப்பா செஞ்சிடலாம். சம்மதம் தானே?" என்று கூற வேண்டியதை தெளிவாய் கூறிவிட்டார் அர்ஜுனின் தந்தை.
கண்களில் அப்படி ஒரு வெளிச்சம் மகிமாவிற்கு. அதை கவனிக்க தான் அங்கே யாரும் இல்லை.
"ஆறு மாசமா?" என்று வினோதனே பதில் சொல்ல முடியாமல் விழிக்க, இதில் சுத்தமாய் உடன்பாடில்லை மாலாவிற்கு கூட.
பூ வைத்து உறுதி செய்துவிட்டு சென்று இப்பொழுது இருபது நாள் அடுத்து ஆறு மாதம் காத்திருக்க வேண்டுமா என்று தான் அதிர்ச்சி அனைவருக்கும்.
இது வினோதன் வீட்டு பக்கங்களில் வழக்கமே கிடையாது. பெண்ணை பிடித்திருக்கிறது என்றாலே அடுத்த வாரம் நிச்சயம் அடுத்து குறைந்தது மூன்று மாதங்களுக்குள் திருமணம் என்பது தான் வழக்கம்.
மகிமாவின் மகிழ்ச்சிக்கும் அது தான் காரணம். பூ வைத்துவிட்டால் அவ்வளவு தான் உடனே நிச்சயம் திருமணம். பெட்டியை கட்டி அனுப்பி விடுவார்கள் என்ற நினைப்பிற்கு மாறாய் அவள் காது குளிர்ந்தது மாப்பிள்ளையின் தந்தை கூறிய செய்தியில்.
"என்னங்க! எல்லாரும் அமைதியாகிட்டிங்க?" அர்ஜுனின் தந்தை கேட்க,
"தப்பா எடுத்துக்க வேண்டாம். கல்யாணத்தை அவ்வளவு நாள் தள்ளிப் போட்டு ஆற அமர செஞ்சு எங்களுக்கு பழக்கம் இல்ல!" என்று வினோதன் மெதுவாய் கூற,
"இவ்வளவாவது பேசுகிறாரே!" என பார்த்து நின்றார் மாலா.
"அதான் சொல்றோமே! பையன் வேலை அப்படி. உடனே அப்படி அப்படி போட்டுட்டு லீவ்னு இங்க இருக்க முடியாதே! ஆறு மாசம் தானே?" என்றார் அவனின் தாயும்.
"வினோதன் சொல்லுற போல எங்க ஊரு வழக்கம் அப்படி. பொண்ணு மாப்பிள்ளை இதான்னு உறுதி பண்ணிட்டா நாங்க கல்யாணம் முடிஞ்சா தான் கீழ காலை வைப்போம். அதுக்காக சும்மா ஏனோ தானோன்னு எல்லாம் கல்யாணம் நடக்காது. அவ்வளவு வேலையும் பாத்து பாத்து செஞ்சி நிறைஞ்ச மனசோட தான் பொண்ணை அனுப்பி வைப்போம்" என்ற பெரியவர் ஒருவர்,
"இப்பவும் என்ன? அதான் இருபது நாள் இருக்குனு சொல்லுதீங்க இல்ல? ஆளாளுக்கு ஒரு வேலையை பார்த்தா முடிஞ்சிட்டு போகுது. பொண்ணு கல்யாணம் முடிஞ்சி மாமியார் வீட்டுல இருக்கட்டும். மாப்பிள்ளை அங்க செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சி முடிச்சுட்டு பொண்ணை கூட்டிட்டு போகட்டும்!" என்று சொல்ல, மூச்சே நின்றுவிட்டது மகிமாவிற்கு.
தொடரும்..
கோவிலில் கடவுள் முன் வேண்டி நின்ற வள்ளிக்கு கண்ணீர் வர, சிவா அவரருகில் மௌனமாய் கடவுளைப் பார்த்தபடி நின்றான்.
அவனுக்கும் வருத்தம் தான் என்றாலும் அன்னை இப்படி எண்ணி எண்ணி கலங்குவதை பார்க்கும் பொழுது தான் இன்னும் கவலையாய் இருந்தது அவனுக்கு.
இந்த சம்பவத்தை தான் மறந்து கடந்து வந்து விடுவது பின்னாளில் எளிது தான் ஆனால் இப்படி ஒரு அனுபவம் தன்னைப் பெற்றவருக்கு தேவையா என்று தான் மனம் அதிகமாய் அழுத்தியது சிவாவிற்கு.
"ம்மா! கொஞ்சம் சிரிங்களேன்! இங்கயும் இப்படி உட்காரவா கூட்டிட்டு வந்தேன்?" என்றான்.
"கடவுள் முன்னாடி அழுதா மனசுக்கு நல்லது தான். அப்போவாவது உன் அப்பாவை திருத்துவார்ல?" என்றார் கண்களை துடைத்தபடி.
"ஓஹ்! அப்போ அப்பாவை நினைச்சு தான் அழுத்திங்களா?" என்று சிரித்தான் அவன்.
"ப்ச்! மறந்துட்டேன் பாரு! மாலாக்கு ஒரு போனைப் போடு! நாம வந்திருக்கோம்னு சொன்னா வந்தாலும் வருவா" என்று வள்ளி சொல்ல,
"எதுக்கு? நீங்க மட்டும் அழுதது பத்தலையா? அவங்களும் என்னை பார்த்து பார்த்து அழுது நானும் அழவா? நாளைக்கு பேசிக்கலாம். எப்படியும் இந்த அறுந்த வாலு ஆபீஸ் முடிஞ்சதும் கால் பண்ணும் உங்களுக்கு. அப்புறம் பேசிக்கோங்க!" என்றான்.
"மாலாகிட்ட பேசிட்டா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும் சிவா!"
"ம்மா! உங்க கஷ்டத்தை அவங்ககிட்ட சொல்லி அவங்களை கஷ்டப்பட வச்சுட்டு நீங்க பிரீ ஆயிடுறீங்க.. இது இப்படியே பழகி ஒரு வியாதியாவே ஆயிடுச்சு உங்களுக்கு. புரியுதா?" என்று கிண்டலாய் சிரிக்க,
"சும்மா சும்மா சிரிக்காத டா. அதுவும் இப்படி பொது இடத்துல. எவளோ இப்படி சிரிச்ச முகமா உன்னை பாத்து தான் கண்ணு போட்டுட்டா அதான் இப்படி ஆகி போச்சு!" என்று அன்னை சொல்ல, மௌனமாய் ஒரு புன்னகை சிவாவிடம்.
"நான் ஒரு இவ. நாய் பேய் கண்ணை விட தாய் கண்ணு தான் பிள்ளைக்கு மோசம்னு சொல்லுவாங்க. இருக்கட்டும் இன்னைக்கு வீட்டுல போய் நல்லா சுத்தி போடுதேன்.. அப்போ தான் மனசு கேட்கும்!"
"முப்பது வயசு ஆக போகுது எனக்கு. மூணு வயசு பையனை டிரீட் பண்ற மாதிரி ட்ரீட் பண்றீங்க ம்மா நீங்க!" என்றான் சிவா அன்பாய் அன்னையை பார்த்து.
"பெருமை பட்டுக்க வேண்டி தான் முப்பது தொட போகுதுன்னு. பேசாம போன வருஷமே கல்யாணத்தை முடிச்சு வச்சிருக்கலாம். ஒரு வருஷம் போகட்டும்னு நீ சொன்னனு அமைதியா இருந்தேன் பாரு. என்னை சொல்லணும்!" என்றார் அன்னை முறைத்து.
"அப்ப ஒரு வருஷம் முன்னவே இந்த இன்சிடென்ட் நடந்துருக்கும் பரவால்லையா?" என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு.
"இப்பதான சொன்னேன் சிரிக்காதன்னு!" என அதற்கும் அன்னை முறைக்க,
"வருதே!" என்று அதற்கும் அவன் புன்னகைத்தான்
சாப்பிட என்னென்ன வேண்டும் என்று சர்வரிடம் சொல்லிவிட்டு சிவா அமர்ந்து அலைபேசியை பார்க்கும் பொழுது வனிதா எண்ணில் இருந்து வந்திருந்த புகைப்படம் மற்றும் தகவல்களை பார்த்துவிட்டு அன்னையிடம் சிவா காட்ட,
"ஆமா டா! அன்னைக்கே மாலா சொன்னாளே டெல்லி மாப்பிள்ளை. இது தான் போல. பார்க்க அம்சமா தான் இருக்காரு. நம்ம அம்முக்கு பொருத்தமா தான் இருக்கும் இல்ல?" என்று கேட்டார் வள்ளி.
"ம்ம்! ஆனா டெல்லி.. அவ்வளவு தூரம் ஏன் ம்மா? வனிக்கு மாதிரி பக்கத்துல பார்க்கலாம் இல்ல?"
"ஏன் டா? பையன் நல்ல பையனானு விசாரிக்காமலா வினோ அண்ணே ஏற்பாடு பண்ணிருப்பாரு? எதுக்கும் நீ யார் மூலமாவது எதாவது தகவல் தெரியுதா பாரு. யாரையும் நம்பவும் பயமா இருக்கு. உன் அப்பா மாதிரி அவரும் தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்கவரு தான்!"
"அது சரி தான். ஆனா அம்மு வாய்க்கு அவளால பேசாம இருக்க முடியாது. அங்க போய் தனியா சமாளிக்கணுமே! நாமளே திடிர்னு பாக்கனும்னு நினச்சா கூட உடனே பாக்குற தூரமா?"
"உன்னை மாதிரி தான் டா மாலாவும் சொன்னா. அவளுக்கு அவ்வளவு ஒன்னும் விருப்பம் இல்ல அவ்வளவு தூரம் குடுக்க. அண்ணே பண்ணுற வேலை தான்"
"பார்த்து ம்மா! அந்த பொண்ணு உள்ள இருந்துட்டு வெளில வர மாட்டேன்னு சொன்ன மாதிரி அம்முவும் எதாவது செஞ்சி வச்சிட போகுது!" என்று சொல்ல, பக்கென்றது வள்ளிக்கு.
அவர் முகத்தை அதன்பின் தான் கவனித்தான் சிவா.
"ம்மா! நான் சும்மா சொன்னேன். எதுக்கு இவ்வளவு ஷாக்? அம்மு அப்படி பண்றவளா? பிடிக்கலைனா மாப்பிள்ளை முன்னாடி வந்து நின்னு எனக்கு உன்னை பிடிக்கல வெளில போடான்னு சொல்லிடுவா!" என்று சிரிக்க, கொஞ்சம் சிரித்த வள்ளிக்கு மகன் இதிலிருந்து எப்படி மீண்டு வர போகிறானோ என்ற கவலை மீண்டுமாய் சேர்ந்தது.
"சிவா! அம்மா பொண்ணு பார்க்கட்டுமா?" என மெதுவாய் கேட்க,
"ஓஹ்! பாருங்களேன்!" என்று சொல்லவும் அவர் முகம் பிரகாசமடைய,
"ஆனா கல்யாணத்தன்னைக்கு தான் நான் பொண்ணை பார்ப்பேன்" என்றதும் வள்ளி விழித்தார் புரியாமல்.
"நீங்க எந்த பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் எனக்கு ஓகே. ஆனா இந்த மாப்பிள்ளை பாக்குறது, பொண்ணு பாக்குறது, போட்டோ பாக்குறது, இப்படி எதுவும் எனக்கு வேண்டாம். அதெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க. பொண்ணு ஓகே சொல்லிச்சுன்னா சொல்லுங்க வந்து கல்யாணம் பண்ணிக்குறேன். ம்ம்?" என்றவனைப் பார்த்து பாவமாய் விழித்தார்.
"என்ன டா சொல்ற? கல்யாணம் பண்ணிக்குவ தானே?" பாவமாய் பார்த்து அன்னை கேட்க, மலர்ந்து சிரித்தவன்,
"ம்மா! தமிழ்ல தானே சொன்னேன்? பண்ணிக்குறேன்! ஆனா பொண்ணு உங்க விருப்பம்.. இனி உங்க பாடு!" என்று சொல்லி முடிக்கவும் உணவு வர, மலைப்பாய் பார்த்தார் மகனை அன்னை.
"பெரியவங்க கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோ ம்மா!" வந்திருந்த பெரியவர்களில் ஒருவர் சொல்ல, தனது வீட்டின் ஹாலில் சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களை ஒரு முறை பார்த்தவள் விழித்தாள் மகிமா.
"விழு டி!" வனிதா அருகில் வந்து காதின் ஓரமாய் சொல்ல,
"இதுல யார் பெரியவங்க? யார் காலுல விழனும்? யாருமே ஏன் எழுந்துக்கல?" என்றவளை அதிர்ச்சியாய் பார்த்த வனிதா,
"சபைக்கு நடுவுல போய் பொதுவா விழுந்து கும்பிடனும் மகி! விளையாடாத!" என்று சொல்ல,
"நான் விளையாடுற மாதிரி இருக்கா உனக்கு? ஆமா உன் கல்யாணத்துல இதெல்லாம் பண்ணல தானே? எனக்கு மட்டும் ஏன்?" என்றாள் கோபமாய்.
"அய்யோ மகி! அவங்க பழக்க வழக்கம் வேற இவங்க பழக்க வழக்கம் வேறயா இருக்கும். பேசாம போ டி!" என்றாள் அப்பா முறைக்க ஆரம்பித்து விட்டதை பார்த்து வேகமாய்.
"அப்போ நம்ம பழக்கம் என்ன வனி?" என்றவளை என்ன செய்ய என தெரியாமல் வனிதா விழிக்க, அருகில் வந்துவிட்டார் மாலா.
அடுத்த நொடி வேகமாய் கூட்டத்தின் நடுவே சென்றுவிட்டாள் மகிமா.
"ம்மா!" என்ற வனிதா பேசும் முன்,
"நீ போய் ஸ்வீட் எடுத்துட்டு வா வனி! அவளை நான் பார்த்துக்குறேன்!" என்றார் மாலா.
"கிழக்கு பார்த்து நில்லும்மா!" என்று ஒருவர் மகிமாவை சொல்ல, 'கிழக்கா?' என்று மகிமா அன்னையை பார்க்க, 'அந்த பக்கம் டி!' என வாயசைத்தாள் தங்கைக்கு வனிதா.
"ஓஹ்!" என்றவள் வனிதா கூறிய பக்கம் விழுந்து எழுந்து கும்பிட்டு நிற்க, தனக்கு நேராய் அந்த மாப்பிள்ளையானவன்.
இப்பொழுது காலையில் பார்த்த அந்த வீடியோ நியாபகம். சிவாவிற்கு என அவள் வைத்தது அவளுக்கே வந்து சேர்ந்திருக்க, தனக்கு தானே வைத்துக் கொண்டதை போல எண்ணம் தோன்றி மனதை புண்ணாக்கியது இந்த எண்ணங்கள்.
'முதல்ல அதை டெலிட் பண்ணனும்!' நினைத்தபடி நின்றவளை மாப்பிள்ளையானவனின் தங்கை வந்து அழைத்து ஓரிடத்தில் அமர வைக்க, தன்னை பொம்மையை போல வைத்து அவரவர் விருப்ப போல விளையாட ஆரம்பித்ததாய் தோன்றியது மகிமாவிற்கு.
அப்பொழுது தான் ஒரு நியாபகம் தோன்ற, சட்டென நிமிர்ந்து மாப்பிள்ளையை பார்க்க, அவனுமே இவளை தான் பார்த்திருந்தான்.
"கொஞ்சம் ஓகே தான்!" தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் சத்தத்தில்,
"எதாவது சொன்னிங்களா அண்ணி?" என்றாள் அருகில் இருந்தவள்.
"இல்ல இல்ல!" என வேகமாய் கூறி அன்னையைப் பார்க்க, முறைத்துக் கொண்டிருந்தார் மாலா.
மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் தங்களுக்குள் பேசி சம்மதம் கூறி மகிழ்ந்திருக்க,
"மேற்கொண்டு பேச வேண்டியதை பேசுங்க!" என்றார்.
"எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு. இப்பவே உறுதி பண்ணிக்கலாம். அர்ஜுன் இன்னும் இருபது நாள்ல டெல்லி போகணும்!அண்ணன் தம்பி நாலு பேர் நாங்க. எங்க வீட்டுக்கு ஒரே ஆண் வாரிசு அர்ஜுன். அதனால அவசரகதியா நடத்த முடியாது. போய்ட்டு ஆறு மாசத்துல வரட்டும். சிறப்பா செஞ்சிடலாம். சம்மதம் தானே?" என்று கூற வேண்டியதை தெளிவாய் கூறிவிட்டார் அர்ஜுனின் தந்தை.
கண்களில் அப்படி ஒரு வெளிச்சம் மகிமாவிற்கு. அதை கவனிக்க தான் அங்கே யாரும் இல்லை.
"ஆறு மாசமா?" என்று வினோதனே பதில் சொல்ல முடியாமல் விழிக்க, இதில் சுத்தமாய் உடன்பாடில்லை மாலாவிற்கு கூட.
பூ வைத்து உறுதி செய்துவிட்டு சென்று இப்பொழுது இருபது நாள் அடுத்து ஆறு மாதம் காத்திருக்க வேண்டுமா என்று தான் அதிர்ச்சி அனைவருக்கும்.
இது வினோதன் வீட்டு பக்கங்களில் வழக்கமே கிடையாது. பெண்ணை பிடித்திருக்கிறது என்றாலே அடுத்த வாரம் நிச்சயம் அடுத்து குறைந்தது மூன்று மாதங்களுக்குள் திருமணம் என்பது தான் வழக்கம்.
மகிமாவின் மகிழ்ச்சிக்கும் அது தான் காரணம். பூ வைத்துவிட்டால் அவ்வளவு தான் உடனே நிச்சயம் திருமணம். பெட்டியை கட்டி அனுப்பி விடுவார்கள் என்ற நினைப்பிற்கு மாறாய் அவள் காது குளிர்ந்தது மாப்பிள்ளையின் தந்தை கூறிய செய்தியில்.
"என்னங்க! எல்லாரும் அமைதியாகிட்டிங்க?" அர்ஜுனின் தந்தை கேட்க,
"தப்பா எடுத்துக்க வேண்டாம். கல்யாணத்தை அவ்வளவு நாள் தள்ளிப் போட்டு ஆற அமர செஞ்சு எங்களுக்கு பழக்கம் இல்ல!" என்று வினோதன் மெதுவாய் கூற,
"இவ்வளவாவது பேசுகிறாரே!" என பார்த்து நின்றார் மாலா.
"அதான் சொல்றோமே! பையன் வேலை அப்படி. உடனே அப்படி அப்படி போட்டுட்டு லீவ்னு இங்க இருக்க முடியாதே! ஆறு மாசம் தானே?" என்றார் அவனின் தாயும்.
"வினோதன் சொல்லுற போல எங்க ஊரு வழக்கம் அப்படி. பொண்ணு மாப்பிள்ளை இதான்னு உறுதி பண்ணிட்டா நாங்க கல்யாணம் முடிஞ்சா தான் கீழ காலை வைப்போம். அதுக்காக சும்மா ஏனோ தானோன்னு எல்லாம் கல்யாணம் நடக்காது. அவ்வளவு வேலையும் பாத்து பாத்து செஞ்சி நிறைஞ்ச மனசோட தான் பொண்ணை அனுப்பி வைப்போம்" என்ற பெரியவர் ஒருவர்,
"இப்பவும் என்ன? அதான் இருபது நாள் இருக்குனு சொல்லுதீங்க இல்ல? ஆளாளுக்கு ஒரு வேலையை பார்த்தா முடிஞ்சிட்டு போகுது. பொண்ணு கல்யாணம் முடிஞ்சி மாமியார் வீட்டுல இருக்கட்டும். மாப்பிள்ளை அங்க செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சி முடிச்சுட்டு பொண்ணை கூட்டிட்டு போகட்டும்!" என்று சொல்ல, மூச்சே நின்றுவிட்டது மகிமாவிற்கு.
தொடரும்..