மடல் - 1
வெண்மையான நான்கு அடுக்குகள் கொண்ட உயரதரமான பெண்களுக்கான மருத்துவமனை.உள்ளே நவின வசதிகள் கொண்ட பணம் படைத்தவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும் என்று சொல்லாமல் சொல்லும்.பளிங்கு கற்கள் கொண்டு இழைக்கப்பட்டு, பசுமையான மரங்களுடன், எங்கு பார்க்கிலும் வண்ணமயமான போகன்வில்லா பூக்கள் பூத்துக் குழுங்கின. உள்ளே இருநது பார்த்தால் மட்டுமே இது ஒரு மருத்துவமனை என்றே சொல்ல முடியும்.
இந்த மருத்துவனையின் பிரசவ அறையின் கட்டிலில் ஒரு உருவம் . கையில் குலுகோஸ் பாட்டில் மருந்து ஏறிக் கொண்டு இருந்தது யாருமே இல்லை எல்லோரும் வெளி வரண்டாவில் காத்துக் கொண்டு இருந்தனர் சிலர்.இவளது கண்கள் பெரிய ஜன்னலின் வழியே தூரத்தே தெரியும் புன்னை மரத்தின் மேலே ஒரு கூட்டை பார்த்துக் கொண்டிருந்தது.சூரியன் முழுதும் மறைந்து அந்தி சாயும் வேளை. ஆகாயம் எங்கும் கருமேகங்களை பூசிக் கொண்டிருந்தது. அந்த இருட்டிலும் ஒரு தாய்பறவை தன்இரையை தன் குஞ்சு குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தது. கீச்... கீச்... என்ற அவர்களுக்கே உறிய மொழியில் அந்த தாய் தன் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தது.
தாய்மை அல்லவா தாய்மையின் முதல் கவலையே தன் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும்.தனக்கே இல்லை என்றாலும் தன் குழந்தையின் வயிற்றை நிரப்புவது மட்டுமே மிகமிக முக்கியமானது.
தாயின் வாய் வழியே தன் உணவை வாங்கி கொண்டது பிறந்து சில மணிநேரங்களே ஆன, அந்த பறவை குஞ்சுகள். தாய்மை அல்லவா, தாய்மையின் முதல் கவலையே தன் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும்,தனக்கே இல்லை என்றாலும் தன் குழந்தையின் வயிற்றை நிரப்புவது மட்டுமே மிகமிக முக்கியமானது.
தாயின் வாய் வழியே தன் உணவை வாங்கி கொண்டது பிறந்து சில மணிநேரங்களே ஆன, அந்த பறவை குஞ்சுகள். தாயின் வாய் வழியே தன் உணவை வாங்கி கொண்டது பிறந்து சில மணிநேரங்களே ஆன, அந்த பறவை குஞ்சுகள்.
சட்டென்று ஆகாயம் காரிருளை தன்மேல் பூசிக்கொண்டு தன்னுள் நிறைத்திருந்த நீராவியை மண்ணை நோக்கி விசிறியதுஅதுவரை தனக்குள் மறைத்து வைத்திருந்த சின்ன சின்ன நீர்திவலைகளை கூட்டமாக இறக்கியது,மழைதுளிகள் பொழிய ஆரம்பித்தது.
தனக்கு மட்டுமே இந்த மழை சொந்தம் என எங்குமே விடாமல் காய்ந்து போன பூமி தன்னுள் உள்வாங்கியது.ஜீவராசிகளுக்கு மட்டுமே தாகம் எடுக்குமா என்ன..? பூமிதாய்க்கும் தாகம் எடுக்கும் அல்லவா,வெள்ளியை உருக்கி எடுத்தது போல் மின்னல் வெளிச்சமும், இடிசத்தமும் காதை கிழித்தது.
தாய்பறவை தன் இறக்குகளால் தன் குழந்தைகளை நனையாமல் மூடிக் கொண்டது.மழைத்துளிகள் தாய்பறவையை சொட்ட சொட்ட குளிப்பாட்டியது. இவளது கூட்டில் மேற்கூரை இல்லை. கண்களில் விழும் மழைத்துளிகளை பொருட் படுத்தாமல் தன் குழந்தைகளை மறைத்துக் கொண்டிருந்தது.
இதை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் வழியே கண்ணீர் மழை வழிந்தது.கைகள் தன் ஆழிலை வயிற்றை தடவியது. உள்ளே ஆறுமாத சிசு இருக்கிறானே, இன்னும் சிறிதுநேரத்தில் அவனை காண்பாள்.
ஆனால் உணவை வாங்க அவளின் ஜீவன் இல்லையே, நேற்றே அவனுக்கு கடைசி சாதம் கொடுத்து வயிற்றை நிரப்பினாள். இன்று முடியாதே,இதோ இந்த பறவைக்கு இருக்கும் தாய்மைகுணம் கூட இவளுக்கு இல்லையே.
நேற்று ஊட்டிய சாதம் முடிந்தவுடன் விஷத்தை கொடுத்தவள் அல்லவா இவள்.தன் ஆற்றாமை, இயலாமை எதை யாரிடம் என்னவென்று சொல்வாள்.இவளே மனதளவில் பச்சிளம் குழந்தை தன்னுள் வளரும் இன்னொரு குழந்தையை எப்படி பாதுகாப்பாள்.
இவளுக்கு எதுவுமே தெரியாதே,சொல்லிதர இவள் வீட்டாரும் அருகே இல்லை.இவளுக்கு இந்த சுதந்திரம் கொடுக்க படவில்லையே,என்ன செய்வது.இவளுக்கு அழுகை கூட இங்கே மறுக்கப்பட்ட ஒன்று. இதோ இந்த அறையில் உள்ளதால் மனதை ஆற்ற முடிகிறது
தன் மகனுக்கு மிகவும் பிடித்த மழை இப்போது கொட்டி தீர்க்கிறது.
கடந்த ஆறுமாத காலமாக இந்த மழைத்துளியை இந்த கந்தக பூமி அறியாது.இவளும் இரும்பு கம்பியின் பின்னே பெரிய பெரிய கட்டடிடங்களுக்கு இடையே தெரியும் இடைவெளியில் வானத்தை பார்ப்பாள் தன்னுள் வளரும் மகனுக்காக கையேந்தி யாசம் கேட்பாள் சிறிய துளியை தருமாறு,மேகமகள் மனம்தளராமல் மனம்மிரங்காமலே பதில் அளிப்பாள்.
காத்திருந்து காத்திருந்து தன் மகனின் ஆசையை நிறைவேற்றாமலே வழி அனுப்புகிறோமே என்றவளுக்கு,சட்டென பிரசவவலி அதிகமாகியது அம்மா...என்று அலறினள்.இரண்டு நாட்களாக சிறியதாக இருந்த வலி இப்போது தீப்பிளம்பாய் வெடித்தது.
ஏற்கனவே மருத்துவர் சொன்ன அறிவுரை நினைவில் வந்தது. உன் குழந்தை இந்த பூமியை தொடும்போது சுவசமில்லாமலே பிறப்பான், கவலைப்படாதே என்று சொன்னது காதில் ஒலித்தது.
தகதகவென எரியும் சுடுகோலால் கோடு போட்டது ஒரு வலி, அம்மா என்று கதறினாள். கண்கள் தன் மகனை நினைத்து கதறியது. வலியின் டெசிபல் அதிகமாகியது. தாங்க முடியாமல் முக்கினாள் தன்னுள் இருக்கும் கடைசி உயிர்சக்தியை வைத்து,சட்டென கால்களின் இடைவெளியில் பெண்மையின் திரை கிழியும்சப்தம் கேட்டது.
இவளது அசுர முயற்சியில் வலி தாங்க இயலாமல் முக்கினாள் மறுபடியும், அவ்வளவுதான் தன் வயிற்றை கிழித்துக் கொண்டு தன் மகன் கொஞ்சம் வெளியில் வந்து விட்டான் என்ற ஆற்றாமையில் கதறினாள்.
சிஸ்டர் சீக்கிரம் இங்கே வாங்க..வாங்க..என்ற பெருங்குரலுடன் கத்தினாள் யாருமே வரவில்லை.தொண்டை அடைத்துக் கொண்டது,நெஞ்சம் துடி துடிக்க கத்தினாள்.தன் உடம்பை தூக்கிக் கொண்டு எட்டி பார்த்தாள். தன் மகனை பார்க்க முடியவில்லை. கறியது நெஞ்சம்.
எப்படி வரவேண்டிய மகன், இப்படியா ஜனிப்பது. அப்போது சட்டென தாதி ஒருவள் உள்ளே நுழைந்தாள்,சிஸ்டர் யாரும் இல்லம்மா என்ன ஆச்சு என்றவள் கேட்டுக் கொண்டே கிழே கவனிக்க படுக்கை விரிப்பில் இரத்த போக்கிடையே சிறிய தலை வெளியேயும் முக்கால் பகுதி உடம்பு பெண்மையின் உள்ளே இருந்ததை கவனித்த தாதி.
அய்யோ நான் என்ன செய்வது என்ற பதைபதைப்புடன், கொஞ்சம் பொருத்துக்கொள் அம்மா என்று சடார்ரென குழந்தையின் தலையை பிடித்து இழுத்தாள்.
அய்யோ.....ஆண்குழந்தை அம்மா என்று கண்ணீருடன் கீழே வைத்தாள்.தொப்புள் கொடியும் பையும் வயிற்றுக்குள்ளேயே உள்ளேயே இருந்தது. தாதியின் அலறலை கேட்டவள். அபிமன்யு... அபி... அபி.... என்று கதறினாள். எட்டியும் பார்க்க முடியவில்லை.தொப்புள் கொடி வெட்ட படவில்லை. இதற்கு மேல் மனதிலும்,உடம்பிலும் சக்தி இல்லை.
அப்போது செவிலியர் ஒருத்தி உள்ளே நுழைந்தாள்.கத்தரிக்கோலை எடுத்து அம்மா பிள்ளை உறவை வெட்டினாள்.வயிற்றில் கையை வைத்து அமுக்கினாள் நஞ்சுக்கொடி உள்ளேயே சிக்கி கொண்டது.மருத்துவர் வந்தால் மட்டுமே இதை எடுக்க முடியும் என்று இவளிடம் மன்னிப்பு கோரினாள்.
நடைபிணத்திடம் மன்னிப்பு கேட்க்க இவர்கள் யார். கேட்க வேண்டியவர்கள் கேட்கவில்லை. தன்னுடைய கையால் ஆகாத கோழைதனத்தகண்டு மனது வெம்மியது. இதற்குமேல் தான் இருந்து என்ன செய்வது. யாருக்காக இந்த புவியில் இருப்பது. சிறிய எறும்பை கூட கொல்வதற்கு தயங்கிய இந்த பாழாய் போன மனது, இன்று தன்னுள் வளர்ந்த பொக்கிஷத்தை கொலை செய்துவிட்டாளே.
ஆம் கொலை தான். அந்த செவிலியர் அடுத்த நிமிடம் குழந்தையை வெளியே இருப்பவர்களிடம் காட்டி விட்டு உள்ளே வந்தவள். குழந்தையை எடுத்து தன்அருகே உள்ள சிறிய பக்கெட்டில் ஏதோ ஒரு திரவத்தில் இட முயன்றாள்.
அப்போது உயரமான ஒருவன் உள்ளே வந்தான் இவளை திரும்பிக்கூட பார்க்காமல் செவிலியிடம் ஒருமுறை குழந்தையை இதோ இவளிடம் காட்டி விடுங்கள் என்று யாருக்கோ என்னவோ என்று நடையை கட்டினான்.அதுவரை சுயநினைவு இல்லாமல் மயக்கத்தில் இருநதவள் சட்டென விழித்தாள்.
தன்மகனை காண திருமபினாள் தன்னையே உறித்து வைத்து தன்னுள் நீக்கமற,தனக்காக தன்னுயிரை தியாகம் செய்த தெய்வமகனை ஒருமணித்துளியில் கண்ணீர் திரையுடன் கண்டாள்.
இச்சே இந்த கண்ணீர் வேறு என் மகனின் வடிவை காணமல் திரையிடுக்கிறதே என்ற கோபத்துடன் கண்களை துடைத்துக் கொண்டே கண்டாள்.
கண்ணீர் மறைத்துக் கொண்டே இருந்தது ஐய்யோ என் மகனின் திருஉருவை நன்றாக பார்க்க வேண்டுமே என்று பார்த்தாள்.தான் கொடுத்த கடைசி சாதத்துடன் வாயை திறந்து இருந்தான். தன் மகனின் முத்துவாய் திறந்தே இருந்தது, குழந்தையின் நாக்கு மேல்லன்னத்தில் முட்டிக் கொண்டு திறந்தே இருந்தது.
ஐய்யோ என்னை நம்பி சோறு உண்டயடா என் மகனே உனக்கு விஷத்தை கொடுத்து விட்டேனே என் மகனே என்று பெற்றவள் துடித்தாள். மார்பிலிறுந்து பால் ஊற்று தன்மகனை கண்டவுடன் சுரந்து மார்பை நனைத்தது.மார்பு தாய் கேட்டாள்.
எங்கே என் மகன் என்று....?கைவிரல்கள் வயிற்றை தடவி கேட்டது வயிற்று அம்மா கேட்டாள்...?ஆவலுடன் எங்கே என் மகன் என்று......?இதயம் கேட்டது என்னுடன் துடித்த சிறிய குட்டி இதய துடிப்பு எங்கே என்று...?
தன் உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் தன் மகனின் குரல் கேட்க காத்திருந்தார்கள்.என்ன பதிலுரைப்பாள் இந்த பித்திச்சி....?இதோ என் அபிமன்யு போர்களத்தில் சாய்ந்து விட்டான் என்றா.
அம்மா என்றலைத்த உயிர் பிரிந்து விட்டது,இவள் துடிதுடித்தாள் சுபத்திரையை போல.அம்மா என்றழைத்த என் செல்வன் எங்கு சென்றான்.....?எங்கு சென்றான்.....?பாண்டவர்கள் பதைபதைத்தார்கள் அன்று போர்களத்தில் இன்று இங்கே பாண்டவர்கள் இல்லை,இந்த பித்தி மட்டுமே பிதற்றுகிறாள் மகனே உன்னை நான் எங்கு காண்பேன்.....?என் பாரத்தை நீ சுமந்து சென்றாயா ஏன்....?என்னையும் கூட்டி செல்,நீ இல்லாத உலகில் நான் இல்லை பாலுட்ட உன் பாலம்மா பதறுகிறாள்.
நீ எங்கே...?.ஐயோ மகனே என்று கதறினாள்.தன் கைககள் ஒருமுறை கூட அவனை தடவவில்லையே,இந்த மடியில் உன்னை தாலாட்டவில்லையே என்று பரிதவித்தாள்.ஒரு தாய்யாக கற்சிலையாக சமைந்தாள்.
செவிலி செல்வ மகனை அந்த திரவத்தில உள்ளே வைத்து எடுத்து சென்று விட்டாள்.வெளியே இடிசப்தம் காதை கிழித்தது மின்னல் வெட்டியது.
ஹோ....வென மழை கொட்டியது.ஐன்னலை வெறித்தவள் விரக்தியில் சமைந்தாள்.வெளியே சென்று ஆகாயத்தை பார்த்து கதற வேண்டும் போல் இருந்தது. இப்போது எதற்காக வந்தாய். ஏன் வந்தாய் அவனை வழி அனுப்பி வைக்க வந்தாயா ஏன் வந்தாய் உனக்கும் அவனுக்கும் என்ன உறவு, அவனுடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வந்தாயா. இல்லை தப்பு செய்து விட்டோம் என்று கண்ணீர் மழையாய் பொழிகிறாயா. அழு.... அழு நன்றாக அழு, மனிதர்களுக்கு இல்லாத மனிதம், உனக்காவது இருக்கிறதே அழு என்று கூடவே இவளும் கதறினாள் மழைதுளிகளை பார்த்து.
ஆழிலையில் உதித்த வெண்பிறையே
ஆரணங்கே என் வெள்ளிநிலவே
ஆர்பறிக்கும் என் வெண்மேகமே
தங்கநிற சொப்பில் ஊறிய பாலருவி
நெருஞ்சி முள்பாதை எங்கும் ஓடுது....!!
பருகியவன் நீ
என்னுள் வளர் மதியாய்
சூரியானாய் உதித்து
மறைமதியாய் தேய்ந்தாயே
என் கண்ணே....!!
என் கண்ணா....!!
இனி என்ன என் வாழ்கையில் மிச்சம் உள்ளது.அரக்கனை கட்டியதால் வந்த மிகப்பெரிய இழப்பு.நானா இதற்கு காரணம். இல்லையே, நான் எந்த தவறும் செய்யவில்லையே.அவனின் கொடுமையை தன் தனயன் வாங்கி விட்டானே என்று மனது ஆயிரம் சவுக்கடிகளை இவளை நோக்கி விளாசியது.இதோ இப்போது கூட இவளுக்கு அழுக முடியாது,திட்டுக்கள் பெருவாரியாக கிடைக்கும்.தினமும் ஏச்சுக்களும் பேச்சுகளும் அடிகளும் விழும்.தனது கையலாகததனத்தை நொந்து கொண்டாள் தாயவள்.இன்று எல்லோருக்கும் குற்றவாளி இவளே இழப்பும் இவளுக்கே.
இதோ கார் கிளம்பும் சப்தம் கேட்டது தன் மகனின் கடைசி பயணத்தை நிறைவு செய்ய வானம் பிளந்தது பெரும்மழையை கொட்டியது.தனது கண்ணீரை தாரை தாரையாக பொழிந்தாள் மழையவள்.
உடம்பும் உள்ளமும் காய்ந்து உலர்ந்து போனது இவளுக்கு மருத்துவர் வந்தார் இவளை பார்த்தவுடன் புரிந்து கொண்டார்.இவளின் வயிற்றில் கைகைகளை வைத்தழுத்தி நஞ்சு கொடியை வெளியேற்றினார்.இவளின் முதுகை தடவி கொடுத்து விட்டு செவிலியிடம் ஏதோ சொல்லி விட்டு சென்றார்.
சிறிதுநேரத்தில் அங்கு வந்த செவிலி இவளின் மேலாடையை திறந்தார். உடைகள் எங்கும் ஈரமாக இருந்தது. இவளிடம் தான் என்ன செய்ய போகிறேன் என்பதை விளக்கினார்.கைதாங்கலாக குளியல் அறைக்கு கூட்டிச் சென்றார.
தாதி மெதுவாக பெண்ணிடம் அம்மா உங்க பெயர் என்ன என்றார்.மெதுவாக "மடல்" என்றாள். தாதி இவளுக்கு வெந்நீர் ஒத்தடம் தரனும்மா என்றவர் அவளின் ஆடைகளை மெதுவாக களைந்தவரின் கண்கள் நிலை குத்தி நின்றது. உதடுகள் துடித்தன நடுக்கத்துடன் கால்கள் தள்ளாடியது.
அய்யோ அம்மா தாயே என்று கதறினார், இவரின் முகத்தை பார்த்தவளுக்கு அப்போது தான் புரிந்தது தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்று சட்டென்று ஆடையை எடுத்து தன்னை மறைத்தாள்.
தாதியும் பெண்தானே இவளை அணைத்துக் கொண்டு கதறினார். அதுவரை அழமுடியாமல் தவித்தவள் தன் தாயின் சாயல் இருந்ததால் தாதியின் தோள்களில் தான் மறைத்து வைத்த ரணங்களை வெந்நீரினாள் கழுவினாள்.
சிறிறு நேரம் கழித்தவுடன் தாதிக்கு தான் செய்ய வேண்டிய வேலை ஞாபகம் வந்ததது. பச்சை உடம்புகாரி இதற்கு மேல் அழுககூடாது ஆபத்து என்று நினைத்தவள் வேலையில் இறங்கினாள்.இவளின் தனத்தில் இருந்து தாய்பாலை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினார்.
தாய்பால் தரையில் வழிந்தோடியது இதை கண்டவுடன் அதுவரை இருந்த விம்மல் வெடித்து சிதறியது.
தாய்மை அல்லவா.தன் மகன் பருகவேண்டிய பால்.வேறு பிஞ்சுசிசு கூடபருக முடியாதே விஷத்தை சாப்பிட்டவள் இவளும் தானே.இனி அழுது தோய்ந்து போனாலும் "மாண்டவர் ஒரு போதும் வருவதில்லை".இவளை சுத்தப்படுத்தி படுக்க வைத்துவிட்டு வெளியேரினர் தாதி.
சிறிது நேரத்தில் கையில் உணவை எடுத்துக் கொண்டு வந்த தாதி இவளின் முகத்தை பார்த்தார். என்ன ஒரு பொன் அழகு சிலை. கலைந்து போன கார்குழல்கள் முகத்தில் சிதறிக் கிடந்தது,கண்ணீர் கோடுகள் முகத்தில் பதிந்து கிடந்தது. பிடுங்கி எறியப்பட்ட செடி போல் கிடந்தாள். நடுத்தர வயதான தாதிக்கு அழுகை வந்தது. எந்த பெண்ணிற்கும் உலகத்தில் இந்த துன்பம் வரக்கூடாது. இதோ பணம் கொட்டி கிடக்கிறது. இந்த நிலைமையில் கூட யாருமே இந்த பெண் அருகே இல்லை.
பணக்காரர்களின் வாழ்வு இப்படிதான் இருக்குமோ. அன்பு, பாசம், பரிவு இல்லாமல் வாழும் இந்த வாழ்கை எதற்கோ என்ற பரிதாபத்துடன் பசியுடன் உறங்கும் பெண்ணை எழுப்ப சென்றார்.
மடல் தொடரும்)
வெண்மையான நான்கு அடுக்குகள் கொண்ட உயரதரமான பெண்களுக்கான மருத்துவமனை.உள்ளே நவின வசதிகள் கொண்ட பணம் படைத்தவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும் என்று சொல்லாமல் சொல்லும்.பளிங்கு கற்கள் கொண்டு இழைக்கப்பட்டு, பசுமையான மரங்களுடன், எங்கு பார்க்கிலும் வண்ணமயமான போகன்வில்லா பூக்கள் பூத்துக் குழுங்கின. உள்ளே இருநது பார்த்தால் மட்டுமே இது ஒரு மருத்துவமனை என்றே சொல்ல முடியும்.
இந்த மருத்துவனையின் பிரசவ அறையின் கட்டிலில் ஒரு உருவம் . கையில் குலுகோஸ் பாட்டில் மருந்து ஏறிக் கொண்டு இருந்தது யாருமே இல்லை எல்லோரும் வெளி வரண்டாவில் காத்துக் கொண்டு இருந்தனர் சிலர்.இவளது கண்கள் பெரிய ஜன்னலின் வழியே தூரத்தே தெரியும் புன்னை மரத்தின் மேலே ஒரு கூட்டை பார்த்துக் கொண்டிருந்தது.சூரியன் முழுதும் மறைந்து அந்தி சாயும் வேளை. ஆகாயம் எங்கும் கருமேகங்களை பூசிக் கொண்டிருந்தது. அந்த இருட்டிலும் ஒரு தாய்பறவை தன்இரையை தன் குஞ்சு குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தது. கீச்... கீச்... என்ற அவர்களுக்கே உறிய மொழியில் அந்த தாய் தன் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தது.
தாய்மை அல்லவா தாய்மையின் முதல் கவலையே தன் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும்.தனக்கே இல்லை என்றாலும் தன் குழந்தையின் வயிற்றை நிரப்புவது மட்டுமே மிகமிக முக்கியமானது.
தாயின் வாய் வழியே தன் உணவை வாங்கி கொண்டது பிறந்து சில மணிநேரங்களே ஆன, அந்த பறவை குஞ்சுகள். தாய்மை அல்லவா, தாய்மையின் முதல் கவலையே தன் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும்,தனக்கே இல்லை என்றாலும் தன் குழந்தையின் வயிற்றை நிரப்புவது மட்டுமே மிகமிக முக்கியமானது.
தாயின் வாய் வழியே தன் உணவை வாங்கி கொண்டது பிறந்து சில மணிநேரங்களே ஆன, அந்த பறவை குஞ்சுகள். தாயின் வாய் வழியே தன் உணவை வாங்கி கொண்டது பிறந்து சில மணிநேரங்களே ஆன, அந்த பறவை குஞ்சுகள்.
சட்டென்று ஆகாயம் காரிருளை தன்மேல் பூசிக்கொண்டு தன்னுள் நிறைத்திருந்த நீராவியை மண்ணை நோக்கி விசிறியதுஅதுவரை தனக்குள் மறைத்து வைத்திருந்த சின்ன சின்ன நீர்திவலைகளை கூட்டமாக இறக்கியது,மழைதுளிகள் பொழிய ஆரம்பித்தது.
தனக்கு மட்டுமே இந்த மழை சொந்தம் என எங்குமே விடாமல் காய்ந்து போன பூமி தன்னுள் உள்வாங்கியது.ஜீவராசிகளுக்கு மட்டுமே தாகம் எடுக்குமா என்ன..? பூமிதாய்க்கும் தாகம் எடுக்கும் அல்லவா,வெள்ளியை உருக்கி எடுத்தது போல் மின்னல் வெளிச்சமும், இடிசத்தமும் காதை கிழித்தது.
தாய்பறவை தன் இறக்குகளால் தன் குழந்தைகளை நனையாமல் மூடிக் கொண்டது.மழைத்துளிகள் தாய்பறவையை சொட்ட சொட்ட குளிப்பாட்டியது. இவளது கூட்டில் மேற்கூரை இல்லை. கண்களில் விழும் மழைத்துளிகளை பொருட் படுத்தாமல் தன் குழந்தைகளை மறைத்துக் கொண்டிருந்தது.
இதை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் வழியே கண்ணீர் மழை வழிந்தது.கைகள் தன் ஆழிலை வயிற்றை தடவியது. உள்ளே ஆறுமாத சிசு இருக்கிறானே, இன்னும் சிறிதுநேரத்தில் அவனை காண்பாள்.
ஆனால் உணவை வாங்க அவளின் ஜீவன் இல்லையே, நேற்றே அவனுக்கு கடைசி சாதம் கொடுத்து வயிற்றை நிரப்பினாள். இன்று முடியாதே,இதோ இந்த பறவைக்கு இருக்கும் தாய்மைகுணம் கூட இவளுக்கு இல்லையே.
நேற்று ஊட்டிய சாதம் முடிந்தவுடன் விஷத்தை கொடுத்தவள் அல்லவா இவள்.தன் ஆற்றாமை, இயலாமை எதை யாரிடம் என்னவென்று சொல்வாள்.இவளே மனதளவில் பச்சிளம் குழந்தை தன்னுள் வளரும் இன்னொரு குழந்தையை எப்படி பாதுகாப்பாள்.
இவளுக்கு எதுவுமே தெரியாதே,சொல்லிதர இவள் வீட்டாரும் அருகே இல்லை.இவளுக்கு இந்த சுதந்திரம் கொடுக்க படவில்லையே,என்ன செய்வது.இவளுக்கு அழுகை கூட இங்கே மறுக்கப்பட்ட ஒன்று. இதோ இந்த அறையில் உள்ளதால் மனதை ஆற்ற முடிகிறது
தன் மகனுக்கு மிகவும் பிடித்த மழை இப்போது கொட்டி தீர்க்கிறது.
கடந்த ஆறுமாத காலமாக இந்த மழைத்துளியை இந்த கந்தக பூமி அறியாது.இவளும் இரும்பு கம்பியின் பின்னே பெரிய பெரிய கட்டடிடங்களுக்கு இடையே தெரியும் இடைவெளியில் வானத்தை பார்ப்பாள் தன்னுள் வளரும் மகனுக்காக கையேந்தி யாசம் கேட்பாள் சிறிய துளியை தருமாறு,மேகமகள் மனம்தளராமல் மனம்மிரங்காமலே பதில் அளிப்பாள்.
காத்திருந்து காத்திருந்து தன் மகனின் ஆசையை நிறைவேற்றாமலே வழி அனுப்புகிறோமே என்றவளுக்கு,சட்டென பிரசவவலி அதிகமாகியது அம்மா...என்று அலறினள்.இரண்டு நாட்களாக சிறியதாக இருந்த வலி இப்போது தீப்பிளம்பாய் வெடித்தது.
ஏற்கனவே மருத்துவர் சொன்ன அறிவுரை நினைவில் வந்தது. உன் குழந்தை இந்த பூமியை தொடும்போது சுவசமில்லாமலே பிறப்பான், கவலைப்படாதே என்று சொன்னது காதில் ஒலித்தது.
தகதகவென எரியும் சுடுகோலால் கோடு போட்டது ஒரு வலி, அம்மா என்று கதறினாள். கண்கள் தன் மகனை நினைத்து கதறியது. வலியின் டெசிபல் அதிகமாகியது. தாங்க முடியாமல் முக்கினாள் தன்னுள் இருக்கும் கடைசி உயிர்சக்தியை வைத்து,சட்டென கால்களின் இடைவெளியில் பெண்மையின் திரை கிழியும்சப்தம் கேட்டது.
இவளது அசுர முயற்சியில் வலி தாங்க இயலாமல் முக்கினாள் மறுபடியும், அவ்வளவுதான் தன் வயிற்றை கிழித்துக் கொண்டு தன் மகன் கொஞ்சம் வெளியில் வந்து விட்டான் என்ற ஆற்றாமையில் கதறினாள்.
சிஸ்டர் சீக்கிரம் இங்கே வாங்க..வாங்க..என்ற பெருங்குரலுடன் கத்தினாள் யாருமே வரவில்லை.தொண்டை அடைத்துக் கொண்டது,நெஞ்சம் துடி துடிக்க கத்தினாள்.தன் உடம்பை தூக்கிக் கொண்டு எட்டி பார்த்தாள். தன் மகனை பார்க்க முடியவில்லை. கறியது நெஞ்சம்.
எப்படி வரவேண்டிய மகன், இப்படியா ஜனிப்பது. அப்போது சட்டென தாதி ஒருவள் உள்ளே நுழைந்தாள்,சிஸ்டர் யாரும் இல்லம்மா என்ன ஆச்சு என்றவள் கேட்டுக் கொண்டே கிழே கவனிக்க படுக்கை விரிப்பில் இரத்த போக்கிடையே சிறிய தலை வெளியேயும் முக்கால் பகுதி உடம்பு பெண்மையின் உள்ளே இருந்ததை கவனித்த தாதி.
அய்யோ நான் என்ன செய்வது என்ற பதைபதைப்புடன், கொஞ்சம் பொருத்துக்கொள் அம்மா என்று சடார்ரென குழந்தையின் தலையை பிடித்து இழுத்தாள்.
அய்யோ.....ஆண்குழந்தை அம்மா என்று கண்ணீருடன் கீழே வைத்தாள்.தொப்புள் கொடியும் பையும் வயிற்றுக்குள்ளேயே உள்ளேயே இருந்தது. தாதியின் அலறலை கேட்டவள். அபிமன்யு... அபி... அபி.... என்று கதறினாள். எட்டியும் பார்க்க முடியவில்லை.தொப்புள் கொடி வெட்ட படவில்லை. இதற்கு மேல் மனதிலும்,உடம்பிலும் சக்தி இல்லை.
அப்போது செவிலியர் ஒருத்தி உள்ளே நுழைந்தாள்.கத்தரிக்கோலை எடுத்து அம்மா பிள்ளை உறவை வெட்டினாள்.வயிற்றில் கையை வைத்து அமுக்கினாள் நஞ்சுக்கொடி உள்ளேயே சிக்கி கொண்டது.மருத்துவர் வந்தால் மட்டுமே இதை எடுக்க முடியும் என்று இவளிடம் மன்னிப்பு கோரினாள்.
நடைபிணத்திடம் மன்னிப்பு கேட்க்க இவர்கள் யார். கேட்க வேண்டியவர்கள் கேட்கவில்லை. தன்னுடைய கையால் ஆகாத கோழைதனத்தகண்டு மனது வெம்மியது. இதற்குமேல் தான் இருந்து என்ன செய்வது. யாருக்காக இந்த புவியில் இருப்பது. சிறிய எறும்பை கூட கொல்வதற்கு தயங்கிய இந்த பாழாய் போன மனது, இன்று தன்னுள் வளர்ந்த பொக்கிஷத்தை கொலை செய்துவிட்டாளே.
ஆம் கொலை தான். அந்த செவிலியர் அடுத்த நிமிடம் குழந்தையை வெளியே இருப்பவர்களிடம் காட்டி விட்டு உள்ளே வந்தவள். குழந்தையை எடுத்து தன்அருகே உள்ள சிறிய பக்கெட்டில் ஏதோ ஒரு திரவத்தில் இட முயன்றாள்.
அப்போது உயரமான ஒருவன் உள்ளே வந்தான் இவளை திரும்பிக்கூட பார்க்காமல் செவிலியிடம் ஒருமுறை குழந்தையை இதோ இவளிடம் காட்டி விடுங்கள் என்று யாருக்கோ என்னவோ என்று நடையை கட்டினான்.அதுவரை சுயநினைவு இல்லாமல் மயக்கத்தில் இருநதவள் சட்டென விழித்தாள்.
தன்மகனை காண திருமபினாள் தன்னையே உறித்து வைத்து தன்னுள் நீக்கமற,தனக்காக தன்னுயிரை தியாகம் செய்த தெய்வமகனை ஒருமணித்துளியில் கண்ணீர் திரையுடன் கண்டாள்.
இச்சே இந்த கண்ணீர் வேறு என் மகனின் வடிவை காணமல் திரையிடுக்கிறதே என்ற கோபத்துடன் கண்களை துடைத்துக் கொண்டே கண்டாள்.
கண்ணீர் மறைத்துக் கொண்டே இருந்தது ஐய்யோ என் மகனின் திருஉருவை நன்றாக பார்க்க வேண்டுமே என்று பார்த்தாள்.தான் கொடுத்த கடைசி சாதத்துடன் வாயை திறந்து இருந்தான். தன் மகனின் முத்துவாய் திறந்தே இருந்தது, குழந்தையின் நாக்கு மேல்லன்னத்தில் முட்டிக் கொண்டு திறந்தே இருந்தது.
ஐய்யோ என்னை நம்பி சோறு உண்டயடா என் மகனே உனக்கு விஷத்தை கொடுத்து விட்டேனே என் மகனே என்று பெற்றவள் துடித்தாள். மார்பிலிறுந்து பால் ஊற்று தன்மகனை கண்டவுடன் சுரந்து மார்பை நனைத்தது.மார்பு தாய் கேட்டாள்.
எங்கே என் மகன் என்று....?கைவிரல்கள் வயிற்றை தடவி கேட்டது வயிற்று அம்மா கேட்டாள்...?ஆவலுடன் எங்கே என் மகன் என்று......?இதயம் கேட்டது என்னுடன் துடித்த சிறிய குட்டி இதய துடிப்பு எங்கே என்று...?
தன் உடம்பில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் தன் மகனின் குரல் கேட்க காத்திருந்தார்கள்.என்ன பதிலுரைப்பாள் இந்த பித்திச்சி....?இதோ என் அபிமன்யு போர்களத்தில் சாய்ந்து விட்டான் என்றா.
அம்மா என்றலைத்த உயிர் பிரிந்து விட்டது,இவள் துடிதுடித்தாள் சுபத்திரையை போல.அம்மா என்றழைத்த என் செல்வன் எங்கு சென்றான்.....?எங்கு சென்றான்.....?பாண்டவர்கள் பதைபதைத்தார்கள் அன்று போர்களத்தில் இன்று இங்கே பாண்டவர்கள் இல்லை,இந்த பித்தி மட்டுமே பிதற்றுகிறாள் மகனே உன்னை நான் எங்கு காண்பேன்.....?என் பாரத்தை நீ சுமந்து சென்றாயா ஏன்....?என்னையும் கூட்டி செல்,நீ இல்லாத உலகில் நான் இல்லை பாலுட்ட உன் பாலம்மா பதறுகிறாள்.
நீ எங்கே...?.ஐயோ மகனே என்று கதறினாள்.தன் கைககள் ஒருமுறை கூட அவனை தடவவில்லையே,இந்த மடியில் உன்னை தாலாட்டவில்லையே என்று பரிதவித்தாள்.ஒரு தாய்யாக கற்சிலையாக சமைந்தாள்.
செவிலி செல்வ மகனை அந்த திரவத்தில உள்ளே வைத்து எடுத்து சென்று விட்டாள்.வெளியே இடிசப்தம் காதை கிழித்தது மின்னல் வெட்டியது.
ஹோ....வென மழை கொட்டியது.ஐன்னலை வெறித்தவள் விரக்தியில் சமைந்தாள்.வெளியே சென்று ஆகாயத்தை பார்த்து கதற வேண்டும் போல் இருந்தது. இப்போது எதற்காக வந்தாய். ஏன் வந்தாய் அவனை வழி அனுப்பி வைக்க வந்தாயா ஏன் வந்தாய் உனக்கும் அவனுக்கும் என்ன உறவு, அவனுடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வந்தாயா. இல்லை தப்பு செய்து விட்டோம் என்று கண்ணீர் மழையாய் பொழிகிறாயா. அழு.... அழு நன்றாக அழு, மனிதர்களுக்கு இல்லாத மனிதம், உனக்காவது இருக்கிறதே அழு என்று கூடவே இவளும் கதறினாள் மழைதுளிகளை பார்த்து.
ஆழிலையில் உதித்த வெண்பிறையே
ஆரணங்கே என் வெள்ளிநிலவே
ஆர்பறிக்கும் என் வெண்மேகமே
தங்கநிற சொப்பில் ஊறிய பாலருவி
நெருஞ்சி முள்பாதை எங்கும் ஓடுது....!!
பருகியவன் நீ
என்னுள் வளர் மதியாய்
சூரியானாய் உதித்து
மறைமதியாய் தேய்ந்தாயே
என் கண்ணே....!!
என் கண்ணா....!!
இனி என்ன என் வாழ்கையில் மிச்சம் உள்ளது.அரக்கனை கட்டியதால் வந்த மிகப்பெரிய இழப்பு.நானா இதற்கு காரணம். இல்லையே, நான் எந்த தவறும் செய்யவில்லையே.அவனின் கொடுமையை தன் தனயன் வாங்கி விட்டானே என்று மனது ஆயிரம் சவுக்கடிகளை இவளை நோக்கி விளாசியது.இதோ இப்போது கூட இவளுக்கு அழுக முடியாது,திட்டுக்கள் பெருவாரியாக கிடைக்கும்.தினமும் ஏச்சுக்களும் பேச்சுகளும் அடிகளும் விழும்.தனது கையலாகததனத்தை நொந்து கொண்டாள் தாயவள்.இன்று எல்லோருக்கும் குற்றவாளி இவளே இழப்பும் இவளுக்கே.
இதோ கார் கிளம்பும் சப்தம் கேட்டது தன் மகனின் கடைசி பயணத்தை நிறைவு செய்ய வானம் பிளந்தது பெரும்மழையை கொட்டியது.தனது கண்ணீரை தாரை தாரையாக பொழிந்தாள் மழையவள்.
உடம்பும் உள்ளமும் காய்ந்து உலர்ந்து போனது இவளுக்கு மருத்துவர் வந்தார் இவளை பார்த்தவுடன் புரிந்து கொண்டார்.இவளின் வயிற்றில் கைகைகளை வைத்தழுத்தி நஞ்சு கொடியை வெளியேற்றினார்.இவளின் முதுகை தடவி கொடுத்து விட்டு செவிலியிடம் ஏதோ சொல்லி விட்டு சென்றார்.
சிறிதுநேரத்தில் அங்கு வந்த செவிலி இவளின் மேலாடையை திறந்தார். உடைகள் எங்கும் ஈரமாக இருந்தது. இவளிடம் தான் என்ன செய்ய போகிறேன் என்பதை விளக்கினார்.கைதாங்கலாக குளியல் அறைக்கு கூட்டிச் சென்றார.
தாதி மெதுவாக பெண்ணிடம் அம்மா உங்க பெயர் என்ன என்றார்.மெதுவாக "மடல்" என்றாள். தாதி இவளுக்கு வெந்நீர் ஒத்தடம் தரனும்மா என்றவர் அவளின் ஆடைகளை மெதுவாக களைந்தவரின் கண்கள் நிலை குத்தி நின்றது. உதடுகள் துடித்தன நடுக்கத்துடன் கால்கள் தள்ளாடியது.
அய்யோ அம்மா தாயே என்று கதறினார், இவரின் முகத்தை பார்த்தவளுக்கு அப்போது தான் புரிந்தது தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்று சட்டென்று ஆடையை எடுத்து தன்னை மறைத்தாள்.
தாதியும் பெண்தானே இவளை அணைத்துக் கொண்டு கதறினார். அதுவரை அழமுடியாமல் தவித்தவள் தன் தாயின் சாயல் இருந்ததால் தாதியின் தோள்களில் தான் மறைத்து வைத்த ரணங்களை வெந்நீரினாள் கழுவினாள்.
சிறிறு நேரம் கழித்தவுடன் தாதிக்கு தான் செய்ய வேண்டிய வேலை ஞாபகம் வந்ததது. பச்சை உடம்புகாரி இதற்கு மேல் அழுககூடாது ஆபத்து என்று நினைத்தவள் வேலையில் இறங்கினாள்.இவளின் தனத்தில் இருந்து தாய்பாலை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றினார்.
தாய்பால் தரையில் வழிந்தோடியது இதை கண்டவுடன் அதுவரை இருந்த விம்மல் வெடித்து சிதறியது.
தாய்மை அல்லவா.தன் மகன் பருகவேண்டிய பால்.வேறு பிஞ்சுசிசு கூடபருக முடியாதே விஷத்தை சாப்பிட்டவள் இவளும் தானே.இனி அழுது தோய்ந்து போனாலும் "மாண்டவர் ஒரு போதும் வருவதில்லை".இவளை சுத்தப்படுத்தி படுக்க வைத்துவிட்டு வெளியேரினர் தாதி.
சிறிது நேரத்தில் கையில் உணவை எடுத்துக் கொண்டு வந்த தாதி இவளின் முகத்தை பார்த்தார். என்ன ஒரு பொன் அழகு சிலை. கலைந்து போன கார்குழல்கள் முகத்தில் சிதறிக் கிடந்தது,கண்ணீர் கோடுகள் முகத்தில் பதிந்து கிடந்தது. பிடுங்கி எறியப்பட்ட செடி போல் கிடந்தாள். நடுத்தர வயதான தாதிக்கு அழுகை வந்தது. எந்த பெண்ணிற்கும் உலகத்தில் இந்த துன்பம் வரக்கூடாது. இதோ பணம் கொட்டி கிடக்கிறது. இந்த நிலைமையில் கூட யாருமே இந்த பெண் அருகே இல்லை.
பணக்காரர்களின் வாழ்வு இப்படிதான் இருக்குமோ. அன்பு, பாசம், பரிவு இல்லாமல் வாழும் இந்த வாழ்கை எதற்கோ என்ற பரிதாபத்துடன் பசியுடன் உறங்கும் பெண்ணை எழுப்ப சென்றார்.
மடல் தொடரும்)
Last edited: