இணைகள் எப்போதும் இணைந்து தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன?
தொலைத் தூரக் காதலர்களிடம் உள்ள அன்பும் பாசமும் கூட இணைந்தே இருப்பவர்களை காட்டிலும் சற்று அதிகமே.
பல நாட்கள் தன் இணையைப் பார்க்காமல், மாதங்கள் ஏன் வருடங்கள் கடந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும் அவர்களின் காதலின், நேசத்தின் ஆழத்தை.
அதேபோல் தான் இங்கு நம் மண் மகளுமே அவளின் காதலைக் காணமல் வரண்டு கிடக்கிறாள் ஏக்கத்தில்.
நன்கு வளமாக இருக்கும் அவளின் உடலான கணிமங்கள் கூட, நாளாக நாளாக தங்களின் ஒவ்வொரு தன்மைகளான பாகங்களை செயலிழக்க தொடங்கியிருந்தன அவளின் ஏக்கத்தின் விளைவாக.
இருந்துமே அவைகள் பெரிதாக அவளின் உயர்ப்பை காக்க போராடும் ஒவ்வொரு வேளையிலுமே, அவளை 'காதல்' செய்கிறேன் என்று வந்து நிற்கும் காற்று, 'தான் நன்மை செய்கிறேன்' என்ற பெயரில் உபத்திரவம் தான் இந்நொடி தொட்டு செய்கிறான்.
எல்லையில்லாக் கொள்ளை காதல் அவனுக்கு மண் மகளின் மீது, ஆனால் எப்போது அவளின் காதல் யார் என்று தெரிந்ததோ அப்போது ஆரம்பித்தது பிரசச்னை!
ஒரு ஒருமுறையும், அவளின் காதலன் ஆசையாய், ஏக்கமாய், கலக்கமாய் அவளை வந்து சேர பெரும் ஒலி(ளி) எழுப்பலுடன் அவளை நோக்கி வர தயாராக இருக்கும் சமயத்தில் கூட, எங்கிருந்தான் இந்த வில்லனான காற்று வருவானோ, கருத்து திரண்டு அவனின் காதலியைப் பார்த்து நிற்பவனை ஒரே ஊதில் ஊதித் தள்ளியிருப்பான் மலைகளுக்கு அப்பால்!
'இப்போ கூட உன்கிட்ட வந்து சேர முடியலையே மள்ளீ' என்ற மண் மகளின் காதலன் அந்த மலையின் மீது தான் சோகத்தையும் ஆத்திரத்தையும் அடித்து வீழ்த்தியிருப்பான் ஒவ்வொரு முறையும்.
இங்கு, அந்த மண்ணவளோ கண்ணீர் வடிக்கக் கூட தெம்பில்லாமல் ஒரு சொட்டு தண்ணீருக்காக, அவளின் காதலனின் வருகை தரும் ஆனந்தத்திற்காகவே வெடிப்போடிய தரிசாகக் காத்திருக்கிறாள் பல ஆண்டுகளாக!
தன் மகவுகளை பாதுகாக்க முடியாமல் போனது ஒருபுறபிருந்தாலும், அவர்கள் தங்களின் தந்தையாகிய மழையைப் பார்க்காமலேயே மரிந்தனரே என்பது தான் அந்த மண்ணவளின் பெரும் கலக்கம்.
மன்னவன் வருவான், வருவான் என்று வானம் பார்த்து இருந்தவளுக்கு, "நான் உன்னோடு இருக்கிறேன்" என்று வருடிச் சொல்லும் காற்றைக் கண்டால் ஆத்திரம் தான் முட்டி வரும் அவளுக்கு.
தன் காதலனை, மன்னவனை தன்னிடம் சேரவிடாது தடுப்பவன் இவனே என்று பலமுறை நினைத்திருந்தாலுமே, தென்றலாய் ஒருசில சமயம் அவளை வருடும் தருணங்களில் அவள் என்னவோ லேசாகவே உணர்வாள்.
இந்த கொடுமைகளைக் காண சகியாது சிறு தூரலாய் தன் கண்ணீரை மண்ணில் மழையவன் சிந்தினாலுமே அது அந்த தென்றலோடே சென்றிருக்கும், மண்ணை நனைக்காது.
வானமோ மழை படும் பாடு தாங்காது தன் மேகக் கூட்டங்களை மெல்ல நகர்த்திக் கொண்டு சென்றாலுமே, அந்த சூறாவளிக் காற்றிற்கு முன்னால் அவனாலும் ஒன்று செய்ய முடியா நிலை!
'இந்த வருடமாவது தன் காதலன் வருவான், தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பான்' என்ற மண்ணவளின் ஆசையைக் காப்பாற்ற மேகங்கள் அனைத்தும் கருநிறம் பூண்டு இடி முழக்கத்துடன் மழையின் வருகையை பறை சாற்ற, அதை தடுக்கும் வண்ணம் தானுமே தயாராகியிருந்தான் காற்றானவன்.
இந்த முறை தன் காதல் பெண்ணை, தன் வரண்டுப் போய் காத்திருக்கும் சில பிள்ளைகளைப் பார்த்தே தீருவேன் என்று உறுதியாக இருந்த மழையவனோ தன் மொத்த பலத்தையுமே காட்டிட,
காற்றும் தன் அசுரத் தனத்தைக் காட்டியது அந்த நிலப்பரப்பில்.
மண்ணவளின் மேனியான துகல்கள் எல்லாம் அந்த சூறைக்காற்றில் மேலேந்து அவளின் உயிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிட, அதைத் தாங்காத மழையவனோ தன் முழு முயற்சியையும் கொடுத்து அடைமழையாக மாறிவிட, இப்போது தான் போட்டி வழுத்தது.
மழையவன் மண்மகளை வந்து சேர்ந்த அந்த நொடிகள், தன்னின் உற்சாகத்தைக் உலகிற்கு அறிவிக்கும் வகையில் தன்னின் மன(ண)த்தை அந்த இடமெங்கிலுமே பரப்பி மகிழ்ந்தாள் அந்த கோதை.
இணைகள் சேர்ந்துவிட்டன, ஆனால் அந்த காற்றின் பயனால் அவர்களின் ஒன்றிரண்டு பிள்ளைகளுமே வேரோடு சாய்ந்து விடவே, தந்தையவனின் உள்ளம் பொறுக்காது தன் கொரத்தைக் காட்ட, காற்றவனுக்கு இப்போது வந்தது கிலி!
இதே நிலை தொடர்ந்தால் இனி இந்த மண்ணும் இருக்காது ஏதுவும் மீஞ்சாது என்ற எண்ணத்தில் தன்னின் போக்கைக் குறைக்கவே, ஒரு குளிர்ந்த சூழல் நிலவவும் சாந்தம் அடைந்தான் அந்த உன்னத காதலன்.
நெடு வருடம் கடந்த அந்த அன்பு, இப்போது கை சேர்ந்த மகிழ்ச்சியில் தன் மேனியங்கிளுமே அந்த மழை நீரினை நதியாக்கி ஓடவிட்டிருந்தாள் அந்த மழையவனின் காதல் பெண்ணவள்!
***
*மள் - மண்
தொலைத் தூரக் காதலர்களிடம் உள்ள அன்பும் பாசமும் கூட இணைந்தே இருப்பவர்களை காட்டிலும் சற்று அதிகமே.
பல நாட்கள் தன் இணையைப் பார்க்காமல், மாதங்கள் ஏன் வருடங்கள் கடந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும் அவர்களின் காதலின், நேசத்தின் ஆழத்தை.
அதேபோல் தான் இங்கு நம் மண் மகளுமே அவளின் காதலைக் காணமல் வரண்டு கிடக்கிறாள் ஏக்கத்தில்.
நன்கு வளமாக இருக்கும் அவளின் உடலான கணிமங்கள் கூட, நாளாக நாளாக தங்களின் ஒவ்வொரு தன்மைகளான பாகங்களை செயலிழக்க தொடங்கியிருந்தன அவளின் ஏக்கத்தின் விளைவாக.
இருந்துமே அவைகள் பெரிதாக அவளின் உயர்ப்பை காக்க போராடும் ஒவ்வொரு வேளையிலுமே, அவளை 'காதல்' செய்கிறேன் என்று வந்து நிற்கும் காற்று, 'தான் நன்மை செய்கிறேன்' என்ற பெயரில் உபத்திரவம் தான் இந்நொடி தொட்டு செய்கிறான்.
எல்லையில்லாக் கொள்ளை காதல் அவனுக்கு மண் மகளின் மீது, ஆனால் எப்போது அவளின் காதல் யார் என்று தெரிந்ததோ அப்போது ஆரம்பித்தது பிரசச்னை!
ஒரு ஒருமுறையும், அவளின் காதலன் ஆசையாய், ஏக்கமாய், கலக்கமாய் அவளை வந்து சேர பெரும் ஒலி(ளி) எழுப்பலுடன் அவளை நோக்கி வர தயாராக இருக்கும் சமயத்தில் கூட, எங்கிருந்தான் இந்த வில்லனான காற்று வருவானோ, கருத்து திரண்டு அவனின் காதலியைப் பார்த்து நிற்பவனை ஒரே ஊதில் ஊதித் தள்ளியிருப்பான் மலைகளுக்கு அப்பால்!
'இப்போ கூட உன்கிட்ட வந்து சேர முடியலையே மள்ளீ' என்ற மண் மகளின் காதலன் அந்த மலையின் மீது தான் சோகத்தையும் ஆத்திரத்தையும் அடித்து வீழ்த்தியிருப்பான் ஒவ்வொரு முறையும்.
இங்கு, அந்த மண்ணவளோ கண்ணீர் வடிக்கக் கூட தெம்பில்லாமல் ஒரு சொட்டு தண்ணீருக்காக, அவளின் காதலனின் வருகை தரும் ஆனந்தத்திற்காகவே வெடிப்போடிய தரிசாகக் காத்திருக்கிறாள் பல ஆண்டுகளாக!
தன் மகவுகளை பாதுகாக்க முடியாமல் போனது ஒருபுறபிருந்தாலும், அவர்கள் தங்களின் தந்தையாகிய மழையைப் பார்க்காமலேயே மரிந்தனரே என்பது தான் அந்த மண்ணவளின் பெரும் கலக்கம்.
மன்னவன் வருவான், வருவான் என்று வானம் பார்த்து இருந்தவளுக்கு, "நான் உன்னோடு இருக்கிறேன்" என்று வருடிச் சொல்லும் காற்றைக் கண்டால் ஆத்திரம் தான் முட்டி வரும் அவளுக்கு.
தன் காதலனை, மன்னவனை தன்னிடம் சேரவிடாது தடுப்பவன் இவனே என்று பலமுறை நினைத்திருந்தாலுமே, தென்றலாய் ஒருசில சமயம் அவளை வருடும் தருணங்களில் அவள் என்னவோ லேசாகவே உணர்வாள்.
இந்த கொடுமைகளைக் காண சகியாது சிறு தூரலாய் தன் கண்ணீரை மண்ணில் மழையவன் சிந்தினாலுமே அது அந்த தென்றலோடே சென்றிருக்கும், மண்ணை நனைக்காது.
வானமோ மழை படும் பாடு தாங்காது தன் மேகக் கூட்டங்களை மெல்ல நகர்த்திக் கொண்டு சென்றாலுமே, அந்த சூறாவளிக் காற்றிற்கு முன்னால் அவனாலும் ஒன்று செய்ய முடியா நிலை!
'இந்த வருடமாவது தன் காதலன் வருவான், தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பான்' என்ற மண்ணவளின் ஆசையைக் காப்பாற்ற மேகங்கள் அனைத்தும் கருநிறம் பூண்டு இடி முழக்கத்துடன் மழையின் வருகையை பறை சாற்ற, அதை தடுக்கும் வண்ணம் தானுமே தயாராகியிருந்தான் காற்றானவன்.
இந்த முறை தன் காதல் பெண்ணை, தன் வரண்டுப் போய் காத்திருக்கும் சில பிள்ளைகளைப் பார்த்தே தீருவேன் என்று உறுதியாக இருந்த மழையவனோ தன் மொத்த பலத்தையுமே காட்டிட,
காற்றும் தன் அசுரத் தனத்தைக் காட்டியது அந்த நிலப்பரப்பில்.
மண்ணவளின் மேனியான துகல்கள் எல்லாம் அந்த சூறைக்காற்றில் மேலேந்து அவளின் உயிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிட, அதைத் தாங்காத மழையவனோ தன் முழு முயற்சியையும் கொடுத்து அடைமழையாக மாறிவிட, இப்போது தான் போட்டி வழுத்தது.
மழையவன் மண்மகளை வந்து சேர்ந்த அந்த நொடிகள், தன்னின் உற்சாகத்தைக் உலகிற்கு அறிவிக்கும் வகையில் தன்னின் மன(ண)த்தை அந்த இடமெங்கிலுமே பரப்பி மகிழ்ந்தாள் அந்த கோதை.
இணைகள் சேர்ந்துவிட்டன, ஆனால் அந்த காற்றின் பயனால் அவர்களின் ஒன்றிரண்டு பிள்ளைகளுமே வேரோடு சாய்ந்து விடவே, தந்தையவனின் உள்ளம் பொறுக்காது தன் கொரத்தைக் காட்ட, காற்றவனுக்கு இப்போது வந்தது கிலி!
இதே நிலை தொடர்ந்தால் இனி இந்த மண்ணும் இருக்காது ஏதுவும் மீஞ்சாது என்ற எண்ணத்தில் தன்னின் போக்கைக் குறைக்கவே, ஒரு குளிர்ந்த சூழல் நிலவவும் சாந்தம் அடைந்தான் அந்த உன்னத காதலன்.
நெடு வருடம் கடந்த அந்த அன்பு, இப்போது கை சேர்ந்த மகிழ்ச்சியில் தன் மேனியங்கிளுமே அந்த மழை நீரினை நதியாக்கி ஓடவிட்டிருந்தாள் அந்த மழையவனின் காதல் பெண்ணவள்!
***
*மள் - மண்
Last edited by a moderator: