மழையோடு நம் காதல்
சாலையோரம் தன்னந்தனியாக அமைந்திருந்த வீட்டு வாசலில் வாழை தோரணமும் உள்ளே ஒரு திருமண நிகழ்வும் நடந்துக் கொண்டிருந்தது.
ஐயர் மாப்பிள்ளையை அழைக்க ஒருவன் மாப்பிள்ளையை வீடு முழுக்க அலசினான். எந்த அறையிலுமே அவர் இல்லாததால் கடைசியாக வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தான். அங்கு பட்டு வேட்டி சட்டையில் தலை நரைத்து வழுக்கை தலையுடன் ஒரு பெரியவர் நின்று எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
அவர் அருகில் சென்றவன் தாத்தா என்றழைக்க அவருக்கோ காதில் விழவில்லை ...
அவர் பார்த்த திசையில் அவனும் பார்த்தான். அங்கு எதுவுமே இல்லை ... நீல வானில் வெள்ளை மேகங்கள் தான் விளையாடிக் கொண்டிருந்தது.
"தாத்தா" என்று அவன் சத்தமாக அழைக்க அவர் அசையாமல் "என்ன டா" என்று கேட்டார்.
"இங்க என்ன பன்றிங்க டைம் ஆச்சி வாங்க" என்று அழைத்தான். "நீ போடா நா ஒரு முக்கியமான ஆள எதிர்பார்த்துட்டு இருக்கன்" என்று அவர் பதில் கூறினாரே தவிற பார்வை மாறவில்லை....
"அப்படி என்னத்த மேல பார்த்துட்டு இருக்கிங்க" என்று அவன் கேட்க "ஒரு முக்கியமான கெஸ்ட் .... எங்களோட எல்லா விஷேஷத்துலையும் எங்கள ஆசிர்வதிக்க வர முக்கியமான ஒரு ஆள்" என்று அவர் கூற
"உள்ள தேட்றாங்க வாங்க தாத்தா" என்று அவன் தாத்தாவை இழுத்துக் கொண்டு உள்ளே சென்று மணமேடையில் அமர வைத்தான்.
தாத்தா அமர்ந்த சிறிது நேரத்திலே அவரது மணையாளை புதுப்பெண் போல் அலங்கரித்து அழைத்து வந்து அவர் அருகில் அமர வைத்தனர்.
இருவருக்கும் அறுபதாவது கல்யாணம் .... இருவருக்குமான காதல் மூன்று பிள்ளைகள் ஏழு பேர பிள்ளைகள் பிறந்தும் இத்தனை ஆண்டுகளில் சிறிதும் குறைந்ததில்லை ..
"ஏங்க அவங்க வரலையா" என்று பாட்டி கேட்க "இன்னும் வரலையேம்மா" என்று தாத்தா கூறினார்.
நல்ல நேரம் முடியும் முன் தொடங்கி விடலாம் என்று ஐயர் கூற "இருங்க ஐயர்ரே ஒரு முக்கியமானவங்க தான் முதல்ல எங்க மேல தண்ணி கொட்டனும்" என்று தாத்தா கூற அங்கிருந்த அனைவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
"யார் அது" என்ற கேள்வியுடன் அனைவரும் இருக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து விட்டு "மழை" என்று கூறினர்.
அனைவரும் சலிப்புடன் அவர்களை பார்க்க "இந்த மழை தான் எங்க வாழ்கையில ரொம்ப முக்கியமான ஒரு ஆள் .... மழையால தான் நா இவளை முதல் முதல்ல பார்த்தன் .... மழையால தான் இவளை காதலிக்க தொடங்கனன் ... எங்களோட இன்பத்துலையும் துக்கத்துலையும் மழை இருந்திருக்கு" என்று தாத்தா கூற பாட்டியும் புன்னகைத்தார்.
உண்மை தான் தாத்தாவின் இளம்வயதில் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்த பாட்டி மழைக்காக அக்கடையில் அடைக்களம் ஆனார்.
முதல் நாள் பார்த்தும் பார்க்காதது போல் தாத்தா இருந்து விட்டார் ஆனால் அடுத்து வந்த நாட்களில் பாட்டி அக்கடை அருகில் வரும்போதெல்லாம் மழை வர பாட்டி அக்கடைக்குள் நுழைய தாத்தாவிற்கு பிடித்து போனது.
ஆனால் பாட்டி தான் தாத்தாவை கண்டுகொள்ளவே இல்லை ... சரியாக இந்த இடத்திற்கு வரும் போது மட்டும் மழை வருகிறதே என்று பாட்டி மழையை திட்டி தீர்ப்பார்.
பாட்டி தாத்தா வேலை செய்யும் கடைக்கு வரும் போது வழக்கம் போல் மழை வர பாட்டி அக்கடைக்குள் நுழைந்தார். இதற்காகவே காத்துக் கொண்டிருந்த தாத்தா பாட்டியிடம் சென்று தன் காதலை கூறினார். பாட்டியிடம் முதலில் மறுப்பு தான் ஆனால் தினமும் மழையால் அக்கடைக்கு செல்வதால் அவரும் தாத்தாவை காதலிக்க தொடங்கினார்.
இருவர் வீட்டிலும் கூறி திருமணம் செய்துக் கொள்ள அவர்களின் திருமண நாள் அன்று மழை..... இருவருக்குமான மனக்கசப்பின் போது இருவரையும் பழைய நிகழ்வுகளை நினைக்க வைத்து சமாதானம் செய்வது மழை .... இருவரின் முதல் குழந்தை பிறந்தன்று மழை.... இருவரின் ஒவ்வொறு திருமண நாள் அன்றும் மழை.... என்று மழை இருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாக மாறி போனது .
இப்பொழுதும் அவர்களின் அறுபதாம் திருமணத்திற்கு மழையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதோ வந்துவிட்டதே மழை இருவரும் ஆனந்தமாக ஒருவர் கையோடு கை கோர்த்து எழுந்து வெளியில் சென்று மழை நீரால் முதலில் நீராடினர்.
மழை சிலருக்கு பிரியம் சிலருக்கு வெறுப்பு ஆனால் இத்தம்பதியினருக்கு மழை அவர்கள் குடும்ப உறுப்பினர். மழையோடு முதுமை வாய்ந்த இளம் தம்பதியினர் தங்களின் காதலில் திளைத்தனர்.
- கதாரசிகை