• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மழை - சுரேஷ்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
285
63
Tamil Nadu, India
மழை(கண்)நீர்

ஊர் முழுக்க கருமேகம் சூழ்ந்து இடி மின்னலென சத்தம் காதை பிளக்க அரை மணி நேர மழைக்கே ஊர் முழுக்க வெள்ளக்காடாய் ஆனதில் மழைநீர் எப்போது வீட்டிற்குள் புகுமோ என்கிற பயத்திலேயே உறக்கம் இன்றி தவித்தநிலையில் இருளின் நடுவில் அமர்ந்து இருந்தாள் மரகதம்

கனமழை பெய்ததில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதில் வெளிச்சம் சிறிதும் இல்லாமல் போகவே மெழுகுவர்த்தி துணை மட்டுமே என்ற நிலையில் ஒரு பக்கம் கணவரின் குறட்டை ஒலி மறு பக்கம் இரு குழந்தைகளும் கொசு கடியால் புரண்டு புரண்டு படுக்க கையில் வைத்து இருந்த சிறு விசிறியால் பிள்ளைகளுக்கு வீசியபடியே மரகதம் இரவும் கழிந்தது,

ஒரு வழியாக பொழுது விடியவும் அப்பாடா மழைநீர் வீட்டிற்குள் வரலை என மரகதம் கண்ணசரலாமென படுக்க போகவே, கணவரின் குரல் அவள் காதருகே "அடியே மரகதம் கரெண்ட் இல்லாமல் நைட் ஒழுங்காக தூங்கவே இல்லை போய் சூடா ஒரு காபி போட்டு கொண்டு வாயேன்"

"எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு ராத்திரி தூங்காம கண்ணெல்லாம் எரியுது, கொஞ்சம் கழிச்சு போட்றனேங்க" மரகதம் முழுமையாக சொல்லி முடிக்கும் முன்பே "அடச்சீ நைட் முழுக்க தூங்காம பிராக்கு பார்த்து இருந்தியா என்ன, தலை வலிக்குதுனு ஒரு காபி கேட்டா சாக்கு போக்கா சொல்ற, இப்போ நீ எழுந்து போறீயா இல்லை" ஆக்ரோசமாக அவன் பேசவும்

"சரி போறங்க கோபபடாம இருங்கள்" என மரகதம் எழுந்து சமையலறை நோக்கி செல்ல வெளியே ஓய்ந்த மழைநீர் இப்போது மரகதம் கண்களின் ஓரம் வழிந்தோட தொடங்கியது...!!!

சுரேஷ்.வி.பி-சென்னை




AOh14GhCPSHgKwVHmbOvqc0Cb_ynREMdzSWjs37ayFxn=s40
ReplyForward