திடீரென அடித்த மழையால் கொன்றை மரங்களில் பூத்திருந்த மஞ்சள் மலர்கள், தெரு நீளத்துக்குக் கொட்டிக் கிடக்க, அந்த அழகை இரசித்துப் பார்க்க முடியாமல், எதையோ யோசனை செய்து கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள் பாரதி.
தான் இப்போது இங்கே வந்திருப்பது சரியா? அல்லது தேவையற்ற வேலை ஏதும் பார்த்து ஏழரையைக் கூட்டி விடுவதற்கு வந்திருக்கிறேனா? ஒன்றும் புரியவில்லையே.. எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டிருந்தவள், கடைசியில் பேசாமல் எழுந்து ஓடி விடலாமா என நினைத்து எழப் போகவும், அவளுக்குப் பக்கத்தில் வந்த ஒருவன்
நீங்கள் உள்ளே போகலாம் எனச் சொன்னான்.
அவன் அவ்விதம் சொன்னதும், சரி இவ்வளவு தூரம் வந்ததும் தான் வந்து விட்டோம், ஒரு தடவை பேசிப் பார்த்து விடுவோமே, கிடைக்கும் பதிலைப் பொறுத்து அடுத்த கட்டத்தை யோசனை செய்யலாம் என முடிவு எடுத்து உள்ளே போனாள்.
உள்ளே போனவளை உட்காரச் சொல்லாமல், எடுத்த எடுப்பிலேயே
"என்ன விசயம்.."
என முன்னால் அமர்ந்திருந்தவன் கேட்கவும், அவனது குரலில் தெறித்த கடுமையில் வந்தவளுக்கோ என்ன விசயமாக வந்தோம் என்பதே சட்டென்று மறந்து போனது.
இருந்தாலும் தன்னை மெல்லச் சமன் செய்ய, முன்னால் கிடந்த கதிரையை மெல்லப் பிடித்து அழுத்தித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, தான் ஏன் வந்தோம் என்பதைச் சொன்னாள்.
"நான் உங்களிட்டை உங்கடை தங்கச்சி விசியமாக் கதைக்கோணும்.."
"வாட்.. எஸ்தர்.."
"ஓம்.. அவா மட்டும் தானே உங்களுக்குத் தங்கச்சி.."
"ம்ம்.. டெல் மீ.."
"எஸ்தர் ஒருத்தரை விரும்புறா.. அதை உங்களிட்டைச் சொல்ல அவாவுக்குப் பயம் போல.. அது தான் அது சம்மந்தமா உங்களிட்டைக் கதைக்கலாம் எண்டு நான் வந்தனான்.. நீங்கள் நினைக்கலாம் என்ரை தங்கச்சி பத்திக் கதைக்க இவா ஆரெண்டு.. விசயமே அங்க தான் இருக்கு.. என்ரை பிரெண்டு கலைமோகனும் அவாவும் தான் காதலிக்கினம்.. எஸ்தர் சொன்னா உங்களிட்டைக் கதைக்கத் தனக்குப் பயமாம்.. அதனால என்னைய வந்து கதைக்கச் சொன்னா அது தான் வந்தன்.. கலை ரொம்ப நல்ல பையன் நீங்கள் வேணும் எண்டால் அவனைப் பத்தி விசாரிச்சுப் பாக்கலாம்.."
"ஓ.."
"அது தான் இது தொடர்பா நீங்கள் கொஞ்சம்.."
எனப் பாரதி ஒரு மாதிரித் தான் சொல்ல வந்த விடயத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அந்த அறையினுள் எஸ்தர் வேகமாக நுழைந்தாள்.
அவளை அந்த நேரம் அங்கே பார்த்ததும் தான் பாரதிக்கும் கொஞ்சம் தென்பு வந்தது. என்ன தான் அவள் கலைமோகனுக்காகப் பேச வந்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. அதனால் அந்த நேரத்தில் எஸ்தர் வந்ததும் கொஞ்சம் தென்பாகவே நின்றிருந்தாள். இனி இவளும் தன் பங்குக்கு பேசட்டும் என அவள் இருக்க, அங்கே அரங்கேறியதோ வேறு சம்பவம்.
உள்ளே வந்த எஸ்தரோ பாரதி நின்றிருந்த பக்கம் திரும்பவேயில்லை, நேரடியாகத் தன் தமையன் முன்னால் போய் நின்று
"யாரு இது.."
என்று கேட்க, பாரதி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
இவள் என்ன சொல்கிறாள் உண்மையில் என்னைத் தெரியவில்லையா? அல்லது வேறு ஏதும் மனதில் நினைத்துப் பயந்து போய்த் தன் தமையன் முன்னால் தனக்கு எதுவுமே தெரியாதது போல நடிக்கிறாளா? எதற்கும் அவளே பேசட்டும் நாம் அவசரப் படக் கூடாது என்பது போலப் பாரதி அமைதி காத்தாள்.
"யாரு இது.."
"மோகன் பிரெண்டு.. ஏதோ உன்னோட லவ் பத்தி.."
"ல்வ்வா.. அதுவும் என்னோடதோ.. லவ்வுக்கும் எனக்கும் ரொம்பத் தூரம் ஆச்சே.. யாரவோ என்ரை பேரை டமேஷ் செய்றதுக்காக இப்புடிக் கிளப்பி விட்ருக்காங்க போல இருக்கு.."
"ஹேய் அதைப் பத்திலாம் எனக்குத் தெரியாது.. ஐடோன்ட் ஹாவ் டைம் ரூ டோக் அபௌட் இற்.. சோ நீயே பாத்துக்கோ.."
என்றவன் அத்தோடு தன் பேச்சு முடிந்தது என்பது போலப் பக்கத்து அறையினுள் போய் விட்டான்.
இவளை ஒரு பொருட்டாகவே கருதாமல் தங்கையும் தமையனும் பேசிக் கொண்டதும் தமையன் விலகிப் போனதும், அமைதியாக அவர்களையே பார்த்திருந்தவளுக்கு லேசாகக் கடுப்பாகத் தொடங்கியது.
சரி இவள் இப்போதாவது ஏதேனும் சொல்வாள் தானே என்ற எண்ணத்தில் பாரதி சற்றே தன் கடுப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு எஸ்தரைப் பார்த்தாள்.
அவளோ கொஞ்சம் கூடத் திமிர் குறையாமல் பாரதியிடம் வேறு விதமாக நடக்கத் தொடங்கினாள்.
"ஹேய்.. உனக்குக் கொஞ்சம் கூட அறிவு இல்லையோ.. ஏதவோ நீ கொஞ்சமாச்சும் புத்திசாலியா இருப்பேனு நினைச்சேன்.. பாத்தாப் படு முட்டாளா இருக்கியே.."
"புரியலை.."
"ஆ.. நீ ஒரு அதி புத்திசாலி எண்டுற நினைப்புல வலம் வாற படு முட்டாள் எண்டு சொல்லுறன்.."
"ஏய்.. நீ என்ன சொல்ல வாறாய் கொஞ்சம் தெளிவாச் சொல்லு.."
"உன்னைய யாரு முதல்ல இங்கினை எல்லாம் வரச் சொன்னது.. அதுவும் தைரியமா ஜோசப் முன்னாடி வந்து நிண்டு கொண்டு.. எல்லாம் கலையைச் சொல்லணும்.. அவன் குடுக்கிற இடத்தால தான் நீயி இந்த ஆட்டம் ஆடுறாய்.."
"ஏய் எஸ்தர் என்னாச்சு உனக்கு.. என்ன நீ ஏதவோ எல்லாம் உளறுறாய்.."
"நான் உளறுறனா.. உனக்கு உன்னோட மனசுல பெரிய இவளெண்டு நினைப்பு என்ன.. என்ன தைரியத்துல முதல்ல நீ இங்க வந்தனீ.. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க என்னோட லவ் பத்திக் கதைக்க உனக்கு என்ன உரிமை இருக்குது சொல்லு.."
என எஸ்தர் தன் போக்கில் திட்டிக் கொண்டே சொல்ல, பொறுமை பொறுமை என மனதினுள் எண்ணிக் கொண்டிருந்த பாரதிக்குப் பொறுமை விடை பெற்றுப் பொலிகண்டி தாண்டிப் போய்க் கொண்டிருக்கவே, வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட்டாள்.
அப்போதும் கூட அவளை விட்டு வைக்காமல் அவள் பின்னோடே வந்த எஸ்தர் மீண்டும் வாய்க்கு வந்தவாறு பேசத் தொடங்க, அவளது அந்தப் புதிய பரிமாணத்தைக் கொஞ்சம் கூட எதிர்பாராத பாரதி, முதலில் சற்றுக் குழம்பித் தயங்கினாலும் அடுத்த நொடியே தானும் எதிர்க் கேள்வி கேட்கத் தொடங்கினாள்.
"ஹேய் ஹேய் கொஞ்சம் இரு.. உள்ள தான் உன்னோட அண்ணா பாத்திடுவாரோ எண்டுற பயத்துல நீ புலம்பினேனு நினைச்சன்.. நீ என்ன வெளியால வந்த பிறகும் படிச்ச புராணத்தையே திருப்பிப் புலம்புறாய்.. அப்போ நீ நிசமாவே தான் என்னைத் திட்டினியோ.."
"புரிஞ்சாச் சரி தான்.."
"என்னது புரிஞ்சாச் சரி தானோ.. ஏதவோ போனாப் போகுது.. என்னோட மோகன் உன்னை விரும்பித் தொலைச்சிட்டான் எண்டுறதுக்காகவும்.. நீ வாசப் படி ஏறி வந்து அவனை எப்புடியாவது எனக்குக் கல்யாணம் செஞ்சு குடுத்துடுங்க எண்டு கெஞ்சிக் கேட்டதுக்காகவும் தான்.. நான் இவ்வளவு தூரம் வந்ததே.. அது கூடச் சும்மா வரலையே.. நீ தான் ஏதவோ உங்க அண்ணாக் கிட்டே வந்து பேசுங்கோ பேசுங்கோ எண்டு கரையோ கரையோண்டு கரைஞ்சனீ.. பிறகு பாத்தா இப்புடிக் கலெக்ரிவ் அம்னீசியா வந்த மாதிரி வந்து நிண்டு குதிக்கிறாய்.."
"இதைப் பாரு உன்னட்டை வந்து நான் கெஞ்சிக் கொண்டு நிண்டது உண்மை தான்.. ஆனா எங்கடை காதலுக்குத் தொல்லையா இருக்கிறதே நீ தான் எண்டு தெரிஞ்சாப் பிறகு.. உன்னைய விலக்குறது மட்டும் தான் என்ரை முதல் வேலையாக் கிடக்குது.."
"புரியேல்லை.."
"கலைக்கு என்னைய விடவும் நீ தான் முக்கியமாம்.. அப்புடினு அவனே சொல்லுறான்.. எப்புடி இருக்கும் எனக்கு.. எப்பவுமே எனக்கானது எனக்கானதா மட்டுமே இருக்கோணும் புரியுதா.."
"சத்தியமாப் புரியல்லை.. அவன் எனக்கு ஒரு தோழன் ஒரு சகோதரன்.. அது இண்டைக்கு நேத்தைக்கு வந்த உறவு இல்லை.. நாங்கள் பிறந்த நிமிஷத்துல இருந்தே தொடங்கின உறவு.."
"இருந்துட்டுப் போகட்டும்.. அதுக்கென்ன நீ அவனை விட்டுத் தூரமாப் போயிடு.."
"இருந்துட்டுப் போகட்டுமோ.. நல்லா இருக்கு உன்னோட பேச்சு.. இதை அவனிட்டை உன்னால தைரியமாச் சொல்ல முடியுமா சொல்லு.. என்ன முழிக்கிறாய்.. உன்னால இப்புடி ஒரு வார்த்தையை அவனைப் பாத்துக் கனவுல கூடச் சொல்ல முடியாது.. சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. என்ன சொன்னீ அவனை விட்டு நான் தூரமாப் போகோணுமோ.. நடக்கிற காரியத்தைப் பேசுடியம்மா.. உனக்கு விருப்பம் இருந்தால் என்ரை மோகனைக் கட்டிக் கொண்டு குப்பை கொட்டுற வழியைப் பாரு.. இல்லாட்டிக்கு நடையைக் கட்டு.. ஏதவோ பாவம் பொம்பிளைப் பிள்ளை காதலிச்சுத் தொலைச்சிட்டுதே நம்ம பையனோட சேத்து வைப்பம் எண்டு பாத்தால்.. ரொம்பத் தான் ஆடுறாய்.."
"ஏய் என்னோட பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிறாய்.."
"அடி போடி காமெடி செய்து கொண்டு.. இவ்வளவு தூரம் உனக்கு முன்னால நான் நிண்டு பேசுறதே பெரிய விசியம்.."
என்று கொண்டு பாரதி வெளியே போகத் திரும்பவும், வேகமாக அவள் முன்னால் சென்று அவளை மறித்த எஸ்தர்,
"இதைப் பாரு.. நான் ரொம்பப் பிடிவாதக்காரி நான் நினைச்சதைச் செய்யாமல் விட்டதே இல்லை.. உன்னைய என்ரை கலையிட்டை இருந்து பிரிக்காமல் நான் விட மாட்டேன்.."
என முகத்தில் அதீத கோபத்தோடு சொல்ல, அவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தாள் பாரதி.
"இது வரைக்கும் நீ சொன்ன எதையும் நான் அவ்வளவு சீரியஸா எடுக்கவே இல்லை.. ஆனால் எப்ப மோகனை என்னட்டை இருந்து பிரிப்பன் எண்டு என்னட்டையே சொன்னியோ அப்பவே நான் முடிவு செய்திட்டன்.. நீயா வந்து என்னட்டை இதுக்காக மன்னிப்புக் கேட்டால் மட்டும் தான் மோகனுக்கும் உனக்குமான கல்யாணமே நடக்கும்.. இனிமேல் உனக்காக நான் அவனிட்டையோ வேறை யாரிட்டையோ பேசப் போறதே இல்லை.. உன்னால முடிஞ்சதைப் பாத்துக்கோ.."
என்றவள் அவளைத் தாண்டிக் கொண்டு வெளியே சென்று விட, அவள் போன திக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் எஸ்தர்.
தான் இப்போது இங்கே வந்திருப்பது சரியா? அல்லது தேவையற்ற வேலை ஏதும் பார்த்து ஏழரையைக் கூட்டி விடுவதற்கு வந்திருக்கிறேனா? ஒன்றும் புரியவில்லையே.. எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டிருந்தவள், கடைசியில் பேசாமல் எழுந்து ஓடி விடலாமா என நினைத்து எழப் போகவும், அவளுக்குப் பக்கத்தில் வந்த ஒருவன்
நீங்கள் உள்ளே போகலாம் எனச் சொன்னான்.
அவன் அவ்விதம் சொன்னதும், சரி இவ்வளவு தூரம் வந்ததும் தான் வந்து விட்டோம், ஒரு தடவை பேசிப் பார்த்து விடுவோமே, கிடைக்கும் பதிலைப் பொறுத்து அடுத்த கட்டத்தை யோசனை செய்யலாம் என முடிவு எடுத்து உள்ளே போனாள்.
உள்ளே போனவளை உட்காரச் சொல்லாமல், எடுத்த எடுப்பிலேயே
"என்ன விசயம்.."
என முன்னால் அமர்ந்திருந்தவன் கேட்கவும், அவனது குரலில் தெறித்த கடுமையில் வந்தவளுக்கோ என்ன விசயமாக வந்தோம் என்பதே சட்டென்று மறந்து போனது.
இருந்தாலும் தன்னை மெல்லச் சமன் செய்ய, முன்னால் கிடந்த கதிரையை மெல்லப் பிடித்து அழுத்தித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, தான் ஏன் வந்தோம் என்பதைச் சொன்னாள்.
"நான் உங்களிட்டை உங்கடை தங்கச்சி விசியமாக் கதைக்கோணும்.."
"வாட்.. எஸ்தர்.."
"ஓம்.. அவா மட்டும் தானே உங்களுக்குத் தங்கச்சி.."
"ம்ம்.. டெல் மீ.."
"எஸ்தர் ஒருத்தரை விரும்புறா.. அதை உங்களிட்டைச் சொல்ல அவாவுக்குப் பயம் போல.. அது தான் அது சம்மந்தமா உங்களிட்டைக் கதைக்கலாம் எண்டு நான் வந்தனான்.. நீங்கள் நினைக்கலாம் என்ரை தங்கச்சி பத்திக் கதைக்க இவா ஆரெண்டு.. விசயமே அங்க தான் இருக்கு.. என்ரை பிரெண்டு கலைமோகனும் அவாவும் தான் காதலிக்கினம்.. எஸ்தர் சொன்னா உங்களிட்டைக் கதைக்கத் தனக்குப் பயமாம்.. அதனால என்னைய வந்து கதைக்கச் சொன்னா அது தான் வந்தன்.. கலை ரொம்ப நல்ல பையன் நீங்கள் வேணும் எண்டால் அவனைப் பத்தி விசாரிச்சுப் பாக்கலாம்.."
"ஓ.."
"அது தான் இது தொடர்பா நீங்கள் கொஞ்சம்.."
எனப் பாரதி ஒரு மாதிரித் தான் சொல்ல வந்த விடயத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அந்த அறையினுள் எஸ்தர் வேகமாக நுழைந்தாள்.
அவளை அந்த நேரம் அங்கே பார்த்ததும் தான் பாரதிக்கும் கொஞ்சம் தென்பு வந்தது. என்ன தான் அவள் கலைமோகனுக்காகப் பேச வந்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. அதனால் அந்த நேரத்தில் எஸ்தர் வந்ததும் கொஞ்சம் தென்பாகவே நின்றிருந்தாள். இனி இவளும் தன் பங்குக்கு பேசட்டும் என அவள் இருக்க, அங்கே அரங்கேறியதோ வேறு சம்பவம்.
உள்ளே வந்த எஸ்தரோ பாரதி நின்றிருந்த பக்கம் திரும்பவேயில்லை, நேரடியாகத் தன் தமையன் முன்னால் போய் நின்று
"யாரு இது.."
என்று கேட்க, பாரதி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
இவள் என்ன சொல்கிறாள் உண்மையில் என்னைத் தெரியவில்லையா? அல்லது வேறு ஏதும் மனதில் நினைத்துப் பயந்து போய்த் தன் தமையன் முன்னால் தனக்கு எதுவுமே தெரியாதது போல நடிக்கிறாளா? எதற்கும் அவளே பேசட்டும் நாம் அவசரப் படக் கூடாது என்பது போலப் பாரதி அமைதி காத்தாள்.
"யாரு இது.."
"மோகன் பிரெண்டு.. ஏதோ உன்னோட லவ் பத்தி.."
"ல்வ்வா.. அதுவும் என்னோடதோ.. லவ்வுக்கும் எனக்கும் ரொம்பத் தூரம் ஆச்சே.. யாரவோ என்ரை பேரை டமேஷ் செய்றதுக்காக இப்புடிக் கிளப்பி விட்ருக்காங்க போல இருக்கு.."
"ஹேய் அதைப் பத்திலாம் எனக்குத் தெரியாது.. ஐடோன்ட் ஹாவ் டைம் ரூ டோக் அபௌட் இற்.. சோ நீயே பாத்துக்கோ.."
என்றவன் அத்தோடு தன் பேச்சு முடிந்தது என்பது போலப் பக்கத்து அறையினுள் போய் விட்டான்.
இவளை ஒரு பொருட்டாகவே கருதாமல் தங்கையும் தமையனும் பேசிக் கொண்டதும் தமையன் விலகிப் போனதும், அமைதியாக அவர்களையே பார்த்திருந்தவளுக்கு லேசாகக் கடுப்பாகத் தொடங்கியது.
சரி இவள் இப்போதாவது ஏதேனும் சொல்வாள் தானே என்ற எண்ணத்தில் பாரதி சற்றே தன் கடுப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு எஸ்தரைப் பார்த்தாள்.
அவளோ கொஞ்சம் கூடத் திமிர் குறையாமல் பாரதியிடம் வேறு விதமாக நடக்கத் தொடங்கினாள்.
"ஹேய்.. உனக்குக் கொஞ்சம் கூட அறிவு இல்லையோ.. ஏதவோ நீ கொஞ்சமாச்சும் புத்திசாலியா இருப்பேனு நினைச்சேன்.. பாத்தாப் படு முட்டாளா இருக்கியே.."
"புரியலை.."
"ஆ.. நீ ஒரு அதி புத்திசாலி எண்டுற நினைப்புல வலம் வாற படு முட்டாள் எண்டு சொல்லுறன்.."
"ஏய்.. நீ என்ன சொல்ல வாறாய் கொஞ்சம் தெளிவாச் சொல்லு.."
"உன்னைய யாரு முதல்ல இங்கினை எல்லாம் வரச் சொன்னது.. அதுவும் தைரியமா ஜோசப் முன்னாடி வந்து நிண்டு கொண்டு.. எல்லாம் கலையைச் சொல்லணும்.. அவன் குடுக்கிற இடத்தால தான் நீயி இந்த ஆட்டம் ஆடுறாய்.."
"ஏய் எஸ்தர் என்னாச்சு உனக்கு.. என்ன நீ ஏதவோ எல்லாம் உளறுறாய்.."
"நான் உளறுறனா.. உனக்கு உன்னோட மனசுல பெரிய இவளெண்டு நினைப்பு என்ன.. என்ன தைரியத்துல முதல்ல நீ இங்க வந்தனீ.. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க என்னோட லவ் பத்திக் கதைக்க உனக்கு என்ன உரிமை இருக்குது சொல்லு.."
என எஸ்தர் தன் போக்கில் திட்டிக் கொண்டே சொல்ல, பொறுமை பொறுமை என மனதினுள் எண்ணிக் கொண்டிருந்த பாரதிக்குப் பொறுமை விடை பெற்றுப் பொலிகண்டி தாண்டிப் போய்க் கொண்டிருக்கவே, வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட்டாள்.
அப்போதும் கூட அவளை விட்டு வைக்காமல் அவள் பின்னோடே வந்த எஸ்தர் மீண்டும் வாய்க்கு வந்தவாறு பேசத் தொடங்க, அவளது அந்தப் புதிய பரிமாணத்தைக் கொஞ்சம் கூட எதிர்பாராத பாரதி, முதலில் சற்றுக் குழம்பித் தயங்கினாலும் அடுத்த நொடியே தானும் எதிர்க் கேள்வி கேட்கத் தொடங்கினாள்.
"ஹேய் ஹேய் கொஞ்சம் இரு.. உள்ள தான் உன்னோட அண்ணா பாத்திடுவாரோ எண்டுற பயத்துல நீ புலம்பினேனு நினைச்சன்.. நீ என்ன வெளியால வந்த பிறகும் படிச்ச புராணத்தையே திருப்பிப் புலம்புறாய்.. அப்போ நீ நிசமாவே தான் என்னைத் திட்டினியோ.."
"புரிஞ்சாச் சரி தான்.."
"என்னது புரிஞ்சாச் சரி தானோ.. ஏதவோ போனாப் போகுது.. என்னோட மோகன் உன்னை விரும்பித் தொலைச்சிட்டான் எண்டுறதுக்காகவும்.. நீ வாசப் படி ஏறி வந்து அவனை எப்புடியாவது எனக்குக் கல்யாணம் செஞ்சு குடுத்துடுங்க எண்டு கெஞ்சிக் கேட்டதுக்காகவும் தான்.. நான் இவ்வளவு தூரம் வந்ததே.. அது கூடச் சும்மா வரலையே.. நீ தான் ஏதவோ உங்க அண்ணாக் கிட்டே வந்து பேசுங்கோ பேசுங்கோ எண்டு கரையோ கரையோண்டு கரைஞ்சனீ.. பிறகு பாத்தா இப்புடிக் கலெக்ரிவ் அம்னீசியா வந்த மாதிரி வந்து நிண்டு குதிக்கிறாய்.."
"இதைப் பாரு உன்னட்டை வந்து நான் கெஞ்சிக் கொண்டு நிண்டது உண்மை தான்.. ஆனா எங்கடை காதலுக்குத் தொல்லையா இருக்கிறதே நீ தான் எண்டு தெரிஞ்சாப் பிறகு.. உன்னைய விலக்குறது மட்டும் தான் என்ரை முதல் வேலையாக் கிடக்குது.."
"புரியேல்லை.."
"கலைக்கு என்னைய விடவும் நீ தான் முக்கியமாம்.. அப்புடினு அவனே சொல்லுறான்.. எப்புடி இருக்கும் எனக்கு.. எப்பவுமே எனக்கானது எனக்கானதா மட்டுமே இருக்கோணும் புரியுதா.."
"சத்தியமாப் புரியல்லை.. அவன் எனக்கு ஒரு தோழன் ஒரு சகோதரன்.. அது இண்டைக்கு நேத்தைக்கு வந்த உறவு இல்லை.. நாங்கள் பிறந்த நிமிஷத்துல இருந்தே தொடங்கின உறவு.."
"இருந்துட்டுப் போகட்டும்.. அதுக்கென்ன நீ அவனை விட்டுத் தூரமாப் போயிடு.."
"இருந்துட்டுப் போகட்டுமோ.. நல்லா இருக்கு உன்னோட பேச்சு.. இதை அவனிட்டை உன்னால தைரியமாச் சொல்ல முடியுமா சொல்லு.. என்ன முழிக்கிறாய்.. உன்னால இப்புடி ஒரு வார்த்தையை அவனைப் பாத்துக் கனவுல கூடச் சொல்ல முடியாது.. சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. என்ன சொன்னீ அவனை விட்டு நான் தூரமாப் போகோணுமோ.. நடக்கிற காரியத்தைப் பேசுடியம்மா.. உனக்கு விருப்பம் இருந்தால் என்ரை மோகனைக் கட்டிக் கொண்டு குப்பை கொட்டுற வழியைப் பாரு.. இல்லாட்டிக்கு நடையைக் கட்டு.. ஏதவோ பாவம் பொம்பிளைப் பிள்ளை காதலிச்சுத் தொலைச்சிட்டுதே நம்ம பையனோட சேத்து வைப்பம் எண்டு பாத்தால்.. ரொம்பத் தான் ஆடுறாய்.."
"ஏய் என்னோட பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிறாய்.."
"அடி போடி காமெடி செய்து கொண்டு.. இவ்வளவு தூரம் உனக்கு முன்னால நான் நிண்டு பேசுறதே பெரிய விசியம்.."
என்று கொண்டு பாரதி வெளியே போகத் திரும்பவும், வேகமாக அவள் முன்னால் சென்று அவளை மறித்த எஸ்தர்,
"இதைப் பாரு.. நான் ரொம்பப் பிடிவாதக்காரி நான் நினைச்சதைச் செய்யாமல் விட்டதே இல்லை.. உன்னைய என்ரை கலையிட்டை இருந்து பிரிக்காமல் நான் விட மாட்டேன்.."
என முகத்தில் அதீத கோபத்தோடு சொல்ல, அவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தாள் பாரதி.
"இது வரைக்கும் நீ சொன்ன எதையும் நான் அவ்வளவு சீரியஸா எடுக்கவே இல்லை.. ஆனால் எப்ப மோகனை என்னட்டை இருந்து பிரிப்பன் எண்டு என்னட்டையே சொன்னியோ அப்பவே நான் முடிவு செய்திட்டன்.. நீயா வந்து என்னட்டை இதுக்காக மன்னிப்புக் கேட்டால் மட்டும் தான் மோகனுக்கும் உனக்குமான கல்யாணமே நடக்கும்.. இனிமேல் உனக்காக நான் அவனிட்டையோ வேறை யாரிட்டையோ பேசப் போறதே இல்லை.. உன்னால முடிஞ்சதைப் பாத்துக்கோ.."
என்றவள் அவளைத் தாண்டிக் கொண்டு வெளியே சென்று விட, அவள் போன திக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் எஸ்தர்.