முத்தம் - 04
“ராமு.. நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்காத.. அந்த பையனுக்கு நம்மளப்பத்தி என்ன தெரியும்.. நமக்கு இப்போ லிங்கா சரியாகி வந்தா போதும்…” என சிவகுரு நண்பனைத் தேற்றினார்.
“ம்ச்.. ப்பா அவனுக்கு தெரியலன்னா சும்மா இருக்கனும். அதுக்காக இப்படி பேசுவானா? நான் வந்துருக்கனும்..” என வெற்றி பல்லைக் கடிக்க,
“சும்மா இரு வெற்றி.. அங்க சூழ்நிலை சரியில்லை. முன்னமே லிங்கா நம்மகிட்ட சொல்லிருக்கான்ல. அந்த பையனை நாம எந்த வகையிலயும் கஷ்டப்படுத்தக்கூடாது. அது லிங்காவை கஷ்டப்படுத்தும்.. லிங்காவை சங்கடப்படுத்துற மாதிரி எந்த ஒரு செயலும் நாம செய்யக்கூடாது.. புரியுதா.?” என மகனை அதட்டினார் சிவகுரு.
“என்னை ஏன் ப்பா அதட்டுறீங்க.. ராமு ப்பாவை பாருங்க.. எவ்வளவு வருத்தப்படுறார்.. இதெல்லாம் வல்லிக்கு தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படுவான்னு யோசிங்க. நீங்க அமைதியா வந்ததே தப்பு. இப்போ அந்தம்மா சொல்றது உண்மைனு ஆகிடும். அவனும் அப்படித்தான் நினைப்பான்..” என மேலும் பேச,
“விடு வெற்றி.. இதெல்லாம் வல்லிக்கு சொல்லாத.. கர்ணன் நாளைக்கு இங்க வரேன்னு சொல்லிருக்கார். நீயும் இரு… உனக்கு லீவ் இருக்கா…” என ராமசாமி கேட்க,
“ம்ம் அது பிரச்சினை இல்லப்பா.. நானும் அப்பாவும் அவசரமா கிளம்பவும் வல்லி பயந்துட்டா போல. இன்னைக்கு நைட் கிளம்பறேன்னு சொல்றா.. நானும் வர சொல்லிட்டேன். இனி அவ ஆஃபிஸ் போக ஆரம்பிச்சிட்டா லீவ் கிடைக்காது..” என வெற்றியும் சொல்ல, ராமுவுக்கு மனதே சரியில்லை.
ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடக்கப் போவது போல மனம் கலங்கத் தொடங்கியது. அதை வெற்றி முன் காட்டவும் பயந்தார்.
அதை சொல்லி மேலும் அவனை பயமுறுத்த வேண்டாம், என அதை அப்படியே மறைத்து “நீ பேசுனியா வெற்றி வல்லிக்கிட்ட.. என்ன சொல்லுது? நல்ல இடம்.. ஊர் கோயம்புத்தூர்தான். பையன் வேலை செய்றது கனடால. க்ரீன் கார்ட் ஹோல்டர். அங்கேயே செட்டில் ஆகிக்கலாம். பிரச்சினை இல்ல..” என ராமு மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையைப் பற்றி கூற,
“ம்ம்ம்… அதுதான் அவளுக்கு பிடிக்கல. அவ உங்களுக்கு பக்கத்துலயே இருக்கனும்னு நினைக்கிறா ப்பா.. ஏற்கனவே படிப்பு அது இதுன்னு தனியாவே இருந்துட்டா.. இப்போ கல்யாணமும் அவ்ளோ தூரம்னா வேண்டாங்கிறா.. இங்கேயே பார்க்கலாம் ப்பா. நாளைக்கே அவளுக்கு ஒரு பிரச்சினைன்னா என்ன செய்ய? இங்க இருந்து நாம போய் வர சிரமம்.” என வெற்றியும் அந்த பேச்சை அப்போதே முடித்துவிட்டான்.
“ராமு.. புள்ளைங்க விருப்பப்படி செஞ்சா போதும்.. வல்லியைக் கேட்காம நீ எந்த முடிவும் எடுக்காத..” என சிவகுருவும் தீர்மானமாகவே கூறிவிட, ராமசாமியும் அமைதியாகிவிட்டார்.
“சரி ப்பா.. ஃப்ரண்ட்ஸ பார்க்க வரேன்னு சொல்லிருந்தேன்.. அவிநாசி வரை போயிட்டு வரேன். அப்படியே அந்த இன்சூரன்ஸ் ஆஃபிஸ்க்கும் போயிட்டு வந்துடுறேன். நீங்க ரெண்டு பேரும் அலைய வேண்டாம். அந்த டாகுமென்ட் மட்டும் எனக்கு அனுப்பிடுங்க.” என வெற்றி கிளம்பிவிட்டான்.
“என்ன ராமு..? என்ன பிரச்சினை? ஏன் எதையோ யோசிச்சிட்டே இருக்க?” என ராமசாமியின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்து சிவகுரு கேட்க,
அதுவரை மனதை அழுத்தியதை மொத்தமாக நண்பரிடம் கொட்டிவிட்டார் ராமசாமி.
“லிங்கா…. நம்ம வல்லியை கர்ணனுக்கு கேட்டான் சிவா. லிங்கா பிரச்சினை இல்ல. ஆனா அந்த வீட்டுல யாரும் சரியில்ல. தெரிஞ்சும் எப்படி வல்லியைக் கொடுக்க, அதனால நான் சரின்னு சொல்லாம வல்லிக்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். ஆனா அடுத்த நாளே அவனுக்கு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. இப்போ பார்த்த மாப்பிள்ளையை வல்லிக்கு பிடிச்சிருந்தா, இதை சொல்லி வேண்டாம்னு மறுத்துருக்கலாம்..” எனவும், சிவகுருவுக்கு இது புது செய்தி ஆயிற்றே..
“கர்ணனும் இங்க இருக்கப் போறது இல்லையே ராமு. லிங்கா பையன் மேல ஒரு தப்பும் சொல்ல முடியாது. நீ ஏன் யோசிக்கிற..” என சிவகுருவும் கேட்க,
“ம்ம் எல்லாம் புரியத்தான் செய்யுது சிவா.. ஆனா மனசுக்கு என்னமோ கஷ்டமா இருக்கு. வல்லிக்கு ஒரு கஷ்டம்ன்னா என்னால நிம்மதியாவே இருக்க முடியாது. இந்த உயிர் இருக்குறதே அவளுக்காகத்தானே..” என கலக்கமாக பேச,
“ராமு.. நீ ரொம்ப யோசிக்காத. லிங்கா கேட்டது அந்த பையனுக்கே தெரிஞ்சிருக்காது. உனக்கு அங்க கொடுக்க விருப்பம் இல்லன்னா, லிங்கா சரியாகி வரதுக்குள்ள வல்லிக்கு வேறப்பக்கம் பார்த்துடலாம்.. நாம சொன்னா லிங்கா புரிஞ்சிப்பான்..” என நண்பரைத் தேற்றினார் சிவகுரு.
இங்கு ஹோட்டலில் சாப்பிட அமர்ந்து விட்டாலும் யாழினியின் முகம் சரியாகவில்லை. உணவை அலைந்து கொண்டிருந்தவளின் பார்வையைப் பதித்த கர்ணன் “என்ன யாழிம்மா? இது பிடிக்கலயா? வேற சொல்லவா?” என கேட்க,
“வேண்டாம்.. இதுவே போதும்.” என்றவள், “நான் சாப்பிடுவேன், நீங்க சாப்பிடுங்க..” என்றாலும், குரல் கரகரத்தது.
“யாழி என்னனு சொல்லாம இப்படி அழுதா எனக்கு என்ன தெரியும்? முதல்ல அழுகையை நிறுத்தி என்னனு சொல்லு.?” என குரலை உயர்த்தாமல் அதட்ட,
“எதுக்கு இப்போ அதட்டுறீங்க? நீங்க என்ன இங்கேயே இருக்கப் போறீங்களா? ஒரு வாரம், இல்ல பத்து நாள்ல லீவ் முடிஞ்சு போய்டுவீங்க. அப்புறம் அப்பா எவ்ளோ கஷ்டப்படுவார் தெரியுமா? உங்ககிட்ட நான் சொல்லமாட்டேன்..” என அழுது கொண்டே சண்டையிட,
“சரி நீ சொல்ல வேண்டாம். நான் உனக்கு சொல்ல ஒரு குட் நியூஸ் வச்சிருந்தேன்.. நானும் அதை உனக்கு சொல்லமாட்டேன்..” என சன்ன சிரிப்புடன் சாப்பாட்டை வாயில் வைக்க, யாழினியின் விரிகள் விரிந்தது.
“என்ன ண்ணா… சொல்லுங்க.. ப்ளீஸ் ப்ளீஸ்..” என நொடியில் அழுகையை மாற்றியவள், அவன் கையைப் பிடித்து கெஞ்ச,
“ம்ம் சொல்லனும்னா நீ முதல்ல சாப்பிடனும்.” என பேரம் பேச, அடுத்த வார்த்தை கர்ணன் பேசுவதற்குள் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள் யாழினி.
சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் தானும் சாப்பிட்டு முடிக்க, “ம்ம் ண்ணா சொல்லுங்க..” என அவனுக்கு முன்னே நிற்க,
“நீ கேட்டதை செய்யலாம்னு நினைச்சிருக்கேன்..” என சிரிக்க,
“நான் கேட்டதா? ஓ வாவ் கல்யாணமா? சூப்பர்.. சூப்பர் ண்ணா.. அப்பா கேட்டா ரொம்ப சந்தோசப்படுவாங்க.. ஆனா நாற்பது வயசுக்கு பொண்ணு யாரு தருவா.?” என சோகமாக கேட்க,
“அடிங்க்..” என தங்கையின் தலையில் தட்டியவன்.. கல்யாணமும் பண்ணிக்கலாம். அது அப்பா என்ன முடிவு பண்ணிருக்கார்னு கேட்கனும். பொண்ணு பார்த்து வச்சிருக்காரோ என்னமோ?” என கர்ணன் பேசும் போதே, நேற்று திருப்பூரில் இருந்து வரும் போது தந்தை கூறியது யாழினியின் மனதில் ஓடியது.
இப்போது சொல்லலாமா வேண்டாமா என யோசித்தவள், வல்லியின் விருப்பம் தெரிந்த பிறகு சொல்லலாம் என முடிவு செய்து “அப்போ வேற என்ன ண்ணா?” என யோசனையாக கேட்டு தலையில் தட்டியவளின் மூளையில் பல்ப் எரிந்துவிட.. “அண்ணா..” என வேகமாக அவனைக் கட்டிக்கொண்டு “நிஜமாவா.. நிஜமாவா.?” என மீண்டும் மீண்டும் கேட்க,
அந்த கள்ளம் கபடமற்ற அன்பில் நெகிழ்ந்தவன் “எஸ்.. எஸ்.. இனி இங்கதான். அப்பா கூடவே இருக்கலாம்னு வந்துட்டேன்.. சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சேன்.” என சலிக்க,
“இதுவே சர்ப்ரைஸ் தான் ண்ணா.. இதை முன்னாடியே சொல்லிருக்கலாம். இன்னும் நல்லா சாப்பிட்டிருப்பேன்..” என முகத்தைச் சுருக்க,
“ரெண்டு பிரியாணி உனக்கு கம்மியா?” என சிரித்தவன் “இப்போ வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம் யாழி.. நானே சொல்லிக்கிறேன்..” என்ற நேரம் யாழினிக்கு வெற்றியிடமிருந்து அழைப்பு வந்தது.
கர்ணன் இருக்கிறான் என அழைப்பை எடுக்காமல் விட, மீண்டும் அழைப்பு வந்தது.
“யாரு யாழி? எடுத்துப் பேசு..” என கர்ணன் கூற,
“அது அது வெற்றி… சிவா மாமா பையன்.” என திணறியவள் “ஹலோ..” என்றதுதான் தெரியும், “ஏய் என்னடி நடக்குது அங்க? உன் அம்மா எதுக்கு ராமு அப்பாவை இப்படி பேசியிருக்காங்க. உன் அண்ணாவும் பேசினாராம். என்ன நினைச்சிட்டு இருக்காங்க எல்லாரும். உங்களுக்கு உதவி செஞ்சா இப்படியெல்லாம் நீங்க பேசுவீங்களா..?” என படபடவென பேச,
“நான்.. நானும் அண்ணாவும் வெளிய வந்தோம்..” என பக்கத்தில் கர்ணன் இருக்கிறான் என வெற்றிக்கு தெரியப்படுத்தும் விதமாக, திணறியபடியே யாழினி பதில் கூற,
“ம்ச் மெசேஜ் போட்டுருக்கலாமம்ல..” என சலித்தவன் “ஃப்ரீயாகிட்டு பேசு..” என பட்டென போனை வெற்றி வைத்துவிட, “எதுக்கு இப்படி கத்துறான்..?” என கர்ணன் சாதாரணமாகத்தான் கேட்டான்.
“அது அது ண்ணா அங்கிள் வந்தப்போ அம்மா பேசினாங்கல்ல. அந்த கோபம்..” என்றவள், “அம்மா அப்படி பேசியிருக்கக்கூடாது. அவங்க அப்படியெல்லாம் இல்லண்ணா.. நான் அஞ்சு வருசமா அவங்ககூடத்தான் இருக்கேன். இதுவரை என்னைத் தனியாவோ, வேறையாவோ பார்த்ததே இல்ல..” என வருத்தமாக பேச,
“சரி விடு.. நாளைக்கு பேசும் போது சாரி சொல்றேன்..” என அதையுமே சாதாரணமாக சொல்ல, ‘உண்மையா.?’ என்பது போல் தமையனை நிமிர்ந்து பார்த்தாள் யாழினி.
அதைப் பார்த்த கர்ணனுக்கு சிரிப்பு வந்துவிட, “ஹேய் நிஜமா தான் சொல்றேன்.. நான் சொல்றதை நம்ப முடியலனா நாளைக்கு நீயும் வந்து செக் பண்ணிக்கோ..” என மேலும் சிரிக்க,
“ம்ம் உங்களை நம்புறேன்.. ஆனா நான் வரல. நான் அப்பாக்கூட இருப்பேன்..” என முகத்தை திருப்ப,
“ஏன் அம்மா வரமாட்டாங்களா?” என புருவத்தை சுருக்கி கேட்க,
“வராம என்ன? ஆனா அப்பாவுக்கு பிடிக்காது. அம்மா பேசினது ரொம்ப தப்பு. அதுக்குத்தான் அப்பாவுக்கு இப்படி ஆகிடுச்சு.” என எரிச்சலானவள் “இந்த வனிக்காவை ஒரு நாள் நல்லா கொடுக்கனும்னு இருக்கேன். ரொம்ப பேசுறா..” என்ற யாழினியின் பேச்சை கேட்டுக்கொண்டவன், வீட்டில் வேறு எதுவோ நடக்கிறது என்பது புரிந்து கொண்டான். அதனால் பதில் கொடுக்கவில்லை.
சென்னையில் “வல்லி.. நீ மட்டும் தனியா கிளம்ப வேண்டாம். வெற்றி நம்ம மூனு பேரையும் வர சொல்லிட்டான். ஏழு மணிக்கு ஃப்லைட். அவன் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டுக்கு வந்துடுவானாம்..” என்ற சீதாவிடம்,
“ஓ.. எல்லாரும் போறோமா சூப்பர்.. சூப்பர்..” என்ற வந்தனா, வல்லியைக் கட்டிக்கொண்டு “வல்லி பல்லி இந்த டைம் கண்டிப்பா அதிரப்பள்ளி போறோம்.. நீதான் வெற்றிக்கிட்ட பேசனும்..” என குதிக்க,
“எங்க போனாலும் ஒன்னு சுத்தனும், இல்ல திங்கனும்.. இதே பொழப்புதான் உனக்கு..” என மகளைக் கண்டித்தபடியே சீதா நகர, வல்லபியோ சிரித்தபடியே பயணத்திற்கான துணிகளை அடுக்க ஆரம்பித்தாள்.
இந்த பயணம் தான் வல்லபியின் சிரிப்பை அடியோடு மறக்க வைக்கப்போகும் பயணம் என்று தெரிந்திருந்தால் கிளம்பியிருக்க மாட்டாளோ?
“ராமு.. நீ இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்காத.. அந்த பையனுக்கு நம்மளப்பத்தி என்ன தெரியும்.. நமக்கு இப்போ லிங்கா சரியாகி வந்தா போதும்…” என சிவகுரு நண்பனைத் தேற்றினார்.
“ம்ச்.. ப்பா அவனுக்கு தெரியலன்னா சும்மா இருக்கனும். அதுக்காக இப்படி பேசுவானா? நான் வந்துருக்கனும்..” என வெற்றி பல்லைக் கடிக்க,
“சும்மா இரு வெற்றி.. அங்க சூழ்நிலை சரியில்லை. முன்னமே லிங்கா நம்மகிட்ட சொல்லிருக்கான்ல. அந்த பையனை நாம எந்த வகையிலயும் கஷ்டப்படுத்தக்கூடாது. அது லிங்காவை கஷ்டப்படுத்தும்.. லிங்காவை சங்கடப்படுத்துற மாதிரி எந்த ஒரு செயலும் நாம செய்யக்கூடாது.. புரியுதா.?” என மகனை அதட்டினார் சிவகுரு.
“என்னை ஏன் ப்பா அதட்டுறீங்க.. ராமு ப்பாவை பாருங்க.. எவ்வளவு வருத்தப்படுறார்.. இதெல்லாம் வல்லிக்கு தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படுவான்னு யோசிங்க. நீங்க அமைதியா வந்ததே தப்பு. இப்போ அந்தம்மா சொல்றது உண்மைனு ஆகிடும். அவனும் அப்படித்தான் நினைப்பான்..” என மேலும் பேச,
“விடு வெற்றி.. இதெல்லாம் வல்லிக்கு சொல்லாத.. கர்ணன் நாளைக்கு இங்க வரேன்னு சொல்லிருக்கார். நீயும் இரு… உனக்கு லீவ் இருக்கா…” என ராமசாமி கேட்க,
“ம்ம் அது பிரச்சினை இல்லப்பா.. நானும் அப்பாவும் அவசரமா கிளம்பவும் வல்லி பயந்துட்டா போல. இன்னைக்கு நைட் கிளம்பறேன்னு சொல்றா.. நானும் வர சொல்லிட்டேன். இனி அவ ஆஃபிஸ் போக ஆரம்பிச்சிட்டா லீவ் கிடைக்காது..” என வெற்றியும் சொல்ல, ராமுவுக்கு மனதே சரியில்லை.
ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடக்கப் போவது போல மனம் கலங்கத் தொடங்கியது. அதை வெற்றி முன் காட்டவும் பயந்தார்.
அதை சொல்லி மேலும் அவனை பயமுறுத்த வேண்டாம், என அதை அப்படியே மறைத்து “நீ பேசுனியா வெற்றி வல்லிக்கிட்ட.. என்ன சொல்லுது? நல்ல இடம்.. ஊர் கோயம்புத்தூர்தான். பையன் வேலை செய்றது கனடால. க்ரீன் கார்ட் ஹோல்டர். அங்கேயே செட்டில் ஆகிக்கலாம். பிரச்சினை இல்ல..” என ராமு மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையைப் பற்றி கூற,
“ம்ம்ம்… அதுதான் அவளுக்கு பிடிக்கல. அவ உங்களுக்கு பக்கத்துலயே இருக்கனும்னு நினைக்கிறா ப்பா.. ஏற்கனவே படிப்பு அது இதுன்னு தனியாவே இருந்துட்டா.. இப்போ கல்யாணமும் அவ்ளோ தூரம்னா வேண்டாங்கிறா.. இங்கேயே பார்க்கலாம் ப்பா. நாளைக்கே அவளுக்கு ஒரு பிரச்சினைன்னா என்ன செய்ய? இங்க இருந்து நாம போய் வர சிரமம்.” என வெற்றியும் அந்த பேச்சை அப்போதே முடித்துவிட்டான்.
“ராமு.. புள்ளைங்க விருப்பப்படி செஞ்சா போதும்.. வல்லியைக் கேட்காம நீ எந்த முடிவும் எடுக்காத..” என சிவகுருவும் தீர்மானமாகவே கூறிவிட, ராமசாமியும் அமைதியாகிவிட்டார்.
“சரி ப்பா.. ஃப்ரண்ட்ஸ பார்க்க வரேன்னு சொல்லிருந்தேன்.. அவிநாசி வரை போயிட்டு வரேன். அப்படியே அந்த இன்சூரன்ஸ் ஆஃபிஸ்க்கும் போயிட்டு வந்துடுறேன். நீங்க ரெண்டு பேரும் அலைய வேண்டாம். அந்த டாகுமென்ட் மட்டும் எனக்கு அனுப்பிடுங்க.” என வெற்றி கிளம்பிவிட்டான்.
“என்ன ராமு..? என்ன பிரச்சினை? ஏன் எதையோ யோசிச்சிட்டே இருக்க?” என ராமசாமியின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்து சிவகுரு கேட்க,
அதுவரை மனதை அழுத்தியதை மொத்தமாக நண்பரிடம் கொட்டிவிட்டார் ராமசாமி.
“லிங்கா…. நம்ம வல்லியை கர்ணனுக்கு கேட்டான் சிவா. லிங்கா பிரச்சினை இல்ல. ஆனா அந்த வீட்டுல யாரும் சரியில்ல. தெரிஞ்சும் எப்படி வல்லியைக் கொடுக்க, அதனால நான் சரின்னு சொல்லாம வல்லிக்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். ஆனா அடுத்த நாளே அவனுக்கு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. இப்போ பார்த்த மாப்பிள்ளையை வல்லிக்கு பிடிச்சிருந்தா, இதை சொல்லி வேண்டாம்னு மறுத்துருக்கலாம்..” எனவும், சிவகுருவுக்கு இது புது செய்தி ஆயிற்றே..
“கர்ணனும் இங்க இருக்கப் போறது இல்லையே ராமு. லிங்கா பையன் மேல ஒரு தப்பும் சொல்ல முடியாது. நீ ஏன் யோசிக்கிற..” என சிவகுருவும் கேட்க,
“ம்ம் எல்லாம் புரியத்தான் செய்யுது சிவா.. ஆனா மனசுக்கு என்னமோ கஷ்டமா இருக்கு. வல்லிக்கு ஒரு கஷ்டம்ன்னா என்னால நிம்மதியாவே இருக்க முடியாது. இந்த உயிர் இருக்குறதே அவளுக்காகத்தானே..” என கலக்கமாக பேச,
“ராமு.. நீ ரொம்ப யோசிக்காத. லிங்கா கேட்டது அந்த பையனுக்கே தெரிஞ்சிருக்காது. உனக்கு அங்க கொடுக்க விருப்பம் இல்லன்னா, லிங்கா சரியாகி வரதுக்குள்ள வல்லிக்கு வேறப்பக்கம் பார்த்துடலாம்.. நாம சொன்னா லிங்கா புரிஞ்சிப்பான்..” என நண்பரைத் தேற்றினார் சிவகுரு.
இங்கு ஹோட்டலில் சாப்பிட அமர்ந்து விட்டாலும் யாழினியின் முகம் சரியாகவில்லை. உணவை அலைந்து கொண்டிருந்தவளின் பார்வையைப் பதித்த கர்ணன் “என்ன யாழிம்மா? இது பிடிக்கலயா? வேற சொல்லவா?” என கேட்க,
“வேண்டாம்.. இதுவே போதும்.” என்றவள், “நான் சாப்பிடுவேன், நீங்க சாப்பிடுங்க..” என்றாலும், குரல் கரகரத்தது.
“யாழி என்னனு சொல்லாம இப்படி அழுதா எனக்கு என்ன தெரியும்? முதல்ல அழுகையை நிறுத்தி என்னனு சொல்லு.?” என குரலை உயர்த்தாமல் அதட்ட,
“எதுக்கு இப்போ அதட்டுறீங்க? நீங்க என்ன இங்கேயே இருக்கப் போறீங்களா? ஒரு வாரம், இல்ல பத்து நாள்ல லீவ் முடிஞ்சு போய்டுவீங்க. அப்புறம் அப்பா எவ்ளோ கஷ்டப்படுவார் தெரியுமா? உங்ககிட்ட நான் சொல்லமாட்டேன்..” என அழுது கொண்டே சண்டையிட,
“சரி நீ சொல்ல வேண்டாம். நான் உனக்கு சொல்ல ஒரு குட் நியூஸ் வச்சிருந்தேன்.. நானும் அதை உனக்கு சொல்லமாட்டேன்..” என சன்ன சிரிப்புடன் சாப்பாட்டை வாயில் வைக்க, யாழினியின் விரிகள் விரிந்தது.
“என்ன ண்ணா… சொல்லுங்க.. ப்ளீஸ் ப்ளீஸ்..” என நொடியில் அழுகையை மாற்றியவள், அவன் கையைப் பிடித்து கெஞ்ச,
“ம்ம் சொல்லனும்னா நீ முதல்ல சாப்பிடனும்.” என பேரம் பேச, அடுத்த வார்த்தை கர்ணன் பேசுவதற்குள் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள் யாழினி.
சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் தானும் சாப்பிட்டு முடிக்க, “ம்ம் ண்ணா சொல்லுங்க..” என அவனுக்கு முன்னே நிற்க,
“நீ கேட்டதை செய்யலாம்னு நினைச்சிருக்கேன்..” என சிரிக்க,
“நான் கேட்டதா? ஓ வாவ் கல்யாணமா? சூப்பர்.. சூப்பர் ண்ணா.. அப்பா கேட்டா ரொம்ப சந்தோசப்படுவாங்க.. ஆனா நாற்பது வயசுக்கு பொண்ணு யாரு தருவா.?” என சோகமாக கேட்க,
“அடிங்க்..” என தங்கையின் தலையில் தட்டியவன்.. கல்யாணமும் பண்ணிக்கலாம். அது அப்பா என்ன முடிவு பண்ணிருக்கார்னு கேட்கனும். பொண்ணு பார்த்து வச்சிருக்காரோ என்னமோ?” என கர்ணன் பேசும் போதே, நேற்று திருப்பூரில் இருந்து வரும் போது தந்தை கூறியது யாழினியின் மனதில் ஓடியது.
இப்போது சொல்லலாமா வேண்டாமா என யோசித்தவள், வல்லியின் விருப்பம் தெரிந்த பிறகு சொல்லலாம் என முடிவு செய்து “அப்போ வேற என்ன ண்ணா?” என யோசனையாக கேட்டு தலையில் தட்டியவளின் மூளையில் பல்ப் எரிந்துவிட.. “அண்ணா..” என வேகமாக அவனைக் கட்டிக்கொண்டு “நிஜமாவா.. நிஜமாவா.?” என மீண்டும் மீண்டும் கேட்க,
அந்த கள்ளம் கபடமற்ற அன்பில் நெகிழ்ந்தவன் “எஸ்.. எஸ்.. இனி இங்கதான். அப்பா கூடவே இருக்கலாம்னு வந்துட்டேன்.. சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சேன்.” என சலிக்க,
“இதுவே சர்ப்ரைஸ் தான் ண்ணா.. இதை முன்னாடியே சொல்லிருக்கலாம். இன்னும் நல்லா சாப்பிட்டிருப்பேன்..” என முகத்தைச் சுருக்க,
“ரெண்டு பிரியாணி உனக்கு கம்மியா?” என சிரித்தவன் “இப்போ வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம் யாழி.. நானே சொல்லிக்கிறேன்..” என்ற நேரம் யாழினிக்கு வெற்றியிடமிருந்து அழைப்பு வந்தது.
கர்ணன் இருக்கிறான் என அழைப்பை எடுக்காமல் விட, மீண்டும் அழைப்பு வந்தது.
“யாரு யாழி? எடுத்துப் பேசு..” என கர்ணன் கூற,
“அது அது வெற்றி… சிவா மாமா பையன்.” என திணறியவள் “ஹலோ..” என்றதுதான் தெரியும், “ஏய் என்னடி நடக்குது அங்க? உன் அம்மா எதுக்கு ராமு அப்பாவை இப்படி பேசியிருக்காங்க. உன் அண்ணாவும் பேசினாராம். என்ன நினைச்சிட்டு இருக்காங்க எல்லாரும். உங்களுக்கு உதவி செஞ்சா இப்படியெல்லாம் நீங்க பேசுவீங்களா..?” என படபடவென பேச,
“நான்.. நானும் அண்ணாவும் வெளிய வந்தோம்..” என பக்கத்தில் கர்ணன் இருக்கிறான் என வெற்றிக்கு தெரியப்படுத்தும் விதமாக, திணறியபடியே யாழினி பதில் கூற,
“ம்ச் மெசேஜ் போட்டுருக்கலாமம்ல..” என சலித்தவன் “ஃப்ரீயாகிட்டு பேசு..” என பட்டென போனை வெற்றி வைத்துவிட, “எதுக்கு இப்படி கத்துறான்..?” என கர்ணன் சாதாரணமாகத்தான் கேட்டான்.
“அது அது ண்ணா அங்கிள் வந்தப்போ அம்மா பேசினாங்கல்ல. அந்த கோபம்..” என்றவள், “அம்மா அப்படி பேசியிருக்கக்கூடாது. அவங்க அப்படியெல்லாம் இல்லண்ணா.. நான் அஞ்சு வருசமா அவங்ககூடத்தான் இருக்கேன். இதுவரை என்னைத் தனியாவோ, வேறையாவோ பார்த்ததே இல்ல..” என வருத்தமாக பேச,
“சரி விடு.. நாளைக்கு பேசும் போது சாரி சொல்றேன்..” என அதையுமே சாதாரணமாக சொல்ல, ‘உண்மையா.?’ என்பது போல் தமையனை நிமிர்ந்து பார்த்தாள் யாழினி.
அதைப் பார்த்த கர்ணனுக்கு சிரிப்பு வந்துவிட, “ஹேய் நிஜமா தான் சொல்றேன்.. நான் சொல்றதை நம்ப முடியலனா நாளைக்கு நீயும் வந்து செக் பண்ணிக்கோ..” என மேலும் சிரிக்க,
“ம்ம் உங்களை நம்புறேன்.. ஆனா நான் வரல. நான் அப்பாக்கூட இருப்பேன்..” என முகத்தை திருப்ப,
“ஏன் அம்மா வரமாட்டாங்களா?” என புருவத்தை சுருக்கி கேட்க,
“வராம என்ன? ஆனா அப்பாவுக்கு பிடிக்காது. அம்மா பேசினது ரொம்ப தப்பு. அதுக்குத்தான் அப்பாவுக்கு இப்படி ஆகிடுச்சு.” என எரிச்சலானவள் “இந்த வனிக்காவை ஒரு நாள் நல்லா கொடுக்கனும்னு இருக்கேன். ரொம்ப பேசுறா..” என்ற யாழினியின் பேச்சை கேட்டுக்கொண்டவன், வீட்டில் வேறு எதுவோ நடக்கிறது என்பது புரிந்து கொண்டான். அதனால் பதில் கொடுக்கவில்லை.
சென்னையில் “வல்லி.. நீ மட்டும் தனியா கிளம்ப வேண்டாம். வெற்றி நம்ம மூனு பேரையும் வர சொல்லிட்டான். ஏழு மணிக்கு ஃப்லைட். அவன் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டுக்கு வந்துடுவானாம்..” என்ற சீதாவிடம்,
“ஓ.. எல்லாரும் போறோமா சூப்பர்.. சூப்பர்..” என்ற வந்தனா, வல்லியைக் கட்டிக்கொண்டு “வல்லி பல்லி இந்த டைம் கண்டிப்பா அதிரப்பள்ளி போறோம்.. நீதான் வெற்றிக்கிட்ட பேசனும்..” என குதிக்க,
“எங்க போனாலும் ஒன்னு சுத்தனும், இல்ல திங்கனும்.. இதே பொழப்புதான் உனக்கு..” என மகளைக் கண்டித்தபடியே சீதா நகர, வல்லபியோ சிரித்தபடியே பயணத்திற்கான துணிகளை அடுக்க ஆரம்பித்தாள்.
இந்த பயணம் தான் வல்லபியின் சிரிப்பை அடியோடு மறக்க வைக்கப்போகும் பயணம் என்று தெரிந்திருந்தால் கிளம்பியிருக்க மாட்டாளோ?