முத்தம் - 06
“என்ன.. என்ன சொல்றீங்க தம்பி..” என படபடப்புடன் ராமு கேட்க,
“எனக்கு வல்லபியை பிடிச்சிருக்கு அங்கிள். நான்தான் அப்பாவை உங்ககிட்ட பேச சொன்னேன்..” என மீண்டும் அழுத்தி சொல்ல, ராமசாமிக்கு உடலெல்லாம் உதற ஆரம்பித்தது.
“தம்பி.. உங்க வயசு, பாப்பா வயசு…” என நம்ப முடியாமல் இழுக்க,
“அங்கிள் எனக்கும் யாழிக்கும் எட்டு வயசுதான் வித்தியாசம். அப்போ அதே ஏஜ் டிஃபரன்ட் தானே எனக்கும் வல்லபிக்கும் இருக்கும்..” என்றவன் “உங்களுக்கு இஷ்டம் இல்ல போல..” என நிறுத்த,
“அது அப்படியில்ல தம்பி… நான் இன்னும் பாப்பாக்கிட்ட பேசல.. அவளுக்கு வேலைக்கு போகத்தான் விருப்பம்.. படிச்சதுக்காக கொஞ்ச நாள் வேலைக்கு போறேன் சொல்றா. கேம்பஸ்ல செலக்ட் ஆகிருக்கா…”
“ரொம்ப நல்ல விசயம்தானே அங்கிள்.. ஆனா வேலைக்கு போறதை விட மேல படிச்சா என்ன. இன்னைக்கு வெறும் BE வச்சு என்ன யூஸ்.. MBA படிக்கட்டும். படிச்சு ஒர்க் போகட்டும்..” என்று நிறுத்தி அவரைப் பார்த்து “மேரேஜ்க்கு அப்புறம் படிக்கட்டும். எனக்கு நோ அப்ஜக்சன்..” என்றிட,
உண்மையில் ராமுவிற்கு மூளை செயல்படாத நிலை. அவருக்கு வேண்டாம் என உதறிவிடவும் முடியவில்லை. வேண்டும் என இழுத்து வைக்கவும் முடியவில்லை. மிகவும் குழப்பத்தில் இருக்க, “நான் பாப்பாக்கிட்ட கேட்டுட்டு சொல்லட்டுமா தம்பி. பாப்பா முடிவு ரொம்ப முக்கியம் இல்லையா.?” என்றார் தயக்கமாக.
“கண்டிப்பா அங்கிள்.. நீங்க பேசிட்டு முடிவு சொல்லுங்க. அன்ட் எல்லாரும் நாளைக்கு அங்க அப்பாவை பார்க்க வாங்க. உங்க எல்லாரையும் பார்த்தா அப்பாவுக்கு நல்லா இருக்கும்..”
“ஆமா.. ஆமா தம்பி.. சீதாவும் வரனும் சொன்னாங்க. அதனால எல்லாரையும் கூப்பிட்டு வரேன்.. ஆனா.. அங்க உங்க அம்மா எதுவும் பேசாம இருக்கனும். வல்லிக்கு இந்த பேச்செல்லாம் கேட்டு பழக்கமில்ல. வெற்றியும் கோபமா பேசிட்டா கஷ்டம்..”
அதைக் கேட்டதும் கர்ணனின் உடல் இறுகியது. “நீங்க வரும் போது அவங்க இருக்கமாட்டாங்க அங்கிள்.. ஆனா இப்படியே இருக்க முடியாது இல்லையா? மேரேஜுக்கு அப்புறம் எல்லாரையும் பார்க்க பழக இருக்கனுமில்ல…” என்றான் இறுகிய குரலில்.
“ஆமா தம்பி.. ஆனா பாப்பா முதல் தடவை பார்க்கும் போதே நல்ல மனநிலையோட இருந்தா நல்லா இருக்கும் பாருங்க..”
“ம்ம் சரிங்க அங்கிள்..” என்றவனுக்கு அவரும் வல்லபிக்காக யோசிக்கிறார் என்று புரிந்து அமைதியானான்.
சீதாவும், வல்லபியும் உணவு பரிமாற மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பினான் கர்ணா. கிளம்பும் போது வெற்றியை அழைத்து “எதுக்கு யாழிக்கிட்ட உரிமை எடுத்து பழகுற..?” என்றவன், “எனக்கு அது தெரிஞ்சதுனாலத்தான் வந்தனாவை அண்ணான்னு கூப்பிட வேண்டாம் சொன்னேன். இதுக்கும் வல்லபிக்கும் சம்மந்தம் இல்ல. அன்ட் இனி வல்லபிக்கு மாப்பிள்ளை பார்க்குற வேலையை விட்டுடு. அவ எனக்கு மட்டும்தான்..” என நிதானமான குரலில் சொன்னாலும், முடிவான குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட,
கர்ணனின் முடிவை மாற்ற முடியாது என வெற்றிக்கு புரிந்து போனது. ஆனால் ஏன் இந்த பிடிவாதம் என்றுதான் அவனுக்கு புரியவில்லை.
வீட்டுக்குள் வந்தால் பெரியவர்கள் மூவரும் அலுவலக அறையில் இருந்தனர். சீதாவின் முகமும் குழப்பத்தில் இருந்தது. என்னவென்று பார்த்தவனிடம், ராமசாமி கர்ணன் பேசியதை கூற, வெற்றியும் யாழி தவிர்த்து மற்றதை கூறினான்.
“அப்பா.. அவருக்கு வெளிய நாம பார்க்க ஆரம்பிச்சது எல்லாம் தெரிஞ்சிருக்குன்னா கண்டிப்பா நம்மளை கவனிக்க ஆள் வச்சிருக்கலாம். இனி நாம என்ன செஞ்சாலும் அவருக்கு தெரியாம இருக்க போறது இல்லை.”
“என்ன சொல்ற வெற்றி?” என்ற சீதாவிடம்
“ஆமாம்மா.. ராமுப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சது நமக்கு கூட தெரியாது. ஆனா அவருக்கு எப்படி தெரியும். அதோட அவர்தான் லிங்கா மாமாக்கிட்ட வல்லியை கேட்க சொல்லிருக்கார். அப்போ முன்ன இருந்தே அவருக்கு வல்லி மேல விருப்பம் இருந்துருக்கனும். இல்லைன்னா இதுக்கெல்லாம் சாத்தியமே இல்ல..”
“அவங்க குடும்பத்தை தவிர்த்து நாம யோசிச்சா நல்ல பையன்தான். அண்ணனும் இருக்கார். கர்ணன் தம்பியும் இருக்கும் போது பயப்பட வேண்டாம்னு தான் தோணுது. இனி நாங்களும் இங்கேயே வந்திட போறோம். இத்தனை பேர் இருக்கோம். விட்டுடுவோமா?’ என சீதாவும் கூற, அனைவருக்கும் சரியென்று சொல்லும் நிலைதான்.
ஆனால் வல்லபி என்ன சொல்வாளோ? என்றுதான் பயமே.
“ப்பா.. நான் வல்லிக்கிட்ட பேசுறேன். ஆனா உடனே வேண்டாம். நாளைக்கு அங்க போய்ட்டு வரலாம். அதுக்குப்பிறகு பொறுமையா பேசுறேன்..” என வெற்றியும் சொல்ல, பெரியவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
இங்கு தன் குடும்ப வக்கீலை பார்த்து வந்த மகனும் மகளும் சொன்னதை நம்ப முடியாமல் “என்னடி சொல்ற? நீ சொல்றது உண்மையா?” என ராஜலட்சுமி அதிர்ச்சியாக தன் பெரிய மகளைப் பார்த்து கேட்டார்.
“ஆமாம் ம்மா… உங்க மாப்பிள்ளைதான் சொன்னார். அதைக்கேட்டு என்னால ஜீரனிக்கவே முடியல. அப்பாவுக்கு அவன்னா ரொம்ப இஷ்டம்னு தெரியும். அவனுக்காக எதையும் செய்வார்னு தெரியும். ஆனா அதுக்காக அந்த சொத்து முழுசும் அவன் பேர்ல எழுதுவார்னு நான் நினைக்கல..” என வனிதா ஆத்திரமாக சொல்ல, சுந்தருக்கும் முகம் கோபத்தில் சிவந்தது.
“ம்மா.. நீங்க நினைக்கிற மாதிரி அவனை சாதாரணமா இங்க இருந்து விரட்ட முடியாது. அப்பா தொழில் பத்தி எல்லாம் அவன்கிட்ட சொல்லிருக்கார். எனக்குத் தெரியாத நிறைய அவனுக்குத் தெரிஞ்சிருக்கு.. அவன்தான் நம்ம பிசினஸ்க்கு சாஃப்ட்வேர் முதற்கொண்டு செஞ்சி கொடுத்துருக்கான். ஆடிட்டிங்க் ஆஃபிஸ்ல இருந்து அவனுக்கு முதல்ல ஃபைல் போய் அவன் செக் பண்ண பிறகுதான் எங்களுக்கு வந்துருக்கு. இது எதுவுமே எங்களுக்குத் தெரியல. தெரியவிடாம பண்ணிருக்கார் அப்பா.. அந்த வக்கீல் எவ்ளோ கிண்டலா பேசினான் தெரியுமா?”
ராஜலட்சுமிக்கு எதையும் உணரும் நிலையே இல்லை. அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தார். இவர் என்ன செய்து வைத்திருக்கிறார்.
அப்போ அவரின் திட்டங்களும், சூழ்ச்சிகளும் வீணா? இதுவே அவர் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. அவருக்கு இப்போது இன்னொரு பயமும். தன்னுடைய திட்டங்கள் கர்ணாவுக்கு தெரிந்திருந்தால்? அதை நினைக்கவே பயமாக இருந்தது.
இப்படி தன்னை நிறுத்திய கணவன் மேல் அவ்வளவு ஆத்திரம் ராஜலட்சுமிக்கு.
“ம்மா என்ன ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?” என வனிதா கத்த,
“ம்ச்.. இப்போ நம்ம வீட்டு சூழல்ல, இது எதையும் கர்ணாக்கிட்ட கேட்க முடியாது. கொஞ்சநாள் பொறுமையா இருங்க. இன்னைக்கு அங்க போயிருக்கான். எப்படியும் நைட் அதைப்பத்தி பேசுவான். அதைக் கேட்டுட்டு நாம முடிவு பண்ணலாம்..” என்றார் ராஜலட்சுமி.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரம் மருத்துவமனையில் இருந்தான் கர்ணன். நேராக தந்தையைப் பார்க்க வந்துவிட்டான்.
அதோடு காலையில் கிளம்பும் போது யாழினியை இங்கு விட்டு சென்றிருந்தான். அவளையும் வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதாலும் வந்திருந்தான்.
தந்தை உறக்கத்தில் இருக்க, அவர் அருகே சோர்வாக அமர்ந்திருந்தாள் யாழினி.
“யாழிமா.. என்னடா?” என அந்த சோர்வில் பயந்து போய் பதட்டமாக கேட்க,
“ண்ணா.. ண்ணா..” என்றவள் அவன் தோளில் சாய்ந்து அழ, கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னடா.? என்னனு சொல்லு..?” என அவளைப் பிடித்து தள்ளி நிறுத்தி அழுத்தமாக கேட்க,
“ண்ணா அப்பாவுக்கு பிட்ஸ் வந்துடுச்சு.. ரொம்ப பயந்துட்டேன். டாக்டர்ஸ் மெடிசின் சேஞ்ச் பண்ணிருக்காங்க.. அப்பா விழிக்கவே இல்ல..” என அழுகையினூடே சொல்ல,
“எனக்கு உடனே கூப்பிட்டிருக்கலாம்லடா..” என தலையை வருடி சமாதானம் செய்ய,
“நீங்க அங்க இருந்து பதறி வருவீங்கன்னு தான் கூப்பிடல. சுந்தருக்கும் அம்மாவுக்கும் கூப்பிட்டேன். போனே எடுக்கல..” என மேலும் அழ,
“சரி.. சரி அழாத..” என தங்கையை சமாதானம் செய்தாலும் அவன் உடல் விரைத்துப் போனது.
“நீ இரு.. டாக்டரை பார்த்துட்டு வரேன்..” என்றவன், மருத்துவரிடம் அனைத்தையும் கேட்டு வந்தான்.
“யாழிமா.. ஒன்னும் பயமில்ல.. அப்பா கண் விழிக்கும் போது நார்மல் ஆகிடுவார். இப்போ வா உன்னை வீட்டுல விட்டுட்டு, நைட் நான் அப்பா கூட இருக்கேன். நீ ரெஸ்ட் எடுத்துட்டு மார்னிங்க் வா..” என்றவன், தந்தையை பார்த்துக்கொள்ள நர்சிடம் சொல்லிவிட்டு, யாழினியையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
அவன் வந்த நாளில் இருந்தே வனிதாவை இங்குதான் பார்க்கிறான். இவள் புகுந்த வீட்டிற்கு போவாளா? மாட்டாளா? என்ற கேள்வியோடு வர,
“என்னப்பா.. இப்பதான் வந்தியா? என்ன பிரச்சினையாம்.? இல்ல நான் சொன்னது போல அந்தாளுங்க தான் உங்க அப்பாவை ஏமாத்திட்டாங்களா? அப்படித்தான் இருக்கும். அதுதான் உன் முகமே அப்படி இருக்கு..” என கர்ணாவின் இறுகிப் போயிருந்த முகத்தைப் பார்த்து கேட்டார் ராஜலட்சுமி.
“ம்ம்..” என்று மூச்சிழுத்து அவன் பேசும் முன்னே, “உனக்கு அவங்களைப்பத்தி பேச எந்த அருகதையும் இல்ல. அவங்க ஒன்னும் ஏமாத்துறவங்க இல்ல..” என யாழினி கத்திக்கொண்டு தாயிடம் செல்ல,
“ஏய் யாருக்கிட்ட மரியாதை இல்லாம பேசுற?” என சுந்தர் தங்கையை அடிக்க வர,
“நீ பேசாத.. நீ பேசவேக் கூடாது.. வயசுல மூத்தவனா போய்ட்ட. அதனாலத்தான் நான் அமைதியா இருக்கேன். இல்ல இந்நேரம் உன் கன்னம் பழுத்திருக்கும்..” என அவனுக்கு முன்னும் போய் எகிற,
“ஹேய் என்னடி? எல்லாரையும் கத்திக்கிட்டு இருக்க.?” என வனிதா வர,
“யாழி..” என்ற கர்ணனின் ஒற்றை அதட்டல் அவளை அமைதியாக்கியிருந்தது.
யாழினியின் அழுகையும், கோபமும் கர்ணனின் முகத்தில் இருந்த இறுக்கமும் ராஜலட்சுமிக்கு கிலியை பரப்பியது. ஏதோ சம்பவம் நடக்க போகிறது என அவர் மூளை எச்சரித்தது.
அழுது கொண்டிருந்த தங்கையை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் “யாழி போன் செஞ்சி கூப்பிட்டும் நீ ஏன் ஹாஸ்பிடல் போகல..” என சுந்தரைப் பார்த்து கேட்டான் கர்ணன்.
“அது அதுண்ணா.. நான் ஆஃபிஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்க். முடிச்சிட்டு வந்து அம்மாவை கூப்பிட்டு போகலாம்னு நினைச்சேன். இதோ இப்போதான் வந்து அம்மாவை கிளம்ப சொல்லிட்டு இருந்தேன்..” என்றான் கோர்வையாக.
“ஹான்.. அப்போ நீங்க?” என தாயைப் பார்த்தான்.
“அது அது தம்பி சுந்தர் வரேன்னு சொன்னதுனாலத்தான் நான் வெய்ட் பண்ணேன்..” என மகனை ஒட்டியே அவரும் சொன்னார்.
“ம்ம்..” என்றவனின் பார்வை வனிதாவிடம் நிற்க,
“நானும் அம்மா கூட போகலாம்னுதான் கிளம்பி இருந்தேன்..” என்றாள் வேகமாக.
“யாழி.. நீ போ.. போய் குளிச்சிட்டு வா..” என அவளை அனுப்ப,
“நீங்க யாரும் என் அப்பாவை போய் பார்க்கவேண்டாம். அங்கயாச்சும் அவர் நிம்மதியா இருக்கட்டும்..” என வெடுக்கென்று சொல்லிவிட்டு யாழினி மேலேறிவிட,
“ஏய்..” என சுந்தர் கத்தும் முன்னே அவனை ஓங்கி அறைந்திருந்தான் கர்ணன்.
“என்ன பண்ற கர்ணா.?” என ராஜலட்சுமியின் குரல் ஓங்கி ஒலிக்க, நிதானமாக திரும்பி அவரைப் பார்த்தான்.
அவரை ஐசியுல வச்சிருக்காங்க. கூட ஒரு சின்ன பொண்ணு இருக்கா. அவ போன் பண்ணிருக்கா. எதுக்காக கூப்பிட்டான்னு கூட கேட்காம என்ன செஞ்சீங்க நீங்க. அவரை விட உங்களுக்கு இந்த சொத்துதான் முக்கியமா? ஹான் அவர் எப்போ சாவார்னு பார்த்துட்டு இருக்கீங்களோ, அதனாலத்தான் போய் லாயரை பார்த்துட்டு வந்துருக்கான் இவன்..” என்றவன் “நீ சொன்ன முக்கியமான வேலை அதுதான..” என மீண்டும் சுந்தரை அறைந்திருந்தான்.
அவனுக்கு இன்னும் ஆத்திரம் குறையவில்லை. இவர்களுக்காக, இவர்களோடு தந்தை ஒன்ற வேண்டும் என்று அவன் தன் ஆசைகளை எல்லாம் துறந்து தூர தேசத்தில் இருந்தால், இவர்கள் அவரை இல்லாமலே ஆக்கிவிடுவார்கள் போலவே..
இவர்களால் அவன் இழந்தது கொஞ்ச நஞ்சமா? அவனுக்கு ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை.
என்ன ஜென்மங்கள் இவர்கள் என்றானது. அப்பா ஏன் அனைத்தையும் தன்னிடம் கூறியிருக்கிறார் என இப்போது புரிந்தது.
“அப்பா சரியாகி வீட்டுக்கு வரனும். வருவார். அதுவரைக்கும் சொத்து, பிசினஸ்னு எந்த பிரச்சினையும் யாரும் பண்ணக்கூடாது. அப்படி மட்டும் நடந்தா நான் மனுசனா இருக்கமாட்டேன்..’ என கர்ஜித்துவிட்டு தன்னறைக்கு செல்ல
அவனின் இந்த செய்கையில் குடும்பமே உறைந்து போயிருந்தது.
“என்ன.. என்ன சொல்றீங்க தம்பி..” என படபடப்புடன் ராமு கேட்க,
“எனக்கு வல்லபியை பிடிச்சிருக்கு அங்கிள். நான்தான் அப்பாவை உங்ககிட்ட பேச சொன்னேன்..” என மீண்டும் அழுத்தி சொல்ல, ராமசாமிக்கு உடலெல்லாம் உதற ஆரம்பித்தது.
“தம்பி.. உங்க வயசு, பாப்பா வயசு…” என நம்ப முடியாமல் இழுக்க,
“அங்கிள் எனக்கும் யாழிக்கும் எட்டு வயசுதான் வித்தியாசம். அப்போ அதே ஏஜ் டிஃபரன்ட் தானே எனக்கும் வல்லபிக்கும் இருக்கும்..” என்றவன் “உங்களுக்கு இஷ்டம் இல்ல போல..” என நிறுத்த,
“அது அப்படியில்ல தம்பி… நான் இன்னும் பாப்பாக்கிட்ட பேசல.. அவளுக்கு வேலைக்கு போகத்தான் விருப்பம்.. படிச்சதுக்காக கொஞ்ச நாள் வேலைக்கு போறேன் சொல்றா. கேம்பஸ்ல செலக்ட் ஆகிருக்கா…”
“ரொம்ப நல்ல விசயம்தானே அங்கிள்.. ஆனா வேலைக்கு போறதை விட மேல படிச்சா என்ன. இன்னைக்கு வெறும் BE வச்சு என்ன யூஸ்.. MBA படிக்கட்டும். படிச்சு ஒர்க் போகட்டும்..” என்று நிறுத்தி அவரைப் பார்த்து “மேரேஜ்க்கு அப்புறம் படிக்கட்டும். எனக்கு நோ அப்ஜக்சன்..” என்றிட,
உண்மையில் ராமுவிற்கு மூளை செயல்படாத நிலை. அவருக்கு வேண்டாம் என உதறிவிடவும் முடியவில்லை. வேண்டும் என இழுத்து வைக்கவும் முடியவில்லை. மிகவும் குழப்பத்தில் இருக்க, “நான் பாப்பாக்கிட்ட கேட்டுட்டு சொல்லட்டுமா தம்பி. பாப்பா முடிவு ரொம்ப முக்கியம் இல்லையா.?” என்றார் தயக்கமாக.
“கண்டிப்பா அங்கிள்.. நீங்க பேசிட்டு முடிவு சொல்லுங்க. அன்ட் எல்லாரும் நாளைக்கு அங்க அப்பாவை பார்க்க வாங்க. உங்க எல்லாரையும் பார்த்தா அப்பாவுக்கு நல்லா இருக்கும்..”
“ஆமா.. ஆமா தம்பி.. சீதாவும் வரனும் சொன்னாங்க. அதனால எல்லாரையும் கூப்பிட்டு வரேன்.. ஆனா.. அங்க உங்க அம்மா எதுவும் பேசாம இருக்கனும். வல்லிக்கு இந்த பேச்செல்லாம் கேட்டு பழக்கமில்ல. வெற்றியும் கோபமா பேசிட்டா கஷ்டம்..”
அதைக் கேட்டதும் கர்ணனின் உடல் இறுகியது. “நீங்க வரும் போது அவங்க இருக்கமாட்டாங்க அங்கிள்.. ஆனா இப்படியே இருக்க முடியாது இல்லையா? மேரேஜுக்கு அப்புறம் எல்லாரையும் பார்க்க பழக இருக்கனுமில்ல…” என்றான் இறுகிய குரலில்.
“ஆமா தம்பி.. ஆனா பாப்பா முதல் தடவை பார்க்கும் போதே நல்ல மனநிலையோட இருந்தா நல்லா இருக்கும் பாருங்க..”
“ம்ம் சரிங்க அங்கிள்..” என்றவனுக்கு அவரும் வல்லபிக்காக யோசிக்கிறார் என்று புரிந்து அமைதியானான்.
சீதாவும், வல்லபியும் உணவு பரிமாற மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பினான் கர்ணா. கிளம்பும் போது வெற்றியை அழைத்து “எதுக்கு யாழிக்கிட்ட உரிமை எடுத்து பழகுற..?” என்றவன், “எனக்கு அது தெரிஞ்சதுனாலத்தான் வந்தனாவை அண்ணான்னு கூப்பிட வேண்டாம் சொன்னேன். இதுக்கும் வல்லபிக்கும் சம்மந்தம் இல்ல. அன்ட் இனி வல்லபிக்கு மாப்பிள்ளை பார்க்குற வேலையை விட்டுடு. அவ எனக்கு மட்டும்தான்..” என நிதானமான குரலில் சொன்னாலும், முடிவான குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட,
கர்ணனின் முடிவை மாற்ற முடியாது என வெற்றிக்கு புரிந்து போனது. ஆனால் ஏன் இந்த பிடிவாதம் என்றுதான் அவனுக்கு புரியவில்லை.
வீட்டுக்குள் வந்தால் பெரியவர்கள் மூவரும் அலுவலக அறையில் இருந்தனர். சீதாவின் முகமும் குழப்பத்தில் இருந்தது. என்னவென்று பார்த்தவனிடம், ராமசாமி கர்ணன் பேசியதை கூற, வெற்றியும் யாழி தவிர்த்து மற்றதை கூறினான்.
“அப்பா.. அவருக்கு வெளிய நாம பார்க்க ஆரம்பிச்சது எல்லாம் தெரிஞ்சிருக்குன்னா கண்டிப்பா நம்மளை கவனிக்க ஆள் வச்சிருக்கலாம். இனி நாம என்ன செஞ்சாலும் அவருக்கு தெரியாம இருக்க போறது இல்லை.”
“என்ன சொல்ற வெற்றி?” என்ற சீதாவிடம்
“ஆமாம்மா.. ராமுப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சது நமக்கு கூட தெரியாது. ஆனா அவருக்கு எப்படி தெரியும். அதோட அவர்தான் லிங்கா மாமாக்கிட்ட வல்லியை கேட்க சொல்லிருக்கார். அப்போ முன்ன இருந்தே அவருக்கு வல்லி மேல விருப்பம் இருந்துருக்கனும். இல்லைன்னா இதுக்கெல்லாம் சாத்தியமே இல்ல..”
“அவங்க குடும்பத்தை தவிர்த்து நாம யோசிச்சா நல்ல பையன்தான். அண்ணனும் இருக்கார். கர்ணன் தம்பியும் இருக்கும் போது பயப்பட வேண்டாம்னு தான் தோணுது. இனி நாங்களும் இங்கேயே வந்திட போறோம். இத்தனை பேர் இருக்கோம். விட்டுடுவோமா?’ என சீதாவும் கூற, அனைவருக்கும் சரியென்று சொல்லும் நிலைதான்.
ஆனால் வல்லபி என்ன சொல்வாளோ? என்றுதான் பயமே.
“ப்பா.. நான் வல்லிக்கிட்ட பேசுறேன். ஆனா உடனே வேண்டாம். நாளைக்கு அங்க போய்ட்டு வரலாம். அதுக்குப்பிறகு பொறுமையா பேசுறேன்..” என வெற்றியும் சொல்ல, பெரியவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
இங்கு தன் குடும்ப வக்கீலை பார்த்து வந்த மகனும் மகளும் சொன்னதை நம்ப முடியாமல் “என்னடி சொல்ற? நீ சொல்றது உண்மையா?” என ராஜலட்சுமி அதிர்ச்சியாக தன் பெரிய மகளைப் பார்த்து கேட்டார்.
“ஆமாம் ம்மா… உங்க மாப்பிள்ளைதான் சொன்னார். அதைக்கேட்டு என்னால ஜீரனிக்கவே முடியல. அப்பாவுக்கு அவன்னா ரொம்ப இஷ்டம்னு தெரியும். அவனுக்காக எதையும் செய்வார்னு தெரியும். ஆனா அதுக்காக அந்த சொத்து முழுசும் அவன் பேர்ல எழுதுவார்னு நான் நினைக்கல..” என வனிதா ஆத்திரமாக சொல்ல, சுந்தருக்கும் முகம் கோபத்தில் சிவந்தது.
“ம்மா.. நீங்க நினைக்கிற மாதிரி அவனை சாதாரணமா இங்க இருந்து விரட்ட முடியாது. அப்பா தொழில் பத்தி எல்லாம் அவன்கிட்ட சொல்லிருக்கார். எனக்குத் தெரியாத நிறைய அவனுக்குத் தெரிஞ்சிருக்கு.. அவன்தான் நம்ம பிசினஸ்க்கு சாஃப்ட்வேர் முதற்கொண்டு செஞ்சி கொடுத்துருக்கான். ஆடிட்டிங்க் ஆஃபிஸ்ல இருந்து அவனுக்கு முதல்ல ஃபைல் போய் அவன் செக் பண்ண பிறகுதான் எங்களுக்கு வந்துருக்கு. இது எதுவுமே எங்களுக்குத் தெரியல. தெரியவிடாம பண்ணிருக்கார் அப்பா.. அந்த வக்கீல் எவ்ளோ கிண்டலா பேசினான் தெரியுமா?”
ராஜலட்சுமிக்கு எதையும் உணரும் நிலையே இல்லை. அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தார். இவர் என்ன செய்து வைத்திருக்கிறார்.
அப்போ அவரின் திட்டங்களும், சூழ்ச்சிகளும் வீணா? இதுவே அவர் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. அவருக்கு இப்போது இன்னொரு பயமும். தன்னுடைய திட்டங்கள் கர்ணாவுக்கு தெரிந்திருந்தால்? அதை நினைக்கவே பயமாக இருந்தது.
இப்படி தன்னை நிறுத்திய கணவன் மேல் அவ்வளவு ஆத்திரம் ராஜலட்சுமிக்கு.
“ம்மா என்ன ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?” என வனிதா கத்த,
“ம்ச்.. இப்போ நம்ம வீட்டு சூழல்ல, இது எதையும் கர்ணாக்கிட்ட கேட்க முடியாது. கொஞ்சநாள் பொறுமையா இருங்க. இன்னைக்கு அங்க போயிருக்கான். எப்படியும் நைட் அதைப்பத்தி பேசுவான். அதைக் கேட்டுட்டு நாம முடிவு பண்ணலாம்..” என்றார் ராஜலட்சுமி.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரம் மருத்துவமனையில் இருந்தான் கர்ணன். நேராக தந்தையைப் பார்க்க வந்துவிட்டான்.
அதோடு காலையில் கிளம்பும் போது யாழினியை இங்கு விட்டு சென்றிருந்தான். அவளையும் வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதாலும் வந்திருந்தான்.
தந்தை உறக்கத்தில் இருக்க, அவர் அருகே சோர்வாக அமர்ந்திருந்தாள் யாழினி.
“யாழிமா.. என்னடா?” என அந்த சோர்வில் பயந்து போய் பதட்டமாக கேட்க,
“ண்ணா.. ண்ணா..” என்றவள் அவன் தோளில் சாய்ந்து அழ, கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னடா.? என்னனு சொல்லு..?” என அவளைப் பிடித்து தள்ளி நிறுத்தி அழுத்தமாக கேட்க,
“ண்ணா அப்பாவுக்கு பிட்ஸ் வந்துடுச்சு.. ரொம்ப பயந்துட்டேன். டாக்டர்ஸ் மெடிசின் சேஞ்ச் பண்ணிருக்காங்க.. அப்பா விழிக்கவே இல்ல..” என அழுகையினூடே சொல்ல,
“எனக்கு உடனே கூப்பிட்டிருக்கலாம்லடா..” என தலையை வருடி சமாதானம் செய்ய,
“நீங்க அங்க இருந்து பதறி வருவீங்கன்னு தான் கூப்பிடல. சுந்தருக்கும் அம்மாவுக்கும் கூப்பிட்டேன். போனே எடுக்கல..” என மேலும் அழ,
“சரி.. சரி அழாத..” என தங்கையை சமாதானம் செய்தாலும் அவன் உடல் விரைத்துப் போனது.
“நீ இரு.. டாக்டரை பார்த்துட்டு வரேன்..” என்றவன், மருத்துவரிடம் அனைத்தையும் கேட்டு வந்தான்.
“யாழிமா.. ஒன்னும் பயமில்ல.. அப்பா கண் விழிக்கும் போது நார்மல் ஆகிடுவார். இப்போ வா உன்னை வீட்டுல விட்டுட்டு, நைட் நான் அப்பா கூட இருக்கேன். நீ ரெஸ்ட் எடுத்துட்டு மார்னிங்க் வா..” என்றவன், தந்தையை பார்த்துக்கொள்ள நர்சிடம் சொல்லிவிட்டு, யாழினியையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
அவன் வந்த நாளில் இருந்தே வனிதாவை இங்குதான் பார்க்கிறான். இவள் புகுந்த வீட்டிற்கு போவாளா? மாட்டாளா? என்ற கேள்வியோடு வர,
“என்னப்பா.. இப்பதான் வந்தியா? என்ன பிரச்சினையாம்.? இல்ல நான் சொன்னது போல அந்தாளுங்க தான் உங்க அப்பாவை ஏமாத்திட்டாங்களா? அப்படித்தான் இருக்கும். அதுதான் உன் முகமே அப்படி இருக்கு..” என கர்ணாவின் இறுகிப் போயிருந்த முகத்தைப் பார்த்து கேட்டார் ராஜலட்சுமி.
“ம்ம்..” என்று மூச்சிழுத்து அவன் பேசும் முன்னே, “உனக்கு அவங்களைப்பத்தி பேச எந்த அருகதையும் இல்ல. அவங்க ஒன்னும் ஏமாத்துறவங்க இல்ல..” என யாழினி கத்திக்கொண்டு தாயிடம் செல்ல,
“ஏய் யாருக்கிட்ட மரியாதை இல்லாம பேசுற?” என சுந்தர் தங்கையை அடிக்க வர,
“நீ பேசாத.. நீ பேசவேக் கூடாது.. வயசுல மூத்தவனா போய்ட்ட. அதனாலத்தான் நான் அமைதியா இருக்கேன். இல்ல இந்நேரம் உன் கன்னம் பழுத்திருக்கும்..” என அவனுக்கு முன்னும் போய் எகிற,
“ஹேய் என்னடி? எல்லாரையும் கத்திக்கிட்டு இருக்க.?” என வனிதா வர,
“யாழி..” என்ற கர்ணனின் ஒற்றை அதட்டல் அவளை அமைதியாக்கியிருந்தது.
யாழினியின் அழுகையும், கோபமும் கர்ணனின் முகத்தில் இருந்த இறுக்கமும் ராஜலட்சுமிக்கு கிலியை பரப்பியது. ஏதோ சம்பவம் நடக்க போகிறது என அவர் மூளை எச்சரித்தது.
அழுது கொண்டிருந்த தங்கையை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் “யாழி போன் செஞ்சி கூப்பிட்டும் நீ ஏன் ஹாஸ்பிடல் போகல..” என சுந்தரைப் பார்த்து கேட்டான் கர்ணன்.
“அது அதுண்ணா.. நான் ஆஃபிஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்க். முடிச்சிட்டு வந்து அம்மாவை கூப்பிட்டு போகலாம்னு நினைச்சேன். இதோ இப்போதான் வந்து அம்மாவை கிளம்ப சொல்லிட்டு இருந்தேன்..” என்றான் கோர்வையாக.
“ஹான்.. அப்போ நீங்க?” என தாயைப் பார்த்தான்.
“அது அது தம்பி சுந்தர் வரேன்னு சொன்னதுனாலத்தான் நான் வெய்ட் பண்ணேன்..” என மகனை ஒட்டியே அவரும் சொன்னார்.
“ம்ம்..” என்றவனின் பார்வை வனிதாவிடம் நிற்க,
“நானும் அம்மா கூட போகலாம்னுதான் கிளம்பி இருந்தேன்..” என்றாள் வேகமாக.
“யாழி.. நீ போ.. போய் குளிச்சிட்டு வா..” என அவளை அனுப்ப,
“நீங்க யாரும் என் அப்பாவை போய் பார்க்கவேண்டாம். அங்கயாச்சும் அவர் நிம்மதியா இருக்கட்டும்..” என வெடுக்கென்று சொல்லிவிட்டு யாழினி மேலேறிவிட,
“ஏய்..” என சுந்தர் கத்தும் முன்னே அவனை ஓங்கி அறைந்திருந்தான் கர்ணன்.
“என்ன பண்ற கர்ணா.?” என ராஜலட்சுமியின் குரல் ஓங்கி ஒலிக்க, நிதானமாக திரும்பி அவரைப் பார்த்தான்.
அவரை ஐசியுல வச்சிருக்காங்க. கூட ஒரு சின்ன பொண்ணு இருக்கா. அவ போன் பண்ணிருக்கா. எதுக்காக கூப்பிட்டான்னு கூட கேட்காம என்ன செஞ்சீங்க நீங்க. அவரை விட உங்களுக்கு இந்த சொத்துதான் முக்கியமா? ஹான் அவர் எப்போ சாவார்னு பார்த்துட்டு இருக்கீங்களோ, அதனாலத்தான் போய் லாயரை பார்த்துட்டு வந்துருக்கான் இவன்..” என்றவன் “நீ சொன்ன முக்கியமான வேலை அதுதான..” என மீண்டும் சுந்தரை அறைந்திருந்தான்.
அவனுக்கு இன்னும் ஆத்திரம் குறையவில்லை. இவர்களுக்காக, இவர்களோடு தந்தை ஒன்ற வேண்டும் என்று அவன் தன் ஆசைகளை எல்லாம் துறந்து தூர தேசத்தில் இருந்தால், இவர்கள் அவரை இல்லாமலே ஆக்கிவிடுவார்கள் போலவே..
இவர்களால் அவன் இழந்தது கொஞ்ச நஞ்சமா? அவனுக்கு ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை.
என்ன ஜென்மங்கள் இவர்கள் என்றானது. அப்பா ஏன் அனைத்தையும் தன்னிடம் கூறியிருக்கிறார் என இப்போது புரிந்தது.
“அப்பா சரியாகி வீட்டுக்கு வரனும். வருவார். அதுவரைக்கும் சொத்து, பிசினஸ்னு எந்த பிரச்சினையும் யாரும் பண்ணக்கூடாது. அப்படி மட்டும் நடந்தா நான் மனுசனா இருக்கமாட்டேன்..’ என கர்ஜித்துவிட்டு தன்னறைக்கு செல்ல
அவனின் இந்த செய்கையில் குடும்பமே உறைந்து போயிருந்தது.