• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி பாகம் 3

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
155
75
28
Maduravoyal
ரகசிய கொலையாளி......
பாகம் -3
மணிகண்டன் அந்த வீட்டின் வெளியே மற்றும் சுற்றி ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தான்.
ராஜேஷ் அப்போது வந்தான்.
ராஜேஷ் விசாரிச்சிட்டீங்களா ?..... என்ன சொன்னாங்க.... என்றான் மணிகண்டன்.
சார் அவங்களை பத்தி எல்லாருமே நல்ல விதமாக தான் சொல்றாங்க...... அவங்களுக்கு யாரும் எதிரிங்க இருப்பதா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியல.... என்றான் ராஜேஷ்.
எல்லாமே ரெக்கார்டு பண்ணிக்கிட்டீங்களா?
ஆமாம் சார்.....
ஓகே ராஜேஷ்.....
சார்..... நவீனுக்கு கால் பண்ணி என்னாச்சு ன்னு கேட்கவா?...... என்றான் ராஜேஷ்.
ஆமாம் கேளுங்க ராஜேஷ்..... போய் எவ்வளவு நேரம் ஆச்சு..... என்னாச்சு ன்னு கால் கூட பண்ணல..... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்..... என்று சொல்லி விட்டு நவீனுக்கு கால் செய்தான் ராஜேஷ்.
ஹலோ நவீன்.....
ராஜேஷ் சார்..... சொல்லுங்க......
என்னாச்சு?..... டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிருக்கீங்களா? இல்லையா.......
மிடில் சார்........
மிடிலா..... அப்படின்னா?
பாதி இன்ஃபர்மேஷன் வாங்கிட்டேன்..... இன்னும் 15 மினிட்ஸ்ல எல்லா டீடெயில்ஸூம் கலெக்ட் பண்ணிடுவேன்.....
ஒரு நிமிஷம் நவீன்...... என்று சொல்லி விட்டு
மணிகண்டனிடம் விஷயத்தை சொன்னான் ராஜேஷ்.
அவனை நேரா ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிடுங்க ராஜேஷ்..... இங்கு பிரோசீஜர் முடிஞ்சிடிச்சு..... அவன் வரதுக்குள்ள நம்ம கிரைம் சீன் டேப் ஓட்டிட்டு பிலேஸை சீல் பண்ணிட்டு கிளம்பிடுவோம்..... என்றான் மணிகண்டன்.
ஓகே சார் சொல்லிடறேன் என்று நவீனிடம் விஷயத்தை கூறினான்.
ஓகே சார்..... என்றான் நவீன்.
கிரைம் சீன் பிலேஸை சீல் செய்துவிட்டு ஸ்டேஷனிற்கு செல்ல மணி 3 ஆகி விட்டது.
அப்போது மணிகண்டனின் அம்மா சிவகாமி கால் செய்தார்.
ஹலோ..... சொல்லுங்க அம்மா.... என்றான் மணிகண்டன்.
சாப்பிட்டியா டா கண்ணா?
இல்ல அம்மா..... இதுக்கு மேல தான்.....
மணி ஆகுதே கொஞ்சம் பொழுதோட சாப்பிடுபா.....
ஹாங் சாப்பிடறேன் மா.....
சரிப்பா..... வைக்கவா.....
அம்மா.....
சொல்லுப்பா.....
மாயா கால் பண்ணி விஷ் பண்ணா......
ரொம்ப நாளா பேசல ன்னு சொன்னீயே பா......
ஆமாம் மா..... வேலைல பிஸியா இருந்தாலாம்..... அதான் இன்னைக்கு பேசினா......
ஓ...... சரிப்பா..... என்று சொல்லி கண்கள் கலங்கினார் சிவகாமி.
அம்மா..... நீங்க ஏன் கவலைப் படறீங்க ன்னு எனக்கு தெரியும்..... மாமாவும் மாமியும் சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வந்து பேசுவாங்க பாருங்க......
சரிப்பா..... என்று சொல்லி தன் கண்களை துடைத்துக் கொண்டார் சிவகாமி.
அதுவும் இல்லாம அவங்களே மாயாவை எனக்கு கல்யாணம் பண்ணி தரேன் ன்னு சொல்ற நாள் சீக்கிரமா வரப் போகுது...
என்னப்பா சொல்ற.....
ஆமாம் மா..... மாயா அவ அப்பா அம்மா கிட்ட கிளியர்ரா சொல்லிட்டா.... நான் கட்டினா மணிகண்டன் மாமாவை தான் கட்டிப்பேன்னு.....
ஹூம்.....
அதனால நீங்க கவலைப் படாதீங்க.....
சரிப்பா.....
என்னோட கூட வேலை செய்யறவங்க இன்னைக்கு எனக்கு பர்த் டே ன்னு டிரீட் கேட்டாங்க......
எதாவது செய்யனுமா பா.....
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மா..... நான் அடுத்த வாரம் டிரீட் தரேன் ன்னு சொல்லிட்டேன்.....
அடுத்த வாரம் என்ன விசேஷம் பா.....
அம்மா மாயா பர்த் டே..... மறந்திட்டீங்களா..... அதுவும் இல்லாம அன்னைக்கு தான் மாமா மாமியை சமாதானம் செய்து கூட்டிக்கிட்டு வரேன் ன்னு மாயா சொல்லி இருக்கா.....
சரிப்பா..... என்றார் சிவகாமி கண்களை துடைத்துக் கொண்டு.
அம்மா..... ஆனால் அப்போ கூட நீங்க எதுவும் வீட்ல செய்ய வேண்டாம்..... நான் ஹோட்டலுக்கு கூட்டிக்கிட்டு போறேன்...... என்றான் மணிகண்டன்.
சரிப்பா..... முதல்ல இப்போ போய் சாப்பிடு பா.....
சரிங்க அம்மா..... பை.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் மணிகண்டன்.
அப்போது பிரியாணி வாங்கி வந்தான் இளங்கோ.
சார்..... உங்களுக்கு பிடிச்ச சிக்கன் பிரியாணி..... என்றான்.
தேங்க்ஸ் இளங்கோ.....
வெல்கம் சார்..... என்று சொல்லி விட்டு மற்றவர்களுக்கு வாங்கி வந்த சாப்பாட்டை எடுத்துக் கொடுத்தான்.
அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
சார்..... என்றான் ராஜேஷ் மணிகண்டனை பார்த்து.
சொல்லுங்க ராஜேஷ்..... என்றான் மணிகண்டன்.
தப்பா நினைக்க வேண்டாம் சார்..... நீங்க உங்க அம்மா கிட்ட பேசினதை கேட்டேன்..... உங்க உட்பீ யாருன்னு சொல்லுங்களேன்..... என்றான் ராஜேஷ்.
ஆமாம் சார்..... உங்களுக்கு லவ் இருக்கு ன்னு தெரியும்..... ஆனா எப்போ பேசறீங்க எப்போ பார்க்கறீங்க ன்னு தெரியல..... என்றான் இளங்கோ.
சிரித்தான் மணிகண்டன்.
அப்போது உள்ளே நுழைந்தான் நவீன்.
சார் நீங்க கேட்ட டீடெயில்ஸ்.... என்றான் நவீன்.
டேய்..... சார் டேபிள்ல வச்சிட்டு வா சாப்பிடலாம்.... என்றார் பன்னீர் செல்வம்.
நவீனை மறந்திட்டேன்...... அவனுக்கு எதுவும் வாங்கல..... என்றான் இளங்கோ.
நம்ம கிட்ட இருக்குறதை ஷேர் பண்ணிக்கலாம்..... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்..... என்று சொல்லி ஒரு தட்டில் அனைவரும் அவரவர் ஆர்டர் செய்த சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சம் வைத்தனர். மீனா தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாட்டில் கொஞ்சம் வைத்தாள்.
தேங்க்ஸ் அக்கா..... என்றான் நவீன்.
என்னது அக்காவா?...... என்றாள் மீனா.
அக்கா ன்னு தான சொன்னான் ஆன்டி ன்னா சொன்னான்..... ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற...... என்றான் இளங்கோ மீனாவை பார்த்து.
நியாயமா கல்யாணம் ஆயிடிச்சு உனக்கு..... அதனால ஆன்டி ன்னு கூப்பிட்டு இருக்கனும்..... என்றான் ராஜேஷ்.
டேய்.... ரெண்டு பேரும் என் கிட்ட உதை வாங்க போறீங்க..... என்றாள் மீனா.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் ராஜேஷ் இளங்கோ மற்றும் மீனா மூவரும் ஒன்றாக வேலைக்கு சேர்ந்ததால் ஃபிரெண்ட்ஸ் போல பழகுவார்கள்.
கரெக்டா சொன்னீங்க டா..... என்றார் ரவி இளங்கோ மற்றும் ராஜேஷை பார்த்து.
சார்..... நீங்களுமா..... என்றாள் மீனா ரவியிடம்.
அனைவரும் சிரித்தனர்.
அக்கான்னு சொன்னதுக்கா இவ்வளவு பெரிய பிரச்சனை?...
இதுக்கு மேல உங்களை எப்படி கூப்பிடனும் ன்னு சொல்லுங்க அப்படியே கூப்பிடறேன்..... என்றான் நவீன்.
சரி சரி.... நீ என்னை விட சின்னவனா தான் இருப்ப.... ஸோ அக்கா ன்னே கூப்பிடு..... என்றாள் மீனா.
இதுக்கு பேசாம பருத்தி மூட்டை கௌடவுன்லேயே இருந்திருக்கலாமே..... என்றான் இளங்கோ ( படக் காமடியை சொல்லி)
அனைவரும் மறுபடியும் சிரித்தனர்.
இளங்கோ..... என்று மிரட்டினாள் மீனா.
ஓகே ஓகே டென்ஷன் ஆகாத.... என்றான் இளங்கோ.
சரி சரி வெட்டி கதையை விடுங்க பா..... நம்ம சாரோட லவ் ஸ்டோரியை கேட்கலாம்..... என்றார் பன்னீர் செல்வம்.
ஓகே ஓகே...... எல்லாரும் அமைதியாக இருங்க..... நீங்க சொல்லுங்க சார்..... என்றான் ராஜேஷ்.
என்ன எல்லாரும் படத்தில வர லவ் ஸ்டோரி மாதிரி கேட்கறீங்க..... என்றான் மணிகண்டன்.
சார்..... மேடம் ஃபோட்டோவை ஒரு முறை எங்களுக்கு காண்பிச்சிட்டு அப்புறம் சொல்லுங்க..... நாங்க உங்க லவ் ஸ்டோரியை கற்பனை செஞ்சு பார்த்துக் கொள்கிறோம்....... என்றான் இளங்கோ.
ஃபோட்டாவா..... ரீசென்டா எடுத்த எந்த ஃபோட்டோவும் என் கிட்ட இல்ல..... அவ காலேஜ் படிக்கும் போது ஊர் திருவிழால பாவாடை தாவணி கட்டிக் கொண்டு இருந்தா..... அப்போ எடுத்த ஃபோட்டோ தான் நான் என் பர்ஸ்ல வச்சிருக்கேன்.... என்று சொல்லி தன் பர்ஸை எடுத்தான்.
அண்ணா..... முதல்ல என் கிட்ட காட்டுங்க....
என்றாள் மீனா. ( தலையில் கேப் போட்டிருக்கும் போது அனைவரும் மணிகண்டனை சார் என்று அழைப்பார்கள்.... மற்ற நேரத்தில் வயதிற்கு ஏற்றாற போல அவரவர் கூப்பிடுவார்கள். ரவி மற்றும் பன்னீர் செல்வம் இருவரும் தம்பி என்றும்..... மீனா அண்ணா என்றும் ராஜேஷ் மற்றும் இளங்கோ சில நேரம் சார்.... சில நேரம் பிரதர்..... என்றும் கூப்பிடுவார்கள்.
இந்தாம்மா.... என்று சொல்லு அந்த ஃபோட்டோவை காண்பித்தான் மணிகண்டன்.
ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க அண்ணா..... என்றாள் மீனா.
உடனே அனைவரும் ஒவ்வொருவராக அந்த பர்ஸை வாங்கி ஃபோட்டோவை பார்த்தார்கள்.
அனைவரும் அவனிடம்.....
ரொம்ப அழகாக இருக்காங்க.... என்றனர் அனைவரும்.
சரி சரி..... காதல் கதையை சொல்லுபா..... என்றார் ரவி.
நான் +2 லீவுல தான் முதன் முதலாக கிராமத்துக்கு போனேன். அப்போது தான் என்னோட மாயாவை முதல் முறையாக பார்த்தேன்.
+2 படிக்கும் போதே லவ்வா?..... என்றாள் மீனா.
இல்ல இல்ல அப்போ லவ் எல்லாம் பண்ணல..... இன்ஃபேக்ட் எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு.....
எதுக்கு?..... என்றான் ராஜேஷ்.
அவ அப்போ தான் வயசுக்கு வந்திருந்தா..... அவ தாய்மாமன் வரல ன்னு ..... என்னை குடிசை கட்டச் சொல்லிட்டாங்க ..... என்றான் மணிகண்டன் .
#############
தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .
 
  • Like
Reactions: Anusha Senthil