• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராட்சசனின் இதயக்கைதி நீயே! 2

Rizka muneer "Rizii"

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 12, 2022
16
5
3
18
Kandy
tamil.pratilipi.com
இதயம் : 2


~"⚡இக்கதை முழுவதும் என் கற்பனை மட்டுமே⚡"~

இரு வாரங்களுக்குப்பிறகு ...


கதிரவன் நிலமகளுக்கு ஓய்வை வழங்கிவிட்டு பூமியை பிளந்து தன் கரங்களை விரித்து பூமாதேவியை அரவணைத்துக் கொள்ள அந்த பிரமாண்டமான மண்டபமே விழா கோலமாய் இயற்கையான பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த விதமே அங்கே திருமணம் நடக்க இருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டியது.

அம் மண்டபத்தை சுற்றி எச்சக்கணக்கான காவலர்கள் விரப்பாய் நின்று உள்ளே வருவர்கள் வெளியே செல்பவர்கள் என அனைவரையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி சந்தேக கண்ணோட்டத்துடன் பரிசோதனை செய்து உள்ளே அனுப்புக்கொண்டிருந்தார்கள் சில பெரிய தலைகளை தவிர,,

இந்த பாதுகாப்பிற்கு காரணம் சென்னை நகரின் முதலமைச்சர் ராகுல்நாத் மற்றும் சீதா தேவியின் மூத்தபுதல்வியான ரிஷிமதி ராகுல்நாத்தின் திருமணமே இது, அதனாலேயே வழக்கத்தை விட காவலர்களின் எண்ணிக்கை கூடுதலாக காணப்பட்டது.

அந்த திருமண வைபவத்திற்கு சமூகமளித்திருந்தவர்கள் அனைவரும் அந்தஸ்திலும் பதவியிலும் உயர்ந்த இடத்தில் காணப்படும் தொழிலதபர்கள் மற்றும் ராகுல் நாத்தில் தொழில்வட்டார நண்பர்கள்.

திருமணத்திற்கு சமூகமளித்திருந்த அனைவரும் கலகலவென சிரித்துப்பேசியவாறு அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து நடக்கவிருக்கும் திருமணத்தை காணவதற்காய் மனமேடையில் கவனத்தை செலுத்தியவாறு அமர்ந்திருக்க மணப்பெண்ணோ முகத்தில் எந்த வித உணர்வும் வெளிக் காட்டாது செதுக்கு வைத்த தங்கச்சிலையாய் தன் அறையில் அமர்ந்திருந்தாள்.


ஐயர் மந்திரங்கள் கூற மணமகனின் நண்பர்கள் மணமகனை அழைத்து வந்து மனமேடையில் அமர வைக்க ஐயருடன் சேர்ந்து அவர் கூறும் மந்திரங்களை அவனும் அவர் கூறியபடி கூறி ஓமகுண்டத்தில் அவர் தீர்த்தத்தை இடத் துவங்கினான்.


சிவப்பு நிறத்தில் தங்க நிறக் கற்கள் பதித்த லெகங்கா அணிந்து கழுத்து வரை வெட்டப்பட்டிருந்த கூந்தலின் சில கற்றைகள் தன் வதனத்தில் விழுந்து சில்மிசம் செய்ய அவற்றை பொருற் படுத்தாது தன் லெகங்காவை இரு கைகளாலும் தூக்கிப் பிடித்துக் கொண்டு மாடிப் படிகளால் ஒட்டமும் நடையுமாக ஏறியவள் தன் தமக்கையில் அறை கதவை திறந்து கொண்டு சிரித்தவாரே உள்ளே நுழைந்தாள் ரிஷிமதியின் செல்லத் தங்கை தேஜ்விகா ராகுல் நாத். ராகுல் நாத் சீதா தேவியின் இளைய மகள் மற்றும் சீதா தேவியின் செல்ல மகள்.

"அக்கா ரெடியா எனக் கேட்டவாரே உள்ளே நுழைந்தவள் தன் தமக்கையின் அழகில் ஒரு நிமிடம் அவளே சொக்கி போய் விட்டாள்.

சிவப்புநிறத்தில் தங்கநிற போர்டர் இட்ட சேலையில் நேர்த்தியாய் அணிந்து அதற்கு ஏற்றாற் போல் ஆபரணங்கள் அணிந்து பெரிய ஜிமிக்கி காதுகளின் உரசி சிணுங்கி கதை பேச ஒப்பனை இன்றியே இரவு வானில் ஒளிரும் மதியாய் பிரகாசமாய் காணப்படுபவள் இன்று சிறிது ஒப்பனை செய்து அதுவும் எவ்வளவோ தடுத்தும் கேட்காது ஒப்பனை செய்ய வந்தவர்கள் தன் எஜமானனின் கட்டளையை மீற மறுத்ததால் அவர்களுக்காய் வேண்டா வெறுப்புடன் சிறிது ஒப்பனையை செய்து கொண்டாள்.
மை இடாமலே அனைவரையும் சுண்டி இழுக்கும் அவள் மான் விழி இன்று மை இட்டதால் இன்னும் அழகாய் படபடத்துக் கொண்டிக்க கண்ணாடி முன் பாவையவள் அமர்ந்திருக்க அக்கண்ணாடியே அவள் அழகில் சொக்கிப் போகும் அளவு தங்க சிற்பமாய் காணப்பட்டாள்.

தேஜ்விகா தன் தமக்கையின் அழகில் கண்களை விரித்தவாரு அவள் அருகே வந்தவள் "அக்கா செம்மயா இருக்க, நான் பையனா மட்டும் பொறந்திருந்தேன் உன்ன தூக்கிட்டு போய் நானே கட்டிக்கிட்டிருப்பேன்" என்று கூறி கண் சிமிட்டியவாறு அவள் தோளில் நாடியை குற்றி அவள் முகத்தை பார்க்க தன் தங்கையின் பேச்சில் அவளுக்கு ஒரு குட்டை இலவசமாக வழங்க....

தேஜ்விகா தலையை தடவியவாறு " அக்கா உண்மையாதான்க்கா சொல்றேன்.. உனக்கு என் கண்ணே பட்டும் போல இருக்கே!.. " என்று இழுத்து கூறியவள் தன் கட்டை விரலால் தன் கண்ணிலிருந்த மையை தொட்டு அவள் காதின் அருகே வைத்து விட்டு "இப்போ ஓகே" என்று நெட்டி முறிக்க மதி லேசாக கன்னத்தில் குழி விழ சிரித்தாள்.

"பாருக்கா உன்ன பார்த்ததும் உன் அழகுல மாப்பிள அப்படியே மயக்கம் போட்டு விழப்போறாரு" என்று குறும்புடன் கூற மதியின் சட்டென மாறியது.

அதை கவனித்த தேஜ்விகா தன் தமக்கையை நன்கு அறிந்தவளாய் " அக்கா உனக்கு இந்த மேரேஜ்ல விருப்பம் தானே?" என்று சந்தேகமாய் வினவ பாவையவள் என்னவென்று கூறுவாள்.

அவளுக்கு புரியவில்லையே,,, பிடிக்கும் என்று கூறுவதற்கும் அவளிடம் காரணமில்லை பிடிக்காது என்று கூறுவதற்கும் அவளிடம் எந்த வித காரணமுமில்லை..சொல்லப் போனால் மணமகனின் பெயர் கூட சரியாக அவளுக்குத் தெரியாது...

"அதெல்லாம் எதுவுமில்ல தேஜூ" என்று தன் தங்கையையை நோக்கி போலியாய் ஓர் புன்னகையை சிந்த தேஜூவோ தன் தமக்கையிற்கு பிடிக்கவில்லையோ, அவள் கூறத் தயங்குகிறாளோ என்று எண்ணி " அக்கா உனக்கு விருப்பமில்லன்னா சொல்லு நான் அப்பாகிட்ட சொல்லு இந்த மேரேஜ்ச நிறுத்துறேன்" என்று அக்கறையுடன் வினவ மதி எழுந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

"தேஜூ அதெல்லாம் எதுவுமில்ல, நீ என்ன நினச்சி கவல படாத.. ஓகே வா.. நான் ஹாப்பியா தான் இருக்கேன்.." என்று அவளை விட்டு விலகி "இங்க பாரு நான் சிரிச்சுகிட்டு தானே இருக்கேன்" என்று கூறி சிரித்துக்காட்ட தேஜூவும் அவளுடன் சேர்ந்து லேசாக சிரித்தவாரே தன் தமக்கையை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

"அக்கா எனக்கு ஏதோ மனசுக்கு பயமாவே இருக்கு, நீ இங்கயே இருந்துடேன்" என்று கெஞ்சலாக வினவும் ஐயர் பெண்ணை அழைத்து வரக் கூறியதாகல் சில பெண்களும் சீதாதேவி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"தேஜூ என்ன பண்ணிட்டிருக்க இவ்வளவு நாளும் அவகூட தானே இருந்த.. பத்தலயா உனக்கு" என்று சீதாதேவி கடுகடுத்தவாரே அங்கு நின்று கொண்டிருந்த பெண்களிடம் திரும்பி "போங்க அவள அழச்சிட்டு வாங்க சீக்கிரம்" என்று விட்டு கீழே செல்ல தேஜூ தன் தாயை பார்த்து உதட்டை சுளித்தவாரு அங்கு நின்றிருந்த பெண்களிடம் " எனக்கு என் அக்காவ கூட்டிட்டு வர தெரியும் நீங்க போங்க" நெற்றியை சுருக்கியவாறு கூறி விட்டு "வாக்கா நாம போலாம்" மதியின் கரத்தை பிடித்து கீழே அழைத்துச் சென்றாள்.


மணமேடையில் அமர்ந்திருந்த ஆண்கள் தொடக்கம் பெண்கள் வரை மாடிப்படிகளால் நிலத்திற்கு வலிக்காது அன்னநடையுடன் இறங்கி வரும் தேவதையை கண் சிமிட்டாது சிலர் ரசனையுடனும் சிலர் பொறாமையுடனும் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் நிலையே அப்படியென்றால் மணமகனோ தன் வருங்கால மனைவியை வைத்த கண் வாங்காது விழிகளாலேயே விழுங்கிக் கொண்டிருந்தான்.

ரிஸிமதியை மணமகனின் அருகே தேஜூ அமர வைக்க அவனோ அப்பொழுதும் அவளையல்லவா இமை மூடாது வைத்த கண் வாங்காது நோக்கிக் கொண்டிருந்தான்,,

"டேய் மதன் கொஞ்சமாச்சும் விட்டு வைடா மானத்த வாங்காம.." அவனின் நண்பன் காதுகளில் கிசுகிசுக்க அப்பொழுது தான் நிதர்சனம் உணர்ந்து தன் பார்வையை கடினப்பட்டு அவள் மேலிருந்து விலக்கினான் மதன்.

ஐயர் மந்திரங்களை கூறி கடைசியாய் அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று தாலியை எடுத்து வந்து ஐயரிடம் ஓர் பெண் ஒப்படைக்க அதை எடுத்து சில மந்திரங்களை கூறி ஐயர் மாப்பிளை தாலி ஓப்படைக்கும் நேரம் வாசலில் ஏதோ சலசலப்பு கேட்க அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் அத்திசையில் விழுந்தது.



துடிக்கும்...