பகுதி – 15.
ஸ்டுடியோ வாசலில் மயக்கம் போட்டு விழுந்த விஷ்வாவை தூக்கிக்கொண்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடினார்கள். அவன் மற்றவர்களுக்கு முகம் தெரியும் அளவுக்கு பிரபலம் இல்லை என்பதால், எந்தவிதமான பிரச்சனையும் அங்கே இருக்கவில்லை.
“டாக்டர்.... இவர் திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார், கொஞ்சம் என்னன்னு பாருங்க” மருத்துவரிடம் சொல்ல,
“எங்கே? எப்படி ஆச்சு? எதனால மயக்கம் போட்டார்?” தன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து மாட்டிக் கொண்டவர், வேகமாக வந்தார்.
“எதனாலன்னு தெரியலை டாக்டர்... பார்ட்டிக்கு வெளியே போயிருந்தார்” வாசுதேவன் தயக்கமாக இழுக்க, மருத்துவரின் புருவம் முடிச்சிட்டது.
“ஓ... நீங்க கொஞ்சம் வெளியே இருங்க, நான் என்னன்னு பார்க்கறேன்...” சொன்னவர் வேகமாக அவனைப் பரிசோதிக்கத் துவங்கினார்.
அவனது நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து அழுத்தியவர், அவனது கருவிழிகளை பரிசோதிக்க, அவரது புருவம் முடிச்சிட்டது.
உடனடியாக ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொன்னவர், அவனது புஜத்தில் ஒரு ஊசியை இறக்கிவிட்டு, ட்ரிப்ஸ் மாட்டி விட்டார்.
“சிஸ்டர்... இவர் கொஞ்ச நேரம் தூங்கட்டும்... டிஸ்டப் இல்லாமல் பார்த்துக்கோங்க. கண் முழிச்ச உடனே என்கிட்டே வந்து சொல்லுங்க” சொன்னவர், அங்கிருந்து வெளியேறி, தன் அறையை நோக்கிச் செல்ல,
“டாக்டர்... விஷ்வா...?” வாசுதேவன் கேள்வியோடு அவர் முன்னால் நின்றார்.
“வாங்க... சொல்றேன்...” அவர் அழைக்கவே, அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தவர், “நீங்க எல்லாம் பார்ட்டிக்குப் போகலையா?” தன் மூக்குக் கண்ணாடியை கழட்டி மேஜைமேல் வைத்தவர், கேள்வி கேட்டார்.
“இல்ல டாக்டர்... அது மூவி சக்சஸ் பார்ட்டி... எங்களுக்கு அழைப்பு இல்லை. அதை விடுங்க... விஷ்வாவுக்கு என்ன?” வாசுதேவன் சற்று நிதானமாக இருக்க, முருகன் பயந்து போயிருப்பது அவருக்குத் தெரிந்தது.
“ஓ... அவன் உங்க அசிஸ்டண்டா?” வாசுதேவனை அவருக்குத் தெரியும் என்பதால் அவ்வாறு கேட்டார்.
“இல்ல டாக்டர்... இப்போ என் ஸ்டுடியோல அவன்தான் வேலை பார்க்கறான். நான் எல்லாத்திலும் இருந்து கொஞ்சம் விலகிட்டேன்... அவனுக்கு என்ன?” அதைச் சொல்லாமல், இவர் தேவையில்லாமல் கேள்வி கேட்கிறாரே என இருந்தது.
“பார்ட்டியில் தண்ணி மட்டும் இருந்த மாதிரி தெரியலையே... மிட்டாயும் சாப்ட்டிருப்பார் போல?” இருக்கையில் நேராக நிமிர்ந்து அமர்ந்தவர், வாசுதேவனை நேர் பார்வை பார்த்தார்.
“என்ன...?” சற்று அதிர,
“என்னண்ணே ஆச்சு...? மிட்டாய்ன்னா...?” முருகன் கேட்ட பிறகுதான், அவனது நினைவே வந்தது.
“முருகா, நீ கொஞ்சம் வெளியே இரு” வாசு சொல்ல,
“இதுக்கு வாயை மூடிகிட்டே இருந்து இருக்கலாம்... போச்சா...?” புலம்பினாலும் அங்கிருந்து செல்ல அவன் மறுக்கவில்லை.
அவன் செல்லவே, “டாக்டர்... அதிகமாயிடுச்சோ?” கையைப் பிசைந்தவாறே கேட்டார். அவர்கள் பாஷையில் ‘மிட்டாய்’ என அவர் எதைச் சொல்கிறார் என வாசுவுக்குப் புரிந்தது. அதைவிட ‘விஷ்வா போதை மாத்திரை சாப்பிடுவானா?’ என்பது பேரதிர்ச்சியை கொடுத்தது.
“முன்ன நீங்க தூக்கம் வராம இருக்கணும்ன்னு ட்ரக்ஸ் எடுத்துப்பீங்களே, அந்த மாதிரி இல்லை இது... அவனை தூங்கவே விடாது...” அவர் யோசனையாகவே சொல்ல,
“அவன் எங்க டாக்டர் தூங்கறான்? மாசத்தில் அஞ்சு நைட் தூங்கினா ஆச்சரியம். கிடைக்கற நேரத்தில் ஒருமணி நேரம், ரெண்டு மணிநேரம் தான் அவனோட தூக்கமே...” வாசு கவலையாக சொல்ல, மருத்துவர் மறுப்பாக தலை அசைத்தார்.
“இதில் அடிக்கடி அவனுக்கு தலைவலி வேற, சில நாள் அஞ்சு பெயின்கில்லர் வரைக்கும் போட்டுக்கறான். வேண்டாம்ன்னாலும் கேட்கறது இல்லை. டாக்டரைப் போய் பார்த்து எடுத்துக்கன்னா, அதையும் செய்யலை...
“இப்போ அவன் ட்ரக்ஸ் எடுத்துகிட்டது அதிகமோ? என்ன போட்டான்னு தெரியலையே” ‘இது தேவையா அவனுக்கு?’ என்பதுதான் அவரது யோசனையாக இருந்தது.
“ப்ளட் டெஸ்ட்க்கு சொல்லி இருக்கேன்... வரதுக்கு எப்படியும் நாலுமணி நேரமாவது ஆகும். அது வந்ததுக்குப் பிறகுதான், என்ன ட்ரக்ஸ், எவ்வளவு அளவுன்னு எல்லாம் தெரியும்.
“இந்த ட்ரக்ஸ் எல்லாம் நாங்க கட்டுப்படுத்தறோம்னு போலீஸ் என்னதான் வலை விரிச்சு பிடிச்சாலும், உங்களுக்கெல்லாம் விதம் விதமா எங்கே இருந்துதான் கிடைக்குதோ போங்க...” மருத்துவர் சற்று கோபமாகவே சலித்துக் கொள்ள, வாசுவிடம் ஒரு சங்கடமான புன்னகைதான்.
“அது டாக்டர்... அவனுக்கு ஏதும் ஆபத்து இல்லையே...?” வாசுவின் குரலில் கவலை மட்டுமே.
“டெஸ்ட் ரிசல்ட் வராமல் என்னால் எதையும் சொல்ல முடியாது. சரியா தூங்கறது இல்ல... தானா வலி மாத்திரை எடுத்துக்கறது... இதில் போதைப்பொருள் பழக்கம் வேற... இவன் நல்லவன்னு சர்ட்டிஃபிகேட் வேற கொடுக்கறீங்க” சொன்னவர் தன் வேலையைப் பார்க்கத் துவங்க, வாசுதேவன் அமைதியாக எழுந்து வெளியே வந்துவிட்டார்.
“என்னண்ணே சொன்னார்... சாருக்கு என்னவாம்?” முருகன் படபடத்தான்.
“சரியான தூக்கம் அவனுக்கு இல்லை இல்ல... அதான்... வேற எதுவும் இல்லை” சமாளித்தவர், இருக்கையில் அமர்ந்தார்.
“என்னவோ மிட்டாய்ன்னாரே... போதை மாத்திரை தானே...?” அவன் கேட்க, ‘இவனுக்கு எப்படித் தெரியும்?’ என்பதுபோல் பார்த்தார்.
“என்னண்ணே... ஒரு படத்தோட டைரக்டர் அவரோட அசிஸ்டன்ட் கிட்டே, ‘என்ன செய்வியோ தெரியாது.... எனக்கு அந்த மிட்டாய் வேணும்’ன்னு காட்டு கூச்சல் போட்டு வாங்கி வர வச்சாரே... மறந்துட்டீங்களா?” அவன் அவரிடம் திருப்பிக் கேட்க, அமைதியாக இருந்தார்.
“இதில் இருந்தெல்லாம் விலகியே இரு முருகா... இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. சும்மா ட்ரை பண்ணுவோமேன்னு ஆரம்பிச்சு... அது கிடைக்க என்ன வேண்ணா செய்யலாம்னு ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டுடும்” அவனை அவர் எச்சரிக்க, வேகமாக மறுத்தான்.
“ஹையோ... அண்ணே... ஒரு சாதாரண விஸ்கி, பிராண்டியே என்னவெல்லாம் செய்யும்னு எனக்குத் தெரியும். நான் எல்லாம் செத்தாலும் அது பக்கமே போக மாட்டேன்...” அவன் உறுதியாகச் சொல்ல, அவனது தந்தையின் நினைவு வாசுதேவனுக்கு வர, அவன் தோளைத் தட்டினார்.
“நாம இங்கே இருந்து என்ன செய்யப் போறோம்? ஸ்டுடியோவுக்கு போய்ட்டு வரலாம். நான் அந்த நர்ஸ் கிட்டே சொல்லிட்டு வர்றேன்” வாசுதேவன் செல்லவே, அவனும் உடன் சென்றான்.
“அண்ணே... வேண்ணா சாரோட அம்மாவை வரச் சொல்லுவோமா? அவங்க வந்து இருக்கட்டுமே” முருகனுக்கு விஷ்வாவின் தாயின் முகம் கண்முன் தோன்றி மறைய கேட்டான். இந்த நேரத்திலாவது அவர் ஆசை தீர மகனுக்கு அருகே இருக்கட்டுமே என்ற எண்ணம் அவனுக்கு.
வாசுதேவனுக்கோ, விஷ்வாவின் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் இருக்கையில், ரிஸ்க் எடுக்க அவர் தயாராக இல்லை.
“அதெல்லாம் அவர் கண் முழிச்ச பிறகு சொல்லிக்கலாம் வா...” சொன்னவர், ஸ்டூடியோவில் இருக்கும் வேலைகளை கவனிக்கப் போனார்.
பிறகு விஷ்வாவின் ரிசல்ட் வந்துவிட்டது, அவன் கண் விழித்துவிட்டான் எனத் தகவல் வர, வேகமாக மருத்துவமனைக்கு வந்தார்.
நேராக மருத்துவரைச் சென்று பார்த்தவர், “டாக்டர்... ரிசல்ட் என்ன சொல்லுது?” சற்று பயத்துடனே கேட்டார்.
“அவனோட பேரன்ஸை நான் பார்க்கணும்” எடுத்த உடனே அவர் இவ்வாறு சொல்ல, சற்று பயந்து போனார்.
“அவங்க எல்லாம் கிராமத்து ஆளுங்க... என்னன்னு என்கிட்டே சொல்லுங்க டாக்டர்...” வாசுதேவன் நிலைமையை சற்று விளக்க மருத்துவர் அவரை அழுத்தமாகப் பார்த்தார்.
“அடித்தட்டு நிலையில் இருந்து வந்துட்டு, இந்த சின்ன வயசில், வயாகரா லெவல் மாத்திரை எல்லாம் அவருக்கு அவசியமா? இந்த மாதிரி இல்லீகலா கிடைக்கற மாத்திரை எல்லாம், எந்தவிதமான பக்க விளைவுகளைக் கொடுக்கும்னு யாருக்குமே தெரியாது.
“நீடித்த, நிலைத்த... நிறைவான உறவுக்குன்னு விளம்பரம் பண்ற ப்ராடக்ட்டையே நம்ப முடியாதுங்கும் போது... ‘எரக்ஸன்’ இறங்கவே செய்யாத இந்த மாதிரி மாத்திரை எல்லாம்... மூளை முதல், நரம்பு மண்டலம் வரைக்கும் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்னு நம்மளால் கணிக்கவே முடியாது.
“அந்த மாத்திரையை அடிக்கடி எடுக்கறேன்னு சொல்றார்... அதுவும் அந்த மாத்திரையோட நேம் கூட தெரியலை. அந்த மாத்திரையை போட்ட பிறகு தனக்குள்ளே என்ன மாற்றம் வரும் என்று மட்டும்தான் அவருக்கு சொல்லத் தெரியுது.
“யூ நோ ஹௌ சீரியஸ் இஸ் திஸ்? அதில் இருந்து இந்த நிமிஷமே அவர் வெளியே வந்தாகணும். இல்லன்னா... கொஞ்ச நாள்ல என்ன வேணா நடக்கலாம்” மருத்துவர் சொல்லச் சொல்ல, வாசுதேவனுக்கு பதில் சொல்ல முடியாத நிலையே.
“வாழ வேண்டிய வயசு.... சின்னப் பையன்... என்ன ஒரு இருபது, இருவத்தஞ்சு வயசு இருக்குமா? சினிமாவில் அவ்வளவு சாதிக்கறான், அவனோட திறமையை அதில் காட்டாமல், இப்போ யார்கிட்டே அவனோட ஆண்மையை நிரூபிக்கணுமாம்? அதுவும் இப்படி...?” மருத்துவர் கோபமாகவே கேட்டார்.
“அது டாக்டர்...” அவரால் எப்படி சொல்ல முடியும்?
“எதுவுமே முறையா செஞ்சால் பிரச்சனை இல்லை... சப்போஸ் அவருக்கு செக்ஸ்ல பிரச்சனைன்னா, ஒரு நல்ல டாக்டர்ட்ட போய் கைடன்ஸ் வாங்கலாமே... சின்னப் பையன்...” அவனது அந்த இளம் வயது, அவரை அவ்வளவு கவலை கொள்ளச் செய்தது.
“நான் அவன்கிட்டே சொல்றேன் டாக்டர்... இப்போ அவரை நாங்க கூட்டி போகலாமா? ஏதாவது மருந்து?” கேட்கலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்திலேயே கேட்டார்.
இன்னும் இருபத்திநாலு மணி நேரத்துக்கு, அவருக்கு எந்த மருந்து கொடுத்தாலும் அது வேலை செய்யாது. நான் கொடுக்கற மருந்தை நாளைக்கு தண்ணியில் கலந்து குடுங்க. இனிமேல் அவர் அந்த மாத்திரை பக்கமே போகக் கூடாது... பார்த்துக்கோங்க...” அவர் அழுத்திச் சொல்ல, தலையை அசைத்தார்.
‘நான் சொல்லி அவன் கேட்க... சரிதான்... அவனைப் பெத்தவங்ககிட்டே வேண்ணா சொல்வோமா?’ நினைத்தவர், உடனே அந்த யோசனையைக் கைவிட்டார்.
“நீங்க அவன்கிட்டே சொல்லிட்டீங்களா டாக்டர்?” பிறகு அந்த வேலை வேறு தன் தலையில் விடிந்துவிடுமோ என்ற பயம்வேறு அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
“அதெல்லாம் அவர் கண் முழிச்ச உடனேயே சொல்லியாச்சு...” அவர் சொல்ல,
‘அப்படின்னா இனிமேல் அது அவன் பாடு...’ எண்ணியவர், அத்தனை ஆசுவாசமாக உணர்ந்தார். விஷ்வாவின் கோபமும், செயல்பாடுகளும் அவருக்குத் தெரியுமே, அப்படி இருக்கையில் ரிஸ்க் எடுக்க அவர் தயாராக இருக்கவில்லை.
“நான் இப்போ அவனை அழைச்சுட்டு போகவா?”.
“ம்... கூட்டி போங்க... ஒரு ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்ல அவரை இருக்கச் சொல்லி இருக்கேன்... அதை மட்டும் பார்த்துக்கோங்க” அவர் சொல்லவே, விஷ்வாவை நோக்கிச் சென்றார்.
“விஷ்வா... போகலாம்...” வாசுதேவன், அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகள், அவனது பர்ஸ்... வாட்ச் என அனைத்தையும் எடுத்துக் கொள்ள, அவரை ஏறிட்டு பார்க்கவே அத்தனை தயங்கினான்.
‘டாக்டருக்கு தெரியவந்த விஷயத்தை இவர்கிட்டே சொல்லி இருப்பார் தானே... வயாகரா...’ அவன் யோசனையைக் கலைத்தது வாசுதேவனின் குரல்.
“விஷ்வா... செருப்பை போட்டுக்கோங்க... வீல்சேர்ல போகலாம்...” அவர் சொல்லிக் கொண்டிருக்க, தன் ஷூ எப்படி செருப்பாக உருமாறியது என்ற யோசனையோடு அவர் பின்னால் வீல் சேரில் சென்றான்.
மற்ற நேரமாக இருந்திருந்தால், ‘நடந்தே வருகிறேன்’ என முறுக்கி இருப்பான். இப்பொழுது தான் செய்துவைத்த செய்கையில் தாக்கம் அவனை அவரிடம் வாதாட விடவில்லை. வழக்கமாக அட்வைஸ் என துவங்கும் அவர், எதையும் கேட்டுக் கொள்ளாதது வேறு அவனுக்கு உறுத்தலாக இருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அவன் நினைத்தாலும், அவனது வேலை அவனை அனுமதிக்க வேண்டுமே... ஒருநாள் ஓய்விலேயே, வேலைகள் மலைபோல் தேங்க, மறுநாளே தன் கணினியின் முன்னால் அமர்ந்துவிட்டான்.
“விஷ்வா... இன்னும் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு...” வாசுதேவன் துவங்க,
“நான் பார்த்துக்கறேன்... மெடிசின் மட்டும் குடுங்க...” அந்த குரலே, என்னிடம் எதையும் பேசாதே என அவரை எச்சரிக்க, தன் வாயை பசைபோட்டு இறுக ஒட்டிக் கொண்டார்.
அடுத்த வாரத்திலேயே நிக்கி அவன் வீட்டுக்கு வர, அவன் அந்த மாத்திரையை மறுக்கவே, அவளது பிடிவாத குணம் கண்டு திகைத்துப் போனான்.
“அந்த மாத்திரை இல்லன்னா உங்களால் எதுவுமே ஒழுங்கா ‘செய்ய’ முடியாது. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா? இந்த ஒரு முறை மட்டும்... பிளீஸ்...” அவளது கெஞ்சலுக்கு முன்னால், அவனது மறுப்புகள் செல்லாக்காசாகிப் போக, அவன் அவளுக்கு உடன்பட்டிருந்தான்.
ஸ்டுடியோ வாசலில் மயக்கம் போட்டு விழுந்த விஷ்வாவை தூக்கிக்கொண்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடினார்கள். அவன் மற்றவர்களுக்கு முகம் தெரியும் அளவுக்கு பிரபலம் இல்லை என்பதால், எந்தவிதமான பிரச்சனையும் அங்கே இருக்கவில்லை.
“டாக்டர்.... இவர் திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டார், கொஞ்சம் என்னன்னு பாருங்க” மருத்துவரிடம் சொல்ல,
“எங்கே? எப்படி ஆச்சு? எதனால மயக்கம் போட்டார்?” தன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து மாட்டிக் கொண்டவர், வேகமாக வந்தார்.
“எதனாலன்னு தெரியலை டாக்டர்... பார்ட்டிக்கு வெளியே போயிருந்தார்” வாசுதேவன் தயக்கமாக இழுக்க, மருத்துவரின் புருவம் முடிச்சிட்டது.
“ஓ... நீங்க கொஞ்சம் வெளியே இருங்க, நான் என்னன்னு பார்க்கறேன்...” சொன்னவர் வேகமாக அவனைப் பரிசோதிக்கத் துவங்கினார்.
அவனது நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து அழுத்தியவர், அவனது கருவிழிகளை பரிசோதிக்க, அவரது புருவம் முடிச்சிட்டது.
உடனடியாக ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொன்னவர், அவனது புஜத்தில் ஒரு ஊசியை இறக்கிவிட்டு, ட்ரிப்ஸ் மாட்டி விட்டார்.
“சிஸ்டர்... இவர் கொஞ்ச நேரம் தூங்கட்டும்... டிஸ்டப் இல்லாமல் பார்த்துக்கோங்க. கண் முழிச்ச உடனே என்கிட்டே வந்து சொல்லுங்க” சொன்னவர், அங்கிருந்து வெளியேறி, தன் அறையை நோக்கிச் செல்ல,
“டாக்டர்... விஷ்வா...?” வாசுதேவன் கேள்வியோடு அவர் முன்னால் நின்றார்.
“வாங்க... சொல்றேன்...” அவர் அழைக்கவே, அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தவர், “நீங்க எல்லாம் பார்ட்டிக்குப் போகலையா?” தன் மூக்குக் கண்ணாடியை கழட்டி மேஜைமேல் வைத்தவர், கேள்வி கேட்டார்.
“இல்ல டாக்டர்... அது மூவி சக்சஸ் பார்ட்டி... எங்களுக்கு அழைப்பு இல்லை. அதை விடுங்க... விஷ்வாவுக்கு என்ன?” வாசுதேவன் சற்று நிதானமாக இருக்க, முருகன் பயந்து போயிருப்பது அவருக்குத் தெரிந்தது.
“ஓ... அவன் உங்க அசிஸ்டண்டா?” வாசுதேவனை அவருக்குத் தெரியும் என்பதால் அவ்வாறு கேட்டார்.
“இல்ல டாக்டர்... இப்போ என் ஸ்டுடியோல அவன்தான் வேலை பார்க்கறான். நான் எல்லாத்திலும் இருந்து கொஞ்சம் விலகிட்டேன்... அவனுக்கு என்ன?” அதைச் சொல்லாமல், இவர் தேவையில்லாமல் கேள்வி கேட்கிறாரே என இருந்தது.
“பார்ட்டியில் தண்ணி மட்டும் இருந்த மாதிரி தெரியலையே... மிட்டாயும் சாப்ட்டிருப்பார் போல?” இருக்கையில் நேராக நிமிர்ந்து அமர்ந்தவர், வாசுதேவனை நேர் பார்வை பார்த்தார்.
“என்ன...?” சற்று அதிர,
“என்னண்ணே ஆச்சு...? மிட்டாய்ன்னா...?” முருகன் கேட்ட பிறகுதான், அவனது நினைவே வந்தது.
“முருகா, நீ கொஞ்சம் வெளியே இரு” வாசு சொல்ல,
“இதுக்கு வாயை மூடிகிட்டே இருந்து இருக்கலாம்... போச்சா...?” புலம்பினாலும் அங்கிருந்து செல்ல அவன் மறுக்கவில்லை.
அவன் செல்லவே, “டாக்டர்... அதிகமாயிடுச்சோ?” கையைப் பிசைந்தவாறே கேட்டார். அவர்கள் பாஷையில் ‘மிட்டாய்’ என அவர் எதைச் சொல்கிறார் என வாசுவுக்குப் புரிந்தது. அதைவிட ‘விஷ்வா போதை மாத்திரை சாப்பிடுவானா?’ என்பது பேரதிர்ச்சியை கொடுத்தது.
“முன்ன நீங்க தூக்கம் வராம இருக்கணும்ன்னு ட்ரக்ஸ் எடுத்துப்பீங்களே, அந்த மாதிரி இல்லை இது... அவனை தூங்கவே விடாது...” அவர் யோசனையாகவே சொல்ல,
“அவன் எங்க டாக்டர் தூங்கறான்? மாசத்தில் அஞ்சு நைட் தூங்கினா ஆச்சரியம். கிடைக்கற நேரத்தில் ஒருமணி நேரம், ரெண்டு மணிநேரம் தான் அவனோட தூக்கமே...” வாசு கவலையாக சொல்ல, மருத்துவர் மறுப்பாக தலை அசைத்தார்.
“இதில் அடிக்கடி அவனுக்கு தலைவலி வேற, சில நாள் அஞ்சு பெயின்கில்லர் வரைக்கும் போட்டுக்கறான். வேண்டாம்ன்னாலும் கேட்கறது இல்லை. டாக்டரைப் போய் பார்த்து எடுத்துக்கன்னா, அதையும் செய்யலை...
“இப்போ அவன் ட்ரக்ஸ் எடுத்துகிட்டது அதிகமோ? என்ன போட்டான்னு தெரியலையே” ‘இது தேவையா அவனுக்கு?’ என்பதுதான் அவரது யோசனையாக இருந்தது.
“ப்ளட் டெஸ்ட்க்கு சொல்லி இருக்கேன்... வரதுக்கு எப்படியும் நாலுமணி நேரமாவது ஆகும். அது வந்ததுக்குப் பிறகுதான், என்ன ட்ரக்ஸ், எவ்வளவு அளவுன்னு எல்லாம் தெரியும்.
“இந்த ட்ரக்ஸ் எல்லாம் நாங்க கட்டுப்படுத்தறோம்னு போலீஸ் என்னதான் வலை விரிச்சு பிடிச்சாலும், உங்களுக்கெல்லாம் விதம் விதமா எங்கே இருந்துதான் கிடைக்குதோ போங்க...” மருத்துவர் சற்று கோபமாகவே சலித்துக் கொள்ள, வாசுவிடம் ஒரு சங்கடமான புன்னகைதான்.
“அது டாக்டர்... அவனுக்கு ஏதும் ஆபத்து இல்லையே...?” வாசுவின் குரலில் கவலை மட்டுமே.
“டெஸ்ட் ரிசல்ட் வராமல் என்னால் எதையும் சொல்ல முடியாது. சரியா தூங்கறது இல்ல... தானா வலி மாத்திரை எடுத்துக்கறது... இதில் போதைப்பொருள் பழக்கம் வேற... இவன் நல்லவன்னு சர்ட்டிஃபிகேட் வேற கொடுக்கறீங்க” சொன்னவர் தன் வேலையைப் பார்க்கத் துவங்க, வாசுதேவன் அமைதியாக எழுந்து வெளியே வந்துவிட்டார்.
“என்னண்ணே சொன்னார்... சாருக்கு என்னவாம்?” முருகன் படபடத்தான்.
“சரியான தூக்கம் அவனுக்கு இல்லை இல்ல... அதான்... வேற எதுவும் இல்லை” சமாளித்தவர், இருக்கையில் அமர்ந்தார்.
“என்னவோ மிட்டாய்ன்னாரே... போதை மாத்திரை தானே...?” அவன் கேட்க, ‘இவனுக்கு எப்படித் தெரியும்?’ என்பதுபோல் பார்த்தார்.
“என்னண்ணே... ஒரு படத்தோட டைரக்டர் அவரோட அசிஸ்டன்ட் கிட்டே, ‘என்ன செய்வியோ தெரியாது.... எனக்கு அந்த மிட்டாய் வேணும்’ன்னு காட்டு கூச்சல் போட்டு வாங்கி வர வச்சாரே... மறந்துட்டீங்களா?” அவன் அவரிடம் திருப்பிக் கேட்க, அமைதியாக இருந்தார்.
“இதில் இருந்தெல்லாம் விலகியே இரு முருகா... இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. சும்மா ட்ரை பண்ணுவோமேன்னு ஆரம்பிச்சு... அது கிடைக்க என்ன வேண்ணா செய்யலாம்னு ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டுடும்” அவனை அவர் எச்சரிக்க, வேகமாக மறுத்தான்.
“ஹையோ... அண்ணே... ஒரு சாதாரண விஸ்கி, பிராண்டியே என்னவெல்லாம் செய்யும்னு எனக்குத் தெரியும். நான் எல்லாம் செத்தாலும் அது பக்கமே போக மாட்டேன்...” அவன் உறுதியாகச் சொல்ல, அவனது தந்தையின் நினைவு வாசுதேவனுக்கு வர, அவன் தோளைத் தட்டினார்.
“நாம இங்கே இருந்து என்ன செய்யப் போறோம்? ஸ்டுடியோவுக்கு போய்ட்டு வரலாம். நான் அந்த நர்ஸ் கிட்டே சொல்லிட்டு வர்றேன்” வாசுதேவன் செல்லவே, அவனும் உடன் சென்றான்.
“அண்ணே... வேண்ணா சாரோட அம்மாவை வரச் சொல்லுவோமா? அவங்க வந்து இருக்கட்டுமே” முருகனுக்கு விஷ்வாவின் தாயின் முகம் கண்முன் தோன்றி மறைய கேட்டான். இந்த நேரத்திலாவது அவர் ஆசை தீர மகனுக்கு அருகே இருக்கட்டுமே என்ற எண்ணம் அவனுக்கு.
வாசுதேவனுக்கோ, விஷ்வாவின் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் இருக்கையில், ரிஸ்க் எடுக்க அவர் தயாராக இல்லை.
“அதெல்லாம் அவர் கண் முழிச்ச பிறகு சொல்லிக்கலாம் வா...” சொன்னவர், ஸ்டூடியோவில் இருக்கும் வேலைகளை கவனிக்கப் போனார்.
பிறகு விஷ்வாவின் ரிசல்ட் வந்துவிட்டது, அவன் கண் விழித்துவிட்டான் எனத் தகவல் வர, வேகமாக மருத்துவமனைக்கு வந்தார்.
நேராக மருத்துவரைச் சென்று பார்த்தவர், “டாக்டர்... ரிசல்ட் என்ன சொல்லுது?” சற்று பயத்துடனே கேட்டார்.
“அவனோட பேரன்ஸை நான் பார்க்கணும்” எடுத்த உடனே அவர் இவ்வாறு சொல்ல, சற்று பயந்து போனார்.
“அவங்க எல்லாம் கிராமத்து ஆளுங்க... என்னன்னு என்கிட்டே சொல்லுங்க டாக்டர்...” வாசுதேவன் நிலைமையை சற்று விளக்க மருத்துவர் அவரை அழுத்தமாகப் பார்த்தார்.
“அடித்தட்டு நிலையில் இருந்து வந்துட்டு, இந்த சின்ன வயசில், வயாகரா லெவல் மாத்திரை எல்லாம் அவருக்கு அவசியமா? இந்த மாதிரி இல்லீகலா கிடைக்கற மாத்திரை எல்லாம், எந்தவிதமான பக்க விளைவுகளைக் கொடுக்கும்னு யாருக்குமே தெரியாது.
“நீடித்த, நிலைத்த... நிறைவான உறவுக்குன்னு விளம்பரம் பண்ற ப்ராடக்ட்டையே நம்ப முடியாதுங்கும் போது... ‘எரக்ஸன்’ இறங்கவே செய்யாத இந்த மாதிரி மாத்திரை எல்லாம்... மூளை முதல், நரம்பு மண்டலம் வரைக்கும் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்னு நம்மளால் கணிக்கவே முடியாது.
“அந்த மாத்திரையை அடிக்கடி எடுக்கறேன்னு சொல்றார்... அதுவும் அந்த மாத்திரையோட நேம் கூட தெரியலை. அந்த மாத்திரையை போட்ட பிறகு தனக்குள்ளே என்ன மாற்றம் வரும் என்று மட்டும்தான் அவருக்கு சொல்லத் தெரியுது.
“யூ நோ ஹௌ சீரியஸ் இஸ் திஸ்? அதில் இருந்து இந்த நிமிஷமே அவர் வெளியே வந்தாகணும். இல்லன்னா... கொஞ்ச நாள்ல என்ன வேணா நடக்கலாம்” மருத்துவர் சொல்லச் சொல்ல, வாசுதேவனுக்கு பதில் சொல்ல முடியாத நிலையே.
“வாழ வேண்டிய வயசு.... சின்னப் பையன்... என்ன ஒரு இருபது, இருவத்தஞ்சு வயசு இருக்குமா? சினிமாவில் அவ்வளவு சாதிக்கறான், அவனோட திறமையை அதில் காட்டாமல், இப்போ யார்கிட்டே அவனோட ஆண்மையை நிரூபிக்கணுமாம்? அதுவும் இப்படி...?” மருத்துவர் கோபமாகவே கேட்டார்.
“அது டாக்டர்...” அவரால் எப்படி சொல்ல முடியும்?
“எதுவுமே முறையா செஞ்சால் பிரச்சனை இல்லை... சப்போஸ் அவருக்கு செக்ஸ்ல பிரச்சனைன்னா, ஒரு நல்ல டாக்டர்ட்ட போய் கைடன்ஸ் வாங்கலாமே... சின்னப் பையன்...” அவனது அந்த இளம் வயது, அவரை அவ்வளவு கவலை கொள்ளச் செய்தது.
“நான் அவன்கிட்டே சொல்றேன் டாக்டர்... இப்போ அவரை நாங்க கூட்டி போகலாமா? ஏதாவது மருந்து?” கேட்கலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்திலேயே கேட்டார்.
இன்னும் இருபத்திநாலு மணி நேரத்துக்கு, அவருக்கு எந்த மருந்து கொடுத்தாலும் அது வேலை செய்யாது. நான் கொடுக்கற மருந்தை நாளைக்கு தண்ணியில் கலந்து குடுங்க. இனிமேல் அவர் அந்த மாத்திரை பக்கமே போகக் கூடாது... பார்த்துக்கோங்க...” அவர் அழுத்திச் சொல்ல, தலையை அசைத்தார்.
‘நான் சொல்லி அவன் கேட்க... சரிதான்... அவனைப் பெத்தவங்ககிட்டே வேண்ணா சொல்வோமா?’ நினைத்தவர், உடனே அந்த யோசனையைக் கைவிட்டார்.
“நீங்க அவன்கிட்டே சொல்லிட்டீங்களா டாக்டர்?” பிறகு அந்த வேலை வேறு தன் தலையில் விடிந்துவிடுமோ என்ற பயம்வேறு அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
“அதெல்லாம் அவர் கண் முழிச்ச உடனேயே சொல்லியாச்சு...” அவர் சொல்ல,
‘அப்படின்னா இனிமேல் அது அவன் பாடு...’ எண்ணியவர், அத்தனை ஆசுவாசமாக உணர்ந்தார். விஷ்வாவின் கோபமும், செயல்பாடுகளும் அவருக்குத் தெரியுமே, அப்படி இருக்கையில் ரிஸ்க் எடுக்க அவர் தயாராக இருக்கவில்லை.
“நான் இப்போ அவனை அழைச்சுட்டு போகவா?”.
“ம்... கூட்டி போங்க... ஒரு ரெண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட்ல அவரை இருக்கச் சொல்லி இருக்கேன்... அதை மட்டும் பார்த்துக்கோங்க” அவர் சொல்லவே, விஷ்வாவை நோக்கிச் சென்றார்.
“விஷ்வா... போகலாம்...” வாசுதேவன், அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகள், அவனது பர்ஸ்... வாட்ச் என அனைத்தையும் எடுத்துக் கொள்ள, அவரை ஏறிட்டு பார்க்கவே அத்தனை தயங்கினான்.
‘டாக்டருக்கு தெரியவந்த விஷயத்தை இவர்கிட்டே சொல்லி இருப்பார் தானே... வயாகரா...’ அவன் யோசனையைக் கலைத்தது வாசுதேவனின் குரல்.
“விஷ்வா... செருப்பை போட்டுக்கோங்க... வீல்சேர்ல போகலாம்...” அவர் சொல்லிக் கொண்டிருக்க, தன் ஷூ எப்படி செருப்பாக உருமாறியது என்ற யோசனையோடு அவர் பின்னால் வீல் சேரில் சென்றான்.
மற்ற நேரமாக இருந்திருந்தால், ‘நடந்தே வருகிறேன்’ என முறுக்கி இருப்பான். இப்பொழுது தான் செய்துவைத்த செய்கையில் தாக்கம் அவனை அவரிடம் வாதாட விடவில்லை. வழக்கமாக அட்வைஸ் என துவங்கும் அவர், எதையும் கேட்டுக் கொள்ளாதது வேறு அவனுக்கு உறுத்தலாக இருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அவன் நினைத்தாலும், அவனது வேலை அவனை அனுமதிக்க வேண்டுமே... ஒருநாள் ஓய்விலேயே, வேலைகள் மலைபோல் தேங்க, மறுநாளே தன் கணினியின் முன்னால் அமர்ந்துவிட்டான்.
“விஷ்வா... இன்னும் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு...” வாசுதேவன் துவங்க,
“நான் பார்த்துக்கறேன்... மெடிசின் மட்டும் குடுங்க...” அந்த குரலே, என்னிடம் எதையும் பேசாதே என அவரை எச்சரிக்க, தன் வாயை பசைபோட்டு இறுக ஒட்டிக் கொண்டார்.
அடுத்த வாரத்திலேயே நிக்கி அவன் வீட்டுக்கு வர, அவன் அந்த மாத்திரையை மறுக்கவே, அவளது பிடிவாத குணம் கண்டு திகைத்துப் போனான்.
“அந்த மாத்திரை இல்லன்னா உங்களால் எதுவுமே ஒழுங்கா ‘செய்ய’ முடியாது. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா? இந்த ஒரு முறை மட்டும்... பிளீஸ்...” அவளது கெஞ்சலுக்கு முன்னால், அவனது மறுப்புகள் செல்லாக்காசாகிப் போக, அவன் அவளுக்கு உடன்பட்டிருந்தான்.