• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 23.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
பகுதி – 23.

விஷ்வா, தன் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்தவன், அடுத்ததாக எந்த வேலையையும் எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ விதமான கோரிக்கைகள், கெஞ்சல்கள், மிரட்டலுக்கு கூட அடிபணியாமல், பிடிவாதமாக நின்று சாதித்தான்.

ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்திருந்தவரிடம் கணக்கை முடித்தவன், வீட்டை முடிக்கப் போகையில், அதை எல்லாம் வேதாந்த் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டார்’ என்ற பதில் வரவே, அமைதியாக திரும்பிவிட்டான்.

தன் ஸ்டுடியோவுக்கு வந்தவன், தான் வேலை செய்த இடத்தை, சிஸ்டங்களை என கைகளால் வருடி, பார்வையால் நிறைத்து என நின்றிருக்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவனுக்கு கண்கள் கலங்கியது.

விஷ்வாவுக்கு இதுவரை நடந்தவை எல்லாம் கனவுபோல் இருந்தது. அந்த இடத்தில் அவன் செலவழித்த பத்து வருடங்கள்... பத்தொன்பது வயது துவங்கி, இருபத்தெட்டு வயது வரைக்கும் அவனோடான வாழ்க்கையில் பின்னைப் பிணைந்த இடம் அது.

‘வாழ்க்கையில் என்னவாகப் போகிறோம்?’ என எண்ணிக் கொண்டிருந்த அவனை, ‘இதுதான் உன் அடையாளம்’ என காட்டிய இடம். பணத்தை கணக்கு பார்த்து செலவழித்தது போய், அந்த பணத்தை கணக்கு பார்க்கவே முடியாத அளவுக்கு நேரமும் இல்லாமல், பொறுமையும் இல்லாமல் ஓடிய காலங்கள்.

‘எல்லாம் இதற்குத்தானா? உடலும் மனமும் கூட மொத்தமாக ஓடிக் களைத்தது, இப்படி நொடியில் அணைந்து போகவா?’ அதை நினைக்கையிலேயே மனம் பாரமாகிப் போனது.

அவன் அப்படியே நின்றுகொண்டிருக்க, “தம்பி...?” அவனைக் கலைத்தார் வாசுதேவன்.

முன்னர் ‘தம்பி’ என அழைத்தாலே, ‘பெயரைச் சொல்லி கூப்பிடுங்க...’ என கத்தும் அவன், இன்று அமைதியாக அவரைத் திரும்பி பார்க்க, அவருக்கு அத்தனை பாவமாக இருந்தது.

அவன் முகத்தில் மொத்தமாக படர்ந்திருந்த தாடியும், மீசையும் ட்ரிம் கூட செய்யப்படாமல் அடர்ந்திருக்க, ஆளே அடையாளம் தெரியாமல் போயிருந்தான்.

“சொல்லுங்க சார்...” அந்த இடத்தை விட்டு பிரியா முடியாத ஏக்கம் அவன் குரலில் தெறிக்க, அவனை தோளோடு அணைத்து ஆறுதல் சொல்ல அவரது கரங்கள் பரபரத்தது.

ஆனால் அப்படி எதையும் செய்ய முடியாமல் திணறியவர், “இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படியே நிப்பீங்க? வீட்டுக்குப் போங்க, ரெஸ்ட் எடுங்க... மிச்சமிருக்க உங்களோட நாட்களையாவது உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருங்க...” அவர் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.

அந்த வீடு அவனுக்கு அந்நியமாகிப்போய் வருடங்கள் பல கடந்துவிட்டது என எண்ணியவன் அதை வெளியே சொல்லவில்லை.

“ம்...” அவன் சோர்வாக குரல் கொடுக்க,

“இந்த உலகத்தில் நம்மளைப் பெத்தவங்களை விட யாருமே சரியா புரிஞ்சுக்க மாட்டாங்க தம்பி. நீங்க எந்த நேரம் போனாலும், எப்படிப் போனாலும் அவங்களுக்கு அரவணைக்க மட்டும்தான் தெரியும்” அவனது எண்ணவோட்டம் புரிந்தாற்போல் அவர் சொல்ல, இப்பொழுது அவன் இதழ்களில் கண்ணுக்கு எட்டாத புன்னகை.

“உண்மைதான்...” சொன்னவன், தன் அலைபேசியில் வாரம் தவறாமல் வரும் தாயின் அழைப்பையும், தம்பியின் அழைப்பையும் எண்ணிக் கொண்டான்.

“அவங்ககிட்டே மனசுவிட்டு பேசுங்க தம்பி... எல்லாத்தையும் உங்களுக்குள்ளே போட்டு அழுத்தாதீங்க...” இன்றுவரைக்குமே அவனுக்கு இருக்கும் பிரச்னையை அவர்களிடம் அவன் சொல்லாமல் போயிருக்கவே அவனிடம் சொன்னார்.

“எதுக்கு சார்... விடுங்க...” அவன் சோர்வாக சொல்ல,

“ஐயோ தம்பி... அப்படி சொல்லாதீங்க... இந்த ஒரு விஷயத்திலேயாவது நான் சொல்றதைக் கேளுங்க” அவர் சொல்லவே, அரை மனதாக தலையை அசைத்தான்.

“அப்போ நான்... கிளம்பறேன்... என் முடிவெல்லாம் உங்களுக்கு தெரியவருமான்னு தெரியலை” அவன் சொல்ல, அத்தனை நேரமாக இருந்த தடையைத் தகர்த்து, அவனை இறுக தழுவி இருந்தார்.

அவர் கண்கள் கலங்கி கண்ணீர் வழிய, முடிந்த அளவு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவர், “இருக்கற கொஞ்ச நாளையாவது உங்களுக்கு புடிச்ச மாதிரி, நீங்க இருக்கணும்னு ஆசைப்பட்ட மாதிரி சந்தோஷமா வாழப் பாருங்க தம்பி...” ‘நீங்க நல்ல ஆயிசோட இருக்கணும்’ சொல்ல வந்ததை அவர் சொல்லவில்லை.

அவர் தன்னை அணைத்துக் கொள்ளவே, தானும் அவரை அணைத்தவன், “இதெல்லாம் நானே தேடிகிட்டதுதான் சார்... சாட்டையை சுழட்டின மாதிரி, நிமிஷத்தில் எல்லாம் மாறிப் போச்சு... முதலும் சரி, முடிவும் சரி” சொன்னவன், முருகனைப் பார்க்க, வேகமாக அவன் அருகே வந்தான்.

அவரை விட்டு விலகி நின்றவன், “என்னடா முருகா, சினிமாவில் முகம் தெரிஞ்சே ஆகணுமா? இல்லன்னா ஊருக்கு போய், ஏதாவது தொழில் பண்ணி பிழைக்கற ஐடியா இருக்கா?” அவனிடம் கேட்க, அவனுக்கு எதுவும் புரியாத நிலைதான்.

“சார்... இவனுக்கு என்ன வேணும்னு கொஞ்சம் பார்த்து செய்ங்க” அவன் சொல்ல,

“அண்ணே... நான் ஊருக்கே போறேண்ணே... சினிமாவில் கூட்டத்துல அடியாளா அடி வாங்க இதுக்கு மேல தெம்பில்லை. அங்கே போய், எங்க அப்பாவோட மளிகைக்கடையையே பார்த்துக்கறேன்...” அவன் சொல்ல, தன் சட்டைப் பையில் இருந்து செக்கை எடுத்து அவன் கையில் வாசுதேவனின் கரத்தில் கொடுத்தான்.

“சார்... இவனோட ஊருக்குப் போய், இவன் மளிகைக்கடையை கொஞ்சம் பெருசா மாத்திக் கொடுங்க” அவன் சொல்ல, அதில் இருந்த தொகையைப் பார்த்தவருக்கு கொஞ்சம் ஆச்சரியமே.

“அண்ணே...” முருகன் அவன் காலிலேயே விழ, அவனைத் தடுத்து தாங்கிப் பிடித்தான்.

“இதை ஏன் உன்கிட்ட தரலை தெரியுமா? உன்னை நம்ப முடியாது, அதான்... ஊரோட போய், உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ முருகா. இந்த கனவு உலகம் உனக்கு செட் ஆகாது, வேண்டாம்” சொன்னவன், ஒரு வழியாக அங்கே இருந்து பிரிய மனமின்றி பிரிந்து சென்றான்.

தன் அலைபேசியில் இருந்த சிம்மை கழட்டியவன், ஸ்டுடியோவுக்கு வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் வீசினான். அதற்குமேலே அதன் அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. அரை மனதாக தன் காரை கிளப்பிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

அவன் வீட்டுக்குச் செல்கையில், அவனது தம்பி வேலைக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருக்க, தந்தையோ சாப்பாட்டு மேஜையின் அருகே, தரையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்.

அவனது கார் சத்தம் வெளியே கேட்கையிலேயே அவர்கள் அனைவரின் கவனமும் வாசலுக்குச் செல்ல, நெடுநாள் தாடியும், மீசையுமாக வந்து நின்ற அவனை, இப்படி ஒரு கோலத்தில் அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.

“எய்யா... சாமி... வாய்யா... என்ன கோலம் இது? வா... வந்து உக்காரு... அறிவு, அந்த ஃபேனைப் போட்டு விடு...” தாய் படபடக்க, தாயின் கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டான்.

“அம்மா...” அழைத்தவனுக்கு, அத்தனை மாதங்களாக கட்டி வைத்திருந்த சோகம் எல்லாம் பொங்கி வழிய, தாயின் மடியில் படுத்து, கதறி அழத் துவங்கினான்.

“அண்ணே... என்னண்ணே... என்ன ஆச்சு? வேலையில் ஏதும் பிரச்சனையா? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். அது ஒண்ணுதான் வேலையா? ஆயிரம் வேலை இருக்கு...” அறிவு அவன் காலுக்கு அருகே அமர்ந்தவன், ஆறுதல் சொல்ல, விஷ்வாவோ தன் அழுகையைத் தொடர்ந்தான்.

அவனது அழுகை நிற்காமல் போகவே, வேகமாக தன் அலைபேசியை எடுத்தவன், வாசுதேவனுக்கு அழைத்தவாறே வீட்டுக்கு வெளியே செல்ல, அவரோடு பேசியவனுக்கு, அவர் சொன்னவற்றைக் கேட்டு, தகர்ந்துபோய் அப்படியே படிக்கட்டில் அமர்ந்துவிட்டான்.

முதல் வேலையாக தன் வேலைக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்தவன், ஒரு மெயிலை அனுப்பிவிட்டு, அவனும் கண்ணீர் விட்டு அழுதான்.

ஆயிரம் இருந்தாலும், விஷ்வாவின்மீது பெரும் கோபமே இருந்தாலும், தன் அண்ணனைக் கண்டு அவனுக்கு ஒரு பிரமிப்பு இருந்தது, பெரும் பாசம் இருந்தது. அப்படி இருக்கையில், ‘அவனுக்கா இப்படி ஒரு நிலைமை?’ என நினைக்க நினைக்க மனம் நொந்து போனான்.

அவன் அங்கே அப்படி அமர்ந்திருக்க, அவனது தந்தை கோட்டைச்சாமி வந்து அவனது தோளைத் தொட்டார்.

“அப்பா...” அழைத்தவன் வேகமாக தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“என்ன அறிவு...? அவர் என்ன சொன்னார்?” தகப்பன் கேட்க, அவரிடம் சொல்ல அவனுக்கு வாய் வரவே இல்லை.

“எதுவும் இல்லப்பா...?” அவன் சமாளிக்க முயன்றாலும், அவனது குரலும், முகமும் அதற்கு ஒத்துழைக்க மறுத்தது.

“உண்மையைச் சொல் அறிவு...” அவர் சிறு அழுத்தமாக குரல் கொடுக்கவே, தற்போது இருக்கும் விஷ்வாவின் உடல்நிலை முதல், அவன் நேசித்த பெண் அவனை விட்டுச் சென்றுவிட்டாளாம் என்பது வரைக்கும் அவன் சொல்ல, கோட்டைச்சாமியும் கலங்கி நின்றிருந்தார்.

“என்ன அறிவு சொல்ற? என் குலசாமிக்கா இப்படி ஒரு நிலைமை? உன் அம்மாவுக்குத் தெரிஞ்சா, அவ உசுரையே விட்டுடுவாளே...” அவர் பதற, அவனுக்குமே அந்த கவலை தொற்றிக் கொண்டது.

அந்த அவனது நிலையை ஜீரணிக்கவே ஆண்கள் இருவருக்கும் ஒரு நாள் ஆக, இரண்டாம்நாள் காலையில் அறிவு தன் அண்ணனைத் தேடிச் சென்றான்.

“அறிவு, வேலைக்குப் போகல?” படுக்கையில் எழுந்து அமர்ந்தவன் கேட்க, அவனது அறையின் திரைச் சீலைகள் அனைத்தையும் ஒதுக்கி, அறைக்குள் வெளிச்சம் வர வைத்தான்.

“ஒரு வாரம் லீவ் போட்டிருக்கேன்... எல்லாம் எனக்குத் தெரியும்ண்ணா...” அவன் சொல்ல, ‘ஓ...’ என்னும் பாவனையைக் கொடுத்தவன், அதற்கு மேலே என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியானான்.

“இந்த அண்ணா மேல இன்னும் கோபத்துலதான் இருக்கறியா அறிவு?” அவன் சிறு சங்கடமாக வினவ, சின்னவனோ பதறினான்.

“என்னண்ணா பேசற? உன்மேல கோபமா? அதெல்லாம் இல்லை... நீ எதுக்கு இப்படி இருக்கற? வா... வந்து இந்த தாடி, மீசையை எல்லாம் எடு, இது உனக்கு நல்லாவே இல்ல. வா...” அவனைப் பிடிவாதமாக அவன் எழுப்ப, தம்பியின் முகம் பார்த்தான்.

“என்னண்ணா? என்னன்னு சொல்லு” அவன் பார்வையை உணர்ந்து அவனிடம் கேட்டான்.

“இது... எல்லாருக்கும் தெரியுமா?”.

“அம்மாவுக்கு இன்னும் தெரியாது... தெரிஞ்சா தாங்க மாட்டாங்க. இது உண்மையா இருக்காதுண்ணா... நாம வேற நல்ல பெரிய ஹாஸ்பிட்டலா பார்க்கலாம்” அவனுக்கு ஒன்று என்பதை, அவனால் இன்னும் ஏற்க முடியவில்லை.

“கீழே போய்... கார் டிக்கியில் ஒரு கவர் இருக்கும், அதை எடுத்துட்டு வா” அவன் சொல்ல, ‘அது இப்போ எதுக்கு?’ எனப் பார்த்தான்.

ஆனாலும், தன் அண்ணன் சொன்னதை அவன் தட்டாமல் செய்ய, கீழே போய் அதைக் கொண்டு வந்தவனிடம், அதைப் பிரிக்கச் சொல்ல, உள்ளே இருந்து நான்கு ஐந்து ஃபயில்கள், அதுவும் வேறு வேறு மருத்துவமனையின் பெயர்களைத் தாங்கி இருக்க, அறிவின் கண்களில் கண்ணீர்.

“அண்ணா...” அவன் குரல் நடுங்க, முகம் கலங்க தன் அண்ணனைப் பார்க்க,

“ஒன்னுக்கு, ஐந்து ஒப்பீனியன்... ஹாஸ்பிடல் பாத்தாச்சு. ரிசல்ட் என்னவோ ஒண்ணுதான்...” இன்னதென விளங்காத ஒரு குரலில் அவன் சொல்ல, அறிவால் அதை ஏற்க முடியவில்லை.

“இது சரியாகாதாண்ணா...?” குரலில் அப்படி ஒரு ஏக்கம், பயம்.

“இல்லன்னுதான் சொல்றாங்க...” சாதாரணமாக சொல்ல முயன்றான்.

“இல்ல, நான் ஒத்துக்க மாட்டேன்... நாம இன்னைக்கு ஹாஸ்பிடல் போய், மறுபடியும் கேட்கலாம். இப்போ நீ வா...” சொன்னவன், அவனுடனே இருந்து, அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தான். இந்த தம்பியை என்னவெல்லாம் சொல்லி காயப்படுத்தினான். ஆனால் இன்று தனக்காக தன் தம்பி படும் துன்பம், கவலை... தன்னுடனே அவன் இருப்பது என அனைத்தும் அவனை அசைத்துதான் போட்டது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
‘அனைத்து ஓட்டமும் இந்த குடும்பத்துக்காகத்தானே. இவர்களை விட்டு விலகி, அந்த சாக்கடையில் புரண்டு இப்பொழுது என் முடிவையும் நானே தேடிக் கொண்டேனே’ எண்ணியவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அவர்கள் இருவரும் கீழே இறங்கி வருகையில், கோட்டைச்சாமி ஒரு பெரிய மீனோடு வீட்டுக்கு வர, “என்னப்பா மீன் ரொம்ப பெருசா இருக்கு?” விஷ்வா அவரிடம் கேட்க, நின்று மகனை ஒரு நிமிடம் அசையாமல் பார்த்தார்.

“கொஞ்சம் விலை கம்மியா வந்துச்சுப்பா அதான்...” சொன்னவர் அதை சுத்தம் செய்யப் போக, தாய் அவனது கரத்தில் டீயைக் கொடுத்தார். அந்த தாய்க்கு மகன் இப்படி நிதானமாக இருப்பது கொள்ளை சந்தோஷத்தை நிம்மதியைக் கொடுத்தது.

“என் சாமியை இப்படி வீட்டில் பார்த்து எத்தனை வருஷமாச்சு” தாய் சொல்ல அவனுக்கு தொண்டையை அடைத்தது.

‘குடும்பம் தாங்கும்’ என வாசுதேவன் சொன்னது எத்தனை உண்மை எனப் புரிந்தது. இவர்கள் மட்டும் இப்பொழுது அரவணைக்கவில்லை என்றால் என்ன ஆகி இருப்பான்? நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது.

“உனக்கு மீன் புடிக்குமேன்னுதான் வாங்கிட்டு வந்திருக்கார்” அறிவு சொல்ல, அது அவனுக்கும் புரிந்தது.

அன்று மதிய உணவை அவன் ரசித்து உண்ண, பெற்றவர்களின் அன்பில் நெஞ்சம் நனைந்தது. “உங்க எல்லார்கிட்டேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நான் அப்படி எல்லாம் பேசி, நடந்துட்டு இருக்க கூடாது. என்னை மன்னிச்சிடுங்க...” அவன் திடுமென மன்னிப்பை வேண்ட, அனைவரும் சற்று பதறினார்கள்.

“இப்போ எதுக்குப்பா மன்னிப்பெல்லாம்...? நீ அப்படி என்ன பெருசா பண்ணிட்ட? விடு... நீ இங்க வந்ததே எங்களுக்குப் போதும். நிம்மதியா சாப்பிடுப்பா” தாய் அவன் தலை கோத, அந்த அன்பில் கட்டுண்டான்.

விஷ்வா, தன் தாயுடனே இருக்க, அவருக்கும் தன் மகனை சீராட்டுவதும், மடியில் படுக்க வைத்து தலை கோதுவதும் என தாங்கிக் கொண்டார்.

மூன்றாம் நாள் இறுதியில், “எய்யா சாமி... அங்கிட்டு ஏதும் பிரச்சனையாய்யா?” தாய் அவனிடம் மெதுவாக வினவ, மறுப்பாக தலை அசைத்தான்.

“அந்த வேலை ரொம்ப டென்ஷனா இருக்கும்மா... அதான் அதை விட்டுட்டேன். ஒரு... ஒரு மாசம் ரெஸ்ட் எடுத்த பிறகு, வேற என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம். ஊர்ல கொஞ்சம் நிலத்தை வாங்கி, விவசாயம் கூட பண்ணலாம்...” அவன் சொல்ல,

“அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது சாமி. நீ அந்த கம்பியூட்டர் பொட்டியிலேயே வேலை பாரு...” உடல் உழைப்பு எல்லாம் அவனுக்கு சரிப்பட்டு வராது என அந்த தாய் கவலைப்படுவது அவனுக்குப் புரிந்தது.

ஒரு வாரம் கடந்திருக்க, அன்று அவனது அறையை சுத்தம் செய்யப் போன வடிவு, அவன் அறையில் இருந்த மருத்துவமனை ஃபயில்களைப் பார்த்துவிட்டு பதறிப் போனார்.

உடனடியாக கீழே வந்து, அவனிடம் அதைப்பற்றி கேட்க, அங்கே இருந்த யார், என்னபதில் சொல்வது எனத் தெரியாமல் திணறிப் போனார்கள்.

அறிவுதான் சற்று பொறுமையாக, நிதானமாக, அவரைத் தேற்றி, தன் அண்ணனின் உடல்நிலையைப் பற்றிச் சொல்ல, அவரோ மகனைக் கட்டிக்கொண்டு அழுது கரைந்தார்.

“இல்ல... நான் நம்ப மாட்டேன்... என் புள்ளை நூறு ஆயிசு நல்லா இருப்பான். உடனே ஹாஸ்பிடல் போலாம், வாங்க...” அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அவன் முதல்முறையாக சென்ற அந்த மருத்துவமனைக்கு, குடும்பத்தோடு சென்றார்கள்.

“உள்ளே பேஷன்ட் கூட ஒரு ஆள்தான் போகலாம்...” அந்த செவிலி தடுத்ததை எல்லாம் கேட்காமல், பிடிவாதமாக அவர்கள் உள்ளே செல்ல,

“டாக்டர், நான் சொல்லச் சொல்ல கேக்காமல் உள்ளே வந்துட்டாங்க” அந்த செவிலி பயத்தில் திக்கித் திணறினாள்.

“சரி, நீங்க போங்க... நான் பார்த்துக்கறேன்” சொன்னவர், விஷ்வாவின் பக்கம் திரும்பினார்.

“டாக்டர் ஐயா... என் புள்ளைக்கு என்னன்னு கொஞ்சம் நல்லா பாருங்க. இவங்க சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் இருக்காது. நீங்க மறுபடியும் பாருங்கய்யா” வடிவு கதற,

“அம்மா, கொஞ்சம் பொறுமையா இருங்க...” அறிவு அவரை அடக்கினான்.

“என்ன விஷ்வா...? நான் கொடுத்த மெடிசின் எல்லாம் கண்டினியூ பண்றீங்களா? இப்போ ஏதும் கஷ்டமா இருக்கா?” அவனிடம் கேட்டவர், அவன் இமைகளைக் கீழே இழுத்து பரிசோதித்தார்.

“சில நேரம் திடும்னு பயங்கர தலைவலி இருக்கு டாக்டர்... மற்றபடி...” சொல்லிக் கொண்டே வந்தவன், தன் குடும்பத்தினரைத் திரும்பிப் பார்க்க,

“நீங்க எல்லாம் கொஞ்சம் வெளியே இருங்க... நான் இவரை செக் பண்ணிட்டு கூப்பிடறேன்” அவர் சொல்ல, வடிவோ பிடிவாதமாக மறுத்தார்.

அவரை கட்டாயப்படுத்தி, தன் தகப்பனையும் வெளியே அனுப்பிய விஷ்வாவால், அறிவை அப்படி வெளியே அனுப்ப முடியவில்லை.

“நான் அமைதியா இருக்கேண்ணே...” அவன் கெஞ்ச, தன்னை தனியே விடப் பிடிக்காத அவனது அந்த செய்கையில், சற்று அவமானமாக கூட உணர்ந்தான்.

“ம்... சரி...” அவனுக்கு அனுமதி வழங்கியவன், மருத்துவரிடம் திரும்பினான்.

“அது... திடீர்ன்னு எந்த கலருமே தெரிய மாட்டேங்குது டாக்டர். ஒரே பிளாக் அண்ட் ஒயிட்டா தெரியுது...” அவன் சொல்லச் சொல்ல, அனைத்தையும் குறித்துக் கொண்டார்.

“வேற ஏதாவது கஷ்டம்?” அவனிடம் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.

“நாம இன்னொரு ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம்...” சொன்னவர் அவனை அழைத்துக்கொண்டு அங்கே விரைந்தார்.

எமர்ஜென்சி புக்கிங் ஏற்கனவே இருக்க, அவர்கள் போனவுடன் அவனது உடையை மாற்றி, அந்த பெரிய மெஷினுக்குள் அவனை அனுப்ப, ஒரு தடுப்புக்குப் பின்னால் இருந்து, ரிப்போர்ட் கொடுக்கும் மருத்துவரும், அவனது மருத்துவரும் அமர்ந்து அவனது டியூமரின் நிலையை பரிசோதித்தார்கள்.

அதன் நிறம் சிவப்பு வர்ணத்தில் ஒளிர்ந்து, அதன் இருப்பையும், இடத்தையும் அவர்களுக்கு காட்ட, இரு மருத்துவரும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.

அனைத்தும் அங்கே முடிய, “நாளைக்கு வாங்க... நாம பேசுவோம்...” அவர்களை அனுப்பினார்.

அன்று வீட்டுக்கு வந்த வடிவு, ஒரு பொட்டு கூட உறங்கவில்லை. தன் மகனது அறையில், அவனோடு சென்று படுக்க நிற்க, அறிவுதான் முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தினான்.

“அம்மா, அண்ணாவுக்கு இப்போ தேவை கொஞ்சம் நிம்மதி... அவர் தன்னோட உடல்நிலையை மறக்கணும். அப்போதான் அவரால் நிம்மதியா இருக்க முடியும். ஆனா, நீங்க அங்கே போனா, அவனை நிம்மதியா இருக்க விட மாட்டீங்க, வேண்டாம்... நான் அவனோட இருக்கேன்” சொன்னவன், தன் அண்ணனோடு சென்று தங்கினான்.

விஷ்வா உறங்கும் வரைக்கும், அவனோடு அமர்ந்து பழைய கதைகள், அவன் இல்லாத பொழுது அங்கே நடந்த சுவாரசியமான விஷயங்கள், உறவினர்களின் வருகை, அவர்கள் வீட்டில் நடந்த விசேஷங்கள் என அனைத்தையும் அவன் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.

‘அறிவுக்கும் நாளைய அவனது பரிசோதனை முடிவுகள் எப்படி இருக்கும்?’ என்ற யோசனை உள்ளுக்குள் ஓடினாலும், அதை முடிந்த அளவுக்கு அடக்கி வைத்தான்.

விஷ்வாவுக்கோ, தன் சொர்க்கத்தை... நிம்மதியை... சந்தோஷத்தை எல்லாம் வீட்டில் விட்டுவிட்டு, அதை வெளியே தேடி அலைந்து இருக்கிறோமே?’ என உள்ளுக்குள் மருகினான்.

தன் நிலையை எண்ணுகையில், ‘நிக்கி’யின் நினைவுகள் பின்னுக்கு சென்றிருக்க, அவளிடம் தான் ஏமாந்த வலியும், வேதனையும், அவள் செய்த துரோகமும் நெஞ்சை அறுத்தது. அதுவே அவளைக் கடந்து, மீண்டு செல்லவும் அவனுக்கு உதவியது என்பதுதான் உண்மை.

எப்படியோ ஒரு வழியாக அவன் உறங்கிப் போயிருக்க, அறிவும் தூங்கிப் போனான்.

மறுநாள் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல, மருத்துவரின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இருக்கவில்லை.

பெரியவர்களை வீட்டில் விட்டுவிட்டு, சிறியவர்கள் மட்டுமே வந்திருக்க, “எதுவா இருந்தாலும் சொல்லுங்க டாக்டர்... நான் சாகப்போறேங்கற விஷயத்துக்கும் மேல, பெருசா எதுவும் இருக்கப்போறது இல்லையே, சொல்லுங்க...” அவன் சொல்ல, இருக்கையில் இருந்து எழுந்தவர் அவனது தோளைத் தட்டினார்.

“அண்ணா, வா... நாம எதையும் கேட்க வேண்டாம்...” அந்த மருத்துவர் சொல்லப்போகும் விஷயம் பெரியது எனத் தோன்றவே, அதைக் கேட்கும் பொறுமை அறிவிடம் இருக்கவில்லை.

“அறிவு, உட்கார்...” விஷ்வா குரல்கொடுக்க, அமைதியாக அமர்ந்தான். ஆனாலும் அவன் முகத்தில் இருந்த கலக்கம் கொஞ்சமும் குறையவில்லை.

“மிஸ்டர் விஷ்வா... இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை... உங்களோட மூளையில் இருக்கும் கட்டி ரொம்ப வேகமா வளர்ந்துட்டு இருக்கு” அவர் அங்கே நிறுத்த, விஷ்வாவின் முகத்தில் இன்னதென புரியாத ஒரு பாவனை விரவியது.

“ஓ... எனக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு?” நிதானமாக, அமைதியாக கேட்டான் விஷ்வா.

“அண்ணே...” அவன் கேட்டது பொறுக்காமல் அறிவு மறுப்பாக குரல் கொடுத்தான்.

“தொண்ணூறு நாள்... அதுவும் நான் சொல்றது அதிகபட்சம்...” அவர் சொல்ல, அங்கே பெரும் அமைதி நிலவியது. அதை யாரும் கலைக்க முயலவில்லை.

தான் சொன்னதை அவன் ஜீரணித்துக்கொள்ள போதிய அவகாசம் கொடுத்த மருத்துவர், தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

“நான் எப்படி சாவேன்?” விஷ்வா வெறித்த பார்வையாக வினவ, அறிவுக்கு அவன் கேட்க வருவது புரியவில்லை.

“உங்களுக்கு தொடர்ந்து தலைவலி, நிறம் தெரியாமல் போவது, உங்களால் நேராக நடக்க முடியாமல், பேலஸ் தவறிப் போறது இப்படி இதெல்லாம் அடிக்கடி நடந்து, அதுவே தொடர்ந்தால்... உங்களுக்கான நாள் நெருங்கிடுச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்.

“சில வேளை மயக்கம்... அதுவும் நாட்கள் நீண்டு போனால், அதுதான் அறிகுறி... பெயின் கில்லர் தர்றேன்... வலிக்கு நீங்க அதை எடுத்துக்கலாம்” அவர் சொல்ல, அவன் இதழ்களில் விரக்தி புன்னகை.

“டாக்டர், ஆப்பரேஷன் பண்ணிப் பார்க்கலாமா?” அறிவு கேட்க,

“அதை எல்லாம் யோசிக்காமல் இருப்போமா? அந்த கட்டி மூளை நரம்போட பின்னி பிணைஞ்சு போயிருக்கு. நாம கை வைத்தாலே, இவர் பேரலைஸ் ஆகும் வாய்ப்புதான் அதிகம். அதைவிட, கட்டி எடுக்க கூடிய இடத்தில் இல்லை” அவர் முடிவே இதுதான் எனச் சொல்ல, அந்த உண்மையை ஏற்க கடினமாக இருந்தது.

“ஏதாவது பண்ணுங்க டாக்டர்... எங்க அண்ணாவை எப்படியாவது காப்பாத்திக் கொடுங்க. அவரோட மொத்த சொத்தையும் வித்தாலும் பரவாயில்லை... அவரை மட்டும் எங்களுக்கு திருப்பி கொடுத்துடுங்க” அறிவு கதறி அழ, விஷ்வாவும் அழுதான்.

தொடரும்......
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
அவன் குடும்பத்துல போய் சேர்ந்ததே மகிழ்ச்சி .
அவனின் குடும்மத்தினர் எப்படி இதை எதிர்கொள்ள போகிறாங்களோ தெரியல ...
ஆமாம் யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு வந்து இப்போ இங்கே இருக்கானா...?
( குடும்பத்தாருக்கு மனக்கஷ்டத்தை கொடுக்க விரும்பாமல் இங்கு வந்து இருக்கலாம் )
நிஐமா இந்த எபியை படிக்க முடியல ...😪
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
அவன் குடும்பத்துல போய் சேர்ந்ததே மகிழ்ச்சி .
அவனின் குடும்மத்தினர் எப்படி இதை எதிர்கொள்ள போகிறாங்களோ தெரியல ...
ஆமாம் யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு வந்து இப்போ இங்கே இருக்கானா...?
( குடும்பத்தாருக்கு மனக்கஷ்டத்தை கொடுக்க விரும்பாமல் இங்கு வந்து இருக்கலாம் )
நிஐமா இந்த எபியை படிக்க முடியல ...😪

விஷ்வாவுக்கு இப்பொழுதுதான் குடும்பத்தின் அருமை புரியுது. காலம் கடந்த புரிதலால் யாருக்கு என்ன பலன்?

உங்க கேள்விக்கான பதில் வரும் பதிவுகளில்....
 
  • Love
Reactions: Thani

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
விஷ்வா நிலைமைய நினைச்சா ரொம்பவே பாவம் இருக்கு 🥲🥲🥲🥲

அவன் விதியை யார் என்ன செய்ய முடியும்?

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
அவனுக்கு தெரிந்து புரிந்து அழுகுறான் குடும்பம் தெரிந்து புரியாத அழுகை

எல்லோருக்கும் கஷ்டம் தானே..... அவன்மேல் உண்மையான நேசம் கொண்டவர்கள் அவர்கள்.
 

gomathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 16, 2022
128
23
28
chennai
Very painful epi, parentsku thangalukku munney, pillaiyin maranam enbathu kodumai
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
318
26
28
Hosur
Kalam kadanthupochu hoom
Very sad