பகுதி – 27.
ஆகாஷ், பூமிகாவிடம் என்ன சொன்னானோ? அடுத்த நாள் முதல், அவள் முகத்தில், கண்களில், மனதில் இருந்த கலக்கங்கள் விலகி ஓட, அவளால் முடியவில்லை என்ற பொழுதும் தன் வருத்தத்தையோ, பயத்தையோ அவள் வெளியே காட்டவே இல்லை.
அவளுக்குள் அந்த பயமோ, கலக்கமோ இருந்ததாகவும் தெரியவில்லை. அவளிடம் எப்பொழுதும் ஒரு ஆழ்ந்த அமைதியும், இளம் புன்னகையும் இதழில் பூத்திருக்க, அவனுடனே இருந்தாள்.
அன்று அவள் தோப்புக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்ல, அவளை தூக்கிக்கொண்டு அவன் நடந்தான்.
பூமிகாவால் சுத்தமாக, தனியாக நடக்க முடியவில்லை. அவளுக்கு அதிகபட்சம் ஒரு வாரம் எனச் சொல்லி இருக்க, அவளது வீட்டினர் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
அவர்கள் அனைவரின் முகங்களிலும் கவலை தெரிந்து கொண்டே இருக்க, “நீங்க எல்லாம் இப்படி வருத்தப்படறதா இருந்தா இங்கே இருக்காதீங்க. உங்களை எல்லாம் எனக்கு இப்படி பார்த்துட்டே சாக வேண்டாம்... நான் சந்தோஷமா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா?” அவள் இப்படி கேட்டிருக்க, முயன்று சாதாரணமாக நடமாடினார்கள்.
அவளைத் தூக்கிக்கொண்டு, அவன் வெளியே செல்வதைப் பார்த்த நித்யானந்தம், மறுத்து எதையோ சொல்லப் போனார். “அப்பா, அவங்களை விடுங்க...” அவர் சொல்ல, அமைதியாகி விட்டார்.
“என்னங்க... எங்கேயாவது ஒரு ஓரமா உக்காரலாம்...” அவள் சொல்ல, அவன் தன் பார்வையைச் சுழற்றினான்.
“அந்த தென்னை மரம்...” அவள் கை காட்ட, அதுவோ கிடைமட்டமாக போய், நேராக வளர்ந்திருந்தது.
“ஓ... உட்காரலாமே...” சொன்னவன், அங்கே அவளை அமரவைத்து, தானும் அவளோடு அமர்ந்தான்.
பூமிகா பேசினாலும், அவளால் சுத்தமாக பேச்சு வரவில்லை. அவளை பேசவே கூடாது என டாக்டர் சொல்லி இருக்க, “பேசாம இருந்தா சாக மாட்டேனா?” எனக் கேட்டு அவரது வாயை அடைத்திருந்தாள்.
இப்பொழுது இருபத்திநான்கு மணி நேரமும் அவள் அந்த ஆக்ஸிஜன் மாஸ்குடனே இருக்க, அவன் அருகே அமரவே, அதைக் கழட்டச் சொன்னாள்.
“கஷ்டமா இருந்தா சொல்லிடணும்...” என்ற கோரிக்கையோடு அவன் அதைச் செய்ய, அவனது டிஷர்ட்டைப் பற்றி அருகே இழுத்து, அவன் முகம் முழுக்க முத்தமிட்டாள். அவளை மென்மையாக வளைத்துக் கொண்டவன், அவள் செய்கைக்கு உடன்பட்டு அமர்ந்திருக்க, சில பல நிமிடங்கள் கடக்கவே அவள் விலகி அமர்ந்தாள்.
“அவ்வளவுதானா? நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேனே...” அவன் கண்களில் குறும்போடு சொல்ல, அவனைப் போலியாக முறைத்தாள்.
“விஸ்வாமித்திரர் எல்லாம் கட்டுக்கதைன்னு நான் நினைச்சேன்...” அவள் சொல்ல, பக்கென சிரித்து வைத்தான்.
“நான் அப்படி இல்லைன்னு இந்த நிமிஷம் கூட என்னால் ப்ரூவ் பண்ண முடியும்... ம்ச் ஆனா...” சொன்னவன், அவள் நெற்றியில் முட்டினான்.
“அதெல்லாம் சும்மா... நல்ல கல்லாட்டம் உட்காந்து இருக்கீங்க. கிஸ் பண்ணது ஒரு பொண்ணு, பொண்டாட்டின்னு எங்கேயுமே உருகக் காணோமே?” அதென்னவோ அவனது கட்டுப்பாடு அவளுக்கு ஒருவித சோர்வை அளித்தது.
“உள்ளுக்குள்ள உருவமாகி திணறிகிட்டு இருக்குன்னு சொன்னா உனக்குப் புரியுமா?” காற்றில் பறந்துவந்த ஒரு இலை, அவள் மடியில் வந்து விழ, அதை தன் கரத்தால் எடுத்தவாறே அவன் கேட்க, அவன் கன்னம் பற்றி, தன் முகம் காண வைத்தாள்.
“அப்படின்னா...?” அவளுக்கோ புரிந்தும் புரியாத ஒரு தடுமாற்றம்.
“அது எப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டேன்... முடிஞ்சா தெரிஞ்சுக்கோ..” சொன்னவன், அவளது கண்களை சந்திப்பதை தவிர்த்தான்.
தான் உணர்ச்சிவசப்படக் கூடாது என்பதில் அவள் கொள்ளை பிடிவாதமாக இருக்க, “உருவமாகறதுன்னா...?” அவளுக்கு அதைத் தெரிந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் எழுந்தது.
“அதை விடு... இந்த ட்ரெஸ் என்ன புதுசா? கலர் நல்லா இருக்கே...” அவன் பேச்சை மாற்றினான்.
‘இதை என்னன்னு தேனுகிட்டே கேட்கணும்’ மனதுக்குள் குறித்துக் கொண்டவள்,
“முதல்ல இது என்ன கலர்ன்னு சொல்லுங்க பார்ப்போம்...?” அவள் சவால்விட, அவனோ விழித்தான்.
“அய்யய்யோ... இந்த டாப்பிக்கை நான் எடுத்தே இருக்க கூடாது” அவன் அலற, அவளோ விடுவதாக இல்லை.
“பச்சை கலர்ல இருக்கற என் சூப்பை பார்த்துட்டு, இதென்ன சிவப்பு கலர்ல இருக்குன்னு கேட்டீங்க? அன்னைக்கு லைட் எல்லோ கலர்ல கேசரி பண்ணா, இதென்ன கலர்பொடி போடாமல் பண்ணி வச்சிருக்கீங்கன்னு கேட்கறீங்க? என்ன இதெல்லாம்?” சற்று சிணுங்கலாக கேட்டாள்.
“எனக்கு கலர் கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகும்னு சொன்னேனா இல்லையா? பிறகு இப்படி கேட்டா?” அவன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்ள, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
“சரி கேட்கலை... நான் இப்போ போட்டிருக்கறது என்ன கலர்ட்ரஸ்ன்னு மட்டும் சொல்லுங்க...” அவள் இதழ்களில் இளம் நகை பூத்தது.
“எல்லோ” “லைட் ப்ளூ” “ஆரஞ்சு” அவன் ஒவ்வொரு லைட் கலர்களையும் சொல்ல,
“ஹையோ போதும்... இது ஒயிட்... அதில் சின்ன ஊதா பூ இருக்கு... போங்க நீங்க, சும்மா விளையாடறீங்க தானே...” அவன் காலரை இறுக பற்றி அருகே இழுக்க, அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவன், அவள் இதழில் குட்டி முத்தம் வைத்து விலகினான்.
“ம்கும்... நான் அத்தனை முத்தம் குடுத்ததுக்கே இவ்வளவுதானா? நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்னு சொன்னீங்க... நீங்க என்னன்னா, கஞ்சூஸ் மாதிரி ஒண்ணே ஒண்ணு குடுக்கறீங்க?” அவள் குறைபட, அவளது சிகை கோதி, அவளது முகத்தை தன் நெஞ்சில் புதைத்தான்.
அவளும் வாகாக அவனோடு ஒட்டிக் கொள்ள, “விஸ்வாமித்திரர் இருக்கற மாதிரி, விஸ்வாமித்திரி மாதிரி நீ இருப்பியான்னு தெரியலையே. இல்லன்னா ஒன்னு என்ன... நூறு முத்தம் கொடுப்பேன்” அவன் அவள் காதுக்குள் சொல்ல, அவன் நெஞ்சில் குத்தினாள்.
“நான் அப்படி என்ன உருகிடுவேன்னு இவ்வளவு பயப்படறீங்க?” அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள், அவன் கண்களையே பார்த்திருந்தாள்.
“நீ என்னை ‘ஹேட்’ பண்ணா பரவாயில்லை, லவ் பண்றியே... அப்படின்னா, நான் கொஞ்சம் ‘லவ் மேக்கிங்’ ப்ராசஸ் பண்ண ட்ரை பண்ணாலும், நீ உடனே பல மடங்கு அதுக்கு எக்சைட் ஆவ. அது அவ்வளவு நல்லதில்லை.
“எனக்கும் உன் ஹார்ட்ல கிஸ் பண்ணணும்னு ரொம்ப ஆசை... ஆனா நீ தூங்கற நேரம் தவிர்த்து, என்னால் அதைச் செய்ய முடிஞ்சதே இல்லை. ரொம்ப பயமாத்தான் இருக்கு... இப்போ அதைச் செய்யவா?” அவன் கேட்க, என்ன தடுத்தாலும், அவள் இதயம் படபடத்துப் போனது.
‘இது எப்போ...? எப்போதுமேயா?’ அந்த கற்பனைகள் கொடுக்கும் வேகம் அதிகம் இருந்தது.
அதை உணர்ந்தவன், “பூமி... ரிலாக்ஸ்...” அந்த ஆக்ஸிஜன் மாஸ்கை வேகமாக அணிவித்து அவளிடம் படபடத்தான்.
“இல்ல, இல்ல... இல்ல...” அவனைத் தடுத்தவாறே சொன்னவள், இமைகளை அழுத்தமாக மூடி, தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்தாள்.
“ஓகே... ஓகே... இது வேண்டாம் விடு... டென்ஷன் ஆகாதே. நாம வந்து ரொம்ப நேரமாச்சு, அவங்க எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க... வா...” அவன் மரத்தின் கிளையில் இருந்து இறங்கி நின்றான்.
அவளை அவன் தூக்கிக் கொள்ள முயல, “கிஸ் மீ ஆகாஷ்...” அவள் சொல்ல, மறுத்து எதையும் சொல்லத் தோன்றாமல் அவள் முகம் பார்த்து நின்றான்.
அவன் அசையாமல் போக, “சரி போலாம்...” அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
“ஓய்... என்ன இது? சரி... நான் கிஸ் பண்றேன்... பட் நீ ப்ராமிஸ் பண்ணு, உனக்கு எதுவும் ஆக விட மாட்டன்னு எனக்கு வாக்கு கொடு...” அவன் சொல்ல, அவளுக்கு அது எந்த அளவுக்கு முடியும் என்று தெரியாமல் தடுமாறினாள்.
“என்னை ‘அப்படி... அங்கே’ எத்தனை முறை கிஸ் பண்ணி இருக்கீங்க?” அவள் சின்னக் குரலில் கேட்க, அவனது இதழ் ஓரம் சிரிப்பில் துடிக்க, கண்களில் அத்தனை குறும்பு கூத்தாடியது.
அதைப் பார்த்தவள்... “ஆகாஷ்...” அவள் சிணுங்க...
“நான் கவுண்ட் பண்ணது இல்லையே... நீ என்னோட இருக்கும் போதெல்லாம் ஐ டூ...” அவன் தோளைக் குலுக்க, அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை.
“பிளீஸ்...” அவள் கெஞ்ச, அவளை நெருங்கியவன், அந்த மரம் சற்று உயரத்தில்தான் இருந்தது என்பதால், அவளை நெருங்கி, அவள் இடையில் கரம் கொடுத்து, பட்டும் படாமல் அவள் நெஞ்சிருக்கும் பகுதியில் முத்தமிட, அவளோ அவன் தலையை தன் தேகத்தில் அழுத்தினாள்.
பட்டென அவளை விலக்கவோ, விலகவோ, அவள் கரத்தை விலக்கிவிடவோ என எதுவும் செய்யாமல், அசைவின்றி அவள் தேகத்தோடு தன் இதழை ஒட்டிக் கொண்டான்.
தன் இமை மூடி, அவன் தோளில் தலை சாய்த்தவள், “போலாம்...” எனச் சொல்லும் வரைக்கும் அவன் அசையவே இல்லை.
அவள் சொல்லவே, அவளைக் கரத்தில் ஏந்திக் கொண்டவன், “இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு பிறந்தநாள் வருது... உனக்கு என்ன கிப்ட் வேணும்?” அவன் கேட்க, அந்த நிமிடங்களில் தாக்கத்தை அவன் குறைக்க முயல்வது அவளுக்கு நன்கு புரிந்தது.
“நீங்க...” அவள் சொல்ல, அவள் முகம் பார்த்தான்.
“நீங்கதான் வேணும்...” அவள் அழுத்திச் சொல்ல,
“நான் உனக்குத்தான்... உனக்கு மட்டும்தான்... வேற சொல்லு” அவள் கேட்பது புரிந்தும், புரியாதவன்போல் நடித்தான்.
ஆகாஷ், பூமிகாவிடம் என்ன சொன்னானோ? அடுத்த நாள் முதல், அவள் முகத்தில், கண்களில், மனதில் இருந்த கலக்கங்கள் விலகி ஓட, அவளால் முடியவில்லை என்ற பொழுதும் தன் வருத்தத்தையோ, பயத்தையோ அவள் வெளியே காட்டவே இல்லை.
அவளுக்குள் அந்த பயமோ, கலக்கமோ இருந்ததாகவும் தெரியவில்லை. அவளிடம் எப்பொழுதும் ஒரு ஆழ்ந்த அமைதியும், இளம் புன்னகையும் இதழில் பூத்திருக்க, அவனுடனே இருந்தாள்.
அன்று அவள் தோப்புக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்ல, அவளை தூக்கிக்கொண்டு அவன் நடந்தான்.
பூமிகாவால் சுத்தமாக, தனியாக நடக்க முடியவில்லை. அவளுக்கு அதிகபட்சம் ஒரு வாரம் எனச் சொல்லி இருக்க, அவளது வீட்டினர் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
அவர்கள் அனைவரின் முகங்களிலும் கவலை தெரிந்து கொண்டே இருக்க, “நீங்க எல்லாம் இப்படி வருத்தப்படறதா இருந்தா இங்கே இருக்காதீங்க. உங்களை எல்லாம் எனக்கு இப்படி பார்த்துட்டே சாக வேண்டாம்... நான் சந்தோஷமா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா?” அவள் இப்படி கேட்டிருக்க, முயன்று சாதாரணமாக நடமாடினார்கள்.
அவளைத் தூக்கிக்கொண்டு, அவன் வெளியே செல்வதைப் பார்த்த நித்யானந்தம், மறுத்து எதையோ சொல்லப் போனார். “அப்பா, அவங்களை விடுங்க...” அவர் சொல்ல, அமைதியாகி விட்டார்.
“என்னங்க... எங்கேயாவது ஒரு ஓரமா உக்காரலாம்...” அவள் சொல்ல, அவன் தன் பார்வையைச் சுழற்றினான்.
“அந்த தென்னை மரம்...” அவள் கை காட்ட, அதுவோ கிடைமட்டமாக போய், நேராக வளர்ந்திருந்தது.
“ஓ... உட்காரலாமே...” சொன்னவன், அங்கே அவளை அமரவைத்து, தானும் அவளோடு அமர்ந்தான்.
பூமிகா பேசினாலும், அவளால் சுத்தமாக பேச்சு வரவில்லை. அவளை பேசவே கூடாது என டாக்டர் சொல்லி இருக்க, “பேசாம இருந்தா சாக மாட்டேனா?” எனக் கேட்டு அவரது வாயை அடைத்திருந்தாள்.
இப்பொழுது இருபத்திநான்கு மணி நேரமும் அவள் அந்த ஆக்ஸிஜன் மாஸ்குடனே இருக்க, அவன் அருகே அமரவே, அதைக் கழட்டச் சொன்னாள்.
“கஷ்டமா இருந்தா சொல்லிடணும்...” என்ற கோரிக்கையோடு அவன் அதைச் செய்ய, அவனது டிஷர்ட்டைப் பற்றி அருகே இழுத்து, அவன் முகம் முழுக்க முத்தமிட்டாள். அவளை மென்மையாக வளைத்துக் கொண்டவன், அவள் செய்கைக்கு உடன்பட்டு அமர்ந்திருக்க, சில பல நிமிடங்கள் கடக்கவே அவள் விலகி அமர்ந்தாள்.
“அவ்வளவுதானா? நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேனே...” அவன் கண்களில் குறும்போடு சொல்ல, அவனைப் போலியாக முறைத்தாள்.
“விஸ்வாமித்திரர் எல்லாம் கட்டுக்கதைன்னு நான் நினைச்சேன்...” அவள் சொல்ல, பக்கென சிரித்து வைத்தான்.
“நான் அப்படி இல்லைன்னு இந்த நிமிஷம் கூட என்னால் ப்ரூவ் பண்ண முடியும்... ம்ச் ஆனா...” சொன்னவன், அவள் நெற்றியில் முட்டினான்.
“அதெல்லாம் சும்மா... நல்ல கல்லாட்டம் உட்காந்து இருக்கீங்க. கிஸ் பண்ணது ஒரு பொண்ணு, பொண்டாட்டின்னு எங்கேயுமே உருகக் காணோமே?” அதென்னவோ அவனது கட்டுப்பாடு அவளுக்கு ஒருவித சோர்வை அளித்தது.
“உள்ளுக்குள்ள உருவமாகி திணறிகிட்டு இருக்குன்னு சொன்னா உனக்குப் புரியுமா?” காற்றில் பறந்துவந்த ஒரு இலை, அவள் மடியில் வந்து விழ, அதை தன் கரத்தால் எடுத்தவாறே அவன் கேட்க, அவன் கன்னம் பற்றி, தன் முகம் காண வைத்தாள்.
“அப்படின்னா...?” அவளுக்கோ புரிந்தும் புரியாத ஒரு தடுமாற்றம்.
“அது எப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டேன்... முடிஞ்சா தெரிஞ்சுக்கோ..” சொன்னவன், அவளது கண்களை சந்திப்பதை தவிர்த்தான்.
தான் உணர்ச்சிவசப்படக் கூடாது என்பதில் அவள் கொள்ளை பிடிவாதமாக இருக்க, “உருவமாகறதுன்னா...?” அவளுக்கு அதைத் தெரிந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் எழுந்தது.
“அதை விடு... இந்த ட்ரெஸ் என்ன புதுசா? கலர் நல்லா இருக்கே...” அவன் பேச்சை மாற்றினான்.
‘இதை என்னன்னு தேனுகிட்டே கேட்கணும்’ மனதுக்குள் குறித்துக் கொண்டவள்,
“முதல்ல இது என்ன கலர்ன்னு சொல்லுங்க பார்ப்போம்...?” அவள் சவால்விட, அவனோ விழித்தான்.
“அய்யய்யோ... இந்த டாப்பிக்கை நான் எடுத்தே இருக்க கூடாது” அவன் அலற, அவளோ விடுவதாக இல்லை.
“பச்சை கலர்ல இருக்கற என் சூப்பை பார்த்துட்டு, இதென்ன சிவப்பு கலர்ல இருக்குன்னு கேட்டீங்க? அன்னைக்கு லைட் எல்லோ கலர்ல கேசரி பண்ணா, இதென்ன கலர்பொடி போடாமல் பண்ணி வச்சிருக்கீங்கன்னு கேட்கறீங்க? என்ன இதெல்லாம்?” சற்று சிணுங்கலாக கேட்டாள்.
“எனக்கு கலர் கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகும்னு சொன்னேனா இல்லையா? பிறகு இப்படி கேட்டா?” அவன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்ள, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
“சரி கேட்கலை... நான் இப்போ போட்டிருக்கறது என்ன கலர்ட்ரஸ்ன்னு மட்டும் சொல்லுங்க...” அவள் இதழ்களில் இளம் நகை பூத்தது.
“எல்லோ” “லைட் ப்ளூ” “ஆரஞ்சு” அவன் ஒவ்வொரு லைட் கலர்களையும் சொல்ல,
“ஹையோ போதும்... இது ஒயிட்... அதில் சின்ன ஊதா பூ இருக்கு... போங்க நீங்க, சும்மா விளையாடறீங்க தானே...” அவன் காலரை இறுக பற்றி அருகே இழுக்க, அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவன், அவள் இதழில் குட்டி முத்தம் வைத்து விலகினான்.
“ம்கும்... நான் அத்தனை முத்தம் குடுத்ததுக்கே இவ்வளவுதானா? நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்னு சொன்னீங்க... நீங்க என்னன்னா, கஞ்சூஸ் மாதிரி ஒண்ணே ஒண்ணு குடுக்கறீங்க?” அவள் குறைபட, அவளது சிகை கோதி, அவளது முகத்தை தன் நெஞ்சில் புதைத்தான்.
அவளும் வாகாக அவனோடு ஒட்டிக் கொள்ள, “விஸ்வாமித்திரர் இருக்கற மாதிரி, விஸ்வாமித்திரி மாதிரி நீ இருப்பியான்னு தெரியலையே. இல்லன்னா ஒன்னு என்ன... நூறு முத்தம் கொடுப்பேன்” அவன் அவள் காதுக்குள் சொல்ல, அவன் நெஞ்சில் குத்தினாள்.
“நான் அப்படி என்ன உருகிடுவேன்னு இவ்வளவு பயப்படறீங்க?” அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள், அவன் கண்களையே பார்த்திருந்தாள்.
“நீ என்னை ‘ஹேட்’ பண்ணா பரவாயில்லை, லவ் பண்றியே... அப்படின்னா, நான் கொஞ்சம் ‘லவ் மேக்கிங்’ ப்ராசஸ் பண்ண ட்ரை பண்ணாலும், நீ உடனே பல மடங்கு அதுக்கு எக்சைட் ஆவ. அது அவ்வளவு நல்லதில்லை.
“எனக்கும் உன் ஹார்ட்ல கிஸ் பண்ணணும்னு ரொம்ப ஆசை... ஆனா நீ தூங்கற நேரம் தவிர்த்து, என்னால் அதைச் செய்ய முடிஞ்சதே இல்லை. ரொம்ப பயமாத்தான் இருக்கு... இப்போ அதைச் செய்யவா?” அவன் கேட்க, என்ன தடுத்தாலும், அவள் இதயம் படபடத்துப் போனது.
‘இது எப்போ...? எப்போதுமேயா?’ அந்த கற்பனைகள் கொடுக்கும் வேகம் அதிகம் இருந்தது.
அதை உணர்ந்தவன், “பூமி... ரிலாக்ஸ்...” அந்த ஆக்ஸிஜன் மாஸ்கை வேகமாக அணிவித்து அவளிடம் படபடத்தான்.
“இல்ல, இல்ல... இல்ல...” அவனைத் தடுத்தவாறே சொன்னவள், இமைகளை அழுத்தமாக மூடி, தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்தாள்.
“ஓகே... ஓகே... இது வேண்டாம் விடு... டென்ஷன் ஆகாதே. நாம வந்து ரொம்ப நேரமாச்சு, அவங்க எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க... வா...” அவன் மரத்தின் கிளையில் இருந்து இறங்கி நின்றான்.
அவளை அவன் தூக்கிக் கொள்ள முயல, “கிஸ் மீ ஆகாஷ்...” அவள் சொல்ல, மறுத்து எதையும் சொல்லத் தோன்றாமல் அவள் முகம் பார்த்து நின்றான்.
அவன் அசையாமல் போக, “சரி போலாம்...” அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவனுக்கு சிரிப்புதான் வந்தது.
“ஓய்... என்ன இது? சரி... நான் கிஸ் பண்றேன்... பட் நீ ப்ராமிஸ் பண்ணு, உனக்கு எதுவும் ஆக விட மாட்டன்னு எனக்கு வாக்கு கொடு...” அவன் சொல்ல, அவளுக்கு அது எந்த அளவுக்கு முடியும் என்று தெரியாமல் தடுமாறினாள்.
“என்னை ‘அப்படி... அங்கே’ எத்தனை முறை கிஸ் பண்ணி இருக்கீங்க?” அவள் சின்னக் குரலில் கேட்க, அவனது இதழ் ஓரம் சிரிப்பில் துடிக்க, கண்களில் அத்தனை குறும்பு கூத்தாடியது.
அதைப் பார்த்தவள்... “ஆகாஷ்...” அவள் சிணுங்க...
“நான் கவுண்ட் பண்ணது இல்லையே... நீ என்னோட இருக்கும் போதெல்லாம் ஐ டூ...” அவன் தோளைக் குலுக்க, அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை.
“பிளீஸ்...” அவள் கெஞ்ச, அவளை நெருங்கியவன், அந்த மரம் சற்று உயரத்தில்தான் இருந்தது என்பதால், அவளை நெருங்கி, அவள் இடையில் கரம் கொடுத்து, பட்டும் படாமல் அவள் நெஞ்சிருக்கும் பகுதியில் முத்தமிட, அவளோ அவன் தலையை தன் தேகத்தில் அழுத்தினாள்.
பட்டென அவளை விலக்கவோ, விலகவோ, அவள் கரத்தை விலக்கிவிடவோ என எதுவும் செய்யாமல், அசைவின்றி அவள் தேகத்தோடு தன் இதழை ஒட்டிக் கொண்டான்.
தன் இமை மூடி, அவன் தோளில் தலை சாய்த்தவள், “போலாம்...” எனச் சொல்லும் வரைக்கும் அவன் அசையவே இல்லை.
அவள் சொல்லவே, அவளைக் கரத்தில் ஏந்திக் கொண்டவன், “இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு பிறந்தநாள் வருது... உனக்கு என்ன கிப்ட் வேணும்?” அவன் கேட்க, அந்த நிமிடங்களில் தாக்கத்தை அவன் குறைக்க முயல்வது அவளுக்கு நன்கு புரிந்தது.
“நீங்க...” அவள் சொல்ல, அவள் முகம் பார்த்தான்.
“நீங்கதான் வேணும்...” அவள் அழுத்திச் சொல்ல,
“நான் உனக்குத்தான்... உனக்கு மட்டும்தான்... வேற சொல்லு” அவள் கேட்பது புரிந்தும், புரியாதவன்போல் நடித்தான்.