• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 28.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai

பகுதி – 28.

பூமிகாவுக்கு அன்று பிறந்தநாள்... இதுவரைக்கும் ஒரு பிறந்தநாளைக் கூட அவள் சிறப்பாகவோ, ஸ்பெஷலாகவோ செலவழித்தது இல்லை. அதற்குரிய மனநிலையில் அவள் இருந்தது இல்லை என்பது ஒரு காரணம் என்றால், உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காது என்பதுதான் மிகப்பெரிய காரணம்.

இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் அவளது இதயத்துக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதால், எதையும் அவர்கள் செய்தது இல்லை.

ஆனால் இந்த பிறந்தநாளை அவர்கள் கொண்டாடியே ஆகவேண்டும் என்ற நிலையில் அவர்கள் இருக்க, அவர்களைத் தடுக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.

நேற்று காலையில் அவளது உடல்நிலையை பரிசோதித்த வீட்டு மருத்துவர், அவளது இதயம் துடிக்கவே தயங்குவதாக சொல்லி இருக்க, எந்த நேரமும் அவளை மருத்துவமனையில் சேர்க்கும் நிலைமையில்தான் அவர்கள் இருந்தார்கள்.

இதுவே சென்னையில் இருந்த பூமிகாவாக இருந்திருந்தால், படுக்கையோடு படுக்கையாக எப்பொழுதோ மாறி இருப்பாள். இப்போதைய அவளது இந்த சின்ன நடமாட்டத்துக்கும், அவளது உச்சபட்ச வில் பவர்தான் காரணம் என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டியதே.

“இப்போ நாம வெளியே போறோம்... வர்றியா?” ஆகாஷ் கேட்டு நிற்கையில், அவள் கண்கள் ஒளிர்வதும், அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கங்காரு குட்டியாக மாறுவதும் காண ஆச்சரியமாக இருந்தது.

அன்று காலையில் அவள் கண் விழிக்கையில் நேரம் ஒன்பதைக் கடந்திருந்தது. ‘அன்று மாலை வரைக்கும் கேக் கட்டிங்கை தள்ளி வைக்கும் நேரம் கூட அவர்களுக்கு இல்லை’ என மருத்துவர் சொல்லி இருக்க, காலையிலேயே அதை வைத்துவிட முடிவெடுத்தார்கள்.

“குட் மார்னிங் பூமி... ஹேப்பி பெர்த்டே” அவளிடம் சிறு அசைவு தெரியவே, அவளோடு ஒட்டிக்கொண்டு படுத்திருந்த ஆகாஷ், அவள் காதுக்குள் சொல்ல, அவளது உறக்கம் பறந்தோடிப் போனது.

சொல்லப்போனால் அன்று இரவு அவள் உறங்கவே விடியற்காலம் ஆகி இருந்தது. மூச்சுக்கு திணறிக்கொண்டு இருந்தவளால் எப்படி உறங்க முடியும்? அவன்தான் தன் நெஞ்சில் அவளைப் போட்டுக்கொண்டு, வருடிக் கொண்டே அமர்ந்திருந்தான்.

அவனுக்குமே உறக்கமும், விழிப்பும் அல்லாத இரவாகத்தான் அது கடந்திருந்தது.

“தேங்க்ஸ்... நிஜமாவே இது சந்தோஷமான பிறந்தநாள் தான்...” அவள் சொல்ல, அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்றினான்.

“கீழே போலாமா?” அவன் கேட்க, மறுப்பாக தலை அசைத்தவள், அவனை இறுக்கினாள்.

“ம்ஹும்... இப்படியே இருந்து போகணும்...” தன் நேரம் நெருங்க நெருங்க, அவளுக்குள் பெரும் கலவரம்.

“போகலாம்... போகலாம்... இப்போ அவங்களுக்காக, ஒரு பத்து நிமிஷம்...” அவன் கெஞ்சலாக கேட்க, அவளிடம் இருந்தது முழு மறுப்பு மட்டுமே.

அவனோடு வாகாக ஒட்டிக் கொண்டவள், “இங்கேயே கேக் கட் பண்ணலாம், கொண்டு வரச் சொல்லுங்க” அவள் கேட்க, அவனால் மறுக்க முடியவில்லை.

‘எழணும், குளிக்கணும், ட்ரஸ் மாத்தணும்...’ இதையெல்லாம் சொல்ல ஆசைப்பட்டாலும், அவளால் முடியவே இல்லை என்கையில், பிடிவாதமாக என்ன செய்யவாம்?

“சரி, பிரஷ் பண்ணு... நான் கீழே தகவல் சொல்றேன்...” அவளுக்குத் தேவையானதை எடுத்து கொண்டு வர, அந்த பிரஷை பிடிக்கும் தெம்பு கூட அவளுக்கு இல்லை.

அதே நேரம்... வெளியே கதவை மெல்லியதாக தட்டும் ஓசை கேட்கவே, “என் எனிமிதான்னு நினைக்கறேன்...” சொன்னவன், வேகமாக ஒரு சட்டையை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறக்கப் போனான்.

அவன் கதவைத் திறக்கையில், அவனது நினைப்பை பொய்யாக்காமல் அங்கே தேன்மொழியே நிற்க, “பூமி...?” கேள்வியாக இழுத்து நிறுத்தினாள்.

“உள்ளே வா...” அவன் அழைக்க,

“இல்ல... நான் இங்கேயே இருக்கறேன்... அவ எழுந்துட்டாளா? எப்படி இருக்கா?” இறுதி கேள்வியை குரலைத் தாழ்த்தி கேட்க, இமைகளைத் திறந்து மூடினான்.

“கேக்கை இங்கேயே கட் பண்ணிடலாமா? அவளை அலைக்க வேண்டாம்...” அவன் சொல்ல, இப்பொழுது அவள் தயங்கிக்கொண்டு வெளியே நிற்கவில்லை.

அவள் வேகமாக உள்ளே வர, பூமிகா சோர்ந்துபோய் படுத்திருந்தாள். “பூமி...” அவள் அருகே இருந்த பிரஷை கையில் எடுத்துக் கொண்டவள் அழைக்க, மெதுவாக கண் திறந்தாள்.

அவளது கரத்தில் இருந்த கவரைப் பார்த்தவள், ‘இது என்ன?’ அவளிடம் பார்வையில் வினவ,

“உன்னோட பிறந்தநாள் ட்ரஸ்...” சொன்னவள், அதை அந்த கவருக்குள் இருந்து எடுக்க, ஒரு பிரம்மாண்டமான நெட்டட் கவுன்... அடர் நீல நிறத்தில், வெளியே வெள்ளை நிற பூக்கள் வெய்த, வலை வேயப்பட்டிருக்க, உடை அத்தனை அழகாக இருந்தது.

அதைப் பார்க்கவே கொள்ளை அழகாக இருக்க, அதை அணியும் ஆசை இருந்தாலும், எழுந்து அமரவே தெம்பு இல்லை என்கையில், அதை அணிவதற்குள் தன் ஆவி போய்விடும் எனத் தோன்ற, “இல்ல, வேண்டாம்...” வேகமாக மறுத்தாள்.

“ஏன் வேண்டாம்? ரொம்ப அழகா இருக்கு பூமி, நான் ஹெல்ப் பண்றேன்...” அவள் சொல்ல,

‘சில நாட்களாக நீதானே செய்கிறாய்...’ என கண்களால் சொல்ல, அவள் அருகே அமர்ந்தாள்.

“பிடிவாதம் பிடிக்காத பூமி...” அவள் கெஞ்ச, பூமி பிடிவாதமாக இருந்தாள்.

“இதென்ன வெள்ளை கலர் ட்ரஸ்ஸா?” அவன் கேட்க,

‘இவர் ஆரம்பிச்சுட்டார்...’ பூமிகா சிரிப்பாக பார்த்திருக்க, தேன்மொழி போலியாக முறைத்தாள்.

“இது வெள்ளையா?” தேன்மொழி சிலிர்த்துக்கொண்டு கேள்வி கேட்க,

“ஓ... மஞ்சளா?” அவன் அடுத்த கலருக்கு தாவ, பூமிகா அவன் இன்னும் எந்த கலரை எல்லாம் சொல்வானோ? என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தாள்.

“எதே... எல்லோவா?” தேன்மொழி அதிர,

“தேனு...” அழைத்த பூமி, மறுப்பாக தலை அசைக்கவே, அவன் விளையாடுவதாக நினைத்து அமைதியானாள்.

“என்ன இது? பூமிக்கா?” அவளிடம் கேட்க,

“ஆமா... என் பிறந்தநாள் ட்ரஸ்ஸாம்... நல்லா இருக்கா?” அவனிடம் கேட்டாள்.

‘இது எதுக்கு?’ என ஒரு பார்வை பார்த்தவன்... தேன்மொழியின் கண்களில் கெஞ்சலைக் காணவே, அந்த கேள்வியை தனக்குள் புதைத்தான்.

“கேக்கை இங்கேயே எடுத்துட்டு வாங்க... வெளியே வச்சு கட் பண்ணிடலாம்” மறுக்கவே முடியாத குரலில் அவன் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

“இவளை ரெடி பண்ணணுமே...” தேன்மொழி கேட்க,

“அதை நான் பார்த்துக்கறேன்... ஒரு மணி நேரத்தில் எல்லாரும் இங்கே வாங்க. கொஞ்சம் ஹாட் வாட்டர் பிளீஸ்” அவன் சொல்ல, உடையை அங்கேயே வைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

“சரி, நாம ப்ரஷ் பண்ணுவோமா?” கேட்டவன், அவளுக்கு பல் துலக்கிவிட அருகே அமர்ந்தான். அவனது அனைத்து செய்கைகளுக்கும் அமைதியாக ஒத்துழைத்தாள்.

அவளுக்கு பல் துலக்கி முடிக்கையில், ப்ரதிக் ஒரு பக்கெட்டில் வெந்நீரும், டவ்வலையும் கொண்டுவர, தேன்மொழி அவன் பின்னால் நின்றிருந்தாள்.

“ஓகே... நான் வெளியே வெயிட் பண்றேன்...” சொன்னவன், ப்ரதிக்கோடு வெளியே காத்திருக்க, தேன்மொழி அறைக்குள் வந்தாள்.

தேன்மொழியின் வேலையையும் தானே செய்துவிட அவனுக்கு மனம் பரபரத்தாலும், சில செய்கைகள் பேராபத்து என்கையில் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டான். அவன் வெளியே வரவே, பிரதிக் அவன் கரத்தில் ஒரு செய்தித்தாளை கொடுத்தான்.

“இதை எதுக்கு என்கிட்டே கொடுக்கறீங்க?” எனக் கேட்டு அவன் முகம் பார்க்க, ப்ரதிக் ஒரு அர்த்தமுள்ள புன்னகையைக் கொடுத்தவன் அமைதியாக வெளியே கிடந்த படுக்கையில் சென்று அமர்ந்தான்.

அவன் அவ்வாறு செய்யவே, அசுவாரசியமாக அந்த செய்தித் தாளில் பார்வையைப் பதித்த ஆகாஷ் திடுக்கிட்டு போனான். ‘பிரபல சினிமா தயாரிப்பாளரும், மறைந்த நிக்கி மந்தனாவின் தகப்பனுமான வேதாந்த் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதி’ என்ற கொட்டை வாசகத்தில் அந்த கட்டுரை இடம் பெற்றிருந்தது.

மகளின் இறப்பை தாங்க முடியாததால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகச் சொல்ல, அவன் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை. ஆனாலும் அவனால் மகிழ எல்லாம் முடியவில்லை.

கூடவே நடிகை ‘நிக்கி’யின் இறுதி புகைப்படம் என அவர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்க, பார்த்தவனுக்கு தன் கண்களை நம்பவே முடியவில்லை.

அவள் போட்டிருந்த ஸ்டீராய்ட் மருந்துகளின் பக்க விளைவின் காரணமாக அவளது உடல் அடையாளமே தெரியாமல் ஒரு மாதிரி பெருத்துப் போயிருந்தது. அதன் கீழே அவள் பயன்படுத்திய மருந்துகள், அதன் பக்க விளைவுகள் என பக்கம் பக்கமாக விவரித்திருக்க, அவனால் படிக்க முடியவில்லை.

‘இது அவ என்றால்... நியூஸ் சேனலில் காட்டிய அவளது உடல் வேறா?’ எண்ணியவனுக்கு வேதாந்தின் நினைவு வந்தது. ‘அவன் எதையும் செய்ய வல்லவன் தான்’ கசப்பாக எண்ணிக் கொண்டான்.

‘கடைசியா பெத்த பொண்ணை கௌரவமா தகனம் பண்ணக் கூட உன்னால் முடியலை இல்ல?’ அந்த நினைப்பால் சந்தோசம் கொள்ளவும் இல்லை.

சாதாரணமாக கடக்க முயன்றாலும் முடியவில்லை. ஆயிரம் இருந்தாலும் அவனும் ஊனும், உயிரும், உணர்வும் கொண்ட மனிதன் தானே. அவன் ஒன்றும் ஞானியோ, புத்தனோ, முற்றும் துறந்த முனிவனோ இல்லைதானே.

(இந்த இடத்தில் ஆகாஷ் யார் என உங்களுக்கு எல்லாம் சந்தேகம் வந்திருக்கும் என நினைக்கிறேன்).

‘எல்லா ஆட்டமும்...’ வலியும், வேதனையுமாக எண்ணியவன் அந்த இடத்தில் தன் நினைப்பை நிறுத்தினான். ப்ரதிக் எழுந்து வந்து அவன் தோளைத் தொட்டு அழுத்த, சட்டென தன்னை மீட்டுக் கொண்டான்.

“இதை எதுக்கு என்கிட்டே கொடுத்தீங்க?” கேள்வியாக அவனைப் பார்த்தான். அவனது அந்த கேள்விக்கு ப்ரதிக் எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை. ஆனால் அவன் பார்வையில் என்னவோ இருந்தது.

அதை ஆகாஷ் ஆராய முயல, “இல்ல... சினிமா நியூஸ் என்றால் நமக்கு எல்லாம் கொஞ்சம் சுவாரசியமா இருக்குமே அதான். அது மட்டும் இல்லை, திரையில் இந்த நிக்கியை நான் ரசிச்சு இருக்கேன். அதனால் இந்த செய்தியைப் படிக்க எனக்கு ஒரு ஆர்வம்னு வச்சுக்கோங்களேன்” ப்ரதிக் சொல்ல, ஆகாஷ் அதை நம்பவில்லை.

அவன் நம்பவில்லை என்றாலும், அவனிடம் அதைப்பற்றி கேட்டு, மேலே துருவவும் அவன் விரும்பவில்லை.

“எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை” ஆகாஷ் முடித்துவிட, ப்ரதிக் தோளைக் குலுக்கிக் கொண்டான். அங்கே அவர்களுக்குள் ஒரு கனமான அமைதி நிலவ, ப்ரதிக் ஆகாஷின் அருகே அமர்ந்து கொண்டான். ஆகாஷிடமோ அப்படி ஒரு அமைதி நிலவியது. அவன் மனதுக்குள் இப்பொழுது பூமி மட்டுமே நிறைந்து இருந்தாள்.

“அவங்க என்ன பண்றாங்கன்னு தெரியலையே... நேரம் வேற ஆகுது” ஆகாஷ் பிரதிக்கிடம் கேட்டான்.

“வருவாங்க...” அவன் பதில் கொடுக்க,

அறைக்குள்ளோ....

“தேனு... இதெல்லாம் வேண்டாமே...” சோர்வாகவே சொன்னாள்.

“கொஞ்ச நேரம் பூமி... நான் என்னவோ எனக்கு இந்த வேலை இனிமேல் கிடைக்காதுன்னு நினைச்சேன்...” அவள் கண்ணை சிமிட்ட, அந்த நேரத்திலும் பூமிகா சிறு வெட்க புன்னகை காட்டினாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
“ம்ஹும்... அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை...” சொன்னவள், அதன் பிறகு அமைதியாக அவளுக்கு ஒத்துழைக்க, அடுத்த அரைமணி நேரத்தில் புத்தம்புதிய உடையில் ஜொலித்தாள்.

“இப்போ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? என் கண்ணே பட்டுடும் போல” அவளை நெட்டி முறிக்க, மற்றவளுக்கோ சிரிப்பு.

“நாப்பது, முப்பத்தி எட்டு, முப்பத்தி ஆறு... இப்போ ஒரு முப்பத்திநாலு கிலோ இருப்பேனா? எலும்பெல்லாம் துருத்திகிட்டு, உசுரை கண்ணுக்குள்ள மட்டும் வச்சுகிட்டு இருக்க என்கிட்டே என்ன அழகை கண்டியோ போ...” மெதுவாக அவள் முனக, அவள் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“நீ எப்படி இருந்தாலும் எங்க கண்ணுக்கு அழகுதான்... ஹேப்பி பெர்த்டே பூமி...” அவளது வாழ்த்தை பெற்றுக் கொண்டவள்,

“என்னால கீழே வர முடியாது... எல்லாரையும் இங்கே வரச் சொல்லு...” அவள் சொல்ல, தேன்மொழி அங்கிருந்து அகன்றாள்.

அவள் செல்லவே, ப்ரதிக்கும் அவள் பின்னால் செல்ல, ஆகாஷ் தன்னவளைத் தேடி வந்தான்.

அந்த உடையில் வித்தியாசமாக அழகாக ஜொலித்தவளை இமைக்காமல் அவன் பார்த்திருக்க, “என் பெர்த்டே ட்ரஸ் எப்படி இருக்கு?” அவனிடம் கேட்டாள்.

“அந்த ட்ரஸ்ல நான் இன்னும் உன்னை பார்க்கவே இல்லையே...” சொன்னவன், இமைகளை சிமிட்டி நாவை உள் கன்னத்தில் துருத்தி சிரிக்க, அவளோ அவனையே பார்த்திருந்தாள்.

“நான் வேண்டாம்ன்னு உங்களை தடுக்கலையே...”.

“ம்ஹும்...” கேள்வியா? பதிலா? என்று தெரியாத விதத்தில் முனகியவன், “இந்த ட்ரஸ் ரொம்ப, ரொம்ப அழகா இருக்கு... ஆமா இது என்ன கலர்?” குறும்பாக அவன் கேட்க, அவளோ தன் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை.

அவள் இமைக்காமல் பார்க்கவே, அவள் அருகே வந்து அமர்ந்தவன், அவளைப் பார்த்தவாறே, மெது மெதுவாக அவளை நெருங்கி, அவள் இதழில் இதழ் பதிக்க, அந்த இதழ் ஒற்றலை, அவன் சிகைக்குள் கரம் கொடுத்து, சற்று அழுத்தமாக அவள் மாற்ற, இதழைப் பிரித்துக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

தன் இதயத்துக்கு எதையும் கொண்டுசென்றுவிடக் கூடாது என்பதில் மட்டுமே அவளது கவனம் இருக்க, அந்த இதழ் தீண்டலை ஏற்று, உள்வாங்கி அமைதியாக இருந்தாள்.

மெதுவாக அவனை விட்டு விலகியவள், அவன் கண்களுக்குள் துழாவி, இன்னும் எதையோ கேட்க, சற்று குனிந்து அவள் இதயத்தில் மெல்லியதாக முத்தமிட்டு அவன் நிமிர, “எல்லார்கிட்டேயும் என்ன சொன்னீங்க?” அவனிடம் கேட்டாள்.

“நான் என்ன சொன்னேன்?” அவன் புரியாதவன்போல் நடிக்க,

“எனக்குத் தெரியும்... என்னோட கடைசி மணித்துளிகள் எண்ணப்பட்டுகிட்டு இருக்கு... ஆனாலும் அப்பாவும், தேனும் சாதாரணமா நடமாடறாங்கன்னா, அதை என்னை நம்ப சொல்றீங்களா?” கேட்டவள், ஆக்ஸிஜன் மாஸ்கை எடுத்து அணிந்துகொண்டாள்.

“பீ ஹேப்பி பூமி... நான் இருக்கேன்...” அவன் அதையே அடிக்கடி சொல்ல, அந்த பதத்துக்கான உண்மை பொருளை அறிய முயன்று தோற்றாள்.

“அவங்க செய்ய வேண்டிய எல்லாத்தையும் ரொம்பவே சிறப்பா பண்ணிட்டாங்க. இனிமேலும் அதையே அவங்களை செய்யச் சொன்னேன், அவ்வளவுதான்... நான் அவங்களை வரச் சொல்றேன்...” அவன் செல்லப் போக, அவனது கரத்தை அழுத்தமாக பற்றினாள்.

“என்னம்மா...?” அவள் முகம் பார்க்க,

‘என்னால் சுத்தமா முடியலை...’ செய்கையில் அவள் சொல்ல, அவன் முகத்தில் ஒரு நொடி கலவரம் வந்து போனது.

“ஹாஸ்பிடல் போய்டலாம்...” அவன் பரபரக்க, ‘வேண்டாம்...’ என மறுத்தவள், கட்டிலில் அப்படியே சாய்ந்து கொண்டாள்.

அவன் அவசரமாக மருத்துவரை வரச் சொல்ல, அதற்கெனவே தயாராக இருந்தவர் ஓடி வர, வீட்டு மனிதர்கள் அனைவரும் அங்கே விரைந்தார்கள். மருத்துவர் அவசரமாக ஒரு ஊசியை அவள் வெயின்பிளான்ட் மூலமாக செலுத்தியவர், அறையில் இருந்து வெளியே வந்தார்.

“டாக்டர்... அவளுக்கு...” நித்யானந்தம் கேட்க,

“கடைசி ஊசி சார்... பன்னிரண்டு மணி நேரம்தான்...” சொன்னவன் சென்றுவிட, வேகமாக தன் மகளைக் காண ஓடினார்.

அவர் வந்த வேகத்தைப் பார்த்த ஆகாஷ்... “மாமா, கேக் கட் பண்ணிடலாம்...” அவனது குரலில் தேங்கி, அப்படியே நின்றுவிட்டார்.

நித்யானந்தம் ப்ரதிக்கப் பார்க்க, “நான் எடுத்துட்டு வர்றேன்ப்பா...” சொன்னவன் வெளியே ஓடினான்.

“அம்மாடி...” அழைத்தவர் மகளின் அருகே அமர,

‘பிளீஸ்ப்பா...’ என்னும் கெஞ்சல் பார்வையாக அவரை ஏறிட்டாள்.

“நீ நல்லா இருக்கணும்டா...” நடுங்கும் குரலில் அவர் வாழ்த்த, அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

தகப்பனும் தாயும் தன் மகளின் உடை அலங்காரத்தையும், அழகையும் ‘இறுதி நாளோ?’ என்னும் எண்ணத்தில் பார்த்திருந்தார்கள். அந்த நிலையிலும், எலும்புகள் அனைத்தும் துருத்திக்கொண்டு தெரிந்தாலும், அவள் அவர்கள் பார்வைக்கு தேவதையாகத் தெரிந்தாள்.

ப்ரதிக் கேக்கை கொண்டு வர, சின்ன ஸ்டூலை கட்டில்மேல் வைத்து, அவளது கரம் பிடித்து அந்த கேக்கை வெட்டினான் ஆகாஷ். அனைவரின் வாழ்த்துக்களும், கரகோஷங்களும் அங்கே எழ, அவளால் அந்த கேக் துண்டத்தை எடுத்து அவனுக்கு ஊட்டும் சக்தி கூட இருக்கவில்லை.

கேக்கின் கிரீமை அவளது காய்ந்து போயிருந்த இதழில் தேய்த்தவன், தானும் கிரீமை சுவைக்க, அவளது தாய், தன் மகளை வந்து கட்டிக் கொண்டு, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தார்.

‘இப்படி பாதியில் அழைச்சுட்டு போறதுக்கு, அந்த கடவுள் இவளை எனக்கு தராமலேயே இருந்து இருக்கலாம்...’ அந்த நேரமும் பிரபா அதைத்தான் எண்ணிக் கொண்டார்.

“சாரிம்மா...” ‘அடுத்த ஜென்மத்திலாவது உங்களுக்கு புடிச்ச பொண்ணா பொறக்கணும்’ அவள் மனதில் எண்ணியவாறு சொல்ல,

“நீ எதுக்கு மன்னிப்பு கேட்கற? அதைக் கேட்க வேண்டியவங்க வேற” சொன்னவர் அங்கிருந்து வேகமாக அகன்றுவிட, நித்யானந்தத்துக்கு பெருத்த வருத்தமே.

“உங்க அம்மாவை திருத்தவே முடியாது” அவர் வருத்தமாக குறைபட, மறுப்பாக தலை அசைத்தாள்.

“அவங்க ஏமாற்றம் அவங்களுக்கு மாமா... விடுங்க...” பூமிகாவுக்குப் பதிலாக அவன்தான் பேசினான்.

ப்ரதிக்கும், தேன்மொழியும் அவளை வாழ்த்த, முயன்று ஒரு புன்னகையை அவர்களுக்கு கொடுத்தாள்.

“இந்த ட்ரஸ்ஸை மாத்திடவா பூமி?” அவள் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.

‘போடும்போதே கஷ்டமா இருக்கு, வேண்டாம்னு சொன்னியே...’ கேட்க வந்தவள், அங்கே இருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

தேன்மொழி செல்லவே, கதவை சாற்றிவிட்டு, அவள் அருகே வந்து அமர்ந்தவன், “பூமி...” அழைத்தவன், அவள் கரத்தை பற்றிக் கொண்டான்.

“கஷ்டமா இருக்கா? ஹாஸ்பிடல் போய்டலாமா?” அவன் கேட்க, தன் அருகே அமர்ந்திருந்தவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

தன் ஆக்ஸிஜன் மாஸ்கை அவள் கழட்டி வைக்க, “இப்போ எதுக்கு அதை கழட்டற?” அவன் அவளைத் தடுக்க, அவளோ அதைக் கண்டுகொள்ளவில்லை.

‘அதால எல்லாம் என்னை காப்பாத்திட முடியுமா என்ன?’ அவள் பார்வையால் அவனிடம் வினவ, அவளைத் தன் நெஞ்சுக்குள் புதைத்தான்.

“இந்த ட்ரஸ் உனக்கு கன்வீனியன்டா இல்லையே... தேன்மொழி கேட்டப்போவே மாத்தி இருக்கலாமே...” அந்த உடையில் அவள் நன்றாக உணரவில்லை என்பதால் கேட்டான்.

“அவதான் செய்யணுமா?” அவன் நெஞ்சில் புதைந்திருந்தவள் மெல்லியதாக முனக, அவளது எண்ணம் புரியவே, அவள் முகம்பற்றி நிமிர்த்தி, தன் முகம் காண வைத்தான்.

“நானே செய்யலாமே... கரும்பு தின்ன கூலியா? ஆனா...” மணித்துளிகள் அவள் உயிரைக் குடித்துக் கொண்டிருக்க அவன் வெகுவாக தயங்கினான்.

“நானே இறங்கி ஓடினா கூட, என் இதயம் வேகமா துடிக்காது...” அதன் திறன் அவளுக்குத் தெரியாதா என்ன?

“அப்படின்னா சரி...” சொன்னவன் அவள் உடையை மாற்ற உதவ, அவளோ அவனையேதான் பார்த்திருந்தாள்.

“ஓய்... இப்படி குறுகுறுன்னு பார்த்தா எப்படி நான் என் வேலையைச் செய்யறதாம்?” குறும்பாக வினவியவன், மெல்லிய துணியை அவள்மேல் போர்த்தி, தன் வேலையைச் செய்ய, அவளோ அதை விலக்கித் தள்ள, சில நொடிகள் தடுமாறிப் போனான்.

முதல்முறையாக அவன் முகத்தில் விரவும் தனக்கான தனிப்பட்ட உணர்வைக் கண்டவள், வெற்றிப் புன்னகை சிந்த, “ஏய்... உன் மேலே பாயப் போறேன்...” குரல் கரகரக்க அவன் சொல்ல, அவள் விழிகள் அவனை சவாலுக்கு அழைத்தது.

“கமெண்ட் சொல்லவே இல்லையே...” அவள் தைரியமாக கேட்க, அவளை நெருங்கி அமர்ந்தவன், அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

‘கேள்வி கேட்டா, பதில் சொல்லாமல் என்ன இது?’ என அவள் யோசிக்க,

“என் மூச்சுக்காற்று சுடுதா? இதுதான் உனக்கான பதில்...” சொன்னவனது பார்வை மட்டுமே அவளது முழு தேகத்தை தீண்டி தடுமாற, கரங்கள் இரண்டும் அதற்கு இம்மியும் இசையவில்லை.

நாணி, கோணி, வெட்கம் கொண்டு அவனிடமிருந்து தன்னை மறைக்கவெல்லாம் அவள் முயலவில்லை. ‘இப்பொழுது இல்லையென்றால், எப்பொழுதும் இல்லை...’ அவள் மூளை உரைக்க, அந்த நொடியை ரசிக்க முயன்றாள்.

“கிஸ் மீ...” அவள் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.

‘ஏன்...?’ என்பதுபோல் அவள் பார்க்க,

“நான் என் கண்ட்ரோல்ல இல்லை...” இமைகளை அழுத்தமாக மூடி, ஆழமாக மூச்செடுத்து அவன் சொல்ல, தன்னை நெருங்கி அமர்ந்திருந்தவனை அசையாது பார்த்தவள், அடுத்த நொடி, அதைச் செய்திருந்தாள்.

அவளது செய்கையில் பட்டென இமை திறந்தவன், தன்மேல் இருந்த அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து அழுத்தியவன், “பூமி...” அதிர்வும், திணறலுமாக அழைத்தான்.

“ ***** ” அவனிடம் அவள் கோரிக்கை வைக்க, அவளது கோரிக்கையை நிறைவேற்றியவனின் வெற்று தேகம், அவளது வெற்று தேகத்தை ஆதியோடு அந்தமாக தொட்டு உணர்ந்து கொண்டிருந்தது.

அதற்குள் மூழ்கிவிடும் நிலையோ, அதில் திளைத்து வெற்றிகொள்ளும் உடல்நிலையோ அவளுக்கு இல்லாமல் போக, அந்த நொடியை அமைதியில் கடக்க முயன்றார்கள்.

அவளை மெல்லிய முத்தமிட்டாலும் தன் கட்டுப்பாடுகள் அனைத்தும் தகரும் எனத் தோன்றவே, அவன் அழுத்தமாக இருக்க, அவன் முகம் முழுக்க கோடி முத்தமிட்டாள்.

“பிறந்தநாள் பரிசு... ரொம்ப நல்லா இருக்கு...” அவனை வருடியவள் சொல்ல, அவள் நெற்றியில் முட்டினான்.

அவள் மொத்தமாக சிரமப்பட்டு, துவள, அவளை கரத்தில் அள்ளியவன், “ஹோல்ட் ஆன் பூமி... என்னை விட்டு போய்டாத... அதுவும் என்னை தனியா போராட விட்டுடாத” அவன் சொல்ல,

“என்ன...? என்ன சொன்னீங்க?” பரிதவிப்பாக அவன் முகம் பார்க்க, தான் உளறியது அவனுக்குப் புரிந்தது.

“என்ன? ஒன்னும் இல்லையே... நேரமாச்சு...” சொன்னவன்,

நேரமாவதை உணர்ந்து, அவளை விட்டு விலகியவன், அவளுக்கு ஆடைகளை அணிவித்து, தானும் அணிந்துகொள்ள, அவனுக்கான உணவோடு அவனைத் தேடி வந்தான் ப்ரதிக்.

தொடரும்.....

(அடுத்த பகுதியோடு (29) கதை நிறைவுபெறும் மக்களே).

 

Buvaneswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 26, 2022
23
3
3
Sankarankovil
Akka unga storieslam naan padichiruke.......Ella storiesumae enaku pidikum .........indha story plot pathutu padipo ma venamanu oru dilutionla yae irunthe......ana indha story unga writing oru mile stone ka......💐💐😇😇keep rocking and going....
 
  • Like
Reactions: Infaa

Marlimalkhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Sep 4, 2021
276
15
28
Madurai
Ivanga mudivu idhu tan terinjalum manasu ennovo seyuthu..mannulathila tan ivangala onna vaala mudiyal atleast ore nerathula maranichu vinnulagathilayavathu onna vaalatum
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Akka unga storieslam naan padichiruke.......Ella storiesumae enaku pidikum .........indha story plot pathutu padipo ma venamanu oru dilutionla yae irunthe......ana indha story unga writing oru mile stone ka......💐💐😇😇keep rocking and going....

மிக்க நன்றி புவனா!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
பிறந்த நாள் பரிசுன்னு சொல்லி அழ வைக்கறீங்க

அவளுக்கு அது சிறப்பான பரிசு தானே.

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Evargal uyirodu irukka vaipey illaya Writerji feeling very sad & emotional:cry::cry:

அதற்கு வாய்ப்பு இருந்து இருந்தால், பூமியின் அப்பாவே செய்து இருப்பாரே.

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Nice and sad
Mudivu m sad ah than irukum hoom

இந்த கதைக்கு எந்த முடிவு சரியாக இருக்குமோ அதுதானே சிறப்பான முடிவு.

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Ivanga mudivu idhu tan terinjalum manasu ennovo seyuthu..mannulathila tan ivangala onna vaala mudiyal atleast ore nerathula maranichu vinnulagathilayavathu onna vaalatum

சில நேரம் முடிவுகள் அப்படியானது தானே.

நன்றி!
 
  • Love
Reactions: Marlimalkhan

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
நிஐமா எனக்கு கமெண்ட் எழத முடியல .😪
ஆனால் இவங்க இருவரும் மனதைரியத்துடன் தான் இருக்காங்க .
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
நிஐமா எனக்கு கமெண்ட் எழத முடியல .😪
ஆனால் இவங்க இருவரும் மனதைரியத்துடன் தான் இருக்காங்க .

இந்த காதல் அவர்களை பலப்படுத்தி இருக்கு.

நன்றி!
 
  • Love
Reactions: Thani