பகுதி – 3.
கிச்சனுக்குள் தேன்மொழி தண்ணீரை சுட வைக்க, அவள் நினைவுகளோ பூமிகாவையே சுற்றி வந்தது.
‘பூமிகா’ நித்யானந்தம், பிரபா இவர்களின் ஒரே மகள். மூத்தவன், சஞ்சித்துக்கும், இளையவன் ப்ரதிக்குக்கும் பிறகு, தனக்கு இன்னொரு குழந்தையே வேண்டாம் என முடிவெடுத்த பிரபாவை, பிடிவாதமாக பெண் குழந்தை வேண்டும் என சாதித்துக் கொண்டார் நித்யானந்தம்.
அவரோடு கூட அவனது தாய் தெய்வாவுக்கும் அந்த பிடிவாதம் இருந்தது என்பதால், பிரபாவால் எதுவும் செய்ய முடியாமல் போனது.
கருவில் இருக்கும் குழந்தை ‘பெண்’ எனத் தெரிந்தது முதலே, நித்யானந்தத்தை கையில் பிடிக்க முடியவில்லை.
அவர்களது குடும்பத்தொழிலான ஷூ கம்பெனி சற்று தோய்வில் சென்றுகொண்டிருக்க, மகள் பிறந்த நேரம், வெளிநாட்டு ஆர்டர் ஒன்று எதிர்பாராமல் கிடைக்க, அவரது தொழில் அசுர வளர்ச்சியைக் கண்டது.
ஒரு ஷிப்ட் நடந்த ஃபேக்டரி மூன்று ஷிப்ட் நிற்காமல் வேலை நடக்க, மகள் பிறந்த சேதியை கொண்டாட ஓடி வந்தவருக்கு இடியென ஒரு சேதி சொல்லப் பட்டது.
பிறந்த குழந்தையின் உடல் சில நிமிடங்களிலேயே நீலம் பூக்க, குழந்தையை தூக்கிக்கொண்டு குழந்தைகள் நல மருத்துவரிடம் ஓடினார்கள்.
உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, சில பல சோதனைகளின் முடிவில், குழந்தையின் இதயம் முழுதாக வளர்ச்சியடையவில்லை என்ற உண்மையையையும், அதன் வால்வுகள் கூட சுருங்கிப் போயிருப்பதாகவும் சொல்ல, நிலை குலைந்து போனார்.
“ஏதாவது செய்ங்க டாக்டர்...” நித்யானந்தம் கதறினால், பிரபா ஒரு இறுக்கத்துக்குப் போயிருந்தார். அவள் மாமியாரையும், கணவனையும் பார்த்த பார்வையில் சிறிதும் மரியாதை இருக்கவில்லை.
“கொஞ்சம் பொறுமையா இருங்க, முதல்கட்ட சோதனையில் நமக்கு இவ்வளவுதான் தெரிய வந்திருக்கு. அடுத்த கட்ட பரிசோதனையோட முடிவுகளை வச்சுத்தான் நாம எதையும் சொல்ல முடியும்” சொன்னவர், ஸ்பெஷலிஸ்ட்க்கு பரிந்துரைக்க, குழந்தையை நித்யானந்தம் தான் தூக்கிக்கொண்டு ஓடினார்.
அடுத்து வந்த நாட்களில் குழந்தையின் பரிசோதனைகள் துவங்க, எத்தனையோ விதமான சோதனைகள், சில பல ஒப்பீனியன்கள் என சென்றும் நித்யானந்தம் மகிழும் விதமாக யாரும் எதையும் சொல்லவில்லை.
“குழந்தையோட இதயம் எந்தவிதமான சிகிச்சைக்கும் தாங்கும் நிலையில் இல்லை. அதுவும் குறிப்பா, அவளோட இதயம் சாதாரண வளர்ச்சியில் இல்லாமல் போனதே நமக்கு பெரிய குறை.
“இப்போதைக்கு அவளோட உடல் இப்படி நீலம் பாய்வதை தடுக்க வேண்ணா, இதய வால்வுகளை மாற்றலாம். அதுக்கும் அதிகபட்சமா பத்து வருடம்தான் கேரண்டி.
“அதுக்கும் மேல, அவளோட ஹார்ட் இயங்கற நிலையில் இருந்தா மட்டுமே நாம அவ மேலே கை வைக்க முடியும். அப்படி இல்லன்னா... அந்த இதயம் எப்போ நிக்குதோ...” அவர் சொல்லிக் கொண்டே போக,
“போதும் டாக்டர்... என் பொண்ணுக்கு எதுவும் ஆகாது... நான் ஆக விட மாட்டேன்” நித்யானந்தம் தன் நெஞ்சோடு குழந்தையை இறுக்கிக் கொள்ள, அவர் கைகளில் நெளிந்தாள்.
ஒரு மாதத்துக்கு உள்ளாகவே அந்த இதய வால்வு அறுவை சிகிச்சை நடக்க, அவளது உடல் நீலம் பாய்வது நின்று போனது.
ஆனாலும் அவளிடம் யாரும் அதிர்ந்து பேசக் கூடாது, அவளுக்கு சிறு அதிர்ச்சி கூட அளிக்கக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.
கொழுப்பற்ற சத்தான உணவுகள், திட உணவு அவள் உண்ணத் துவங்க வேண்டிய நேரத்தில், அவள் அதைச் செய்யாமல் போக, நீராகாரம், அதுவும் பல வித ஊட்டச்சத்துக்குள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து செய்தார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் செஃப் ஒருவரை வேலைக்கு அமர்த்தி, மகளுக்கு தேவையான உணவுகளை கொடுக்கச் செய்தார்.
உடல் எடை போட்டுவிடக் கூடாது, கொழுப்பு சேரக் கூடாது, ஆரோக்கியமும் முக்கியம் என நித்யானந்தம் செய்த முயற்சியின் பலனோ என்னவோ, பூமிகா ஒரு நார்மல் குழந்தையாகவே வெளிப் பார்வைக்கு இருந்தாள்.
உடல் உழைப்பில் சிறிதாக ஓடினால் கூட மூச்சு வாங்க மயக்கம்போட்டு விழுந்து, நீலம் பாய்ந்துவிடும் அவளது தேகம். பள்ளி செல்லும் வயதில், சரியாக அவளை பள்ளிக்கு அனுப்பினாலும், அவள் படிக்க வேண்டும் என்றோ, மதிப்பெண் வாங்க வேண்டும் என்றோ அவர்கள் விரும்பியதே இல்லை.
இவ்வளவுதூரம் அவளைப் பார்த்தும், இரண்டாவது படிக்கையில், உடம்பில் நீலம் பூத்து அவள் மயக்கம் போட்டு விழ, உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அடுத்தகட்ட பரிசோதனையில், ‘அவளது ரத்தத்தை, அவளது இதயத்தால் பம்ப் செய்ய முடியவில்லை’ என்ற உண்மை தெரியவர, இடிந்து போனார்.
“இதென்ன டாக்டர் திடீர்ன்னு இப்படி சொல்றீங்க?” அவர் மருத்துவரிடம் கவலையாக வினவ,
“அவளுக்கு கொடுத்த பத்து வருஷத்தில் ஏழு வருஷம் முடிஞ்சு போச்சு. இன்னும் மூணு வருஷம் வேண்ணா நாம எதுவும் செய்யலாம்...” உண்மை இதுதான் என அவர் சொல்ல, நித்யானந்தத்தால் அதை ஏற்க முடியவில்லை.
“இதுக்கு வேற வழியே இல்லையா டாக்டர்?” அவர் கேட்க,
“நம்மளோட ப்ளட் எல்லாமே சில உறைநிலையில்தான் உள்ளுக்குள் ஓடிகிட்டே இருக்கும். உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்ன்னா, தண்ணி ரொம்ப லைட்டா இருக்கும், பால் ஒரு திக்னஸ்ல இருக்கும், அதுவே நம்ம ப்ளட் இன்னொரு திக்னஸ்ல இருக்கும்.
“சில மாத்திரை மூலம், ப்ளட்டோட கன்சிஸ்ட்டன்சியை நம்மளால் குறைக்க முடியும். அப்படி நாம செய்தா, ஹார்ட்டோட சின்ன இயக்கத்துக்கே ப்ளட் பாடிக்குள்ளே சர்க்குலேட் ஆகும்.
“இதில் இருக்கும் சிக்கல் என்னன்னா, நாம கொடுக்கற அந்த மாத்திரையால், ரத்தத்தோட உறையிற தன்மை ரொம்ப கம்மியாயிடும். அதாவது சாதாரணமா நமக்கு அடிபட்டா, ரத்த வர்றது சில நொடியில் நின்னு, உறைஞ்சு போய்டும்.
“ஆனா இந்த மாத்திரை சாப்ட்டா, அவளுக்கு ஏதாவது அடிபட்டா, ரத்தம் உறையாமல், நிக்காமல் வெளியேறிட்டே இருக்கும். அது ரொம்ப ஆபத்தா கூட முடியலாம்.
“பெரியவங்கன்னா, அதுக்கு ஏற்ற மாதிரி பாத்து நடந்துப்பாங்க. அதுவே குழந்தைங்க கிட்டே நாம அதை எதிர்பாக்க முடியாது. அது பெரிய ரிஸ்க்” அவர் சொல்ல, நித்யானந்தம் முகமோ கொஞ்சம் தெளிந்தது.
“நீங்க எந்த மருந்தை என் மகளுக்கு கொடுங்க டாக்டர்... நான் அவளைப் பாத்துக்கறேன்” அவர் சொல்ல,
“நீங்க பாத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும் நித்யானந்தம். மகளுக்காக ஒரு ஆம்புலன்ஸ், அதில் ஒரு நர்ஸ், வீட்டிலேயே பைவ்ஸ்டார் செஃப், இப்படி இவ்வளவு செய்திருக்கும் நீங்க, அதையும் செய்வீங்கன்னு தெரியும்” அவர் சொல்லி, அந்த மருந்தை அவளுக்கு கொடுத்தார்கள்.
அப்படியும் பத்து வருடங்கள் கேரண்டி கொடுத்திருந்த வால்வு எட்டே வருடங்களில் அதன் வேலையைச் சரிவரச் செய்யாமல் போக, அடுத்ததாக அதே அறுவை சிகிச்சையைச் செய்து வால்வை மாற்றினார்கள்.
ஆனால் அந்த வால்வுக்கும் பத்து வருட கேரண்டி கொடுத்தவர், அடுத்த முறை, திறந்தநிலை அறுவைசிகிச்சை இல்லாமல், சிறு துளை மட்டுமே போட்டு அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு நம் மருத்துவத்துறை முன்னேறி இருக்கும் எனச் சொன்னதைக் கேட்டு அவரால் சந்தோஷப்பட முடியவில்லை.
ஏனென்றால் அடுத்த அறுவைசிகிச்சையை தாங்கும் அளவுக்கு அவளது இதயம் பலம் மிக்கதாக இருக்குமா? இல்லையா? என கணிக்க முடியாது எனச் சொல்லி இருக்க அவரால் சந்தோஷப்பட முடியுமா என்ன?
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பூமிகாவுக்கு நட்போ, பேச்சுத் துணைக்கு ஆளோ என யாருமே இருந்தது இல்லை.
சொல்லப்போனால் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, அவளிடம் முகம் கொடுத்து பேசவே ஆசிரியர் முதல், அனைவரும் பயப்பட்டார்கள்.
‘அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அவளை பாத்துக்கறது மட்டும்தான் உங்க வேலையா இருக்கணும்’ என அவர் சத்தம் போடுகையில் யார் என்ன செய்வார்கள்?
பூமிகாவிடம் பேசவே மாட்டார்கள் என்கையில் மற்றது எல்லாம் எப்படியாம்? அவள் ஆறாவது படிக்கையில் பள்ளியை மாற்றி இருக்க, அங்கே அவளுக்கு கிடைத்த நட்புதான் தேன்மொழி.
பூமிகா யாரிடமும் ஒட்டுதலோடு இருப்பதோ, பேசுவதோ கிடையாது. அதிகம் பேசினால் அவளுக்கு சற்று மூச்சுவாங்கும் என்பதால், அவள் அதைக் கூட செய்வது இல்லை.
வகுப்பறையில் மாணவ, மாணவிகள் எல்லாம் அவளை ஒரு கேலிப் பொருளாக மட்டுமே பார்த்தார்கள்.
ஆனால் அங்கே அவளிடம் பேசிய ஒரே ஜீவன் தேன்மொழி. “ஹாய்... நீயும் ஸ்கூலுக்கு புதுசா? நானும் புதுசுதான்...” தந்தையின் வேலை விஷயமாக தேன்மொழி சென்னைக்கு வந்திருக்க, அவளுக்கும் அங்கே புது நட்புக்கள் கிடைக்கவில்லை என்பதால், பூமிகாவிடம் பேச்சு கொடுத்தாள்.
கிச்சனுக்குள் தேன்மொழி தண்ணீரை சுட வைக்க, அவள் நினைவுகளோ பூமிகாவையே சுற்றி வந்தது.
‘பூமிகா’ நித்யானந்தம், பிரபா இவர்களின் ஒரே மகள். மூத்தவன், சஞ்சித்துக்கும், இளையவன் ப்ரதிக்குக்கும் பிறகு, தனக்கு இன்னொரு குழந்தையே வேண்டாம் என முடிவெடுத்த பிரபாவை, பிடிவாதமாக பெண் குழந்தை வேண்டும் என சாதித்துக் கொண்டார் நித்யானந்தம்.
அவரோடு கூட அவனது தாய் தெய்வாவுக்கும் அந்த பிடிவாதம் இருந்தது என்பதால், பிரபாவால் எதுவும் செய்ய முடியாமல் போனது.
கருவில் இருக்கும் குழந்தை ‘பெண்’ எனத் தெரிந்தது முதலே, நித்யானந்தத்தை கையில் பிடிக்க முடியவில்லை.
அவர்களது குடும்பத்தொழிலான ஷூ கம்பெனி சற்று தோய்வில் சென்றுகொண்டிருக்க, மகள் பிறந்த நேரம், வெளிநாட்டு ஆர்டர் ஒன்று எதிர்பாராமல் கிடைக்க, அவரது தொழில் அசுர வளர்ச்சியைக் கண்டது.
ஒரு ஷிப்ட் நடந்த ஃபேக்டரி மூன்று ஷிப்ட் நிற்காமல் வேலை நடக்க, மகள் பிறந்த சேதியை கொண்டாட ஓடி வந்தவருக்கு இடியென ஒரு சேதி சொல்லப் பட்டது.
பிறந்த குழந்தையின் உடல் சில நிமிடங்களிலேயே நீலம் பூக்க, குழந்தையை தூக்கிக்கொண்டு குழந்தைகள் நல மருத்துவரிடம் ஓடினார்கள்.
உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, சில பல சோதனைகளின் முடிவில், குழந்தையின் இதயம் முழுதாக வளர்ச்சியடையவில்லை என்ற உண்மையையையும், அதன் வால்வுகள் கூட சுருங்கிப் போயிருப்பதாகவும் சொல்ல, நிலை குலைந்து போனார்.
“ஏதாவது செய்ங்க டாக்டர்...” நித்யானந்தம் கதறினால், பிரபா ஒரு இறுக்கத்துக்குப் போயிருந்தார். அவள் மாமியாரையும், கணவனையும் பார்த்த பார்வையில் சிறிதும் மரியாதை இருக்கவில்லை.
“கொஞ்சம் பொறுமையா இருங்க, முதல்கட்ட சோதனையில் நமக்கு இவ்வளவுதான் தெரிய வந்திருக்கு. அடுத்த கட்ட பரிசோதனையோட முடிவுகளை வச்சுத்தான் நாம எதையும் சொல்ல முடியும்” சொன்னவர், ஸ்பெஷலிஸ்ட்க்கு பரிந்துரைக்க, குழந்தையை நித்யானந்தம் தான் தூக்கிக்கொண்டு ஓடினார்.
அடுத்து வந்த நாட்களில் குழந்தையின் பரிசோதனைகள் துவங்க, எத்தனையோ விதமான சோதனைகள், சில பல ஒப்பீனியன்கள் என சென்றும் நித்யானந்தம் மகிழும் விதமாக யாரும் எதையும் சொல்லவில்லை.
“குழந்தையோட இதயம் எந்தவிதமான சிகிச்சைக்கும் தாங்கும் நிலையில் இல்லை. அதுவும் குறிப்பா, அவளோட இதயம் சாதாரண வளர்ச்சியில் இல்லாமல் போனதே நமக்கு பெரிய குறை.
“இப்போதைக்கு அவளோட உடல் இப்படி நீலம் பாய்வதை தடுக்க வேண்ணா, இதய வால்வுகளை மாற்றலாம். அதுக்கும் அதிகபட்சமா பத்து வருடம்தான் கேரண்டி.
“அதுக்கும் மேல, அவளோட ஹார்ட் இயங்கற நிலையில் இருந்தா மட்டுமே நாம அவ மேலே கை வைக்க முடியும். அப்படி இல்லன்னா... அந்த இதயம் எப்போ நிக்குதோ...” அவர் சொல்லிக் கொண்டே போக,
“போதும் டாக்டர்... என் பொண்ணுக்கு எதுவும் ஆகாது... நான் ஆக விட மாட்டேன்” நித்யானந்தம் தன் நெஞ்சோடு குழந்தையை இறுக்கிக் கொள்ள, அவர் கைகளில் நெளிந்தாள்.
ஒரு மாதத்துக்கு உள்ளாகவே அந்த இதய வால்வு அறுவை சிகிச்சை நடக்க, அவளது உடல் நீலம் பாய்வது நின்று போனது.
ஆனாலும் அவளிடம் யாரும் அதிர்ந்து பேசக் கூடாது, அவளுக்கு சிறு அதிர்ச்சி கூட அளிக்கக் கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.
கொழுப்பற்ற சத்தான உணவுகள், திட உணவு அவள் உண்ணத் துவங்க வேண்டிய நேரத்தில், அவள் அதைச் செய்யாமல் போக, நீராகாரம், அதுவும் பல வித ஊட்டச்சத்துக்குள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து செய்தார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் செஃப் ஒருவரை வேலைக்கு அமர்த்தி, மகளுக்கு தேவையான உணவுகளை கொடுக்கச் செய்தார்.
உடல் எடை போட்டுவிடக் கூடாது, கொழுப்பு சேரக் கூடாது, ஆரோக்கியமும் முக்கியம் என நித்யானந்தம் செய்த முயற்சியின் பலனோ என்னவோ, பூமிகா ஒரு நார்மல் குழந்தையாகவே வெளிப் பார்வைக்கு இருந்தாள்.
உடல் உழைப்பில் சிறிதாக ஓடினால் கூட மூச்சு வாங்க மயக்கம்போட்டு விழுந்து, நீலம் பாய்ந்துவிடும் அவளது தேகம். பள்ளி செல்லும் வயதில், சரியாக அவளை பள்ளிக்கு அனுப்பினாலும், அவள் படிக்க வேண்டும் என்றோ, மதிப்பெண் வாங்க வேண்டும் என்றோ அவர்கள் விரும்பியதே இல்லை.
இவ்வளவுதூரம் அவளைப் பார்த்தும், இரண்டாவது படிக்கையில், உடம்பில் நீலம் பூத்து அவள் மயக்கம் போட்டு விழ, உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அடுத்தகட்ட பரிசோதனையில், ‘அவளது ரத்தத்தை, அவளது இதயத்தால் பம்ப் செய்ய முடியவில்லை’ என்ற உண்மை தெரியவர, இடிந்து போனார்.
“இதென்ன டாக்டர் திடீர்ன்னு இப்படி சொல்றீங்க?” அவர் மருத்துவரிடம் கவலையாக வினவ,
“அவளுக்கு கொடுத்த பத்து வருஷத்தில் ஏழு வருஷம் முடிஞ்சு போச்சு. இன்னும் மூணு வருஷம் வேண்ணா நாம எதுவும் செய்யலாம்...” உண்மை இதுதான் என அவர் சொல்ல, நித்யானந்தத்தால் அதை ஏற்க முடியவில்லை.
“இதுக்கு வேற வழியே இல்லையா டாக்டர்?” அவர் கேட்க,
“நம்மளோட ப்ளட் எல்லாமே சில உறைநிலையில்தான் உள்ளுக்குள் ஓடிகிட்டே இருக்கும். உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்ன்னா, தண்ணி ரொம்ப லைட்டா இருக்கும், பால் ஒரு திக்னஸ்ல இருக்கும், அதுவே நம்ம ப்ளட் இன்னொரு திக்னஸ்ல இருக்கும்.
“சில மாத்திரை மூலம், ப்ளட்டோட கன்சிஸ்ட்டன்சியை நம்மளால் குறைக்க முடியும். அப்படி நாம செய்தா, ஹார்ட்டோட சின்ன இயக்கத்துக்கே ப்ளட் பாடிக்குள்ளே சர்க்குலேட் ஆகும்.
“இதில் இருக்கும் சிக்கல் என்னன்னா, நாம கொடுக்கற அந்த மாத்திரையால், ரத்தத்தோட உறையிற தன்மை ரொம்ப கம்மியாயிடும். அதாவது சாதாரணமா நமக்கு அடிபட்டா, ரத்த வர்றது சில நொடியில் நின்னு, உறைஞ்சு போய்டும்.
“ஆனா இந்த மாத்திரை சாப்ட்டா, அவளுக்கு ஏதாவது அடிபட்டா, ரத்தம் உறையாமல், நிக்காமல் வெளியேறிட்டே இருக்கும். அது ரொம்ப ஆபத்தா கூட முடியலாம்.
“பெரியவங்கன்னா, அதுக்கு ஏற்ற மாதிரி பாத்து நடந்துப்பாங்க. அதுவே குழந்தைங்க கிட்டே நாம அதை எதிர்பாக்க முடியாது. அது பெரிய ரிஸ்க்” அவர் சொல்ல, நித்யானந்தம் முகமோ கொஞ்சம் தெளிந்தது.
“நீங்க எந்த மருந்தை என் மகளுக்கு கொடுங்க டாக்டர்... நான் அவளைப் பாத்துக்கறேன்” அவர் சொல்ல,
“நீங்க பாத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும் நித்யானந்தம். மகளுக்காக ஒரு ஆம்புலன்ஸ், அதில் ஒரு நர்ஸ், வீட்டிலேயே பைவ்ஸ்டார் செஃப், இப்படி இவ்வளவு செய்திருக்கும் நீங்க, அதையும் செய்வீங்கன்னு தெரியும்” அவர் சொல்லி, அந்த மருந்தை அவளுக்கு கொடுத்தார்கள்.
அப்படியும் பத்து வருடங்கள் கேரண்டி கொடுத்திருந்த வால்வு எட்டே வருடங்களில் அதன் வேலையைச் சரிவரச் செய்யாமல் போக, அடுத்ததாக அதே அறுவை சிகிச்சையைச் செய்து வால்வை மாற்றினார்கள்.
ஆனால் அந்த வால்வுக்கும் பத்து வருட கேரண்டி கொடுத்தவர், அடுத்த முறை, திறந்தநிலை அறுவைசிகிச்சை இல்லாமல், சிறு துளை மட்டுமே போட்டு அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு நம் மருத்துவத்துறை முன்னேறி இருக்கும் எனச் சொன்னதைக் கேட்டு அவரால் சந்தோஷப்பட முடியவில்லை.
ஏனென்றால் அடுத்த அறுவைசிகிச்சையை தாங்கும் அளவுக்கு அவளது இதயம் பலம் மிக்கதாக இருக்குமா? இல்லையா? என கணிக்க முடியாது எனச் சொல்லி இருக்க அவரால் சந்தோஷப்பட முடியுமா என்ன?
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பூமிகாவுக்கு நட்போ, பேச்சுத் துணைக்கு ஆளோ என யாருமே இருந்தது இல்லை.
சொல்லப்போனால் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி, அவளிடம் முகம் கொடுத்து பேசவே ஆசிரியர் முதல், அனைவரும் பயப்பட்டார்கள்.
‘அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அவளை பாத்துக்கறது மட்டும்தான் உங்க வேலையா இருக்கணும்’ என அவர் சத்தம் போடுகையில் யார் என்ன செய்வார்கள்?
பூமிகாவிடம் பேசவே மாட்டார்கள் என்கையில் மற்றது எல்லாம் எப்படியாம்? அவள் ஆறாவது படிக்கையில் பள்ளியை மாற்றி இருக்க, அங்கே அவளுக்கு கிடைத்த நட்புதான் தேன்மொழி.
பூமிகா யாரிடமும் ஒட்டுதலோடு இருப்பதோ, பேசுவதோ கிடையாது. அதிகம் பேசினால் அவளுக்கு சற்று மூச்சுவாங்கும் என்பதால், அவள் அதைக் கூட செய்வது இல்லை.
வகுப்பறையில் மாணவ, மாணவிகள் எல்லாம் அவளை ஒரு கேலிப் பொருளாக மட்டுமே பார்த்தார்கள்.
ஆனால் அங்கே அவளிடம் பேசிய ஒரே ஜீவன் தேன்மொழி. “ஹாய்... நீயும் ஸ்கூலுக்கு புதுசா? நானும் புதுசுதான்...” தந்தையின் வேலை விஷயமாக தேன்மொழி சென்னைக்கு வந்திருக்க, அவளுக்கும் அங்கே புது நட்புக்கள் கிடைக்கவில்லை என்பதால், பூமிகாவிடம் பேச்சு கொடுத்தாள்.