பகுதி – 5.
பூமிகா மறுநாள் பள்ளிக்குச் செல்லவே அதிகம் யோசித்தாள். அவள் பள்ளிக்குச் செல்வதே அவளது பொழுதுகள் போக வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, மற்றபடி அவள் படிக்க வேண்டும் என அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.
மருத்துவரின் யோசனையே கூட அதுதான். “அவளை நீங்க வீட்டிலேயே வச்சிருந்தா, அவ உங்களை விட்டு போற வேகம் அதிகமாகும். அதுவே அவளுக்கு சின்னதா ஒரு மாறுதல் இருந்தாலும், அது அவளைக் கொஞ்சம் இயல்பா இருக்க விடலாம்” என்ற அவரது வார்த்தைகள்தான் நித்யானந்தத்தை மகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தது.
அன்றும் மகள் கூடவே அவரும் கிளம்பி வர, மகளது முகம் சற்று வாடிக் கிடப்பதைப் பார்த்து கவலையானார்.
“என்ன பூமி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவர் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.
அவளுக்காக மட்டுமே வாழும் ஜீவன் அவர். அவரிடம் தன் கவலையைச் சொன்னால், அவர் வருத்தப்படுவார் என்பதை விட, அதை அழிக்க முயல்வார், கோபம் கொள்வார் என்பதுதான் அவளுக்கு பெருத்த யோசனையாக இருந்தது.
“அந்த தேன்மொழி உன்கிட்டே பேசுவாளா? மாட்டாளான்னு யோசிக்கறியா? நான் வேண்ணா அவகிட்டே, உன்னோட ஃப்ரண்டா இருக்க சொல்லி கேக்கவா?” அவர் கேட்க, அவளோ பதறினாள்.
“வேண்டாம்ப்பா... நீங்க அவகிட்டே பேச வேண்டாம்ப்பா... பிளீஸ்...” அவளையும் மிரட்டுவாரே என்பதுதான் அவளது பதட்டத்துக்கு காரணம்.
அது அவருக்கும் புரிய, “உன்னை தொல்லை செய்யறவங்க மேலேதான் அப்பா கோபப்படுவேன் பூமி. உனக்கு புடிச்சவங்க கிட்டே அப்பா கோபப்படுவேனா?” அவர் அவள் தலையை வருட, அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அதைப் பார்த்தவாறே அங்கே வந்த பிரபா, “என்ன அப்பாவும் பொண்ணும் வாசல்ல வச்சு கொஞ்சிக்கறீங்க?” அவர் கேட்க, தகப்பனை விட்டு விலகி நின்றாள்.
“அப்பா, நான் கிளம்பறேன்ப்பா...” இப்படிச் சொன்ன மகளை ஆச்சரியமாகப் பார்த்தார்.
என்றைக்கும் அவள் பள்ளி செல்ல நித்யானந்தம் வேண்டும். அவர் இல்லாமல் அவள் செல்லவே மாட்டாள். அப்படி இருக்கையில், இன்று அவளாகவே கிளம்புகிறேன் எனச் சொன்னால் ஆச்சரியப்பட மாட்டாரா என்ன?
“அப்பா வர வேண்டாமா பூமி? நீ மட்டும் தனியாவா போற?” தகப்பன் கேட்க, அமைதியாக தலை அசைத்தவள், தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டாள்.
மகளது ஏக்கப் பார்வை தகப்பனுக்குப் புரிய, “பொண்ணுகிட்டே ஆசையா நாலு வார்த்தை பேசலாமே பிரபா” கோரிக்கையாகவே கேட்டார்.
“ஏன்... நீங்க பேசறது போதாதாக்கும்? இதிலே நான் வேற பேசணுமா என்ன? அவளைப் பாத்தாலே, எனக்கு நீங்க செஞ்சதுதான் ஞாபகத்துக்கு வருது” இப்படிச் சொன்ன மனைவியை வேதனையாகப் பார்த்தார்.
“பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய குத்தமா பிரபா?” அவர் குரலில் அத்தை வலி, ஆதங்கம்.
“அது குத்தமில்லை, அதுக்காக என்னை கட்டாயப்படுத்தினீங்க பாத்தீங்களா? அது குத்தம். உங்க அம்மாவோட சேர்ந்து, என்னைப் பாடா படுத்தினீங்களே, அதுக்குத்தான் உங்களுக்கு இப்படி ஒரு பொண்ணு வந்து பொறந்திருக்கா” அவர் ஆத்திரமாக கத்த, மனைவியை அமைதியாக ஏறிட்டார்.
“அவ நார்மலா இருந்திருந்தாலும் அவகிட்டே இப்படித்தான் நடந்துட்டு இருப்பியா பிரபா?” தொண்டை அடைக்க அவர் கேட்க, பிரபா கொஞ்சமும் அசையவில்லை.
“அதுதான் இல்லையே... பெத்து கொடுத்ததோட நம்மளை விட்டுடுவாங்கன்னு பாத்தா... காலம் முழுக்க தூக்கி சுமக்கற பாரத்தை இல்ல அந்த கடவுள் கொடுத்திருக்கார்.
“நீங்கதான பொண்ணு வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டீங்க... வச்சு கொண்டாடுங்க, என்னால் முடியாது” வெடுக்கென சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட, நித்யானந்தமும் அப்படியே கிளம்பிவிட்டார்.
பூமிகா பள்ளிக்குச் சென்று அவளுக்காக காத்திருக்க, அவளை ஏமாற்றாமல் பள்ளிக்கு வந்த தேன்மொழி, அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.
“ஹாய்... குட் மார்னிங்... நான் உனக்கு ஒண்ணு எடுத்துட்டு வந்தேன்” சொன்னவள், தன் பையில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொடுக்க, கண்கள் மின்ன அதைப் பெற்றுக் கொண்டாள்.
அதை அவள் தன் பைக்குள் பத்திரப்படுத்த, “சாப்பிடல?” தேன்மொழி அவளிடம் கேட்டாள்.
“ம்ஹும்... சாக்லேட் சாப்ட்டா சளி வந்துடும்... எனக்கு அது ஒத்துக்காது”.
“ஹையோ... இது தெரியாம நான் வாங்கிட்டு வந்துட்டேனே... அப்போ என்கிட்டேயே கொடுத்துடு” அவளுக்குத் தன்னால் ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்ற பதட்டம் அவளிடம் வெளிப்பட்டது.
“இல்ல, நான் சாப்பிட மாட்டேன்... பத்திரமா வச்சுக்கறேன்” முதல் முதலாக மூன்றாவது மனிதர்களிடம் இருந்து அவள் வாங்கும் முதல் பரிசு அவளை அதை திருப்பிக் கொடுக்க அனுமதிக்கவில்லை.
அவளது நல்ல நேரமோ, இல்லை கெட்ட நேரமோ, பள்ளி பாட வேளை துவங்கிய சற்று நேரத்திலேயே கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தாள். அவள் நெளிவதைப் பார்த்த தேன்மொழி, அவளைக் கேள்வியாக ஏறிட்டாள்.
“ஒண்ணும் இல்ல... நீ பாடத்தை கவனி...” பூமிகா சொல்ல, திரும்பிக் கொண்டாலும், அவளை கவனித்துக் கொண்டே இருந்தாள்.
பல நிமிடங்கள் கடக்க, ஓய்வறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றவே, “மிஸ்... கேன் ஐ கோ டூ வாஷ்ரூம்?” பூமிகா எழுந்து கேட்க, அவளை அங்கே யாரும் கேள்வி கேட்பதோ, தடுப்பதோ இல்லை என்பதால், ஆசிரியர் அனுமதித்தார்.
அவள் சற்று முன்னால் செல்லவே, அப்பொழுதுதான் தேன்மொழி, பூமிகாவின் ஆடையில் அந்த சிறு கறையை கவனித்தாள். சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவள், “மிஸ்... மீ டூ...” அவள் கேட்க, ஆசிரியரோ அவளை முறைத்தார்.
“வாட் தேன்மொழி... அவளுக்கு படிக்க வேண்டாம்... ஆனா நீ படிச்சாகணும், சும்மா அவ பின்னாடியே சுத்தணும்னு பாக்கற?” அவர் சாட, பூமிகா வகுப்புக்கு வெளியே நின்று தேன்மொழியைப் பார்த்தாள்.
ஆனால் தேன்மொழி எதைப்பற்றியும் கவலைப் படாமல், வேகமாக ஆசிரியரின் அருகே வந்தவள், அவர் காதுக்குள் எதையோ சொல்ல, அவர் பெரும் பதட்டத்துக்கு உள்ளானார்.
“என்ன...? என்ன சொல்ற நீ?” பூமிகா எப்படி ரியாக்ட் செய்வாளோ எனத் தெரியாத பதட்டத்தில் அவர் இருந்தார்.
அதென்னவோ பூமிகா விஷயத்தில் அங்கிருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு பயம் தான்.
“நான் பேசிக்கறேன் மிஸ்... கன்ஃபாம் பண்ணிட்டு சொல்றேன்” அவருக்கு இருந்த பதட்டத்தில், ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?’ என எதிர் கேள்வி கேட்பதைக் கூட மறந்திருந்தார்.
சட்டென தெளிந்து, “நானும் வரவா?” அவர் கேட்க,
“இல்ல மிஸ்...” சொன்னவள் வெளியே ஓடினாள். அவள் செல்லவே, பக்கத்து வகுப்பறை ஆசிரியரிடம் தன் வகுப்பை பார்க்கச் சொல்லிவிட்டு, ஓய்வறையை நோக்கி அவரும் சென்றார்.
பூமிகா தன்னைத் தானே கண்டுகொள்ளும் முன்பாக அவளைப் பிடித்துக் கொண்டாள் தேன்மொழி.
“தேனு... நீ எதுக்கு வந்த? நான் ஓகே தான்... நீ கிளாசுக்கு போ...” சொன்னவள் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைய முயல, அவளோ அதை அனுமதிக்கவில்லை.
“பூமி... உனக்கு நாம எல்லாம் எப்படி வயசுக்கு வருவோம்ன்னு தெரியுமா?” எந்தவிதமான பூச்சும், மழுப்பலும் இல்லாமல், நேரடியாக அவளிடம் கேட்டாள்.
“அது எதுக்கு இப்போ?” அவளுக்கு எதுவும் புரியவில்லை.
“நீ சொல்லு... எனக்குத் தெரிஞ்சாகணும்”.
“ஏய்... இதையெல்லாமா கேப்பாங்க...? எனக்கு அதெல்லாம் தெரியாது போ” திடுமென இதைப்பற்றி பேசினால், அவளுக்கு அதை எப்படி எடுக்கவென்று தெரியாமல், அந்த பேச்சை தவிர்க்க முயன்றாள்.
“பூமி... நான் ஒண்ணு சொன்னா நீ டென்ஷன் ஆக கூடாது” அவள் சொல்லிக் கொண்டு இருக்கையில், ஆசிரியரும் உள்ளே வந்திருந்தார்.
“என்ன...? என்னன்னு சொல்லு...?” ஏதும் புரியாத குழப்பமே அவளிடம் மிஞ்சிற்று.
“எனக்கென்னவோ நீ பெரிய போண்ணாயிட்டன்னு தோணுது. உள்ளே போய்ட்டு, ஏதாவது... ப்ளட் பாத்தன்னா டென்ஷன் ஆகாதே. அது இயற்கை தான்... சரியா?” கேட்டவள், அவளது கரத்தை அத்தனை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.
பூமிகா திடுமென மூச்சுக்குத் திணறுவதுபோல் தோன்ற, ஆசிரியர் கையோடு கொண்டு வந்திருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை அவளுக்கு அணிவித்தார்.
கூடவே அவளை உள்ளே இருந்து வெளியே அழைத்து வந்து நிறுத்தியவர், “பூமிகா ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...” ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருக்க, சில பல நிமிடங்களுக்குள் தெளிந்தாள்.
இப்படியான காட்சிகள் அங்கே மாதத்துக்கு ஒரு முறையாவது நடக்கும் என்பதால், அனைவரும் கடந்து செல்ல, தேன்மொழி வெலவெலத்துப் போனாள்.
இப்படியான காட்சிகளை எல்லாம் அவள் படத்தில், அவசரசிகிச்சைப் பிரிவில் செய்வதை மட்டுமே பார்த்திருக்கிறாள்.
அப்படியும் பூமிகாவின் கரத்தை அவள் விடாமல் கெட்டியாக பற்றிக் கொண்டிருக்க, “தேன்மொழி, முதல்ல ஆம்புலன்ஸை வரச் சொல்லு... போ...” ஆசிரியர் குரல் கொடுக்க,
“வேண்டாம் மிஸ்... நான் ஓகே தான்...” மாஸ்க்கை விலக்கிய பூமிகா சொல்ல, ஆசிரியர் சற்று இயல்பானார்.
“நிஜமாவே ஓகேயா? இப்போ போய் செக் பண்ணிட்டு வர்றியா?” அவர் கேட்க, தேன்மொழியின் கரத்தை விடாமல் பற்றியவாறே உள்ளே அழைத்துச் சென்றாள்.
தேன்மொழியின் முகம் சற்று வெளிறிப் போயிருக்க, “என்ன பயந்துட்டியா?” அவள் கேட்க,
பூமிகா மறுநாள் பள்ளிக்குச் செல்லவே அதிகம் யோசித்தாள். அவள் பள்ளிக்குச் செல்வதே அவளது பொழுதுகள் போக வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, மற்றபடி அவள் படிக்க வேண்டும் என அங்கே யாரும் எதிர்பார்க்கவில்லை.
மருத்துவரின் யோசனையே கூட அதுதான். “அவளை நீங்க வீட்டிலேயே வச்சிருந்தா, அவ உங்களை விட்டு போற வேகம் அதிகமாகும். அதுவே அவளுக்கு சின்னதா ஒரு மாறுதல் இருந்தாலும், அது அவளைக் கொஞ்சம் இயல்பா இருக்க விடலாம்” என்ற அவரது வார்த்தைகள்தான் நித்யானந்தத்தை மகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தது.
அன்றும் மகள் கூடவே அவரும் கிளம்பி வர, மகளது முகம் சற்று வாடிக் கிடப்பதைப் பார்த்து கவலையானார்.
“என்ன பூமி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவர் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.
அவளுக்காக மட்டுமே வாழும் ஜீவன் அவர். அவரிடம் தன் கவலையைச் சொன்னால், அவர் வருத்தப்படுவார் என்பதை விட, அதை அழிக்க முயல்வார், கோபம் கொள்வார் என்பதுதான் அவளுக்கு பெருத்த யோசனையாக இருந்தது.
“அந்த தேன்மொழி உன்கிட்டே பேசுவாளா? மாட்டாளான்னு யோசிக்கறியா? நான் வேண்ணா அவகிட்டே, உன்னோட ஃப்ரண்டா இருக்க சொல்லி கேக்கவா?” அவர் கேட்க, அவளோ பதறினாள்.
“வேண்டாம்ப்பா... நீங்க அவகிட்டே பேச வேண்டாம்ப்பா... பிளீஸ்...” அவளையும் மிரட்டுவாரே என்பதுதான் அவளது பதட்டத்துக்கு காரணம்.
அது அவருக்கும் புரிய, “உன்னை தொல்லை செய்யறவங்க மேலேதான் அப்பா கோபப்படுவேன் பூமி. உனக்கு புடிச்சவங்க கிட்டே அப்பா கோபப்படுவேனா?” அவர் அவள் தலையை வருட, அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அதைப் பார்த்தவாறே அங்கே வந்த பிரபா, “என்ன அப்பாவும் பொண்ணும் வாசல்ல வச்சு கொஞ்சிக்கறீங்க?” அவர் கேட்க, தகப்பனை விட்டு விலகி நின்றாள்.
“அப்பா, நான் கிளம்பறேன்ப்பா...” இப்படிச் சொன்ன மகளை ஆச்சரியமாகப் பார்த்தார்.
என்றைக்கும் அவள் பள்ளி செல்ல நித்யானந்தம் வேண்டும். அவர் இல்லாமல் அவள் செல்லவே மாட்டாள். அப்படி இருக்கையில், இன்று அவளாகவே கிளம்புகிறேன் எனச் சொன்னால் ஆச்சரியப்பட மாட்டாரா என்ன?
“அப்பா வர வேண்டாமா பூமி? நீ மட்டும் தனியாவா போற?” தகப்பன் கேட்க, அமைதியாக தலை அசைத்தவள், தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டாள்.
மகளது ஏக்கப் பார்வை தகப்பனுக்குப் புரிய, “பொண்ணுகிட்டே ஆசையா நாலு வார்த்தை பேசலாமே பிரபா” கோரிக்கையாகவே கேட்டார்.
“ஏன்... நீங்க பேசறது போதாதாக்கும்? இதிலே நான் வேற பேசணுமா என்ன? அவளைப் பாத்தாலே, எனக்கு நீங்க செஞ்சதுதான் ஞாபகத்துக்கு வருது” இப்படிச் சொன்ன மனைவியை வேதனையாகப் பார்த்தார்.
“பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய குத்தமா பிரபா?” அவர் குரலில் அத்தை வலி, ஆதங்கம்.
“அது குத்தமில்லை, அதுக்காக என்னை கட்டாயப்படுத்தினீங்க பாத்தீங்களா? அது குத்தம். உங்க அம்மாவோட சேர்ந்து, என்னைப் பாடா படுத்தினீங்களே, அதுக்குத்தான் உங்களுக்கு இப்படி ஒரு பொண்ணு வந்து பொறந்திருக்கா” அவர் ஆத்திரமாக கத்த, மனைவியை அமைதியாக ஏறிட்டார்.
“அவ நார்மலா இருந்திருந்தாலும் அவகிட்டே இப்படித்தான் நடந்துட்டு இருப்பியா பிரபா?” தொண்டை அடைக்க அவர் கேட்க, பிரபா கொஞ்சமும் அசையவில்லை.
“அதுதான் இல்லையே... பெத்து கொடுத்ததோட நம்மளை விட்டுடுவாங்கன்னு பாத்தா... காலம் முழுக்க தூக்கி சுமக்கற பாரத்தை இல்ல அந்த கடவுள் கொடுத்திருக்கார்.
“நீங்கதான பொண்ணு வேணும்னு ரொம்ப ஆசைப்பட்டீங்க... வச்சு கொண்டாடுங்க, என்னால் முடியாது” வெடுக்கென சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட, நித்யானந்தமும் அப்படியே கிளம்பிவிட்டார்.
பூமிகா பள்ளிக்குச் சென்று அவளுக்காக காத்திருக்க, அவளை ஏமாற்றாமல் பள்ளிக்கு வந்த தேன்மொழி, அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.
“ஹாய்... குட் மார்னிங்... நான் உனக்கு ஒண்ணு எடுத்துட்டு வந்தேன்” சொன்னவள், தன் பையில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொடுக்க, கண்கள் மின்ன அதைப் பெற்றுக் கொண்டாள்.
அதை அவள் தன் பைக்குள் பத்திரப்படுத்த, “சாப்பிடல?” தேன்மொழி அவளிடம் கேட்டாள்.
“ம்ஹும்... சாக்லேட் சாப்ட்டா சளி வந்துடும்... எனக்கு அது ஒத்துக்காது”.
“ஹையோ... இது தெரியாம நான் வாங்கிட்டு வந்துட்டேனே... அப்போ என்கிட்டேயே கொடுத்துடு” அவளுக்குத் தன்னால் ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்ற பதட்டம் அவளிடம் வெளிப்பட்டது.
“இல்ல, நான் சாப்பிட மாட்டேன்... பத்திரமா வச்சுக்கறேன்” முதல் முதலாக மூன்றாவது மனிதர்களிடம் இருந்து அவள் வாங்கும் முதல் பரிசு அவளை அதை திருப்பிக் கொடுக்க அனுமதிக்கவில்லை.
அவளது நல்ல நேரமோ, இல்லை கெட்ட நேரமோ, பள்ளி பாட வேளை துவங்கிய சற்று நேரத்திலேயே கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தாள். அவள் நெளிவதைப் பார்த்த தேன்மொழி, அவளைக் கேள்வியாக ஏறிட்டாள்.
“ஒண்ணும் இல்ல... நீ பாடத்தை கவனி...” பூமிகா சொல்ல, திரும்பிக் கொண்டாலும், அவளை கவனித்துக் கொண்டே இருந்தாள்.
பல நிமிடங்கள் கடக்க, ஓய்வறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றவே, “மிஸ்... கேன் ஐ கோ டூ வாஷ்ரூம்?” பூமிகா எழுந்து கேட்க, அவளை அங்கே யாரும் கேள்வி கேட்பதோ, தடுப்பதோ இல்லை என்பதால், ஆசிரியர் அனுமதித்தார்.
அவள் சற்று முன்னால் செல்லவே, அப்பொழுதுதான் தேன்மொழி, பூமிகாவின் ஆடையில் அந்த சிறு கறையை கவனித்தாள். சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவள், “மிஸ்... மீ டூ...” அவள் கேட்க, ஆசிரியரோ அவளை முறைத்தார்.
“வாட் தேன்மொழி... அவளுக்கு படிக்க வேண்டாம்... ஆனா நீ படிச்சாகணும், சும்மா அவ பின்னாடியே சுத்தணும்னு பாக்கற?” அவர் சாட, பூமிகா வகுப்புக்கு வெளியே நின்று தேன்மொழியைப் பார்த்தாள்.
ஆனால் தேன்மொழி எதைப்பற்றியும் கவலைப் படாமல், வேகமாக ஆசிரியரின் அருகே வந்தவள், அவர் காதுக்குள் எதையோ சொல்ல, அவர் பெரும் பதட்டத்துக்கு உள்ளானார்.
“என்ன...? என்ன சொல்ற நீ?” பூமிகா எப்படி ரியாக்ட் செய்வாளோ எனத் தெரியாத பதட்டத்தில் அவர் இருந்தார்.
அதென்னவோ பூமிகா விஷயத்தில் அங்கிருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு பயம் தான்.
“நான் பேசிக்கறேன் மிஸ்... கன்ஃபாம் பண்ணிட்டு சொல்றேன்” அவருக்கு இருந்த பதட்டத்தில், ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?’ என எதிர் கேள்வி கேட்பதைக் கூட மறந்திருந்தார்.
சட்டென தெளிந்து, “நானும் வரவா?” அவர் கேட்க,
“இல்ல மிஸ்...” சொன்னவள் வெளியே ஓடினாள். அவள் செல்லவே, பக்கத்து வகுப்பறை ஆசிரியரிடம் தன் வகுப்பை பார்க்கச் சொல்லிவிட்டு, ஓய்வறையை நோக்கி அவரும் சென்றார்.
பூமிகா தன்னைத் தானே கண்டுகொள்ளும் முன்பாக அவளைப் பிடித்துக் கொண்டாள் தேன்மொழி.
“தேனு... நீ எதுக்கு வந்த? நான் ஓகே தான்... நீ கிளாசுக்கு போ...” சொன்னவள் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைய முயல, அவளோ அதை அனுமதிக்கவில்லை.
“பூமி... உனக்கு நாம எல்லாம் எப்படி வயசுக்கு வருவோம்ன்னு தெரியுமா?” எந்தவிதமான பூச்சும், மழுப்பலும் இல்லாமல், நேரடியாக அவளிடம் கேட்டாள்.
“அது எதுக்கு இப்போ?” அவளுக்கு எதுவும் புரியவில்லை.
“நீ சொல்லு... எனக்குத் தெரிஞ்சாகணும்”.
“ஏய்... இதையெல்லாமா கேப்பாங்க...? எனக்கு அதெல்லாம் தெரியாது போ” திடுமென இதைப்பற்றி பேசினால், அவளுக்கு அதை எப்படி எடுக்கவென்று தெரியாமல், அந்த பேச்சை தவிர்க்க முயன்றாள்.
“பூமி... நான் ஒண்ணு சொன்னா நீ டென்ஷன் ஆக கூடாது” அவள் சொல்லிக் கொண்டு இருக்கையில், ஆசிரியரும் உள்ளே வந்திருந்தார்.
“என்ன...? என்னன்னு சொல்லு...?” ஏதும் புரியாத குழப்பமே அவளிடம் மிஞ்சிற்று.
“எனக்கென்னவோ நீ பெரிய போண்ணாயிட்டன்னு தோணுது. உள்ளே போய்ட்டு, ஏதாவது... ப்ளட் பாத்தன்னா டென்ஷன் ஆகாதே. அது இயற்கை தான்... சரியா?” கேட்டவள், அவளது கரத்தை அத்தனை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.
பூமிகா திடுமென மூச்சுக்குத் திணறுவதுபோல் தோன்ற, ஆசிரியர் கையோடு கொண்டு வந்திருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை அவளுக்கு அணிவித்தார்.
கூடவே அவளை உள்ளே இருந்து வெளியே அழைத்து வந்து நிறுத்தியவர், “பூமிகா ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...” ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருக்க, சில பல நிமிடங்களுக்குள் தெளிந்தாள்.
இப்படியான காட்சிகள் அங்கே மாதத்துக்கு ஒரு முறையாவது நடக்கும் என்பதால், அனைவரும் கடந்து செல்ல, தேன்மொழி வெலவெலத்துப் போனாள்.
இப்படியான காட்சிகளை எல்லாம் அவள் படத்தில், அவசரசிகிச்சைப் பிரிவில் செய்வதை மட்டுமே பார்த்திருக்கிறாள்.
அப்படியும் பூமிகாவின் கரத்தை அவள் விடாமல் கெட்டியாக பற்றிக் கொண்டிருக்க, “தேன்மொழி, முதல்ல ஆம்புலன்ஸை வரச் சொல்லு... போ...” ஆசிரியர் குரல் கொடுக்க,
“வேண்டாம் மிஸ்... நான் ஓகே தான்...” மாஸ்க்கை விலக்கிய பூமிகா சொல்ல, ஆசிரியர் சற்று இயல்பானார்.
“நிஜமாவே ஓகேயா? இப்போ போய் செக் பண்ணிட்டு வர்றியா?” அவர் கேட்க, தேன்மொழியின் கரத்தை விடாமல் பற்றியவாறே உள்ளே அழைத்துச் சென்றாள்.
தேன்மொழியின் முகம் சற்று வெளிறிப் போயிருக்க, “என்ன பயந்துட்டியா?” அவள் கேட்க,