பகுதி – 7.
மனைவி சொல்வதில் இருந்த உண்மை புரிய, தன் மகளுக்கென ஏதாவது செய்தாக வேண்டும் என அந்த தந்தையின் உள்ளம் தவித்தது. அவளுக்கென மிச்சமிருக்கும் இந்த மூன்று மாதங்களாவது அவள் தன்னைக் குறித்த கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தார்.
வேகமாக தன் அலைபேசியை எடுத்தவர், கிராமத்தில் இருக்கும் தன் அக்காவுக்கு அழைக்க, தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் பேச்சு விட்டுப் போயிருந்த அக்காவுக்கு, தன் தம்பி திடீரென அழைக்க பெருத்த ஆச்சரியம்.
கூடவே மனசும் உடலும் பதற, ‘பூமிகாவுக்கு எதுவுமோ?’ என்ற எண்ணம் கொடுத்த அதிர்வில், வேகமாக அலைபேசியை எடுத்தார்.
“தம்பி... சொல்லுப்பா...” தன் அழைப்பை அக்கா எடுக்கவே மாட்டாரோ?’ என எண்ணி இருந்தவருக்கு, தன் அக்கா அழைப்பை ஏற்றதே பெருத்த நிம்மதியாக இருக்க, அவரது பதட்டம் கண்டு சற்று கலங்கினார்.
“அக்கா, எப்படிக்கா இருக்க?” தம்பி இப்படி கேட்ட பிறகுதான் அவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
“எங்களுக்கு என்னப்பா, எல்லாரும் நல்லா இருக்கோம். அங்கே எல்லாரும் எப்படி இருக்கீங்க? பூமி... பூமி நல்லா இருக்கா தானே...” தன் அக்கா இப்படிக் கேட்க, வாய்விட்டே அழுதுவிட்டார்.
“ஆனந்தம்... என்னப்பா இது? எதுக்கு அழற? அவளுக்கு ஒண்ணும் இல்ல தானே...” சற்று பதறினார்.
“அவளைப்பத்தி பேசத்தான்க்கா போன் பண்ணேன்... எனக்கு உன்கிட்டே கொஞ்சம் பேசணும்க்கா... நான் அங்கே வரவா?” மகளை விட்டு எங்கும் அசையாதவன், ‘வரவா?’ எனக் கேட்டதே அதிசயமாக இருக்க,
“இதென்னப்பா கேள்வி? இது உன் அக்கா வீடு, நீ எப்போ வேண்ணா வரலாம்” அவர் அழைக்க,
“நான் நாளைக்கே வர்றேன்க்கா...” சொன்னவர் அலைபேசியை வைத்துவிட்டார்.
நித்யானந்தத்தில் அக்கா காவேரிக்கு பலத்த யோசனைதான். அப்பாவின் சொத்தில் பாதி அவருக்கும் வேண்டும் என காவேரி சண்டை போட, ‘சொத்தில் பங்கில்லை, ஆனால் பணமாகத் தருகிறேன்...’ எனச் சொல்லி நித்யானந்தம் பணத்தைக் கொடுத்துவிட்டார்.
அது அவர்களது அப்பாவின் சுய சம்பாத்தியம், அது மனைவிக்கு போயிருக்க, தாய் அதை மகனுக்கென பாதியையும், மிச்சத்தை தன் பேத்திக்கும் என எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.
எனவே கோர்ட் படியேறி, சொத்தில் பங்கு வேண்டும் என அவரால் போராட முடியவில்லை. அந்த கோபத்தில் தம்பியோடான பேச்சை முறித்துக் கொண்டார்.
அவரது கணவனும் போன வருடம் மாரடைப்பில் அகால மரணம் அடைந்திருக்க, ஓடோடி வந்த நித்யானந்தம்தான் அனைத்தையும் முன்னின்று நடத்திக் கொடுத்திருந்தார்.
அதிலேயே தம்பியின் மீதான கோபம் காணாமல் போயிருக்க, தம்பியிடம் இத்தனை வருடங்கள் கோபம்கொண்டு இருந்துவிட்டு, திடுமென அவனோடு உறவை வளர்க்கத் தயங்கி விலகி நின்றிருந்தார்.
இப்பொழுது தம்பியே பேச, அவருக்கு அளவிட முடியாத சந்தோஷம். அதுவும் வீட்டுக்கே வருகிறேன் எனச் சொல்ல, ‘என்னவாக இருக்கும்?’ என்ற யோசனைதான்.
“என்னம்மா போனைக் கையில வச்சுட்டு அப்படியே நிக்கறீங்க? யார் போன் பண்ணா?” பிஈ முடித்து, பக்கத்து ஊரில் இருக்கும் குடை கம்பெனியில் மேனேஜர் வேலை பார்க்கும் தன் மகன் சிவா வந்து கலைக்கும் வரைக்கும் யோசனையிலேயே இருந்தார்.
“ஹாங்... என்னப்பா கேட்ட?” அவர் அவனிடம் திருப்பிக் கேட்க,
“சரியா போச்சு போங்க... யார் போன் பண்ணா? என்ன யோசனைன்னு கேட்டேன்?”.
“அதுவாப்பா... உன் மாமா தான் போன் பண்ணான். நாளைக்கு இங்கே வர்றானாம்”.
“நாளைக்கா? இங்கேயா? என்னவாம்?”.
“அதுதான்ப்பா எனக்கும் தெரியலை... அந்த யோசனையில தான் அப்படியே உக்காந்துட்டேன்”.
“சரி விடுங்க... எதுவா இருந்தாலும் நாளைக்கு தெரியப் போகுது... இப்போ எழுந்து எனக்கு சாப்பாடு போடுங்க... வாங்க...” அவன் அழைக்க, எழுந்து சென்று மகனுக்கு சாப்பாட்டைப் பரிமாறினார்.
“சிவா, நாளைக்கு தம்பி வர்றானே... கொஞ்சம் லீவ் போடறியா?” சற்று தயக்கமாகவே கேட்டார்.
“அம்மா, என்ன விளையாடறீங்களா? எனக்கு இப்போ ப்ரோபேஷன் பீரியட் தான் நடக்குது. இந்த ஒரு வருஷத்தில், மொத்தமே ஆறு நாள்தான் எனக்கு லீவ் இருக்கு.
“அதிலும் நாலு நாள் ஏற்கனவே லீவ் போட்டாச்சு... மிச்சம் இருக்கற நாலு மாசத்துக்கு, இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. அதில் ஒண்ணு போனா, மிச்சம் இருக்க ஒரு நாளை வச்சு என்ன செய்யறது?
“ஏதாவது அவசரத்துக்குன்னா அந்த ஒரு நாள் போதுமா? அவர் உங்களைப் பாக்கத்தானே வர்றார்... பேசி அனுப்புங்க. என்னைப் பாக்கணும்ன்னா சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணச் சொல்லுங்க” சொல்லிவிட்டு, உணவை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
மகன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியவே, அமைதியாக இருந்துவிட்டார்.
அன்றைக்கு இரவே, ‘அக்காவைப் பார்க்க காரில் கிளம்புகிறேன்’ எனச் சொன்ன கணவனை புருவம் நெரியப் பார்த்தார் பிரபா.
“என்ன திடீர்ன்னு ஒரு அக்கா பாசம்?” ஆராய்ச்சியாக அவரைப் பார்த்தவாறே கேட்டார்.
“ஏன்... என் அக்காவை நான் பாக்க போகக் கூடாதா?” செல்லும் விஷயம் பழம் எனத் தெரியும் வரைக்கும், மனைவியிடம் மூச்சு கூட விடக் கூடாது என எண்ணிக் கொண்டார்.
“தாராளமா போகலாம்... ஆனா உங்க அம்மா இறந்த இந்த நாலு வருஷத்தில், சுத்தமா உறவை முறிச்சுகிட்டாங்களே அதுக்குத்தான் கேட்டேன்” சொன்னவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.
அன்று இரவே ட்ரைவரை அமர்த்திக்கொண்டு நாகர்கோவிலில் இருக்கும் தன் அக்காவைக் காண கிளம்பிவிட்டார்.
விடியற்காலையில் வாசலில் வந்து இறங்கிய தம்பியைப் பார்த்த காவேரிக்கு, கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
“தம்பி... வாப்பா... உள்ளே வா...” அக்கா அழைக்க, அவளது வீட்டுக்குள் சென்றார்.
தாய் ஏற்கனவே குரல் கொடுத்துவிட்டுத்தான் வாசலுக்கு அவரை வரவேற்கச் சென்றதால், உறங்கி எழுந்த முகத்தோடு வந்து அவரை வரவேற்றான் சிவா.
“வாங்க மாமா... எப்படி இருக்கீங்க? ஊர்ல எல்லாம் எப்படி இருக்காங்க?” கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றியவாறே அவரிடம் கேட்டான்.
“ம்... எல்லாரும் நல்லா இருக்கோம்... வந்து தூக்கத்தை கெடுத்துட்டனோ?” அவனிடம் கேட்டார்.
“அதெல்லாம் இல்லை, நான் வழக்கமா எழற நேரம் தான்... நீங்க கொஞ்சம் தூங்கி எழுந்து பிரஷ் ஆகுங்க... உக்காந்தே வந்தது முதுகு வலிக்கும். அம்மா அந்த ரூமைக் காட்டுங்க...” அவரிடம் சொன்னவன், தாய்க்கும் குரல் கொடுக்க, வேகமாக செயல்பட்டார்.
“கொஞ்சம் டீ குடிச்சுட்டு படுத்துக்கப்பா...” சொன்னவர் வேகமாக செயல்பட, அடுத்த கொஞ்ச நேரத்தில் படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.
வண்டியில் வருகையில் எல்லாம், ‘விஷயத்தை எப்படி பேசுவது?’ என்ற யோசனையிலேயே அவர் வந்திருக்க, சரியாக உறங்கவில்லை.
இங்கே வந்து அவர்களைப் பார்த்தவுடன், சிறு நம்பிக்கையும், தைரியமும் பிறக்க, தன்னை மீறி தூங்கிவிட்டார்.
அலுவலகத்துக்கு கிளம்பி வந்தவன், “மாமாவை எங்கம்மா?” தாயிடம் கேட்க,
“அவன் நல்ல தூக்கம்ப்பா... எழுப்பலாம்னு போனா, அவன் தூங்கறதைப் பாத்துட்டு எழுப்ப மனசே வரலை” ‘அவன் நிம்மதியாகத் தூங்கி எத்தனை நாள் ஆயிற்றோ?’ என்று எண்ணிக் கொண்டார்.
“சரி விடுங்க... எப்படியும் இன்னைக்கு நைட் தானே கிளம்புவார்... அப்போ பாத்துக்கறேன்” சொன்னவன் உணவில் கவனமானான்.
“சிவா, சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?” சற்று தயங்கியே மகனிடம் கேட்டார்.
“ம்... சரிம்மா... நாலு மணிக்கு பெர்மிஷன் போட்டு வர்றேன்” அவன் சொல்ல, அவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
“நீங்க சாப்பிடல?” தாய் தன்னோடு சேர்ந்துதான் உணவு உண்பார் என்பதால் கேட்டான்.
“அதான் தம்பி வந்திருக்கானே, நான் அவனோட உக்காந்து சாப்பிடறேன்”.
“ரொம்ப லேட் பண்ணிடாதீங்கம்மா...” அக்கறையாகவே சொன்னான்.
“சரிப்பா... நீ கிளம்பு” அவனை அனுப்பி வைத்தவர், தம்பி எழுந்து வர காத்திருந்தார்.
ஒரு தூக்கம் போட்டு எழுந்து வந்த நித்யானந்தம், காலை உணவை உண்டு முடித்த பிறகும் எதுவும் சொல்லாமலே போக, காவேரி மெதுவாக பேச்சு கொடுத்தார்.
“என்னப்பா... வந்ததில் இருந்து எதையோ சொல்ல ஆரம்பிக்கற, பிறகு தயங்கற? பிஸ்னஸ்ல ஏதும் நஷ்டமா? பணம் ஏதும் வேணுமா? நீ குடுத்த பணத்தில் இந்த வீடு கட்டினது போக, ஃபிக்ஸட்ல தான் அதெல்லாம் தூங்குது.
“உனக்கு எவ்வளவு வேணுமோ? இல்லன்னா மொத்தமா வேணும்ன்னாலும் எடுத்துக்கோ” ஒரு வேளை அவர் அதற்காகத்தான் தயங்குகிறாரோ என்பதால், காவேரியே கேட்டார்.
“அக்கா, எனக்கு பணம் எல்லாம் வேண்டாம்க்கா... அது என்கிட்டே நிறையவே இருக்கு... எனக்கு தேவை கொஞ்சம் நிம்மதி. அதுவும் உன்னால் கொடுக்க முடிஞ்ச நிம்மதி...” சொன்னவர், படபடவென தான் வந்த விஷயத்தைப் பேச, காவேரிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“தம்பி... இது... நீ... என்னப்பா சொல்ற? அதெப்படி முடியும்?” அதிர்ந்து போயிருந்த மூளையை கொஞ்சமாக மீட்டெடுத்து, அவரிடம் கேட்டார்.
“உன்னால முடியும்க்கா... எனக்காக... பிளீஸ்... என் பொண்ணுக்காக... இதை உதவியா இல்ல, பிச்சையா கேக்கறேன்” அவர் கெஞ்ச, காவேரியால் அதைப் பார்க்க முடியவில்லை.
“டேய் தம்பி, என்னடா இது... பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு. இது ஒத்து வருமாடா...?” மறுக்கவும் முடியாத, ஏற்கவும் முடியாத நிலை காவேரிக்கு.
சென்னை, பெங்களூர், கல்கத்தா என பல இடங்களில் பல கம்பெனிகளை வைத்து நடத்தும் தம்பி. கம்பீரமாகவே வளைய வருபவன், இப்படி தன் முன்னால் யாசகம் கேட்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“நீ மனசு வச்சா கண்டிப்பா முடியம்க்கா... சிவா கிட்டே பேசிட்டு எனக்கு ஒரு நல்ல முடிவா சொல்லு...” சொன்னவர், தான் வந்த வேலை முடிந்தது என அப்பொழுதே கிளம்பிவிட்டார்.
நித்யானந்தம் சென்னைக்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை, காவேரியும், சிவாவும் சென்னைக்கு வந்தார்கள்.
“வாங்க அண்ணி... என்ன இங்கே வர இப்போதான் வழி தெரிஞ்சதா?” கேட்டவாறே உள்ளே அழைத்துச் சென்றார் பிரபா.
“அக்கா... வாக்கா... வா சிவா... பிரபா காபி கொண்டு வரச் சொல்லு” நித்யானந்தம் சற்று பரபரப்பாக, பிரபா புருவம் நெரித்தார்.
‘இதென்ன எலி அம்மணமா ஓடுது... திடீர் அக்கா பாசம் வேற...’ எண்ணியவாறே கிச்சனுக்கு குரல் கொடுக்க, அடுத்த பத்து நிமிடங்களில் அவர்கள் கேட்ட காபி அங்கே வந்தது.
“எடுத்துக்கோங்க அண்ணி...” அவரிடமிருந்து ட்ரேயை வாங்கி, தானே அவர்களுக்கு கொடுத்தார்.
அவர்கள் அதைக் குடித்து முடிக்கும் வரைக்கும், யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காவேரி ஒரு மாதிரி சங்கடத்தில் நெளிந்தால், சிவாவின் முகத்தில் ஒருவித கோபம் தெரிந்தது.
மனைவி சொல்வதில் இருந்த உண்மை புரிய, தன் மகளுக்கென ஏதாவது செய்தாக வேண்டும் என அந்த தந்தையின் உள்ளம் தவித்தது. அவளுக்கென மிச்சமிருக்கும் இந்த மூன்று மாதங்களாவது அவள் தன்னைக் குறித்த கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தார்.
வேகமாக தன் அலைபேசியை எடுத்தவர், கிராமத்தில் இருக்கும் தன் அக்காவுக்கு அழைக்க, தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் பேச்சு விட்டுப் போயிருந்த அக்காவுக்கு, தன் தம்பி திடீரென அழைக்க பெருத்த ஆச்சரியம்.
கூடவே மனசும் உடலும் பதற, ‘பூமிகாவுக்கு எதுவுமோ?’ என்ற எண்ணம் கொடுத்த அதிர்வில், வேகமாக அலைபேசியை எடுத்தார்.
“தம்பி... சொல்லுப்பா...” தன் அழைப்பை அக்கா எடுக்கவே மாட்டாரோ?’ என எண்ணி இருந்தவருக்கு, தன் அக்கா அழைப்பை ஏற்றதே பெருத்த நிம்மதியாக இருக்க, அவரது பதட்டம் கண்டு சற்று கலங்கினார்.
“அக்கா, எப்படிக்கா இருக்க?” தம்பி இப்படி கேட்ட பிறகுதான் அவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
“எங்களுக்கு என்னப்பா, எல்லாரும் நல்லா இருக்கோம். அங்கே எல்லாரும் எப்படி இருக்கீங்க? பூமி... பூமி நல்லா இருக்கா தானே...” தன் அக்கா இப்படிக் கேட்க, வாய்விட்டே அழுதுவிட்டார்.
“ஆனந்தம்... என்னப்பா இது? எதுக்கு அழற? அவளுக்கு ஒண்ணும் இல்ல தானே...” சற்று பதறினார்.
“அவளைப்பத்தி பேசத்தான்க்கா போன் பண்ணேன்... எனக்கு உன்கிட்டே கொஞ்சம் பேசணும்க்கா... நான் அங்கே வரவா?” மகளை விட்டு எங்கும் அசையாதவன், ‘வரவா?’ எனக் கேட்டதே அதிசயமாக இருக்க,
“இதென்னப்பா கேள்வி? இது உன் அக்கா வீடு, நீ எப்போ வேண்ணா வரலாம்” அவர் அழைக்க,
“நான் நாளைக்கே வர்றேன்க்கா...” சொன்னவர் அலைபேசியை வைத்துவிட்டார்.
நித்யானந்தத்தில் அக்கா காவேரிக்கு பலத்த யோசனைதான். அப்பாவின் சொத்தில் பாதி அவருக்கும் வேண்டும் என காவேரி சண்டை போட, ‘சொத்தில் பங்கில்லை, ஆனால் பணமாகத் தருகிறேன்...’ எனச் சொல்லி நித்யானந்தம் பணத்தைக் கொடுத்துவிட்டார்.
அது அவர்களது அப்பாவின் சுய சம்பாத்தியம், அது மனைவிக்கு போயிருக்க, தாய் அதை மகனுக்கென பாதியையும், மிச்சத்தை தன் பேத்திக்கும் என எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.
எனவே கோர்ட் படியேறி, சொத்தில் பங்கு வேண்டும் என அவரால் போராட முடியவில்லை. அந்த கோபத்தில் தம்பியோடான பேச்சை முறித்துக் கொண்டார்.
அவரது கணவனும் போன வருடம் மாரடைப்பில் அகால மரணம் அடைந்திருக்க, ஓடோடி வந்த நித்யானந்தம்தான் அனைத்தையும் முன்னின்று நடத்திக் கொடுத்திருந்தார்.
அதிலேயே தம்பியின் மீதான கோபம் காணாமல் போயிருக்க, தம்பியிடம் இத்தனை வருடங்கள் கோபம்கொண்டு இருந்துவிட்டு, திடுமென அவனோடு உறவை வளர்க்கத் தயங்கி விலகி நின்றிருந்தார்.
இப்பொழுது தம்பியே பேச, அவருக்கு அளவிட முடியாத சந்தோஷம். அதுவும் வீட்டுக்கே வருகிறேன் எனச் சொல்ல, ‘என்னவாக இருக்கும்?’ என்ற யோசனைதான்.
“என்னம்மா போனைக் கையில வச்சுட்டு அப்படியே நிக்கறீங்க? யார் போன் பண்ணா?” பிஈ முடித்து, பக்கத்து ஊரில் இருக்கும் குடை கம்பெனியில் மேனேஜர் வேலை பார்க்கும் தன் மகன் சிவா வந்து கலைக்கும் வரைக்கும் யோசனையிலேயே இருந்தார்.
“ஹாங்... என்னப்பா கேட்ட?” அவர் அவனிடம் திருப்பிக் கேட்க,
“சரியா போச்சு போங்க... யார் போன் பண்ணா? என்ன யோசனைன்னு கேட்டேன்?”.
“அதுவாப்பா... உன் மாமா தான் போன் பண்ணான். நாளைக்கு இங்கே வர்றானாம்”.
“நாளைக்கா? இங்கேயா? என்னவாம்?”.
“அதுதான்ப்பா எனக்கும் தெரியலை... அந்த யோசனையில தான் அப்படியே உக்காந்துட்டேன்”.
“சரி விடுங்க... எதுவா இருந்தாலும் நாளைக்கு தெரியப் போகுது... இப்போ எழுந்து எனக்கு சாப்பாடு போடுங்க... வாங்க...” அவன் அழைக்க, எழுந்து சென்று மகனுக்கு சாப்பாட்டைப் பரிமாறினார்.
“சிவா, நாளைக்கு தம்பி வர்றானே... கொஞ்சம் லீவ் போடறியா?” சற்று தயக்கமாகவே கேட்டார்.
“அம்மா, என்ன விளையாடறீங்களா? எனக்கு இப்போ ப்ரோபேஷன் பீரியட் தான் நடக்குது. இந்த ஒரு வருஷத்தில், மொத்தமே ஆறு நாள்தான் எனக்கு லீவ் இருக்கு.
“அதிலும் நாலு நாள் ஏற்கனவே லீவ் போட்டாச்சு... மிச்சம் இருக்கற நாலு மாசத்துக்கு, இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. அதில் ஒண்ணு போனா, மிச்சம் இருக்க ஒரு நாளை வச்சு என்ன செய்யறது?
“ஏதாவது அவசரத்துக்குன்னா அந்த ஒரு நாள் போதுமா? அவர் உங்களைப் பாக்கத்தானே வர்றார்... பேசி அனுப்புங்க. என்னைப் பாக்கணும்ன்னா சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணச் சொல்லுங்க” சொல்லிவிட்டு, உணவை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
மகன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியவே, அமைதியாக இருந்துவிட்டார்.
அன்றைக்கு இரவே, ‘அக்காவைப் பார்க்க காரில் கிளம்புகிறேன்’ எனச் சொன்ன கணவனை புருவம் நெரியப் பார்த்தார் பிரபா.
“என்ன திடீர்ன்னு ஒரு அக்கா பாசம்?” ஆராய்ச்சியாக அவரைப் பார்த்தவாறே கேட்டார்.
“ஏன்... என் அக்காவை நான் பாக்க போகக் கூடாதா?” செல்லும் விஷயம் பழம் எனத் தெரியும் வரைக்கும், மனைவியிடம் மூச்சு கூட விடக் கூடாது என எண்ணிக் கொண்டார்.
“தாராளமா போகலாம்... ஆனா உங்க அம்மா இறந்த இந்த நாலு வருஷத்தில், சுத்தமா உறவை முறிச்சுகிட்டாங்களே அதுக்குத்தான் கேட்டேன்” சொன்னவர் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.
அன்று இரவே ட்ரைவரை அமர்த்திக்கொண்டு நாகர்கோவிலில் இருக்கும் தன் அக்காவைக் காண கிளம்பிவிட்டார்.
விடியற்காலையில் வாசலில் வந்து இறங்கிய தம்பியைப் பார்த்த காவேரிக்கு, கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
“தம்பி... வாப்பா... உள்ளே வா...” அக்கா அழைக்க, அவளது வீட்டுக்குள் சென்றார்.
தாய் ஏற்கனவே குரல் கொடுத்துவிட்டுத்தான் வாசலுக்கு அவரை வரவேற்கச் சென்றதால், உறங்கி எழுந்த முகத்தோடு வந்து அவரை வரவேற்றான் சிவா.
“வாங்க மாமா... எப்படி இருக்கீங்க? ஊர்ல எல்லாம் எப்படி இருக்காங்க?” கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றியவாறே அவரிடம் கேட்டான்.
“ம்... எல்லாரும் நல்லா இருக்கோம்... வந்து தூக்கத்தை கெடுத்துட்டனோ?” அவனிடம் கேட்டார்.
“அதெல்லாம் இல்லை, நான் வழக்கமா எழற நேரம் தான்... நீங்க கொஞ்சம் தூங்கி எழுந்து பிரஷ் ஆகுங்க... உக்காந்தே வந்தது முதுகு வலிக்கும். அம்மா அந்த ரூமைக் காட்டுங்க...” அவரிடம் சொன்னவன், தாய்க்கும் குரல் கொடுக்க, வேகமாக செயல்பட்டார்.
“கொஞ்சம் டீ குடிச்சுட்டு படுத்துக்கப்பா...” சொன்னவர் வேகமாக செயல்பட, அடுத்த கொஞ்ச நேரத்தில் படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.
வண்டியில் வருகையில் எல்லாம், ‘விஷயத்தை எப்படி பேசுவது?’ என்ற யோசனையிலேயே அவர் வந்திருக்க, சரியாக உறங்கவில்லை.
இங்கே வந்து அவர்களைப் பார்த்தவுடன், சிறு நம்பிக்கையும், தைரியமும் பிறக்க, தன்னை மீறி தூங்கிவிட்டார்.
அலுவலகத்துக்கு கிளம்பி வந்தவன், “மாமாவை எங்கம்மா?” தாயிடம் கேட்க,
“அவன் நல்ல தூக்கம்ப்பா... எழுப்பலாம்னு போனா, அவன் தூங்கறதைப் பாத்துட்டு எழுப்ப மனசே வரலை” ‘அவன் நிம்மதியாகத் தூங்கி எத்தனை நாள் ஆயிற்றோ?’ என்று எண்ணிக் கொண்டார்.
“சரி விடுங்க... எப்படியும் இன்னைக்கு நைட் தானே கிளம்புவார்... அப்போ பாத்துக்கறேன்” சொன்னவன் உணவில் கவனமானான்.
“சிவா, சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வர்றியா?” சற்று தயங்கியே மகனிடம் கேட்டார்.
“ம்... சரிம்மா... நாலு மணிக்கு பெர்மிஷன் போட்டு வர்றேன்” அவன் சொல்ல, அவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
“நீங்க சாப்பிடல?” தாய் தன்னோடு சேர்ந்துதான் உணவு உண்பார் என்பதால் கேட்டான்.
“அதான் தம்பி வந்திருக்கானே, நான் அவனோட உக்காந்து சாப்பிடறேன்”.
“ரொம்ப லேட் பண்ணிடாதீங்கம்மா...” அக்கறையாகவே சொன்னான்.
“சரிப்பா... நீ கிளம்பு” அவனை அனுப்பி வைத்தவர், தம்பி எழுந்து வர காத்திருந்தார்.
ஒரு தூக்கம் போட்டு எழுந்து வந்த நித்யானந்தம், காலை உணவை உண்டு முடித்த பிறகும் எதுவும் சொல்லாமலே போக, காவேரி மெதுவாக பேச்சு கொடுத்தார்.
“என்னப்பா... வந்ததில் இருந்து எதையோ சொல்ல ஆரம்பிக்கற, பிறகு தயங்கற? பிஸ்னஸ்ல ஏதும் நஷ்டமா? பணம் ஏதும் வேணுமா? நீ குடுத்த பணத்தில் இந்த வீடு கட்டினது போக, ஃபிக்ஸட்ல தான் அதெல்லாம் தூங்குது.
“உனக்கு எவ்வளவு வேணுமோ? இல்லன்னா மொத்தமா வேணும்ன்னாலும் எடுத்துக்கோ” ஒரு வேளை அவர் அதற்காகத்தான் தயங்குகிறாரோ என்பதால், காவேரியே கேட்டார்.
“அக்கா, எனக்கு பணம் எல்லாம் வேண்டாம்க்கா... அது என்கிட்டே நிறையவே இருக்கு... எனக்கு தேவை கொஞ்சம் நிம்மதி. அதுவும் உன்னால் கொடுக்க முடிஞ்ச நிம்மதி...” சொன்னவர், படபடவென தான் வந்த விஷயத்தைப் பேச, காவேரிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“தம்பி... இது... நீ... என்னப்பா சொல்ற? அதெப்படி முடியும்?” அதிர்ந்து போயிருந்த மூளையை கொஞ்சமாக மீட்டெடுத்து, அவரிடம் கேட்டார்.
“உன்னால முடியும்க்கா... எனக்காக... பிளீஸ்... என் பொண்ணுக்காக... இதை உதவியா இல்ல, பிச்சையா கேக்கறேன்” அவர் கெஞ்ச, காவேரியால் அதைப் பார்க்க முடியவில்லை.
“டேய் தம்பி, என்னடா இது... பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு. இது ஒத்து வருமாடா...?” மறுக்கவும் முடியாத, ஏற்கவும் முடியாத நிலை காவேரிக்கு.
சென்னை, பெங்களூர், கல்கத்தா என பல இடங்களில் பல கம்பெனிகளை வைத்து நடத்தும் தம்பி. கம்பீரமாகவே வளைய வருபவன், இப்படி தன் முன்னால் யாசகம் கேட்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“நீ மனசு வச்சா கண்டிப்பா முடியம்க்கா... சிவா கிட்டே பேசிட்டு எனக்கு ஒரு நல்ல முடிவா சொல்லு...” சொன்னவர், தான் வந்த வேலை முடிந்தது என அப்பொழுதே கிளம்பிவிட்டார்.
நித்யானந்தம் சென்னைக்கு வந்த பிறகு, கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை, காவேரியும், சிவாவும் சென்னைக்கு வந்தார்கள்.
“வாங்க அண்ணி... என்ன இங்கே வர இப்போதான் வழி தெரிஞ்சதா?” கேட்டவாறே உள்ளே அழைத்துச் சென்றார் பிரபா.
“அக்கா... வாக்கா... வா சிவா... பிரபா காபி கொண்டு வரச் சொல்லு” நித்யானந்தம் சற்று பரபரப்பாக, பிரபா புருவம் நெரித்தார்.
‘இதென்ன எலி அம்மணமா ஓடுது... திடீர் அக்கா பாசம் வேற...’ எண்ணியவாறே கிச்சனுக்கு குரல் கொடுக்க, அடுத்த பத்து நிமிடங்களில் அவர்கள் கேட்ட காபி அங்கே வந்தது.
“எடுத்துக்கோங்க அண்ணி...” அவரிடமிருந்து ட்ரேயை வாங்கி, தானே அவர்களுக்கு கொடுத்தார்.
அவர்கள் அதைக் குடித்து முடிக்கும் வரைக்கும், யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காவேரி ஒரு மாதிரி சங்கடத்தில் நெளிந்தால், சிவாவின் முகத்தில் ஒருவித கோபம் தெரிந்தது.