அத்தியாயம் 3
“ஏண்டா சொக்கா அந்த மேற்கால அறைய சுத்தம் பண்ணிட்டியா...அங்க இருக்கிற அந்த சாமனத்தை எல்லாம் கொண்டுவந்து நம்ம புடகாலியில அந்த தவிட்டு முட்டை எல்லாம் போட்டு இருக்க அறையில வச்சிடு ...அப்புறம் அந்த சன்னலுக்கு பின்னாடி குப்பை கூளத்தை எல்லாம் சுத்தம் பண்ணு........ ..... அப்பத்தான் சன்னல திறந்தா கொசு எல்லாம் வராம இருக்கும்......அப்புறம் லைட்டு காத்தாடி எல்லாம் வேலை செய்யுதான்னு பார்த்துகடா.....எதுக்கும் வெளில ஒரு லைட்டு மாட்டிடு............ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க மாமா வறாரு..... டவுன்ல இருந்து வராங்க...வசதியா வாழ்ந்து பழக்க பட்டவங்க........கொஞ்சம் பார்த்து சூதானமா நடந்துக்குங்க” என தனது அக்கா வீடு வருகிறார்கள் என்ற சேதிய கேட்டதில் இருந்து வேலையாட்களிடம் வேலைகளை ஏவியபடி இருந்தார் மாணிக்கம்.
“ஏனுங்க எதுக்கு இப்படி காத்தால இருந்து படபடனு இருக்கீங்க ........அக்கா வீடுதான வராங்க..... விடியால காபிதண்ணீ குடிச்சதோட இருக்கீங்க.... மணி இப்ப என்னாவது ?இன்னும் சாப்பிடகூட வரலை ......இன்னைக்கு நடவு வேலையாமா? ...நீங்க வயலு பக்கமும் போகலைன்னு சொக்கன் சொன்னான்.முதல்ல வந்து சாப்பிட்டு அப்புறம் வேலைய பாருங்க” என அவரை நிதானபடுத்தினார் மணியம்மை.
வேலையாட்களிடம் பேசிக்கொண்டு இருந்தவர் மணியம்மை சொன்னதை கேட்டதும் திரும்பி “ஏம்புள்ள ......எங்க மாமா எப்டின்னு உனக்கு தெரியாதா? எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசறியே” என சற்று உள்ளே போன குரலில் அவர் சொல்லவும்
மணியம்மை எதுவும் பேசாமல் தலை குனிய
ம்ம்ம்ம்ம்ம் “அவரு பதினஞ்சுவருசத்துல இரண்டுதடவை தான் ஊருக்கு வந்தாரு...திரும்பி போகும்போது சண்டையோடதான் போனாரு.....அதற்கு அப்புறம் அக்காவும் புள்ளைங்களும்தான் வந்திட்டு போயிட்டு இருக்காங்க...ஏதோ இந்த முறை அவரும் வர்றாரு..... ...அதான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணிட்டு இருக்கேன்.... நாளைக்கு சலிப்பு சங்கடம் வந்திட கூடாது இல்ல “என அவர் சொல்ல
தனது கணவனின் மனதை புரிந்து கொண்ட அவரும் மென்மையாக அவரிடம் “நீங்க ஒன்னும் கவலைபடாதிங்க......இந்த முறை அப்படி ஏதும் நடக்காது...எல்லாம் நல்லா தான் நடக்கும்....அப்புறம் கோவில்ல பொங்கல் வைக்கிறதுக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சுட்டேன்...நீங்களும் ஒருமுறை வந்து பார்த்திடுங்க” என சொல்லிவிட்டு உள்ளே போனார் மணியம்மை.
“ம்ம்ம்ம் ...நம்ம எவ்ளோதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் அவங்க குறை சொல்லாம இருக்கபோறதில்லை......சரி நம்மளோட கடமைய நம்ம செய்வோம்” என சொல்லி கொண்டே அவர் உள்ளே வர
“அம்மா ஓலபாளையத்துல இருந்து வண்டி வந்து இருக்குதுங்கோ” என்ற சத்தம் கேட்க
உள்ளே சென்ற மாணிக்கம் அந்த வார்த்தையை கேட்டதும் சட்டென்று முகம் இறுக.... நின்று திரும்பி வெளியே பார்க்க
சத்தம் கேட்டு சந்தோசத்துடன் வேகமாக வந்த மணியம்மை வெளியில் நின்று இருந்த மாணிக்கத்தை பார்த்ததும் அப்படியே நின்று விட
இருவரும் ஏதும் பேசாமல் சில நொடிகள் நிற்க
“ம்க்கும் .....அதான் வந்திருக்குள்ள...... என்னை எதுக்கு பார்க்கிற .........எப்பவும் என்ன செய்வியோ அதையே செய்......வருஷம் வருஷம் நடக்கிற விஷயம் தான” என சொல்லிவிட்டு மாணிக்கம் உள்ளே சென்றார்.
வேகமாக வண்டியின் அருகே சென்ற மணியம்மை அதற்குள் வண்டியில் இருந்து இறங்கிய ராசு .... “அம்மா மணி நல்லா இருக்கியா? வீட்ல எல்லாரும் சுகம் தான .......நீ போனதடவை விட இந்த முறை இளைச்சு கருத்த மாதிரி தெரியுது ? உடம்புக்கு ஒன்னும் இல்லையே “ என தன் வீட்டு பெண்ணை பார்த்ததும் அக்கறையாக விசாரிக்க
....நான் நல்லாத்தான் இருக்கேன்” என மணியம்மை சொல்லவும்
“உடம்பை பார்த்துக்கோ அம்மணி என்றவர் உன் பிறந்த வீட்ல இருந்து பொங்கலுக்கு சீர் கொடுத்து விட்ருக்காங்க ......இந்த முறை விளைச்சல் நல்லா இருக்கு...அதுனால இந்த முறை வெள்ளில விளக்கும் சேர்த்து வாங்கி கொடுத்து இருக்காங்க...அப்புறம்” என அவர் தயங்கி நிற்க
மணியம்மையோ கண்களில் கண்ணீர் ததும்ப அவரை பார்க்க
“அழுவாத பாப்பா.......உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரகூடாது...இதுக்கா நாங்க எவளோ அவமானபாட்டலும் மறுபடியும் வந்து வந்து நிற்கிறோம்” என அவர் சொல்லும்போதே நா தழுதழுக்க
“என்னால முடியலண்ணா.........நானும் இன்னைக்கு சரியாகிடும்...நாளைக்கு சரியாகிடும்னு பொறுமையா இருந்தேன்....ஆனா இது எப்பவுமே சரியாகாதுபோல இருக்கே......ஒவொவொரு வருஷ பொங்கலுக்கும் நீங்க இப்படி வாசல்ல வந்து நிற்கிறதும் நான் அப்படியே உங்களை பேசி அனுப்பறதும் இன்னும் எத்தன நாளைக்கு? ......நாம எவ்ளோ கஷ்டபட்டாலும் நம்ம வீட்டு பொண்ணு வாக்கப்பட்ட இடத்துல வாடி போய் நிக்க கூடாதுன்னு ஒவொவொரு முறையும் வந்து நின்னு நீங்கதான அவமானப்பட்டு போறீங்க?என்னால பிறந்த வீட்டுக்கு உதவி செய்யத்தான் முடியலை.....உபத்திரவம் செய்யாமல் இருந்திருக்கலாம்”.........என சொல்லி அவள் அழ
“என்ன வார்த்தை சொல்லிட்ட அம்மணி......இதுமட்டும் தம்பிக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்.....அவன் என்ன சொல்லி அனுப்புனா தெரியுமா?.....மாமா இந்த முறை வெள்ளி விளக்குதான் கொடுக்க முடிஞ்சுது........அடுத்த முறை கண்டிப்பா காசுமாலையோட நானே வாறேன்னு சொல்லுங்க....... அப்புறம் எங்களை பத்தி கவலைபடவேண்டாம்....நாங்க நல்லா இருக்கோம்....எங்களை நினச்சு அத்தை உடம்ப கெடுத்துக்க போறாங்க......அவங்க அண்ணன் இருந்தா என்ன செய்வாங்களோ அதைவிட இரண்டு மடங்கு சேர்த்து தான் நான் செய்வேன்.....மத்தவங்க என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை அப்டின்னு சொன்னான்” என அவர் சொல்லி முடிக்கும் முன்
“ஐயோ அவனுக்கு இருக்கும் தெளிவு கூட எனக்கு அன்னைக்கு இல்லாம போயிடுச்சே .......இந்த சின்ன வயசுல எப்புடி பொறுப்பா பேசறான் பாருங்க...அப்படியே என் அண்ணன் மாதிரியே இருக்கான்......அச்சோ இந்த கிறுக்கி என்னை பத்தியே பேசிட்டு இருக்கேன் பாருங்க .......அப்புறம் அண்ணா வீட்ல எல்லாரும் சுகமாதானே இருக்காங்க? வேற ஏதாவது விசேஷமா ?கிழக்கால ஒரு தோப்பு வாங்கினதுல ஏதோ பிரச்சனைன்னு சொல்லிட்டு இருந்தாங்க...... எல்லாம் சரியாகிடுச்சா ? நங்கைக்கு உடம்பு எப்படி இருக்கு?சின்னவன் ஒழுங்கா படிக்கிறானா? அப்புறம் பெரியவன் வேலை வேலைன்னு சோறு தண்ணீ இல்லாம இருக்கபோறான்,கொஞ்சம் பார்த்துக்குங்க” என அவள் படபடவென பேசிகொண்டே செல்ல
“உன்ற மருமகனுக்கு என்ன அம்மணி ...ஊரே அவனை பார்த்து ஆச்சரியப்பட்டு நிக்குது....இந்த சின்ன வயசுல இவ்ளோ திறமையானு” என மணியம்மையின் அண்ணன் மகன் புகழை பற்றி பெருமையாக ராசு சொல்ல....ஆம் மணியம்மையின் அண்ணன் மகன் தான் புகழ் .அவன்தான் தன் அத்தைக்கு பிறந்த வீட்டு சீர் கொடுத்து அனுப்பி இருந்தான்.
அதற்குள் “அம்மா, ஐயா உங்களை வர சொன்னாருங்க” என வேலையாள் வந்து சொல்ல
அவளோ ஒருநிமிடம் கண்களை மூடி திறந்தவள் “நீ போ நான் வரேன்” என சொல்லிவிட்டு
“ராசண்ணா நீங்க எல்லாம் இருக்கீங்க...நல்லா பார்த்துக்குவீங்க அப்டினுதான் நான் இங்க நிம்மதியா இருக்கேன்......எதா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்க.......புகழு அழுத்தக்காரன்....எதையும் வெளியே சொல்லமாட்டன்...... பதினஞ்சு வயசுலே அவளோ கஷ்டத்திலையும் அவன் ஏதும் சொல்லல ....இப்பவா சொல்ல போறான் என்றவர் அண்ணீ படபடனு பேசினாலும் வெளிஉலகம் தெரியாது.....நீங்க கொஞ்சம் பார்த்துக்குங்க என்றவள் சரி அண்ணே இனியும் நின்னு பேசிட்டு இருந்தா உங்க மாப்பிள்ளை என்னைத்தான் வைவாரு” என்றவள் வண்டி நிறைய இருந்த பொருட்களில் அரிசியில் ஒரு பிடியும்,வாழைதாறு மற்ற பொருட்களில் இருந்து கொஞ்சம் எடுத்து கொண்டவள் தனது முந்தானையில் அதை முடிந்து கொண்டு “எனக்கு போதும் அண்ணே” என சொல்லி நிமிர
இது எப்போதும் நடப்பதுதான்.வண்டி நிறய சீர் வந்தாலும் மணியம்மை எடுத்துகொள்வது ஒரு கைபிடித்தான்.அதற்கு மீறி ஆசைபட்டால் அந்த வண்டியே உள்ளே வரகூடாது என சொல்லி விட்டார் மாணிக்கம்.அதுவும் தனது மனைவி மேல் உள்ள அளவற்ற காதலால் அந்த ஒரு கைபிடிக்கு அனுமதி அளித்தார்.
“ராசுவோ ஏன் கண்ணு இந்த முறையாவது நான் மாப்பிள்ளைகிட்ட பேசிபார்க்கட்டுமா......ஒவொவொரு முறையும் கொண்டுவந்து சீருல இப்படி ஒரு பிடி மட்டும் அள்ளிகிட்டு திருப்பி அனுப்பிட்ற.....இந்த முறையாவது எப்படியாவது பேசி கொடுத்திட்டு வாங்கனு தம்பி சொல்லி அனுப்புச்சு” என சொல்லவும்
மணியம்மையோ “போதும் அண்ணே.....இனி பேசி நீங்க அவமானப்பட வேண்டாம். எனக்கு சீரே வேண்டாம் ...நீங்க வந்து இப்படி அவமானபடாதிங்கனு சொல்ல தான் மனசு நினைக்குது...........ஆனால் ஒவொவொரு வருசமும் நீங்க இதை வச்சுதான் என்னை பார்க்க வரமுடியும்...இதுவும் வேண்டாம்னு சொல்லிட்டா நம்ம பந்தமே அத்து போய்டும் ....அதனாலதான் நான் இதுக்கு ஒத்துகிட்டேன்.........என்னோட சுயநலத்துக்காக உங்களை எல்லாம் பலியாடு ஆக்கிட்டு இருக்கேன் ” என சொல்லும்போதே அவர் கண்கள் கலங்க
“என்ன கண்ணு இப்படி சொல்லிபுட்ட.....நீ எங்க வீட்டு புள்ள......உனக்காக இதுகூட நாங்க தாங்கிக்க மாட்டமா” என அவள் வேதனையை புரிந்து கொண்டு ராசு ஆறுதலாக பேசவும்
மணியம்மையும் கண்களை துடைத்து கொண்டே “அதான் பொங்கலுக்கு எப்பவும் நீங்க கொடுக்கிற துணிதான் ஊடுத்திகிறோம்....அந்த சந்தோசமே எனக்கு போதும் என்றவள் அந்த துணி பையை எடுக்க ...
“அதான்மா புகழு தம்பியும் சொல்லுச்சு.......அத்தை மத்தது ஏதும் வாங்க மாட்டாங்க.....அதனால தான் காஞ்சிபுரத்துல இருந்து சொல்லி பட்டுபுடவை எடுத்திட்டு வந்தேன் ...இதை கொடுத்திடுங்க சித்தப்புனு சொல்லி அனுப்புச்சான் என்றவர் அப்புறம் பூரணிக்கும்” என ஆரம்பித்து என அவர் தயங்க
அதற்குள் மறுபடியும் வேலையாள் அவளை நோக்கி வர உடனே
“அவன் எங்க வீட்டு குலசாமின்னே என உணர்ச்சிபெருக்கோடு சொன்ன மணியம்மை சந்தோசமா அத்தை வாங்கிகிச்சுன்னு அவன் கிட்ட சொல்லிடுங்க” என்றவள் துணிகள் இருக்கும் பையை மட்டும் எடுத்து கொண்டு வேகமாக உள்ளே சென்றாள்.
சொல்ல நினைத்தை இந்த முறையும் சொல்ல முடியாமல் திரும்பி சென்றார் ராசு.நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் விதி என்று ஒன்று இருப்பதே எல்லாருக்கும் மறந்து விடும்.
“அம்மா எங்க போன” என கேட்டுகொண்டே உள்ளே வந்த பூரணி
தாயின் வாடின முகமும் .அவர் முந்தானையின் மேடும் கையில் இருக்கும் பையும் பார்த்தவள் உடனே
“அடடா பொங்கல் வந்துச்சுனா இந்த கிழக்கு சீமையிலே குடும்பம் போட்ற சீன் தாங்க முடியாது....... வண்டி கட்டிக்கிட்டு வந்திடுவாங்களே என கிண்டலாக சொன்னவள் .......ஆமா இந்த முறை என்ன கொடுத்து இருக்காங்க” என கேட்டுகொண்டே அவள் அந்த பையை வாங்க......
மணியம்மையோ கோபத்தில் அவளை முறைக்க ...அது மட்டும்தான் அவரால் செய்யமுடியும்.வேறு ஏதாவது பேசினால் பிறகு இது வாங்குவதற்கும் மாணிக்கம் அனுமதி அளிக்க மாட்டார் என அவருக்கு தெரியும்.அதனால் மகளை முறைத்தபடியே உள்ளே சென்றார் மணியாம்மை.
வேகமாக எடுத்து பார்த்தவள் இரண்டு பட்டுபுடவையும், பாரிஜாததிற்கு ஒரு சுடிதாரும் மாணிக்கத்திற்கு பட்டு வேஷ்டியும் இருக்க பட்டு புடவையை எடுத்து பார்த்தவள் மெஜந்தா நிறத்தில் அழகிய வேலைபாடுடன் கூடிய சாப்ட் சில்க் புடவை இருக்க .. அவளுக்கு அது உடனே பிடித்து போக ஆனால் அதை மறைத்து “என்னம்மா இது கிழவிங்க கட்டுற மாதிரி புடவை எடுத்து கொடுத்து இருக்காங்க........இதுக்குதான் வண்டிகட்டிகிட்டு சீரு கொண்டு வந்தாங்களா என சலித்தபடியே சொன்னவள் பின்னர் அம்மா எனக்கு ஏதும் பிடிக்கலை.......அவனை மாதிரியே புடவையும் செலக்ட் பண்ணிருக்கான்.......இது என்ன கலரு..... “என சொல்லிகொண்டே அந்த புடவையை எடுத்துகொண்டு உள்ளே சென்றாள் பூரணி.
“என்னக்கா புலம்பிகிட்டே வர என கேட்டுகொண்டே வந்த பாரிஜாதம் அவள் கையில் புடவையை பார்த்ததும் வாவ் சூப்பரா இருக்கு என்றவள் யாருக்குக்கா இது என கேட்டவள் அம்மா அவளுக்கு மட்டும் புது துணி எனக்கு இல்லையா?” என கத்த
“ஏண்டி குட்டச்சி கத்தற......உனக்கும் தான் இருக்கு...அந்த ஒரங்கொட்டான் தான் அனுப்பி வச்சிருக்கான்” என சொல்லிகொண்டே பூரணி உள்ளே செல்ல
“உனக்கு வர வர வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சு பூரணி.....மச்சானை இப்படிதான் மரியாதை இல்லாம கூப்பிடுவியா என திட்டி கொண்டே வந்த மணியம்மை ...பாரி புகழு மச்சான் தான் அனுப்பி வச்சிருக்கான் பொங்கலுக்கு” என சொல்லவும் ....
“ஹய் புகழு மச்சான் டிரஸ் அனுப்பி இருக்காறா... என குதியாட்டம் போட்டுகொண்டே ஓடிபோய் அவள் டிரெஸ்ஸை அவள் எடுத்து பார்த்தவள் சூப்பரா இருக்கும்மா” என சந்தோசமாக சொல்ல மணியம்மையோ நிமிர்ந்து பூரணியை ஒரு பார்வை பார்க்க அவளோ உதட்டை சுளித்துகொண்டு உள்ளே சென்றாள்.
பாரிஜாதம் இப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள்.விடுதியில் தங்கி படிப்பதால் விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவாள்.உருவத்தில் பூரணி அம்மா போல் இருந்தாலும் குணத்தில் மாணிக்கத்தை அப்படியே கொண்டிருப்பாள்.பாரிஜாதமோ மணியம்மை போல் மென்மையான குணம் படைத்தவள்.மேலும் மணியம்மையின் உறவினர்கள் மேல் அதிக பாசம் கொண்டு இருப்பாள்.
ஆனால் பூரணிக்கு அவர்களை பிடிக்காது.எப்போதும் புகழ் பாண்டியை பற்றி குறை சொல்லி கொண்டே இருப்பாள்.ஆனால் பேச்சியம்மாளை பற்றி எதுவும் பேசமாட்டாள்.சிறுவயதில் அவரிடம் எதோ சொல்ல அவர் அவளை நன்றாக திட்டிவிட அதில் இருந்து அவரை பற்றி பேசமாட்டாள்.மாணிக்கத்திற்கும் அவர்களை பிடிக்காததால் தன் தந்தையுடன் சேர்ந்து கொண்டு அவர்களை பொருட்படுத்தமாட்டாள்.
அதுவும் புகழை பற்றி அனைவரும் பெருமையாக சொல்வது அவளுக்கு எரிச்சலாக இருக்கும்.படிச்சு இருந்தா பட்டணத்துல வேலைக்கு போலாம் ...படிக்காதவனுக்கு கலப்பை பிடிச்சாதான கால் வயராவது சாப்பிடமுடியும்....அதான் அவன் செய்யறான்...அதை போய் எல்லாரும் பெருசா பேசறாங்க என அவள் தாயிடம் பொருமி தீர்ப்பாள் பூரணி.
வண்டி சத்தம் கேட்டதும் வேகமாக அருகில் வந்த புகழ் “என்ன சித்தப்பு வாங்கிட்டாங்களா “என கேட்க
அவரோ எதுவும் சொல்லாமல் வண்டியை பார்க்க
“இந்த வருசமும் அதே மாதிரிதான” என அவன் முக வாட்டம் அடைய
“நீ ஏன் புகழு வருத்தபட்ற........எப்பவும் நடக்கிறது தான என்றவர் உன்ற அத்தை உன்னை ரொம்ப விசாரிச்சா....என சொல்லிவிட்டு அங்கு நடந்தை சுருக்கமாக விவரித்தவர் உங்க அப்பா காலத்துல இருந்து அவர் அப்படிதான்.....என்ன அந்த பொண்ணுக்காக “என அவர் ஆரம்பிக்க
“என்ன ராசு போன காரியம் என்னாச்சு” என கேட்டபடி வெளியே வந்த பேச்சியம்மாள் வண்டியை பார்த்தவர்
ராசுவை பார்த்து “உள்ளூர்ல ஓணான் பிடிக்க தெரியாதவன் சீமையிலே சிங்கத்தை பிடிக்க போனானாம்....இது எப்பவும் நடக்கிற கூத்து தான.....உங்க ஐயனும் சரி ,இவனும் சரி நான் சொல்றத என்னைக்கு கேட்டு இருக்காங்க.....இப்படியே அவமானப்பட்டு திரும்பி வாங்க” என அவர் ஆரம்பிக்க
“அம்மா விடுங்க...... நம்ம முறையை நம்ம செய்யறோம்.......வாங்கறதும் வாங்காததும் அவங்க இஷ்டம்......இதுல எனக்கு ஒன்னும் வருத்தம் இல்லை”......என சொல்லிவிட்டு புகழ் நகர வாய் மட்டுமே இந்த வார்த்தையை சொன்னதே தவிர மனதிலோ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி என பெருமூச்சுவிட்டவாரே நடந்தான் .
அன்று காலை வீட்டில் எல்லாரும் அரக்கபரக்க ஓடிக்கொண்டு இருந்தனர்.பூரணியோ இன்று நேரமாக எழுந்து வாசலில் கோலமிட்டு குளித்து தயாராகி கொண்டு இருந்தாள்..
எல்லாம் சரியா இருக்கா என வேலையாட்களை பலமுறை அழைத்து உறுதி படுத்திகொண்ட மாணிக்கம் வீட்டையும் வாசலையும் மாறி மாறி பார்த்திருக்க
மணியம்மையோ மாணிக்கத்திற்கு நம்பிக்கை வார்த்தை சொன்னாலும் இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என அனைத்து கடவுளையும் வேண்டிகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சொக்கன் வேகமாக ஓடி வந்து “ஐயா வண்டி வந்திடுச்சுங்க” என சொல்ல
விரைந்து அனைவரும் வாசலுக்கு செல்ல
பூரணியோ தனது அறையின் ஜன்னல் அருகே நின்று கொண்டு வருபவர்களை எதிர்பார்த்து இருக்க ,மனமோ படபடவென்று வேகமாக அடிக்க . கண்களோ அங்கும் இங்கும் அலைபாய .....நடுக்கத்துடன் இருக்கும் தனது கால்களை நிலை படுத்த முடியாமல் தனது கைகளால் ஜன்னல் கம்பியை இறுக்கமாக பிடித்தவள் காரில் இருந்து முதலில் இறங்கிய தனது அத்தையை பார்த்தவள் “அச்சோ இதை யாரு முதல்ல இறங்க சொன்னா” என மனதிற்குள் சலித்தபடி அடுத்து யார் என எதிர்பார்க்க அரசியும் அவள் மாமாவும் இறங்க “என்னது எல்லாரும் இறங்கறாங்க ....அப்போ அவங்க ????” என கண்கள் தேட
காரை சுற்றி அனைவரும் நின்றதால் அதற்கு மேல் அவளுக்கு தெரியவில்லை.....
பேசிகொண்டே அனைவரும் உள்ளே வர அவள் பார்வை வலையத்துக்குள் அவன் இல்லாமல் இருக்க
“அவங்க வரலையா” என ஏமாற்றத்துடன் தனது அறையின் மறுபக்கம் வழியாக வெளியே வந்தவள் நேராக காரின் அருகில் சென்று உள்ளே பார்த்தாள்.
அப்போது “யார தேடற பூரணி “என ஒரு குரல் அவள் அருகில் கேட்க
அதிர்ந்து வேகமாக திரும்பியவள் அங்கு தன் மனதின் நாயகன் கைகளில் பெட்டியுடன் சிரித்து கொண்டு நின்றான்.
அதுவரை இருந்த கலக்கம் மறைந்து முகத்தில் சந்தோசம் பொங்க கண்களை மூடி சில நொடிகள் தன்னை ஆசுவாசபடுத்திகொண்டு கண்களை திறந்து அவன் முகத்தை பார்க்க
அவன் இருபுருவத்தை தூக்கி என்ன என கேட்டான்.
வெட்கத்தில் அவள் முகம் சிவக்க ஒன்றும் இல்லை என தலை அசைத்தவள் வேகமாக வீட்டிற்குள் செல்ல முயல
“ வீட்டிற்கு வந்தவங்களை வாங்கனு கூட கேட்கமாட்டியா?” என அவன் சொன்னதும்.....
உடனே அவள் வேகமாக “வாங்க மச்சான்” என சொல்வதற்குள் மறுபடியும் வெட்கம் வர
“போனமுறை நான் கிளம்பும்போது எப்போ வருவீங்கனு என்னை கேட்டு ஒரு பொண்ணு நச்சரிச்சுகிட்டே இருந்தது......ஆனா மறுபடியும் அவங்க வீட்டிற்கு வந்தா பேசறதுக்கே ரொம்ப யோசிக்குது......அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமா பூரணி” என கேட்டதும்
அவளோ சிறு சிணுங்கலுடன் “என்ன மச்சான் நீங்க ........எல்லாரும் காரை விட்டு இறங்கிட்டாங்க...உங்களை காணோம்...நீங்க எங்க வரலையோன்னு பதறி ஓடி வந்தா ...நீங்க என்னடானா” என அவள் சொல்லி நிறுத்த
“நிஜமாவா” என கேட்டுகொண்டே அவள் அருகில் வந்தவன் “உன்னை பார்க்க நான் வராம இருப்பனா பூரணி....போன முறை உன்கிட்ட மனசு விட்டு பேசினதுல இருந்து மறுபடியும் எப்போ உன்னை பார்ப்பேன்னு துடிச்சுகிட்டு இருந்தேன்........இப்போ எல்லாம் நான் இரவு தூங்கிறதே இல்ல தெரியுமா ?”.....என அவன் ஒரு மாதிரி ஏக்க குரலில் சொல்ல
அவளோ “ஏன் என்னாச்சு...உடம்பு சரியில்லையா” என வேகமாக கேட்க
அவனோ சிரித்துகொன்டே “எங்க கண்ணை மூடுனா உன் முகம்தானே வருது.......உன் நியாபகம் வந்தா உடனே உன்னை பார்க்கணும் போல இருக்கு....அதான் என அவன் சரசமாக சொல்லவும்
அவனது பேச்சு அவளுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தலைகுனிந்தவாறே அமைதியாக அவள் நின்றாள்.
“பூரணி அப்புறம்” என அவன் ஆரம்பிக்க
“என்ன தம்பி இன்னும் இங்கே நிக்கிறீங்க?உள்ள வாங்க .....யம்மா பூரணி என்ன சும்மா பார்த்துகிட்டு நிக்கிற ..........தம்பிகிட்ட இருந்து பெட்டிய வாங்கி கொண்டு போய் அந்த அறையில் வை” என சொல்லிகொண்டே அங்கு வந்த மாணிக்கம்
“உள்ள வாப்பா” என்றவர் அதற்குள் அவரை காண ஊர்காரர் சிலர் வர
“வாங்க காத்தமுத்து அண்ணே” என அவர்களை மாணிக்கம் வரவேற்க
“என்ன மாணிக்கம் ஓரம்பரை எல்லாம் வந்திருக்காங்க போல இருக்கு...தம்பி யாரு?” என அவர் கேட்டதும்
“நம்ம கோமதி வீடு வந்து இருக்காங்க அண்ணே என்றவர் இவன்தான் கோமதியோட மகன் பரிமேலழகன் ...பேங்கல மேனஜேரா இருக்காபடி” என அழகனை அறிமுகபடுத்த
“வணக்கம் என அவன் கும்பிட்டதும் பரவாயில்லியே பட்டணத்துல படிச்ச பையனா இருந்தாலும் நம்ம ஊரு மரியாதை தெரிஞ்ச பையனா இருக்கான்.ரொம்ப சந்தோசம்... வணக்கம் தம்பி என்றவர் சரி மாணிக்கம் நீ இவங்களை கவனி...ஊரு வேலையை நாங்க பார்த்துக்கிறோம்” என சொல்லிவிட்டு சென்றார்கள்.
“என்ன அழகா எப்படி இருக்க ? வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு”? என அவனை விசரித்தபடியே வீட்டிற்குள் அழைத்து சென்றார் மாணிக்கம்..
இங்கு பூரணியோ பெட்டிகளை கொண்டு அவனது அறையில் வைத்து விட்டு வெளியே வர
அப்போது அழகன் உள்ளே நுழைய இரண்டு பேரும் வாயிற் படியில் நிற்க...வெகு அருகில் அவளை பார்த்த அழகன் அவள் கைகளை பிடித்து உள்ளே இழுக்க
“அச்சோ என்ன மச்சான் நீங்க என பதறி கையை விடுவித்தவள் இப்படி தொட்டு எல்லாம் பேசாதிங்க எனக்கு பிடிக்காது” என கோபமாக சொல்ல
பூரணியை அருகில்; பார்த்ததும் இன்னும் கொஞ்ச நேரம் அவளிடம் வம்பாடலாம் எங்கு வெளியே சென்றுவிடுவாளோ என்ற எண்ணத்தில் தான் அவன் கையை பிடித்து உள்ளே இழுத்தான்.ஆனால் பூரணி வேகமாக கையை உதறியது அவனுக்கு ஏதோ போல் ஆகிவிட
“இல்லை பூரணி நான் வந்து...உன்கிட்ட சும்மா பேசலாம்னுதான்” என அவன் நினைத்ததி சொல்ல முயல
பூரணியோ அதை கேட்காமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
நட்டு வச்ச நாத்தும்
வீட்டுக்கு சமஞ்ச பொண்ணும்
ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு
செல்வது இயற்கையின் நடப்பு .
தாலிக்கொடி கழுத்தில் ஏறியவுடன்
தொப்புள்கொடி உறவு
தூரத்து சொந்தமாகிவிடுகிறது பெண்களுக்கு.
பாசம் காட்டுவதில் கணவனும் தமையனும்
பகிர்ந்து கொண்டால் ஏற்றுகொள்ளலாம்.
உரிமையை இருவரும் பகிரும்போது
அதில் உயரந்தது எது எனக்கேட்டால்
என்ன சொல்வாள் இந்த பாவை..?
இந்த உரிமை போராட்டத்தில்
பகடைகாயாக இவளது மனதை இவர்கள்
உருட்டி விளையாட
இதன் முடிவு தான் என்ன????????????
“ஏண்டா சொக்கா அந்த மேற்கால அறைய சுத்தம் பண்ணிட்டியா...அங்க இருக்கிற அந்த சாமனத்தை எல்லாம் கொண்டுவந்து நம்ம புடகாலியில அந்த தவிட்டு முட்டை எல்லாம் போட்டு இருக்க அறையில வச்சிடு ...அப்புறம் அந்த சன்னலுக்கு பின்னாடி குப்பை கூளத்தை எல்லாம் சுத்தம் பண்ணு........ ..... அப்பத்தான் சன்னல திறந்தா கொசு எல்லாம் வராம இருக்கும்......அப்புறம் லைட்டு காத்தாடி எல்லாம் வேலை செய்யுதான்னு பார்த்துகடா.....எதுக்கும் வெளில ஒரு லைட்டு மாட்டிடு............ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க மாமா வறாரு..... டவுன்ல இருந்து வராங்க...வசதியா வாழ்ந்து பழக்க பட்டவங்க........கொஞ்சம் பார்த்து சூதானமா நடந்துக்குங்க” என தனது அக்கா வீடு வருகிறார்கள் என்ற சேதிய கேட்டதில் இருந்து வேலையாட்களிடம் வேலைகளை ஏவியபடி இருந்தார் மாணிக்கம்.
“ஏனுங்க எதுக்கு இப்படி காத்தால இருந்து படபடனு இருக்கீங்க ........அக்கா வீடுதான வராங்க..... விடியால காபிதண்ணீ குடிச்சதோட இருக்கீங்க.... மணி இப்ப என்னாவது ?இன்னும் சாப்பிடகூட வரலை ......இன்னைக்கு நடவு வேலையாமா? ...நீங்க வயலு பக்கமும் போகலைன்னு சொக்கன் சொன்னான்.முதல்ல வந்து சாப்பிட்டு அப்புறம் வேலைய பாருங்க” என அவரை நிதானபடுத்தினார் மணியம்மை.
வேலையாட்களிடம் பேசிக்கொண்டு இருந்தவர் மணியம்மை சொன்னதை கேட்டதும் திரும்பி “ஏம்புள்ள ......எங்க மாமா எப்டின்னு உனக்கு தெரியாதா? எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசறியே” என சற்று உள்ளே போன குரலில் அவர் சொல்லவும்
மணியம்மை எதுவும் பேசாமல் தலை குனிய
ம்ம்ம்ம்ம்ம் “அவரு பதினஞ்சுவருசத்துல இரண்டுதடவை தான் ஊருக்கு வந்தாரு...திரும்பி போகும்போது சண்டையோடதான் போனாரு.....அதற்கு அப்புறம் அக்காவும் புள்ளைங்களும்தான் வந்திட்டு போயிட்டு இருக்காங்க...ஏதோ இந்த முறை அவரும் வர்றாரு..... ...அதான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணிட்டு இருக்கேன்.... நாளைக்கு சலிப்பு சங்கடம் வந்திட கூடாது இல்ல “என அவர் சொல்ல
தனது கணவனின் மனதை புரிந்து கொண்ட அவரும் மென்மையாக அவரிடம் “நீங்க ஒன்னும் கவலைபடாதிங்க......இந்த முறை அப்படி ஏதும் நடக்காது...எல்லாம் நல்லா தான் நடக்கும்....அப்புறம் கோவில்ல பொங்கல் வைக்கிறதுக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சுட்டேன்...நீங்களும் ஒருமுறை வந்து பார்த்திடுங்க” என சொல்லிவிட்டு உள்ளே போனார் மணியம்மை.
“ம்ம்ம்ம் ...நம்ம எவ்ளோதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் அவங்க குறை சொல்லாம இருக்கபோறதில்லை......சரி நம்மளோட கடமைய நம்ம செய்வோம்” என சொல்லி கொண்டே அவர் உள்ளே வர
“அம்மா ஓலபாளையத்துல இருந்து வண்டி வந்து இருக்குதுங்கோ” என்ற சத்தம் கேட்க
உள்ளே சென்ற மாணிக்கம் அந்த வார்த்தையை கேட்டதும் சட்டென்று முகம் இறுக.... நின்று திரும்பி வெளியே பார்க்க
சத்தம் கேட்டு சந்தோசத்துடன் வேகமாக வந்த மணியம்மை வெளியில் நின்று இருந்த மாணிக்கத்தை பார்த்ததும் அப்படியே நின்று விட
இருவரும் ஏதும் பேசாமல் சில நொடிகள் நிற்க
“ம்க்கும் .....அதான் வந்திருக்குள்ள...... என்னை எதுக்கு பார்க்கிற .........எப்பவும் என்ன செய்வியோ அதையே செய்......வருஷம் வருஷம் நடக்கிற விஷயம் தான” என சொல்லிவிட்டு மாணிக்கம் உள்ளே சென்றார்.
வேகமாக வண்டியின் அருகே சென்ற மணியம்மை அதற்குள் வண்டியில் இருந்து இறங்கிய ராசு .... “அம்மா மணி நல்லா இருக்கியா? வீட்ல எல்லாரும் சுகம் தான .......நீ போனதடவை விட இந்த முறை இளைச்சு கருத்த மாதிரி தெரியுது ? உடம்புக்கு ஒன்னும் இல்லையே “ என தன் வீட்டு பெண்ணை பார்த்ததும் அக்கறையாக விசாரிக்க
....நான் நல்லாத்தான் இருக்கேன்” என மணியம்மை சொல்லவும்
“உடம்பை பார்த்துக்கோ அம்மணி என்றவர் உன் பிறந்த வீட்ல இருந்து பொங்கலுக்கு சீர் கொடுத்து விட்ருக்காங்க ......இந்த முறை விளைச்சல் நல்லா இருக்கு...அதுனால இந்த முறை வெள்ளில விளக்கும் சேர்த்து வாங்கி கொடுத்து இருக்காங்க...அப்புறம்” என அவர் தயங்கி நிற்க
மணியம்மையோ கண்களில் கண்ணீர் ததும்ப அவரை பார்க்க
“அழுவாத பாப்பா.......உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரகூடாது...இதுக்கா நாங்க எவளோ அவமானபாட்டலும் மறுபடியும் வந்து வந்து நிற்கிறோம்” என அவர் சொல்லும்போதே நா தழுதழுக்க
“என்னால முடியலண்ணா.........நானும் இன்னைக்கு சரியாகிடும்...நாளைக்கு சரியாகிடும்னு பொறுமையா இருந்தேன்....ஆனா இது எப்பவுமே சரியாகாதுபோல இருக்கே......ஒவொவொரு வருஷ பொங்கலுக்கும் நீங்க இப்படி வாசல்ல வந்து நிற்கிறதும் நான் அப்படியே உங்களை பேசி அனுப்பறதும் இன்னும் எத்தன நாளைக்கு? ......நாம எவ்ளோ கஷ்டபட்டாலும் நம்ம வீட்டு பொண்ணு வாக்கப்பட்ட இடத்துல வாடி போய் நிக்க கூடாதுன்னு ஒவொவொரு முறையும் வந்து நின்னு நீங்கதான அவமானப்பட்டு போறீங்க?என்னால பிறந்த வீட்டுக்கு உதவி செய்யத்தான் முடியலை.....உபத்திரவம் செய்யாமல் இருந்திருக்கலாம்”.........என சொல்லி அவள் அழ
“என்ன வார்த்தை சொல்லிட்ட அம்மணி......இதுமட்டும் தம்பிக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்.....அவன் என்ன சொல்லி அனுப்புனா தெரியுமா?.....மாமா இந்த முறை வெள்ளி விளக்குதான் கொடுக்க முடிஞ்சுது........அடுத்த முறை கண்டிப்பா காசுமாலையோட நானே வாறேன்னு சொல்லுங்க....... அப்புறம் எங்களை பத்தி கவலைபடவேண்டாம்....நாங்க நல்லா இருக்கோம்....எங்களை நினச்சு அத்தை உடம்ப கெடுத்துக்க போறாங்க......அவங்க அண்ணன் இருந்தா என்ன செய்வாங்களோ அதைவிட இரண்டு மடங்கு சேர்த்து தான் நான் செய்வேன்.....மத்தவங்க என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை அப்டின்னு சொன்னான்” என அவர் சொல்லி முடிக்கும் முன்
“ஐயோ அவனுக்கு இருக்கும் தெளிவு கூட எனக்கு அன்னைக்கு இல்லாம போயிடுச்சே .......இந்த சின்ன வயசுல எப்புடி பொறுப்பா பேசறான் பாருங்க...அப்படியே என் அண்ணன் மாதிரியே இருக்கான்......அச்சோ இந்த கிறுக்கி என்னை பத்தியே பேசிட்டு இருக்கேன் பாருங்க .......அப்புறம் அண்ணா வீட்ல எல்லாரும் சுகமாதானே இருக்காங்க? வேற ஏதாவது விசேஷமா ?கிழக்கால ஒரு தோப்பு வாங்கினதுல ஏதோ பிரச்சனைன்னு சொல்லிட்டு இருந்தாங்க...... எல்லாம் சரியாகிடுச்சா ? நங்கைக்கு உடம்பு எப்படி இருக்கு?சின்னவன் ஒழுங்கா படிக்கிறானா? அப்புறம் பெரியவன் வேலை வேலைன்னு சோறு தண்ணீ இல்லாம இருக்கபோறான்,கொஞ்சம் பார்த்துக்குங்க” என அவள் படபடவென பேசிகொண்டே செல்ல
“உன்ற மருமகனுக்கு என்ன அம்மணி ...ஊரே அவனை பார்த்து ஆச்சரியப்பட்டு நிக்குது....இந்த சின்ன வயசுல இவ்ளோ திறமையானு” என மணியம்மையின் அண்ணன் மகன் புகழை பற்றி பெருமையாக ராசு சொல்ல....ஆம் மணியம்மையின் அண்ணன் மகன் தான் புகழ் .அவன்தான் தன் அத்தைக்கு பிறந்த வீட்டு சீர் கொடுத்து அனுப்பி இருந்தான்.
அதற்குள் “அம்மா, ஐயா உங்களை வர சொன்னாருங்க” என வேலையாள் வந்து சொல்ல
அவளோ ஒருநிமிடம் கண்களை மூடி திறந்தவள் “நீ போ நான் வரேன்” என சொல்லிவிட்டு
“ராசண்ணா நீங்க எல்லாம் இருக்கீங்க...நல்லா பார்த்துக்குவீங்க அப்டினுதான் நான் இங்க நிம்மதியா இருக்கேன்......எதா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்க.......புகழு அழுத்தக்காரன்....எதையும் வெளியே சொல்லமாட்டன்...... பதினஞ்சு வயசுலே அவளோ கஷ்டத்திலையும் அவன் ஏதும் சொல்லல ....இப்பவா சொல்ல போறான் என்றவர் அண்ணீ படபடனு பேசினாலும் வெளிஉலகம் தெரியாது.....நீங்க கொஞ்சம் பார்த்துக்குங்க என்றவள் சரி அண்ணே இனியும் நின்னு பேசிட்டு இருந்தா உங்க மாப்பிள்ளை என்னைத்தான் வைவாரு” என்றவள் வண்டி நிறைய இருந்த பொருட்களில் அரிசியில் ஒரு பிடியும்,வாழைதாறு மற்ற பொருட்களில் இருந்து கொஞ்சம் எடுத்து கொண்டவள் தனது முந்தானையில் அதை முடிந்து கொண்டு “எனக்கு போதும் அண்ணே” என சொல்லி நிமிர
இது எப்போதும் நடப்பதுதான்.வண்டி நிறய சீர் வந்தாலும் மணியம்மை எடுத்துகொள்வது ஒரு கைபிடித்தான்.அதற்கு மீறி ஆசைபட்டால் அந்த வண்டியே உள்ளே வரகூடாது என சொல்லி விட்டார் மாணிக்கம்.அதுவும் தனது மனைவி மேல் உள்ள அளவற்ற காதலால் அந்த ஒரு கைபிடிக்கு அனுமதி அளித்தார்.
“ராசுவோ ஏன் கண்ணு இந்த முறையாவது நான் மாப்பிள்ளைகிட்ட பேசிபார்க்கட்டுமா......ஒவொவொரு முறையும் கொண்டுவந்து சீருல இப்படி ஒரு பிடி மட்டும் அள்ளிகிட்டு திருப்பி அனுப்பிட்ற.....இந்த முறையாவது எப்படியாவது பேசி கொடுத்திட்டு வாங்கனு தம்பி சொல்லி அனுப்புச்சு” என சொல்லவும்
மணியம்மையோ “போதும் அண்ணே.....இனி பேசி நீங்க அவமானப்பட வேண்டாம். எனக்கு சீரே வேண்டாம் ...நீங்க வந்து இப்படி அவமானபடாதிங்கனு சொல்ல தான் மனசு நினைக்குது...........ஆனால் ஒவொவொரு வருசமும் நீங்க இதை வச்சுதான் என்னை பார்க்க வரமுடியும்...இதுவும் வேண்டாம்னு சொல்லிட்டா நம்ம பந்தமே அத்து போய்டும் ....அதனாலதான் நான் இதுக்கு ஒத்துகிட்டேன்.........என்னோட சுயநலத்துக்காக உங்களை எல்லாம் பலியாடு ஆக்கிட்டு இருக்கேன் ” என சொல்லும்போதே அவர் கண்கள் கலங்க
“என்ன கண்ணு இப்படி சொல்லிபுட்ட.....நீ எங்க வீட்டு புள்ள......உனக்காக இதுகூட நாங்க தாங்கிக்க மாட்டமா” என அவள் வேதனையை புரிந்து கொண்டு ராசு ஆறுதலாக பேசவும்
மணியம்மையும் கண்களை துடைத்து கொண்டே “அதான் பொங்கலுக்கு எப்பவும் நீங்க கொடுக்கிற துணிதான் ஊடுத்திகிறோம்....அந்த சந்தோசமே எனக்கு போதும் என்றவள் அந்த துணி பையை எடுக்க ...
“அதான்மா புகழு தம்பியும் சொல்லுச்சு.......அத்தை மத்தது ஏதும் வாங்க மாட்டாங்க.....அதனால தான் காஞ்சிபுரத்துல இருந்து சொல்லி பட்டுபுடவை எடுத்திட்டு வந்தேன் ...இதை கொடுத்திடுங்க சித்தப்புனு சொல்லி அனுப்புச்சான் என்றவர் அப்புறம் பூரணிக்கும்” என ஆரம்பித்து என அவர் தயங்க
அதற்குள் மறுபடியும் வேலையாள் அவளை நோக்கி வர உடனே
“அவன் எங்க வீட்டு குலசாமின்னே என உணர்ச்சிபெருக்கோடு சொன்ன மணியம்மை சந்தோசமா அத்தை வாங்கிகிச்சுன்னு அவன் கிட்ட சொல்லிடுங்க” என்றவள் துணிகள் இருக்கும் பையை மட்டும் எடுத்து கொண்டு வேகமாக உள்ளே சென்றாள்.
சொல்ல நினைத்தை இந்த முறையும் சொல்ல முடியாமல் திரும்பி சென்றார் ராசு.நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் விதி என்று ஒன்று இருப்பதே எல்லாருக்கும் மறந்து விடும்.
“அம்மா எங்க போன” என கேட்டுகொண்டே உள்ளே வந்த பூரணி
தாயின் வாடின முகமும் .அவர் முந்தானையின் மேடும் கையில் இருக்கும் பையும் பார்த்தவள் உடனே
“அடடா பொங்கல் வந்துச்சுனா இந்த கிழக்கு சீமையிலே குடும்பம் போட்ற சீன் தாங்க முடியாது....... வண்டி கட்டிக்கிட்டு வந்திடுவாங்களே என கிண்டலாக சொன்னவள் .......ஆமா இந்த முறை என்ன கொடுத்து இருக்காங்க” என கேட்டுகொண்டே அவள் அந்த பையை வாங்க......
மணியம்மையோ கோபத்தில் அவளை முறைக்க ...அது மட்டும்தான் அவரால் செய்யமுடியும்.வேறு ஏதாவது பேசினால் பிறகு இது வாங்குவதற்கும் மாணிக்கம் அனுமதி அளிக்க மாட்டார் என அவருக்கு தெரியும்.அதனால் மகளை முறைத்தபடியே உள்ளே சென்றார் மணியாம்மை.
வேகமாக எடுத்து பார்த்தவள் இரண்டு பட்டுபுடவையும், பாரிஜாததிற்கு ஒரு சுடிதாரும் மாணிக்கத்திற்கு பட்டு வேஷ்டியும் இருக்க பட்டு புடவையை எடுத்து பார்த்தவள் மெஜந்தா நிறத்தில் அழகிய வேலைபாடுடன் கூடிய சாப்ட் சில்க் புடவை இருக்க .. அவளுக்கு அது உடனே பிடித்து போக ஆனால் அதை மறைத்து “என்னம்மா இது கிழவிங்க கட்டுற மாதிரி புடவை எடுத்து கொடுத்து இருக்காங்க........இதுக்குதான் வண்டிகட்டிகிட்டு சீரு கொண்டு வந்தாங்களா என சலித்தபடியே சொன்னவள் பின்னர் அம்மா எனக்கு ஏதும் பிடிக்கலை.......அவனை மாதிரியே புடவையும் செலக்ட் பண்ணிருக்கான்.......இது என்ன கலரு..... “என சொல்லிகொண்டே அந்த புடவையை எடுத்துகொண்டு உள்ளே சென்றாள் பூரணி.
“என்னக்கா புலம்பிகிட்டே வர என கேட்டுகொண்டே வந்த பாரிஜாதம் அவள் கையில் புடவையை பார்த்ததும் வாவ் சூப்பரா இருக்கு என்றவள் யாருக்குக்கா இது என கேட்டவள் அம்மா அவளுக்கு மட்டும் புது துணி எனக்கு இல்லையா?” என கத்த
“ஏண்டி குட்டச்சி கத்தற......உனக்கும் தான் இருக்கு...அந்த ஒரங்கொட்டான் தான் அனுப்பி வச்சிருக்கான்” என சொல்லிகொண்டே பூரணி உள்ளே செல்ல
“உனக்கு வர வர வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சு பூரணி.....மச்சானை இப்படிதான் மரியாதை இல்லாம கூப்பிடுவியா என திட்டி கொண்டே வந்த மணியம்மை ...பாரி புகழு மச்சான் தான் அனுப்பி வச்சிருக்கான் பொங்கலுக்கு” என சொல்லவும் ....
“ஹய் புகழு மச்சான் டிரஸ் அனுப்பி இருக்காறா... என குதியாட்டம் போட்டுகொண்டே ஓடிபோய் அவள் டிரெஸ்ஸை அவள் எடுத்து பார்த்தவள் சூப்பரா இருக்கும்மா” என சந்தோசமாக சொல்ல மணியம்மையோ நிமிர்ந்து பூரணியை ஒரு பார்வை பார்க்க அவளோ உதட்டை சுளித்துகொண்டு உள்ளே சென்றாள்.
பாரிஜாதம் இப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறாள்.விடுதியில் தங்கி படிப்பதால் விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வருவாள்.உருவத்தில் பூரணி அம்மா போல் இருந்தாலும் குணத்தில் மாணிக்கத்தை அப்படியே கொண்டிருப்பாள்.பாரிஜாதமோ மணியம்மை போல் மென்மையான குணம் படைத்தவள்.மேலும் மணியம்மையின் உறவினர்கள் மேல் அதிக பாசம் கொண்டு இருப்பாள்.
ஆனால் பூரணிக்கு அவர்களை பிடிக்காது.எப்போதும் புகழ் பாண்டியை பற்றி குறை சொல்லி கொண்டே இருப்பாள்.ஆனால் பேச்சியம்மாளை பற்றி எதுவும் பேசமாட்டாள்.சிறுவயதில் அவரிடம் எதோ சொல்ல அவர் அவளை நன்றாக திட்டிவிட அதில் இருந்து அவரை பற்றி பேசமாட்டாள்.மாணிக்கத்திற்கும் அவர்களை பிடிக்காததால் தன் தந்தையுடன் சேர்ந்து கொண்டு அவர்களை பொருட்படுத்தமாட்டாள்.
அதுவும் புகழை பற்றி அனைவரும் பெருமையாக சொல்வது அவளுக்கு எரிச்சலாக இருக்கும்.படிச்சு இருந்தா பட்டணத்துல வேலைக்கு போலாம் ...படிக்காதவனுக்கு கலப்பை பிடிச்சாதான கால் வயராவது சாப்பிடமுடியும்....அதான் அவன் செய்யறான்...அதை போய் எல்லாரும் பெருசா பேசறாங்க என அவள் தாயிடம் பொருமி தீர்ப்பாள் பூரணி.
வண்டி சத்தம் கேட்டதும் வேகமாக அருகில் வந்த புகழ் “என்ன சித்தப்பு வாங்கிட்டாங்களா “என கேட்க
அவரோ எதுவும் சொல்லாமல் வண்டியை பார்க்க
“இந்த வருசமும் அதே மாதிரிதான” என அவன் முக வாட்டம் அடைய
“நீ ஏன் புகழு வருத்தபட்ற........எப்பவும் நடக்கிறது தான என்றவர் உன்ற அத்தை உன்னை ரொம்ப விசாரிச்சா....என சொல்லிவிட்டு அங்கு நடந்தை சுருக்கமாக விவரித்தவர் உங்க அப்பா காலத்துல இருந்து அவர் அப்படிதான்.....என்ன அந்த பொண்ணுக்காக “என அவர் ஆரம்பிக்க
“என்ன ராசு போன காரியம் என்னாச்சு” என கேட்டபடி வெளியே வந்த பேச்சியம்மாள் வண்டியை பார்த்தவர்
ராசுவை பார்த்து “உள்ளூர்ல ஓணான் பிடிக்க தெரியாதவன் சீமையிலே சிங்கத்தை பிடிக்க போனானாம்....இது எப்பவும் நடக்கிற கூத்து தான.....உங்க ஐயனும் சரி ,இவனும் சரி நான் சொல்றத என்னைக்கு கேட்டு இருக்காங்க.....இப்படியே அவமானப்பட்டு திரும்பி வாங்க” என அவர் ஆரம்பிக்க
“அம்மா விடுங்க...... நம்ம முறையை நம்ம செய்யறோம்.......வாங்கறதும் வாங்காததும் அவங்க இஷ்டம்......இதுல எனக்கு ஒன்னும் வருத்தம் இல்லை”......என சொல்லிவிட்டு புகழ் நகர வாய் மட்டுமே இந்த வார்த்தையை சொன்னதே தவிர மனதிலோ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி என பெருமூச்சுவிட்டவாரே நடந்தான் .
அன்று காலை வீட்டில் எல்லாரும் அரக்கபரக்க ஓடிக்கொண்டு இருந்தனர்.பூரணியோ இன்று நேரமாக எழுந்து வாசலில் கோலமிட்டு குளித்து தயாராகி கொண்டு இருந்தாள்..
எல்லாம் சரியா இருக்கா என வேலையாட்களை பலமுறை அழைத்து உறுதி படுத்திகொண்ட மாணிக்கம் வீட்டையும் வாசலையும் மாறி மாறி பார்த்திருக்க
மணியம்மையோ மாணிக்கத்திற்கு நம்பிக்கை வார்த்தை சொன்னாலும் இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என அனைத்து கடவுளையும் வேண்டிகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சொக்கன் வேகமாக ஓடி வந்து “ஐயா வண்டி வந்திடுச்சுங்க” என சொல்ல
விரைந்து அனைவரும் வாசலுக்கு செல்ல
பூரணியோ தனது அறையின் ஜன்னல் அருகே நின்று கொண்டு வருபவர்களை எதிர்பார்த்து இருக்க ,மனமோ படபடவென்று வேகமாக அடிக்க . கண்களோ அங்கும் இங்கும் அலைபாய .....நடுக்கத்துடன் இருக்கும் தனது கால்களை நிலை படுத்த முடியாமல் தனது கைகளால் ஜன்னல் கம்பியை இறுக்கமாக பிடித்தவள் காரில் இருந்து முதலில் இறங்கிய தனது அத்தையை பார்த்தவள் “அச்சோ இதை யாரு முதல்ல இறங்க சொன்னா” என மனதிற்குள் சலித்தபடி அடுத்து யார் என எதிர்பார்க்க அரசியும் அவள் மாமாவும் இறங்க “என்னது எல்லாரும் இறங்கறாங்க ....அப்போ அவங்க ????” என கண்கள் தேட
காரை சுற்றி அனைவரும் நின்றதால் அதற்கு மேல் அவளுக்கு தெரியவில்லை.....
பேசிகொண்டே அனைவரும் உள்ளே வர அவள் பார்வை வலையத்துக்குள் அவன் இல்லாமல் இருக்க
“அவங்க வரலையா” என ஏமாற்றத்துடன் தனது அறையின் மறுபக்கம் வழியாக வெளியே வந்தவள் நேராக காரின் அருகில் சென்று உள்ளே பார்த்தாள்.
அப்போது “யார தேடற பூரணி “என ஒரு குரல் அவள் அருகில் கேட்க
அதிர்ந்து வேகமாக திரும்பியவள் அங்கு தன் மனதின் நாயகன் கைகளில் பெட்டியுடன் சிரித்து கொண்டு நின்றான்.
அதுவரை இருந்த கலக்கம் மறைந்து முகத்தில் சந்தோசம் பொங்க கண்களை மூடி சில நொடிகள் தன்னை ஆசுவாசபடுத்திகொண்டு கண்களை திறந்து அவன் முகத்தை பார்க்க
அவன் இருபுருவத்தை தூக்கி என்ன என கேட்டான்.
வெட்கத்தில் அவள் முகம் சிவக்க ஒன்றும் இல்லை என தலை அசைத்தவள் வேகமாக வீட்டிற்குள் செல்ல முயல
“ வீட்டிற்கு வந்தவங்களை வாங்கனு கூட கேட்கமாட்டியா?” என அவன் சொன்னதும்.....
உடனே அவள் வேகமாக “வாங்க மச்சான்” என சொல்வதற்குள் மறுபடியும் வெட்கம் வர
“போனமுறை நான் கிளம்பும்போது எப்போ வருவீங்கனு என்னை கேட்டு ஒரு பொண்ணு நச்சரிச்சுகிட்டே இருந்தது......ஆனா மறுபடியும் அவங்க வீட்டிற்கு வந்தா பேசறதுக்கே ரொம்ப யோசிக்குது......அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமா பூரணி” என கேட்டதும்
அவளோ சிறு சிணுங்கலுடன் “என்ன மச்சான் நீங்க ........எல்லாரும் காரை விட்டு இறங்கிட்டாங்க...உங்களை காணோம்...நீங்க எங்க வரலையோன்னு பதறி ஓடி வந்தா ...நீங்க என்னடானா” என அவள் சொல்லி நிறுத்த
“நிஜமாவா” என கேட்டுகொண்டே அவள் அருகில் வந்தவன் “உன்னை பார்க்க நான் வராம இருப்பனா பூரணி....போன முறை உன்கிட்ட மனசு விட்டு பேசினதுல இருந்து மறுபடியும் எப்போ உன்னை பார்ப்பேன்னு துடிச்சுகிட்டு இருந்தேன்........இப்போ எல்லாம் நான் இரவு தூங்கிறதே இல்ல தெரியுமா ?”.....என அவன் ஒரு மாதிரி ஏக்க குரலில் சொல்ல
அவளோ “ஏன் என்னாச்சு...உடம்பு சரியில்லையா” என வேகமாக கேட்க
அவனோ சிரித்துகொன்டே “எங்க கண்ணை மூடுனா உன் முகம்தானே வருது.......உன் நியாபகம் வந்தா உடனே உன்னை பார்க்கணும் போல இருக்கு....அதான் என அவன் சரசமாக சொல்லவும்
அவனது பேச்சு அவளுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தலைகுனிந்தவாறே அமைதியாக அவள் நின்றாள்.
“பூரணி அப்புறம்” என அவன் ஆரம்பிக்க
“என்ன தம்பி இன்னும் இங்கே நிக்கிறீங்க?உள்ள வாங்க .....யம்மா பூரணி என்ன சும்மா பார்த்துகிட்டு நிக்கிற ..........தம்பிகிட்ட இருந்து பெட்டிய வாங்கி கொண்டு போய் அந்த அறையில் வை” என சொல்லிகொண்டே அங்கு வந்த மாணிக்கம்
“உள்ள வாப்பா” என்றவர் அதற்குள் அவரை காண ஊர்காரர் சிலர் வர
“வாங்க காத்தமுத்து அண்ணே” என அவர்களை மாணிக்கம் வரவேற்க
“என்ன மாணிக்கம் ஓரம்பரை எல்லாம் வந்திருக்காங்க போல இருக்கு...தம்பி யாரு?” என அவர் கேட்டதும்
“நம்ம கோமதி வீடு வந்து இருக்காங்க அண்ணே என்றவர் இவன்தான் கோமதியோட மகன் பரிமேலழகன் ...பேங்கல மேனஜேரா இருக்காபடி” என அழகனை அறிமுகபடுத்த
“வணக்கம் என அவன் கும்பிட்டதும் பரவாயில்லியே பட்டணத்துல படிச்ச பையனா இருந்தாலும் நம்ம ஊரு மரியாதை தெரிஞ்ச பையனா இருக்கான்.ரொம்ப சந்தோசம்... வணக்கம் தம்பி என்றவர் சரி மாணிக்கம் நீ இவங்களை கவனி...ஊரு வேலையை நாங்க பார்த்துக்கிறோம்” என சொல்லிவிட்டு சென்றார்கள்.
“என்ன அழகா எப்படி இருக்க ? வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு”? என அவனை விசரித்தபடியே வீட்டிற்குள் அழைத்து சென்றார் மாணிக்கம்..
இங்கு பூரணியோ பெட்டிகளை கொண்டு அவனது அறையில் வைத்து விட்டு வெளியே வர
அப்போது அழகன் உள்ளே நுழைய இரண்டு பேரும் வாயிற் படியில் நிற்க...வெகு அருகில் அவளை பார்த்த அழகன் அவள் கைகளை பிடித்து உள்ளே இழுக்க
“அச்சோ என்ன மச்சான் நீங்க என பதறி கையை விடுவித்தவள் இப்படி தொட்டு எல்லாம் பேசாதிங்க எனக்கு பிடிக்காது” என கோபமாக சொல்ல
பூரணியை அருகில்; பார்த்ததும் இன்னும் கொஞ்ச நேரம் அவளிடம் வம்பாடலாம் எங்கு வெளியே சென்றுவிடுவாளோ என்ற எண்ணத்தில் தான் அவன் கையை பிடித்து உள்ளே இழுத்தான்.ஆனால் பூரணி வேகமாக கையை உதறியது அவனுக்கு ஏதோ போல் ஆகிவிட
“இல்லை பூரணி நான் வந்து...உன்கிட்ட சும்மா பேசலாம்னுதான்” என அவன் நினைத்ததி சொல்ல முயல
பூரணியோ அதை கேட்காமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
நட்டு வச்ச நாத்தும்
வீட்டுக்கு சமஞ்ச பொண்ணும்
ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு
செல்வது இயற்கையின் நடப்பு .
தாலிக்கொடி கழுத்தில் ஏறியவுடன்
தொப்புள்கொடி உறவு
தூரத்து சொந்தமாகிவிடுகிறது பெண்களுக்கு.
பாசம் காட்டுவதில் கணவனும் தமையனும்
பகிர்ந்து கொண்டால் ஏற்றுகொள்ளலாம்.
உரிமையை இருவரும் பகிரும்போது
அதில் உயரந்தது எது எனக்கேட்டால்
என்ன சொல்வாள் இந்த பாவை..?
இந்த உரிமை போராட்டத்தில்
பகடைகாயாக இவளது மனதை இவர்கள்
உருட்டி விளையாட
இதன் முடிவு தான் என்ன????????????