அத்தியாயம் -5
“.ஹே பூரணி இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்கடி...அங்க பாரு எல்லாரும் சாமிய பார்க்காம உன்னையே பார்த்திட்டு இருக்காங்க” என சொல்லிபடி சாந்தியும் மணியும் அவள் அருகில் வந்தனர்.
ஆம் மணியம்மை திட்டியதும் வீட்டிற்கு சென்று அவள் புகழ் எடுத்து கொடுத்த புடவையை கட்டிகொண்டு வருகையில் முதலில் பார்த்த அழகனே தன்னை மறந்து விசில் அடித்தவன் இந்த புடவையில் நீ லட்சணமா அம்சமா இருக்க பூரணி என மனம் திறந்து பாராட்டியவன் உனக்காவே எடுத்த மாதிரி இருக்கு” என சொன்னதும்
அவளோ அதை கேட்டதும் முதலில் சந்தோசபட்டவள் பின்னர் “அப்போ நீங்க எடுத்து கொடுத்தது நல்லாயில்லையா மச்சான்” என ஓரபார்வையில் பார்த்து கொண்டே அவனை கிண்டலாக கேட்க
இதை சற்றும் எதிர்பார்க்காதவன் வேகமாக .”.இல்ல இல்ல பூரணி ...அதும் நல்லா இருந்தது...ஆனா பட்டுபுடவை கட்டினாவே பெண்களுக்கு ஒரு அழகு வரும்ல...அது இந்த புடவையில் நல்லா தெரியுது..நான் எடுத்து கொடுத்த புடவை ஒரு அழகு...இது ஒரு அழகு...நான் எப்பவும் அழகை ஆராதிப்பவன் பூரணி” என அவளை முழுவதுமாக ரசித்து கண்ணடித்தபடி சொல்ல
அவளோ அவன் சொல்வது புரியாமல் “என்ன மச்சான்” என முகத்தை சுருக்கி கேட்டதும்.....ம்ம்ம்ம் என அவளை முறைத்தவன் உனக்கு இதுல்லாம் புரிஞ்சாதான் அதிசியம் என மனதிற்குள் நினைத்தவன் “சரி சரி நேரமாச்சு...அப்பா திட்டுவாரு வா போகலாம்” என அந்த பேச்சை மாற்றி அவளை கிளப்பி அழைத்து வந்தான்.
கோவிலில் அவன் ஆண்கள் இருக்கும் பகுதிக்குச்செல்ல பூரணியோ பொங்கல் வைக்கும் இடம் நோக்கி நடந்து வரும்போது தான் அவளது தோழிகள் அவளை பார்த்து அசந்து நின்றனர்.
.
பூரணி சராசரியை விட சற்று அதிகமான உயரம், அதற்க்கு ஏற்றார் போல் பூசின உடல் வாகு ...மாநிறம் ..முக அமைப்புகள் செதுக்கி வைத்தார் போன்று சரியான அளவில் இருக்கும்.ஆக மொத்தம் அழகி என்பதை விட லட்சணமான பெண் என சொல்லலாம்.அவளது சிரித்த முகமும் பெரிய விழிகளுமே பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும்.
அதற்கு ஏற்றார் போல் அவள் அழகிய பட்டு உடுத்தி மெல்ல நடந்து வர அப்போது தான் அவளை பார்த்த தோழிகள் அவளை பாராட்ட அவளோ “நிஜமாவா சொல்றிங்க ....இந்த புடவையில நான் அழகா இருக்கேனா என ஆச்சரியத்துடன் கேட்டவள் ......பின்னர் சற்று முக சுனக்கத்துடன் எனக்கும் புடவை பிடிச்சு இருக்கு ...ஆனால் இந்த கலர் பிடிக்கலை .....நான் கூட என் அம்மாகிட்ட அந்த ஓரங்கொட்டான் செலக்சன் மோசமா இருக்குனு சொல்லிட்டு இருந்தேன்...நீங்க இப்படி சொல்றிங்க ...அழகன் மச்சானும் அதை தான் சொன்னாங்க...அப்போ எனக்குதான் அப்படி தோணுதோ” என அவள் யோசனையில் நிற்க
“அது யாருடி அழகன் மச்சான்....புதுசா இருக்கான்.....” என சாந்தி கேள்வியாக அவளை பார்த்தாள்.
“அது வந்து வந்து” என தயங்கிய பூரணி .....ஆம் அழகனை பற்றி பூரணி யாரிடமும் சொல்லவில்லை.அதனால் அவளது தோழிகளுக்கு கூட இது தெரியாது ... அதனால் அவள் தடுமாற அதற்குள் .
“ஏண்டி இங்க பொங்கல் வைக்கிறதுக்கு எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம்...அங்க என்னடி சட்டம் பேசிட்டு இருக்க.......அங்க நான் ஒருத்தி அல்லாடிகிட்டு இருக்கேன்...உன்னை எல்லாம் இது நாலு சாத்து வச்சாதான் அடங்குவ ” என கோபமாக கத்திகொண்டே கையில் கரண்டியோடு மணியம்மை அவளை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
“அச்சோ எங்க வீட்டு எப்எம் வந்திடுச்சு......ஆரம்பிச்சா நிறுத்தாது..... ....இருங்கடி பொங்கல் வச்சுட்டு வரேன்” என சொன்னவள் மணியம்மை அவளை நோக்கி வரும் திசையை விட்டு எதிர்திசையில் சுற்றி ஓடினாள்.ஏழுகழுதை வயசாகிடுச்சு...அடக்க ஒடுக்கம் இல்லாம ஓடிட்டு இருக்கா பாரு ...... இன்னும் இவளோட நான் மல்லுகட்டிட்டு நிக்க வேண்டியதா இருக்கு...திருவிழா முடியட்டும் ...உன்னை பேசிக்கிறேன் “என திட்டியபடியே மணியம்மை அவள் போன திசையிலே சென்றார்.
இப்படியாக மணியம்மையின் திட்டுகளோடு விறகு அடுப்பின் அனலின் தாக்கத்தில் தட்டி தடுமாறி பூரணி பொங்கல் வைக்க முதலில் அவள் வைத்த பொங்கல் தான் பொங்கியது.
“இது என்னடி அதிசியமா இருக்கு .... இவளுக்கு முன்னாடி சமஞ்சவலுக எல்லாம் இன்னும் இருக்காங்க...அதுக்குள்ள இவ வச்ச பொங்கல் பொங்கிடுச்சு.... ஏண்டி குமரி அதுக்குள்ள உனக்கு கண்ணாலத்துக்கு அவசரமா” என ஒரு வயதான பாட்டி அவள் கன்னத்தை நிமிட்டி விட்டு கிண்டலாக செல்ல
“ஏய் கிழவி நான் ஒன்னும் கண்ணாலம் வேணும்னு கேட்கலை...வேணா நீ பண்ணிக்கோ” என முறைத்து கொண்டே வேகமாக சொன்னாள்.
“இதுக்கு எதுக்குடி இந்த சிலுப்பு சிலுப்பரவ ....இவளை கட்றவேன் என்ன பாடு படபோறானோ” என சொல்லிகொண்டே அந்த பாட்டி அங்கிருந்து நகர்ந்தார்.
பக்கத்தில் அரசி வைத்த பொங்கல் இரண்டாவதாக பொங்க கூடி இருந்தவர்கள் எல்லாம் “என்ன மணியம்மை இந்த வருடம் உங்க வீட்லதான் மொத்த கல்யாண விஷேசமும் இருக்கும்போல இருக்கு...உன் பொண்ணு ,மருமக வச்ச இரண்டு பொங்கலும் பொங்கிடுச்சு” என சொல்லவும்
மற்றவர்களும் சேர்ந்து பூரணி,அரசி இருவரையும் கிண்டல் பண்ண
அவளோ அவள் அம்மாவின் பின்னால் ஒளிந்தவள்...”என்னம்மா எல்லாரும் இப்படி பேசறாங்க...நான் அதான் பொங்கலே வைக்க மாட்டேனு சொன்னேன்” என சினுங்கி கொண்டே சொன்னாள்.
“ஏண்டி இது என்ன புதுசா ........இப்போ எதுக்கு அழரவ ......பொண்ணா பிறந்த என்னைக்காவது ஒரு நாள் கண்ணாலம் பண்ணிதான ஆகணும்...........அதான் எல்லாரும் சொல்றாங்க ...அதுக்கு எதுக்கு கண்ணை கசக்கிரவ என அவள் தலையை தடவிகொண்டேமென்மையாக சொன்ன மணியம்மை மனதிற்குள் .... ஆத்தா எனது கோரிக்கையை நீ நிறைவேத்திட்ட...இனி இவங்க அப்பன்கிட்ட நான் கண்ணாலத்த பத்தி பேசலாம்.இவளோட அசட்டு தைரியத்துக்கும், வாய் துடுக்குக்கும் என்னால ரொம்ப நாள் இவளை பாதுகாத்து வைக்க முடியாது.ஒரு நல்ல இடத்துல இவளை கட்டி கொடுத்திட்டா நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்.நல்ல பையனா பார்த்து முடிச்சு கொடு ஆத்தா” என அந்த இடத்திலே கண்களை மூடி அந்த அம்மனை மனமுருகி மணியம்மை வேண்டிகொண்டார்.
மனம் என்பது யாரும் புரிந்து கொள்ளமுடியாத அறிந்து கொள்ளமுடியாத ஒரு பொருள் .அதில்தோன்றும் எண்ணங்கள் கணக்கில் அடங்காதவை ...இன்று விருப்பமானது நாளை வெறுப்பாகலாம் .......எண்ணங்களின் கால அளவு சில நொடிகளே...அதற்குள் எந்தவிதமான மாற்றமும் அதில் ஏற்படலாம்.அதில் இருந்து ஜெய்த்து எண்ணத்தை நிலைபடுத்தி தனது விருப்பத்தை நிறைவேற்றி கொள்பவனே வாழ்வில் வெற்றி அடைகிறான். அது போல் மணியம்மையும் தனது எண்ணத்தில் நிலைத்து நிற்ப்பாரா? இல்லை வரும் துன்பத்தை கண்டு துவண்டு விடுவாறா? இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
இங்கு “என்ன பங்காளி வந்திட்டேன்னு சொன்னீங்க.....இன்னும் வீட்டுக்கு வரலை...வீடு விலாசம் தெரியலையா” என அலைபேசியை காதில் வைத்து கொண்டே ஊருக்கே கேட்பது போல செல்வன் கத்தி கொண்டிருக்க
எதிர்புறத்தில் இருந்து.....இதோ ஊருக்குள்ள வந்திட்டேன் பங்காளி .....அதுக்குள்ள ஒரு அவசர சோலி வந்திடுச்சு...நான் கிளம்பறேன் பங்காளி” என பதில் வந்தது .
“என்னது ஊருக்குள்ள வந்திட்டு சாப்பிடாம போறியா ...அதெல்லாம் முடியாது......புது மாப்பிள்ளனு ஆட்டுகால் சூப்ல இருந்து காடை ,கவுதாரி , ஐயரை மீன் குழம்பு வரைக்கும் என மாமனார் வீட்ல ஒரு பெரிய விருந்தே ரெடியா இருக்கு பங்காளி. உனக்காகத்தான் நான் காத்துகிட்டு இருக்கேன்.....நீ இப்ப இங்க வர...நீ எங்க இருக்க சொல்லு இல்ல நான் வரேன்” என செல்வம் சொல்ல
“இல்ல பங்காளி...கொஞ்சம்” என அவன் மீண்டும் இழுக்க
“என்னப்பா வார்த்தைக்கு வார்த்தை பங்காளினி சொல்லிட்டு இப்போ உன் தகுதிக்கு குறைவான இடத்துல எப்படி சாப்பிட்ரதுன்னு யோசிக்கிரியா” என கேட்டதும்
“டேய் லூசாடா நீ....நான் என்னைக்குடா அப்படி நினைச்சிருக்கேன்.....நீ இலையை போடு இதோ வந்திடறேன் என சொல்லிவிட்டு அலைபேசியை அனைத்தவன் இவன் வேற மனுசனோட நிலைமை புரியாம பேசறான்” என புலம்பி கொண்டே திரும்பியவன்
“ஐஈஈஈஈ எங்க புகழ் மச்சான்” என குதூகலத்தோடு தன் தோழிகளிடம் பேசிகொண்டிருந்த பாரிஜாதம் அவனை பார்த்ததும் கத்திகொண்டே வேகமாக அவன் அருகில் சென்றவள் “ மச்சான் இங்க எப்படி நீங்க என கேட்டவள் நல்லா இருக்கீங்களா? என பெரியமனுசி போல நலம் விசாரித்தாள்.
அவனும் “ஹே பாரி” என சந்தோசத்தில் முகம் மலர “நான் நல்லா இருக்கேன்.நீ எப்படி இருக்க?.....வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என விசாரிக்க
“எல்லாரும் நல்லா இருக்காங்க மச்சான்.நீங்க எடுத்து கொடுத்த ட்ரெஸ் ரொம்ப நல்ல இருக்கு” என அவன் முன்பு அவள் அந்த சுடிதாரோடு சுற்றி காட்ட
மனதிற்குள் அதுவரை இருந்த புழுக்கம் குறைந்து மனநிறைவுடன் “உனக்கு என்னடா குட்டி...எது போட்டாலும் அழகா இருக்கும்” என அவன் வாஞ்சையோடு அவளது தலையை தடவி கொடுத்தான்.
அப்புறம் மச்சான் “ அத்தை, பாண்டி மச்சான் எல்லாரும் நல்ல இருக்காங்களா?அப்புறம் இந்த பாண்டி மச்சானை கொஞ்சம் மிரட்டி வைங்க .....எங்க ஊரு பொண்ணுகளை பார்த்து கிண்டல் பேசி சிரிச்சு இருக்காரு......எல்லா புள்ளைகளும் வந்து என்னை வையாருலுக.....உன்ற மச்சான் எப்படி இந்த மாதிரி பேசலாம்னு” என அந்த நேரத்திலும் பாண்டியை பற்றி ஒரு புகார் கடிதம் கொடுத்தாள் அவனின் அத்தைமகள் . ..
அவனும் “அப்படியா பண்ணான் ...சரி சரி நீ கவலைபடாத...நான் அவனை கண்டிச்சு வைக்கிறேன் என சிரித்து கொண்டே சொன்னவன் எல்லாரும் நல்லா இருக்காங்க பாரி. உன்னோட படிப்பு எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு...நல்லா படிக்கணும்.....நல்ல மார்க் வாங்கணும் என அறிவுரைகளை சொல்லிவிட்டு சரி பாரி எனக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்” என சொல்லி அங்கிருந்து நகர முற்பட
“என்ன மச்சான் அம்மாவ பார்க்காம போறீங்க ?உங்களை பார்த்தா ரொம்ப சந்தோசபடுவாங்க வாங்க” என அவனை விடாமல் அழைத்து கொண்டு வந்தாள் அவள்.
“அம்மா அம்மா இங்க பாருங்க யாரு வந்து இருக்காங்கனு” என சொல்ல
மணியம்மையோ பேசிக்கொண்டு இருந்தவர் திரும்பி பார்க்க அங்கு புகழ் நிற்ப்பதை பார்த்ததும் “புகலூஊஊஊ என மனதிற்குள் வைத்திருந்த பாசம் வார்த்தையாக வெளிவர முகம் நிறைய பூரிப்போடு அவனருகில் வேகமாக வந்தவர் புகழு எப்படிப்பா இருக்க ? உன்னை எப்போ பார்த்தது ...என்னப்பா இப்படி இளைச்சு போயிட்ட......ஒழுங்கா சாப்பிட்ரியா இல்லியா?...போன முறை பார்க்கும்போதுகூட கொஞ்சம் நல்லா இருந்த.....இப்போ என்ன தம்பி இப்படி போயிட்ட” என தன் மருமகனை பார்த்த சந்தோசத்தில் வார்த்தைகள் நிற்காமல் அருவிபோல் கொட்ட ,கண்களில் இருந்து கண்ணீரும் அதற்கு இணையாக வந்து கொண்டு இருந்தது.
புகழோ அவரின் அன்பில் மனம் நெகிழ்ந்தவன் “அச்சோ அத்தை என்ன இது ?எல்லாரும் நம்மளையே வேடிக்கை பார்க்கிறாங்க.....நான் நல்லா இருக்கேன்... என்னை மூனு வருசத்துக்கு முன்னாடி பார்த்தது.மறுபடியும் இப்பதான் பார்க்கிறிங்க...அதுநாள உங்களுக்கு அப்படி தெரியுது .... நான் அப்படியே தான் இருக்கேன்......நீங்க எப்படி இருக்கீங்க அத்தை? .....மாமாவ கோவில்ல பார்த்தேன் என சொல்லும்போதே குரலில் பிசிறு தட்ட அமைதியானவன் சில வினாடிகளுக்கு பிறகு நீங்க என்னை மட்டும் சொல்றிங்க...இங்க நீங்களும் இளைச்சு போய் தான் இருக்கீங்க” என சகஜமாய் அவரின் மேல் அக்கரையாக பேச
“எனக்கென்ன புகழு.......உன்னை மாதிரி அண்ணன் பையன் இருக்கும்போது என்னை மாதிரி பெண்களுக்கு எந்த கவலையும் கிடையாது ...நான் சந்தோசமாத்தான் இருக்கேன்...ஆனா என்னால உங்களுக்குதான் சந்தோசத்தை தர முடியலை” என சொல்லும்போதே அவருக்கு அழுகை வந்துவிட்டது.
புகழோ என்ன சொல்வது என தெரியாமல் சுற்றிலும் பார்த்தவன் அதற்குள் பாரி “அம்மா என்ன இது?மச்சான் நம்ம ஊருக்கு வந்து இருக்காங்க ..நீ இப்படி அழுதுகிட்டே நிக்க வச்சுகிட்ட இருக்க.....பொங்கல் ரெடி ஆகிடுச்சா?மச்சானுக்கு கொஞ்சம் எடுத்து கொடும்மா” என சொன்னதும்
“அட ஆமா ...இந்த பொழப்பத்தவ அது கூட தெரியாமஉன்னை நிக்க வச்சுகிட்டே இருக்கேன் பாரு ...புகழு நீ இங்க வந்து உட்காரு என கல்பெஞ்ச் அங்கு இருக்க அதில் அமர சொன்னவர் எல்லாரும் சாமிக்கு பொங்கல் படைக்க எடுத்திட்டு போயிருக்காங்க ...இதோ வந்த உடனே சாப்பிட்டு போயிடலாம்பா” என சொல்லி கொண்டு இருக்கும்போதே
“இல்லை அத்தை ...எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பறேன்” என அவன் சொல்லி முடிக்கும் முன்
“இதோ எல்லாரும் வந்திட்டாங்க “என பாரி கை நீட்ட
தனது பின்னால் வந்து கொண்டு இருப்பர்வகளை திரும்பி பார்த்தவன் கண்களை அங்கிருந்து நகர்த்தவில்லை .
அங்கு அழகு வண்ண பட்டு உடுத்தி அம்மன் தேர் ஆடி வருவது போல பூரணி தனது அத்தையிடம் பேசி சிரித்து கொண்டே மெல்ல மெல்ல நடந்து வர
அப்போது கோவில் ஸ்பீக்கரில்
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூதானோ
நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ
நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கிவரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி
என்ற பாடல் ஒலிக்க அந்த சூழ்நிலைக்கு மிக பொருத்தமான பாடலாகவும் அது இருந்தது.
“சாமிக்கு படைத்து விட்டு அந்த தட்டை தன் அன்னையிடம் தந்தவள் ..இங்க பாரும்மா நீங்க சொன்ன வேலை எல்லாம் நான் செஞ்சுட்டேன்.என்னோட ப்ரிண்ட்ஸ் எல்லாம் எனக்காக காத்துகிட்டு இருக்காங்க ...நான் வேடிக்கை பார்க்க போறேன் ...மறுபடியும் உன்னோட ஸ்பீக்கர் ஆன் பண்ணிடாத” என சொல்லிவிட்டு அவள் நடக்க
“ஏய் லூசு இங்க ஒருத்தங்க வந்து இருக்காங்க ...அவங்க யாரு என்னனு பார்த்தியா நீ?” என பாரி சொல்லவும்
யாருடி என அப்போது தான் திரும்பி பார்த்தவள் புகழை பார்த்ததும் ஏற்கனவே அவளது உருண்டை கண்கள் மேலும் விரிவடைய உள்ளே இருக்கும் கருவிழிகள் அங்கும் இங்கும் அலைபாய
என்னது இவனாஆஆஅ என அதிர்ச்சியில் அப்படியே நின்றவள் அச்சோ இவன் எங்க இங்க வந்தான் ?நம்ம ஊரு பக்கம் வர மாட்டானே?அன்னைக்கு நடந்தது ஏதாவது சொல்லிடுவானோ என பயத்துடன் அவள் பார்த்து கொண்டு இருக்க
ஆனால் அவனோ முகத்தில் எந்த விதமான உணர்வுமின்றி அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
இவர்கள் இருவரும் இப்படி இருக்க அதற்குள் மணியம்மை பொங்கல் எடுத்து வர ...”யாரு மணியம்மை புது ஒரம்பரை” என கேட்டபடி அங்கு வந்தார் கோமதி.
அவர் அப்படி கேட்டதும் முகத்தில் சற்று கலக்கம் தோன்ற சுற்றிலும் பார்த்தவர் பின்னர் மெதுவாக “என் அண்ணன் மகன் பெரியவன் புகழ் தான்க்கா” என சொல்ல
அவரோ “ஓ பெரியவன் புகழேந்தியா .......சின்ன வயசில பார்த்தது......அன்னைக்கு என்ற அண்ணன் கூட சண்டைகட்டிகிட்டு போகும்போது மூக்க விடச்சுகிட்டு போன பையன்தான நீ...... இப்போ எப்படி நெடு நெடுன்னு வளர்ந்திட்ட...ஆனாலும் உங்க ஆத்தா அன்னைக்கு பேசின பேச்சுக்கு என் தம்பியா இருக்கிறதால சும்மா விட்டான்....இல்லை அந்த இடத்துல பெரிய கலவரமே நடந்து இருக்கும்” என அவனை புகழ்வது போல் பேசிகொண்டே நக்கலாக பழைய சண்டையை அவர் நியாபகபடுத்த
அதை கேட்டதும் புகழின் முகமோ சட்டேன்று இருண்டுவிட...கண்களை மூடி தன்னை நிலைபடுத்த முயற்சிக்க
அது மணியம்மைக்கும் புரிய என்ன சொல்வது என தெரியாமல் கையில் இருந்த பொங்கல் தட்டை பூரணி கையில் கொடுத்து கொடுக்க சொன்னார். அவளும் “இந்தாங்க மச்சான்” என கைகளில் பொங்கல் தட்டை நீட்ட
அவளது குரலை கேட்டதும் கண்களை திறந்தவன் அவளது முகத்தை பார்த்ததும் எதுவும் சொல்லாமல் தட்டை வாங்கியவன் அதை சாப்பிடாமல் கையில் வைத்திருந்தான்.
மணியம்மையோ எதுவும் பேச முடியாமல் புகழையும் கோமதியையும் மாறி மாறி பார்த்தவர் “அம்மா முத்து மாறி இவங்களை இங்க இருந்து அனுப்பி வை..” என மனதிற்குள் வேண்ட
முத்துமாரியும் அவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து “அம்மா, அப்பா உன்னை கூப்பிட்றார்” என்றபடி அங்கு வந்தான் அழகன். அனைவரும் புகழை சுற்றி நிற்க அவன் நடுவில் அமைதியாக அமர்ந்திருக்க.. அதை பார்த்த அழகன் மணியம்மையிடம் “அத்தை இவரு யாரு” என கேட்டான்.
அதற்குள் கோமதி சென்றுவிடவும் நிம்மதியாக முகம் மலர்ந்த மணியம்மை அழகன் கேட்டதும் பெருமையுடன் “இவன் என் அண்ணன் பையன் புகழேந்தி தம்பி...நீங்க கூட சின்ன வயசில சேர்ந்து விளையாண்டு இருக்கீங்களே” என அவள் பால்ய நட்பை சொல்லி அவர்களுக்குள் புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்ய
அதை நல்லவிதத்தில் புரிந்து கொண்ட அழகனும் “ஓ நல்லா நியாபகம் இருக்கு ......எனக்கு நீச்சல் கத்து கொடுத்தே புகழ் அண்ணா தானே என்றவன் எப்படி இருக்கீங்க அண்ணா “என சிரித்து கொண்டே கேட்கவும்
புகழிற்கும் அது சந்தோசத்தை தர “நான் நல்ல இருக்கேன் அழகன் ......நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க ....உன் வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு” என சிறு நலம் விசாரிப்புடன் பேச்சை தொடங்கிய இருவரும் சிறிது நேரம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருக்க மீண்டும் புகழுக்கு அலைபேசிஅழைப்பு வர
“சரி அத்தை நான் கிளம்பறேன்.....உங்க ஊரு பொண்ணைத்தான் என் நண்பன் நமக்கு பங்காளிதான் அத்தை...செல்வம்னு பேரு கல்யாணம் பண்ணிருக்கான்.புது நோம்பி...அதான் விருந்துக்கு நான் கண்டிப்பா வரணும்னு அழைப்பு போட்டான் .அதுக்குதான் வந்தேன்...இதோட பத்து தடவை போன் பண்ணிட்டான்.நான் அங்க போகணும் அத்தை” என சொன்னான்.
“இங்கே இருந்து சாப்பிட்டு போலாம்ல மச்சான்” என பாரி சொல்ல
அவனோ “இல்லை பாரி .....செல்வம் வீட்டிற்கு வரேன்னு சொல்லிட்டேன்..... நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து அவன் கிளம்ப,மணியம்மையின் மனமோ வாடி போய் இருக்க பூரணி அருகில் அவன் வந்ததும் .
“இதெல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரியும்ல......அப்போ வந்த உடனே கிளம்ப வேண்டியதுதான .......ஒரு பாசமலர் ட்ரைலர் ஓட்டிட்டு அப்புறம் கிளம்பறது.....இனி எங்க அம்மா நாளு நாளைக்கு சாப்பிடமாட்டாங்க...அதெல்லாம் எங்க புரியபோகுது” என பூரணி வாய்க்குள் முனக
அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அவன் நகர்ந்தான்.
அதற்குள் அவளது தோழிகள் வந்துவிட ஆனால் அம்மாவின் மனநிலைமையை அறிந்தவள் அவர்களிடம் வரவில்லை என சொன்னாள். ஆனால் மணியம்மையோ “நீ போய் அவர்களோடு சிறிது நேரம் பேசிட்டு வா” என அனுப்பி வைத்தார்.
திருவிழா என்றாலே கொண்டாட்டமும் கும்மாளமும் நிறைந்தது தானே. பலவகையான ராட்டினங்கள்.கரகாட்டம்,கும்மி ஆட்டம்,மற்று குறவன் குறத்தி ஆட்டம் என எங்கும் மக்கள் கும்பல் கும்பலாக நின்று ரசித்து கொண்டு இருக்க பூரணியும் தன் தோழிகளோடு அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். ராட்டினத்தில் அவள் ஏறி அமர்ந்தவள் தன் தோழிகளுடன் விளையாட்டில் கர்சீப் கீழே வைத்து எடுத்து கொண்டு இருக்க திடிரென்று வேறு ஒரு நபர் அதை எடுக்க யார் என அவள் முறைத்தவள் அங்கு அழகன் அவளை பார்த்து கண்ணடிக்க அவளோ வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
அதற்குள் மணி “ஏய் பச்சை சட்டை யார் நீங்க?......ஊருக்கு புதுசா....நாங்க போட்ட கர்சீப் நீங்க எதுக்கு எடுத்தீங்க” என ராட்டினத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும்போதே அவள் சண்டைக்கு வர
நான் யாரா? ...ம்ம்ம்ம்ம்ம் அது உங்க தோழியிடமே கேளுங்க...அவங்களே சொல்லுவாங்க” என சொன்னவன் ராட்டன் சுத்துபவனிடம் நிறுத்தசொல்லி இறங்கிகொண்டான்.
மணிக்கும் சாந்திக்கும் இது அதிர்ச்சியாக இருக்க இருவரும் பூரணியை பார்க்க அவளோ தலை குனிந்து நின்றாள்.
பின்னர் ஆலமரத்தின் அடியில் கை கட்டிக்கொண்டு குற்றவாளி கூண்டில் நிர்ப்பது போல் பூரணி நிற்க அவளை சுற்றி இருவரும் அக்னி பார்வை வீசி கொண்டு இருந்தனர்.
“இது எத்தனை நாளா நடக்குது” என சாந்தி முதல் கேள்வியை ஆரம்பிக்க
“அடிபாவி இந்த பூனையும் பால் குடிக்குமா அப்டிங்கிற மாதிரி இருந்துகிட்டு பட்டசரக்க பாட்டிலோட முழுங்கி இருக்கே நீ “ .........என மணி பொங்கி எழ
உண்மைய சொல்லுடி என சாந்தி அவளை உலுக்கவும் “சும்மா என்னை திட்டாதிங்காடி ........அவரு என்ற அத்தை பையன்தான்.பேரு பரிமேலழகன்.போனமுறை வந்தப்ப தான் சொன்னாரு... என நிறுத்தவும்
“என்ன சொன்னாரு” என அழுத்தமாக இருவரும் ஒரே நேரத்தில் கேட்க
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா” என சொல்லி மீண்டும் நிறுத்தினாள்.
எதிர்புறத்தில் இருந்து பதில் இல்லாமல் போக நிமிர்ந்து பார்த்தவள் அவர்கள் இருவரும் அவளை ஊடுர்வி பார்க்க
“அப்படி பார்க்காதிங்கடி.......அவருதான் சொன்னாரு ....நான் ஒன்னும் சொல்லலை ” என அவள் மெதுவாக சொன்னதும்
“துரை எப்படி பட்ட ஆளு ... பார்த்தா ரொம்ப சோக்காளி மாதிரி தெரியுது ....உனக்கு ஒத்துவருமா ?” என மணி அதிகார தோனியில் கேட்க