• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வரம் - 6

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
அத்தியாயம் -6

இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.......எல்லாரும் அழகன் பூரணி இருவரை மட்டுமே பார்த்து கொண்டு இருந்ததால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வீட்டில் இருந்து புகழ் வெளியே வருவான் என்று யாரும் நினைக்கவில்லை. அழகன் நின்று கொண்டு இருந்தது செல்வத்தின் மாமனார் வீட்டிற்கு முன்புறம் .......விருந்து முடித்துவிட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி அவன் வெளியே வரவும் பூரணி நீரை ஊற்றவும் சரியாக இருக்க இப்போது அந்த மஞ்ச நீர் முழுவதும் புகழின் மேல் கொட்டியது.

“ஏந்தம்பி ரவைக்கும்(இரவு) இருந்து சாப்பிட்டு போலாம் அதுக்குள்ள கிளம்பரிங்க” என கேட்டுகொண்டே வெளியே வந்த அந்த வீட்டின் பெரியவர்
புகழ் நின்று கொண்டிருந்த கோலத்தை பார்த்ததும் ...”ஹஹஹஹா என்ன தம்பி இது...... எங்க ஊரு பொண்ணுங்க உங்க மேலயும் மஞ்ச தண்ணீ ஊத்திட்டாங்களா என சிரித்தவர் பின்னர் “யாரு புள்ள தண்ணீ ஊத்தினது” என கேட்டுகொண்டே சுற்றிலும் பார்க்க...பூரணியோ கையில் பாத்தரத்தை வைத்து கொண்டு விகிர்த்து போய் நின்று கொண்டு இருந்தாள்.

ஓ நீதானா .....ஹஹஹஹா என மீண்டும் வெடி சிரிப்பு சிரித்தவர் “சரியான ஆள பார்த்து தான் ஊத்திருக்க...” என சொல்ல அவரும் அந்த ஊரு என்பதால் புகழ் மற்றும் பூரணி உறவு முறை அவருக்கு தெரியும்.

அவரது சிரிப்பில் சற்று மிரண்டு நிதானத்திற்கு வந்த பூரணி
“இல்லை..இல்லை தாத்தா ...நான் வேணும்னு செய்யலை ..... அந்த மச்சான் மேல தண்ணீ ஊத்த ” என அவள் சொல்லி முடிக்கும் முன்
அதற்குள் அவர் சிரித்து கொண்டே “அதுனால என்ன ...எப்படி இருந்தாலும் மச்சான் மேல தண்ணீ ஊத்தற உரிமை உனக்குதான முதல்ல இருக்கு.......என்னதான் பெரியவங்க சண்டை போட்டாலும் நாளைக்கு உன் மச்சானை மீறி யாரு உனக்கு தாலி கட்ட முடியும்....அதெல்லாம் சரியான ஆள் மேலதான் ஊத்திருக்க ...பாரு எப்படி பேசி சிரிச்சுட்டு இருந்த பையன் உன்னை பார்த்ததும் பேசாம சிலை மாதிரி நிற்கிறான்”... என எதுவும் பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்த புகழை பார்த்து அவர் கிண்டலாக சொல்ல
அதற்குள் சுற்றி இருந்தவர்களும் “அதான என்னைக்கு இருந்தாலும் முதல் உரிமை தாய்மாமனுக்கு தான் வரும். அதற்கு அப்புறம் தான் மத்தவங்க எல்லாம்” என பேச
அதற்குள் மற்றொருவர் புகழிடம் திரும்பி “என்ன தம்பி எங்க பொண்ணயே வச்ச கண்ணு எடுக்காம பார்த்துகிட்டு இருக்கீங்க .....அதான் மஞ்ச தண்ணீ ஊத்தி மனச சொல்லிடுச்சுல.... இந்நேரம் எங்க ஊரு பசங்களா இருந்தா தூக்கிட்டு போய் தாலி கட்டிருப்பானுக....நீங்க என்னடானா இப்படி மசமசனு நின்னுகிட்டு இருக்கீங்க ....ஆனாலும் நம்ம வெள்ளியம்பாலயத்து வீரம் வேற யாருக்கும் வராதுள்ள என சந்தடி சாக்கில் ஊரின் பெருமையை அவர் சொல்ல ...அதான நம்ம பசங்க வீரம் யாருக்கு வரும்” என சிலர் அவருக்கு ஒத்து ஊதினர்.
அருகில் நின்று கொண்டிருந்த செல்வமோ ..”டேய் பங்காளி இதுக்கு மேல நம்ம சும்மா இருக்க கூடாதுடா......இந்த ஊரகார்னுக லந்து தாங்க முடியலை......இப்பவே உன்ற மாமன்கிட்ட போய் நம்ம பொண்ணு கேட்கிறோம் என அவர்கள் சொன்னதை கேட்டதும் இளரத்தமான செல்வம் பொங்கி எழுந்தான்.

ஆனால் புகழோ அவனை நோக்கி அழுத்தமான ஒரு பார்வை வீச செல்வம் சட்டென்று அமைதி அடைந்தான்.அதுதான் புகழ்...அதிகம் பேசமாட்டான்.ஆனால் அவனுடன் இருப்பவர்கள் அவனது பார்வையை வைத்தே அவனது மனநிலையை புரிந்து கொள்வார்கள்.தன் மீது மஞ்ச தண்ணீர் விழுந்ததும் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவன் எதிரில் பூரணி கண்ணை மூடிக்கொண்டு நின்று கொண்டு இருக்க, அவளின் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் அச்சோ என சொல்லவும் அவர்கள் பார்வை போகும் திசையை பார்த்தவன் அங்கு அழகன் நின்று கொண்டு இருந்தான்.அதற்கு பின்னர் பூரணி, அழகன் இருவர் முகத்தை பார்த்ததும் எதோ புரிய அதனால் தான் அவன் ஏதும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

கிரமாத்தில் இது ஒரு வழக்கம்.தாய் மாமன் உறவு தந்தைக்கு அடுத்த படியாக எல்லா இடத்திலும் முன் நிற்கும் ஒரு பந்தம்.எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாய்மாமன் முறையை யாரும் விட்டு தரமாட்டார்கள்.பூரணி பெரிய மனுஷியாக ஆன போதும் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் அந்த முறைகளை புகழ் தான் வந்து செய்தான்.மாணிக்கத்திற்கு விருப்பம் இல்லை என்றாலும் ஊரில் பெரிய மனிதராக இருந்து கொண்டு ஊரின் பழக்கவழக்கங்களை அவரே மீறினால் நன்றாக இருக்காது என நினைத்தவர் அதற்கு ஏதும் தடை சொல்லவில்லை.இது போன்ற சம்பிரதாயங்களால் தான் நமது நாட்டின் பண்பாடும் பாரம்பரியமும் பார்ப்பவர்களை எல்லாம் அதிசியபடவைக்கிறது..
அதனால் தான் புகழும் கும்பலுடன் சேர்ந்து கொண்டு ஏதாவது சொல்ல அது தனது அத்தைக்கு பிரச்சனை ஆகிவிட்டால் என்னாவது என நினைத்து அவன் அமைதியாக இருந்தான். மேலும் மாணிக்கம்மற்றும் பூரணிய பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.அதனால் அவன் பேசவில்லை.
கேலி செய்து எல்லாரும் சிரித்து கொண்டு நிற்க சாந்தியும் மணியும் மெதுவாக பூரணியின் அருகில சென்றவர்கள் ...”என்னடி இது இவன் எங்கடி இங்க வந்தான்........ ....விட்டா உனக்கும் உன் மச்சானுக்கும் இங்கேயே கண்ணாலத்தை முடிச்சுடுவாங்க போல இருக்கே.......அப்போ உன் அழகன் மச்சான் கதி ....பூ பூத்த உடனே கருகிடுச்சே பூரணி உன் அழகன் மச்சான் காதல் ...இப்ப என்னடி பண்ண போற ”..... என அவர்கள் அவளின் மனநிலையை அறிந்து கொள்ள கேட்க
அவளோ அவர்களை திரும்பி எரித்து விடும் பார்த்தவள் ....அந்த பார்வையே எல்லாம் உங்களால் வந்தது என சொல்லாமல் சொல்ல ...உடனே இருவரும் அங்கிருந்து அப்படியே நகர்ந்தனர்.
என்ன சொல்வது என தெரியாமல் நிமிர்ந்தவள் எதிரில் புகழிற்கு பின்னால் அழகன் அவளை முறைத்து கொண்டு நிற்பதை பார்த்தாள்.அவன் முகம் ஆத்திரத்தில் தணல் போல் ஜொலிக்க பார்வையாலே அவளை பஸ்பமாக்கி விடுவது போல் பார்த்து கொண்டு இருந்தான்.
அவனை பார்த்த உடன் கண்ணில் பயம் தோன்ற “இல்லை மச்சான் நான் ஏதும்” என சொல்லி முடிக்கும் முன்
அதற்குள்“இங்க பாரேன் என்னமா வாய் பேசுவா ?இப்ப இப்படி தடுமாறா என்ன இருந்தாலும் கட்டிக்க போறவேன் முன்னாடி பேசறத்துக்கு வெட்கமாதான இருக்கும்” என அங்கு இருப்பவர்கள் கேலி செய்து பேச
பூரணியோ “ஐயோ கடவுளே நான் எது பேசினாலும் இந்த மனுசங்க அதை எனக்கு ஆப்பு வைக்கிற மாதிரியே திருப்பி விடறாங்களே...நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது.... நான் அழகன் மச்சானை சொன்னா இவங்க புகழ் மச்சானை சொன்ன மாதிரி பேசறாங்களே ....எல்லாம் இந்த ஓரங்கொட்டானால வந்தது...அவனை யாரு இப்போ வெளியே வர சொன்னா......இந்த மாக்கான் வேற அது தெரியாம என்னை முறைச்சுட்டு இருக்கான்”.....என குழப்பத்தில் இரண்டு மச்சான்ங்களையும் தன் மனதிற்குள் திட்டி தீர்த்துக்கொண்டு இருந்தாள் பூரணி.”
பூரணி ஏதும் பதில் சொல்லாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்த அழகன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக புகழை நகர்த்திவிட்டு வந்தவான் ....” நீ முதல்ல வா என் கூட”.....என வார்த்தை கடித்து துப்பியவன் யாரயும் கண்டு கொள்ளாமல் அவள் கைகளை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக நடந்தான்.

இப்படி செய்வான் என எதிர்பார்க்காத பூரணி “அச்சோ மச்சான் என்னங்க மச்சான் இது... என்ன பண்றிங்க ....கையை விடுங்க மச்சான்...எல்லாரும் பார்க்கிறாங்க ....விடுங்க மச்சான்” என அவள் பதறியபடி அவன் இழுப்பில் பின்னால் செல்ல
அவன் எதுவும் பேசாமல் வேகமாக தனது நடையை எட்டி போட
அதற்குள் அங்கு நின்றவர்கள் எல்லாம் ...”இது என்னடி இது...சமஞ்ச புள்ளைய இப்படி வீதில கையை பிடிச்சு இழுத்திட்டு போறான்….யாரு இந்த பையன் என கேட்க...அட நம்ம கோமதி மவந்தான்...அவனும் மச்சான் தான் ஆகுது என ஒருவர் சொல்ல ....அதுக்காக இப்படியா எல்லார் முன்னாடியும் இழுத்திட்டு போவான்....இவளும் பின்னாடியே போறா பாரேன் ” என அங்கலாய்ப்புடன் அவர் சொல்ல
“மச்சான் இப்ப விடபோறிங்களா இல்லயா” என கோபத்தில் பூரணி கத்திவிட்டாள்.அவன் அழுத்தமாக கையை பிடித்தால் வந்த எரிச்சல் மேலும் எல்லாரும் ஒரு மாதிரி பேச அவளுக்கு கோபம் வந்து விட்டது.

அதை கேட்டவுடன் கோபத்தில் வேகமாக அவள் கையை உதறிவிட்டு திரும்பி அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் ...... “ஏன் பூரணி அப்போ அவங்க சொல்றது உண்மையா ....நீ அவனைத்தான் திருமணம் செஞ்சுக்க போறியா?என்னை உனக்கு பிடிக்கலையா ? ...அப்போ என்கிட்டே பேசினது எல்லாம் பொய்யா ?” என ஒவ்வொறு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து அவன் கேட்க
“ஐயோ என்னங்க மச்சான் இப்படி எல்லாம் பேசறிங்க .......நடந்து உங்களுக்கு தெரியும் தானே ?உங்கமேல தான் தண்ணீ ஊத்த வந்தேன்...அவன் இடையில வருவான்னு எனக்கு எப்படி தெரியும் என அவள் அழுது கொண்டே சொன்னவள் அந்த ஓரங்கொட்டான் அங்க இருப்பான்னு எனக்கு தெரியாதுங் மச்சான்......என்னை நம்புங்க” என அவனிடம் தனது நிலையை அவள் விளக்க முயற்சித்தாள்.

அவள் சொல்வது அவனுக்கு புரிந்தாலும்....அவர்கள் எல்லாம் புகழை உயர்த்தி பேசியது அவனின் காதுகளில் கேட்டு கொண்டே இருக்க...பூரணி அமைதியாக இருந்ததும் அவன் கண் முன் நிற்க அவனது உள்ளம் கொதித்து கொண்டு இருந்தது.

அப்போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த இருவர் “ஏம்புள்ள பூரணி ...ஆடு பகை ,குட்டி உறவுன்னு சொன்னமாதிரி உங்க அப்பான் என்னடான்னா உங்க மாமன்வீட்டு சகவாசமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்காரு ...நீ என்னடான்னா அவன் மேல மஞ்ச தண்ணீ ஊத்தினியாமா.......என்னைக்கு இருந்தாலும் உரிமைபட்டவன் அவன்தான......ஆனா உங்க அப்பன் என்ன சொல்வாருன்னு தெரியலியே” என பூரணி ஆசைப்பட்டு ஊத்தியது போல் சொல்லவும்
அதற்குள் அருகில் இருந்தவர் “ஏனக்கா இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் தாவணி போடறதுக்கு முன்னாடியே தாலி கட்றவனைமுடிவு பண்ணிடுதுங்க... இவ உரிமை பட்டவன் மேல தான மஞ்ச தண்ணீ ஊத்துனா ....விடுங்க அக்கா” என எரிகிற தீயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவது போல் சொல்லிவிட்டு நடையை கட்ட இங்கு அழகனோ அவளது பேச்சில் கொஞ்சம் சமாதனம் அடைந்தவன் இப்போது மீண்டும் அவன்முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக வெளியே தெரிந்தது.
“ஐயோ இவன் இப்பதானே மலை இறங்குனான் ...அதுக்குள்ள இவளுக மறுபடியும் மலை ஏத்தி விட்டு போறாங்களே.....கடவுளே இன்னைக்கு ஏன் எல்லாம் இப்படி நடக்குது” என மனதிற்குள் புலம்பியவள் ..அவனின் முகத்தை பார்த்து “மச்சான் அவங்க சொல்றதை எல்லாம் நீங்க நம்பாதிங்க ...அப்படி எல்லாம் இல்லை ” என பூரணி சொல்லி முடிக்கும்முன்பே
“நீ முதல்ல வாயை மூடு...பேசாம வா ” என கோபமாக கர்ஜித்தவன் மீண்டும் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக நடந்தான்.

இங்கு மாணிக்கத்தின் வீட்டில்கோமதி “ஹப்பா ஒருவழியா வந்த காரியம் நல்ல படியா முடிஞ்சுடுச்சு......அரசியும் படிப்பை முடிக்க போறா ....மேலே படிக்கிறேனு சொல்றா......நான் கண்ணாலத்தை முடிச்சிடலாம்னு நினைக்கிறன்...அதுக்குதான் இங்க பொங்கல் வைக்கிரதுக்கே வந்தேன்.ஆத்தாவும் அதுக்கு அனுமதி கொடுத்திட்டா ...எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாணிக்கம்....இனி ஊருக்கு போன உடனே முதல்ல ஜாதகத்தை எடுக்கணும்” என வந்த வேலை நல்லபடியாக முடிந்த சந்தோசத்தில் அவர் பேசிக்கொண்டு இருக்க
“அதுக்கு என்னக்கா நீ எல்லாம் பார்த்து சொல்லு...ஊரே ஆச்சரியபட்ர மாதிரி கண்ணாலத்தை வச்சிடலாம்” என மாணிக்கமும் சந்தோசமாக சொன்னார்.

“இப்போ என்னம்மா என் கல்யாணத்திற்கு அவசரம் ...இங்க பாருங்க அப்பா ...இந்த அம்மா எப்போ பார்த்தாலும் என் கல்யாணத்தை பத்தியே பேசிட்டு இருக்காங்க...நான் இன்னும் படிக்கணும்பா” என சிணுங்கியபடி தந்தையிடம் புகார் செய்தால் அரசி .

உடனே அவளது தந்தை“அவ கிடக்கிறா பட்டிக்காடு.....அவளுக்கு என்ன தெரியும் படிப்பை பத்தி .......அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் நாத்து நடறது ,மாடுமேய்கிறது , சாணி எடுக்கிறது இது தான் ......படிப்பை பத்தி என்ன தெரியும்.....நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்...நீ படிடா செல்லாம் ” என அவர் கோமதி மாணிக்கம் இருவரையும் நோட்டம் விட்டு கொண்டே மகளுக்கு சமாதானம் சொல்லி கொண்டு இருந்தார்.

இதை கேட்டுகொண்டிருந்த மாணிக்கத்திற்கு சட்டென்று கோபம் வர நிமிர்ந்தவர் அதற்குள் கோமதி ....”மாணிக்கம் உங்க மாமா ரொம்ப நாள் கழிச்சு இப்பதானே வந்து இருக்கார்...நீ புதுசா வாங்கி இருக்கியே அந்த மாந்தோப்பு,வாழைத்தோப்பு,கரும்புதோட்டாம் அதை எல்லாம் கொஞ்சம் கூட்டி போய் கட்டிட்டு வரியா” என சந்தடி சாக்கில் தன் பிறந்த வீட்டு செழிப்பையும் அதே நேரத்தில் மாமா வெகுநாள் நாட்களுக்கு பிறகு வந்து இருக்கார் நீ ஏதும் சொல்லிடாதே என்ற வேண்டுகோளையும் அவள் அதில் சொல்லி பேச்சை மாற்ற மாணிக்கமோ ஏதும் பேசாமல் ம்ம்ம் என தலயை ஆட்டினார்.

“ ஏம்மா இந்த அப்பா ஏன் இப்படி இருக்கார்.....அந்த மாமா நம்மை பட்டிகாடுனு சொல்றார்...இவரும் அமைதியா இருக்காரு” என அவர் சொன்னது பாரிக்கு புரிந்து விட ரோசம் வந்து அவள் அம்மாவின் சீறினாள்.
 

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
ஆனால் மணியம்மையோ “நீ சும்மா இருடி....நானே இவங்க கிளம்பறதுக்குள்ள ஏதும் பிரச்சனை நடந்திரகூடாதுன்னு பார்த்திட்டு இருக்கேன்....இவ வேற” என அவர்கள் என்ன சொன்னாலும் அமைதியாக இருந்து அவர்களை நல்லபடியாக இங்கிருந்து அனுப்பவேண்டும் என்பதிலே கவனமாக இருந்தார் அவர்.அவருடிய கவலை அவருக்கு.
அப்போது பூரணியை இழுத்து கொண்டு புயல் போல் அழகன் வீட்டிற்க்குள் நுழைந்தான்.
அவன் வந்த வேகமும் ,அவன் முகத்தின் இறுக்கமும் அனைவரயும் திகைப்படைய செய்ய
மணியம்மையோ என்னது இந்த தம்பி இவளை இப்படி இழுத்துகிட்டு வருது .... ஐயோ இவ என்ன பண்ணி வச்சாலோ...ஆத்தா முத்துமாரி ஏதும் தப்பா இருக்க கூடாது என அவள் வேண்டி கொண்டு இருக்கும்போதே
“என்ன அழகா எதுக்கு இவ்ளோ கோபமா வர...என்ன நடந்திச்சு” என கோமதி முதலில் ஆரம்பித்தார்.
அவனோ இருந்த கோபத்தில் எதையும் யோசிக்காமல் நேராக மாணிக்கத்திடம் சென்றவன் ...”மாமா பூரணி எனக்கு மாமன் பொண்ணுதான...அப்போ மச்சான் அப்டிங்கிற உறவுமுறை எனக்கும் இருக்குல்ல” என கேட்கவும்
அங்கு இருப்பவர்களுக்கு ஒன்றும் புரியாமல் முழிக்க
பூரணியோ மனதிற்குள் “ஐயோ இவன் என்ன சொல்ல போறானோ......புகழ் மச்சான் மேல மஞ்ச தண்ணீ ஊத்தினது அப்பாவுக்கு தெரிஞ்சுது...அவளோதான் என்னை கொன்னே போட்றுவாரே ...கடவுளே என்னை காப்பாத்து “ என அவள் வேண்டிகொண்டி இருந்தாள்.அவளுக்கு இப்போது அது தான் பிரச்சனையாக தெரிந்து.
உடனே “என்ன தம்பி...நீ என்ன சொல்றேன்னு எங்களுக்கு புரியலை...... மாணிக்கம் கேட்டதும்
“ஏன் மாமா புகழ் அண்ணாவுக்கு மட்டும் தான் பூரணியை கல்யாணம் பண்ணிக்கிற உரிமை இருக்கா?ஏன் எனக்கு இல்லியா ? நானும் அவளுக்கு அத்தை பையன்தான...நானும் அவளுக்கு மச்சான்தான’ என அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் தனது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தன் மனதில் இருப்பதை கொட்டி விட்டான்.இதில் அதிக அதிர்ச்சி அடைந்தது அழகனின் தந்தையும் ,மாணிக்கமும் தான்
இதை சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் ஒரு நிமிடம் அப்படியே நின்றவர்கள் பின்னர் கோமதி “டேய் என்னடா உளற ....யாரு என்ன சொன்னா......உனக்கு என்ன உரிமை வேணும் ” என கேட்க
“பின்ன என்னம்மா எல்லாரும் புகழ் தான் இவளுக்கு உரிமை பட்டவன் ...அவனை தவிர வேற யாரும் இவளுக்கு தாலி கட்ட முடியாது அப்டின்னு சொல்றாங்க.....அவன் அத்தைக்கு அண்ணன் பையனா நான் மாமாவுக்கு அக்கா பையன் தான எனக்கும் உரிமை இருக்குல” என சிறுபிள்ளை போல் அவன் சொல்ல
என்னடா உளற ......தெளிவா பேசு என அவர் மிரட்டவும்
ஆனால் அழகனே அதை கண்டு கொள்ளாமல் எல்லாரும் புகழை உயர்த்தி சொன்னதும் எங்கு பூரணி தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற வேகத்தில் அவனும் தனது உரிமையை நிலைநிறுத்த போராடிக்கொண்டு இருந்தான்.
பின்னர் மாணிக்கம் அவன் அருகில் வந்து “தம்பி யாரு அப்படி சொன்னது.புகழுக்கு இருக்கிற உரிமை உங்களுக்கும் இருக்கு...ஏன் அதைவிட அதிகமாவே இருக்கு.....அப்புறம் என் பொண்ண யாருக்கு கல்யாணம் பண்ணனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.அவன் எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் என சொல்லி மணியம்மையை ஒரு பார்வை பார்த்த மாணிக்கம்.பொண்ணோட அப்பா நான் சம்மதிக்கணும்” என சொல்ல
அழனின் முகத்தில் அப்போதுதான் சற்று தெளிவு வந்தது.
அதற்குள் அழகனின் தந்தை அவன் அருகில் வந்தவர் “டேய் ...முதல்ல அந்த பொண்ணு கையை விடு” என குரலில் கடுமையுடன் அதே நேரத்தில் மெதுவாக சொல்ல
அப்போது தான், இன்னும் அவள் கையை பிடித்து இருப்பதை உணர்ந்து அவன் கையை வேகமாக விடுவித்து நகர்ந்து நின்றான் அழகன்..
பூரணியோ நடப்பது எல்லாம் அவளை மீறி சென்று கொண்டு இருந்ததால் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.
பின்னர் அழகனின் தந்தை தனது மனைவிடம் திரும்பி “கோமதி ஊருக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வை என உத்தரவு போட்டவர் ..அழகனிடம் திரும்பி உனக்கு ஒரு தங்கை இருக்கா ...அந்த நினைப்பு எப்போதும் உனக்கு இருக்கட்டும்.... இப்படி தத்து பித்துன்னு உளறதுகு நீ ஒன்னும் சின்ன பையன் இல்லை...நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறன்” என சொல்லி நிறுத்தி அவன் முகத்தை பார்த்தார்.
அவனோ பூரணியிடம் இருந்து இன்னும் சற்று விலகி நின்றவன்,”இல்லப்பா அது வந்து எல்லாரும்” என ஆரம்பிக்க
மீண்டும் அவனை பார்வையால் அடக்கியவர் “உள்ளே போ.. ஊருக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வை” என சொன்னவர்
பூரணியிடம் வந்து “அவனுக்கு இந்த பட்டிகாட்டு பழக்கவழக்கமெல்லாம் தெரியாதும்மா...நீ மனசில ஏதும் வச்சுக்காத...நீ வீட்டுக்குள்ள போம்மா” என சொல்லவும் அவளும் இங்கிருந் சென்றால் போதும் என வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.
பின்னர் நேராக மாணிக்கத்திடம் வந்தவர் “மாணிக்கம் வந்த வேலை முடிஞ்சுடுச்சு.....நாங்க கிளம்பறோம்...அவன் பேசினது ஏதும் மனசில வச்சுகாதிங்க...சின்ன பையன் தெரியாம பேசிட்டான் “என சொல்ல
“அச்சோ என்ன மாமா நீங்க போய் இப்படி எல்லாம் சொல்லிட்டு ....”நாங்க ஏதும் தப்பா நினைக்கலை ...அதும் இல்லாம அவன் கேட்டதும் சரிதான ...என் அக்கா பையனுக்கு இல்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு என சொல்லவும் அழகனின் தந்தையும் சிரித்துகொண்டே இந்த பாசம்தான் இன்னும் நமக்குள்ள சொந்தத்தை பலபடுத்திகிட்டு இருக்கு....ரொம்ப சந்தோசம் மாணிக்கம்...நாங்க இன்னைக்கே கிளம்பறோம் என்றார். .
“என்னங்க மாமா இப்பவே கிளம்பனுமா ...இன்னும் இரண்டு நாள் இருந்திட்டு போலாமே” என மாணிக்கம் அவரிடம் சொல்லிவிட்டு மணியம்மை பார்க்க
உடனே “அவரும் ஆமாங்கண்ணா ...வந்து இரண்டுநாள் தான ஆச்சு ...அதுக்குள்ள ஏன் கிளம்பரிங்க ...இன்னும் இரண்டு நாள் இருந்திட்டு போலாம்...இன்னும் ரவைக்கு சாமி ஆத்துல இறங்கிறது எல்லாம் இருக்கு...அதை எல்லாம் பார்த்திட்டு போலாம்லங்கன்னா” என சொல்லவும்
“இல்லம்மா எனக்கு லீவு இல்லை.....நாளைக்கு வேலைக்கு நான் போயாகனும்.இன்னொரு நாளைக்கு வரோம்”என்றார் அவர்.
“அப்போ வாங்க மாமா அந்த தோப்பையாவது பார்த்திட்டு வந்திடலாம்” என மாணிக்கம் அழைக்கவும் இல்லையென்றால் அவரது அக்கா கோபித்து கொள்வார் என்ற பயம் அவருக்கு என அழைக்க .
“வேண்டாம் மாணிக்கம்....இன்னொரு நாளைக்கு பார்த்துகலாம்.இன்னும் கொஞ்ச நாள் தான் ...அப்புறம் என்னை ஆபீஸில் இருந்து ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பிடுவாங்க...அப்போ வந்து பார்த்துகிறேன்’ என சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்றார்.
அவர் செல்வதை பார்த்து கொண்டிருந்த மணியம்மை “என்னங்க இது ?இவரு இப்படி சொல்லிட்டு போறாரு” என கேட்டதும்
“ அடி போடி.......இந்த அளவுக்கு பொறுமையா பேசினாறேனு நீ சந்தோசபடு என்றவர் இந்த பூரணி என்ன பண்ணா? ஏன் அந்த தம்பி அப்படி கேட்டுது” என அவர் யோசிக்க
“ம்ம்ம் அதை உங்க செல்ல பொண்ணுகிட்டே கேளுங்க.....நான் அப்பவும் சொன்னேன்...அவளை கண்டிச்சு வைங்கன்னு...கேட்டிங்களா ?”என மணியம்மை தனது புலம்பலை ஆரம்பிக்க
“சரி சரி நீ உடனே உன்னோட புலம்பலை ஆரம்பிச்சுடாத ...நான் அழகன் கிட்டே கேட்டுகிறேன் என சொல்லிவிட்டு நான் மஞ்சகாடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன் ...நீ அவங்களுக்கு காபிதண்ணீ வச்சுகொடு” என சொல்லிவிட்டு சென்றார்.
இங்கு பூரணியோ புகழின் மேல் மஞ்ச தண்ணீ ஊத்தினது அப்பாவுக்கு தெரிந்தால் திட்டு விழும் என்ற பயம் ஒரு புறம் இருக்க, அத்தனை பேருக்கு முன்னால் அழகன் கையை பிடித்து இழுத்து வந்தது அவளுக்கு கஷ்டமாக இருக்க...இவங்க பாட்டுக்கு கிளம்பி போய்டுவாங்க ....இனி இங்க இருக்கிறவங்க எல்லாம் என்னைத்தானே கேலியும் கிண்டலுமா பேசுவாங்க ....அச்சோ அப்பா அம்மா முன்னாடி வேற எதோ எதோ பேசிட்டாங்க....எல்லாரும் இப்போ என்னைத்தான் திட்ட போறாங்க......என நடந்தவைகளை நினைத்து குழப்பி கொண்டு இருந்தாள்.
அழகனின் குடும்பம் ஊருக்கு தயாராகி கொண்டு இருக்க அழகனோ பூரணியை தேடி வந்தான்.பாரி அனைவர்க்கும் தேநீர் எடுத்துவர அவளிடம் பூரணியை பற்றி கேட்க அவள் அவளது அறையில் இருப்பதாக சொன்னாள்.அவளிடம் சிறிது பேசவேண்டியது இருப்பதால் அழனும் அவளை தேடி வந்தான்..
அவளோ மெத்தையில் படுத்து கொண்டு “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி...அவங்கதான் கையை பிடிச்சா நீ அப்படியே நிப்பியா?இப்போ பாரு யாரு அவமானப்பட்டு நிக்கிறது” என தனக்குத்தானே விரல் நீட்டி அவள் பேசிக்கொண்டு இருக்க
“என் மனசுக்கு பிடிச்சவ கையை தானே பிடிச்சேன்..வேற யார் கையும் பிடிக்களயில்ல” என ஒரு குரல் கேட்க
துள்ளி குதித்து எழுந்தவள் அங்கு வாயிற்படியின் முன் சிரித்து கொண்டு அழகன் நின்று இருந்தான்.
அவனை பார்த்ததும் நடந்தது நினவு வர “போங்க மச்சான் நீங்க......நான் அப்பவும் சொன்னேன் ..கையை விடுங்கன்னு...இப்பதான் அம்மா வந்து அரைமணிநேரம் அறிவுரை சொல்லிட்டு போறாங்க...... காதுல ரத்தமே வந்திடுச்சு.....ஒரு பொம்பளபுள்ள இப்படிதான் இருப்பியான்னு....அந்த தம்பி தொட்டா நீ வேடிக்கை பார்த்திட்டு நிர்ப்பியானு” என அவள் மணியம்மை அவளுக்கு புத்திமதி சொன்னதை பிடிக்காமல் பொரிந்து தள்ள
“நீ சொல்ல வேண்டியது தான் வுட்பீ தான என்னை தொட்டாரு...வேற யாரும் தொடலைன்னு “ என அவன் சொல்லவும்
“அது யாருங்க மச்சான்...உப்பி ... அது வேற வந்து தொடுமா?இங்க பாருங்க மச்சான் எனக்கு தொட்டு பேசறது பிடிக்காது....உங்களுக்கே தெரியும் .....முதல்ல அந்த உப்பி எல்லாம் தொட விடமாட்டேன் என அவள் வேகமாக சொன்னாள்.
அதை கேட்டதும் அழகனோ சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தவன் “ஐயோ என் படிக்காத மக்கு பட்டிகாடே ...வுட்பீ அப்டினா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு அப்டின்னு அர்த்தம்” என அவன் விளக்கம் சொல்ல
“ஓ இதானா...அதை முன்னாடியே சொல்லாமல ....அப்புறம் அது என்ன உங்க அப்பா நீங்க எல்லாரும் பட்டிக்காடு பட்டிகாடுனு ஒரு மாத்ரி இலக்காரமா சொல்றிங்க......இந்த பட்டிக்காடு இல்லையினா உங்க பட்டணம் இல்லை புரிஞ்சுக்குங்க....உங்களை எனக்கு பிடிச்சதுக்கு முதல் காரணம் உங்க படிப்புதான்....அதுக்காக தான் நான் ஏதும் பேசாம இருக்கேன்...இல்லை அப்பவே ஏதாவது சொல்லிருப்பேன்...” என அவன் தந்தை சொல்லும்போதே அவளுக்கு கோபம் வந்து அதை அடக்கி வைத்திருந்தவள் அழகன் சொன்னதும் பொங்கி எழுந்துவிட்டாள்.
அவனோ அவளது கோபத்தை ரசித்தவன் “அட பட்டிக்காடு பட்டிகாடுனுதான சொல்வாங்க....வேற எப்படி சொல்வாங்க.....இதே எங்க ஊர்ல எல்லாம் கட்டிக்க போற பொண்ண கட்டி பிடிச்சு முத்தமே கொடுப்பாங்க...இங்க என்னடான்னா தொடரதுக்கே நீ முகத்தை தூக்கி வச்சுகிர.....அதுனால நீ பட்டிகாடுதான்” என மேலும் அவளை சீண்டிகொண்டு இருந்தான்.
கட்டி பிடிகிறது தான் பட்டணமுனா நான் பட்டிகாடாவே இருந்திட்டு போறேன் என அவளும் ரோசமாக முகத்தை வேறுபுறம் திருப்பி கொள்ள
அவளது குழந்தைதனத்தை ரசித்தவன் அதில் மனம் மயங்கி You have reassembled the broken pieces of my heart and made it new again from the moment I saw u, I owe u my life and for that I will love u until my last breath ..
தனக்கு பிடித்த ஆங்கில கவிதை வரிகளை அவன் ரசித்து சொல்ல
“இப்போ எதுக்குங் மச்சான் நீங்க இயேசு சாமிய கும்பட்ரிங்க” என அவள் கேட்டதும்
அவனோ “என்னது இயேசு சாமியா” என அதிர்ந்து நின்றான்.
ஆமா “எங்க ஊரு சர்ச்சுல இந்த மாதிரித்தான் புரியாத பாட்டு ஒன்னு எப்பவும் கேட்கும் ...ஆனா அது கொஞ்சம் இனிமையா இருக்கும்...நீங்க சொல்றது கொஞ்சம் கொடுரமா இருக்கு” என மூக்கை சுருக்கி வாயை கோணலாக்கி சொல்ல
அவளை முறைத்தவன் பின்னர் இயேசு கோவில்ல பாடுற பாட்டா என அவன் யோசிக்க ...கிறிஸ்தவர்கள் தங்களது ஜெப பாடல்களை ஆங்கிலத்தில் சில நேரம் பாடுவது உண்டு.தங்களை மறந்து ஆண்டவனிடம் மனம் உருகி அவர்கள் பாடுவார்கள்.
இங்கு அழகனும் தனது காதலை மனம் உருகி அவனது அமெரிக்கன் ஆங்கிலத்தில் சொல்ல அது பூரணிக்கு ஜெப பாடல் போல் கேட்க ...அழகனுக்கு அது புரிந்ததும் அவளை எரித்துவிடும் பார்வை பார்த்தவன் “அடிபாவி நான் என் காதலை எவ்ளோ பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்.....நீ அதை எப்படி புரிஞ்சுக்கிற ...ஐயோ உன்கூட குடும்ப நடத்தறதை நினச்சாலே பயமா இருக்கே” என வாய் விட்டே புலம்பிவிட்டான் அவன் .
“என்ன மச்சான் நீங்க...எனக்கு புரியற மாதிரி சொல்லவேண்டியது தான” என அவள் அவனிடன் செல்ல சண்டை போட்டு கொண்டிருக்க
“என்ன தம்பி எல்லாரும் உங்களை அங்க தேடிட்டு இருக்காங்க ...நீங்க இங்க இருக்கீங்க” என கேட்டுகொண்டே வந்த மணியம்மை பூரணியும் அழகனும் அருகருகே நின்று இருப்பதை பார்த்தும்....”தம்பி தப்பா எடுத்துகாதிங்க......இவளுக்கு படிப்பறிவு இல்லை...அதுநாள் உங்களை மாதிரி படிச்சவங்ககிட்ட எப்படி பேசறதுன்னு தெரியாம இருக்கும்......அப்புறம் அவங்க அப்பா செல்லம் கொடுத்து வெளிஉலகம் தெரியாம வளர்த்திட்டார்.அவ பேசறது ஏதும் மனசில வச்சுகாதீங்க......அவ ஆசைப்பட்டதை அவங்க அப்பா உடனே செஞ்சுடுவாறு.....அதுநாள் நல்லது கேட்டது அவளுக்கு தெரியாது.அதே மாதிரி அவனால் ஏமாற்றத்தையும் தாங்கிக்க முடியாது.........ஆள் தான் வளர்ந்து இருக்காளே தவிர புத்தி அப்படியேதான் இருக்கு ..... அவ எது சொன்னாலும் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க” பூரணியை முறைத்து கொண்டே தன் மனதின் பயத்தை அவர் சூசகமாக அழகனிடம் சொல்லிவிட்டார்.
அதை புரிந்து கொண்ட அழகனும் சிரித்து கொண்டே “நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரிது அத்தை. மாமாவை விட அதிகமா அவரோட பொக்கிசத்தை நான் பத்திரமா வச்சுக்குவேன்...நீங்க கவலைபடாதீங்க” என சொல்ல
அவரோ “தம்பி நான் சொல்ல வந்தது என்னன்னா ” என தடுமாற
“ நீங்க கவலைபடாதீங்க அத்தை. எனக்குன்னு சில கடமை இருக்கு......முடிச்சிட்டு சீக்கிரம் வந்து யாருக்கு உரிமை அப்படிங்கிறதை நிருபிக்கிறேன்” என அழுத்தமாக சொல்ல அவன் வார்த்தையில் இருந்த உறுதி மணியம்மை மனதில் கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அதற்குள் “என்ன தம்பி அங்க உங்களை தேடிகிட்டு இருக்காங்க ....நீங்க இங்க பேசிட்டு இருக்கீங்க.....என்ன சொல்றா உங்க அத்தை ” என கேட்டுகொண்டே வந்தார் மாணிக்கம்.
“ஒன்னும் இல்ல மாமா ..... அத்தைகிட்ட நான் ஒரு உண்மையை சொல்லிட்டு இருந்தேன்.அவங்க நம்புனாங்களா இல்லையான்னு தெரியலை.....ஆனால் கூடிய சீக்கிரத்துல நான் சொன்னது உண்மைன்னு புரிஞ்சிடும்” என அவன் இரண்டு அர்த்தமாக சொன்னான்.
“அப்படியா என்ன மணியம்மை.......தம்பி என்ன சொல்லுச்சு” என அவர் கேட்டதும்
அதற்குள் அழகனே “மாமா உங்களுக்கு சொந்தமான என்னோட பொருள உங்ககிட்ட விட்டுட்டு போறேன்.....சீக்கிரம் வந்து அதை முறைப்படி அழைச்சுகிட்டு போவேன் மீதி விபரம் அத்தைகிட கேளுங்க அவங்க சொல்வாங்க” என சிரித்து கொண்டே சொன்னவன் நான் கிளம்பறேன் பூரணி என சொல்லிவிட்டு நடக்க மாணிக்கமோ புரியாமல் மனைவிய பார்த்தார்.
மணியம்மையோ இதை எப்படி எடுத்துக்கொள்வது என தெரியாமல் நின்றுகொண்டு இருந்தார்.
அழகன் கிளம்பியதும் வெளியே ஓடி சென்று பூரணி வழி அனுப்ப ...அவனும் சிரித்துகொண்டே விரைவில் உன்னை மணமுடிப்பேன் என சைகயாலே சொல்லிவிட்டு காரில் அமர்ந்தான்.
திருவிழாவிற்கு வந்தவன் திருமணத்திற்கு அச்சாரம் போட்டு விட்டு செல்ல நடக்க போகும் நிகழ்வுகளை முன்பே கணிக்கும் திறமை மனிதர்களுக்கு இருந்தால் அப்புறம் வாழக்கையில் சுவாரசியம் ஏது?
கனவுகளை சுமந்து கொண்டு கன்னி அவள் காத்திருக்க ,காதல் கொண்டவனோ கைபிடிப்பேன் என உறுதியுடன் செல்ல ,பிள்ளைகளின் சந்தோசம் பெற்றவர்களுக்கு பெருமைதானே ....நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நல்ல படியாக அமைந்ததில் அனைவர்க்கும் மகிழ்ச்சியே .

நேசிப்பவர்கள் எல்லாம்
நம்மோடு சேர்ந்துவிட்டால்
நினைவுகளின் ஆரம்பமும்
பிரிவின் வலியும்
நமக்கு தெரியாமலேசென்றுவிடும்.!
காதல் கொண்ட இந்த பறவைகள்
வண்ண கனவுகளில் சிறகடிக்க
வேடனோ கையில் அம்போடு
வேட்டைக்கு காத்திருக்க

நடக்க போகும் நிகழ்வு தான் என்ன????