அத்தியாயம் -6
இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.......எல்லாரும் அழகன் பூரணி இருவரை மட்டுமே பார்த்து கொண்டு இருந்ததால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வீட்டில் இருந்து புகழ் வெளியே வருவான் என்று யாரும் நினைக்கவில்லை. அழகன் நின்று கொண்டு இருந்தது செல்வத்தின் மாமனார் வீட்டிற்கு முன்புறம் .......விருந்து முடித்துவிட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி அவன் வெளியே வரவும் பூரணி நீரை ஊற்றவும் சரியாக இருக்க இப்போது அந்த மஞ்ச நீர் முழுவதும் புகழின் மேல் கொட்டியது.
“ஏந்தம்பி ரவைக்கும்(இரவு) இருந்து சாப்பிட்டு போலாம் அதுக்குள்ள கிளம்பரிங்க” என கேட்டுகொண்டே வெளியே வந்த அந்த வீட்டின் பெரியவர்
புகழ் நின்று கொண்டிருந்த கோலத்தை பார்த்ததும் ...”ஹஹஹஹா என்ன தம்பி இது...... எங்க ஊரு பொண்ணுங்க உங்க மேலயும் மஞ்ச தண்ணீ ஊத்திட்டாங்களா என சிரித்தவர் பின்னர் “யாரு புள்ள தண்ணீ ஊத்தினது” என கேட்டுகொண்டே சுற்றிலும் பார்க்க...பூரணியோ கையில் பாத்தரத்தை வைத்து கொண்டு விகிர்த்து போய் நின்று கொண்டு இருந்தாள்.
ஓ நீதானா .....ஹஹஹஹா என மீண்டும் வெடி சிரிப்பு சிரித்தவர் “சரியான ஆள பார்த்து தான் ஊத்திருக்க...” என சொல்ல அவரும் அந்த ஊரு என்பதால் புகழ் மற்றும் பூரணி உறவு முறை அவருக்கு தெரியும்.
அவரது சிரிப்பில் சற்று மிரண்டு நிதானத்திற்கு வந்த பூரணி
“இல்லை..இல்லை தாத்தா ...நான் வேணும்னு செய்யலை ..... அந்த மச்சான் மேல தண்ணீ ஊத்த ” என அவள் சொல்லி முடிக்கும் முன்
அதற்குள் அவர் சிரித்து கொண்டே “அதுனால என்ன ...எப்படி இருந்தாலும் மச்சான் மேல தண்ணீ ஊத்தற உரிமை உனக்குதான முதல்ல இருக்கு.......என்னதான் பெரியவங்க சண்டை போட்டாலும் நாளைக்கு உன் மச்சானை மீறி யாரு உனக்கு தாலி கட்ட முடியும்....அதெல்லாம் சரியான ஆள் மேலதான் ஊத்திருக்க ...பாரு எப்படி பேசி சிரிச்சுட்டு இருந்த பையன் உன்னை பார்த்ததும் பேசாம சிலை மாதிரி நிற்கிறான்”... என எதுவும் பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்த புகழை பார்த்து அவர் கிண்டலாக சொல்ல
அதற்குள் சுற்றி இருந்தவர்களும் “அதான என்னைக்கு இருந்தாலும் முதல் உரிமை தாய்மாமனுக்கு தான் வரும். அதற்கு அப்புறம் தான் மத்தவங்க எல்லாம்” என பேச
அதற்குள் மற்றொருவர் புகழிடம் திரும்பி “என்ன தம்பி எங்க பொண்ணயே வச்ச கண்ணு எடுக்காம பார்த்துகிட்டு இருக்கீங்க .....அதான் மஞ்ச தண்ணீ ஊத்தி மனச சொல்லிடுச்சுல.... இந்நேரம் எங்க ஊரு பசங்களா இருந்தா தூக்கிட்டு போய் தாலி கட்டிருப்பானுக....நீங்க என்னடானா இப்படி மசமசனு நின்னுகிட்டு இருக்கீங்க ....ஆனாலும் நம்ம வெள்ளியம்பாலயத்து வீரம் வேற யாருக்கும் வராதுள்ள என சந்தடி சாக்கில் ஊரின் பெருமையை அவர் சொல்ல ...அதான நம்ம பசங்க வீரம் யாருக்கு வரும்” என சிலர் அவருக்கு ஒத்து ஊதினர்.
அருகில் நின்று கொண்டிருந்த செல்வமோ ..”டேய் பங்காளி இதுக்கு மேல நம்ம சும்மா இருக்க கூடாதுடா......இந்த ஊரகார்னுக லந்து தாங்க முடியலை......இப்பவே உன்ற மாமன்கிட்ட போய் நம்ம பொண்ணு கேட்கிறோம் என அவர்கள் சொன்னதை கேட்டதும் இளரத்தமான செல்வம் பொங்கி எழுந்தான்.
ஆனால் புகழோ அவனை நோக்கி அழுத்தமான ஒரு பார்வை வீச செல்வம் சட்டென்று அமைதி அடைந்தான்.அதுதான் புகழ்...அதிகம் பேசமாட்டான்.ஆனால் அவனுடன் இருப்பவர்கள் அவனது பார்வையை வைத்தே அவனது மனநிலையை புரிந்து கொள்வார்கள்.தன் மீது மஞ்ச தண்ணீர் விழுந்ததும் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவன் எதிரில் பூரணி கண்ணை மூடிக்கொண்டு நின்று கொண்டு இருக்க, அவளின் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் அச்சோ என சொல்லவும் அவர்கள் பார்வை போகும் திசையை பார்த்தவன் அங்கு அழகன் நின்று கொண்டு இருந்தான்.அதற்கு பின்னர் பூரணி, அழகன் இருவர் முகத்தை பார்த்ததும் எதோ புரிய அதனால் தான் அவன் ஏதும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.
கிரமாத்தில் இது ஒரு வழக்கம்.தாய் மாமன் உறவு தந்தைக்கு அடுத்த படியாக எல்லா இடத்திலும் முன் நிற்கும் ஒரு பந்தம்.எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாய்மாமன் முறையை யாரும் விட்டு தரமாட்டார்கள்.பூரணி பெரிய மனுஷியாக ஆன போதும் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் அந்த முறைகளை புகழ் தான் வந்து செய்தான்.மாணிக்கத்திற்கு விருப்பம் இல்லை என்றாலும் ஊரில் பெரிய மனிதராக இருந்து கொண்டு ஊரின் பழக்கவழக்கங்களை அவரே மீறினால் நன்றாக இருக்காது என நினைத்தவர் அதற்கு ஏதும் தடை சொல்லவில்லை.இது போன்ற சம்பிரதாயங்களால் தான் நமது நாட்டின் பண்பாடும் பாரம்பரியமும் பார்ப்பவர்களை எல்லாம் அதிசியபடவைக்கிறது..
அதனால் தான் புகழும் கும்பலுடன் சேர்ந்து கொண்டு ஏதாவது சொல்ல அது தனது அத்தைக்கு பிரச்சனை ஆகிவிட்டால் என்னாவது என நினைத்து அவன் அமைதியாக இருந்தான். மேலும் மாணிக்கம்மற்றும் பூரணிய பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.அதனால் அவன் பேசவில்லை.
கேலி செய்து எல்லாரும் சிரித்து கொண்டு நிற்க சாந்தியும் மணியும் மெதுவாக பூரணியின் அருகில சென்றவர்கள் ...”என்னடி இது இவன் எங்கடி இங்க வந்தான்........ ....விட்டா உனக்கும் உன் மச்சானுக்கும் இங்கேயே கண்ணாலத்தை முடிச்சுடுவாங்க போல இருக்கே.......அப்போ உன் அழகன் மச்சான் கதி ....பூ பூத்த உடனே கருகிடுச்சே பூரணி உன் அழகன் மச்சான் காதல் ...இப்ப என்னடி பண்ண போற ”..... என அவர்கள் அவளின் மனநிலையை அறிந்து கொள்ள கேட்க
அவளோ அவர்களை திரும்பி எரித்து விடும் பார்த்தவள் ....அந்த பார்வையே எல்லாம் உங்களால் வந்தது என சொல்லாமல் சொல்ல ...உடனே இருவரும் அங்கிருந்து அப்படியே நகர்ந்தனர்.
என்ன சொல்வது என தெரியாமல் நிமிர்ந்தவள் எதிரில் புகழிற்கு பின்னால் அழகன் அவளை முறைத்து கொண்டு நிற்பதை பார்த்தாள்.அவன் முகம் ஆத்திரத்தில் தணல் போல் ஜொலிக்க பார்வையாலே அவளை பஸ்பமாக்கி விடுவது போல் பார்த்து கொண்டு இருந்தான்.
அவனை பார்த்த உடன் கண்ணில் பயம் தோன்ற “இல்லை மச்சான் நான் ஏதும்” என சொல்லி முடிக்கும் முன்
அதற்குள்“இங்க பாரேன் என்னமா வாய் பேசுவா ?இப்ப இப்படி தடுமாறா என்ன இருந்தாலும் கட்டிக்க போறவேன் முன்னாடி பேசறத்துக்கு வெட்கமாதான இருக்கும்” என அங்கு இருப்பவர்கள் கேலி செய்து பேச
பூரணியோ “ஐயோ கடவுளே நான் எது பேசினாலும் இந்த மனுசங்க அதை எனக்கு ஆப்பு வைக்கிற மாதிரியே திருப்பி விடறாங்களே...நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது.... நான் அழகன் மச்சானை சொன்னா இவங்க புகழ் மச்சானை சொன்ன மாதிரி பேசறாங்களே ....எல்லாம் இந்த ஓரங்கொட்டானால வந்தது...அவனை யாரு இப்போ வெளியே வர சொன்னா......இந்த மாக்கான் வேற அது தெரியாம என்னை முறைச்சுட்டு இருக்கான்”.....என குழப்பத்தில் இரண்டு மச்சான்ங்களையும் தன் மனதிற்குள் திட்டி தீர்த்துக்கொண்டு இருந்தாள் பூரணி.”
பூரணி ஏதும் பதில் சொல்லாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்த அழகன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக புகழை நகர்த்திவிட்டு வந்தவான் ....” நீ முதல்ல வா என் கூட”.....என வார்த்தை கடித்து துப்பியவன் யாரயும் கண்டு கொள்ளாமல் அவள் கைகளை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக நடந்தான்.
இப்படி செய்வான் என எதிர்பார்க்காத பூரணி “அச்சோ மச்சான் என்னங்க மச்சான் இது... என்ன பண்றிங்க ....கையை விடுங்க மச்சான்...எல்லாரும் பார்க்கிறாங்க ....விடுங்க மச்சான்” என அவள் பதறியபடி அவன் இழுப்பில் பின்னால் செல்ல
அவன் எதுவும் பேசாமல் வேகமாக தனது நடையை எட்டி போட
அதற்குள் அங்கு நின்றவர்கள் எல்லாம் ...”இது என்னடி இது...சமஞ்ச புள்ளைய இப்படி வீதில கையை பிடிச்சு இழுத்திட்டு போறான்….யாரு இந்த பையன் என கேட்க...அட நம்ம கோமதி மவந்தான்...அவனும் மச்சான் தான் ஆகுது என ஒருவர் சொல்ல ....அதுக்காக இப்படியா எல்லார் முன்னாடியும் இழுத்திட்டு போவான்....இவளும் பின்னாடியே போறா பாரேன் ” என அங்கலாய்ப்புடன் அவர் சொல்ல
“மச்சான் இப்ப விடபோறிங்களா இல்லயா” என கோபத்தில் பூரணி கத்திவிட்டாள்.அவன் அழுத்தமாக கையை பிடித்தால் வந்த எரிச்சல் மேலும் எல்லாரும் ஒரு மாதிரி பேச அவளுக்கு கோபம் வந்து விட்டது.
அதை கேட்டவுடன் கோபத்தில் வேகமாக அவள் கையை உதறிவிட்டு திரும்பி அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் ...... “ஏன் பூரணி அப்போ அவங்க சொல்றது உண்மையா ....நீ அவனைத்தான் திருமணம் செஞ்சுக்க போறியா?என்னை உனக்கு பிடிக்கலையா ? ...அப்போ என்கிட்டே பேசினது எல்லாம் பொய்யா ?” என ஒவ்வொறு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து அவன் கேட்க
“ஐயோ என்னங்க மச்சான் இப்படி எல்லாம் பேசறிங்க .......நடந்து உங்களுக்கு தெரியும் தானே ?உங்கமேல தான் தண்ணீ ஊத்த வந்தேன்...அவன் இடையில வருவான்னு எனக்கு எப்படி தெரியும் என அவள் அழுது கொண்டே சொன்னவள் அந்த ஓரங்கொட்டான் அங்க இருப்பான்னு எனக்கு தெரியாதுங் மச்சான்......என்னை நம்புங்க” என அவனிடம் தனது நிலையை அவள் விளக்க முயற்சித்தாள்.
அவள் சொல்வது அவனுக்கு புரிந்தாலும்....அவர்கள் எல்லாம் புகழை உயர்த்தி பேசியது அவனின் காதுகளில் கேட்டு கொண்டே இருக்க...பூரணி அமைதியாக இருந்ததும் அவன் கண் முன் நிற்க அவனது உள்ளம் கொதித்து கொண்டு இருந்தது.
அப்போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த இருவர் “ஏம்புள்ள பூரணி ...ஆடு பகை ,குட்டி உறவுன்னு சொன்னமாதிரி உங்க அப்பான் என்னடான்னா உங்க மாமன்வீட்டு சகவாசமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்காரு ...நீ என்னடான்னா அவன் மேல மஞ்ச தண்ணீ ஊத்தினியாமா.......என்னைக்கு இருந்தாலும் உரிமைபட்டவன் அவன்தான......ஆனா உங்க அப்பன் என்ன சொல்வாருன்னு தெரியலியே” என பூரணி ஆசைப்பட்டு ஊத்தியது போல் சொல்லவும்
அதற்குள் அருகில் இருந்தவர் “ஏனக்கா இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் தாவணி போடறதுக்கு முன்னாடியே தாலி கட்றவனைமுடிவு பண்ணிடுதுங்க... இவ உரிமை பட்டவன் மேல தான மஞ்ச தண்ணீ ஊத்துனா ....விடுங்க அக்கா” என எரிகிற தீயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவது போல் சொல்லிவிட்டு நடையை கட்ட இங்கு அழகனோ அவளது பேச்சில் கொஞ்சம் சமாதனம் அடைந்தவன் இப்போது மீண்டும் அவன்முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக வெளியே தெரிந்தது.
“ஐயோ இவன் இப்பதானே மலை இறங்குனான் ...அதுக்குள்ள இவளுக மறுபடியும் மலை ஏத்தி விட்டு போறாங்களே.....கடவுளே இன்னைக்கு ஏன் எல்லாம் இப்படி நடக்குது” என மனதிற்குள் புலம்பியவள் ..அவனின் முகத்தை பார்த்து “மச்சான் அவங்க சொல்றதை எல்லாம் நீங்க நம்பாதிங்க ...அப்படி எல்லாம் இல்லை ” என பூரணி சொல்லி முடிக்கும்முன்பே
“நீ முதல்ல வாயை மூடு...பேசாம வா ” என கோபமாக கர்ஜித்தவன் மீண்டும் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக நடந்தான்.
இங்கு மாணிக்கத்தின் வீட்டில்கோமதி “ஹப்பா ஒருவழியா வந்த காரியம் நல்ல படியா முடிஞ்சுடுச்சு......அரசியும் படிப்பை முடிக்க போறா ....மேலே படிக்கிறேனு சொல்றா......நான் கண்ணாலத்தை முடிச்சிடலாம்னு நினைக்கிறன்...அதுக்குதான் இங்க பொங்கல் வைக்கிரதுக்கே வந்தேன்.ஆத்தாவும் அதுக்கு அனுமதி கொடுத்திட்டா ...எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாணிக்கம்....இனி ஊருக்கு போன உடனே முதல்ல ஜாதகத்தை எடுக்கணும்” என வந்த வேலை நல்லபடியாக முடிந்த சந்தோசத்தில் அவர் பேசிக்கொண்டு இருக்க
“அதுக்கு என்னக்கா நீ எல்லாம் பார்த்து சொல்லு...ஊரே ஆச்சரியபட்ர மாதிரி கண்ணாலத்தை வச்சிடலாம்” என மாணிக்கமும் சந்தோசமாக சொன்னார்.
“இப்போ என்னம்மா என் கல்யாணத்திற்கு அவசரம் ...இங்க பாருங்க அப்பா ...இந்த அம்மா எப்போ பார்த்தாலும் என் கல்யாணத்தை பத்தியே பேசிட்டு இருக்காங்க...நான் இன்னும் படிக்கணும்பா” என சிணுங்கியபடி தந்தையிடம் புகார் செய்தால் அரசி .
உடனே அவளது தந்தை“அவ கிடக்கிறா பட்டிக்காடு.....அவளுக்கு என்ன தெரியும் படிப்பை பத்தி .......அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் நாத்து நடறது ,மாடுமேய்கிறது , சாணி எடுக்கிறது இது தான் ......படிப்பை பத்தி என்ன தெரியும்.....நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்...நீ படிடா செல்லாம் ” என அவர் கோமதி மாணிக்கம் இருவரையும் நோட்டம் விட்டு கொண்டே மகளுக்கு சமாதானம் சொல்லி கொண்டு இருந்தார்.
இதை கேட்டுகொண்டிருந்த மாணிக்கத்திற்கு சட்டென்று கோபம் வர நிமிர்ந்தவர் அதற்குள் கோமதி ....”மாணிக்கம் உங்க மாமா ரொம்ப நாள் கழிச்சு இப்பதானே வந்து இருக்கார்...நீ புதுசா வாங்கி இருக்கியே அந்த மாந்தோப்பு,வாழைத்தோப்பு,கரும்புதோட்டாம் அதை எல்லாம் கொஞ்சம் கூட்டி போய் கட்டிட்டு வரியா” என சந்தடி சாக்கில் தன் பிறந்த வீட்டு செழிப்பையும் அதே நேரத்தில் மாமா வெகுநாள் நாட்களுக்கு பிறகு வந்து இருக்கார் நீ ஏதும் சொல்லிடாதே என்ற வேண்டுகோளையும் அவள் அதில் சொல்லி பேச்சை மாற்ற மாணிக்கமோ ஏதும் பேசாமல் ம்ம்ம் என தலயை ஆட்டினார்.
“ ஏம்மா இந்த அப்பா ஏன் இப்படி இருக்கார்.....அந்த மாமா நம்மை பட்டிகாடுனு சொல்றார்...இவரும் அமைதியா இருக்காரு” என அவர் சொன்னது பாரிக்கு புரிந்து விட ரோசம் வந்து அவள் அம்மாவின் சீறினாள்.
இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.......எல்லாரும் அழகன் பூரணி இருவரை மட்டுமே பார்த்து கொண்டு இருந்ததால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வீட்டில் இருந்து புகழ் வெளியே வருவான் என்று யாரும் நினைக்கவில்லை. அழகன் நின்று கொண்டு இருந்தது செல்வத்தின் மாமனார் வீட்டிற்கு முன்புறம் .......விருந்து முடித்துவிட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி அவன் வெளியே வரவும் பூரணி நீரை ஊற்றவும் சரியாக இருக்க இப்போது அந்த மஞ்ச நீர் முழுவதும் புகழின் மேல் கொட்டியது.
“ஏந்தம்பி ரவைக்கும்(இரவு) இருந்து சாப்பிட்டு போலாம் அதுக்குள்ள கிளம்பரிங்க” என கேட்டுகொண்டே வெளியே வந்த அந்த வீட்டின் பெரியவர்
புகழ் நின்று கொண்டிருந்த கோலத்தை பார்த்ததும் ...”ஹஹஹஹா என்ன தம்பி இது...... எங்க ஊரு பொண்ணுங்க உங்க மேலயும் மஞ்ச தண்ணீ ஊத்திட்டாங்களா என சிரித்தவர் பின்னர் “யாரு புள்ள தண்ணீ ஊத்தினது” என கேட்டுகொண்டே சுற்றிலும் பார்க்க...பூரணியோ கையில் பாத்தரத்தை வைத்து கொண்டு விகிர்த்து போய் நின்று கொண்டு இருந்தாள்.
ஓ நீதானா .....ஹஹஹஹா என மீண்டும் வெடி சிரிப்பு சிரித்தவர் “சரியான ஆள பார்த்து தான் ஊத்திருக்க...” என சொல்ல அவரும் அந்த ஊரு என்பதால் புகழ் மற்றும் பூரணி உறவு முறை அவருக்கு தெரியும்.
அவரது சிரிப்பில் சற்று மிரண்டு நிதானத்திற்கு வந்த பூரணி
“இல்லை..இல்லை தாத்தா ...நான் வேணும்னு செய்யலை ..... அந்த மச்சான் மேல தண்ணீ ஊத்த ” என அவள் சொல்லி முடிக்கும் முன்
அதற்குள் அவர் சிரித்து கொண்டே “அதுனால என்ன ...எப்படி இருந்தாலும் மச்சான் மேல தண்ணீ ஊத்தற உரிமை உனக்குதான முதல்ல இருக்கு.......என்னதான் பெரியவங்க சண்டை போட்டாலும் நாளைக்கு உன் மச்சானை மீறி யாரு உனக்கு தாலி கட்ட முடியும்....அதெல்லாம் சரியான ஆள் மேலதான் ஊத்திருக்க ...பாரு எப்படி பேசி சிரிச்சுட்டு இருந்த பையன் உன்னை பார்த்ததும் பேசாம சிலை மாதிரி நிற்கிறான்”... என எதுவும் பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்த புகழை பார்த்து அவர் கிண்டலாக சொல்ல
அதற்குள் சுற்றி இருந்தவர்களும் “அதான என்னைக்கு இருந்தாலும் முதல் உரிமை தாய்மாமனுக்கு தான் வரும். அதற்கு அப்புறம் தான் மத்தவங்க எல்லாம்” என பேச
அதற்குள் மற்றொருவர் புகழிடம் திரும்பி “என்ன தம்பி எங்க பொண்ணயே வச்ச கண்ணு எடுக்காம பார்த்துகிட்டு இருக்கீங்க .....அதான் மஞ்ச தண்ணீ ஊத்தி மனச சொல்லிடுச்சுல.... இந்நேரம் எங்க ஊரு பசங்களா இருந்தா தூக்கிட்டு போய் தாலி கட்டிருப்பானுக....நீங்க என்னடானா இப்படி மசமசனு நின்னுகிட்டு இருக்கீங்க ....ஆனாலும் நம்ம வெள்ளியம்பாலயத்து வீரம் வேற யாருக்கும் வராதுள்ள என சந்தடி சாக்கில் ஊரின் பெருமையை அவர் சொல்ல ...அதான நம்ம பசங்க வீரம் யாருக்கு வரும்” என சிலர் அவருக்கு ஒத்து ஊதினர்.
அருகில் நின்று கொண்டிருந்த செல்வமோ ..”டேய் பங்காளி இதுக்கு மேல நம்ம சும்மா இருக்க கூடாதுடா......இந்த ஊரகார்னுக லந்து தாங்க முடியலை......இப்பவே உன்ற மாமன்கிட்ட போய் நம்ம பொண்ணு கேட்கிறோம் என அவர்கள் சொன்னதை கேட்டதும் இளரத்தமான செல்வம் பொங்கி எழுந்தான்.
ஆனால் புகழோ அவனை நோக்கி அழுத்தமான ஒரு பார்வை வீச செல்வம் சட்டென்று அமைதி அடைந்தான்.அதுதான் புகழ்...அதிகம் பேசமாட்டான்.ஆனால் அவனுடன் இருப்பவர்கள் அவனது பார்வையை வைத்தே அவனது மனநிலையை புரிந்து கொள்வார்கள்.தன் மீது மஞ்ச தண்ணீர் விழுந்ததும் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவன் எதிரில் பூரணி கண்ணை மூடிக்கொண்டு நின்று கொண்டு இருக்க, அவளின் பின்னால் இருப்பவர்கள் எல்லாம் அச்சோ என சொல்லவும் அவர்கள் பார்வை போகும் திசையை பார்த்தவன் அங்கு அழகன் நின்று கொண்டு இருந்தான்.அதற்கு பின்னர் பூரணி, அழகன் இருவர் முகத்தை பார்த்ததும் எதோ புரிய அதனால் தான் அவன் ஏதும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.
கிரமாத்தில் இது ஒரு வழக்கம்.தாய் மாமன் உறவு தந்தைக்கு அடுத்த படியாக எல்லா இடத்திலும் முன் நிற்கும் ஒரு பந்தம்.எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாய்மாமன் முறையை யாரும் விட்டு தரமாட்டார்கள்.பூரணி பெரிய மனுஷியாக ஆன போதும் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் அந்த முறைகளை புகழ் தான் வந்து செய்தான்.மாணிக்கத்திற்கு விருப்பம் இல்லை என்றாலும் ஊரில் பெரிய மனிதராக இருந்து கொண்டு ஊரின் பழக்கவழக்கங்களை அவரே மீறினால் நன்றாக இருக்காது என நினைத்தவர் அதற்கு ஏதும் தடை சொல்லவில்லை.இது போன்ற சம்பிரதாயங்களால் தான் நமது நாட்டின் பண்பாடும் பாரம்பரியமும் பார்ப்பவர்களை எல்லாம் அதிசியபடவைக்கிறது..
அதனால் தான் புகழும் கும்பலுடன் சேர்ந்து கொண்டு ஏதாவது சொல்ல அது தனது அத்தைக்கு பிரச்சனை ஆகிவிட்டால் என்னாவது என நினைத்து அவன் அமைதியாக இருந்தான். மேலும் மாணிக்கம்மற்றும் பூரணிய பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.அதனால் அவன் பேசவில்லை.
கேலி செய்து எல்லாரும் சிரித்து கொண்டு நிற்க சாந்தியும் மணியும் மெதுவாக பூரணியின் அருகில சென்றவர்கள் ...”என்னடி இது இவன் எங்கடி இங்க வந்தான்........ ....விட்டா உனக்கும் உன் மச்சானுக்கும் இங்கேயே கண்ணாலத்தை முடிச்சுடுவாங்க போல இருக்கே.......அப்போ உன் அழகன் மச்சான் கதி ....பூ பூத்த உடனே கருகிடுச்சே பூரணி உன் அழகன் மச்சான் காதல் ...இப்ப என்னடி பண்ண போற ”..... என அவர்கள் அவளின் மனநிலையை அறிந்து கொள்ள கேட்க
அவளோ அவர்களை திரும்பி எரித்து விடும் பார்த்தவள் ....அந்த பார்வையே எல்லாம் உங்களால் வந்தது என சொல்லாமல் சொல்ல ...உடனே இருவரும் அங்கிருந்து அப்படியே நகர்ந்தனர்.
என்ன சொல்வது என தெரியாமல் நிமிர்ந்தவள் எதிரில் புகழிற்கு பின்னால் அழகன் அவளை முறைத்து கொண்டு நிற்பதை பார்த்தாள்.அவன் முகம் ஆத்திரத்தில் தணல் போல் ஜொலிக்க பார்வையாலே அவளை பஸ்பமாக்கி விடுவது போல் பார்த்து கொண்டு இருந்தான்.
அவனை பார்த்த உடன் கண்ணில் பயம் தோன்ற “இல்லை மச்சான் நான் ஏதும்” என சொல்லி முடிக்கும் முன்
அதற்குள்“இங்க பாரேன் என்னமா வாய் பேசுவா ?இப்ப இப்படி தடுமாறா என்ன இருந்தாலும் கட்டிக்க போறவேன் முன்னாடி பேசறத்துக்கு வெட்கமாதான இருக்கும்” என அங்கு இருப்பவர்கள் கேலி செய்து பேச
பூரணியோ “ஐயோ கடவுளே நான் எது பேசினாலும் இந்த மனுசங்க அதை எனக்கு ஆப்பு வைக்கிற மாதிரியே திருப்பி விடறாங்களே...நான் எப்படி சொல்லி புரிய வைக்கிறது.... நான் அழகன் மச்சானை சொன்னா இவங்க புகழ் மச்சானை சொன்ன மாதிரி பேசறாங்களே ....எல்லாம் இந்த ஓரங்கொட்டானால வந்தது...அவனை யாரு இப்போ வெளியே வர சொன்னா......இந்த மாக்கான் வேற அது தெரியாம என்னை முறைச்சுட்டு இருக்கான்”.....என குழப்பத்தில் இரண்டு மச்சான்ங்களையும் தன் மனதிற்குள் திட்டி தீர்த்துக்கொண்டு இருந்தாள் பூரணி.”
பூரணி ஏதும் பதில் சொல்லாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்த அழகன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக புகழை நகர்த்திவிட்டு வந்தவான் ....” நீ முதல்ல வா என் கூட”.....என வார்த்தை கடித்து துப்பியவன் யாரயும் கண்டு கொள்ளாமல் அவள் கைகளை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக நடந்தான்.
இப்படி செய்வான் என எதிர்பார்க்காத பூரணி “அச்சோ மச்சான் என்னங்க மச்சான் இது... என்ன பண்றிங்க ....கையை விடுங்க மச்சான்...எல்லாரும் பார்க்கிறாங்க ....விடுங்க மச்சான்” என அவள் பதறியபடி அவன் இழுப்பில் பின்னால் செல்ல
அவன் எதுவும் பேசாமல் வேகமாக தனது நடையை எட்டி போட
அதற்குள் அங்கு நின்றவர்கள் எல்லாம் ...”இது என்னடி இது...சமஞ்ச புள்ளைய இப்படி வீதில கையை பிடிச்சு இழுத்திட்டு போறான்….யாரு இந்த பையன் என கேட்க...அட நம்ம கோமதி மவந்தான்...அவனும் மச்சான் தான் ஆகுது என ஒருவர் சொல்ல ....அதுக்காக இப்படியா எல்லார் முன்னாடியும் இழுத்திட்டு போவான்....இவளும் பின்னாடியே போறா பாரேன் ” என அங்கலாய்ப்புடன் அவர் சொல்ல
“மச்சான் இப்ப விடபோறிங்களா இல்லயா” என கோபத்தில் பூரணி கத்திவிட்டாள்.அவன் அழுத்தமாக கையை பிடித்தால் வந்த எரிச்சல் மேலும் எல்லாரும் ஒரு மாதிரி பேச அவளுக்கு கோபம் வந்து விட்டது.
அதை கேட்டவுடன் கோபத்தில் வேகமாக அவள் கையை உதறிவிட்டு திரும்பி அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் ...... “ஏன் பூரணி அப்போ அவங்க சொல்றது உண்மையா ....நீ அவனைத்தான் திருமணம் செஞ்சுக்க போறியா?என்னை உனக்கு பிடிக்கலையா ? ...அப்போ என்கிட்டே பேசினது எல்லாம் பொய்யா ?” என ஒவ்வொறு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து அவன் கேட்க
“ஐயோ என்னங்க மச்சான் இப்படி எல்லாம் பேசறிங்க .......நடந்து உங்களுக்கு தெரியும் தானே ?உங்கமேல தான் தண்ணீ ஊத்த வந்தேன்...அவன் இடையில வருவான்னு எனக்கு எப்படி தெரியும் என அவள் அழுது கொண்டே சொன்னவள் அந்த ஓரங்கொட்டான் அங்க இருப்பான்னு எனக்கு தெரியாதுங் மச்சான்......என்னை நம்புங்க” என அவனிடம் தனது நிலையை அவள் விளக்க முயற்சித்தாள்.
அவள் சொல்வது அவனுக்கு புரிந்தாலும்....அவர்கள் எல்லாம் புகழை உயர்த்தி பேசியது அவனின் காதுகளில் கேட்டு கொண்டே இருக்க...பூரணி அமைதியாக இருந்ததும் அவன் கண் முன் நிற்க அவனது உள்ளம் கொதித்து கொண்டு இருந்தது.
அப்போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த இருவர் “ஏம்புள்ள பூரணி ...ஆடு பகை ,குட்டி உறவுன்னு சொன்னமாதிரி உங்க அப்பான் என்னடான்னா உங்க மாமன்வீட்டு சகவாசமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்காரு ...நீ என்னடான்னா அவன் மேல மஞ்ச தண்ணீ ஊத்தினியாமா.......என்னைக்கு இருந்தாலும் உரிமைபட்டவன் அவன்தான......ஆனா உங்க அப்பன் என்ன சொல்வாருன்னு தெரியலியே” என பூரணி ஆசைப்பட்டு ஊத்தியது போல் சொல்லவும்
அதற்குள் அருகில் இருந்தவர் “ஏனக்கா இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் தாவணி போடறதுக்கு முன்னாடியே தாலி கட்றவனைமுடிவு பண்ணிடுதுங்க... இவ உரிமை பட்டவன் மேல தான மஞ்ச தண்ணீ ஊத்துனா ....விடுங்க அக்கா” என எரிகிற தீயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவது போல் சொல்லிவிட்டு நடையை கட்ட இங்கு அழகனோ அவளது பேச்சில் கொஞ்சம் சமாதனம் அடைந்தவன் இப்போது மீண்டும் அவன்முகத்தில் எரிச்சல் அப்பட்டமாக வெளியே தெரிந்தது.
“ஐயோ இவன் இப்பதானே மலை இறங்குனான் ...அதுக்குள்ள இவளுக மறுபடியும் மலை ஏத்தி விட்டு போறாங்களே.....கடவுளே இன்னைக்கு ஏன் எல்லாம் இப்படி நடக்குது” என மனதிற்குள் புலம்பியவள் ..அவனின் முகத்தை பார்த்து “மச்சான் அவங்க சொல்றதை எல்லாம் நீங்க நம்பாதிங்க ...அப்படி எல்லாம் இல்லை ” என பூரணி சொல்லி முடிக்கும்முன்பே
“நீ முதல்ல வாயை மூடு...பேசாம வா ” என கோபமாக கர்ஜித்தவன் மீண்டும் அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக நடந்தான்.
இங்கு மாணிக்கத்தின் வீட்டில்கோமதி “ஹப்பா ஒருவழியா வந்த காரியம் நல்ல படியா முடிஞ்சுடுச்சு......அரசியும் படிப்பை முடிக்க போறா ....மேலே படிக்கிறேனு சொல்றா......நான் கண்ணாலத்தை முடிச்சிடலாம்னு நினைக்கிறன்...அதுக்குதான் இங்க பொங்கல் வைக்கிரதுக்கே வந்தேன்.ஆத்தாவும் அதுக்கு அனுமதி கொடுத்திட்டா ...எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாணிக்கம்....இனி ஊருக்கு போன உடனே முதல்ல ஜாதகத்தை எடுக்கணும்” என வந்த வேலை நல்லபடியாக முடிந்த சந்தோசத்தில் அவர் பேசிக்கொண்டு இருக்க
“அதுக்கு என்னக்கா நீ எல்லாம் பார்த்து சொல்லு...ஊரே ஆச்சரியபட்ர மாதிரி கண்ணாலத்தை வச்சிடலாம்” என மாணிக்கமும் சந்தோசமாக சொன்னார்.
“இப்போ என்னம்மா என் கல்யாணத்திற்கு அவசரம் ...இங்க பாருங்க அப்பா ...இந்த அம்மா எப்போ பார்த்தாலும் என் கல்யாணத்தை பத்தியே பேசிட்டு இருக்காங்க...நான் இன்னும் படிக்கணும்பா” என சிணுங்கியபடி தந்தையிடம் புகார் செய்தால் அரசி .
உடனே அவளது தந்தை“அவ கிடக்கிறா பட்டிக்காடு.....அவளுக்கு என்ன தெரியும் படிப்பை பத்தி .......அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் நாத்து நடறது ,மாடுமேய்கிறது , சாணி எடுக்கிறது இது தான் ......படிப்பை பத்தி என்ன தெரியும்.....நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்...நீ படிடா செல்லாம் ” என அவர் கோமதி மாணிக்கம் இருவரையும் நோட்டம் விட்டு கொண்டே மகளுக்கு சமாதானம் சொல்லி கொண்டு இருந்தார்.
இதை கேட்டுகொண்டிருந்த மாணிக்கத்திற்கு சட்டென்று கோபம் வர நிமிர்ந்தவர் அதற்குள் கோமதி ....”மாணிக்கம் உங்க மாமா ரொம்ப நாள் கழிச்சு இப்பதானே வந்து இருக்கார்...நீ புதுசா வாங்கி இருக்கியே அந்த மாந்தோப்பு,வாழைத்தோப்பு,கரும்புதோட்டாம் அதை எல்லாம் கொஞ்சம் கூட்டி போய் கட்டிட்டு வரியா” என சந்தடி சாக்கில் தன் பிறந்த வீட்டு செழிப்பையும் அதே நேரத்தில் மாமா வெகுநாள் நாட்களுக்கு பிறகு வந்து இருக்கார் நீ ஏதும் சொல்லிடாதே என்ற வேண்டுகோளையும் அவள் அதில் சொல்லி பேச்சை மாற்ற மாணிக்கமோ ஏதும் பேசாமல் ம்ம்ம் என தலயை ஆட்டினார்.
“ ஏம்மா இந்த அப்பா ஏன் இப்படி இருக்கார்.....அந்த மாமா நம்மை பட்டிகாடுனு சொல்றார்...இவரும் அமைதியா இருக்காரு” என அவர் சொன்னது பாரிக்கு புரிந்து விட ரோசம் வந்து அவள் அம்மாவின் சீறினாள்.