• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 25

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
விஷாலினி சமரை பார்த்து " உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்! பேசலாமா? பேச நேரம் ஒதுக்க முடியுமா?" என்று கேட்டாள்.



அவள் அப்படி கேட்டதும் சிறிது நேரம் யோசித்தவன் 'இவகிட்ட இன்னிக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சு இங்க இருந்து அனுப்பி வச்சுட்டா தான் எல்லாருக்கும் நல்லது. தேவையில்லாமல் இதனால எங்க இருக்க நிறைய பேருக்கு மன கஷ்டம்' என்று எண்ணிக்கொண்டு "சரி பேசலாம்" என்று அழைத்து சென்றான்.



இவர்கள் இருவரும் தனியாக செல்வதை பார்த்த சரண்யா "ஐயோ அந்த பிசாசு அண்ணாவை எங்கேயோ தனியா கூட்டிட்டு போகுது வாங்க நாமளும் போய் என்னன்னு பாப்போம் எப்படியும் அது அண்ணன கஷ்டப்படுத்தும் அப்படி ஏதாவது அதுப் அ



பண்ணா இன்னைக்கு அவளை உண்டு இல்லை என ஆகிவிடுவேன்" என்று கூற



மற்றவர்கள் அவள் கூறியதை கேட்டு சிரித்தவாறே சமர் விஷாலினி இருவரை நோக்கி சென்றனர். பாட்டி தாத்தா மற்றும் ஆண்கள் வேலையாக வீட்டிற்குள்ளேயே இருக்க அவ்வீட்டு மருமகள்கள் தங்கள் பிள்ளைகள் எங்கோ செல்வதை பார்த்து இவர்களைப் பின்தொடர்ந்து வந்தனர்.



இவர்கள் சற்று தூரத்தில் நின்று விட அங்கே விஷாலினி சமரை பார்த்து கேலியாக புன்னகைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தாள்.



"என்ன சார் பொண்டாட்டி மேல காதல் பொங்கி வழியுது போல! உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? அந்த பொண்ணு தான் ஏதோ உன் மேல ஆசைப்பட்டு உன்னோட விஷயம் எல்லாம் தெரிந்தாலும் உன்னை விட்டு விலகாமல் உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கா. கஷ்டப்பட்டு கல்யாணமும் பண்ணிக்கிட்டா! அவ நல்லா இருக்கணும்னு நினைச்சா நீ என்ன பண்ணி இருக்கணும், அவளுக்கு டிவேர்ஸ் கொடுத்து வேற ஒரு நல்ல பையன பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு அவள நல்லா வாழ வச்சிருக்கணும், உன் கூட வச்சு சீக்கிரம் அவளை கொல்ல போறியா?" என்று கூறி நிறுத்தி அவன் முகம் பார்த்தவள் அவன் முகத்தில் உள்ள உணர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக துடைக்கப் பெற்று வருவதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தாள்.



"உன்கூட இருந்தா யாருக்குமே பெருசா நல்லது நடக்காது இவ்வளவு நாள் உன்கூட இருந்த ஆதவன் உனக்காக அவனோட அம்மா அப்பா பாசத்தை விட்டு கொடுத்திருந்தான், அப்போ யோசிச்சு பாரு! அவனுக்கு முழுசா அவனோட அம்மா அப்பா பாசம் கிடைச்சுதா இல்லவே இல்ல அதுக்கு காரணம் நீ அவன் கூட இருந்தது, அதே மாதிரி உன்னோட அம்மா உன் மேல பாசம் வச்சாங்கன்னு சொல்ற உன் மேல பாசம் வச்ச காரணத்தினால் அவங்களால முழு மனசு தான் அவங்களோட இன்னொரு பையனும் கவனிக்க முடியல அந்த இடத்துல நீ இல்லாம இருந்திருந்தா அவங்க மனசு தினம் தினம் கஷ்டப்பட்டு இருக்கவும் செய்யாது அவங்க பிள்ளைய முழுசா கவனிக்காமல் இருந்து இருக்க மாட்டாங்க. இதே மாதிரிதான் இந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் நீ வேணும்னா நம்மளால எதுவுமே நடக்கல அப்படின்னு இப்போ மனசுல நினைச்சுகிட்டு அவங்க எல்லாரும் கூடையும் ஒட்டி உறவாடிக் கொண்டு இருக்கலாம், ஆனாலும் உன்னோட ராசி எல்லாம் சேர்த்து வச்சு அவங்க எல்லாரையும் கஷ்டப்படுத்தி கிட்டே தான் இருக்கு. இப்பவும் பாரு நான் இந்த வீட்டுக்கு வந்து எல்லாரையும் கஷ்டப்பட வைக்க நினைக்கிறதுக்கு முதல் காரணம் நீ நீ சந்தோஷமாய் இருக்கிறது புடிக்காம தான் நான் எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன், நீ இந்த வீட்டை விட்டு வெளியே போனால் நான் இந்த வீட்ல உள்ளவங்களுக்கு கஷ்டப்படுத்த போறேன் பேசாம நானும் இந்த வீட்டை விட்டு கிளம்பி போய்கிட்டா நானும் போய்கிட்டே இருக்க போறேன். ஆகமொத்தம் எல்லாத்துக்கும் காரணம் நீதான் உன்னால தான் இங்க இருக்கிறவங்க எல்லாருமே கஷ்டப்படுறாங்க அதே மாதிரி உன்னை பழி வாங்கணும் அப்படின்னு நினைக்கிற எல்லாருமே உன்னோட பொண்டாட்டிய தானே கொல்ல நினைப்பாங்க அப்படி ஏதாவது அவளுக்கு ஆச்சுன்னா அதுக்கு காரணம் நீ தானே" என்று இளக்காரமாக இழுத்து நிறுத்தினாள்.



அவள் பேசியதை கேட்ட பெண்களுக்கு "இப்படி ஒரு பொம்பள புள்ளையா இவயெல்லாம் வீட்ல எப்படி வளத்தாங்க கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசிட்டு இருக்கா பாரு இவள எல்லாம் ஓடவிட்டு அடிக்கணும்" என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டு அங்கிருந்து அவர்கள் பக்கம் செல்ல பார்க்க ஆதர்ஷினி



"அத்தமா எல்லாரும் கொஞ்சம் அமைதியாக இருங்க என்னோட புருஷன் இப்ப என்னமோ பேச போறான் அது மட்டும் நல்லா தெரியுது அப்படி என்னதான் அவன் பேச போறான்னு நானும் பாக்குறேன் எல்லாத்தையும் பேசி முடிச்ச பிறகு நாம போகலாம், அவனோட மனசுல இருக்கு விஷயம் எல்லாம் வெளியே வரட்டும் என்னதான் அவன் என்ன யோசிகாகிறான் அப்படின்னும் நமக்கும் தெரியட்டும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க அவர் பேசி முடித்த பிறகு அவனுக்கும் சேர்த்து பூசை வைக்கனுமா இல்ல அவளுக்கு மட்டும் பூசை வைக்கணுமா அப்படின்னு யோசிச்சு முடிவெடுக்கலாம்" என்று கூற அவர்களும் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.




தீர்க்கமாக அவளை பார்த்து கொண்டே பேச ஆரம்பித்தான் சமர் "என்னோட பொண்டாட்டி மேல எனக்கு காதல் தான் இல்லன்னு சொல்லல எப்ப இருந்து ஆரம்பிச்சது தெரியுமா உன்னால நான் கஷ்டப்பட்டு நொந்து வெந்து இனி எதை பத்தி நினைக்க கூடாதுன்னு இந்த ஊர்ல காலெடுத்து வைக்கும் போது என்னோட கண்ணை நேருக்கு நேர் பார்த்து அவளுடைய காதலை சொன்னா அந்த கண்ணுல தெரிஞ்ச உறுதி எனக்கு ரொம்பவே பிரமிப்பா இருந்தது. இதுல அவ சின்ன பொண்ணு வயசுக்கு கோளாறுல பேசுறா அப்படின்னு நினைச்சு நான் அவளுக்கு அட்வைஸ் பண்ண நினைக்கும் போது அதையும் தெளிவா சொல்லி வயசுக்கோளாறு இல்ல தெளிவா பேசலாம்னு எனக்கு அவ புரிய வச்சுட்டு போனா அப்போதே என்னோட மனசுல ஒரு வசனம் உண்டு பண்ணிடுச்சு. ஆனா நீ சொல்ற பாத்தியா என்னோட ராசி தான் காரணம் அதனாலதான் நான் எல்லாரும் கஷ்டப்படுறாங்க அப்படின்னு அதே மாதிரி தான் நானும் நினைச்சி அவளை விட்டு ஒதுங்கி இருந்தேன்.




ஆனா பாரேன் ஆதவன் சின்ன வயசிலேயே என்கூட இருந்த காரணத்தினாலே அவனோட அப்பா அம்மா பாசத்தை முழுசா அனுபவிக்காம போயிருக்கான் அப்படி என்கிற விஷயமும் நீ சொல்லித்தான் எனக்கே தெரியுது. ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நாங்க எந்த இருக்கோமோ அங்கதான் ஆதவன் அப்பா அம்மா இருப்பாங்க. என்ன அவனை பாசமா பார்க்கிற மாதிரி என்னையும் சேர்த்து பார்ப்பாங்க. ஆனால் என்னைக்குமே அவங்க பாசத்தில் குறை வச்சதே கிடையாது. இதைப்பற்றி தயவுசெஞ்சு ஆதவன் அவங்க அம்மா அப்பா கிட்ட போய் சொல்லிடாத அந்த இடத்திலேயே உன்னை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டுருவாங்க" என்று சிரிக்காமல் கூறியவன்.

"


அப்புறமா இன்னொரு விஷயம் என்னோட அம்மாக்கு என் மேல அன்பு பாசம் இருக்க கூடாது என்று சொல்லுதற்கான உரிமை எனக்கே கிடையாது. இந்த வீட்டுல வரட்டு கவுரவம் வரட்டுப் பிடிவாதமும் தேவையில்லாத மூடநம்பிக்கை இதிலெல்லாம் நம்பிக்கை அவசியம் என அவங்ககிட்ட இருந்து என்னை பிரிக்காம இருந்திருந்தா எங்க ரெண்டு பேருக்குமே அவங்க உண்மையான பாசத்தை தந்து இருப்பாங்க. அதனால அவங்களுக்கு கஷ்டம் வந்து இருக்காது இங்க இருக்க யாருக்கும் கஷ்டம் வந்து இருக்காது.



ஒரு விஷயத்தை நீ கவனிக்க மறந்து விட்ட இல்ல நான் சொல்ல மறந்துட்டேன் இவ்வளவு நடந்த பிறகும் இந்த வீட்டில் எனக்கு அப்புறம்தான் பிறந்தாங்க என்னோட தம்பி தங்கச்சி எல்லாருமே! அவங்க யாருக்குமே என் மேல வன்மமும் கோவமா எதுவுமே இல்ல அப்படிங்கற விஷயத்தை நீ ஏன் யோசிக்கல உண்மையாவே என் மேல தப்பு இருந்தா என்னோட ராசி தான் பிரச்சனை அப்படிங்கிறது உண்மையாய் இருந்தால் அவர்களும் சேர்ந்து தானே ஒதுங்கி இருப்பாங்க. அவங்க ஏன் என்னை வெறுக்காமல் இருக்காங்க இதற்கான காரணம் உனக்கு புரியுமா கண்டிப்பா புரியாது ஏன்னா இதெல்லாம் உண்மையா பாசம் வைக்கிற அவங்களுக்கு மட்டும் தெறிகிற விஷயம். உன்னை மாதிரி யாரோ சொன்னதுக்காக என்ன லவ் பண்ற மாதிரி நடிச்சு என் கூடவே ஏதோ எனக்காக எல்லாம் செய்ற மாதிரி ஒரு இமேஜ் கிரியேட் பண்ணி கடைசில என்னையே கஷ்டப்படுத்தி இப்போ நல்லா வாழ்க்கை வந்த பிறகும் நான் சந்தோஷமாக இருக்கிறது தெரிஞ்சி இருக்க முடியாமல் இந்த வீட்டுக்கு வந்து மறுபடியும் வந்து நீ தான் கஷ்டப்பட தான் போற நீ இந்த வீட்டுக்கு வந்து யாரை கஷ்டப்படுத்தனும் யாரையும் கஷ்டப்படுத்த முடியாது உன்ன தான் அவங்க எல்லாரும் வச்சு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மிஞ்சிப்போனா உன்னால பாட்டி மட்டும் தான் கஷ்டப்பட்டு கோவத்துல திரிகிறார்கள். வேற யாருமே இந்த வீட்ல கஷ்டப்பட்ட மாதிரி எனக்கு தெரியல!


அதேமாதிரி என்னோட பொண்டாட்டியை நீ சாதாரணமா நினைக்காத நான் அத்தனை தடவை துரத்திய பெறவும் என்னையே நினச்சு பிடிவாதமாக நின்னு என்ன கல்யாணம் பண்ணி இருக்கா நிச்சயமா என்ன கஷ்டப்படுத்துறதுக்கு எல்லாம் உன்னை சும்மா விட மாட்டா! என்ன தான் உன்ன விட அதை வயசுல சின்னப் பொண்ணா இருந்தாலும் மனதளவில் அவ ரொம்ப பெரியவ இந்த பொண்ணு அவளோட பெரிய பலமே எல்லாரோட நம்பிக்கையும் அவளோட அன்பு நான். எதுக்கும் கொஞ்சம் கவனமாக இரு அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்.

முடிஞ்சா எவ்வளவு சீக்கிரம் இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடு இதுக்கு மேல நீ என்ன கஷ்டப்பட்டாலும் கண்டிப்பா நான் வந்து உனக்கு உதவி செய்ய போறதே கிடையாது. இப்ப நீ கூப்பிடும் போது கூட உன் கிட்ட நல்லவிதமா பேசி இங்க இருந்து அனுப்பி வைத்துவிடலாம் அப்படிங்கற முடிவோட தான் வந்தேன். ஆனால் நீ பேச பேச தான் நீ திருந்தவே இல்லை அப்படி என்கிற விஷயம் எனக்கு தெளிவா புரிஞ்சது. இதுக்கு மேல அனுபவி நான் ஒன்னும் பண்ண முடியாது ஆனா உனக்கு இன்னொரு சுவீட் ஷாக் தரவா" என்று கூறியவன் நேராக தன் மனைவி முன்பு வந்து நின்றான்.

"


உனக்கு என் மேல நிறைய கோபம் வருத்தம் எல்லாம் இருக்கும் ஆதுமா அது எனக்கே தெரியும். உன் மேல இருக்குற காதலை ஊரிலுள்ள எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்குற நான் ஒரு தடவை கூட உன் கிட்ட சொன்னது கிடையாது. அதற்கான காரணம் என்னவென்று உனக்கே தெரியும். இது வரைக்கும் இருந்த தயக்கம் இன்னைக்கு அவ பேசுவதை பார்க்கும் போது மொத்தமாக விலகி போயிட்டு நீ இல்லாம என்னால நிச்சயமா இருக்க முடியாது. என்னோட ராசி அது இதுனு யார் வேணா என்ன வேணா சொன்னாலும் நீ அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது அப்படின்னு என் கூடவே இருந்து வாழ்ந்து நிரூபிக்க காத்திருக்க! அப்புறம் எதுக்கு நான் உன்மேல இருக்க காதல உன்கிட்ட சொல்லாம ஒதுங்கி இருக்கணும். என்னதான் எனக்கு அம்மா அப்பா சித்தப்பா சித்தி அப்படின்னு எல்லாருமே இருந்தாலும் எனக்குள்ள அம்மா பாசத்துக்காக ஒரு ஏக்கம் இருந்துகிட்டு தான் இருந்துச்சு!

ஆனா தினமும் ராத்திரி நீ கொடுக்கிற நெற்றியில் ஒரு முத்தம் அதுல எனக்கு அவ்வளவு தாய்மை பாசம் தெரியுது. நீ எனக்கு காதலியை மனைவியாக மட்டும் இல்லாம ஒரு தாயாகவும் தோழியாகவும் சில நேரத்துல எனக்கு உண்மையா இருந்து என் கூடவே கடைசி வரைக்கும் இருப்பியா? நான் மனசார சொல்றேன் என்னோட வாழ்க்கையில உன்ன இவ்வளவு நாள் ஒதுக்கி வெச்சதுதான் நான் பண்ண பெரிய தப்பு. கடைசி வரைக்கும் என் வாழ்க்கையில என் கூடவே இரு அது மா! ஐ லவ் யூ சோ மச் என்னோட கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உனக்காக கண்டிப்பா வருவேன்! உன் கூடவே இருப்பேன்! உனக்காக எல்லா விஷயத்துலயும் நான் சப்போட்டா இருப்பேன் உன்னோட தூய்மையான காதல் தான் எனக்கு நிறைய விஷயங்களை புரிய வைத்தது. அதே காதல் எனக்கு எப்போ வேணும் நான் தப்பு பண்ணும் போது என்ன கண்டிக்கிற தாயும் தாரமுமா என் கூடவே கடைசி வரைக்கும் இரு ஆதுமா" என்று மனதார நெகிழ்ந்து போய் கூறினான்.




விஷாலினி அதிர்ந்து போய் நின்று விட்டாள். ஏனெனில் அவன் கண்களில் அவ்வளவு காதல் பாசம் கொட்டிக்கிடந்தது. கல்லூரியில் படிக்கும் போது இவள் காதில் கூறும் போது கூட அவன் கண்களில் மகிழ்ச்சி மட்டுமே தென்பட்டதை தவிர இந்த அளவில் காதல் தென்படவில்லை அதனால் கோபமாக காலை தரையில் உதைத்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டால் மற்ற அனைவருக்கும் இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.




ஆதர்ஷினிகோ நடந்த அனைத்தும் அவள் வாழ்க்கையில் கிடைக்காத தருணங்களாகவே இருந்தது. இத்தனை நாள் அவன் தூங்கிவிட்டான் என்று எண்ணி கொடுத்த முத்தம் அவனுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருந்து இருக்கிறது என்று எண்ணி உள்ளம் பூரித்து போனவள், சுற்றுப்புறம் மறந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள் "என்கிட்ட எப்பவுமே உனக்கு எதுக்கு தயக்கம் இருக்க கூடாது. உன்னோட மனசுல எந்த விஷயம் கேட்கனும் நினைச்சாலும் தயங்காம என்கிட்ட கேளு. நிச்சயம் அதற்கான பதிலை நான் உனக்கு தருவேன். இனி என்னோட வாழ்க்கையில எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் உன்னை இவ்வளவு கஷ்டப் படுத்தினவங்க யார் அப்படி என்கிற உண்மையை ஒட்டுமொத்தமாக நான் எல்லாருக்கும் சொல்லி அவங்க முகத்திரையை கிழிக்கிறேன்.

இன்னைக்கு நீ எவ்வளவு தைரியமா பேசுற அதே மாதிரி உன்னோட வாழ்க்கையில ஒரு தப்பு நடந்தா அதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து அதற்கான முடிவை கண்டுபிடிக்கணும், எக்காரணம் கொண்டும் உன்னோட ராசிதான் காரணமா இருக்கும் அப்படின்னு நீ என்னைக்குமே யோசிக்க கூடாது. இது என் மேல சத்தியம்" என்று கூறி அவள் தலையில் கைவைத்து சத்தியம் வாங்கியவள் புன்னகையோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.



இருவரையும் மிகவும் மகிழ்வாக பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்கள் சுற்றி வந்து அவர்களை அணைத்துக் கொண்டனர். சிறியவர்கள் அனைவரும் ஓ என்று கோரஸ் பாட பெரியவர்கள் கண்களில் கண்ணீருடன் புன்னகை முகத்துடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தன.ர் அவர்கள் மனதிலும் சொல்ல முடியாத மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது இந்த அளவிற்கு தங்கள் மகன் மாறுவான் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை என்றாவது ஒருநாள் சக மனிதனைப் போல அவன் வாழ மாட்டானா என்று ஏங்கிய நாட்கள் தான் எத்தனை இதோ இன்று அவர்களுக்கு அந்த நாள் வந்துவிட்டதை உணர்ந்து விட்டது.




வீட்டிற்குள் கோவமாக சென்ற விஷாலினி ஒரு உருவம் கை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றது அது யார் என அறிந்த விஷாலினி எதுவும் பேசாமல் அவருடைய இழுப்பிற்கு சென்றாள்.



இங்கே நடந்த விஷயங்கள் அனைத்தும் ஆதவன் மூலமாக பவானி ஆதர்ஷினி வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்க அனைவரின் முகத்திலும் ஒரு பெரிய நிம்மதி பரவியது. ஆனால் நடந்த அனைத்தையும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த இரு உருவங்கள் குற்ற உணர்ச்சியில் துடிக்க ஆரம்பித்தது.




தாங்கள் செய்தது அனைத்தும் தவறு என்ற ரீதியில் அந்த இரு உருவங்கள் யோசித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கமோ மொத்தமாக சமரை அழிக்க திட்டம் தீட்டி கொண்டிருந்தது ஒரு உருவம் விசாலினியுடன்.



இதை எதையும் அறியாத மற்றவர்களோ சமர் சகஜமாக மாற ஆரம்பித்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக நாளை நடத்த ஆரம்பித்தனர்.



இனி என்ன நடக்கும் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top