• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாழவும் ஆளவும் அவள்(ன்) 28

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
முருகன் தான் அனைத்தையும் செய்தார் என்று ஆதர்ஷினி அனைவர் முன்பும் கூறி அவரிடம் சண்டையிடஷ அவரும் கோபத்தில் தான் செய்த தவறுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தார்.

"ஆமா நான் தான் இது எல்லாத்தையுமே செஞ்சது இப்படியெல்லாம் பண்ணும்போது எனக்கு கிடைச்ச சந்தோஷம் எவ்வளவு தெரியுமா? நிச்சயமா உங்கள் யாராலும் என்னோட சந்தோஷத்தை கணக்கிட முடியாது. நான் இப்படி எல்லாம் செஞ்சதுக்கு காரணம் என்ன தெரியுமா?" என்று நிதானமாக ஏனென சிரிப்புடன் கூறியவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் பேச ஆரம்பித்தார்.


"இந்த சொத்து எனக்கு கிடைக்குது கிடைக்கல அப்படிங்கிறது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. ஏன்னா எனக்கு பெருசா சொத்து மேல ஆசை இல்லை. ஆனா அந்த சொத்து வச்சிருக்க குடும்பத்துல உள்ள ஒரு பொண்ணு அதாவது அந்த வீட்டோட ஒரே பொண்ணும் நானும் ரொம்ப காதலிச்சோம் என்னதான் எங்க 2 குடும்பத்துக்குள்ளயும் இந்த கேஸ் நடந்துகிட்டு இருந்தாலும் எனக்கும் அவளுக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதனால நாங்க குடும்பத்தைப் பற்றியோ சொத்து பிரச்சனை பற்றியோ அது இதுன்னு எதைப்பத்தியும் யோசிக்காமல் ஒருத்தர ஒருத்தர் உண்மையாக நேசிக்க ஆரம்பிச்சோம்.


இந்த சொத்து எங்களுக்கு உரிமையானது இல்ல அப்படிங்கிற விஷயம் எனக்கு முன்னாடியே தெரியும். ஆனா அந்த சொத்து அவங்க பொண்ணு கல்யாணம் பண்ணி போற இடத்துக்கு சீதனமாக கொடுக்கணும்னு அந்த வீட்டிலுள்ள எல்லாருமே ரொம்ப ஆசை பட்டாங்க. அந்த அளவுக்கு அவங்க எல்லாருக்கும் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த பரம்பரை இடம். எங்க அம்மா தெரியாம ஏதோ ஒரு பத்திரத்தை மாத்தி படிச்சு இந்த சொத்துல எங்களுக்கும் உரிமை உண்டு அப்படின்னு எங்க அப்பாகிட்ட சொல்ல சாதாரணமாகவே நிறைய சொத்து சேர்த்து வைக்கணும் தாம் மட்டுமே பெரிய ஆளா இருக்கணும் அப்படிங்கிற வீராப்பு ஆசை எல்லாம் கொண்ட என்னோட அப்பா எங்க அம்மா சொன்னத பற்றி தீர விசாரிக்காமல் மேலோட்டமா பாத்திட்டு கேஸ் போட்டாரு. இந்த விஷயம் எல்லாமே நான் அவளை காதலிக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கு தெரிஞ்சது.

எங்க ரெண்டு பேருக்கும் இருந்த ஒரே துருப்பு சீட்டு இந்த சொத்து தான்! முதல்ல இந்த சொத்து எங்களுக்கு பெருசா தெரியாம தான் போய்கிட்டு இருந்துச்சு, ஆனா ரெண்டு வீட்டிலேயும் ஒத்துக்கணும் அப்படின்னு சொன்னா இந்த சொத்து என்னும் எங்கள் கைக்கு வந்தா மட்டும் தான் முடியும் அப்படி என்கிற விஷயம் எனக்கு புரிய ஆரம்பித்தது. அதே தான் என்னோட காதலியும் சொன்னா அவளை கல்யாணம் பண்ணிக்க போற வீட்டுக்கு தான் இந்த சொத்தை கொடுக்கணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டாங்க, அதனால நாங்க இந்த கேஸ்ல ஜெயிச்சா நிச்சயமா எனக்கு போய் பொண்ணு கேட்டா அவங்க தரமாட்டேன் என்று சொல்லவே மாட்டாங்க அப்படின்னு அவ ஆணித்தரமாகச் சொன்னாள்.


என்னோட காதலுக்காகவாவது இந்த சொத்து எங்க கைக்கு வரணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் என்னுடைய கல்யாண விஷயத்தை பற்றியும் என்னோட வீட்ல பேச முடியாது எனக்கு முன்னாடி என்னோட அண்ணன் ஒருத்தன் இருந்தான், அவனுக்கு கல்யாணம் பண்ணாம எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க. ஆனா அதே மாதிரி அவங்க வீட்டில இருக்காங்க அப்படின்னு நாம சொல்லமுடியாது இல்ல ஆனா அவங்க வீட்டுல அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அமைதியாயிருந்ததுக்கு ஒரே காரணம் இந்த சொத்து சம்பந்தமான கேஸ்நடந்துகிட்டு இருந்தது தான். அதுவும் இன்னும் ஒரு மூணு நாலு வருஷம் மட்டும் பார்த்துட்டு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடலாம் அப்படிங்கற நினைப்புல அவங்க வந்துட்டாங்க. அந்த நேரத்துலதான் புனிதா அண்ணி கன்சீவ் ஆனாங்க. இங்க வீட்ல எல்லாருமே ரொம்ப சந்தோஷப் பட்டாங்க ஏன் நான் கூட ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷம் கொஞ்ச நாளுக்கு மட்டும் தான் எனக்கு இருந்துச்சு.


நான் என்னுடைய காதலிய போய் பார்க்க போகும்போது அவ எனக்கு ஒரு விஷயம் சொன்ன! அந்த விஷயம் என்ன தெரியுமா? இந்த சொத்து அவர்களுக்கு மட்டுமே உரிமையானது அப்படின்னு புரூப் பண்ற மாதிரி ஏதோ ஒரு ஆதாரம் அவங்க வீட்ல உள்ளவங்க கைல கிடைச்ச இருப்பதாகவும், அவங்க பேசிகிட்ட வைத்து பார்க்கும்போது இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள எப்படியும் அந்த சொத்து அவங்க கைக்கே போயிடும் அப்படிங்கிற சந்தோஷமும் நம்பிக்கையும் அவங்க முகத்துல இருக்கறதா சொன்னா. அப்பவும் எனக்கு பெருசா இவன் மேல வெறுப்பு வரல சரி அப்படியெல்லாம் நடக்காது திரும்ப வாய்தா போட்டு கேசை எடுத்துக்கொண்டு போய் விடலாம் அப்படிங்கற ஒரு தைரியத்தோடு நானும் அவளை சமாதானப்படுத்திட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.


ஆனால் வயத்துல இருக்கும்போதே உண்மை விளம்பி சத்தியத்தின் உருவமாக பிறந்த இவன், வளர வளர அந்த சொத்து கொஞ்சம் கொஞ்சமா அந்த குடும்பத்துக்கு தான் போகப் போகுது அப்படிங்கிற விஷயம் எனக்கு தெரிய ஆரம்பித்தது. அந்த நேரம் எல்லாம் எப்படி நாம இத மிஸ் பண்ணினோம்? எங்க தப்பு நடந்திருச்சு? அப்படிதான் யோசித்துக்கொண்டே இருந்தேன். ஏன் இவன் பிறக்கிற நிமிஷம் வரைக்கும் எனக்கு அவன் மேல வெறுப்பு எதுவுமே வரல. ஆனா இவன் பிறந்து கொஞ்ச நாள்ல சொத்து அவங்க கைக்கு போன பிறகு நான் உட்கார்ந்து ஒரு நாள் யோசிக்கும் போது, ஆரம்பத்தில் இருந்தே இவன் எப்போ அண்ணி வைத்துக்கொள்ள வர ஆரம்பித்ததும் அன்னையிலிருந்து தான் எனக்கு அந்த சொத்து சம்பந்தமான பிரச்சனை ஆரம்பமாகி என்னோட காதலி கொஞ்சம் கொஞ்சமாய் என்ன விட்டு போக போறா அப்படிங்கற விஷயமே எனக்கு தெரிய வந்துச்சு அப்படிங்கற விஷயமே எனக்கு புரிய ஆரம்பித்தது.


இது எல்லாத்தையும் விட இவன் மேல நான் மொத்தமா வெறுப்பா அள்ளிக் கொட்டுற காரணம் என்ன தெரியுமா? எப்போ அந்த சொத்து அவர்களுக்குக் கிடைத்ததோ அடுத்த மூன்றே நாளில் என்னோட காதலிக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்துவிட்டார்கள். எனக்கு போன் பண்ணி என்னோட காதலி அவ்வளவு அழுதா ஆனா என்னால அவளை சமாதானப்படுத்தவே முடியல. கல்யாணம் பண்ணி இங்க கூட்டிட்டு வரவும் முடியாது ஏன்னா அந்த சொத்து சம்பந்தமான விஷயத்தில் அந்த குடும்பத்தில் உள்ளவங்க எல்லாரும் அவ்வளவு கோவமா இருந்தாங்க. இப்போ நான் போய் கல்யாணத்த நிறுத்த முயற்சி பண்ணா அது வேற மாதிரி பெரிய பெரிய பிரச்சனையை கொண்டு வந்துவிடும், அப்படின்னு சொல்லி என்னோட லவ்வர் கிட்ட ஏதாவது பண்ண சொன்னேன் ஆனா அவளால அங்க ஒண்ணுமே பண்ண முடியல. அந்த நேரம் நான் இவன் மேல எனக்கு அவ்வளவு கொலை வெறி வந்துச்சு.


நான் சந்தோஷமா வாழலாம்னு ஆசைப்பட்ட வாழ்க்கை என்னோட கண்ணு முன்னாடியே போகப்போவது அப்படி என்கிற விஷயம் எனக்கு தெரிய ஆரம்பிக்கவுமே மொத்தமாய் இவனை வெறுக்க ஆரம்பித்து விட்டேன். நான் மனசுக்குள்ள சந்தோஷமோ இல்லாமல் வாழும் போது இவன் மட்டும் எதுக்காக சந்தோஷமா இருக்கணும் அப்படின்னு சொல்லி தான், எங்க அண்ணனுக்கு மூடநம்பிக்கை மேல நம்பிக்கை இருந்துச்சு எங்க அப்பாவும் அந்த நம்பிக்கைகள் மேல கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு அதை உபயோகப்படுத்திக் இவன ராசி இல்லாதவன் அப்படின்னு இந்த குடும்பத்தில் உள்ளவங்க கிட்ட ஜோசியர் மூலமா சொல்ல வச்சேன்.


ஆனா என்னோட சின்ன அண்ணன் நான் சொன்னதை எதையுமே நம்பல அவன் எப்போதுமே இவனுக்கு பக்கபலமாக இருந்தான். புனிதா அண்ணிக்கு பிள்ளை பாசம் விடலை அவங்களும் இவன கவனிக்க ஆரம்பிச்சாங்க. இதெல்லாம் பார்த்து இன்னும் எனக்கு வெறுப்பு ஏற ஆரம்பித்தது. யாருக்கும் தெரியாமல் நடக்கிறது எல்லாம் எங்க அண்ணன் கண் படுறது மாதிரி வரவைத்தேன். அவனும் பார்த்து சண்டை போட ஆரம்பிச்சான் ஒருபக்கம் எங்க அம்மாக்கு எங்க நம்ம ஆரம்பித்து வைத்து தான் சொத்து கிடைக்காமல் போய்விட்டதோ அதை வைத்து யாராவது அவங்கள திட்டவும் அல்லது ஏதாவது சொல்லவும் ஆரம்பிச்சிடுவாங்க என்கிற பயம், அதனால அவங்களும் ரொம்ப யோசிக்காம எல்லாரும் சொன்னதை ஏற்று அவனை ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சாங்க. இப்படி ஒவ்வொரு தடவையும் அவனை எல்லாரும் திட்டும்போது நான் உள்ளுக்குள்ள அவ்வளவு சந்தோஷப்படுவேன். அடுத்து இந்த வீட்டுக்கு வந்த விஜயா அண்ணியும் ராதிகாவும் நான் சொன்னதை எதையுமே காதுலை எடுக்கவே இல்லை. அவங்க இவன பாசமா தான் பாத்துக்க ட்ரை பண்ணாங்க. அங்கேயும் யாரையாவது வச்சு திட்ட வைத்து அதை மீறி அவங்க அந்த திட்டு எதையுமே கண்டுக்காமல் போனா இவன அவங்க அப்பாவ வச்சே திட்ட வச்சேன். அதுல ரொம்பவும் உடைந்துபோனவன் எல்லாரையும் விட்டு ஒதுங்க ஆரம்பிச்சான்.


இவன் ஒதுங்கி ஒதுங்கி போறதா பார்க்கும்போது எனக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்துச்சு. என்னோட கண்ணு முன்னாடியே என்னோட காதலி கல்யாணம் பண்ணிட்டு இன்னொரு குடும்பத்தோட வாழும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. அதைவிட பலமடங்கு கஷ்டத்தை இவனுக்கு கொடுக்கணும்னு நினைச்சேன் அதே மாதிரி கொடுக்க ஆரம்பிச்சேன். ஆனா இவன் கிட்ட இருந்து என்னால பிரிக்க முடியாத ஒரே ஆள் ஆதவன் மட்டும்தான். என்னென்னமோ பண்ணிப் பார்த்தும் அவனை இவன் கிட்ட இருந்து பிடிக்க முடியல. கூடவே அவன் குடும்பமும் இவன் மேல பாசமா இருந்துச்சு. எங்க இவன அவங்க கூடவே கூட்டிட்டு போய் விடுவார்களோ அப்படின்னு எனக்கு ஒரு எண்ணம் வர ஆரம்பிச்சது. ஏன்னா அவங்க கூட இருந்தா இதன் ரொம்ப சந்தோஷமாய் இருப்பான். இவனோட சந்தோசம்தான் எனக்கு பிடிக்காதே அதுக்காகவே ஆதவன் குடும்பத்தோட வந்து இவனை கூப்பிடும்போது எங்க வீட்டுல உள்ளவங்க மறுத்து பேசுற மாதிரி கௌரவத்தை இழுத்துவிட்டேன், அவங்களும் நான் எதுக்காக செய்கிறேன் என்று புரிஞ்சிக்காம கவுரவம் அது இதுன்னு பேசி வீட்ல வெச்சே இவன கஷ்டப்பட வச்சாங்க.


அதை எல்லாம் பார்க்கும் போது ஒரு பரம திருப்தி எனக்கு கிடைக்கும். ஆனாலும் வெளியே சொன்னால் எல்லாருமே யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க தானே அதனால நான் யார்கிட்டயும் சொல்லாம அமைதியா இருந்த எல்லா வேலையும் பார்த்தேன். என் கையிலிருந்து இவன் நழுவி காலேஜ் படிக்க வெளியூருக்கு போகும்போது எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. ஆனா கண்டிப்பா ஒரு காலேஜ் வாழ்க்கை யாரை வேணாலும் மாத்த முடியும் அப்படி என்கிற விஷயம் எனக்கு தெரிஞ்சு தான் இருந்துச்சு.


அதுக்காகவே விஷாலினிய அங்க அனுப்பி வெச்சேன். ஆனா நான் முதல்ல அனுப்பி வைக்கும்போது இவன கண்காணிக்கச் சொல்லி தான் அனுப்பிவைத்தேன்.இந்த விஷா வேற யாரும் கிடையாது என்னோட ஒரு உண்மையான ஃப்ரெண்டோட பொண்ணு அவனுக்கு என்னுடைய காதல் கதை எல்லாமே தெரியும். ஒரு தடவை நாங்க பேசினது எல்லாத்தையும் கேட்டதா எங்களுக்கு உதவி பண்றேன் அப்படின்னு அவளாகவே வந்து நின்னா. அதனாலதான் அவனோடு காலேஜ்ல சேர்த்து விட்டோம் ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத விதமாக தனியாக இருப்பதை பார்த்து அவன் பேச வந்தான். அது எங்களுக்கு இன்னும் சாதகமாகவே நல்ல க்ளோஸ் ஃப்ரண்டா ஆனால் விசா ஒருநாள் எப்படி எனக்கு காதலோட வலிய அனுபவிக்க வாய்ப்பு கிடைச்சதோ அதே மாதிரி அவனும் காதலியை அனுபவிக்கணும் அப்படின்னு சொன்னா அதுக்காக தான் அவனை காதலிக்கிற மாதிரி நடிச்சி கடைசில எல்லாத்தையும் பண்ணிட்டு வந்தா.


அதோட எல்லாம் முடிஞ்சிடும் அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனால் அந்த நேரத்திலும் அவன் கூடவே இருந்து அவனை தேத்தி படிப்பு முடிக்க வச்சு இந்த ஊருகுள்ள கூட்டிட்டு வந்தான். வந்தவன் முகத்தில் எப்போதும் இருக்கும் ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்ல அதனால இனி அவன் மூலமா பெருசா பிரச்சினை இருக்காது அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்த நேரத்துல தா நீ அவனோட வாழ்க்கையில வந்து இறங்கின. அப்போது எங்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த நீ அதுவும் அவனை காதலிக்கிறதா சொன்னது தான்.


ஆனா அதுல எங்களுக்கு ஒரே நிம்மதி கிடைத்தது என்ன தெரியுமா இவன் உன்னோட காதலன் சுத்தமா கண்டுக்காம போனது. அதுக்கப்புறம் நிறைய தடவை நீ இவன் பின்னாடியே சுத்தும் போது கொஞ்சம் கூட மதிக்காம போகும் போது எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. அதனால தான் உன்னை கண்டுக்காம விட்டேன் அதே மாதிரி இந்த கல்யாணத்துக்கு வந்து நிற்கும் போதும் இது சரியா வராது அப்படின்னு தோணுச்சு அதனாலதான் முதல்ல தடுக்க முயற்சி பண்ணேன். ஆனா அதுக்குப் பிறகுதான் இத்தனை வருஷம் பின்னாடி சுத்தி அவ கண்டுக்கல இதுக்கு மேலயும் கண்டுக்கவா போறான் அப்படிங்கிற ஒரு தெனாவெட்டு தனத்தில் தான் நான் அமைதியாக இருந்தேன். ஆனா அதுவே எனக்கு மிகப் பெரிய ஆப்பா அமைஞ்சு போச்சு.


எங்களுக்கே தெரியாமல் எங்கள பத்தின அத்தனை எல்லா விஷயத்தையும் சேகரித்து வைத்து தான் இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்க அப்படி என்கிற விஷயத்தை நான் கவனிக்காமல் விட்டுட்டேன். இதை முதலிலேயே கவனித்து இருந்தா வந்த வீட்டுக்கு வரவே விட்டிருக்க மாட்டேன். நீ இந்த வீட்டுக்குள்ள வரதுக்கு முன்னாடி இருந்தே எனக்கு வரிசையா தோல்வியைத்தான் கொடுத்த அப்பவே கொஞ்சம் சுதாரித்துக் இருந்தா, நான் முழுசா யோசித்திருப்பேன். அருள் கல்யாணம் அப்படின்னு சொல்லி எல்லோருமே அவனுக்காகப் பார்க்க பார்க்க நான் கொஞ்சமாச்சும் உன்ன பத்தியும் இவனை பத்தியும் யோசிச்சு இருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காது. எப்படியும் சமர் இந்த வீட்டுக்கு வரமாட்டான் என்ற தைரியத்தில் இருந்த எனக்கு முதல் நாளே குடும்பத்துடன் இந்த வீட்டுக்குள்ள வந்ததுதான் பெரிய இடியாக இருந்துச்சு.


அதுக்கு அப்புறம் நடந்த எதுவுமே எனக்கு சந்தோஷமும் கிடைக்கல வெற்றியும் கிடைக்கலா கடைசியா அவன் அழ வைக்கதான் விஷாவ இங்க வர வச்சேன் அப்பவும் அவளை நீங்க ரொம்ப கஷ்டப் படுத்த தான் செஞ்சீங்க. இதெல்லாம் பார்க்கும்போது உள்ளுக்குள்ள எனக்கு அவ்வளவு வெறி ஏறிச்சு அதோட பிரதி பலன் இவங்களைக் கொல்ல நெனச்சேன் அப்பவும் தப்பி முழுசா என் முன்னாடி வந்து நிக்கிறான் இங்க என்று வெறுப்பாக கூறினார்.


அவர் கூறிய அனைத்தையும் கேட்ட பெரியவர்கள் முகத்தில் குற்ற உணர்ச்சி தாண்டவமாடியது. அவர்கள் மனதிலும் 'இவன் ஒருத்தன் செஞ்சது எதையுமே நம்மை யாருமே கண்டுக்காம இருந்த காரணத்தினால் தான் இந்த அளவுக்கு சமர் கஷ்டப்பட்டான். கொஞ்சமாவது சொந்த புத்தியை நாம எல்லாரும் யோசித்து இருந்தா அவனோட இந்த நிலைமைக்கு நாமே காரணமாக இருந்திருக்க மாட்டோம்' என்று எண்ணி நொந்து போய் அமர்ந்து இருந்தனர்.


ராதிகா நேராக முருகன் முன்பு நின்று "நீங்க சொன்ன எல்லா விஷயத்தையுமே நீங்களே ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்களேன், அந்த பொண்ணு மேல இருந்த காதலுக்காக தான் இவ்வளவு விஷயத்தையும் பண்ணேன் அப்படின்னு சொல்றீங்க! ஆனா அத நீங்க உங்களுக்கு கல்யாணம் முடியறதுக்கு முன்னாடி வரைக்கும் பண்ணி இருந்தா அதுல ஒரு காரணம் இருக்கு, ஆனா என்ன கல்யாணம் பண்ணா அப்புறமும் இததான் பண்ணிக்கிட்டு இருந்து இருக்கீங்க! சரி அப்ப வாச்சும் உங்க காதலியை மறக்க முடியல அப்படின்னு சொல்லலாம். ஏன் கூட வாழ ஆரம்பித்த பிறகாவது அவனை நீங்க கஷ்டப்படுத்தாமல் இருந்து இருக்கலாம் தானே! அப்போ என் கூட வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன? இன்னும் உங்க காதலி உங்களை விட்டுட்டு போயிட்டா அப்படின்னு ஒவ்வொரு நிமிஷமும் அவன் கஷ்டப்படணும் அப்படின்னு நினைச்சிட்டு இருந்து இருக்கீங்க அப்படின்னு சொன்னா உண்மையாவே யார நெனச்சு என் கூட குடும்பம் நடத்தி வாழ்ந்தீங்க?" என்று நிறுத்தி நிதானமாக கேட்டார்.


முருகன் தன்னுடைய மனைவியிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய முகத்திலேயே தெரிந்தது. அதேசமயம் அவர் மனதில் 'அவர கேட்ட கேள்வி சரிதான் ராதிகா கூட கல்யாணம் முடிஞ்சு அவ கூட வாழ ஆரம்பிச்ச பிறகு என்னோட மனைவி அவ தான்! நான் காதலிச்ச பொண்ணு அவளுக்கென்று ஒரு குடும்பம் வந்து சந்தோஷமா தான் இருக்கா அதே மாதிரி நானும் கல்யாணம் பண்ணாமலோ இல்ல கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு இல்லாம வாழவில்லையே! ஒரு குடும்பமா சந்தோஷமா தானே வாழ்ந்துகிட்டு இருக்கேன். அப்ப நான் இவ்வளவு நாள் பண்ணதையெல்லாம் யோசிச்சு பார்த்தா நான் உண்மையாவே ராதிகா கூட நான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன?' என்று தனக்குத் தானே கேட்டவர் பதில் கூற முடியாமல் அதிர்ந்து நின்று விட்டார்.


அவருடைய அதிர்ந்த தோற்றத்தை சிறிது கூட பொருட்படுத்தாமல் மற்றவர்களும் தங்களுக்கு தோன்றிய கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். யாருடைய கேள்விக்கும் அவரிடம் சுத்தமாக பதில் இல்லை அதுபோலவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களை கூற அதிலிருந்தும் அவரால் யோசிக்கவே முடியவில்லை.


இவை அனைத்தையும் விட அவர் பெற்ற பிள்ளைகள் இருவருமே அவருக்கு தண்டனையாக ஒரு சில விஷயங்களை கூறினார். அதற்கு அவருடைய மனைவியும் எந்த வித மறுப்பும் கூறாமல் இருந்ததே அவர் இதயத்தில் ஈட்டி பாய்ந்தது போன்று வலித்தது.


அனைத்தையும் கேட்ட சமர் இறுதியாக தன் மனதில் தோன்றிய விஷயங்களை கூறினான்.

அப்படி என்னதான் நடந்தது என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
  • Like
Reactions: Maheswari