காதலின் விருத்தம் - 02
சிவரூபன் வீட்டில் அனைவரிடமும் அந்த செய்தியை கூற, அனைவருக்குமே மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. அதிலும் அவன் பாட்டி முத்தம்மா அவனைக் கட்டிக்கொண்டு அழுதே விட்டார்.
‘எங்கே தன் பேரனின் வாழ்க்கை இந்த தேயிலைக் காட்டிலேயே முடிந்து விடுமோ என்று எத்தனை பயந்திருப்பார். அவனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொடு என எத்தனைக் கடவுள்களை வேண்டியிருப்பார்.
இப்போது பேரனின் இந்த புது வேலை அவரை நிம்மதியடையச் செய்திருந்தது. இந்த வேலைக்காக அவன் உழைத்த உழைப்பு வீண் போகவில்லை என்று நினைத்துக் கொண்டார்.
“சாந்தா தம்பிக்கு பிடிச்ச மாதிரி இனிப்பு செய்மா..” என மருமகளுக்கு சொல்லிவிட்டு,
“சிவா.. ஓவிக்கும், கவிக்கும் கூப்பிட்டு சொல்லுப்பா.. ரெண்டு பேரையும் வரச் சொல்லு.. நீ போக முன்னாடி வந்தா நல்லா இருக்கும்…” என்றதும்,
“சரிங்க அப்பத்தா.. நான் கூப்பிட்டு சொல்றேன்.. நீங்க ரெண்டு பேரும் எப்படி இங்க தனியா.? சமாளிச்சிப்பீங்களா.?” என கலக்கமாக கேட்க,
“என்ன தம்பி இது? இத்தனை வருசமா இந்த ஊர்தான் எனக்கு சோறு போட்டுச்சு.. இங்க என்ன பயம்? சொந்தங்காரங்களை விட இங்க இருக்குற மக்களை நம்பி இருக்கலாம் தம்பி. நீ எங்களை நினைச்சு கவலைப்படாம போய்ட்டு வரனும். இதுக்காக நீ பட்ட கஷ்டம் எங்களுக்குத் தெரியாதா? ஹ்ம்ம் நீ ஆசைப்பட்டதைதான் அடைய முடியல. இந்த வேலையில நீ மேல மேல போகனும் சாமி. நம்மளை ஒதுக்கி வச்ச எல்லாரும் ‘ஆ’ன்னு வாய பொளந்து பார்க்கனும். முக்கியமா உன் அத்தைக்காரியும், சித்திக்காரியும்..” என்றவரின் குரலில் கோபம் ஏறத் தொடங்கியது.
“ம்ச் விடுங்க அத்த.. இதெல்லாம் பேசக்கூடாதுனு ஏற்கனவே சொல்லிருக்கு இல்ல..” என சாந்தா தன் மாமியாரை அதட்ட,
“ம்ச் என்னையவே மிரட்டுடி நீ.. ஹ்ம்ம் எப்படித்தான் இவ்ளோ நல்லவளா இருக்கியோ தெரில..” என முகத்தைத் திருப்பிக்கொண்டு கட்டிலில் அமர்ந்து, டிவி சீரியலில் கவனம் வைத்தார் முத்தம்மா.
இருவரையும் சிரிப்புடன் பார்த்த சிவரூபன் எதுவும் பேசாமல் அமைதியாகவே தன் லேப்டாப்பை எடுத்து அமர்ந்தான்.
அது பத்து வீடுகள் கொண்ட ஒரு லைன் வீடு. அதில் ஒரு வீட்டில்தான் சிவரூபனின் குடும்பமும் வசிக்கிறது. சிவரூபனோடு இது நாலாவது தலைமுறை. அவர்கள் அங்கு வசிப்பது.
அதில் கிச்சன்.. கிச்சனை ஒட்டி பாத்ரூம். ஒரு ஹால்.. வெளி வராண்டா.. கிச்சனுக்கு வெளியே பாத்ரூமை ஒட்டி கழிவறை. இப்படித்தான் அந்த பத்து வீடுகளும் இருக்கும். அந்த எஸ்டேட்டில் இருப்பது அனைத்தும் இப்படியான லைன் வீடுகள்தான்.
அங்குள்ள அனைவருமே வெவ்வேறு மதத்தினர்.. வெவ்வேறு இனத்தவர்.. அவர்களுக்குள் பிரிவினை இருக்காது. ஒருவருக்கொருவர் சொந்தங்களாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு வீட்டில் நல்லதோ கெட்டதோ அந்த எஸ்டேட் மக்கள் அனைவரும் அந்த வீட்டில்தான் இருப்பர். காரணம் அங்கு ஆட்சி செய்வது அன்பு.
இந்த அன்பும் நம்பிக்கையும் தான் அவர்களை ஒற்றைப் புள்ளியில் இனைத்து அவர்களை முன்னே நோக்கி செலுத்துகிறது.
சரவணனின் இறப்பிற்கு பிறகு, சொந்தங்கள் என்று இருந்த அவரின் உடன் பிறப்புகள் இருவரும் அவர் குடும்பத்தை விட்டு ஒரேடியாக ஒதுங்கிய பிறகு, இந்த எஸ்டேட் மக்கள்தான் அவர்களுக்கு அனைத்துமாகி போனார்கள்.
அடுத்து என்ன செய்ய என தெரியாமல் பதினேழு வயதில் அரும்பு மீசையுடன் அழ முடியாமல், தன் வீட்டுப் பெண்களை ஆறுதல் படுத்தி அரவணைக்கும் பெரும் பொறுப்போடு நின்ற நேரம், அவனை கைக் கொடுத்து தூக்கி விட்டது அந்த மக்கள்தான்.
சாந்தாவிற்கு அவ்வளவாக வெளி உலகம் தெரியாது. அனைத்தையும் கணவர் பார்த்துக் கொள்வார் என்று வாழ்ந்த ஒரு சாதாரண மனைவி.
கணவர் இறந்து இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் பயமுறுத்த, மகனைத்தான் மலை போல் நம்பினார் அவர். மகனின் எதிர்காலத் திட்டம் என்னவென்று தெரியும். அவனின் கனவு தெரியும்.
தங்களுக்காக அனைத்தையும் அந்த தேயிலைக் காட்டில் குழி தோண்டி புதைத்துவிட்டு, உரச் சாக்கை தூக்கிக்கொண்டு வேலைக்கு கிளம்பிய மகன் மீது இப்போதும் ஒரு மரியாதை உண்டு..
தந்தையின் பொறுப்பு தன்னிடம் வந்து விட்டதை அவனும் உணர்ந்திருந்தான். அதிலும் வீட்டில் நான்கு பெண்கள் எனும் போது அவன் தன் படிப்பையும், எதிர்காலத்தையும் தியாகம் செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.
“சிவா.. அக்காவுக்கு பேசிட்டேன். கவி இன்னும் வரல போல.. போன் எடுக்கல.. நீ கூப்பிட்டு பாரு..” என்ற சாந்தாவின் முகம் அழுதிருந்தாலும், சிரித்தபடியேதான் மகனுக்கும், மாமியாருக்கும் பாயாசத்தைக் கொடுத்தார்.
பின் “அத்த.. நான் லைன்ஸ்ல எல்லார் வீட்டுக்கும் கொடுத்துட்டு சொல்லிட்டு வந்துடுறேன். நீங்களும் சிவாவும் தலைவர் வீட்டுக்கு போய் சொல்லிட்டு வந்துடுங்க.. இப்போவே சொன்னாதான் நல்லா இருக்கும்..” என்றதும்,
“சரி ம்மா.. தம்பி குடிக்கட்டும். போய்ட்டு வரோம்..” என்ற முத்தம்மா பேரனைப் பார்க்க, அவன் பார்வையோ லேப்டாப்பிலேயே இருந்தது.
பொதுவாகவே சிவரூபன் அமைதிதான். தந்தையின் இறப்பு அவனை அமைதியாகவும், அழுத்தமாகவும், இறுக்கமாகவும் மாற்றியிருந்தது. இல்லை மாற்றி விட்டார்கள்..
“ஹ்ம்ம்..” என பெருமூச்சு விட, அந்த சத்தத்தில் திரும்பிய சிவா “என்ன அப்பத்தா.?” என புன்னகைக்க,
“ஒன்னுமில்ல ராசா.. குடிச்சிட்டா போய்ட்டு வந்துடலாம். அப்புறம் இருட்டிடும் பாரு..” என அவரும் சிரிக்க,
“ஹான் போலாம் அப்பத்தா.. கவிக்கு மெசேஜ் போட்டுருக்கேன். பார்த்துட்டு கூப்பிடுவா.. அக்காவை இங்க வந்து இருக்க சொல்லவா.. மாமாவும் இங்க இருந்து வேலைக்கு போகட்டும்.” என அவர்களுக்காக யோசித்து பேச,
“ராசா.. நீ எங்களை நினைச்சு பயப்படாத.. ஆறு மாசம் தானே.. அதுக்குள்ள கவிக்கும் வேலை கிடைச்சிடும். உனக்கும் எங்க வேலை போடுறாங்களோ அங்க நாங்க வந்துட போறோம். எதுக்கு நீ இவ்ளோ பயப்படுற.. இங்க வந்து ஓவி மாப்பிள்ளையோட இருக்குறது கஷ்டம் சாமி.. வந்துட்டு போகட்டும். அதெல்லாம் நீ இங்க இல்லன்னா ஓவி மாப்பிள்ளை வந்துட்டு போகத்தான் இருப்பார்.. நீ கலங்காத..” என ஆறுதல் சொல்லி எழ, சிவரூபனும் வர, இருவரும் அந்த தலைவரிடம் வேலை கிடைத்ததைப் பற்றி சொல்வதற்காக கிளம்பினர்.
—
“மாமா.. மாமா..” என ஓவியாவின் சத்தத்தில் “என்ன பாப்பா..?” என்றபடியே வந்தான் விமல்.
“அம்மா உங்ககிட்ட பேசனுமாம்..” என போனை அவனிடம் கொடுக்க,
“என்னக்கா..?” என்றதுதான் தெரியும், சாந்தாவின் அழுகை சத்தம் தான் கேட்டது விமலிற்கு.
“என்னக்கா.. என்னக்கா?” என பரிதவித்த விமல், “என்ன பாப்பா? ஏன் அம்மா அழுவுது.?” என மனைவியிடம் கேட்க, அப்போதுதான் கவனித்தான் ஓவியாவின் விழிகளும் கலங்கி இருப்பதை.
“என்னனு சொல்லுங்க பாப்பா.. மனுசனை கலங்கடிக்காம.?” என கடியவும்,
“நம்ம சிவாவுக்கு வேலை கிடைச்சிடுச்சு மாமா.. இன்னைக்குதான் ஆர்டர் வந்துச்சாம்..” என அழுகையும், சிரிப்புமாக ஓவியா கூற..
“ஹோ..” என்ற விமலிற்கும் அத்தனை சந்தோசம்.. “அக்கா நீ வை.. நாங்க கிளம்பி வரோம். நைட்டுக்கு எதுவும் செய்யாத.. நான் எல்லாருக்கும் வாங்கிட்டு வரேன்..” என வைத்தவன், மகிழ்ச்சியில் மனைவியைக் கட்டிக்கொண்டான்.
“ரொம்ப.. ரொம்ப சந்தோசமா இருக்கு ஓவி.. சிவா நினைச்சதை சாதிச்சிட்டான். கிளம்பு.. கிளம்பு போகலாம். நான் தம்பியை ரெடி பண்றேன்..” என மகனிடம் சென்றான் சந்தோசமாக.
தன் கல்லூரியில் இருந்து வெளியே வந்த காவ்யா அவசரமாக தன் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தாள்.
‘இன்னும் பத்து நிமிசம் இருக்கு கவி.. பொறுமையா போ..’ என மனம் கூற, ‘பரவால்ல.. முன்னாடியே போயிட்டா கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகலாம்.. அவசரமா போனா.. எல்லாமே சொதப்பல் ஆகிடும்..’ என மனதிற்கு பதில் சொன்னவள், ஐந்தே நிமிடத்தில் அந்த கேக் ஷாப்பிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும் காவலாளியில் இருந்து உள்ளே இருக்கும் அனைவரும் புன்னகை செய்ய, அனைவருக்கும் அவளும் புன்னைகைத்து பில்லிங்க் செக்சனில் நிற்க,
“ஓடிக்கோ.. ஓடிக்கோ.. ஆதியம் பக்ஷனம் கழிச்சிட்டு வா.. அப்போல் மாத்ரமே இவிடே ஒரு ஸ்தானமுண்டு நினக்கு..” என அங்கிருந்தவர் சிரித்தபடியே கூற,
“சேட்டா…” என முறைத்தாலும், அவள் சாப்பிடாமல் அவர் விடமாட்டார் என தெரிய, பேக்கிங்க் ஏரியாக்குள் நுழைந்தாள்.
இவளைப் பார்த்ததும் கேக்கும், டீயும் வந்துவிட, “சேட்டா கட்டஞ்சாயா மதி..” என்றுவிட்டு கேக்கை சாப்பிட ஆரம்பித்தாள்.
“எந்தா குட்டி நீ..” என சலித்தபடியே டீயை எடுத்துவிட்டு, ப்ளாக் டீயை கொண்டு வைத்து போனார் ஒரு பெரியவர்.
எதற்கும் பதில் சொல்லாமல் வேகமாக சாப்பிட்டு பில்லிங்க் செல்ல, அங்கிருந்தவரும் அதுவரை பார்த்த கணக்குகளை அவளிடம் ஒப்படைத்து விட்டு “மோலே ஏழரைக்கு கிளம்பனும், ஞான் விழிச்சு கேட்கும்.. கட அடைங்குந்து வரே நினக்கு இவிட ஜோலி இல்ல..” என கண்டிப்பாக கூறிவிட்டு செல்ல, அமைதியாக கேட்டுக்கொண்டாள் காவ்யா.
அதன் பிறகு ஏழரை வரைக்குமே அவளுக்கு நிமிர கூட நேரமில்லை. வேலை முடித்து கிளம்பும் போதுதான் தாயிடமிருந்து வந்த அழைப்பை பார்த்தாள்.
‘எப்போதும் எட்டு மணிக்குத்தானே அழைப்பார்கள், அப்பாத்தாவுக்கு எதுவுமா.?’ என பயத்துடனே போனை பார்க்க, சிவாவிடமிருந்து ‘ஃப்ரீ ஆனதும் கால் பண்ணு கவி’ என மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் தாமதிக்காமல் உடனே அழைத்தாள் பெண்.
“என்ன அண்ணா..?” பதட்டமாகவே கேட்க,
“ஹேய் ஒன்னுமில்ல கவி..” என தங்கையை சமாதானம் செய்துவிட்டு, தன் வேலையை பற்றி கூற, “வாவ் ண்ணா.. நீ சாதிச்சிட்ட.. சாதிச்சிட்ட ண்ணா…” என்றவளுக்கும் கண்கள் கலங்கும் போல் இருந்தது.
“அதெல்லாம் விடு டா.. நீ எப்போ வர. உனக்கு லீவ் இருக்கா.. நான் நெக்ஸ்ட் சண்டே கிளம்பனும். அதுக்கு முன்னாடி நீயும் அக்காவும் வந்துடுங்க.. அம்மா உன்னை வரத்தான் சொன்னாங்க. நீ அம்மாவுக்கு கூப்பிட்டு பேசு. நானும் அப்பத்தாவும் தலைவர் வீட்டுக்கு வந்தோம்..” என்று பேசி வைத்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த தலைவர் பிரகாஷோ “எங்க அப்பா எப்பவும் சொல்லிட்டே இருப்பார் சிவா.. புள்ள வளர்த்தா சரவணன் மாதிரி வளர்க்கனும்னு.. அப்போ எனக்கு கோபம் தான் வரும். ஆனா இப்போ உன்னை பார்த்து பழகுறதுனால சொல்றேன். எங்கப்பா சொன்னது ரொம்ப சரி.. உங்கப்பா உங்க மூனு பேரையும் அருமையா வளர்த்துருக்கார்.” என உள்ளார்ந்த அன்போடு கூற,
“ண்ணா.. என்ன இது.?” என்ற சிவாவும் லேசான புன்னைகயுடன் நின்றான்.
“என் பையன மாதிரி யாரும் இருக்கவும் மாட்டாங்க. அவனை மாதிரி யாரும் புள்ளைய வளர்க்கவும் மாட்டாங்க. அவன் வளர்ப்புத்தான் எங்களை எங்கேயும் கைவிடாம காப்பாத்தி வச்சிருக்கு பிரகாஷு..” என்ற அப்பத்தாவின் குரல் கரகரப்பானது.
“ம்ச் அப்பத்தா..” என அவரை அதட்டிய சிவா “ண்ணா.. கொஞ்சம் ரெண்டு பேரையும் பார்த்துக்கோங்க.. தனியா இருக்காங்க. இவங்க கவலைத்தான் எனக்கு..” என்றதும்,
“நாங்க இத்தனை பேர் இருக்கோம்ல சிவா பார்த்துக்க மாட்டோமா.. நீ தைரியமா போய்ட்டு வா.. நாளைக்கு ஆஃபிஸ் வரைக்கும் போய் இந்த ஆர்டரை மேனஜர்கிட்ட காமிச்சிட்டு லாங்க் லீவ் அப்ளை பண்ணிக்கோ.. அப்போதான் இந்த வேலை உனக்கு உதவும்…” என்றான் பிரகாஷ்.
“நானும் அப்படித்தான் நினைச்சேன் ண்ணா.. இங்க லாங்க் லீவ் போட்டுட்டு, அங்க ஒர்க் பார்த்துட்டு இங்க லெட்டர் கொடுத்துக்கலாம்ல.. எனக்கும் அங்க குவார்டஸ் எல்லாம் எப்படின்னு தெரில. போய்தான் எல்லாம் பார்க்கனும்..” என்றதும்,
“இங்க பாரு சிவா.. இதெல்லாம் ஒன்னுமே இல்ல. அம்மாவுக்கு இன்னும் செர்விஸ் இருக்கு. நீ பயப்படாம போய்ட்டு வா.. அவங்க ரெண்டு பேரையும் நாங்க பார்த்துக்கிறோம்..” என்றதும், பாட்டியும் பேரனும் விடைபெற்று வெளியில் வர, அதே நேரம் அர்ஜூனிடமிருந்து சிவாவுக்கு போன் வர, எடுக்கவா வேண்டாமா என யோசித்தபடியே நடக்க,
அதை கவனித்த அப்பத்தா “என்ன தம்பி.?” என்றதும்,
“அர்ஜூன் மாமா கூப்பிடுறாங்க..?” என்றான் யோசனையாக.
“எடுத்து பேசு..” என்றவரிடம் மறுக்க முடியாமல் “மாமா..” என்றான் சிவா.
“கங்க்ராட்ஸ் சிவா.. ரொம்ப சந்தோசமா இருக்கு.. எப்போ ஜாயின் பண்ணனும்.. எப்படி போற, ட்ரைனா ஃப்ளைட்டா.?” என வரிசையாக கேள்விகளை அடுக்க,
“யார் மாமா சொன்னது.?” என தவிப்பாக கேட்க,
“விமல் அண்ணா நம்ம குருப்ல போட்டிருந்தார் டா. நீ பார்க்கலயா..? யாருக்கும் சொல்ல வேண்டாம் சொன்னியா.?” என்ற அர்ஜூனுக்கு குரல் இறங்கிப் போனது.
“ச்சே ச்சே இல்ல மாமா. நானே கூப்பிட்டு சொல்லனும்னு இருந்தேன். அதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரிஞ்சது, கொஞ்சம் குற்றவுணர்ச்சியா இருந்தது.. அதுதான்..” எனவும்,
“டேய்.. நீ இவ்ளோ நல்லவனா இருக்காதே.. எனக்கு சொல்லனும்னு எதுவும் இல்ல. நீ ஃப்ரீ ஆகிட்டு சொல்லு.. நான் பேசுறேன்.. இப்போ ட்ராஃபிக்ல இருக்கேன்..” என வைத்துவிட, இப்போதுதான் இன்னும் தவிப்பாகிப் போனது சிவாவுக்கு.
குருப்பில் என்றால், அவளும் பார்த்திருப்பாளே, நான் சொல்லவில்லை என்று வருந்தியிருப்பாளே, தவித்திருப்பாளே’ என தன்னவளின் நிலையை எண்ணி வருந்தியபடி வீடு வர, அவன் எண்ணத்தி நாயகி, அவன் எண்ணியதைப் போலவே அந்த செய்தியைப் பார்த்து மகிழ்ந்து, அழுது, சிரித்து, பின் தவித்து என்ற உணர்வுகளோடு போராடிக் கொண்டிருந்தாள் சிவாவின் சக்தி.
சிவரூபன் வீட்டில் அனைவரிடமும் அந்த செய்தியை கூற, அனைவருக்குமே மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. அதிலும் அவன் பாட்டி முத்தம்மா அவனைக் கட்டிக்கொண்டு அழுதே விட்டார்.
‘எங்கே தன் பேரனின் வாழ்க்கை இந்த தேயிலைக் காட்டிலேயே முடிந்து விடுமோ என்று எத்தனை பயந்திருப்பார். அவனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொடு என எத்தனைக் கடவுள்களை வேண்டியிருப்பார்.
இப்போது பேரனின் இந்த புது வேலை அவரை நிம்மதியடையச் செய்திருந்தது. இந்த வேலைக்காக அவன் உழைத்த உழைப்பு வீண் போகவில்லை என்று நினைத்துக் கொண்டார்.
“சாந்தா தம்பிக்கு பிடிச்ச மாதிரி இனிப்பு செய்மா..” என மருமகளுக்கு சொல்லிவிட்டு,
“சிவா.. ஓவிக்கும், கவிக்கும் கூப்பிட்டு சொல்லுப்பா.. ரெண்டு பேரையும் வரச் சொல்லு.. நீ போக முன்னாடி வந்தா நல்லா இருக்கும்…” என்றதும்,
“சரிங்க அப்பத்தா.. நான் கூப்பிட்டு சொல்றேன்.. நீங்க ரெண்டு பேரும் எப்படி இங்க தனியா.? சமாளிச்சிப்பீங்களா.?” என கலக்கமாக கேட்க,
“என்ன தம்பி இது? இத்தனை வருசமா இந்த ஊர்தான் எனக்கு சோறு போட்டுச்சு.. இங்க என்ன பயம்? சொந்தங்காரங்களை விட இங்க இருக்குற மக்களை நம்பி இருக்கலாம் தம்பி. நீ எங்களை நினைச்சு கவலைப்படாம போய்ட்டு வரனும். இதுக்காக நீ பட்ட கஷ்டம் எங்களுக்குத் தெரியாதா? ஹ்ம்ம் நீ ஆசைப்பட்டதைதான் அடைய முடியல. இந்த வேலையில நீ மேல மேல போகனும் சாமி. நம்மளை ஒதுக்கி வச்ச எல்லாரும் ‘ஆ’ன்னு வாய பொளந்து பார்க்கனும். முக்கியமா உன் அத்தைக்காரியும், சித்திக்காரியும்..” என்றவரின் குரலில் கோபம் ஏறத் தொடங்கியது.
“ம்ச் விடுங்க அத்த.. இதெல்லாம் பேசக்கூடாதுனு ஏற்கனவே சொல்லிருக்கு இல்ல..” என சாந்தா தன் மாமியாரை அதட்ட,
“ம்ச் என்னையவே மிரட்டுடி நீ.. ஹ்ம்ம் எப்படித்தான் இவ்ளோ நல்லவளா இருக்கியோ தெரில..” என முகத்தைத் திருப்பிக்கொண்டு கட்டிலில் அமர்ந்து, டிவி சீரியலில் கவனம் வைத்தார் முத்தம்மா.
இருவரையும் சிரிப்புடன் பார்த்த சிவரூபன் எதுவும் பேசாமல் அமைதியாகவே தன் லேப்டாப்பை எடுத்து அமர்ந்தான்.
அது பத்து வீடுகள் கொண்ட ஒரு லைன் வீடு. அதில் ஒரு வீட்டில்தான் சிவரூபனின் குடும்பமும் வசிக்கிறது. சிவரூபனோடு இது நாலாவது தலைமுறை. அவர்கள் அங்கு வசிப்பது.
அதில் கிச்சன்.. கிச்சனை ஒட்டி பாத்ரூம். ஒரு ஹால்.. வெளி வராண்டா.. கிச்சனுக்கு வெளியே பாத்ரூமை ஒட்டி கழிவறை. இப்படித்தான் அந்த பத்து வீடுகளும் இருக்கும். அந்த எஸ்டேட்டில் இருப்பது அனைத்தும் இப்படியான லைன் வீடுகள்தான்.
அங்குள்ள அனைவருமே வெவ்வேறு மதத்தினர்.. வெவ்வேறு இனத்தவர்.. அவர்களுக்குள் பிரிவினை இருக்காது. ஒருவருக்கொருவர் சொந்தங்களாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு வீட்டில் நல்லதோ கெட்டதோ அந்த எஸ்டேட் மக்கள் அனைவரும் அந்த வீட்டில்தான் இருப்பர். காரணம் அங்கு ஆட்சி செய்வது அன்பு.
இந்த அன்பும் நம்பிக்கையும் தான் அவர்களை ஒற்றைப் புள்ளியில் இனைத்து அவர்களை முன்னே நோக்கி செலுத்துகிறது.
சரவணனின் இறப்பிற்கு பிறகு, சொந்தங்கள் என்று இருந்த அவரின் உடன் பிறப்புகள் இருவரும் அவர் குடும்பத்தை விட்டு ஒரேடியாக ஒதுங்கிய பிறகு, இந்த எஸ்டேட் மக்கள்தான் அவர்களுக்கு அனைத்துமாகி போனார்கள்.
அடுத்து என்ன செய்ய என தெரியாமல் பதினேழு வயதில் அரும்பு மீசையுடன் அழ முடியாமல், தன் வீட்டுப் பெண்களை ஆறுதல் படுத்தி அரவணைக்கும் பெரும் பொறுப்போடு நின்ற நேரம், அவனை கைக் கொடுத்து தூக்கி விட்டது அந்த மக்கள்தான்.
சாந்தாவிற்கு அவ்வளவாக வெளி உலகம் தெரியாது. அனைத்தையும் கணவர் பார்த்துக் கொள்வார் என்று வாழ்ந்த ஒரு சாதாரண மனைவி.
கணவர் இறந்து இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் பயமுறுத்த, மகனைத்தான் மலை போல் நம்பினார் அவர். மகனின் எதிர்காலத் திட்டம் என்னவென்று தெரியும். அவனின் கனவு தெரியும்.
தங்களுக்காக அனைத்தையும் அந்த தேயிலைக் காட்டில் குழி தோண்டி புதைத்துவிட்டு, உரச் சாக்கை தூக்கிக்கொண்டு வேலைக்கு கிளம்பிய மகன் மீது இப்போதும் ஒரு மரியாதை உண்டு..
தந்தையின் பொறுப்பு தன்னிடம் வந்து விட்டதை அவனும் உணர்ந்திருந்தான். அதிலும் வீட்டில் நான்கு பெண்கள் எனும் போது அவன் தன் படிப்பையும், எதிர்காலத்தையும் தியாகம் செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.
“சிவா.. அக்காவுக்கு பேசிட்டேன். கவி இன்னும் வரல போல.. போன் எடுக்கல.. நீ கூப்பிட்டு பாரு..” என்ற சாந்தாவின் முகம் அழுதிருந்தாலும், சிரித்தபடியேதான் மகனுக்கும், மாமியாருக்கும் பாயாசத்தைக் கொடுத்தார்.
பின் “அத்த.. நான் லைன்ஸ்ல எல்லார் வீட்டுக்கும் கொடுத்துட்டு சொல்லிட்டு வந்துடுறேன். நீங்களும் சிவாவும் தலைவர் வீட்டுக்கு போய் சொல்லிட்டு வந்துடுங்க.. இப்போவே சொன்னாதான் நல்லா இருக்கும்..” என்றதும்,
“சரி ம்மா.. தம்பி குடிக்கட்டும். போய்ட்டு வரோம்..” என்ற முத்தம்மா பேரனைப் பார்க்க, அவன் பார்வையோ லேப்டாப்பிலேயே இருந்தது.
பொதுவாகவே சிவரூபன் அமைதிதான். தந்தையின் இறப்பு அவனை அமைதியாகவும், அழுத்தமாகவும், இறுக்கமாகவும் மாற்றியிருந்தது. இல்லை மாற்றி விட்டார்கள்..
“ஹ்ம்ம்..” என பெருமூச்சு விட, அந்த சத்தத்தில் திரும்பிய சிவா “என்ன அப்பத்தா.?” என புன்னகைக்க,
“ஒன்னுமில்ல ராசா.. குடிச்சிட்டா போய்ட்டு வந்துடலாம். அப்புறம் இருட்டிடும் பாரு..” என அவரும் சிரிக்க,
“ஹான் போலாம் அப்பத்தா.. கவிக்கு மெசேஜ் போட்டுருக்கேன். பார்த்துட்டு கூப்பிடுவா.. அக்காவை இங்க வந்து இருக்க சொல்லவா.. மாமாவும் இங்க இருந்து வேலைக்கு போகட்டும்.” என அவர்களுக்காக யோசித்து பேச,
“ராசா.. நீ எங்களை நினைச்சு பயப்படாத.. ஆறு மாசம் தானே.. அதுக்குள்ள கவிக்கும் வேலை கிடைச்சிடும். உனக்கும் எங்க வேலை போடுறாங்களோ அங்க நாங்க வந்துட போறோம். எதுக்கு நீ இவ்ளோ பயப்படுற.. இங்க வந்து ஓவி மாப்பிள்ளையோட இருக்குறது கஷ்டம் சாமி.. வந்துட்டு போகட்டும். அதெல்லாம் நீ இங்க இல்லன்னா ஓவி மாப்பிள்ளை வந்துட்டு போகத்தான் இருப்பார்.. நீ கலங்காத..” என ஆறுதல் சொல்லி எழ, சிவரூபனும் வர, இருவரும் அந்த தலைவரிடம் வேலை கிடைத்ததைப் பற்றி சொல்வதற்காக கிளம்பினர்.
—
“மாமா.. மாமா..” என ஓவியாவின் சத்தத்தில் “என்ன பாப்பா..?” என்றபடியே வந்தான் விமல்.
“அம்மா உங்ககிட்ட பேசனுமாம்..” என போனை அவனிடம் கொடுக்க,
“என்னக்கா..?” என்றதுதான் தெரியும், சாந்தாவின் அழுகை சத்தம் தான் கேட்டது விமலிற்கு.
“என்னக்கா.. என்னக்கா?” என பரிதவித்த விமல், “என்ன பாப்பா? ஏன் அம்மா அழுவுது.?” என மனைவியிடம் கேட்க, அப்போதுதான் கவனித்தான் ஓவியாவின் விழிகளும் கலங்கி இருப்பதை.
“என்னனு சொல்லுங்க பாப்பா.. மனுசனை கலங்கடிக்காம.?” என கடியவும்,
“நம்ம சிவாவுக்கு வேலை கிடைச்சிடுச்சு மாமா.. இன்னைக்குதான் ஆர்டர் வந்துச்சாம்..” என அழுகையும், சிரிப்புமாக ஓவியா கூற..
“ஹோ..” என்ற விமலிற்கும் அத்தனை சந்தோசம்.. “அக்கா நீ வை.. நாங்க கிளம்பி வரோம். நைட்டுக்கு எதுவும் செய்யாத.. நான் எல்லாருக்கும் வாங்கிட்டு வரேன்..” என வைத்தவன், மகிழ்ச்சியில் மனைவியைக் கட்டிக்கொண்டான்.
“ரொம்ப.. ரொம்ப சந்தோசமா இருக்கு ஓவி.. சிவா நினைச்சதை சாதிச்சிட்டான். கிளம்பு.. கிளம்பு போகலாம். நான் தம்பியை ரெடி பண்றேன்..” என மகனிடம் சென்றான் சந்தோசமாக.
தன் கல்லூரியில் இருந்து வெளியே வந்த காவ்யா அவசரமாக தன் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தாள்.
‘இன்னும் பத்து நிமிசம் இருக்கு கவி.. பொறுமையா போ..’ என மனம் கூற, ‘பரவால்ல.. முன்னாடியே போயிட்டா கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகலாம்.. அவசரமா போனா.. எல்லாமே சொதப்பல் ஆகிடும்..’ என மனதிற்கு பதில் சொன்னவள், ஐந்தே நிமிடத்தில் அந்த கேக் ஷாப்பிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும் காவலாளியில் இருந்து உள்ளே இருக்கும் அனைவரும் புன்னகை செய்ய, அனைவருக்கும் அவளும் புன்னைகைத்து பில்லிங்க் செக்சனில் நிற்க,
“ஓடிக்கோ.. ஓடிக்கோ.. ஆதியம் பக்ஷனம் கழிச்சிட்டு வா.. அப்போல் மாத்ரமே இவிடே ஒரு ஸ்தானமுண்டு நினக்கு..” என அங்கிருந்தவர் சிரித்தபடியே கூற,
“சேட்டா…” என முறைத்தாலும், அவள் சாப்பிடாமல் அவர் விடமாட்டார் என தெரிய, பேக்கிங்க் ஏரியாக்குள் நுழைந்தாள்.
இவளைப் பார்த்ததும் கேக்கும், டீயும் வந்துவிட, “சேட்டா கட்டஞ்சாயா மதி..” என்றுவிட்டு கேக்கை சாப்பிட ஆரம்பித்தாள்.
“எந்தா குட்டி நீ..” என சலித்தபடியே டீயை எடுத்துவிட்டு, ப்ளாக் டீயை கொண்டு வைத்து போனார் ஒரு பெரியவர்.
எதற்கும் பதில் சொல்லாமல் வேகமாக சாப்பிட்டு பில்லிங்க் செல்ல, அங்கிருந்தவரும் அதுவரை பார்த்த கணக்குகளை அவளிடம் ஒப்படைத்து விட்டு “மோலே ஏழரைக்கு கிளம்பனும், ஞான் விழிச்சு கேட்கும்.. கட அடைங்குந்து வரே நினக்கு இவிட ஜோலி இல்ல..” என கண்டிப்பாக கூறிவிட்டு செல்ல, அமைதியாக கேட்டுக்கொண்டாள் காவ்யா.
அதன் பிறகு ஏழரை வரைக்குமே அவளுக்கு நிமிர கூட நேரமில்லை. வேலை முடித்து கிளம்பும் போதுதான் தாயிடமிருந்து வந்த அழைப்பை பார்த்தாள்.
‘எப்போதும் எட்டு மணிக்குத்தானே அழைப்பார்கள், அப்பாத்தாவுக்கு எதுவுமா.?’ என பயத்துடனே போனை பார்க்க, சிவாவிடமிருந்து ‘ஃப்ரீ ஆனதும் கால் பண்ணு கவி’ என மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் தாமதிக்காமல் உடனே அழைத்தாள் பெண்.
“என்ன அண்ணா..?” பதட்டமாகவே கேட்க,
“ஹேய் ஒன்னுமில்ல கவி..” என தங்கையை சமாதானம் செய்துவிட்டு, தன் வேலையை பற்றி கூற, “வாவ் ண்ணா.. நீ சாதிச்சிட்ட.. சாதிச்சிட்ட ண்ணா…” என்றவளுக்கும் கண்கள் கலங்கும் போல் இருந்தது.
“அதெல்லாம் விடு டா.. நீ எப்போ வர. உனக்கு லீவ் இருக்கா.. நான் நெக்ஸ்ட் சண்டே கிளம்பனும். அதுக்கு முன்னாடி நீயும் அக்காவும் வந்துடுங்க.. அம்மா உன்னை வரத்தான் சொன்னாங்க. நீ அம்மாவுக்கு கூப்பிட்டு பேசு. நானும் அப்பத்தாவும் தலைவர் வீட்டுக்கு வந்தோம்..” என்று பேசி வைத்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த தலைவர் பிரகாஷோ “எங்க அப்பா எப்பவும் சொல்லிட்டே இருப்பார் சிவா.. புள்ள வளர்த்தா சரவணன் மாதிரி வளர்க்கனும்னு.. அப்போ எனக்கு கோபம் தான் வரும். ஆனா இப்போ உன்னை பார்த்து பழகுறதுனால சொல்றேன். எங்கப்பா சொன்னது ரொம்ப சரி.. உங்கப்பா உங்க மூனு பேரையும் அருமையா வளர்த்துருக்கார்.” என உள்ளார்ந்த அன்போடு கூற,
“ண்ணா.. என்ன இது.?” என்ற சிவாவும் லேசான புன்னைகயுடன் நின்றான்.
“என் பையன மாதிரி யாரும் இருக்கவும் மாட்டாங்க. அவனை மாதிரி யாரும் புள்ளைய வளர்க்கவும் மாட்டாங்க. அவன் வளர்ப்புத்தான் எங்களை எங்கேயும் கைவிடாம காப்பாத்தி வச்சிருக்கு பிரகாஷு..” என்ற அப்பத்தாவின் குரல் கரகரப்பானது.
“ம்ச் அப்பத்தா..” என அவரை அதட்டிய சிவா “ண்ணா.. கொஞ்சம் ரெண்டு பேரையும் பார்த்துக்கோங்க.. தனியா இருக்காங்க. இவங்க கவலைத்தான் எனக்கு..” என்றதும்,
“நாங்க இத்தனை பேர் இருக்கோம்ல சிவா பார்த்துக்க மாட்டோமா.. நீ தைரியமா போய்ட்டு வா.. நாளைக்கு ஆஃபிஸ் வரைக்கும் போய் இந்த ஆர்டரை மேனஜர்கிட்ட காமிச்சிட்டு லாங்க் லீவ் அப்ளை பண்ணிக்கோ.. அப்போதான் இந்த வேலை உனக்கு உதவும்…” என்றான் பிரகாஷ்.
“நானும் அப்படித்தான் நினைச்சேன் ண்ணா.. இங்க லாங்க் லீவ் போட்டுட்டு, அங்க ஒர்க் பார்த்துட்டு இங்க லெட்டர் கொடுத்துக்கலாம்ல.. எனக்கும் அங்க குவார்டஸ் எல்லாம் எப்படின்னு தெரில. போய்தான் எல்லாம் பார்க்கனும்..” என்றதும்,
“இங்க பாரு சிவா.. இதெல்லாம் ஒன்னுமே இல்ல. அம்மாவுக்கு இன்னும் செர்விஸ் இருக்கு. நீ பயப்படாம போய்ட்டு வா.. அவங்க ரெண்டு பேரையும் நாங்க பார்த்துக்கிறோம்..” என்றதும், பாட்டியும் பேரனும் விடைபெற்று வெளியில் வர, அதே நேரம் அர்ஜூனிடமிருந்து சிவாவுக்கு போன் வர, எடுக்கவா வேண்டாமா என யோசித்தபடியே நடக்க,
அதை கவனித்த அப்பத்தா “என்ன தம்பி.?” என்றதும்,
“அர்ஜூன் மாமா கூப்பிடுறாங்க..?” என்றான் யோசனையாக.
“எடுத்து பேசு..” என்றவரிடம் மறுக்க முடியாமல் “மாமா..” என்றான் சிவா.
“கங்க்ராட்ஸ் சிவா.. ரொம்ப சந்தோசமா இருக்கு.. எப்போ ஜாயின் பண்ணனும்.. எப்படி போற, ட்ரைனா ஃப்ளைட்டா.?” என வரிசையாக கேள்விகளை அடுக்க,
“யார் மாமா சொன்னது.?” என தவிப்பாக கேட்க,
“விமல் அண்ணா நம்ம குருப்ல போட்டிருந்தார் டா. நீ பார்க்கலயா..? யாருக்கும் சொல்ல வேண்டாம் சொன்னியா.?” என்ற அர்ஜூனுக்கு குரல் இறங்கிப் போனது.
“ச்சே ச்சே இல்ல மாமா. நானே கூப்பிட்டு சொல்லனும்னு இருந்தேன். அதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரிஞ்சது, கொஞ்சம் குற்றவுணர்ச்சியா இருந்தது.. அதுதான்..” எனவும்,
“டேய்.. நீ இவ்ளோ நல்லவனா இருக்காதே.. எனக்கு சொல்லனும்னு எதுவும் இல்ல. நீ ஃப்ரீ ஆகிட்டு சொல்லு.. நான் பேசுறேன்.. இப்போ ட்ராஃபிக்ல இருக்கேன்..” என வைத்துவிட, இப்போதுதான் இன்னும் தவிப்பாகிப் போனது சிவாவுக்கு.
குருப்பில் என்றால், அவளும் பார்த்திருப்பாளே, நான் சொல்லவில்லை என்று வருந்தியிருப்பாளே, தவித்திருப்பாளே’ என தன்னவளின் நிலையை எண்ணி வருந்தியபடி வீடு வர, அவன் எண்ணத்தி நாயகி, அவன் எண்ணியதைப் போலவே அந்த செய்தியைப் பார்த்து மகிழ்ந்து, அழுது, சிரித்து, பின் தவித்து என்ற உணர்வுகளோடு போராடிக் கொண்டிருந்தாள் சிவாவின் சக்தி.