காதல் விருத்தம் - 03
பேரனோடு வீட்டிற்கு நடந்து வரும் முத்தம்மாவிற்கு, அவர்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் கண் முன்னால் வந்து போனது.
முத்தம்மா - குருசாமி தம்பதியருக்கு இரண்டு ஆண்கள், ஒரே பெண்.. இவர்களுக்கு சொந்த ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் சிறு கிராமம் சோழனூர்.
இவர்களின் முன்னோர் மூன்று தலைமுறைக்கு முன்பே வால்பாறையில் டீ எஸ்டேட்டில் கூலி வேலைக்கு வந்தவர்கள். அவர்கள் தொட்டு இப்போது சிவ ரூபன் வரை அவர்களின் வாசஸ்தலம் அங்குதான்.
விசேங்களுக்கும், விடுமுறைகளுக்கு மட்டுமே சோழனூர் வந்து சென்றனர்.
மூத்தவள்தான் லட்சுமி, அவள் கணவர் செல்வராஜ். ஆனைமலை அரசு பள்ளியில் தலைமயாசிரியர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் அர்ஜுன், இவனுக்கு ஐந்தாண்டுகள் கழித்து பிறந்தவள் சக்தி யாழினி.
இரண்டாவது சரவணன் அவர் மனைவி சாந்தா.. மூன்று பிள்ளைகள். மூத்தவள் ஓவியா, அடுத்து சிவரூபன், மூன்றாவது காவ்யா.
மூன்றாவது கார்த்திகேயன், அவர் மனைவி அகிலா. இவர்கள் கோயம்புத்தூரில் இருக்கிறார்கள். கார்த்திகேயேன் சிப்காட்டில் மேனேஜர். நல்ல வேலை. வருமானமும் அதிக அளவில்தான்.
அவர்களுக்கு ஐஸ்வர்யா- சுஷ்மிதா என இரட்டை பெண்கள். இருவரும் இப்போது பள்ளிப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கிறார்கள்.
குருசாமியின் அப்பாதான் முதலில் சொத்து என்று வாங்க ஆரம்பித்தது. அவருக்கு மூன்று ஆண்கள் என்பதால் குருசாமிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பங்கு கிடைக்கவில்லை.
அதனால் குருசாமி தன் ஆண் பிள்ளைகள் இருவருக்கும் சரி சமமான சொத்து, அதோடு பெயர் சொல்லும் அளவிற்காகவேனும் இருக்க வேண்டும் என மிகவும் சிக்கனமாக வாழ்க்கையை நடத்தி, அப்போது அவர் காலத்தில் பத்து ஏக்கரில் சொத்து வாங்கினார்.
அதில் ஆண் பிள்ளைகள் இருவருக்கும் தலா ஐந்து ஏக்கர் என்று முடித்துவிட்டார். அப்போது பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்பதால், அவருக்கு அதற்கு சமமான அளவில் நகையும் சீரும் செய்திருந்தார் குருசாமி. மற்றொரு காரணம் மாப்பிள்ளை அரசு வேலையில் இருந்தார். அதனால் மகளை நல்ல முறையில் புகுந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சரவணனின் நிலம் ஐந்து ஏக்கரை குத்தகைக்கு விட்டே செய்தார்.
அப்போது மகன்கள் இருவருக்குமே திருமணம் செய்யவில்லை. அதனால் மகளுக்கு நல்ல முறையிலேயே செய்தார். மகன்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் சீக்கிரமாக நிலத்தை திருப்பி விடலாம் என்ற அவர் நினைத்திருந்தார்.
கார்த்திகேயேன் வேலை செய்து கொண்டே படிக்கிறேன் என ஐடிஐ-யில் சேர்ந்து விட்டாலும், வேலை என்று எதற்கும் போகவில்லை. அதோடு சரவணனும் படிக்கும் போது வேலைக்கெல்லாம் வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.
அடுத்து லட்சுமியில் வளைகாப்பு, குழந்தை பிறப்பு, காதனி விழா என அடுத்தடுத்து விழாக்கள் வர, அவர்கள் அந்த நிலத்திற்காக பணம் சேர்க்க முடியாமலே போனது.
இப்படியே இரண்டாண்டுகள் கழிய, கார்த்திகேயன் படிக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் என கல்லூரியில் இருந்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட, குருசாமி திகைத்து போனார்.
தன் மகனா இப்படி என அவர் அதிர்ச்சியில் சின்ன மகனைப் போட்டு அடி வெளுத்துவிட்டார். அதோடு எங்கேயும் போக வேண்டாம் என டீ ஃபேக்டரியில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
இந்த பனியிலும், குளிரிலும் இருந்து தப்பிப்பதற்காகத்தான் படிப்பு வரவில்லை என்றாலும் படிப்பதாக சொல்லி கோவை சென்றார் கார்த்திகேயன். இப்பொது மீண்டும் அதே மழையிலும், பனியிலும் கஷ்டப்படுவதா என நொந்து போனார்.
தன் தாயிடம் இதற்காக புலம்பிக்கொண்டே இருந்தார். ‘எனக்கு தெரிஞ்சவங்க கூட இருந்து வேலை செய்றேன். படிக்கலன்னாலும் பர்வால்ல. படிச்ச வரைக்கும் தெரிஞ்ச வேலைக்கு போறேன். என்னைய அனுப்புங்க..’ என வீட்டில் எப்போதும் ரகளை செய்ய, ஒரு கட்டத்தில் சரவணன் தான் தந்தையிடம் பேசி அவனை இப்போது மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைத்தார்.
அந்த நேரம் சரவணனுக்கும் வரன் வந்தது. நல்ல இடம். வசதியும் கூட. செல்வராஜுக்கு ஒரு வகையில் தங்கை முறை. அதனால் லட்சுமி இந்த இடத்தை எப்படியும் செய்ட்ஹே ஆக வேண்டும் என தாயிடம் பிடிவாதம்.
குருசாமிக்கு இந்த இடத்தில் பெரிதாக நாட்டமில்லை. அவர்கள் இந்த எஸ்டேட்டில் வந்து வாழ்வார்களா? என்பதுதான் அவரது பெரிய கேள்வி.
மகன் தேயிலைக் காட்டில் வேலை செய்ய, மருமகளும் அதற்கு தகுந்தாற் போல, அவனை அனுசரித்து போவது போல இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்.
அதனால் மனைவியிடம் சொல்லி, மகளிடம் விசாரிக்க சொன்னார்.
மகளோ “ம்மா அவங்க இங்க எப்படி வந்து இருப்பாங்க. அவங்க வசதிக்கு நம்ம சரவணாவை வீட்டோடத்தான் கேட்பாங்க. அதனால என்னம்மா கொடுக்கலாம்.. நல்ல இடம். நமக்கும் நல்லதுதானே..” என பேச, முத்தம்மாளுக்கு மகளின் பேச்சில் எரிச்சல் வந்துவிட்டது.
“என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா லடசுமி.. அவனை நம்பித்தான் நம்ம குடும்பமே இருக்கு. அவனை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பிட்டு நாங்க என்ன தெருவுலயா நிக்கிறது..” என்றவர், “இதெல்லாம் நீயே பேசிட்டு வந்துருக்கனும். எங்ககிட்ட வரை ஏன் கொண்டு வர..” சத்தம் போட்டுவிட, மகளுக்கும் கோபம் வந்துவிட்டது.
அதனால் பெற்றோரிடம் சரியாக பேசுவதில்லை. இந்த பேச்சின் ஆரம்பத்திலேயே செல்வராஜ் மனைவியிடம் சொன்னார்தான். லட்சுமி கேட்காமல் பெற்றோரிடம் பேச, அது முடியாமலே போய்விட்டது.
மகள் இப்படியே அமைதியாக இருக்கமாட்டாள் என புரிந்த குருசாமி, சரவணனுக்கு அங்கு பக்கத்தில் உள்ள ஒரு எஸ்டேட்டிலேயே சாந்தாவைப் பார்த்து முடிவு செய்தார்.
சரவணனுக்கும் சாந்தாவை பிடித்திருக்க, ஒரே மாதத்தில் திருமணத்தை முடித்துவிட்டனர்.
பெரியவர்கள் என்ன சொன்னாலும் கேட்கும் ரகம் சாந்தா. கணவனுக்கு ஈடாக வேலையிலும் கெட்டி. இதைத்தானே குருசாமியும் எதிர்பார்த்தார்.
ஆனால் லட்சுமிக்கு சாந்தாவின் மேல் அவ்வளாவான மரியாதை வரவில்லை. காட்டு வேலை செய்வதால் சற்று மட்டமாகவே தான் நடந்து கொள்வார்.
அதை கவனித்த முத்தம்மா “எங்க காலத்துக்கு அப்புறம் உனக்கு அம்மா வீடு வேனும்னா என் மருமகளை பகைச்சுக்காத.. பின்னாடி நீதான் வருத்தப்படுவ..” என கண்டித்து விட்டார்.
அதனால் மற்றவர்கள் முன்னாடி அடக்கியே வாசித்தார் லட்சுமி. ஆனால் செல்வராஜ் அப்படியல்ல. சாந்தாவை தன் உடன் பிறந்த தங்கையாகவே பார்த்தார்.
திருமணம் முடிந்து அடுத்தாண்டே ஓவியா. முதல் வாரிசே பெண் குழந்தை. இந்த வீட்டு மகாலட்சுமி என குருசாமி கொண்டாடி தீர்த்துவிட்டார்.
அதை எரிச்சலாக பார்த்த மகளிடம், “எதுக்கு இப்படி பார்க்குற, முதல்ல உன் காலடி மண்ணை எடுத்துதான் சுத்தி போடனும். நீ பொறந்த அப்பவும் உன் அப்பா இப்படித்தான் கொண்டாடுனார். எல்லாத்துக்கும் பொறாமை..” என்றவர்,
“என்ன உன் மாமியார் ஒன்னும் சொல்ரது இல்லையா? அடுத்து சீக்கிரம் ஒரு பொண்ணை பெத்துக்கோ.. உன் வீட்டுக்காரர் மாதிரி ஒன்னு போதும்னு நினைச்சிட்டு இருக்க போறாங்க..” என மேலும் பேசி, மகளை கண்டபடி திட்டிவிட்டார்.
அதோடு லட்சுமி தாய் வீடு வருவது குறைந்தது. தன் மகனை மட்டுமே கொண்டாடிய வீட்டில் இப்போது இன்னொரு குழந்தை, அதிலும் ஓவியம் போல அழகான ஒரு குழந்தையை கொண்டாடுவதை லட்சுமியால் சகிக்க முடியவில்லை.
அதை கவனித்த செல்வராஜ் மனைவியை அதிகாமய் தாய்வீடு அழைத்து செல்வதில்லை.
அடுத்து இரண்டு வருடத்தில் சிவரூபன். அதோடு போதும் என்று சரவணன் நினைக்க, முத்தம்மாதான் இன்னொன்னு பையனோ பொண்ணோ வரட்டும் என்று முடித்துவிட்டார்.
அர்ஜுனின் ஐந்தாம் வயதில் மீண்டும் ஒரு பிரச்சினையோடு வந்து நின்றாள் லட்சுமி. குழந்தைக்கான ட்ரீட்மென்ட்.. பணம் வேண்டும் என்று நிற்க, குருசாமி இல்லை என முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டார்.
மருமகன் வீட்டில் நல்ல வசதி. அதோடு அரசு வேலையும் கூட. அங்கு பணத்திற்கு பஞ்சமே இல்லை. அப்படியிருக்க கஷ்டத்தில் இருக்கும் மகனிடம் வந்து பணம் கேட்கிறாளே என மகள் மீது கோபம்.
குருசாமி எவ்வளவோ தடுத்தும் கேட்காத சரவணனோ, மனைவியின் நகையை அடகு வைத்து பணத்தைக் கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கியதில், செல்வராஜிற்கு கூட லட்சுமி மீது மன வருத்தம் தான். ஆனால் மன வருத்தத்தில் இருக்கும் மனைவியிடம் அதை காட்ட விருப்பமில்லை.
அடுத்த வருடத்தில் சக்தி பிறந்துவிட்டாள். அதே வருடம்தான் காவ்யாவும். மகளுக்கு செய்ய வேண்டிய சீர் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த நேரம் தான் ஓவியாவிற்கு போலியோ அட்டாக் வர, அதற்கான மருத்துவ செலவுகளும் இருந்தது.
அதை மகளிடம் சொல்லாமல், மருமகனிடம் குருசாமி சொல்ல, அவரும் சரியென்றுவிட, லட்சுமிதான் ஆடி தீர்த்துவிட்டாள்.
அதிலும் ‘ஒரு புள்ளயே இப்படி பொறந்துருக்கு, அடுத்தடுத்து பொறந்ததும் இப்படித்தான வரும். அதுக்கு ஏன் வரிசையா பெத்துட்டு இருக்கீங்க..’ என காவ்யா பிறந்ததை நினைத்து சொல்ல, மருமகன் இருப்பதையும் யோசிக்காமல் மகளை அறைந்திருந்தார் முத்தம்மா.
“புள்ள வேணும்னு நீ கோவில் கோவிலா, ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலையில. உனக்காக அவ என்னனு கூட யோசிக்காம நகையை தூக்கி கொடுத்தவ.. அவளை பேச உனக்கு எப்படிடி மனசு வந்தது..” என்றவர், “இனி உனக்கு பாவமெல்லாம் பார்க்க முடியாது. அவ நகையை திருப்பி கொடு..” என கண்டிப்புடன் சொல்ல,
“என்ன நகையை கொடுக்கனுமா? ஹான் அது நீங்க எனக்கு செய்ய வேண்டிய செலவு. அதைத்தான் செஞ்சிருக்கீங்க. அதுக்கு நான் ஏன் நகையை தரனும்..?” என்றதும்,
குருசாமி “இப்போ என்ன சொல்ல வர.?” என மகளைப் பார்த்து தீர்மானமாக கேட்க,
“ப்ச் ப்பா.. விடுங்க.. அக்காகிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க..” என சரவணன் தந்தையை அடக்க,
“நீ சும்மா இருடா.. உன் பொண்டாட்டி உனக்கு ஏத்திவிட்டு, நீதான் அப்பாவை பேச தூண்டிருக்க. இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்கிறியா?” என சரவணனிடம் பாய,
“லட்சுமி நீ கொஞ்ச நேரம் சும்மா இரு.. நான் பேசுறேன்..” என்ற செல்வராஜை கண்டுகொள்ளாமல் “இங்க பாருங்கப்பா.. பொள்ளாச்சில இருந்து கோயம்புத்தூர் போற வழில ஒரு தோப்பு விலைக்கு வந்துச்சு. அதை வாங்கிறதுக்கு பணம் பத்தலன்னு, எங்க பணம் எல்லாத்தையும் அதுல போட்டுட்டோம். இப்போ எங்ககிட்ட எந்த பணமும் இல்ல. எங்களால நகையை எல்லாம் திருப்பி கொடுக்க முடியாது. அதை நான் கடனா நினைக்கல. எனக்கு செஞ்ச சீராதான் நினைச்சேன். கொடுக்கும் போதே கடன்னு சொல்லிருந்தா நான் வாங்கிருக்கவே மாட்டேன். இப்போ நான் எங்க அவ்ளொ பணத்துக்க் போக..” பேசிக்கொண்டே போக, அற்ப புழுவை போல் பார்த்தனர் முத்தம்மாவும், குருசாமியும்.
“நீ சுயநலவாதின்னு தெரியும். ஆனா இந்தளவுக்கு அடுத்தவங்க பணத்தை புடுங்கித் தின்னு ஏப்பம் விடுற அளவுக்கு மோசமானவன்னு நான் நினைக்கைவே இல்ல…” என்ற குருசாமி, மருமகனைப் பார்த்து “இன்னையோட இவ என் மூஞ்சில கூட முழிக்கக்கூடாது. இவ என் பொண்ணா இருக்ககூட தகுதியில்லாதவ. நான் செத்தாலும் என் மூஞ்ச இவ பார்க்கக்கூடாது. இவளை கூப்பிட்டு போங்க..” என கோபமாக கூற, செல்வராஜிற்கு அவமானத்தில் முகமே கருத்துப் போனது.
“ப்பா என்ன பேசுறீங்க.” என்ற சரவணனிடம் “மாமா சரியாத்தான் பேசுறாங்க சரவணா..” என்றவர், “மன்னிச்சிடுங்க மாமா..” என்றதோடு மனைவியை அழைத்து சென்றவர்தான், அடுத்து குருசாமியின் இழப்பிற்குத்தான் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தார்.
பேரனோடு வீட்டிற்கு நடந்து வரும் முத்தம்மாவிற்கு, அவர்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் கண் முன்னால் வந்து போனது.
முத்தம்மா - குருசாமி தம்பதியருக்கு இரண்டு ஆண்கள், ஒரே பெண்.. இவர்களுக்கு சொந்த ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் சிறு கிராமம் சோழனூர்.
இவர்களின் முன்னோர் மூன்று தலைமுறைக்கு முன்பே வால்பாறையில் டீ எஸ்டேட்டில் கூலி வேலைக்கு வந்தவர்கள். அவர்கள் தொட்டு இப்போது சிவ ரூபன் வரை அவர்களின் வாசஸ்தலம் அங்குதான்.
விசேங்களுக்கும், விடுமுறைகளுக்கு மட்டுமே சோழனூர் வந்து சென்றனர்.
மூத்தவள்தான் லட்சுமி, அவள் கணவர் செல்வராஜ். ஆனைமலை அரசு பள்ளியில் தலைமயாசிரியர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் அர்ஜுன், இவனுக்கு ஐந்தாண்டுகள் கழித்து பிறந்தவள் சக்தி யாழினி.
இரண்டாவது சரவணன் அவர் மனைவி சாந்தா.. மூன்று பிள்ளைகள். மூத்தவள் ஓவியா, அடுத்து சிவரூபன், மூன்றாவது காவ்யா.
மூன்றாவது கார்த்திகேயன், அவர் மனைவி அகிலா. இவர்கள் கோயம்புத்தூரில் இருக்கிறார்கள். கார்த்திகேயேன் சிப்காட்டில் மேனேஜர். நல்ல வேலை. வருமானமும் அதிக அளவில்தான்.
அவர்களுக்கு ஐஸ்வர்யா- சுஷ்மிதா என இரட்டை பெண்கள். இருவரும் இப்போது பள்ளிப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கிறார்கள்.
குருசாமியின் அப்பாதான் முதலில் சொத்து என்று வாங்க ஆரம்பித்தது. அவருக்கு மூன்று ஆண்கள் என்பதால் குருசாமிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பங்கு கிடைக்கவில்லை.
அதனால் குருசாமி தன் ஆண் பிள்ளைகள் இருவருக்கும் சரி சமமான சொத்து, அதோடு பெயர் சொல்லும் அளவிற்காகவேனும் இருக்க வேண்டும் என மிகவும் சிக்கனமாக வாழ்க்கையை நடத்தி, அப்போது அவர் காலத்தில் பத்து ஏக்கரில் சொத்து வாங்கினார்.
அதில் ஆண் பிள்ளைகள் இருவருக்கும் தலா ஐந்து ஏக்கர் என்று முடித்துவிட்டார். அப்போது பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்பதால், அவருக்கு அதற்கு சமமான அளவில் நகையும் சீரும் செய்திருந்தார் குருசாமி. மற்றொரு காரணம் மாப்பிள்ளை அரசு வேலையில் இருந்தார். அதனால் மகளை நல்ல முறையில் புகுந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சரவணனின் நிலம் ஐந்து ஏக்கரை குத்தகைக்கு விட்டே செய்தார்.
அப்போது மகன்கள் இருவருக்குமே திருமணம் செய்யவில்லை. அதனால் மகளுக்கு நல்ல முறையிலேயே செய்தார். மகன்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் சீக்கிரமாக நிலத்தை திருப்பி விடலாம் என்ற அவர் நினைத்திருந்தார்.
கார்த்திகேயேன் வேலை செய்து கொண்டே படிக்கிறேன் என ஐடிஐ-யில் சேர்ந்து விட்டாலும், வேலை என்று எதற்கும் போகவில்லை. அதோடு சரவணனும் படிக்கும் போது வேலைக்கெல்லாம் வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.
அடுத்து லட்சுமியில் வளைகாப்பு, குழந்தை பிறப்பு, காதனி விழா என அடுத்தடுத்து விழாக்கள் வர, அவர்கள் அந்த நிலத்திற்காக பணம் சேர்க்க முடியாமலே போனது.
இப்படியே இரண்டாண்டுகள் கழிய, கார்த்திகேயன் படிக்கும் இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் என கல்லூரியில் இருந்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட, குருசாமி திகைத்து போனார்.
தன் மகனா இப்படி என அவர் அதிர்ச்சியில் சின்ன மகனைப் போட்டு அடி வெளுத்துவிட்டார். அதோடு எங்கேயும் போக வேண்டாம் என டீ ஃபேக்டரியில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
இந்த பனியிலும், குளிரிலும் இருந்து தப்பிப்பதற்காகத்தான் படிப்பு வரவில்லை என்றாலும் படிப்பதாக சொல்லி கோவை சென்றார் கார்த்திகேயன். இப்பொது மீண்டும் அதே மழையிலும், பனியிலும் கஷ்டப்படுவதா என நொந்து போனார்.
தன் தாயிடம் இதற்காக புலம்பிக்கொண்டே இருந்தார். ‘எனக்கு தெரிஞ்சவங்க கூட இருந்து வேலை செய்றேன். படிக்கலன்னாலும் பர்வால்ல. படிச்ச வரைக்கும் தெரிஞ்ச வேலைக்கு போறேன். என்னைய அனுப்புங்க..’ என வீட்டில் எப்போதும் ரகளை செய்ய, ஒரு கட்டத்தில் சரவணன் தான் தந்தையிடம் பேசி அவனை இப்போது மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைத்தார்.
அந்த நேரம் சரவணனுக்கும் வரன் வந்தது. நல்ல இடம். வசதியும் கூட. செல்வராஜுக்கு ஒரு வகையில் தங்கை முறை. அதனால் லட்சுமி இந்த இடத்தை எப்படியும் செய்ட்ஹே ஆக வேண்டும் என தாயிடம் பிடிவாதம்.
குருசாமிக்கு இந்த இடத்தில் பெரிதாக நாட்டமில்லை. அவர்கள் இந்த எஸ்டேட்டில் வந்து வாழ்வார்களா? என்பதுதான் அவரது பெரிய கேள்வி.
மகன் தேயிலைக் காட்டில் வேலை செய்ய, மருமகளும் அதற்கு தகுந்தாற் போல, அவனை அனுசரித்து போவது போல இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்.
அதனால் மனைவியிடம் சொல்லி, மகளிடம் விசாரிக்க சொன்னார்.
மகளோ “ம்மா அவங்க இங்க எப்படி வந்து இருப்பாங்க. அவங்க வசதிக்கு நம்ம சரவணாவை வீட்டோடத்தான் கேட்பாங்க. அதனால என்னம்மா கொடுக்கலாம்.. நல்ல இடம். நமக்கும் நல்லதுதானே..” என பேச, முத்தம்மாளுக்கு மகளின் பேச்சில் எரிச்சல் வந்துவிட்டது.
“என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா லடசுமி.. அவனை நம்பித்தான் நம்ம குடும்பமே இருக்கு. அவனை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பிட்டு நாங்க என்ன தெருவுலயா நிக்கிறது..” என்றவர், “இதெல்லாம் நீயே பேசிட்டு வந்துருக்கனும். எங்ககிட்ட வரை ஏன் கொண்டு வர..” சத்தம் போட்டுவிட, மகளுக்கும் கோபம் வந்துவிட்டது.
அதனால் பெற்றோரிடம் சரியாக பேசுவதில்லை. இந்த பேச்சின் ஆரம்பத்திலேயே செல்வராஜ் மனைவியிடம் சொன்னார்தான். லட்சுமி கேட்காமல் பெற்றோரிடம் பேச, அது முடியாமலே போய்விட்டது.
மகள் இப்படியே அமைதியாக இருக்கமாட்டாள் என புரிந்த குருசாமி, சரவணனுக்கு அங்கு பக்கத்தில் உள்ள ஒரு எஸ்டேட்டிலேயே சாந்தாவைப் பார்த்து முடிவு செய்தார்.
சரவணனுக்கும் சாந்தாவை பிடித்திருக்க, ஒரே மாதத்தில் திருமணத்தை முடித்துவிட்டனர்.
பெரியவர்கள் என்ன சொன்னாலும் கேட்கும் ரகம் சாந்தா. கணவனுக்கு ஈடாக வேலையிலும் கெட்டி. இதைத்தானே குருசாமியும் எதிர்பார்த்தார்.
ஆனால் லட்சுமிக்கு சாந்தாவின் மேல் அவ்வளாவான மரியாதை வரவில்லை. காட்டு வேலை செய்வதால் சற்று மட்டமாகவே தான் நடந்து கொள்வார்.
அதை கவனித்த முத்தம்மா “எங்க காலத்துக்கு அப்புறம் உனக்கு அம்மா வீடு வேனும்னா என் மருமகளை பகைச்சுக்காத.. பின்னாடி நீதான் வருத்தப்படுவ..” என கண்டித்து விட்டார்.
அதனால் மற்றவர்கள் முன்னாடி அடக்கியே வாசித்தார் லட்சுமி. ஆனால் செல்வராஜ் அப்படியல்ல. சாந்தாவை தன் உடன் பிறந்த தங்கையாகவே பார்த்தார்.
திருமணம் முடிந்து அடுத்தாண்டே ஓவியா. முதல் வாரிசே பெண் குழந்தை. இந்த வீட்டு மகாலட்சுமி என குருசாமி கொண்டாடி தீர்த்துவிட்டார்.
அதை எரிச்சலாக பார்த்த மகளிடம், “எதுக்கு இப்படி பார்க்குற, முதல்ல உன் காலடி மண்ணை எடுத்துதான் சுத்தி போடனும். நீ பொறந்த அப்பவும் உன் அப்பா இப்படித்தான் கொண்டாடுனார். எல்லாத்துக்கும் பொறாமை..” என்றவர்,
“என்ன உன் மாமியார் ஒன்னும் சொல்ரது இல்லையா? அடுத்து சீக்கிரம் ஒரு பொண்ணை பெத்துக்கோ.. உன் வீட்டுக்காரர் மாதிரி ஒன்னு போதும்னு நினைச்சிட்டு இருக்க போறாங்க..” என மேலும் பேசி, மகளை கண்டபடி திட்டிவிட்டார்.
அதோடு லட்சுமி தாய் வீடு வருவது குறைந்தது. தன் மகனை மட்டுமே கொண்டாடிய வீட்டில் இப்போது இன்னொரு குழந்தை, அதிலும் ஓவியம் போல அழகான ஒரு குழந்தையை கொண்டாடுவதை லட்சுமியால் சகிக்க முடியவில்லை.
அதை கவனித்த செல்வராஜ் மனைவியை அதிகாமய் தாய்வீடு அழைத்து செல்வதில்லை.
அடுத்து இரண்டு வருடத்தில் சிவரூபன். அதோடு போதும் என்று சரவணன் நினைக்க, முத்தம்மாதான் இன்னொன்னு பையனோ பொண்ணோ வரட்டும் என்று முடித்துவிட்டார்.
அர்ஜுனின் ஐந்தாம் வயதில் மீண்டும் ஒரு பிரச்சினையோடு வந்து நின்றாள் லட்சுமி. குழந்தைக்கான ட்ரீட்மென்ட்.. பணம் வேண்டும் என்று நிற்க, குருசாமி இல்லை என முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டார்.
மருமகன் வீட்டில் நல்ல வசதி. அதோடு அரசு வேலையும் கூட. அங்கு பணத்திற்கு பஞ்சமே இல்லை. அப்படியிருக்க கஷ்டத்தில் இருக்கும் மகனிடம் வந்து பணம் கேட்கிறாளே என மகள் மீது கோபம்.
குருசாமி எவ்வளவோ தடுத்தும் கேட்காத சரவணனோ, மனைவியின் நகையை அடகு வைத்து பணத்தைக் கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கியதில், செல்வராஜிற்கு கூட லட்சுமி மீது மன வருத்தம் தான். ஆனால் மன வருத்தத்தில் இருக்கும் மனைவியிடம் அதை காட்ட விருப்பமில்லை.
அடுத்த வருடத்தில் சக்தி பிறந்துவிட்டாள். அதே வருடம்தான் காவ்யாவும். மகளுக்கு செய்ய வேண்டிய சீர் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த நேரம் தான் ஓவியாவிற்கு போலியோ அட்டாக் வர, அதற்கான மருத்துவ செலவுகளும் இருந்தது.
அதை மகளிடம் சொல்லாமல், மருமகனிடம் குருசாமி சொல்ல, அவரும் சரியென்றுவிட, லட்சுமிதான் ஆடி தீர்த்துவிட்டாள்.
அதிலும் ‘ஒரு புள்ளயே இப்படி பொறந்துருக்கு, அடுத்தடுத்து பொறந்ததும் இப்படித்தான வரும். அதுக்கு ஏன் வரிசையா பெத்துட்டு இருக்கீங்க..’ என காவ்யா பிறந்ததை நினைத்து சொல்ல, மருமகன் இருப்பதையும் யோசிக்காமல் மகளை அறைந்திருந்தார் முத்தம்மா.
“புள்ள வேணும்னு நீ கோவில் கோவிலா, ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலையில. உனக்காக அவ என்னனு கூட யோசிக்காம நகையை தூக்கி கொடுத்தவ.. அவளை பேச உனக்கு எப்படிடி மனசு வந்தது..” என்றவர், “இனி உனக்கு பாவமெல்லாம் பார்க்க முடியாது. அவ நகையை திருப்பி கொடு..” என கண்டிப்புடன் சொல்ல,
“என்ன நகையை கொடுக்கனுமா? ஹான் அது நீங்க எனக்கு செய்ய வேண்டிய செலவு. அதைத்தான் செஞ்சிருக்கீங்க. அதுக்கு நான் ஏன் நகையை தரனும்..?” என்றதும்,
குருசாமி “இப்போ என்ன சொல்ல வர.?” என மகளைப் பார்த்து தீர்மானமாக கேட்க,
“ப்ச் ப்பா.. விடுங்க.. அக்காகிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்க..” என சரவணன் தந்தையை அடக்க,
“நீ சும்மா இருடா.. உன் பொண்டாட்டி உனக்கு ஏத்திவிட்டு, நீதான் அப்பாவை பேச தூண்டிருக்க. இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைக்கிறியா?” என சரவணனிடம் பாய,
“லட்சுமி நீ கொஞ்ச நேரம் சும்மா இரு.. நான் பேசுறேன்..” என்ற செல்வராஜை கண்டுகொள்ளாமல் “இங்க பாருங்கப்பா.. பொள்ளாச்சில இருந்து கோயம்புத்தூர் போற வழில ஒரு தோப்பு விலைக்கு வந்துச்சு. அதை வாங்கிறதுக்கு பணம் பத்தலன்னு, எங்க பணம் எல்லாத்தையும் அதுல போட்டுட்டோம். இப்போ எங்ககிட்ட எந்த பணமும் இல்ல. எங்களால நகையை எல்லாம் திருப்பி கொடுக்க முடியாது. அதை நான் கடனா நினைக்கல. எனக்கு செஞ்ச சீராதான் நினைச்சேன். கொடுக்கும் போதே கடன்னு சொல்லிருந்தா நான் வாங்கிருக்கவே மாட்டேன். இப்போ நான் எங்க அவ்ளொ பணத்துக்க் போக..” பேசிக்கொண்டே போக, அற்ப புழுவை போல் பார்த்தனர் முத்தம்மாவும், குருசாமியும்.
“நீ சுயநலவாதின்னு தெரியும். ஆனா இந்தளவுக்கு அடுத்தவங்க பணத்தை புடுங்கித் தின்னு ஏப்பம் விடுற அளவுக்கு மோசமானவன்னு நான் நினைக்கைவே இல்ல…” என்ற குருசாமி, மருமகனைப் பார்த்து “இன்னையோட இவ என் மூஞ்சில கூட முழிக்கக்கூடாது. இவ என் பொண்ணா இருக்ககூட தகுதியில்லாதவ. நான் செத்தாலும் என் மூஞ்ச இவ பார்க்கக்கூடாது. இவளை கூப்பிட்டு போங்க..” என கோபமாக கூற, செல்வராஜிற்கு அவமானத்தில் முகமே கருத்துப் போனது.
“ப்பா என்ன பேசுறீங்க.” என்ற சரவணனிடம் “மாமா சரியாத்தான் பேசுறாங்க சரவணா..” என்றவர், “மன்னிச்சிடுங்க மாமா..” என்றதோடு மனைவியை அழைத்து சென்றவர்தான், அடுத்து குருசாமியின் இழப்பிற்குத்தான் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்தார்.