• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வைகை சிறுகதை போட்டி 2021

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
வணக்கம் மக்களே...!!!

இப்போட்டியானது, தளம் ஆரம்பிக்கும் முன்பே, தளத்தின் திறப்பு விழாவை சிறப்பிக்க, ஆரம்பித்த ஒரு நிகழ்ச்சி. கொடுத்த ஒரு மாதத்தில் பலர், பல பல கதைகளை கொடுத்து அசத்தியுள்ளனர். மொத்தம் 106 கதைகள் நம் பக்கத்தை நிரப்பியுள்ளது. வாசகர்கள், ஏனைய எழுத்தாளர்கள் அனைவரும் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதன்படி, போட்டிக்கு நாங்கள் வெளியீட்ட அறிவிப்பை கீழே மீண்டும் கொடுத்துள்ளேன்...

*****************************

வைகை சிறுகதைப் போட்டி 2021

197452203_263796752180603_4817688701697092767_n.jpg


வைகையின் பாயும் போக்கு சுதந்திரத்தைப் போல் இந்த கதையின் சுதந்திரமும் எழுத்தாளர்களிடமே!
எந்த பிரிவிலும், எந்த வகையிலும் எழுதலாம்.

அதேபோல் சிறு சிறு தடுப்புகளாக சில சில விஷயங்கள்.

1. 2000 வார்த்தைகள் மிகாமல் இருத்தல் வேண்டும்.

2. எழுத்துப் பிழை அறவே இல்லாது இருத்தல் வேண்டும்.

ஏனெனில், மதிப்பெண்ணின் ஒரு பகுதியாக எழுத்துப் பிழையற்ற கதைகள் இருக்கும்.

3. எழுத்தில் நாகரிக நடை அவசியம், 18+ கூடவே கூடாது.

4. எழுத்தாளரின் தேர்வுகள் என்பதால், எழுத்தில் அழகு, ஆழம், சுவாரஸ்யம், வித்தியாசமான கதைக்கரு, எண்ணங்களில் அழுத்தம் போன்ற விஷயங்களே கணக்கில் கொள்ளப்படும். அதில் கவனம் வைப்பது நல்லது.

5. வேறு எந்த தளத்திலோ, பொதுத் தளங்களிலோ, செயலிகளிலோ, புத்தக வடிவிலோ வந்திருக்கக் கூடாது. (அப்படி இருந்தால், போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.)

மற்றும் அந்த தீபாவளி பரிசு:

எழுத்தாளர்களுக்கு...

முதல் பரிசு: சு.வெங்கடேஷன் அவர்களின் - வேள்பாரி

இரண்டாம் பரிசு: அ.வெண்ணிலா அவர்களின் - கங்காபுரம்


மூன்றாம் பரிசு: பத்மா அவர்களின் - நயனவல்லியின் காதல்

( போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் மின் சான்றிதழ் அனுப்பப்படும். மின் சான்றிதழில் புகைப்படம் வரும் என்பதால், கதையோடு சேர்த்து உங்களின் பெயர், கதையின் பெயர், மற்றும் புகைப்படம் அவசியம்.)

வாசகர்களுக்கு...

அனைத்து கதைகளையும் படித்து சிறந்த விமர்சனம் கொடுக்கும் ஒரு வாசகருக்கு ஒரு மாத கிண்டில் சந்தா கொடுக்கப்படும். மேலும் இருவருக்குத் தள உரிமையாளரின் புத்தக பரிசும் காத்திருக்கிறது.

*******************

எப்படித் தேர்வு செய்வீர்கள்?

முதல் ஐந்து மதிப்பெண்கள்:

கூறியது போல், பிழையற்ற எழுத்து நடை!
வாசகர்களின் அதிகபட்ச நேர்மறை கருத்துக்கள் கிடைக்கப்படும் கதைகள்.

அடுத்த பதினைந்து மதிப்பெண்கள்:

நடுநிலையான - இரண்டு எழுத்தாளர் மற்றும் ஒரு தேர்ந்த வாசகரின் தலைமையில் கொடுக்கப்படும்.

இறுதிக்கட்ட பத்து மதிப்பெண்கள்:

இந்த மதிப்பெண்களும் – சிறந்த கதையெனத் தேர்ந்தெடுக்கும் உரிமை, தீர்ப்பாளர்கள் (கண்டிப்பாக ஒரு சிறந்த எழுத்தாளராகவே இருப்பார்) கையில்.

தேர்வு செய்யும் முறையில் சம்மந்தப்படப் போகும் நபர்கள், தீர்ப்பாளர்கள் யார் என்று பின் வரும் நாட்களில் கூறப்படும்.

தேர்வுகளை அறிவிக்கும் நாள்:

ஆகஸ்ட் மூன்று அல்லது நான்காம் வாரம், 2021.

*******************************

மீண்டும் ஒரு முக்கிய குறிப்பு:

மொத்தமாக ஐந்து மதிப்பெண்கள் வாசகரான உங்கள் கைகளில் கொடுக்கப்பட்டு உள்ளது. அனைவரும் படித்து உங்கள் கருத்துக்களை பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். எழுத்தாளர்களும் முடிந்த அளவிற்கு உங்கள் கதைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முயலுங்கள்.

நன்றி.
வைகை குழு.