• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

11. என்னை காதலிப்பவரை!

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
குறும்பு பார்வையுடன், "நிஜமா உனக்கு என் பெயர் தெரியாது ?" என்று அவளையே பார்த்தான்.

"ஹம்ம் தெரியும். ஆனா வேற எதுவும் தெரியாதே?" என்றால் வெகுளியாக.

"அதற்கென்ன நான் சொல்கிறேன்." என்று தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் கூறிவிட்டு அவளை பார்த்து கொண்டே, "சரி. நீ நல்லா பாட்டு பாடற பாரத நாட்யம் டான்ஸ் ஆட்றியே உங்க சித்திக்கு தெரியுமா?"

"தெரியாது! பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் எல்லாம் எனக்கு ரொம்ப இன்டெரெஸ்ட். அதனால எல்லாத்தையும் சித்திக்கு தெரியாம காலேஜ் உள்ளயே கத்துக்கிட்டேன். எனக்கு இதெல்லாம் தெரியும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அது நீ தான் கோவிலை ஒரு குட்டீஸ் பட்டாளத்தையே பிரெண்ட்ஸா வச்சுருக்கியே? நீ அவங்களுக்கு பாடி காட்டும் போது பார்த்துருக்கேன். அப்ப இந்த கிளாஸுக்கெல்லாம் எப்படி பீஸ் கட்டுவ?" என்றான்.

"நா கம்ப்யூட்டர் படிச்சதால எனக்கு கண்டிப்பா சிஸ்டம் வேணும்னு லாயர் அங்கிள் கிட்ட சொல்லி லேப்டாப் வாங்கிடேன். படிக்கும் போதே ஆன்லைன் ப்ரொஜெக்ட் மூலமா எர்ன் பண்ணிட்டு இருந்தேன். இந்த கிளாஸ்சுக்கு போக மீதியை என் அக்கவுண்ட்ல போட்ருவேன்."

"பரவால்லையே கொஞ்சம் கெட்டிக்கார பொண்ணு தான்ம் ஆனா, மேரேஜ் விஷயத்துல தான்..."

"அதுலயும் ஒரு நன்மை இருந்துருக்குல்ல, நான் அப்டி இருக்க போய் தான் என்னை விரும்பின ஒருத்தர் என்னை கல்யாணம் பண்ணிகிட்டார்ல?" என்று அவனை பார்க்காமலே எங்கோ பார்த்தபடி கூறவும் சட்டென அவள் புறம் திரும்பி, " இப்ப என சொன்ன ?" என்றான்.

"இல்ல நான் ஒன்னும் சொல்லலையே?"

"இல்ல சொன்ன. ஒழுஙகா என்னை பார்த்து திரும்பி சொல்லு."

"முடியாது" என்று மணலை உதறி கொண்டு எழுந்தவளின் கை பற்றி இழுக்க மறுபடியும் மணலில் விழுந்தாள்.

கையை விடாமல், " சொல்லலைனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது." என்று அவள் கண்களையே பார்த்து கொண்டிருந்தான்.

அவள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருக்க, அவளிடம் மிகவும் நெருக்கத்தில், " இப்ப சொல்ல போறியா இல்ல..." என்று அவளின் உதட்டை தன் விரலால் தடவினான்.

அவனின் நெருக்கத்தில் இருந்தவள் கண்களை மூடி கொண்டு, "அதனால தான நீங்க எனக்கு கிடைச்சிங்க." என்று தன் இதழை கடித்தாள்.

தன்னையும் மறந்து தன் இதழை அவள் இதழோடு சேர்க்கும் நேரத்தில மொபைல் அடித்தது இருவரும் வேகமாக எழுந்து அமர்ந்தனர்.

"யாருடா இந்த நேரத்துல கரடி?" என்று மனதில் திட்டி கொண்டே "ஹலோ!" என்றான் கோவமாக.

"ஹலோ ப்ரோ! எங்க இருக்கீங்க? மணி ஒன்பது ஆகுது. அம்மா ரொம்ப கவலையா இருக்காங்க." என்றான் சுரேஷ்.

"சரி. நான் வரேன்." என்று போனை வைத்து விட்டு மஹாவிடம், "நாம கிளம்பலாம் மணி ஆகிடுச்சு ஆன்ட்டி காணாமேன்னு பீல் பண்றாங்களாம்."

"ஹ்ம் போலாம்" என்று எழுந்தாள்.

அவள் முன்னே நடக்க வேகமாக சென்று அவள் தோளில் கை போட்டு நடந்தான்.

அவனின் கை தன் மேல் பட்டதுமே மிகவும் பதட்டம் அடைந்து உடலில் ஒரு நடுக்கம் பரவியதை உணர்ந்தாள்.

மெதுவாக அவன் பிடியில் இருந்து விடு பட முயன்றாள்.

அவள் சங்கடப்படுவதை உணர்ந்து தன் கைகளை எடுத்துக்கொண்டான்.

மௌனமே மொழியாக இருவரும் காரில் பயணித்தனர்.

"என்னால டெய்லியும் இப்டி வெளில கூட்டிட்டு போக முடியாது. ஆனா, டைம் கிடைக்கும் போது கண்டிப்பா கூட்டிட்டு போறேன். ஆனா டெய்லியும் உன்ன வந்து பார்ப்பேன்." என்று அவளை பார்த்தான். வெட்கத்தில் அவளின் முகம் சிவப்பதை ஒரே கண்ணால் பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

சுரேஷ் வீடு வந்து விட்டது. இருவரும் இறங்கி உள்ளே போக, "என்னம்மா சாப்பிட்டீங்களா?" என்று குரல் கேட்கவே,

"இல்லம்மா இன்னும் சாப்பிடல நீங்க சாப்பிட்டீங்களா?"

"எல்லாரும் சாப்ட்டாங்க. நான் நீ வந்துருவேன் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்."

"இல்ல ஆண்ட்டி. நா கிளம்பறேன் அம்மா எனக்காக காத்துட்டு இருப்பாங்க." எர்ரான் ஷக்தி.

"மணி இப்ப பத்தரை ஆகுது. இதுக்கு மேல நீ ஒன்னும் வீட்டுக்கு போக வேணாம் இங்கயே தங்கிரு."

"இல்ல ஆன்ட்டி..." என்று இழுத்தவனிடம் கண்டிப்புடன்,

"இல்ல நான் சொன்னா சொன்னது தான். யு ஆர் கோயிங் டு ஸ்டே ஹியர் ஒன்லி." என்றபடி ஷக்தி அம்மாவிற்கு போன் செய்து ஷக்தி சுரேஷுடன் இங்கயே தங்கட்டும் என்று அனுமதி வாங்கினார்.

'கடவுளே! இவன் கொஞ்ச நேரம் என் பக்கத்துல இருந்தாலே எனக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியல. இப்ப ராத்திரி முழுக்க என்கூட.. கடவுளே ப்ளீஸ் நீ தான் காப்பாத்தணும்.' என்று மனதினுள் வேண்டிக் கொண்டாள் மஹா.

இருவரும் சாப்பிட்டார்கள்.

"சரி ஆன்ட்டி. நா சுரேஷ் கூட படுத்துகிறேன்." என்றவனை முறைத்து, "டே அவன்கூடயா தூங்கப்போற? உனக்கு கல்யாண ஆகிடுச்சு மறந்துட்டியா? மஹா சக்திய உன் ரூம்க்கு கூட்டிட்டு போம்மா. எனக்கு தூக்கம் வருது குட் நைட்." என்று தன் அறைக்குள் புகுந்து கொண்டார்.

தயங்கி தயங்கி நின்றவனை "வாங்க" என்று தன் அறைக்கு அழைத்து சென்றாள்.

_ ------------------
 
Top