11.நவிலனின் கோதையானாள்
பத்து பேர் சேர்ந்து தொடுறமாதிரி இருக்கு நவிலா என்றவளை பார்க்க முடியாமல் திணறித்தான் போனான் நவிலன்..
அம்மு என்று அவள் அருகில் வர மிரண்டு பார்த்தவளை அது தப்பு தான்டி இல்லன்னு சொல்லல ஆனா என்று அவன் பேசும் முன்பே..
எனக்கும் புரியுது ஆனா முடியலையே பயமா இருக்கு அந்த வலி வேதனை பார்வை எல்லாத்தையும் எனக்கு நியாபகப்படுத்துறதே யாராவது என்னைய தெரியாம உரசிட்டா கூட என்றவள் கண் மூடி அழ..
சட்டென இழுத்து அணைத்து கொண்டவன் விடு விடு வேண்டாம் இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்..
ஆனா என்று அவள் ஏதோ பேச வர..
உஷ் அந்த பேச்சு வேண்டாம் அம்மு…
பனி , “இல்ல எனக்கு சிலது தெரியனும்
என்ன தெரியனும் என்றான் நவிலன்..
மலர் சீனியர்..
அவளுக்கு என்ன?
எப்படி சீனியர் கல்யாணம் பண்ணிட்டாங்க
அவளோட வலியை மறந்து கடந்து வர அளவுக்கு அவளை விரும்புறவன் கூட இருக்கும் போது கல்யாணம் பண்ணிட்டா…
பனி, “அதுக்குள்ள அவங்க அந்த வலியை மறந்துட்டாங்களா?
மறந்து இருக்கமாட்டா அம்மு கடந்து வந்துட்டா தெருவுல இறங்கி நடந்து போறோம் தெரியாம நம்ம கால்ல சாணி ஒட்டிடுட்டுச்சு என்ன பண்ணுவோம்..
ப்ச் இதெல்லாம் எனக்கு புரியுது..
அவ்வளவு தான் இதுக்கு மேல உனக்காக புதுசா ஒரு அறிவுரை தேவை இருக்காது உனக்கு உலகம் தெரியும், புரியும் ஆனா அதை எதிர்கொள்ள மட்டும் வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? உலகத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு நீ நல்லதை மட்டும் யோசி இனி எந்த கெட்டதும் உன்னையே நெருங்க விடமாட்டேன்..
பனி, “அப்ப உலகத்துல வேற எங்க வேணும் ன்னாலும் தப்பு நடக்கலாமா?
அம்மு எல்லா இடத்திலும் தப்பு நடக்காம பார்க்க நான் ஒன்னும் அற்புத விளக்கு இல்ல சரி பண்ண, நானும் சாதாரண மனுசன் தான் என் எல்லைக்கு உட்பட்டதும் என்னை சார்ந்தவங்களை தான் நான் பாதுகாக்க முடியும் இது தான் நிதர்சனம் இதுக்கு மேல இதை பெரிசா யோசிச்சு உனக்காக உலகத்தையே சரி பண்ணிடுவேன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.
அம்மு..
ம்ம்ம
இதுக்கு மேல அதை யோசிக்கவோ நினைச்சிட்டு இருக்கவோ கூடாது புரியுதா உனக்கு எதுல விருப்பமோ அதுல உன்னை முழுசா அர்பணிச்சுக்கோ எது பண்ணா உனக்கு அந்த பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியும் உன்னையே நீ அலசி பாரு கண்டிப்பா வழி தரும் நானோ இல்ல ஒரு சைக்காலஜியோ வழி காட்டலாம் ஆனா உனக்கு என்ன தேவைன்னு நீ தான் முடிவு பண்ணனும் அதுக்கு கண்டிப்பா நான் துணை இருப்பேன்..அம்மு நான் சொல்லுறது புரியுது தானே..
புரியுது நவிலா..
அப்ப நீ தான் முடிவு எடுக்கனும்..
நான் ஸ்கூல் தான் போகனும் ன்னு இருக்கேன் நவிலா அங்கேயே அவங்களை மாத்தணும் ன்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஆபிஸ் ல எதாவது உதவி தேவைப்பட்டா கண்டிப்பா செய்யுறேன் என்றவள் நவிலன் முகம் பார்க்க
அம்மு..
ம்ம்
நான் ஒன்னு கேட்கவா..
சொல்லுங்க..
என்னைய நவிலா ன்னு கூப்பிட்டு நான் பார்த்ததே இல்ல எப்படி இப்படி சட்டுன்னு..
அது மாமா அடிக்கடி இப்படி தான் உங்களை பத்தி பேசுவாங்க..
ஓஓஓ என்று காற்று போன பலூன் போல் அவன் ஆர்வம் அடங்கி விட
என்னாச்சு என்றாள் பூம்பனி இல்ல என்னைய உனக்கு நியாபகம் இல்லையா?
ஏன் இல்ல இருக்கே..
எப்படி என்றான் சந்தோஷ குரலில்..
நீங்களும் அந்த பசங்களும் ஒரே பேட்ச் தானே என்றவள் திக்கி திணறி கேட்டு விட,பனியை அதிர்வோடு பார்த்தவன் அப்ப என்னைய உனக்கு தெரியும்.
தெரியும் மலர் சீனியரை தொந்தரவு பண்ணுறவங்களை பார்த்து இருக்கேன் அப்ப ஒரு முறை உங்களை அவங்களோட பார்த்து இருக்கேன்..
அம்மு நான்…
நான் உங்களை குறை சொல்லவே இல்ல உங்களை எப்படி தெரியும் ன்னு சொல்லுறேன் அதுவும் நீங்க அவங்களோட இருந்தது ஒரு பேப்பர் பிரசன்டேஷன் ல ..அவள் சொல்வதை ஆச்சரியமாக பார்க்க..
என்ன நவிலா…
இல்ல இப்ப உனக்கு என் மேல் கோவம் எதுவும் இல்லையே…
கோவம் இல்ல வருத்தம் இருக்கு அன்னைக்கு நீங்க அங்கேயே இருந்து இருந்தா இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது இல்லையா…
தப்பு தான் அதுக்கு என்னால் என்ன முடியுமோ அதை தான் இதுவரை பண்ணிட்டு இருக்கேன்..
நீங்க எவ்வளவு நல்ல விஷயம் பண்ணாலும், நடந்து முடிஞ்சது இல்லன்னு ஆகுது இல்ல என்றாள் பனி..
ஏற்கனவே பனியின் எண்ணங்களை நவிலனின் தோழி சொல்லி இருந்தாள்..
நவி அவளால் அந்த சம்பவத்தை மன்னிக்கவே முடியல அதை அவ விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கவும் முடியல ரொம்ப தள்ளாடுறா..
அதுக்கு என்ன பண்ணலாம் ன்னு சொல்லு டி என்று நவிலனும் கேட்டு இருந்தான்.
அவளை அவ பிஸியா வச்சுக்கனும் இது நாம பொதுவா சொல்லுறது தான் உங்களுக்கு விருப்பமானதுல கவனம் வைங்க உங்களை நீங்க ஒரு விஷயத்தில் ஈடுபடுத்தி செயல்படுங்கன்னு ஆனா எல்லா பேசண்ட்க்கும் அது ஒத்து வருமான்னா தெரியாது இல்லையா..
ஆமா என்ன பண்ணட்டும் இப்ப..
சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணிக்க அவளோட பயத்தை போக்கு நம்பிக்கை வந்துட்டா கண்டிப்பா அவ மாறிடுவா மலர் மாதிரி அவளால் சீக்கிரம் அதை ஏத்துக்க முடியல..
அவ அந்த கொடுமையை அனுப்பவிச்சு இருந்தா அது வேற ஆனா அவளை பார்க்க வைச்சு ஒன்னு ஒன்னும் இந்த பரதேசிங்க செஞ்சு இருக்கானுங்க கொஞ்சம் கூட அவ சின்ன பொண்ணு ன்னு யோசிக்கல அதைவிட நாம ஒரு பொறுப்பான டாக்டர் அப்படிங்குறதை மறந்து சாதாரண ஆம்பிளைன்னு அன்னைக்கு அவனுங்க காட்டிட்டானுங்க என்று அவள் கத்தி இருந்தாள். அதை தான் நினைத்து கொண்டு அவளை அணைத்து கொண்டு இருந்தான் நவிலன்.
பனி “நவிலா விடுங்க நான் கீழே போறேன் மேல வந்து ரொம்ப நேரம் ஆகிட்டு..
பரவாயில்ல இங்கேயே இருக்கலாம் இப்ப என்ன அவசரம் கல்யாணம் ஆகி இரண்டு நாளைக்கு அப்புறம் இப்ப தான் என் பொண்டாட்டி கூட கொஞ்ச சேந்தாப்புல இருக்கேன் அது உனக்கு பொறுக்கலையா..
அதுக்கு நீங்க கல்யாணத்தில் விருப்பம் இருக்க பொண்ணா பார்த்து கட்டிக்கிட்டு இருக்கனும் என்று சாதாரணமாக சொல்லியவள் அத்த அங்க தனியா இருப்பாங்க கவி அண்ணி என்ன சொல்லுறாங்களோ தெரியல போகலாம் ப்பா.
அதெல்லாம் அவ அப்பவே கிளம்பி இருப்பா
அச்சோ கிளம்பி இருப்பாங்களா அப்ப அடுத்த பிரச்சினை பெரிசாகிடுமே வாங்க போகலாம் என்று அவனை இழுக்க..
இருடி வரேன் எப்ப பாரு எதையாவது யோசிச்சிட்டு அப்படி யோசிக்கிறது தான் யோசிக்கிற இங்க ஒருத்தன் இவ்வளவு பெரிய உருவமா இருக்கேனே என்னைக்காவது நீ யோசிச்சு இருக்கியா…
அவன் கைக்குள் இருந்தே நிமிர்ந்து அவனை பார்த்தவள் உங்களை நான் இரண்டு நாளாக தானே பக்கத்தில் இருந்து பார்க்கிறேன் ஆனா நீங்க இவ்வளவு எதிர்ப்பார்க்கிறது அதிகமா இல்ல..
இல்ல
என்ன இல்ல..
உனக்கு தெரியும் உன்னையே ஒருத்தன் ஆல்ஃபா பிளாக் ல உருகி உருகி லவ் பண்ணுறான்னு அதுவும் அவன் ஒரு மெடிக்கல் ஸ்டுடண்ட் ன்னு இல்ல ன்னு மட்டும் சொல்லாத நீ தேடியது இல்ல ஆனா ஒரு ஆர்வம் உன் கண்ணுல இருக்கும் அங்க ஸ்டெத்தோட போற ஒவ்வொருத்தரையும் நீ பார்க்கிற பார்வையிலேயே எனக்கு தெரியும் என் அம்மு என்னைய தான் ஆர்வமா பார்க்கிறான்னு..
நவிலா…
சொல்லு அம்மு…
ஒன்னு இல்ல
நீ ஒன்னுமே சொல்ல வேண்டாம் என் காதலை சொல்ல மாட்டேன் நம்ம காதலை நான் பேச பேச ஃபீல் பண்ணி பார்த்தா போதும்
அவள் அமைதியாகவே இருக்க..ஏய் பி12
ப்ச் அப்படி கூப்பிடாதீங்க..
ஹேய் அது கிக் டி உனக்கு புரியாது. அது ஒரு சிக்கலான கட்டமைப்பு ன்னு சொல்லுவாங்க இல்ல அது மாதிரி தான் நீ சிக்கலான கட்டமைப்பு காலேஜ் டைம் ல உன்னையே நெருங்கவும் முடியாம உன்னையே ரசிக்காமையும் இருக்க முடியாம நான் தவிச்சது எனக்கு தான் தெரியும். அவ்வளவு சேட்டை நீ எங்க எப்ப உருவெடுப்பன்னு தெரியாது ஆனா சரியா இருக்கும் பெரிசா பிரச்சினைக்கு போக மாட்ட ஆனா நீ தட்டி கழிப்ப பாரு தேவையில்லாத விஷயத்தை அதுல நீ கை தேர்ந்தவ எவ்வளவு பெரிய சிக்கலா இருந்தாலும் இந்த பி12 அவ்வளவு சமத்து..
விரக்தியாக சிரித்தவள் ஆனா இந்த பேர் எப்படி எல்லாம் அவங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டாங்க தெரியுமா? நீங்க உங்களுக்கு ஏத்த மாதிரி கட்டமைப்புன்னு அதை விளக்கிக் நீங்க அன்னைக்கு சொல்லி சொல்லி என் கண் முன்னாடியே என்றவள் மீண்டும் அழ..
என்னாச்சு அம்மு…என்று அவளை இறுக்கமாக பிடிக்க..
இந்த உடம்பு உன் பேருக்கு ஏத்த மாதிரி கட்டமைப்பு தான் ஆனா உன்னையே தொடப்போறது இல்ல தொடாமலே தொட்ட உணர்வை உன் சீனியர் தருவா வாயா பேசுறீங்க உங்களுக்கு தான் அப்படிங்குற திமிரு அப்படின்னு சொல்லி இன்னும் நிறைய பேச்சு என்றவள் அழ…
சரி சரி அதை நினைக்காத என்றவன் இனி உன்னையே அப்படி சொல்ல மாட்டேன் அம்மு..விடு..
நீங்க சொல்லன்னாலும் அது என் மனசுல இருக்கே…
விடு அதை அங்க இருந்து எடுத்துடலாம்.
அவனை முறைத்து பார்க்க என்னடி முறைப்பு அந்த இடத்துலே தேவையில்லாததை எல்லாம் வச்சுக்கிட்டு அந்த இடம் எனக்கு மட்டும் தான் அந்த அதறு பழசான குப்பையை தூக்கி போடு..
தூக்கி போட்டுட்டு புது குப்பையை வைக்கவா..
அடியேய் என்ன நீ என்னைய குப்பைன்னு சொல்லுற என்றான் நவிலன்
நீங்க தானே அது பழசான குப்பைன்னு சொன்னீங்க..
சொன்னேன் டி அது அந்த விஷயம் குப்பைக்கு சமம் ன்னு ஆனா என்னைய அப்படி சொல்லிட்டியே என்று பாவமாக பார்க்க , வாய்விட்டு சிரித்து இருந்தாள் பூம்பனி…அவள் சிரிப்பதையே பார்த்தவன் இவளை எப்படி மாத்துறது அதைப்பத்தி பேசாம வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்துக்கு போய்ட வேண்டியது தான் அவ மனசு மாறி அது மாத்தி இது மாத்தின்னு அவகிட்ட எதையும் பேசி காயப்படுத்த வேண்டாம் அவளை அவ போக்கிலேயே போக விட்டு சந்தோஷத்தை தேடனுமே தவிர தேவையில்லாம எதையும் பண்ண வேண்டாம் அவ தெளிவா தான் இருக்கா அந்த சம்பவத்தை அவ மறக்கவும் மாட்டா மன்னிக்கவும் மாட்டா என்று அவன் நினைத்து கொண்டு இருக்க.
என்ன இவரு அமைதியா இருக்காரு என்று நினைத்தவள் அவனை கிள்ள.
உஷ் என்னடி..
கீழே போகலாம்..
போகலாம் போகலாம் என்னைய கவனிச்சா கீழ போகலாம்..
நவிலா…
ஆமாண்டி இன்னைக்கு வெளியே போக பேக் பண்ண சொன்னேன்..
இப்ப வேண்டாமே என்றாள் பனி..
ஏன் அம்மு
அத்த தனியா இருக்காங்க இன்னைக்கு வேற வீட்டில் சின்னதா மனச்சங்கடம் அவங்களை தனியா விட வேண்டாம்..
அவளை ஆழ பார்த்தவன் புன்னகையுடன் அவள் கை பிடித்து கொண்டு கீழ் இறங்கி இருந்தான்.
தொடரும்
அம்மு என்று அவள் அருகில் வர மிரண்டு பார்த்தவளை அது தப்பு தான்டி இல்லன்னு சொல்லல ஆனா என்று அவன் பேசும் முன்பே..
எனக்கும் புரியுது ஆனா முடியலையே பயமா இருக்கு அந்த வலி வேதனை பார்வை எல்லாத்தையும் எனக்கு நியாபகப்படுத்துறதே யாராவது என்னைய தெரியாம உரசிட்டா கூட என்றவள் கண் மூடி அழ..
சட்டென இழுத்து அணைத்து கொண்டவன் விடு விடு வேண்டாம் இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்..
ஆனா என்று அவள் ஏதோ பேச வர..
உஷ் அந்த பேச்சு வேண்டாம் அம்மு…
பனி , “இல்ல எனக்கு சிலது தெரியனும்
என்ன தெரியனும் என்றான் நவிலன்..
மலர் சீனியர்..
அவளுக்கு என்ன?
எப்படி சீனியர் கல்யாணம் பண்ணிட்டாங்க
அவளோட வலியை மறந்து கடந்து வர அளவுக்கு அவளை விரும்புறவன் கூட இருக்கும் போது கல்யாணம் பண்ணிட்டா…
பனி, “அதுக்குள்ள அவங்க அந்த வலியை மறந்துட்டாங்களா?
மறந்து இருக்கமாட்டா அம்மு கடந்து வந்துட்டா தெருவுல இறங்கி நடந்து போறோம் தெரியாம நம்ம கால்ல சாணி ஒட்டிடுட்டுச்சு என்ன பண்ணுவோம்..
ப்ச் இதெல்லாம் எனக்கு புரியுது..
அவ்வளவு தான் இதுக்கு மேல உனக்காக புதுசா ஒரு அறிவுரை தேவை இருக்காது உனக்கு உலகம் தெரியும், புரியும் ஆனா அதை எதிர்கொள்ள மட்டும் வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? உலகத்தில் நல்லது கெட்டது இரண்டும் உண்டு நீ நல்லதை மட்டும் யோசி இனி எந்த கெட்டதும் உன்னையே நெருங்க விடமாட்டேன்..
பனி, “அப்ப உலகத்துல வேற எங்க வேணும் ன்னாலும் தப்பு நடக்கலாமா?
அம்மு எல்லா இடத்திலும் தப்பு நடக்காம பார்க்க நான் ஒன்னும் அற்புத விளக்கு இல்ல சரி பண்ண, நானும் சாதாரண மனுசன் தான் என் எல்லைக்கு உட்பட்டதும் என்னை சார்ந்தவங்களை தான் நான் பாதுகாக்க முடியும் இது தான் நிதர்சனம் இதுக்கு மேல இதை பெரிசா யோசிச்சு உனக்காக உலகத்தையே சரி பண்ணிடுவேன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.
அம்மு..
ம்ம்ம
இதுக்கு மேல அதை யோசிக்கவோ நினைச்சிட்டு இருக்கவோ கூடாது புரியுதா உனக்கு எதுல விருப்பமோ அதுல உன்னை முழுசா அர்பணிச்சுக்கோ எது பண்ணா உனக்கு அந்த பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியும் உன்னையே நீ அலசி பாரு கண்டிப்பா வழி தரும் நானோ இல்ல ஒரு சைக்காலஜியோ வழி காட்டலாம் ஆனா உனக்கு என்ன தேவைன்னு நீ தான் முடிவு பண்ணனும் அதுக்கு கண்டிப்பா நான் துணை இருப்பேன்..அம்மு நான் சொல்லுறது புரியுது தானே..
புரியுது நவிலா..
அப்ப நீ தான் முடிவு எடுக்கனும்..
நான் ஸ்கூல் தான் போகனும் ன்னு இருக்கேன் நவிலா அங்கேயே அவங்களை மாத்தணும் ன்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஆபிஸ் ல எதாவது உதவி தேவைப்பட்டா கண்டிப்பா செய்யுறேன் என்றவள் நவிலன் முகம் பார்க்க
அம்மு..
ம்ம்
நான் ஒன்னு கேட்கவா..
சொல்லுங்க..
என்னைய நவிலா ன்னு கூப்பிட்டு நான் பார்த்ததே இல்ல எப்படி இப்படி சட்டுன்னு..
அது மாமா அடிக்கடி இப்படி தான் உங்களை பத்தி பேசுவாங்க..
ஓஓஓ என்று காற்று போன பலூன் போல் அவன் ஆர்வம் அடங்கி விட
என்னாச்சு என்றாள் பூம்பனி இல்ல என்னைய உனக்கு நியாபகம் இல்லையா?
ஏன் இல்ல இருக்கே..
எப்படி என்றான் சந்தோஷ குரலில்..
நீங்களும் அந்த பசங்களும் ஒரே பேட்ச் தானே என்றவள் திக்கி திணறி கேட்டு விட,பனியை அதிர்வோடு பார்த்தவன் அப்ப என்னைய உனக்கு தெரியும்.
தெரியும் மலர் சீனியரை தொந்தரவு பண்ணுறவங்களை பார்த்து இருக்கேன் அப்ப ஒரு முறை உங்களை அவங்களோட பார்த்து இருக்கேன்..
அம்மு நான்…
நான் உங்களை குறை சொல்லவே இல்ல உங்களை எப்படி தெரியும் ன்னு சொல்லுறேன் அதுவும் நீங்க அவங்களோட இருந்தது ஒரு பேப்பர் பிரசன்டேஷன் ல ..அவள் சொல்வதை ஆச்சரியமாக பார்க்க..
என்ன நவிலா…
இல்ல இப்ப உனக்கு என் மேல் கோவம் எதுவும் இல்லையே…
கோவம் இல்ல வருத்தம் இருக்கு அன்னைக்கு நீங்க அங்கேயே இருந்து இருந்தா இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது இல்லையா…
தப்பு தான் அதுக்கு என்னால் என்ன முடியுமோ அதை தான் இதுவரை பண்ணிட்டு இருக்கேன்..
நீங்க எவ்வளவு நல்ல விஷயம் பண்ணாலும், நடந்து முடிஞ்சது இல்லன்னு ஆகுது இல்ல என்றாள் பனி..
ஏற்கனவே பனியின் எண்ணங்களை நவிலனின் தோழி சொல்லி இருந்தாள்..
நவி அவளால் அந்த சம்பவத்தை மன்னிக்கவே முடியல அதை அவ விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கவும் முடியல ரொம்ப தள்ளாடுறா..
அதுக்கு என்ன பண்ணலாம் ன்னு சொல்லு டி என்று நவிலனும் கேட்டு இருந்தான்.
அவளை அவ பிஸியா வச்சுக்கனும் இது நாம பொதுவா சொல்லுறது தான் உங்களுக்கு விருப்பமானதுல கவனம் வைங்க உங்களை நீங்க ஒரு விஷயத்தில் ஈடுபடுத்தி செயல்படுங்கன்னு ஆனா எல்லா பேசண்ட்க்கும் அது ஒத்து வருமான்னா தெரியாது இல்லையா..
ஆமா என்ன பண்ணட்டும் இப்ப..
சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணிக்க அவளோட பயத்தை போக்கு நம்பிக்கை வந்துட்டா கண்டிப்பா அவ மாறிடுவா மலர் மாதிரி அவளால் சீக்கிரம் அதை ஏத்துக்க முடியல..
அவ அந்த கொடுமையை அனுப்பவிச்சு இருந்தா அது வேற ஆனா அவளை பார்க்க வைச்சு ஒன்னு ஒன்னும் இந்த பரதேசிங்க செஞ்சு இருக்கானுங்க கொஞ்சம் கூட அவ சின்ன பொண்ணு ன்னு யோசிக்கல அதைவிட நாம ஒரு பொறுப்பான டாக்டர் அப்படிங்குறதை மறந்து சாதாரண ஆம்பிளைன்னு அன்னைக்கு அவனுங்க காட்டிட்டானுங்க என்று அவள் கத்தி இருந்தாள். அதை தான் நினைத்து கொண்டு அவளை அணைத்து கொண்டு இருந்தான் நவிலன்.
பனி “நவிலா விடுங்க நான் கீழே போறேன் மேல வந்து ரொம்ப நேரம் ஆகிட்டு..
பரவாயில்ல இங்கேயே இருக்கலாம் இப்ப என்ன அவசரம் கல்யாணம் ஆகி இரண்டு நாளைக்கு அப்புறம் இப்ப தான் என் பொண்டாட்டி கூட கொஞ்ச சேந்தாப்புல இருக்கேன் அது உனக்கு பொறுக்கலையா..
அதுக்கு நீங்க கல்யாணத்தில் விருப்பம் இருக்க பொண்ணா பார்த்து கட்டிக்கிட்டு இருக்கனும் என்று சாதாரணமாக சொல்லியவள் அத்த அங்க தனியா இருப்பாங்க கவி அண்ணி என்ன சொல்லுறாங்களோ தெரியல போகலாம் ப்பா.
அதெல்லாம் அவ அப்பவே கிளம்பி இருப்பா
அச்சோ கிளம்பி இருப்பாங்களா அப்ப அடுத்த பிரச்சினை பெரிசாகிடுமே வாங்க போகலாம் என்று அவனை இழுக்க..
இருடி வரேன் எப்ப பாரு எதையாவது யோசிச்சிட்டு அப்படி யோசிக்கிறது தான் யோசிக்கிற இங்க ஒருத்தன் இவ்வளவு பெரிய உருவமா இருக்கேனே என்னைக்காவது நீ யோசிச்சு இருக்கியா…
அவன் கைக்குள் இருந்தே நிமிர்ந்து அவனை பார்த்தவள் உங்களை நான் இரண்டு நாளாக தானே பக்கத்தில் இருந்து பார்க்கிறேன் ஆனா நீங்க இவ்வளவு எதிர்ப்பார்க்கிறது அதிகமா இல்ல..
இல்ல
என்ன இல்ல..
உனக்கு தெரியும் உன்னையே ஒருத்தன் ஆல்ஃபா பிளாக் ல உருகி உருகி லவ் பண்ணுறான்னு அதுவும் அவன் ஒரு மெடிக்கல் ஸ்டுடண்ட் ன்னு இல்ல ன்னு மட்டும் சொல்லாத நீ தேடியது இல்ல ஆனா ஒரு ஆர்வம் உன் கண்ணுல இருக்கும் அங்க ஸ்டெத்தோட போற ஒவ்வொருத்தரையும் நீ பார்க்கிற பார்வையிலேயே எனக்கு தெரியும் என் அம்மு என்னைய தான் ஆர்வமா பார்க்கிறான்னு..
நவிலா…
சொல்லு அம்மு…
ஒன்னு இல்ல
நீ ஒன்னுமே சொல்ல வேண்டாம் என் காதலை சொல்ல மாட்டேன் நம்ம காதலை நான் பேச பேச ஃபீல் பண்ணி பார்த்தா போதும்
அவள் அமைதியாகவே இருக்க..ஏய் பி12
ப்ச் அப்படி கூப்பிடாதீங்க..
ஹேய் அது கிக் டி உனக்கு புரியாது. அது ஒரு சிக்கலான கட்டமைப்பு ன்னு சொல்லுவாங்க இல்ல அது மாதிரி தான் நீ சிக்கலான கட்டமைப்பு காலேஜ் டைம் ல உன்னையே நெருங்கவும் முடியாம உன்னையே ரசிக்காமையும் இருக்க முடியாம நான் தவிச்சது எனக்கு தான் தெரியும். அவ்வளவு சேட்டை நீ எங்க எப்ப உருவெடுப்பன்னு தெரியாது ஆனா சரியா இருக்கும் பெரிசா பிரச்சினைக்கு போக மாட்ட ஆனா நீ தட்டி கழிப்ப பாரு தேவையில்லாத விஷயத்தை அதுல நீ கை தேர்ந்தவ எவ்வளவு பெரிய சிக்கலா இருந்தாலும் இந்த பி12 அவ்வளவு சமத்து..
விரக்தியாக சிரித்தவள் ஆனா இந்த பேர் எப்படி எல்லாம் அவங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டாங்க தெரியுமா? நீங்க உங்களுக்கு ஏத்த மாதிரி கட்டமைப்புன்னு அதை விளக்கிக் நீங்க அன்னைக்கு சொல்லி சொல்லி என் கண் முன்னாடியே என்றவள் மீண்டும் அழ..
என்னாச்சு அம்மு…என்று அவளை இறுக்கமாக பிடிக்க..
இந்த உடம்பு உன் பேருக்கு ஏத்த மாதிரி கட்டமைப்பு தான் ஆனா உன்னையே தொடப்போறது இல்ல தொடாமலே தொட்ட உணர்வை உன் சீனியர் தருவா வாயா பேசுறீங்க உங்களுக்கு தான் அப்படிங்குற திமிரு அப்படின்னு சொல்லி இன்னும் நிறைய பேச்சு என்றவள் அழ…
சரி சரி அதை நினைக்காத என்றவன் இனி உன்னையே அப்படி சொல்ல மாட்டேன் அம்மு..விடு..
நீங்க சொல்லன்னாலும் அது என் மனசுல இருக்கே…
விடு அதை அங்க இருந்து எடுத்துடலாம்.
அவனை முறைத்து பார்க்க என்னடி முறைப்பு அந்த இடத்துலே தேவையில்லாததை எல்லாம் வச்சுக்கிட்டு அந்த இடம் எனக்கு மட்டும் தான் அந்த அதறு பழசான குப்பையை தூக்கி போடு..
தூக்கி போட்டுட்டு புது குப்பையை வைக்கவா..
அடியேய் என்ன நீ என்னைய குப்பைன்னு சொல்லுற என்றான் நவிலன்
நீங்க தானே அது பழசான குப்பைன்னு சொன்னீங்க..
சொன்னேன் டி அது அந்த விஷயம் குப்பைக்கு சமம் ன்னு ஆனா என்னைய அப்படி சொல்லிட்டியே என்று பாவமாக பார்க்க , வாய்விட்டு சிரித்து இருந்தாள் பூம்பனி…அவள் சிரிப்பதையே பார்த்தவன் இவளை எப்படி மாத்துறது அதைப்பத்தி பேசாம வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டத்துக்கு போய்ட வேண்டியது தான் அவ மனசு மாறி அது மாத்தி இது மாத்தின்னு அவகிட்ட எதையும் பேசி காயப்படுத்த வேண்டாம் அவளை அவ போக்கிலேயே போக விட்டு சந்தோஷத்தை தேடனுமே தவிர தேவையில்லாம எதையும் பண்ண வேண்டாம் அவ தெளிவா தான் இருக்கா அந்த சம்பவத்தை அவ மறக்கவும் மாட்டா மன்னிக்கவும் மாட்டா என்று அவன் நினைத்து கொண்டு இருக்க.
என்ன இவரு அமைதியா இருக்காரு என்று நினைத்தவள் அவனை கிள்ள.
உஷ் என்னடி..
கீழே போகலாம்..
போகலாம் போகலாம் என்னைய கவனிச்சா கீழ போகலாம்..
நவிலா…
ஆமாண்டி இன்னைக்கு வெளியே போக பேக் பண்ண சொன்னேன்..
இப்ப வேண்டாமே என்றாள் பனி..
ஏன் அம்மு
அத்த தனியா இருக்காங்க இன்னைக்கு வேற வீட்டில் சின்னதா மனச்சங்கடம் அவங்களை தனியா விட வேண்டாம்..
அவளை ஆழ பார்த்தவன் புன்னகையுடன் அவள் கை பிடித்து கொண்டு கீழ் இறங்கி இருந்தான்.
தொடரும்