• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
வாங்க என்று வாய் அழைத்தாலும் மனம் முழுதும் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது.

தன் அறையின் கதவை திறந்தவள் அவன் வருவதற்கு வழி விட்டு உள்ளே சென்றாள். தன் கஃபோர்டு திறந்து அவனுக்கான நைட் ட்ரெஸ்ஸை எடுத்து குடுத்தாள்.

அவளின் செயலில் அவன் விழிகள் ஆச்சர்யத்தில விரிந்தது.

தன் வீட்டில் எப்பொழுதும் அவனின் சிறு வேலைகளை கூட அவனே செய்வான். வேறு யாரையும் செய்ய அனுமதிக்க மாட்டான்.

தன்னை கவனித்து நெருக்கத்தில் அன்பு செலுத்த தனக்கென ஒருவள் வந்து விட்டாள் என்பதை இப்பொழுது உணர்ந்தான்.

"தேங்க்ஸ்" என்றுவளை பார்வையில் துளைத்து கொண்டிருந்தான்.

வழக்கம் போல் அவளோ அவன் விழி அம்பில் இருந்து தப்பிக்க தரையை பார்த்து கொண்டிருந்தாள்.

'கடவுளே இவள் என் மனதைம் உடலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிக்கிறாள். இதுல ஆன்ட்டி வேற இங்கயே தங்க சொல்லிட்டாங்க இன்னைக்கு நைட் எனக்கு ரொம்ப கஷ்டமானதா இருக்க போகுது.'

அவன் உடை மாற்றாமல் அங்கேயே நிற்க, "போய் டிரஸ் மாத்திக்கோங்க உங்க டிரஸ் லயிட்டா ஈரமா இருக்கு இப்படி நின்னா கண்டிப்பா சளி பிடிக்கம்." என்றாள் மிக மெல்லிய குரலில்.

"தோ மாத்திகிறேன்." என்று வாஷ் ரூம் சென்று மாற்றிக்கொண்டு வந்தவன் அவள் உடை மாற்றாமல் நிற்பதை பார்த்து, "நீயும் போய் மாத்திக்க போ." என்றான் மெதுவாக.

"இல்ல என்கிட்டே எல்லாமே புடவை தான் இருக்கு. நா அங்க இருந்து டிரஸ் எதுவும் கொண்டு வரல. பரவா இல்ல நான் இந்த ட்ரேஸ்லேயே இருக்கேன்."

"சாரி. இருந்த டென்ஷன்ல நான் உனக்கு எந்த டிரஸ்ஸும் வாங்கி தரவே இல்ல." ஷக்தி.

"பரவா இல்லங்க. இங்க அம்மா மத்த எல்லாரும் என்னை அவங்க வீட்டு பொண்ணு மாதிரி நல்லா பார்த்துக்குறாங்க. இங்க இருக்குற எல்லாமே புது புடவைகள் தான், எனக்கு அதுவே போதும், நீங்க என்னை இங்க விட்டுட்டு போனாலும் எனக்கு நல்ல குடும்பத்தை குடுத்துருக்கீங்க அதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்." என்றவளை தலை முதல் பாதம் வரை ஒருமுறை நோட்டமிட்டான்.

அவள் செவ்விதழ்களின் நடனத்தில் தன்னை மறந்தவன் அவள் கைகளை பிடித்து தன்னிடம் இழுத்த வேகத்தில், அவனின் திடீர் எதிர்பாராத தாக்குதலால் நிலை இழந்து அவனோடு மோதி இருவரும் கட்டிலில் விழ சக்தியின் கரங்கள் அவள் இடையினை தாங்கி பிடித்தன.

அவன் முதுகுத்தண்டில் மின்சாரம் பாய்வது போல் ஓர் உணர்வு. அவளின் பட்டு மேனி தன் மேல் இருப்பதும அங்கேயும் இங்கேயும் அசைத்தாடும் அந்த துரு துரு விழிகளும் இதய துடிப்பு போல் விரிந்து சுருங்கி குவியும் அந்த இதழ்களும் 'ஓஹ் நோ ஷி ட்ரைவ்ஸ் மீ க்ரேஸிலி' என்று அவள் இதழ்களோடு தன் இதழ்களை சேர்க்க முனைந்தான்.

அலாரம் வைத்து போல் அடித்தது அவனின் போன், "ப்ச்சு இப்ப எந்த கரடின்னு தெரியலையே?" என்று வாய் விட்டே திட்டினான்.

இது தான் சமயம் தப்பித்தேன் என்று வேகமாக அவன் பிடியில் இருந்து விலகினாள். அவளை கண்களால் அளந்தபடியே போனில், "ஹெலோ!" என்றான் கோவமாக.

"என்ன ப்ரோ தூங்கிட்டியா?" என்கிற குரலில் எரிச்சல் அடைந்தவன் "இல்ல முடி வெட்டிட்டு இருக்கேன். என்னடா வேணும் உனக்கு ?"

"நீ தான் ப்ரோ. ப்ளீஸ் மொட்டை மாடிக்கு வா." என்றான் சுரேஷ்.

"டே எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் இப்ப ஒழுங்கா தூங்கு." என்றான்.

"இல்ல நீ இப்பவே வர நா வெயிட் பண்றேன்." என்று போனை கட் செய்தான்.

"இவன் வேற நேரம் காலம் தெரியாம என் உயிரை வாங்கறான்." என்று நினைத்தபடி மஹாவிடம் திரும்ப, "நீ படுத்து தூங்கு நான் இப்ப வரேன்." என்று மாடிக்கு வந்தான்.

"என்னடா இந்த நேரத்துல ஏன் கூப்பிட்ட?" என்றான் ஷக்தி

"டே அந்த ராட்சஷிய என் தலைலகட்ட முடிவு பண்ணிட்டாங்கடா."

"யாரு?"

"யாருன்னு உனக்கு தெரியாது?" என்று அவனை முறைக்க, "நீ சொன்னா தானடா தெரியும்?"

"ஹ்ம் அதான் அந்த பிசாசு ஜனனியை." என்றான் கோவமாக.

"ஹே காங்கிராட்ஸ் டா."

"எரிய நெருப்புல நீ வேற என்னைய ஊத்தாத." சுரேஷ்.

"டே! அவ உங்க அத்தை பொண்ணு தான? ரொம்ப நல்ல பொண்ணுடா. பேசாம கல்யாணம் பண்ணிக்கோ."

"டே எனக்கும் அவளுக்கும் சுத்தமா செட் ஆகாது."

"சரி. அப்ப நிறுத்திடலாமா °?"

"அது முடியாது அவங்க ஜெர்மனிலர்ந்து வந்துடாங்க, நாளைக்கு எனக்கு எங்கேஜ்மென்ட் இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்." என்றான்.

"என்னடா தீடிர்னு இவ்ளோ சீக்கிரமா நீ உங்க அப்பாகிட்ட முடியாதுக்கு சொல்றது தான?" என்று கேட்க, "அப்பா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். அவளை வேணாம்னு சொன்ன இந்த குடும்பம் மொத்தமும் என்கிட்டேர்ந்து விலகிடுவாங்களாம்." என்று கண் கலங்கினான்.

"என்ன சொல்றதுன்னு தெரியல யு ஹவ் டு அக்ஸ்ப்ட் ஹேர்."

"நோ வே! நான் கட்ற தாலி வேணா அவ கழுத்துல தொங்கும். ஆனா, என்னைக்கும் நா அவளுக்கு சொந்தமாக மாட்டேன்." என்றான் பிடிவாதமாக.

பின் பெரு மூச்செறிந்தவன், "எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. உங்கிட்ட பேசினா கொஞ்சம நல்லாருக்கும்னு பீல் பண்ணேன். அதான் உன்ன கூப்பிட்டேன். சாரி டா. நீ போ அண்ணி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க." என்றான்.

"சரி டா. நீ போய் படு. எதுவா இருந்தாலும் காலைல பார்த்துக்கலாம்." என்று கீழே இறங்கி தங்கள் ரூமிற்கு வந்தான்.

அங்கே மஹா!

****

சியு இந்த நெக்ஸ்ட் எபிசொட் இ ட்ரை டு அப்டேட் ரெகுலர்லி ஷேர் யுவர் ஓட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்
 
Top