மஹா அங்கே தரையில் பாய் விரித்து படுத்து உறங்கி இருந்தாள். அப்படியல்ல உறங்குவது போல் கண் மூடி படுத்திருந்தாள்.
'அடிப்பாவி ஒரு பத்து நிமிஷம் போயிட்டு வரதுக்குள்ள இந்த வேல பார்த்து வெச்சுருக்காளே இவளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது?"' என்று நினைத்தவன் மஹாவின் அருகில் தரையில் அமர்ந்து கொண்டு, "மஹா" என்று அழைத்தான். எந்த அசைவும் இல்லாததால், "தூங்கி இருப்பாளோ?" என்றவன்.
கண்கள் மூடி இருந்தாலும் கருவிழிகள் அசைந்தாடுவதை பார்த்து, 'முழிச்சு கிட்டு தான் இருக்கியா? என்கிட்டயேவா இரு வரேன்.' ன்று மெல்ல எழுந்தவன். தன் இரு கைகளால் அவளை ஏந்தி கட்டிலில் படுக்க வைத்தான்.
அவன் கரங்கள் அவள் உடலை தீண்டியவுடன் அவளின் இதயத்துடிப்பு அவனுக்கே கேட்கும் அளவு துடித்தது. அவளின் பட்டு போன்ற உடல் நடுங்குவதையும் எந்த நொடியும் கண்களை திறந்து விடுவேன் என்பது போல் கண்களின் கருவிழி அசைவதையும் ரசித்தபடியே கிடத்தினான்.
தானும் அவளின் மறுபுறம் மிக நெருக்கத்தில் படுத்துக்கொண்டு அவளின் காதருகே மிகவும் நெருக்கத்தில், "நீ தூங்கற மாதிரி நடிக்கறப்பக்கூட ரொம்ப அழகா இருக்க." என்றான்.
அவனின் சொற்களால் திகைத்து கண்களை பட்டென்று திறந்தவள் மாட்டிக் கொண்டோம் என்பதால் கீழ் உதட்டை கடித்தபடி அவனை நோக்கினாள்.
"இன்னும் நீ என்னை நம்பலையா? என்னை பார்த்து ஏன் அப்டி பயப்படற? நிசசயமா உன் அனுமதி இல்லாம நா கணவனா நடக்கனும்னு நினைக்க மாட்டேன். அதனால நீ என்னை பார்த்து பயப்படாத."
"அப்டி எல்லாம் ஒன்றும் இல்லை." என்றாள் அவனை நோக்காமலே.
"நா தான் உன்ன முதல்ல பார்த்து லவ் பண்ணேன். உன் அனுமதி இல்லாமலே உன் கழுத்தில் தாலி கட்டிட்டேன். உனக்கு என்னை பிடிச்சிருந்தா நாம முதல இருந்து லவ் பண்லாம் "
சரி என்று தலை ஆட்டினாள்.
"உன்னுடைய விருப்பங்கள் என்னண்னு நானும் என்னுடையதை நீயும முதல்ல தெரிஞ்க்கலாம். இந்த இரவு மாதிரி திரும்பி வர பல நாள் ஆகும். அதனால அடுத்த இரவு வரும் வரை இந்த இரவை நினைவாக இருக்கும்படி செய்யலாம்." என்று கண்ணடித்தான்.
"இங்க பாரு அதுக்காக என்னால சாமியார் மாதிரில்லாம் இருக்க முடியாது. அதனால அப்பப்போ ஒரு சின்ன முத்தம் சில சின்ன தீண்டல் சீண்டல்னு இருப்பேன் சொல்லிட்டேன்." என்றவன் ஒரு நொடி ஏறேடுத்து பார்த்தவள் மறுநொடி தலை தாழ்த்தினாள்.
"பின்ன உன்ன மாதிரி அழகா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு அமைதியா இருக்கறது ரொம்ப கஷ்டம் மஹா." என்றபடி ஒரு நொடியும் தாமதிக்காமல் அவள் கண்களில் முத்தங்களை கொடுத்தபடி அணைத்துக் கொண்டான்.
தன் கணவனின் முதல் முத்தத்திலும் தீண்டலிலும் ஒரு பெண் நடுங்கினாலும் தனக்கான அன்பு அதில் தெரிவதால் அவனிடம் தஞ்சம் அடைவாள்.
அதற்கு மஹாவும் விதிவிலக்கல்ல. அவளும் சக்தியின் அணைப்பில் கட்டுண்டு இருவரும் வெகு நேரம் மனம் விட்டு பேசிய பின் உறங்கினர்.
விடிந்ததும் எழுந்து காலை கடன்களை முடித்து சமையல் செய்வதற்கு உதவ வந்தவளை மேலிருந்து கிழ் வரை பார்த்த சுரேஷின் அம்மா சிரித்தபடி, "என்னமா சக்தி இன்னும் எந்திரிகலையா?" என்றார்.
"இல்லம்மா தூங்கிட்டு தான் இருக்கார்."
"சரி. நீங்க இன்னும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலையா?"
"இல்லம்மா அது வந்து..." என்று இழுத்தவளை தன் அருகே அழைத்து நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டார்.
"சரி. பரவால்லமா முதல்ல உங்கள ஒருத்தர ஒரத்தர் புரிஞ்சிகிட்டப்புறம் வாழ்க்கையை ஆரம்பிக்கறதுல தப்பில்லேடா. சரி இந்தா ஷக்தி டி காபி குடிக்க மாட்டான். அவனுக்கு பாதாம் பால் ரொம்ப பிடிக்கும் போய் குடு." என்றார்.
"சரிம்மா" என்று தங்களின் அறைக்கு எடுத்து சென்றவள். தான் என்று நினைத்து தலையணை கட்டிக்கொண்டு உறங்குவதை நினைத்து சிரித்தாள்.
"என்னங்க" என்று மெதுவாய் அழைத்தாள்.
"ஹ்ம்" என்றபடி புரண்டு படுத்தான்.
"குட் மோர்னிங்" என்றவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டு மெல்ல கண்களை திறந்து மஹாவை பார்த்து "குட் மோர்னிங் மை டியர்." என்று நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்.
"உன் புகுந்த வீட்டினர் இன்னைக்கு வருவாங்க."
"என்ன?"
"ஆமா டா இன்னைக்கு சுரேஷ்க்கு நிச்சயதார்த்தம்."
"சரி"
எழுந்து ரெடி ஆகி ஷக்தி மஹாவிடம்
"சரி டைம் ஆகுது. நா கிளம்பறேன்." என்று கதவிடம சென்றவன் திரும்பி, "நா வர ஈவினிங் ஆகிடும் அதனால?" என்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க தன் இதழை கடித்தபடியே ஒரு அடி பின் எடுத்து வைத்தாள்.
"ஹே என்ன பார்த்து ஓடாத " என்று அவள் கை பற்றி தன்னிடம் இழுத்தான்.
கதவு தட்டும் ஓசை கேட்க திரும்பி அவனை பார்த்தாள்.
"அண்ணி அம்மா கூப்பிட்றாங்க."
"இதோ வரேன்." என்றவள் அவன் யோசிக்கும் முன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு சிட்டாய் பறந்தாள்.
ஒரு நொடி நடந்தது புரிய தலையை கோதியபடி மெல்லிய புன்னகை அரும்பியது சக்தியிடம்....
கனவுகள் தொடரும் .....
பிடிச்சிருந்தா ஷேர் யுவர் ஓட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்
'அடிப்பாவி ஒரு பத்து நிமிஷம் போயிட்டு வரதுக்குள்ள இந்த வேல பார்த்து வெச்சுருக்காளே இவளை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது?"' என்று நினைத்தவன் மஹாவின் அருகில் தரையில் அமர்ந்து கொண்டு, "மஹா" என்று அழைத்தான். எந்த அசைவும் இல்லாததால், "தூங்கி இருப்பாளோ?" என்றவன்.
கண்கள் மூடி இருந்தாலும் கருவிழிகள் அசைந்தாடுவதை பார்த்து, 'முழிச்சு கிட்டு தான் இருக்கியா? என்கிட்டயேவா இரு வரேன்.' ன்று மெல்ல எழுந்தவன். தன் இரு கைகளால் அவளை ஏந்தி கட்டிலில் படுக்க வைத்தான்.
அவன் கரங்கள் அவள் உடலை தீண்டியவுடன் அவளின் இதயத்துடிப்பு அவனுக்கே கேட்கும் அளவு துடித்தது. அவளின் பட்டு போன்ற உடல் நடுங்குவதையும் எந்த நொடியும் கண்களை திறந்து விடுவேன் என்பது போல் கண்களின் கருவிழி அசைவதையும் ரசித்தபடியே கிடத்தினான்.
தானும் அவளின் மறுபுறம் மிக நெருக்கத்தில் படுத்துக்கொண்டு அவளின் காதருகே மிகவும் நெருக்கத்தில், "நீ தூங்கற மாதிரி நடிக்கறப்பக்கூட ரொம்ப அழகா இருக்க." என்றான்.
அவனின் சொற்களால் திகைத்து கண்களை பட்டென்று திறந்தவள் மாட்டிக் கொண்டோம் என்பதால் கீழ் உதட்டை கடித்தபடி அவனை நோக்கினாள்.
"இன்னும் நீ என்னை நம்பலையா? என்னை பார்த்து ஏன் அப்டி பயப்படற? நிசசயமா உன் அனுமதி இல்லாம நா கணவனா நடக்கனும்னு நினைக்க மாட்டேன். அதனால நீ என்னை பார்த்து பயப்படாத."
"அப்டி எல்லாம் ஒன்றும் இல்லை." என்றாள் அவனை நோக்காமலே.
"நா தான் உன்ன முதல்ல பார்த்து லவ் பண்ணேன். உன் அனுமதி இல்லாமலே உன் கழுத்தில் தாலி கட்டிட்டேன். உனக்கு என்னை பிடிச்சிருந்தா நாம முதல இருந்து லவ் பண்லாம் "
சரி என்று தலை ஆட்டினாள்.
"உன்னுடைய விருப்பங்கள் என்னண்னு நானும் என்னுடையதை நீயும முதல்ல தெரிஞ்க்கலாம். இந்த இரவு மாதிரி திரும்பி வர பல நாள் ஆகும். அதனால அடுத்த இரவு வரும் வரை இந்த இரவை நினைவாக இருக்கும்படி செய்யலாம்." என்று கண்ணடித்தான்.
"இங்க பாரு அதுக்காக என்னால சாமியார் மாதிரில்லாம் இருக்க முடியாது. அதனால அப்பப்போ ஒரு சின்ன முத்தம் சில சின்ன தீண்டல் சீண்டல்னு இருப்பேன் சொல்லிட்டேன்." என்றவன் ஒரு நொடி ஏறேடுத்து பார்த்தவள் மறுநொடி தலை தாழ்த்தினாள்.
"பின்ன உன்ன மாதிரி அழகா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு அமைதியா இருக்கறது ரொம்ப கஷ்டம் மஹா." என்றபடி ஒரு நொடியும் தாமதிக்காமல் அவள் கண்களில் முத்தங்களை கொடுத்தபடி அணைத்துக் கொண்டான்.
தன் கணவனின் முதல் முத்தத்திலும் தீண்டலிலும் ஒரு பெண் நடுங்கினாலும் தனக்கான அன்பு அதில் தெரிவதால் அவனிடம் தஞ்சம் அடைவாள்.
அதற்கு மஹாவும் விதிவிலக்கல்ல. அவளும் சக்தியின் அணைப்பில் கட்டுண்டு இருவரும் வெகு நேரம் மனம் விட்டு பேசிய பின் உறங்கினர்.
விடிந்ததும் எழுந்து காலை கடன்களை முடித்து சமையல் செய்வதற்கு உதவ வந்தவளை மேலிருந்து கிழ் வரை பார்த்த சுரேஷின் அம்மா சிரித்தபடி, "என்னமா சக்தி இன்னும் எந்திரிகலையா?" என்றார்.
"இல்லம்மா தூங்கிட்டு தான் இருக்கார்."
"சரி. நீங்க இன்னும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலையா?"
"இல்லம்மா அது வந்து..." என்று இழுத்தவளை தன் அருகே அழைத்து நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டார்.
"சரி. பரவால்லமா முதல்ல உங்கள ஒருத்தர ஒரத்தர் புரிஞ்சிகிட்டப்புறம் வாழ்க்கையை ஆரம்பிக்கறதுல தப்பில்லேடா. சரி இந்தா ஷக்தி டி காபி குடிக்க மாட்டான். அவனுக்கு பாதாம் பால் ரொம்ப பிடிக்கும் போய் குடு." என்றார்.
"சரிம்மா" என்று தங்களின் அறைக்கு எடுத்து சென்றவள். தான் என்று நினைத்து தலையணை கட்டிக்கொண்டு உறங்குவதை நினைத்து சிரித்தாள்.
"என்னங்க" என்று மெதுவாய் அழைத்தாள்.
"ஹ்ம்" என்றபடி புரண்டு படுத்தான்.
"குட் மோர்னிங்" என்றவளை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டு மெல்ல கண்களை திறந்து மஹாவை பார்த்து "குட் மோர்னிங் மை டியர்." என்று நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்.
"உன் புகுந்த வீட்டினர் இன்னைக்கு வருவாங்க."
"என்ன?"
"ஆமா டா இன்னைக்கு சுரேஷ்க்கு நிச்சயதார்த்தம்."
"சரி"
எழுந்து ரெடி ஆகி ஷக்தி மஹாவிடம்
"சரி டைம் ஆகுது. நா கிளம்பறேன்." என்று கதவிடம சென்றவன் திரும்பி, "நா வர ஈவினிங் ஆகிடும் அதனால?" என்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க தன் இதழை கடித்தபடியே ஒரு அடி பின் எடுத்து வைத்தாள்.
"ஹே என்ன பார்த்து ஓடாத " என்று அவள் கை பற்றி தன்னிடம் இழுத்தான்.
கதவு தட்டும் ஓசை கேட்க திரும்பி அவனை பார்த்தாள்.
"அண்ணி அம்மா கூப்பிட்றாங்க."
"இதோ வரேன்." என்றவள் அவன் யோசிக்கும் முன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு சிட்டாய் பறந்தாள்.
ஒரு நொடி நடந்தது புரிய தலையை கோதியபடி மெல்லிய புன்னகை அரும்பியது சக்தியிடம்....
கனவுகள் தொடரும் .....
பிடிச்சிருந்தா ஷேர் யுவர் ஓட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்