16.நவிலனின் கோதையானாள்
என்ன யோசனை பலமா இருக்கு அம்மு..
….
அம்மு என்று அவள் தோள் தொட பதறி எழுந்தவள் நவிலனை பார்த்து சத்தமா கூப்பிட மாட்டீங்களா எப்படி பயந்துட்டேன்.
ஆமாண்டி நான் வந்து அரைமணிநேரம் ஆகுது ஆனா உன் கவனம் இங்க இல்ல உன்னையே தான் தேவையில்லாம யோசிக்காத ன்னு சொல்லி இருக்கேன் இல்ல என்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.
ப்ச் ஒன்னு இல்ல..
அம்மு…
ம்ம்ம
வந்து தூங்கு எதையும் யோசிக்காம…
அப்படித்தான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன் ஆனா முடியலையே…
முடியனும் அது தான் எல்லாருக்கும் நல்லது.
ம்ம்ம
சரி தூங்கு அம்மு நாளைக்கு நாம நம்ம தோட்டத்துக்கு போகலாம் ..
ஓஓஓ தோட்டம் எல்லாம் இருக்கா..
இருக்குடா என்றான் நவிலன்.
சரி சரி என்று கேட்டு கொண்டவள் படுத்து கொள்ள விளக்கை அணைத்தான் மற்ற சிறிய விளக்குகளை ஒளிர விட்டு படுத்து விட படுத்த அடுத்த பத்து நிமிடத்தில் உறங்கி இருந்தாள் அவள் விளக்கு இல்லாமல் தூங்கி பல வருடம் ஆகி விட்டது இருட்டு என்றாலே பயம் என்று ஆகிவிட்டது அந்த நிகழ்வுக்கு பிறகு.
இரவு தூங்காமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள் கவிதா.
வசந்த், “தூங்கலையா நீ என்று உள்ளே நுழைந்தவனை பார்த்து முறைத்தவள் என்ன நக்கலா என்றாள் கவிதா..
ஏன் மா..
என்ன ஏன் மா ஒன்னு தெரியாத மாதிரி கேள்வி உங்களுக்கு..
இப்ப என்ன பிரச்சினை கவி?
அப்ப உங்களுக்கு என் பிரச்சினை என்னனு தெரியாது…
ஒரு பெருமூச்சுடன் இப்ப என்ன பேசனும் இல்ல நான் என்ன கேட்கனும் சொல்லு..
அந்த ஸ்கூல் ல எனக்கு ஒரு பங்கு வேணும்?
எதுக்கு?
ஆமா சும்மாவா அவன் சம்பாதிக்கிறதுல எனக்கு உரிமை இருக்கு…
ஓஓஓ அப்படியா..
என்ன ராகம் இழுக்குறீங்க..
நீ சொல்லுறது சரி தான் அப்ப நான் சம்பாதிக்கிறதில் என் தங்கைக்கும் என் அம்மாக்களும் உரிமை இருக்கு இதை நான் எப்படி மறந்தேன் என்று யோசனையாக அமர்ந்தவன் எதையோ யோசித்து விட்டு சரி சரி உனக்கு போன் மாசம் இரண்டு ஆரம் வாங்கினோம் இல்ல அதை எடுத்துட்டு வா என்றான் வசந்த்..
கவிதா, “எதுக்கு?
வேற எதுக்கு அது என் சம்பாத்தியத்தில் வாங்கினது அப்ப அந்த இரண்டு ஆர்வத்தில் ஒன்றை என் தங்கிச்சிக்கு தரனும் இல்ல..
அதெப்படி தருவீங்க அது உங்க அப்பா சம்பாதிச்சு தரனும் நீங்க சம்பாதிக்கிறது எனக்கும் என் மகனுக்கும் தான்..
ஓஓஓ அப்படி வரியா ..
ஆமா ..
அப்ப சரி கவி நவிலன் சம்பாதிக்கிறது அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் தான் நீ எப்படி கேட்கலாம் என்று கேட்டதும் ஒரு நொடி தயங்கி பின் அது எங்க அப்பா சம்பாதிச்சது அதுல எனக்கு பங்கு இருக்கு..
வசந்த், “ உங்க அப்பா சம்பாதிச்சது பங்கு இருக்கு நான் இல்லன்னு சொல்லல ஆனா அவன் அவனோட சம்பாத்தியத்தில் தான் அவன் பொண்டாட்டிக்கு அந்த ஸ்கூல் ஷேர் வாங்கி இருக்கான் அப்ப அதுல நீ கேட்கிறது தப்பு தானே..
அதெப்படி அவன் என் தம்பி ..
அந்த நகையை எடுத்துட்டு வா கவி..
முடியாது ..
அப்ப ஒழுங்கா இருக்க பாரு சும்மா தேவையில்லாததை பேசாத உனக்கு அவன் தரவேண்டிய ஷேர் தந்துட்டான் இல்ல அதோட நிறுத்திக்க இல்ல நான் பேசுவேன் பிரச்சினை பண்ணுவேன்னு சொன்னா இந்த உறவை முறிச்சிக்க கிளம்பி போய்ட்டே இரு..
வசந்த்..
…
கவிதா, “என்ன இப்படி பேசுறீங்க..?
வேற எப்படி பேசுவாங்க உனக்கு வரவர பேராசை அதிகம் இங்க நான் சம்பாதிக்கிறேன் உனக்கு வந்த பங்கை கூட நான் தான் பார்த்துக்கிறேன் இதுக்கு இடையில் என் கம்பெனியையும் பார்க்கிறேன் ஒரே ஒரு பையனை பெத்து வச்சு இருக்கோம் அவனுக்கு எல்லாமே உன் தம்பி தான் பார்க்கிறான் அதைவிட முக்கியமா இன்னும் பிறந்த வீட்டில் இருந்து வாங்கிட்டு வராததே இல்ல அப்பவும் உனக்கு நிறையலையா?
வசந்த் இவ்வளவு நீளமாக பேசவும் கவிதாவே ஆவென பார்த்து நிற்க..
அதோடு நிறுத்தாமல் வசந்த் பிடித்துக்கொண்டான் என் அம்மாவை தனியா வச்சுட்டு அவங்களுக்கு எதையும் செய்யுறது இல்ல என் தங்கை அவளையும் சேர்க்கை ஆனா உனக்கு அவளை உன் தம்பிக்கு கட்டி வச்சு அந்த சொத்தையும் ஆளனும் ன்னு எண்ணம் அவளுக்கு நகை வாங்க கூடாது அவ பெயர் ல சொத்து வாங்க கூடாது எல்லாத்தையும் கண் கொத்தி பாம்பா பார்க்க வேண்டியது உன் மகனுக்காச்சும் எதாவது கருவியாக இல்ல அவனையும் பொறாமையா பார்ப்பியா உன் தம்பிக்கும் உன் மகனுக்கும் ஒரு பத்து வருஷம் தானே வித்தியாசம் ஆனா உன் தம்பிக்கு ஏன் எதையும் செய்யனும் ன்னு உனக்கு மனசு வரமாட்டேங்குது அப்படி என்ன வக்கிர புத்தி உனக்கு ? ஏதோ கல்யாணம் கட்டி குடும்பம் நடத்திட்டோமேன்னு அமைதியா இருந்தா உன் இஷ்டத்துக்கு நீ ஆடுவியா…
வசந்த்..
மூச் இதுக்கு மேல எதாவது பேசின வெட்டி விட்டு போய்ட்டே இருப்பேன் என்றவன் சென்று படுத்து விட..
வசந்த்…வசந்த்..
அந்த அழைப்பிற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை..
எனக்கு பசிக்குதுங்க நான் இன்னும் சாப்பிடல என்று கவிதா ஆரம்பிக்க..
வெடுக்கென திரும்பியவன் பசிச்சா சாப்பிடு எதுக்கு என்னைய படுத்துற..
ஏங்க இப்படி பேசுறீங்க உங்களுக்காக தானே என்று முடிக்கும் முன்..
வீட்டுக்கு வந்த மனுசன் கிட்ட சாப்பிடலாமா எதாவது வேணுமா ன்னு கேட்காம உன் தேவையை இவ்வளவு நேரம் அளந்த இல்ல அதே மாதிரி இனி இருந்துக்க உனக்கு படிச்சா நீ சாப்பிடு என்றவன் திரும்பி படுத்து கொள்ள மனதில் வலியோடு எதுவும் பேசாமல் கவிதாவும் படுத்து கொண்டாள்.
விடியலில் நவின் எழுந்து பார்க்க அவனை கட்டி கொண்டு உறங்கி இருந்த பூம்பனியை தான் பார்த்து இருந்தான் அவளை பார்த்ததும் அம்சா சொன்னது தான் நினைவு வந்தது..
மாப்ள அவ தனியா படுக்கிறதையே மறந்துட்டா பக்கத்தில் இருக்கவங்களை இறுக்கமா பிடிச்சுட்டு தான் தூங்குவா இத்தனை நாள் நான் தான் அவ பக்கத்துல தூங்கினேன் அவளுக்கு பயம் இல்லாம இருந்தது.. இப்ப என்று தயங்க..
ஏன் அத்த..
இல்ல மாப்ள அவ அவங்க அப்பாவை கூட தள்ளி நிறுத்தி தான் பார்க்கிறா அதான் என்று பார்க்க
அத்த பயப்படாதீங்க அவ என் பொறுப்பு நான் பத்திரமா பார்த்துப்பேன் அதேநேரம் கூடிய சீக்கிரம் அவ எல்லாரையும் ஏத்துப்பா குறிப்பாக அவ வாழ்க்கையை .. என்று அன்று சொல்லியதை நினைத்து கொண்டு அவளையே பார்த்து இருக்க மெல்ல அசைந்தாள் பூம் பனி பட்டென கண்ணை மூடிக்கொண்டான் நவின் நவிலா இது தான் சமயம் அவளை அணைச்சிட்டு தூங்கு என்றதும் அவனும் அவளை இதமாக அணைத்து கொள்ள
அந்த அணைப்பில் கண் திறந்தவள் படபடப்பாக பார்க்க நவிலனின் தோள் வளைவில் தன்னை நுழைத்து இருப்பதை உணர்ந்து விலக நினைத்தவள்…
நவிலனையே உற்று பார்த்தாள் அவன் ஆழ்ந்து உறங்குவதை உணர்ந்து உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னவள் காலேஜ் படிக்கும் போதே ஆனா அந்த விஷயத்துக்கு அப்புறம் பார்க்கவே இல்ல இல்ல அதை அப்படியே விட்டுட்டேன் .ஆபிஸ் வந்த முதல் நாள் உங்களை தான் உங்க அப்பா கூட பார்த்தேன் மறுபடி ஒரு சந்தோஷ ஊற்று ஆனா நிறைய தயக்கம் பழைய பூம் பனி இல்லையே நான் அதனாலேயே விலகி விலகி இதோ இப்ப கூட நெருங்க பயமா இருக்கு என்ன இருந்தாலும் என்னைய விக்டீமா தானே எல்லாரும் என்று சொல்லாமல் நிறுத்தியவள் அமைதியாக இருக்க..
என்ன இல்ல சத்தமே இல்லாமல் இருக்கா என்று நினைத்த நவின் மெல்ல கண்ணை திறக்க பார்க்க அவன் கன்னத்தில் சூடான நீர் சொட்டாக விழ படக்கென விழியை பிறந்தவன் அம்மு என்று அவளை அணைக்க நவிலா என்று அவன் மீதே சரிந்து கொண்டாள் நவிலனின் கோதை…
என்னாச்சு டா எதுக்கு அழற..
ஒன்னு இல்ல சும்மா..
இங்க பாரு அம்மு நீ சும்மா கூட அழக் கூடாது…அதுக்கு மட்டும் நான் என்னைக்கும் அனுமதிக்க மாட்டேன்.
ம்ம் என்று அவள் முணங்க…
இங்க பாருடி..
ம்ம்ம
ஏய் நிமிர்ந்து பாருடி..
சொல்லுங்க
நாம கொஞ்ச நாளைக்கு வேற ஊருக்கு போகலாமா…
எதுக்கு அத்த தனியா இருப்பாங்க..
அதை சரிபண்ண தான்டி வேற ஊர்ல போகலாம் ன்னு சொல்லுறேன்..
வேற ஊர்ல போனாலும் அதை எப்படி சரி பண்ண அத்த அம்பையும் தனியா தானே இருப்பாங்க..
இவளுக்கு மண்டையில் எத்துறதுக்குள்ள நீ கிழவன் ஆகிடுவ நவிலா என்று வாய் விட்டே புலம்ப
என்ன ஏத்தும் எனக்கு எதுக்கு இப்படி சலிச்சுக்குறீங்க..
ஆமாண்டி சலிச்சுக்குறேன் உங்க அத்தை தனியா இருக்கிறதை போக்க வழி இருக்கு அதை செஞ்சா அவங்க சந்தோஷமா இருப்பாங்க..
என்ன பண்ணனும் சொல்லுங்க பண்ணிடுறேன்..
நிஜமாவா..
ஆமா அப்புறம் பின் வாங்க கூடாது..
இல்ல இல்ல ஏன் அப்படி கேட்குறீங்க என்னால் முடியாதா..
உன்னால் மட்டும் தான் முடியும் ஆனா நீ ஒத்துக்கனுமே…
ஏன் நான் அத்தைக்காக செய்ய மாட்டேனா என்ன சொல்லுங்க என்ன பண்ணனும் ன்னு என்று அவள் ஆர்வமாக அவன் மீதே படுத்து கொள்ள அவனுக்கு தான் இன்ப அவஸ்தையாகி போனது.
அம்மு என்று அவன் கிறக்கமாக அழைக்க..
அவளோட அவன் சொல்ல வரும் விஷயத்தை கேட்பதில் ஆர்வமாக இருந்தாள்
சொல்லுங்க நவிலா…
நம்ம ..
நம்ம..
…
என்னங்க பேசாம என்னைய பார்த்துட்டு இருக்கீங்க என்ன பண்ணனும் சொல்லுங்க நான் அத்தைக்காக செய்யுறேன்.
நீ எதுவும் பண்ண வேண்டாம் நான் சொல்லுவதை கேட்டா போதும் என்று அவன் நிறுத்த…
சரி சொல்லுங்க என்றாள் பூம் பனி..
நிஜமா தானே சொல்லுற..
ஆமா இதுல யாராவது விளையாடுவாங்களா…
அப்ப பின் வாங்க கூடாது என்றான் நவிலன்…
இல்ல வாங்க மாட்டேன்..
ப்ராமிஸ்..
கண்டிப்பா
அப்ப சரி இன்னைக்கே டிக்கெட் போடுறேன் ஹனி மூன் போகலாம் அம்மு என்று நிறுத்த அதிர்ந்து விழித்தாள் பூம் பனி…
தொடரும்
….
அம்மு என்று அவள் தோள் தொட பதறி எழுந்தவள் நவிலனை பார்த்து சத்தமா கூப்பிட மாட்டீங்களா எப்படி பயந்துட்டேன்.
ஆமாண்டி நான் வந்து அரைமணிநேரம் ஆகுது ஆனா உன் கவனம் இங்க இல்ல உன்னையே தான் தேவையில்லாம யோசிக்காத ன்னு சொல்லி இருக்கேன் இல்ல என்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.
ப்ச் ஒன்னு இல்ல..
அம்மு…
ம்ம்ம
வந்து தூங்கு எதையும் யோசிக்காம…
அப்படித்தான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன் ஆனா முடியலையே…
முடியனும் அது தான் எல்லாருக்கும் நல்லது.
ம்ம்ம
சரி தூங்கு அம்மு நாளைக்கு நாம நம்ம தோட்டத்துக்கு போகலாம் ..
ஓஓஓ தோட்டம் எல்லாம் இருக்கா..
இருக்குடா என்றான் நவிலன்.
சரி சரி என்று கேட்டு கொண்டவள் படுத்து கொள்ள விளக்கை அணைத்தான் மற்ற சிறிய விளக்குகளை ஒளிர விட்டு படுத்து விட படுத்த அடுத்த பத்து நிமிடத்தில் உறங்கி இருந்தாள் அவள் விளக்கு இல்லாமல் தூங்கி பல வருடம் ஆகி விட்டது இருட்டு என்றாலே பயம் என்று ஆகிவிட்டது அந்த நிகழ்வுக்கு பிறகு.
இரவு தூங்காமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள் கவிதா.
வசந்த், “தூங்கலையா நீ என்று உள்ளே நுழைந்தவனை பார்த்து முறைத்தவள் என்ன நக்கலா என்றாள் கவிதா..
ஏன் மா..
என்ன ஏன் மா ஒன்னு தெரியாத மாதிரி கேள்வி உங்களுக்கு..
இப்ப என்ன பிரச்சினை கவி?
அப்ப உங்களுக்கு என் பிரச்சினை என்னனு தெரியாது…
ஒரு பெருமூச்சுடன் இப்ப என்ன பேசனும் இல்ல நான் என்ன கேட்கனும் சொல்லு..
அந்த ஸ்கூல் ல எனக்கு ஒரு பங்கு வேணும்?
எதுக்கு?
ஆமா சும்மாவா அவன் சம்பாதிக்கிறதுல எனக்கு உரிமை இருக்கு…
ஓஓஓ அப்படியா..
என்ன ராகம் இழுக்குறீங்க..
நீ சொல்லுறது சரி தான் அப்ப நான் சம்பாதிக்கிறதில் என் தங்கைக்கும் என் அம்மாக்களும் உரிமை இருக்கு இதை நான் எப்படி மறந்தேன் என்று யோசனையாக அமர்ந்தவன் எதையோ யோசித்து விட்டு சரி சரி உனக்கு போன் மாசம் இரண்டு ஆரம் வாங்கினோம் இல்ல அதை எடுத்துட்டு வா என்றான் வசந்த்..
கவிதா, “எதுக்கு?
வேற எதுக்கு அது என் சம்பாத்தியத்தில் வாங்கினது அப்ப அந்த இரண்டு ஆர்வத்தில் ஒன்றை என் தங்கிச்சிக்கு தரனும் இல்ல..
அதெப்படி தருவீங்க அது உங்க அப்பா சம்பாதிச்சு தரனும் நீங்க சம்பாதிக்கிறது எனக்கும் என் மகனுக்கும் தான்..
ஓஓஓ அப்படி வரியா ..
ஆமா ..
அப்ப சரி கவி நவிலன் சம்பாதிக்கிறது அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் தான் நீ எப்படி கேட்கலாம் என்று கேட்டதும் ஒரு நொடி தயங்கி பின் அது எங்க அப்பா சம்பாதிச்சது அதுல எனக்கு பங்கு இருக்கு..
வசந்த், “ உங்க அப்பா சம்பாதிச்சது பங்கு இருக்கு நான் இல்லன்னு சொல்லல ஆனா அவன் அவனோட சம்பாத்தியத்தில் தான் அவன் பொண்டாட்டிக்கு அந்த ஸ்கூல் ஷேர் வாங்கி இருக்கான் அப்ப அதுல நீ கேட்கிறது தப்பு தானே..
அதெப்படி அவன் என் தம்பி ..
அந்த நகையை எடுத்துட்டு வா கவி..
முடியாது ..
அப்ப ஒழுங்கா இருக்க பாரு சும்மா தேவையில்லாததை பேசாத உனக்கு அவன் தரவேண்டிய ஷேர் தந்துட்டான் இல்ல அதோட நிறுத்திக்க இல்ல நான் பேசுவேன் பிரச்சினை பண்ணுவேன்னு சொன்னா இந்த உறவை முறிச்சிக்க கிளம்பி போய்ட்டே இரு..
வசந்த்..
…
கவிதா, “என்ன இப்படி பேசுறீங்க..?
வேற எப்படி பேசுவாங்க உனக்கு வரவர பேராசை அதிகம் இங்க நான் சம்பாதிக்கிறேன் உனக்கு வந்த பங்கை கூட நான் தான் பார்த்துக்கிறேன் இதுக்கு இடையில் என் கம்பெனியையும் பார்க்கிறேன் ஒரே ஒரு பையனை பெத்து வச்சு இருக்கோம் அவனுக்கு எல்லாமே உன் தம்பி தான் பார்க்கிறான் அதைவிட முக்கியமா இன்னும் பிறந்த வீட்டில் இருந்து வாங்கிட்டு வராததே இல்ல அப்பவும் உனக்கு நிறையலையா?
வசந்த் இவ்வளவு நீளமாக பேசவும் கவிதாவே ஆவென பார்த்து நிற்க..
அதோடு நிறுத்தாமல் வசந்த் பிடித்துக்கொண்டான் என் அம்மாவை தனியா வச்சுட்டு அவங்களுக்கு எதையும் செய்யுறது இல்ல என் தங்கை அவளையும் சேர்க்கை ஆனா உனக்கு அவளை உன் தம்பிக்கு கட்டி வச்சு அந்த சொத்தையும் ஆளனும் ன்னு எண்ணம் அவளுக்கு நகை வாங்க கூடாது அவ பெயர் ல சொத்து வாங்க கூடாது எல்லாத்தையும் கண் கொத்தி பாம்பா பார்க்க வேண்டியது உன் மகனுக்காச்சும் எதாவது கருவியாக இல்ல அவனையும் பொறாமையா பார்ப்பியா உன் தம்பிக்கும் உன் மகனுக்கும் ஒரு பத்து வருஷம் தானே வித்தியாசம் ஆனா உன் தம்பிக்கு ஏன் எதையும் செய்யனும் ன்னு உனக்கு மனசு வரமாட்டேங்குது அப்படி என்ன வக்கிர புத்தி உனக்கு ? ஏதோ கல்யாணம் கட்டி குடும்பம் நடத்திட்டோமேன்னு அமைதியா இருந்தா உன் இஷ்டத்துக்கு நீ ஆடுவியா…
வசந்த்..
மூச் இதுக்கு மேல எதாவது பேசின வெட்டி விட்டு போய்ட்டே இருப்பேன் என்றவன் சென்று படுத்து விட..
வசந்த்…வசந்த்..
அந்த அழைப்பிற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை..
எனக்கு பசிக்குதுங்க நான் இன்னும் சாப்பிடல என்று கவிதா ஆரம்பிக்க..
வெடுக்கென திரும்பியவன் பசிச்சா சாப்பிடு எதுக்கு என்னைய படுத்துற..
ஏங்க இப்படி பேசுறீங்க உங்களுக்காக தானே என்று முடிக்கும் முன்..
வீட்டுக்கு வந்த மனுசன் கிட்ட சாப்பிடலாமா எதாவது வேணுமா ன்னு கேட்காம உன் தேவையை இவ்வளவு நேரம் அளந்த இல்ல அதே மாதிரி இனி இருந்துக்க உனக்கு படிச்சா நீ சாப்பிடு என்றவன் திரும்பி படுத்து கொள்ள மனதில் வலியோடு எதுவும் பேசாமல் கவிதாவும் படுத்து கொண்டாள்.
விடியலில் நவின் எழுந்து பார்க்க அவனை கட்டி கொண்டு உறங்கி இருந்த பூம்பனியை தான் பார்த்து இருந்தான் அவளை பார்த்ததும் அம்சா சொன்னது தான் நினைவு வந்தது..
மாப்ள அவ தனியா படுக்கிறதையே மறந்துட்டா பக்கத்தில் இருக்கவங்களை இறுக்கமா பிடிச்சுட்டு தான் தூங்குவா இத்தனை நாள் நான் தான் அவ பக்கத்துல தூங்கினேன் அவளுக்கு பயம் இல்லாம இருந்தது.. இப்ப என்று தயங்க..
ஏன் அத்த..
இல்ல மாப்ள அவ அவங்க அப்பாவை கூட தள்ளி நிறுத்தி தான் பார்க்கிறா அதான் என்று பார்க்க
அத்த பயப்படாதீங்க அவ என் பொறுப்பு நான் பத்திரமா பார்த்துப்பேன் அதேநேரம் கூடிய சீக்கிரம் அவ எல்லாரையும் ஏத்துப்பா குறிப்பாக அவ வாழ்க்கையை .. என்று அன்று சொல்லியதை நினைத்து கொண்டு அவளையே பார்த்து இருக்க மெல்ல அசைந்தாள் பூம் பனி பட்டென கண்ணை மூடிக்கொண்டான் நவின் நவிலா இது தான் சமயம் அவளை அணைச்சிட்டு தூங்கு என்றதும் அவனும் அவளை இதமாக அணைத்து கொள்ள
அந்த அணைப்பில் கண் திறந்தவள் படபடப்பாக பார்க்க நவிலனின் தோள் வளைவில் தன்னை நுழைத்து இருப்பதை உணர்ந்து விலக நினைத்தவள்…
நவிலனையே உற்று பார்த்தாள் அவன் ஆழ்ந்து உறங்குவதை உணர்ந்து உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னவள் காலேஜ் படிக்கும் போதே ஆனா அந்த விஷயத்துக்கு அப்புறம் பார்க்கவே இல்ல இல்ல அதை அப்படியே விட்டுட்டேன் .ஆபிஸ் வந்த முதல் நாள் உங்களை தான் உங்க அப்பா கூட பார்த்தேன் மறுபடி ஒரு சந்தோஷ ஊற்று ஆனா நிறைய தயக்கம் பழைய பூம் பனி இல்லையே நான் அதனாலேயே விலகி விலகி இதோ இப்ப கூட நெருங்க பயமா இருக்கு என்ன இருந்தாலும் என்னைய விக்டீமா தானே எல்லாரும் என்று சொல்லாமல் நிறுத்தியவள் அமைதியாக இருக்க..
என்ன இல்ல சத்தமே இல்லாமல் இருக்கா என்று நினைத்த நவின் மெல்ல கண்ணை திறக்க பார்க்க அவன் கன்னத்தில் சூடான நீர் சொட்டாக விழ படக்கென விழியை பிறந்தவன் அம்மு என்று அவளை அணைக்க நவிலா என்று அவன் மீதே சரிந்து கொண்டாள் நவிலனின் கோதை…
என்னாச்சு டா எதுக்கு அழற..
ஒன்னு இல்ல சும்மா..
இங்க பாரு அம்மு நீ சும்மா கூட அழக் கூடாது…அதுக்கு மட்டும் நான் என்னைக்கும் அனுமதிக்க மாட்டேன்.
ம்ம் என்று அவள் முணங்க…
இங்க பாருடி..
ம்ம்ம
ஏய் நிமிர்ந்து பாருடி..
சொல்லுங்க
நாம கொஞ்ச நாளைக்கு வேற ஊருக்கு போகலாமா…
எதுக்கு அத்த தனியா இருப்பாங்க..
அதை சரிபண்ண தான்டி வேற ஊர்ல போகலாம் ன்னு சொல்லுறேன்..
வேற ஊர்ல போனாலும் அதை எப்படி சரி பண்ண அத்த அம்பையும் தனியா தானே இருப்பாங்க..
இவளுக்கு மண்டையில் எத்துறதுக்குள்ள நீ கிழவன் ஆகிடுவ நவிலா என்று வாய் விட்டே புலம்ப
என்ன ஏத்தும் எனக்கு எதுக்கு இப்படி சலிச்சுக்குறீங்க..
ஆமாண்டி சலிச்சுக்குறேன் உங்க அத்தை தனியா இருக்கிறதை போக்க வழி இருக்கு அதை செஞ்சா அவங்க சந்தோஷமா இருப்பாங்க..
என்ன பண்ணனும் சொல்லுங்க பண்ணிடுறேன்..
நிஜமாவா..
ஆமா அப்புறம் பின் வாங்க கூடாது..
இல்ல இல்ல ஏன் அப்படி கேட்குறீங்க என்னால் முடியாதா..
உன்னால் மட்டும் தான் முடியும் ஆனா நீ ஒத்துக்கனுமே…
ஏன் நான் அத்தைக்காக செய்ய மாட்டேனா என்ன சொல்லுங்க என்ன பண்ணனும் ன்னு என்று அவள் ஆர்வமாக அவன் மீதே படுத்து கொள்ள அவனுக்கு தான் இன்ப அவஸ்தையாகி போனது.
அம்மு என்று அவன் கிறக்கமாக அழைக்க..
அவளோட அவன் சொல்ல வரும் விஷயத்தை கேட்பதில் ஆர்வமாக இருந்தாள்
சொல்லுங்க நவிலா…
நம்ம ..
நம்ம..
…
என்னங்க பேசாம என்னைய பார்த்துட்டு இருக்கீங்க என்ன பண்ணனும் சொல்லுங்க நான் அத்தைக்காக செய்யுறேன்.
நீ எதுவும் பண்ண வேண்டாம் நான் சொல்லுவதை கேட்டா போதும் என்று அவன் நிறுத்த…
சரி சொல்லுங்க என்றாள் பூம் பனி..
நிஜமா தானே சொல்லுற..
ஆமா இதுல யாராவது விளையாடுவாங்களா…
அப்ப பின் வாங்க கூடாது என்றான் நவிலன்…
இல்ல வாங்க மாட்டேன்..
ப்ராமிஸ்..
கண்டிப்பா
அப்ப சரி இன்னைக்கே டிக்கெட் போடுறேன் ஹனி மூன் போகலாம் அம்மு என்று நிறுத்த அதிர்ந்து விழித்தாள் பூம் பனி…
தொடரும்