• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
அனைவரையும் வெறுக்கும் அளவிற்கு பேசி விட்டு, அர்ஜுன் வீட்டுக்கு சென்று தேவையான சில பொருட்களை எடுத்துக்கொண்டு அவன் அலுவலக அறைக்கு சென்றான்.

அனைத்தும் சரிதான்... ஆனால் சாரா என்ன தவறு செய்தாள்,அவள் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் திணறினான், அதை யோசித்தபடி தூங்க கண்களை மூட. தூக்கம் வந்தால்தானே, அவளுடன் எடுத்த அனைத்து புகைப்படத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.

முதல் புகைப்படம். இன்னும் நீங்காத நினைவுகள்.

அங்கு சாரா இங்கு அர்ஜுன் ஒரு மாதம் முன் நோக்கி செல்ல,

இங்கு ஆதி ரித்தியை எப்படி சமாளிப்பது என்று குழம்பி போனான்.

அவனுக்கு ஆசைப்பட்டது, ஏங்கி நின்றது எல்லாம் இன்று அவன் கையில். மனைவி, மகள், அவனின் அம்மா ஆனால் தோழியின் வாழ்க்கை!,

"கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாமோ" என்று ஆதையே நினைத்துக்கொண்டு இருந்தான். 'சில நாட்கள் பொறுத்தால் எல்லாம் சரியா போய்டும், நாளைக்கு போய் அர்ஜுனிடம் பேசணும்'. ஆதிக்கு அனைத்தும் மாறியது, ஆனால் அர்ஜுன் மீது இருந்த கோபம் தவிர.

ஆதி சாராவை பார்த்து மனம் வருந்தினான், அர்ஜுன் கிளம்பியதும் சாரா ஆதியை பார்த்து தேங்க்ஸ் சொன்னது, ஆதிக்கு என்னவோ போலானது... அண்ணனை பழிவாங்க தோழியின் வாழ்க்கையை கேடுத்துவிட்டோமே, அதுமட்டும் இல்லாமல சாராவிற்கு ஆதியின் ஒரு ஒரு அசைவும் தெரியும்,சாரா தெரிஞ்சும் ஒருவார்த்தை கூட திட்டாம போனது ஆதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சாராவை பற்றி நினைத்து வருத்திக்கொண்டு இருந்தான் ஆதி.

பொறுமையாக முதலில் இருந்து யோசித்துக் கொண்டு வந்தான். இங்கு யார்மீது தப்பு என்று. ஆனால் ஆதிக்கு புரியவே இல்லை... எங்கு தப்பு நடந்தது என்று.

அர்ஜுன் சொல்லும் அனைத்தும் கேட்கும் ரித்திகா, ஆதிக்காக இரத்தம் சிந்த கூட தயங்க மாட்டாள், என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள், அப்படி ஒரு பிணைப்பு இருவருக்கும் சிறுவயதில் இருந்து.

ரித்திகா குழந்தையை தூக்கிக்கொண்டு, அறைக்கு சென்று படுக்க வைத்துவிட்டு, அவள் ஒரு புறம் படுத்தாள்.

ஆதியின் அன்னை மீரா, அவனை முறைத்துக்கொண்டே இருந்தார், 'இவன் முழியே சரி இல்லையே, நாளைக்கு கவனிச்சிக்கலாம் இவனை,' என்று நினைத்து கொண்டு மீரா ஒரு அறையில் படுத்துக்கொண்டார்.

ஆதி வெறும் வரவேற்பு அறையில் ஈ ஓட்டிக்கொண்டு இருந்தான். மீரா இருக்கும் அறையையும் ரித்திகா இருக்கும் அறையையும் மாற்றி மாற்றி பார்த்தவன்.

"ரித்தி செம காண்டுல இருக்கா, ரூமுக்கு போனா ஏதால அடிப்பான்னு கூட தெரியாது, அம்மாட்ட போய் படுத்துக்கலாம்' என்று எழுந்தவன் மீராவின் அறைக்குள் மெதுவாக நுழைந்தான்.

மீரா தூங்கிட்டாங்க என்று மெதுவாக, மூஞ்சிக்கு முன்னாடி கையை அசைத்து பார்த்து "அப்பாடா தூங்கிட்டாங்க" என்று நினைத்து மீரா பக்கம் போய் அமைதியா படுத்துட்டான் ஆதி.

எல்லாம் சரியாகிடுச்சு என்ற நிம்மதி. சாரவையும் நாளைக்கு சரி செஞ்சிடலாம், என்று நினைத்து கண்ணை முடியதும் ஆழ்ந்த தூக்கத்துக்கே போய்ட்டான் ஆதி.

சிறிதுநேரம் கழித்து, ஆதிக்கு யாரோ தலையை வருடுவதுபோல சுகமாக இருக்க.... இன்னும் மீரா அருகில்இன்னும் நல்லா ஓட்டி படுத்தான். ஒரு ஐந்து நிமிடம் இருக்கும், நன்றாக ஆழ்ந்த தூக்கத்துக்கு சுகமாக சென்று கொண்டு இருந்த ஆதி.

"ஆஆஆஆ...." என்று கத்திக்கொண்டு எழுந்தான் ஆதி, மீரா ஆதியின் தலை முடியை பிடித்து மண்டையை நல்லா ஆட்டிட்டு இருந்தாங்க.

"மா.... என்ன பண்றீங்க முடிய விடுங்க வலிக்குது" என்று கத்திக்கொண்டே. மீராவின் கையை எடுக்க முடியாமல் திணறினான்.

"எதுக்குடா என் பக்கத்துல படுத்த, அதான் கல்யாணம் பண்ணி கொழந்த கூட பெத்துட்டீங்க ல, நீ என்ன குழந்தய அம்மாட்ட வந்து படுக்கிற, எரும எரும " என்று ஆதியை திட்ட.

"ஆமா அப்படியே, நான் அவ ரூம்க்கு போனா சும்மா விட்டுடுவா பாரு" என்று வலியை பொறுத்துக்கொண்டு பதில் அளித்தான்.

"மா வலிக்குது மா" மீரா அவன் தலையிலே இருக்கும் மொத்த முடியும் பிடிங்கி எடுக்கும் நோக்கோடு, ஆதியின் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தார்.

"என்ன கன்றாவிடா இது, ஹேர் ஸ்டைல்னு சொல்லிட்டு, பொண்ணு மாறி முடி வளத்து வச்சி இருக்க, ஒரு ஜோடி குழந்தைக்கு பயம்காட்டி சோறு ஓட்டலாம். மூடிய பாரு நல்லா பின்னி ஜட போடலாம் போல. பிசினஸ் நல்லாதானபோது, என்ன பிச்சையா எடுக்குற. முடிவெட்ட கூட காசு இல்லாதமாதிரி" என்று இந்த ரணகளத்துலயும் மீரா ஆதியை கலாய்த்துக்கொண்டு இருந்தார்.

முடியில் இருந்த கையை ஆதி கஷ்டப்பட்டு எடுத்து, அவன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.

"என்மேல கோபம் இல்லையாமா," என்று மீராவை ஆதி கேட்டான்.இவ்வளவு வருஷம் கழிச்சும் கோபத்தை விட்டு பாசமாக பேச அம்மாவால மட்டும்தான் முடியும்.

"நிறைய இருக்கு ஆதி, அடக்கமுடியாத கோபம், சுத்திநடக்கிறத நீ புரிஞ்சிக்கோ. ரித்திகா பாவம் டா, இவ்ளோனாள் அவளை தனியா விட்டது தப்புடா. உனக்கு தெரியாம நிறைய நடந்துடுச்சி அவ வாழ்க்கைல... அது இன்னும் முடில. அத சரி செய்ய உன்னாலதான் முடியும். எனக்கு சத்யம் செஞ்சி குடு, எப்பவும் அவளைவிட்டு போகமாட்டேன்னு".

"இல்லமா என்னால எப்பவும் அவ இல்லாம இருக்கமுடியாது. எந்த சூழ்நிலையிலும் அவளை விடமாட்டேன் ".

"ஆனா இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்க நான் நிறைய செய்யனும் போல மா" என்றான் அலுத்துக்கொண்டு.

"ஒரு நாளைக்கே இப்படி சலிச்சுக்கிற இன்னும் இருக்குடா மகனே, அம்மாவும் மகளும் சேந்து உன்ன நிம்மதியா கூட தூங்க விடமாட்டாங்க" என்று மீரா ஆதிக்கு இன்னும் பயத்தை கிளப்ப,

"அதையும் பாக்கலாம், எனக்கு தூக்கம் வருது" என்று மெத்தையில் சரிந்தான்.

"டேய்ய் நீ போ, அவ ரூம் க்கு'' என்றார் மீரா.

"மா என்னால அடிவாங்க முடியாதுமா.... அவ எப்படி அடிப்பான்னு உனக்கு தெரியாது". மீரா சிரித்துக்கொண்டு, "பரவால்ல நா உங்கள பெத்ததே, என் மருமகளுங்ககிட்ட அடிவாங்கதான்". என்றார் சிறித்துக்கொண்டே.

"அம்மா உன்ன..." ஆதி நெருங்கி சென்று மீராவை கட்டிக்கொண்டான். மீரா ஆதியை சிறிது நேரம் தட்டி கொடுத்துவிட்டு. ஆதியை பிரித்தார் மீரா.

"சரி போதும், அங்க போ... அம்மா எங்கும் போல, இங்கதான் இருப்பேன். ரெண்டு பேரையும் சமாதானம் படுத்திட்டு வா, நான் தாலாட்டு பாடி பக்கத்துலயே வச்சிக்கிறேன், இந்த ஆறடி குழந்தையை."
ஆதி மீரா கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து விட்டு.... "சரி மா... குட் நைட்" அறையைவிட்டு வெளியேறினான்.

ரித்திகாவின் ரூம்க்கு போறது ஆதிக்கு சரியா படல, ஹால்ல படுக்க நினைத்தவன், படுத்தும் விட்டான். நல்லா வளத்தி அந்த பெரிய சோபா அவனுக்கு சிறிதாகி போனது.

'இத அட்ஜஸ்ட் செஞ்சிக்கலாம் எப்பவும் இங்கயே படுக்கறது கூட ஓகேதான். ஆனா ரித்திகாவை நெருங்குறது அவ்வளவு சுலபம் இல்ல... ஒரே அறையில் இருந்தாலாவது பேசுவதற்கு வாய்ப்பு இருக்கு' என்று ஆதி தயங்கியவாறு‌, அவளது அறைக்குள் நுழைந்தான்.

ஆதி குழந்தையை இடையிலே படுக்க வைத்து இருக்கும் ரித்திகாவின் குழந்தைத்தனத்தை எண்ணி. அவளையும் குழந்தையையும் பார்த்தவாறு கட்டிலில் வந்து அமர்ந்தான்.

சிறிது நேரம் இருவரையும் பார்த்துவிட்டு, குழந்தையை நெருங்கினான் ஆதி.

புதிதாக யாரோ அருகில் வருவது தெரிந்த தாரா. ரித்திகாவின் புறம் புரண்டு படுத்தாள்.... "மா இடியட் மா" என்றாள், அன்னையிடம் ரகசிய குரலில், ஆனால் ஆதிக்கு நன்றாகவே காது கேட்டது.

'என்னது இடியட் ஆ!"" குழந்தையும் சேர்த்து கெடுத்து வச்சி இருக்காளே. இவகூட சேத்து குட்டி மூட்டைய வேற சேந்து சரி பண்ணனுமா" ஆதிக்கு நினைக்கும்போதே விழி பிதுங்கியது.

தாரா சொன்னதை கேட்டு. ஆதி கோபப்படுவானே இடியட்ன்னு சொன்னாள்... பதறியடித்துக்கொண்டு, தன்விழியால் ஆதியை பார்த்தாள். அவள் நினைத்ததற்கு நேர்மாறாக, அவனின் முகம் சந்தோஷத்துல இருந்தது.

இவ்வளவு இளகிய ஆதியா!!!!என்று ரித்திகாவிற்கு புதிது, மகள் அவனை பாராட்டியது போலவே ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

மெலிதாக ஆதி குட்டியை தன்புறம் இழுத்தான்.... "மாஆஆ..." என்று பெரும் கூச்சலோடு சிணுங்கினாள். ரித்திகாவின் கழுத்தை கட்டிக்கொண்டாள். ஆதியின் முகம் சோகத்தை அப்பிக்கொண்டது.

என்னதான் ரித்திகாவிற்கு அவனை பிடிக்கலனாலும், பலமுறை குட்டிக்காக சேர்ந்து விடலாம் என்று நினைப்பாள். மறு நொடி அவன் செய்த அனைத்தும் குறும்படம் போல ஓட, மனதை திரும்ப மாற்றிக்கொள்வாள். இப்படித்தான் ரித்திகாவிற்கு மூன்று வருடங்கள் சென்றது.

ஆதி முகத்தை இப்படி பார்க்க முடியாமல். குழந்தையை தூக்கிக்கொண்டு அமர்ந்தாள்.

"பாப்பா இங்க பாரு...." என்று பக்கத்தில் இருக்கும், ஆதியின் புகைப்படத்தைக்காட்டி. "திஸ் ஐஸ் யுவர் டாடி டா தங்கம்". குட்டி மறுப்பாக.... "நோ, திஸ் ஈஸ் இடியட்..." புகைப்படத்தை காட்டி.

ரித்திகா ஆதியை நினைத்து கோபம் வரும் போதுலாம் இடியட் இடியட் திட்டினது பத்தாது என்று. குழந்தைக்கு அப்பா சொல்லித்தரத்துக்கு பதிலா இடியட்ன்னு சொல்லித்தந்து. குட்டி சொல்லும் போது ரசித்து சிரிப்பாள். குட்டி எப்போ எல்லாம் அந்த போட்டோ பார்க்கிறாளோ. இடியட் சொல்லி சொல்லி ரித்திகாவை சிரிக்க வைப்பாள்.

ரித்தி ஆதியை பார்த்து எதையோ திருடி மாட்டிக்கொண்டது போல முழித்தாள்.

ஆதி நடக்கும் அனைத்தையும் அமைதியாக ரசித்துக்கொண்டு இருந்தான்.

ஆதி எழுந்து அந்த புகைப்படத்தின் அருகில் நின்று, அதும் நானும் ஒன்னு, என்று சுட்டிக்காட்டினான்.

குட்டி வேகமாக நடந்து சென்று ஆதியை தூக்குமாறு கைகளை உயர்த்தினாள். ஆதியின் அருகில் சென்று, கால்களை கட்டிக்கொண்டாள்.

ரித்திகா இந்த கட்சியை பார்த்து நெகிழ்ந்துதான் போனாள். கட்டிலிலேயே சாய்ந்து அமர்ந்து சலனம் இல்லாமல் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள், ரித்திகா.

ஆதி ஆசையாக தூக்கினான்.... தூக்கிய மறுநோடி. குட்டி ஆதி கன்னத்தில் ஒன்னு வைத்துவிட்டு. "இடியட்...." என்று சொல்லி மறுமுறை அடித்தாள். ஆதி சிரித்துக்கொண்டு அடிவாங்கினான். அவளின் ஸ்பரிசத்தை பெற, குட்டியிடம் மறுகன்னத்தை மாற்றி மாற்றி காட்டிக்கொண்டு இருந்தான். இன்னும் எவ்வளவு அடி வேணும்னாலும் வாங்கிக்க நான் தயார், என்று உணர்த்தியது அவனது செய்கை.

ரித்திகா ரசித்துக்கொண்டு இருந்தாள் இருவரையும்.

ஆதி குழந்தையை தூக்கிக்கொண்டு ரித்திகா அருகில் சென்று அமர்ந்தான்.

"டெட்டி... "என்றான் ரித்திகாவை எப்போதும் கூப்பிடுவதை போல . ரித்தி அமைதி எங்கோ சென்று, அவளது முகத்தில் கடுமை பரவியது.

அடிச்சி விளையாடி முடிச்சிட்டு... ஆதியிடம் பிரிந்து ரித்திகாவிடம் சென்ற குட்டி, சொப்பு வாயை வைத்து ஆஆஆஆ, என்றாள் பெரியதாக.

அவளின் அந்தச்செயல்... போடா உன்னை அடித்து எனக்கு தூக்கமே வந்துவிட்டது என்பது போலவே இருந்தது ஆதிக்கு. தாராவின் சிறு சிறு செய்கையை ஆதி ரசித்துக்கொண்டு இருந்தான்.

ரித்தி அவளை தட்டி தூங்கவைத்தாள். குழந்தை, நாள் முழுவதும் போட்ட ஆட்டத்தில் வழக்கத்தை விட சீக்கிரம் தூங்கப்போனாள்.

ரித்திகா இடையிலே படுக்க வைத்தாள்... பொசிஷன் மாறவும் குட்டி மெலிதாக சிணுங்க தட்டிக்கொடுத்துக் கொண்டு கண்களை மூடினாள்.... சிறிது நேரம் கழித்து சில்லென்று ஒரு கை ரித்திகா கைமீது படர்ந்தது. அந்த கைக்கு சொந்தக்காரனிடம் இருந்து சட்டென்று கைகளை உருவிக்கொண்டாள்.

ஆதி குழந்தையை தட்டிக்கொடுத்து கொண்டே, ரித்திகாவை பார்த்தான்.... ஆதி, பார்வையால் யாசித்துக்கொண்டு இருந்தான் மன்னிப்பை.

ரித்திகா வேகமாக மறுபுறம் திரும்பி படுத்துகொண்டாள். அதுலாம் தரமுடியாது போடா, என்றது அவளது செயல்.

இங்கு இருவர் இப்படி இருக்க.... அங்கு இருவர் ஒரே கடந்தகாலத்தை தனித்தனியே பயணிக்க தொடங்கினார்கள்.

17

நதியே நதியே காதல் நதியே......

வண்ண வண்ண
பெண்ணே வட்டமிடும்
நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள்
படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே அது
நங்கையின் குணமே

சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே

தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா

தேன்கனியில்
சாராகி பூக்களிலே
தேனாகி பசுவினிலே
பாலாகும் நீரே

தாயருகே சேயாகி
தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும்
பெண்ணே

வசீகரமான முகபாவனை கொண்ட நம்ம ஹீரோ, அந்த பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு முணுமுணுத்து கொண்டே வீட்டில் நுழைகிறான்.

"சுப்ரபாதம் இனி ஆரம்பம்" என்று சொல்லிக்கொண்டு ப்ளூடூத் ஆஃப் செய்து, டேபிள் மேலே வைத்துவிட்டு. "அம்மா பால்..." சொல்லி முடிச்சிட்டு.... கவுண்ட் டவுன் ஸ்டார்ட் 1,2,3

"என்னடா தடிமாடு ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ இல்லனா ஒரு நாள் இல்ல ஒரு நாள்... எங்காவது கல்யாணம் நிக்கும், அந்த இடத்தில உங்க பொண்ண என் பையன் வாழ்கை தருவான் னு சொல்லி உன்னை தள்ளி விடபோரன் பாரு" என்று மீரா சாபம் விட,

"ஓகே மா, அப்படி ஒன்னு நடந்தா, நீங்க சொன்ன அடுத்த செகண்ட் அவதான் என் பொண்டாட்டி... ஓகேவா" என்றான் அர்ஜுன் கண்களை சிமிட்டி.

அம்மா கைல இருந்த பாலை வாங்கிக்கொண்டு, ஒரே மூச்சில் குடித்துவிட்டு, நைசா நழுவினான் நம்ம அர்ஜுன்.

"டேய்ய் எங்க டா போற, இப்போதான் வீட்டுக்கு வந்த" மீரா சொல்றத கேக்றதுக்கு அங்க அர்ஜுன் இருந்தா தான.

இவனுக்கு என்ன தான் பிரச்சனை, எல்ல வகையான பொண்ணையும் காட்டியாச்சி, மாடர்ன் ல இருந்து வில்லேஜ் வரை, இவளோ அழகா, என்னமாதிரி இவ்ளோ அழகா, அடக்கமான பொண்ணு கிடைக்கிறது எவளோ கஷ்டம், இவனுக்கு ஒன்னுகூட பிடிக்கலையே....
"இவன நா எந்த லிஸ்ட் ல சேர்க்க?" என்று மீரா தன்னை அழகு, அடக்கம் என்று பெரிய பொய்யை சொல்ல... வாசல் வரை சென்ற அர்ஜுன் திரும்பி வந்து.

"ஏன்மா உனக்கே கொஞ்சம் ஓவர் ஆ இல்ல... நீ அழகுன்னு சொன்னதுகூட, என் அம்மாவா போய்ட்டியேன்னு ஏத்துக்கலாம், ஆனா அடக்கம் எத்தனை கிலோ எங்க கிடைக்கும்ன்னு கேக்கற ஆளு நீ.... நீ அடக்கமா?!!!" என்று வாசலில் இருந்து அர்ஜுன் கத்திவிட்டு, செல்லும் நேரம் கரெக்டா அவன் மண்டைல கரண்டி விழுக இருந்ததிலிருந்து, தப்பித்து ஓடினான் அர்ஜுன்.

"ச்சை ஜஸ்ட் மிஸ்...." என்று மீரா தூக்கி எறிந்த கரண்டியை எடுக்க வெளியே வந்தார்.

"டேய்ய் என்னவே கலாய்க்குறியா, கொட்டிக்க வீட்டுக்கு தான வரணும், அப்போ கவனிச்சிக்கிறேன்டா உன்னை" என்று மீரா கத்திக் கொண்டு இருக்க.... ஹெட் செட் காதில் வைத்து பாட்டு கேட்பது போல சென்றான்.

"மீரா எனக்கு காது கேக்கல "என்று அங்கு இருந்தே கத்திவிட்டு சென்றான் அர்ஜுன்.

"எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லி இருந்தா, நான் அமைதியா இருந்து இருப்பேன். இவனுக்கு பொண்ணு பாத்ததுக்கு நான் சும்மாவே இருந்து இருக்கலாம்" என்று மீரா வழக்கம்போல பொலம்பிக்கொண்டு இரவு உணவை சமைத்து முடித்தார்.

சைலண்ட் ஆ அர்ஜுன் வெளிய கிளம்பிட்டான்.

இது டெய்லி நடக்கிறது தான், ஈவ்னிங் ஜாக்கிங் போறேன்னு சொல்லிட்டு, ஸ்ட்ரீட் ல ஒரு உலா வருவான்.... ஒரு மணிநேரம் கழிச்சி வீட்டுக்கு வருவான்.

வீட்ல நுழையும் போதே சுப்ரபாதம் ஸ்டார்ட்.....

அர்ஜுன் வரும் சமயம் பார்த்து, மீரா மறுபடியும் சுப்பிரபாதத்தை ஆரம்பித்தார்.

"முருகா இந்த வருஷம் ஆச்சு அவனுக்கு ஒரு பெண்ணை அவன் கண்ணுல படவைங்க" என்று சொல்லி சமையல் செய்ததை டைனிங் டேபிள் ல அழகா அடுக்கி வைத்தார்.

அம்மா போதும் மா எப்போ பாரு இதே சொல்லுர, ஒரு நாள் என்னோட தேவதை 😈 என் கண்ணுக்கு மாட்டுவா. அப்படியே அவள பிடிச்சிட்டு வந்துடறேன்.. ஓகே வா, கொஞ்சம் சிரிங்க என் மீரா ராணியே" என்றான் அர்ஜுன், அப்பா அடிக்கடி சொல்வது போலவே...

"போடா இன்னொரு முறை அம்மாவ பேரு சொல்லி கூப்பிட்டா, என் மருமகள் ட சொல்லி நல்லா அடிவாங்க வச்சிடுவேன், அப்போ இந்த அம்மா காலுல விழுந்து கெஞ்சினாலும் காப்பாத்த மாட்டேன். அப்போதான் இந்த மீரா எவளோ டெரர்னு தெரியும்" என்று அர்ஜுனுக்கு மெரட்டல்விடட்டார்

"ஓகே மா நீ அந்தமாரி ஆளுதா செஞ்சாலும் செய்வ" என்றான் அர்ஜுன் சிரித்துக்கொண்டே.

"எனக்கு பசிக்குது, கொஞ்சம் சோறு போட்டா நல்லா இருக்கும்" என்று கூறி, மீரா மறந்ததை நினைவு படுத்தினான் அர்ஜுன்.

இந்த அர்ஜுனோட டெய்லி வீட்டு லைஃப், இதுக்கு எதிரான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்தான் வெளியே,
இவனுக்கு சிரிக்க தெரியாது என்பது போல சுற்றிக்கொண்டு இருப்பான். இவன் போலி வேஷத்தை கலைக்க, இவனை கலாய்க்க இவனைத்தேடி இவனது தேவதை அர்ஜுனிடம் வருகிறாள்.

ஒரு குட்டியா டான்ஸ் ஸ்கூல் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறன் அர்ஜுன். முழுக்கமுழுக்க வெயிட் லாஸ் பண்றது மற்றும் உடம்பை பிளேக்சிபில் ஆக வைத்து இருப்பதற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கான்.

ஸ்டாப் கொஞ்சப்பேர் வைத்து. இப்போ அதோட ரேஞ்சே வேற, ஆனா நம்ம அர்ஜுனுக்கு அதுவே டெவெலப் செய்யனும்னு எந்த ஒரு ஐடியா வோ இல்ல. ஏன்னா அதுவே டெவெலப் ஆகிக்கும் என்ற தைரியம் தான்.

யாராவது இன்னும் டெவெலப் செய்லாமே என்று அறிவுரை கொடுக்க வந்தா போதும், ரெகார்ட் செய்தது போல இந்த பதிலைத்தான் கூறுவான்.

"எனக்கு பிடிச்ச விசயத்த செய்றேன், இதான் நான். எதுக்கு போட்டி எல்லாம், எந்த வம்புக்கும் போகமாட்டேன்.... வந்தாலும் எப்படி அமைதியா சமாலிக்கணும்னு தெரியும்" என்பான்.

இவன் தான் அர்ஜுன், சாப்டா ஹேண்டில் செய்ற சாக்லேட் பாய். இவனையோ ரோமியோவாகவும், கோவக்காரனாகவும், மாற்றப்போகும் பெண் இவனை தேடிவந்து கொண்டு இருக்கா.

அம்மா வந்த உடனே ஒரு போட்டோ, போன் நம்பர் குடுக்கிறங்க... பொண்ணு போட்டோ போன் நம்பர் கொஞ்சம் பேசு னு.

இவன் போன் பண்றதுக்குள்ள, அர்ஜுனுக்கு போன் வருது.

" ஹலோ " என்று மிக மெல்லிய குரல் கேட்க.

"யாரும் வேணும் " என்றான் அர்ஜுன்.

நந்தாங்க உங்களுக்கு பாத்தா பொண்ணு, அர்ஜுன்க்கு ஒன்னும் புரியல.

பாத்தாங்க னு சொன்னாங்க இப்போதான் என்றான்.

"இந்த மாசம் கடைசிகுள்ள கல்யாணம் னு திடிர்னு வீட்ல சொன்னாங்க எனக்கும், அதான் உங்கட கொஞ்சம் பேசணும்", என்றாள் அந்த பெண் படபடப்பாக.

அப்படியா, 'அம்மா ஏதோ பிளான் பண்ணிடுச்சி போல ' என்று யோசித்த அர்ஜுன்.

"சொல்லுங்க என்ன பேசணும்",

"எனக்கு ஆல்ரெடி ஒரு காதல் இருக்குங்க".

"அப்பாடா ஈசி, ஆட்டத்தை கலச்சி விடுறது" என்று அர்ஜுன் யோசித்தான்.

"அது அப்பா டா சொன்னேன், ஆனா ஒத்துக்கல. என்ன செய்றது னு தெரில" என்றாள் அந்த பெண் பதட்டமாக.

அர்ஜுன் சிறிது நேரம் யோசித்துவிட்டு.

"கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்க, உங்க லவ்க்கு நான் உதவி செய்றேன், அதனால எனக்கும் கல்யாணம் கொஞ்ச வருஷம் தள்ளி வைக்க உதவியா இருக்கும்" என்றான்.

இருவர் திட்டம் என்னனா.... கல்யாணம் மேடை வரை வந்து நின்றால். அர்ஜுன்க்கு கொஞ்ச வருஷம் அம்மா வாயை அடைக்கலாம். அந்த பொண்ணு அப்பா, ஏன் லைப் அ கெடுத்துட்டேன்னு வருத்தப்பட்டு, பொண்ண தேடமாட்டாரு. கொஞ்ச வருசத்துல அவங்க சேந்துடுவாங்க. இதுதான் இவங்க 2 பேரும் போட்ட பிளான்.

இவன் பிளான் போட்டு முடித்த சிறிது வாரம் கழித்து இவனோட தேவதை வடிவில் உள்ள ராட்சசி வருகிறாள்...... மிக விரைவில்.
 
Top