• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

17.நவிலனின் கோதையானாள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
86
77
18
Salem

17.நவிலனின் கோதையானாள்​


என்ன என்று உளறலாக பனி கேட்க…

எதுக்கு தடுமாறிட்டு இருக்க நீ தானே அத்த தனியா இருப்பாங்க சொன்ன என்றான் நவிலன்.


ஆமா சொன்னேன் தான் அதுக்கு என்று நவிலனை முறைக்க..

முறைக்காதடி நான் எதுவும் தப்பா சொல்லல நிஜத்தை தானே சொன்னேன் அவங்களுக்கும் அது தானே பொழுது போக்கு உன்னையே மாதிரி ஒன்னு, என்னைய மாதிரி ஒன்னு, நம்ம இரண்டு பேர் மாதிரி ஒன்னு ன்னு ஆக மொத்தம் மூணா இருந்தா கிட்ட தட்ட எங்க அம்மா பன்னிரண்டு வருஷத்துக்கு பிஸி, யாரும் இல்லன்னு கவலைபட மாட்டாங்க நீயும் உங்கத்தை தனியா இருக்காங்கன்னு சொல்ல மாட்ட இல்ல என்று குறும்புடன் சிரிக்க

எல்லாமே விளையாட்டு தான் உங்களுக்கு..

வாழ்க்கையே விளையாட தானே அம்மு அதுல நல்ல நல்ல விஷயத்தை செஞ்சா நமக்கும் உலகத்துக்கும் நல்லது தானே என்று சொல்ல..

ப்ச் இது சரிபடாது என்று அவள் எழுந்த செல்ல பார்க்க அவளை நகர விடாமல் பிடித்து கொண்டான் நவிலன்..

விடுங்க நவிலா..

விடுறதுக்கா கட்டிக்கிட்டேன் அம்மு,

இனி நீ என் கூட தான் எப்ப பாரு எங்கேயாவது யார்கூடயாவது இருந்துக்கிற ஒன்னு அம்மா இல்ல மணி அக்கா இந்த மூணு நாளே எனக்கு மூணு யுகம் மாதிரி இருக்கு டி…


நவிலா..

ம்ம்…

விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது அத்த எழுந்து இருப்பாங்க ..

அதெல்லாம் மணி அக்கா பார்த்துப்பாங்க நீ என்னைய கவனிச்சா போதும்.

பனி, “அது எப்படி பசங்க எல்லாம் இப்படி பேசுறீங்க எல்லாரும் தானே நம்ம குடும்பம்..

அடியேய் புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி பேசுடி நான் ஆறு வருஷம் காத்திருந்து கட்டிக்கிட்டவ நீ கொஞ்சம் எனக்கும் நேரம் தரலாம்..

தரலாம் தரலாம் இப்ப வெளியே போகலாம்

அவளை மெல்ல விட்டவன் போ போ ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் எங்கேயும் போகமாட்டேன் ன்னு நீ என்னைய கட்டிக்கிட்டு இருக்க நாள் வரத்தான் போகுது என்று சொன்னவனை பார்த்து சிரித்தவள் எழுந்து உடையை எடுத்து கொண்டு கிளம்பி சென்று விட அங்கே இருந்த வாஷ்பேசனில் முகம் கழுவி பல் துலக்கியவன் வெளியே வந்து மணி அக்கா …

டீ ரெடி தம்பி…

கீரின் டீ க்கா..

அதே தான் தம்பி என்றவள் அவனுக்கு டீயை கொடுத்து விட்டு ,அம்மா டிபன் என்ன பண்ணலாம் நான் பனி பாப்பா வரட்டும் ன்னு இருந்தேன்..

நானே சமைக்கிறேன் மணி அக்கா என்று வெளியே வந்தாள் பூம் பனி…


சரி பாப்பா என்றவர் என்ன என்ன வேலை செய்யனும் ன்னு சொல்லுமா செய்யுறேன்..

உங்களுக்கு இன்னைக்கு ரெஸ்ட் மணி அக்கா நானே பார்த்துக்கிறேன் என்றவள் காலை உணவில் சிறிய அளவில் இனிப்பும் டிபனும் செய்து முடித்து விட்டவள் சாப்பிடலாம் வாங்க என்று அனைவரையும் அழைக்க, கேட்டை திறந்து கொண்டு கார் உள்ளே நுழைந்து இருந்தது..

மங்கை, “யாரு வரா நவிலா எதுவும் சொல்லி விட்டியா”..?

இல்லையே மா நான் யாருக்கும் சொல்லலையே அப்ப யாருன்னு பாரு என்று மங்கை சொல்ல நவிலன் எழுந்தவன் உள்ளே நுழைந்த கவிதாவை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாலும் வாக்கா என்று அழைத்தான்..

மங்கை, “என்னடி போன் கூட பண்ணல திடீர் ன்னு வந்துட்ட..


கவிதா, “நீங்க கூட தான் இங்க போகப் போறேன்னு ஒரு வார்த்தை சொல்லல அந்த அளவுக்கு புது உறவு முக்கியமா இருக்கு என்று உதட்டை சுழிக்க ..

ஆமா முக்கியம் இல்லையா என் குலம் தழைச்சி அடுத்த தலைமுறை உருவாக்க போறதே அவதானே என்று மங்கை சொல்ல..

அம்மா என்று அதட்டினால் கவிதா..

எதுக்கு டி கத்துற நான் சொன்னது தானே உண்மை..

கவிதா, “அப்ப நான் யாருமா…

நீ என் பொண்ணு தான் ஆனா நீ இன்னொரு தலைமுறையை இன்னொரு குடும்பத்தில் உருவாக்க பிறந்தவ ஒரு பொண்ணு பல தலைமுறைகளை கடத்தி ஒரு அழகான அறிவான சமூகத்தை உருவாக்க படைக்கப்பட்டவள் அதை புரிஞ்சுக்க எப்ப பாரு பிறந்த வீடு மட்டுமே அப்படின்னு வந்த பொண்ணை விரோதியா பார்க்காத என்று மங்கை பேச அதிர்ந்து தான் பார்த்தாள் கவிதா என்னம்மா நிறையவே பேச ஆரம்பிச்சுட்ட என்று அதற்கும் பூம் பனியை ஓர பார்வை பார்க்க..

இப்ப என்ன விஷயம் கவி என்றார் மங்கை…

கவிதா, “ஏன் எதாவது விஷயம் இருந்தா தான் வரனுமா?

மங்கை , “ஏன்டி இதே வேலையா தான் இருப்பியா..

என்னம்மா…

பொழுது விடிஞ்சு பொழுது போனா இன்னைக்கு என்ன பண்ணலாம் ன்னு யோசிச்சிட்டே இருப்பியா என்று மங்கை கேட்க

பட்டென அருகில் இருந்த பூச்சாடியை உடைத்தவள் என்னம்மா ரொம்ப தான் பேசுற என்னைய பார்த்தா என்ன உரண்ட இழுக்கிற மாதிரி இருக்கா …

பின்ன இல்லையா என்று மங்கை கேட்க..

நவிலன் சிரித்து கொண்டே அம்மா ஏன் வந்ததும் வராததும் அக்காவை திட்டுற அக்கா வா வந்து உட்காரு மணி அக்கா அக்காவுக்கு ஜூஸ் போடுங்க ..

கவிதா, “ஏன் அதை உன் பொண்டாட்டி போடமாட்டாளா?

போடுவேன் அண்ணி உங்களுக்கு என்ன ஜூஸ் புடிக்கும் ன்னு சொல்லுங்க…

நவிலன், “அம்மு ஸ்வீட் லைம் போடு டா..

சரிங்க என்றவள் ஜூஸ் போட்டு தர..

எல்லாம் யாராவது சொன்னா தான் செய்ய முடியுமோ ஏன் உனக்கே செய்ய தெரியாதா? என்று பனியை அடுத்து பேச..


தெரியுமே அண்ணி ஆனா உங்களுக்கு என்ன பிடிக்கும் ன்னு எனக்கு தெரியாதே நீங்க சொல்லவும் இல்லையே..

ஏய் என்ன கொழுப்பா..

அச்சோ இல்லையே அண்ணி நான் எப்பவும் குட் கொலஸ்டிரால் மட்டும் தான் சாப்பிடறதே..

டேய் நவிலா என்று கவிதா அவனிடம் உறும..

அம்மு என்று அவளை பார்க்க..

சாரி சாரி என்று உதட்டை அசைத்தாள். சரி வாங்க டிபன் ரெடி சாப்பிடலாம் என்று உணவு மேசைக்கு செல்ல..

கவிதா, “என்ன அதுக்குள்ள அடுப்படியில் நுழைஞ்சுட்டாளா?

மங்கை , “அவ அடுப்படி அவ செய்யுறா இப்ப உனக்கு என்ன தான் கவி பிரச்சினை

நாங்க எல்லாம் நல்ல நாள் கெட்ட நாள் பார்த்து தான் ஒன்னு ஒன்னு செஞ்சோம் உன் மருமகளுக்கு மட்டும் அதெல்லாம் இல்லையா?


மங்கை, “ஏன் இன்னைக்கு என்ன அஷ்டமியா நவமியா இப்படி கேட்கிற?

அஷ்டமி நவமி மட்டும் தானா.. வேற பார்க்கிறது இல்லையா அதுசரி நல்லவிதமாக வந்து இருந்தா அதெல்லாம் பார்க்கலாம் இங்க தான் அதெல்லாம் இல்லையே என்று குத்தலாக சொல்ல..

சிரித்து கொண்டவள் இதுக்கு தான் கல்யாணம் வேண்டாம் ன்னு இழுத்து அடிச்சேன் பெத்தவங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு அவங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறேன் ன்னு சொன்னேன் வந்தவங்களை நான் வேண்டாம் சொல்ல முயற்சி செய்ய ஒரு பக்கம் அத்த எல்லாத்தையும் தட்டி விட்டு சந்தோஷப்பட்டாங்க அவங்க சந்தோஷம் எனக்கு சாதகமா இருந்தது ஆனா இந்த விஷயம் மட்டும் என்னை வந்து சேரவே இல்ல.. என்று நினைத்து கொண்டு நிற்க..

கவிதா, “என்ன கனவு கண்டுட்டு இருக்கியா?

……

கவிதா அவள் பதில் சொல்லாமல் அப்படியே நிற்க..திமிரு உடம்பு பூரா திமிரு அதான் அடக்கி இருக்கானுங்க என்று முணுமுணுக்க..

அக்கா என்று சேரை தள்ளிவிட்டு நவிலன் எழ , என்னாச்சு ஏங்க என்று பனி பதறி கேட்க …

கவிதா மிரண்டு தான் போய் இருந்தாள் ச்சே என்ன இவன் இப்படி கத்துறான். இவளை ஒன்னு சொல்ல விடமாட்டேங்குறானே அப்புறம் எப்படி அந்த ஸ்கூல் விஷயத்தை பேசுறது என்று நினைத்து கொண்டு இருந்தாள்.

அக்கா என்று அழுத்தமாக நவிலன் அழைக்க..

என்னடா என்றாள் சலிப்பா..

அக்கா இதுவே கடைசியா இருக்கனும் நானும் எதுவும் சொல்லாம இருந்தா, நடந்தது என்னனு தெரியாம நீ மறுபடி மறுபடி அதையே பேசிட்டு இருக்க..

என்னடா கத்துற அவ்வளவு பெரிய மனுசனா நீ ஊர் வாயில அவளா விழப்போறா உன்னையே தானே அவல் மாதிரி மெல்லுவாங்க நாலு இடத்துக்கு நான் போக முடியுமா இப்படி முடிவு எடுத்து செஞ்சுட்டு வந்து இருக்கியே அது சரியா என்று கவிதா நிறுத்தாமல் பேச…

நவிலன், “அப்படி உனக்கு சங்கடமா இருந்தா நான் உன் தம்பி இல்லன்னு சொல்லிடுக்கா ஊர்ல இருக்கிறவங்க தான் உனக்கு முக்கியம் ன்னா நானும் உன்னோட உறவை தள்ளி வச்சு பார்த்துக்கிறேன்..

கவிதா, “என்னடா பேசுற அப்ப அவளுக்காக நான் ஒதுங்கி நிற்கனுமா?

நாங்க யாரும் உன்னையே ஒதுங்க சொல்லல நீ பேசுறது தான் அப்படி இருக்கு..

அப்ப நான் எதுவும் பேசக்கூடாது, எது நடந்தாலும் கண்டுக்க கூடாது அப்படியே சுரணையே இல்லாமல் இருக்கனுமா? கவிதா பேச பேச சோர்ந்து தான் போய்விட்டான் நவிலன். அம்மா ப்ளீஸ் எனக்கு தலைவலிக்குது நான் ரூம் க்கு போறேன் என்றவனின் கைபிடித்தவள் சாப்பிட்டிங்கனா தலைவலி குறையும் ஏன் டென்ஷன் ஆகுறீங்க நவிலா என்றாள் பனி..

ப்ச் பசிக்கல அம்மு..

ப்ளீஸ் நவிலா, முதல்முறை சமைச்சு இருக்கேன் என்று கைகளில் அழுத்தம் தர..


ஒரு பெருமூச்சுடன் எடுத்துவை அம்மு என்றவன் சாப்பிட அமர..

அண்ணி வாங்க நீங்க, அப்புறமா என்னைய திட்டலாம் வேற என்ன சொல்லனும் ன்னு சாப்பிட்டு சொல்லுங்க பேசிக்கலாம் என்றவள் காலை உணவை எடுத்து வைக்க சற்றே இறுக்கத்துடன் உணவு வேளை முடிந்து இருந்தது…


அனைவரும் அமைதியாக இருக்க பூம்பனியே பேச்சை ஆரம்பித்து இருந்தாள். அண்ணி நீங்க இனி தினமும் ஸ்கூல் போறீங்களா…

நவிலன் யோசனையாக பனியை பார்க்க மங்கையோ போச்சு பூவு ஏன் இப்படி சொல்லுறா அதை மொத்தமா அவளுக்கானதா மாத்திட்டு தான் வேற வேலை பார்ப்பா என்று மனதில் நினைக்க..

கவிதா கேள்வியோடு நீ என்ன என்னைய பார்க்க சொல்லுறது அது எங்க வீட்டு சொத்து..

மங்கை, “ கவி போதும் அது நவின் சம்பாத்தியம் அதுல நீ தலையிடாத உனக்கானது அப்பா சம்பாதிச்சது மட்டும் தான் என்று அழுத்தமாக சொல்ல..

பனி, “அத்த என்ன பேசுறீங்க அவர் சம்பாரிக்கறது அவங்க அக்காவுக்கும் தானே நீங்க ஸ்கூல் போங்க அண்ணி நான் அவருக்கு உதவியாக ஆபிஸ் போறேன் ப்ரோஜெக்ட் பார்க்க என்றவள், என்ன நவிலா நான் உங்க கூட வரலாம் இல்ல.

அவள் நவிலனுடன் ஆபிஸ் செல்கிறேன் என்று சொன்ன வார்த்தையே அவனை வானில் பறக்க வைக்க எதையும் யோசிக்காமல் அப்கோர்ஸ் அம்மு நீ ஸ்கூல் போக்கா உனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் என்றதும்,



கவிதா, “அப்ப அந்த ஸ்கூல் எனக்கு தானே என் பேர்ல மாத்திடு என்றதும் தான் நவிலன் ஜெர்க் ஆக..

பூம்பனி, “உங்களுக்கு தான் நீங்க முதல்ல போய் பாருங்க என்று சிரித்தாள் அவள் சிரிப்பின் அர்த்தம் யாருக்குமே புரியவில்லை ஆனால் நவிலன் மட்டும் ஏதோ வரப் போகிறது என்று நினைத்தான்..



தொடரும்