• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Dharshinichimba

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
76
அடர்ந்த மரங்கள், எண்ணில் அடங்காமல் சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்திருக்க, பச்சை பசேல் என்று கண்ணை கவர்ந்திழுக்கும் நிறத்தில் சிரித்து குலுங்கும் வயல் வெளிகளும் ரம்மியமாய் தோன்றி மனதை சுண்டி இழுத்தாலும் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் மிகவும் துரிதமாக மஹாவை இந்த இடத்தில இருந்து பத்திரமாக கூட்டி சென்றுவிட வேண்டும் என்பதில் மட்டும் குறியாக செயல்பட்டான் மஹாவின் நாயகன்.

மஹா வழி சொல்ல நம்ம ஹீரோ ஷக்தி அந்த ஊரில் ஆங்காங்கே முளைத்திருந்த வீடுகளை கடந்து அவள் வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

“இந்த வீடு தானா?” என்றான் வீட்டின் வெளிப்புறத்தை சுற்றிபார்த்தபடி.

“ஆமாம்!” என்று குனிந்தவாறே தலையசைத்தாள் மஹா.

“சரி. நான் இங்கேயே வெயிட் பண்றேன். நீ போய் சீக்கிரமா பார்த்துட்டு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டு வந்துடு” என்று தன் மொபைலை எடுத்து பார்வையிட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் தன் வேலையில் மூழ்கி இருந்தவன் எதேச்சையாக திரும்ப, அவள் உள்ளே போகாமல் அங்கேயே நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு,

“என்ன? போயிட்டு வான்னு சொன்ன அப்புறமும் இங்கயே ஏன் இவ்ளோ நேரம் நின்னுட்டு இருக்க?" என்றான் சிறிது வாஞ்சையுடன்.

எப்படி சொல்வது என பயந்து கொண்டிருந்தவள் தன் கணவனின் கனிவான பேச்சால் கொஞ்சமே கொஞ்சம் பயம் நீங்க.

“இல்ல... உள்ள இருக்கறது எங்க பாட்டி தான்... எப்பவும் எனக்கு ஆதரவா இருக்குறது அவங்க மட்டும் தான்... அதான்...” என்று மென்று விழுங்கினாள்.

"அப்படியா! சரி மஹா. நீ போய் பாட்டிகிட்ட நடந்ததை சொல்லி நாங்க இப்ப கிளம்பியே ஆகணும். பிரச்சனை எல்லாம் சரி ஆகட்டும். நாங்க கண்டிப்பா வரோம்னு சொல்லிட்டு வா! நான் இங்கயே வெயிட் பண்றேன். சரியா?" என்றான் ஷக்திகரிசனத்துடன்.

அவளுக்குள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதுடன்
"தப்பா நினைக்கலேன்னா நீங்களும உள்ள வர முடியுமா ? பாட்டி உங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவாங்க” என்று பயந்தபடி அவனை பார்க்காமலே கேட்டாள்.

"இதை சொல்லவா இவ்ளோ தயங்கிட்டுஇருக்க? சரி வா. உள்ள போகலாம்” என்று மஹாவுடன் உள்ளே சென்றான்.

மான்குட்டியை போல் உள்ளே துள்ளி குதித்தபடி ஓடியவள். அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து நாக்கை கடித்தபடி, ”பாட்டி! பாட்டி!” என்று கூப்பிட்டபடி போனாள்.

சிறியவீடு தான். இருஅறைகள் கொண்டது. ஆனால், பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி வைத்து அந்த இடம்சுத்தமாக இருந்தது. உள்ளே இருந்து 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி வேகமாக வெளியே வந்தார்.

ஷக்தி எழுந்து நின்று ”வணக்கம் பாட்டி” என்று கை கூப்பினான்.

“ என் பேத்தியை இங்க இருந்து கூட்டிட்டு போய்டுப்பா. பிறந்ததுலேர்ந்தே இதுவரைக்கும் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்கல. நம்மளுக்கு அப்பறம் இந்த பிள்ளையை யார் பார்த்துப்பாங்களோன்னு எப்பவும் கவலையா இருக்கும். இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பான்னு அந்த கடவுளை வேண்டாத நாள் இல்லை. இனிமேல் நீ இருக்கின்ற தைரியத்துல நான் நிம்மதியா கண்ண மூடிருவேன்" என்று கண் கலங்கினார்.

"ஐயோ! பாட்டி இப்படிலாம் பேசாதீங்க. ரொம்ப நாளைக்கு நீங்க நல்லா இருக்கனும். நான் இனிமேல் மஹாவை நல்லா பார்த்துகிறேன்” என்று பாட்டியை கட்டிக்கொண்டான்.

"ரொம்ப சந்தோஷம் பா” என்று பாட்டி சொல்ல.

"சரி பாட்டி. நாங்க கிளம்புறோம்” என்றான் ஷக்தி.

"இல்ல ஒரு வாய் சாப்பிட்டு போங்கப்பா” என்றார் தவிப்பாய்.

"இல்ல பாட்டி. சாப்பிடுற நிலைமைல இல்ல! அடுத்த தடவை வரும்பொழுது கண்டிப்பா சாப்பிட்டு போறோம். சரியா?" என்றான் ஷக்தி.

"அப்பப்ப இந்த கிழவி உயிரோட இருக்க வரைக்கும் வந்து எட்டி பார்த்துட்டு போங்க” என்றாள் பாட்டி கனிவாய்.

"கண்டிப்பா பாட்டி!" என்று சிரித்தான் ஷக்தி.

"அடுத்த முறை வரும் போது ரெண்டு பேரும் சும்மா வெறும் கைய வீசிட்டு வராதீங்க” என்றவரை இருவரும் குழப்பத்தோடு பார்த்தனர்.

“எனக்கு ஒரு கொல்லுப்பேரனை கொண்டு வாங்கன்னு சொல்றேன்” என்றார் குறும்பாய்.

மஹாவை ஓரக்கண்ணால் பார்த்தவுடன் அவளும் அவனை நோக்க, இருவரின் விழிகளும் ஒருநிமிடம் இமைக்க மறந்து நோக்கினர். பின் தலையை குனிந்து கொண்டு ”சும்மா இருக்க மாட்ட பாட்டி நீ” என்ற மஹாவை.

"நான் எதுக்குடி சும்மா இருக்கனும். உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் நல்லா இருக்கு. என் கண்ணே பட்டுடும்” என்று திருஷ்டி சுழித்தார்.

"சரி. கிளம்பலாம் டைம் ஆச்சு” என்று ஷக்தி மஹாவை பார்த்தான்.

"சரி” என்று தலையசைத்தாள் மஹா.

பாட்டியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.

நேராக தான் இருக்கும் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான் ஷக்தி.

"நீ காருக்குள்ளையே இரு. அஞ்சு நிமிஷம் நான் இப்ப வந்துடறேன்” என்று காரை விட்டு இறங்கி உள்ளே செல்லாமலே ”முத்து" என்று குரல் கொடுத்தான்.

முத்து வெளியே வந்து “என்ன அண்ணா வெளிய நிக்கறீங்க? அண்ணியை கூட்டிட்டு உள்ள வாங்க” என்றான்.

"இல்ல முத்து. சுரேஷ் எங்க இன்னும் வரலையா?” என்று வீட்டின் உள்ளே பார்வையை செலுத்தியபடி கேட்க.

"வந்துட்டாரு. எல்லா திங்க்ஸும் பேக் பண்ணிட்டு இருந்தாரு. இருங்க கூப்பிடுறேன்” என்று உள்ளே சென்று எல்லோரையும் கூட்டி வந்தான்.

"ஏன் தம்பி இங்க இருக்கீங்க? அந்த புள்ளைய கூட்டிட்டு உள்ள வாங்க” என்றார் முத்துவின் அப்பா.

"இல்ல அங்கிள் இருக்கட்டும். என்னால உங்களுக்கு ஊருக்குள்ள பிரச்சனை எல்லாம் வரக்கூடாது. இருக்கட்டும். எல்லாம் நல்லபடியா முடியட்டும். நாங்க வந்து பத்து நாள் தங்கிட்டு போறோம்" என்று சுரேஷை பார்த்து, ”போலாமா?" என்று கேட்டான் ஷக்தி.

"போலாம் டா" என்ற சுரேஷ் எல்லா பேகையும் டிக்கியில் வைத்தான்.

எல்லோரிடமும் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்.

சிறிதுநேரம் அமைதியாக வந்த சுரேஷ்,

"டேய் இப்ப எங்கடா போகப்போறோம் ? உங்க அப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சுது உங்களோடு சேர்த்து என்னையும் கொன்றுவார்" என்றான்.

"இப்ப எதுக்கு சும்மா அதையும் இதையும் சொல்லி எனனை வெறுப்பேத்துற?" என்று கோபமாக ஷக்தி கேட்க.

"அப்ப எங்க போறோம்?” என்றான் சுரேஷ் விடாமல்.

"வேற எங்க? உங்க வீட்டுக்கு தான்” என்றான் ஷக்தி அசால்டாக.

“ என்னது?” என்றான் தீயை மிதித்தது போல்.

“ என்ன என்னது? போன் கொடு! நான் ஆன்ட்டிகிட்ட பேசுறேன்" என்றான் சுரேஷை முறைத்து.

"சரி பேசு" என்று சுரேஷ் போன் செய்து கொடுத்தான்.

காரை ஓரமாக நிறுத்திவிட்டு போனை வாங்கிகொண்டு, ”ஹலோ!” என்று எல்லாவற்றையும் தனியாக பேசிவிட்டு வந்தான்.

காரை ஸ்டார்ட் செய்தவன் “ எல்லாம் பேசிட்டேன். ஆன்ட்டி ஓகே சொல்லிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு மஹா உங்க வீட்ல தான் இருக்க போறா. அதைவிட சேப்ட்டியான இடம் எதுவும் இல்லடா” என்றான் ஷக்தி விழிகளில் சிறிது கலக்கத்துடன்.

"பரவால்ல டா! சுபா மாதிரி இனிமே இவங்களும் என்னோட சிஸ்டர் தான். நான் பார்த்துக்கிறேன்டா” என்றான் சுரேஷ் சிரித்துகொண்டே.

"தேங்க்ஸ் டா” என்று சிரித்தான் ஷக்தி.

இவர்கள் பேசும் எதுவும் புரியாமல் ஒருவித பயம் இருந்தாலும், ‘நான் நல்ல இடத்திற்கு தான் போகிறேன்’ என்று எண்ணி நிம்மதியடைந்தாள் மஹாவை நித்திராதேவி ஆட்கொண்டு உறங்க செய்தாள்.

ஒரு வித பயம் உள்ளுக்குள் இருந்தாலும் வெளிக்காட்டாமல் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தான் சுரேஷ்.

மஹா பயம் குறைந்து நிம்மதியாய் உறங்குவது அவளின் முகத்தில் தெரிய தெம்பாய் வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தான் ஷக்தி.

நாமும் இவர்களுடன் பயணிப்போம் இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட போகும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை தெரிந்து கொள்ள...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
அடடடடா இந்த ஷக்தி மஹா வை ஏன் அவன் வீட்டுக்கு கூப்பிட்டு போகமாட்டீங்குறான், ரெம்ப ஸ்ட்ரிக்ட் போல அவனோட பெற்றோர் 😲😲😲😲😲😲😲😲😲
 
Top