• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
அர்ஜுன் சட்டென்று இழுக்கும் வேகத்தில் அவனை மோதிவிட, அவனது முகத்தை சுருக்கி பார்த்தாள், என்ன செய்கிறாய் என்பது போல.

அவன் முகம் பார்க்க ஏதோ இனம் புரியாத உணர்வு மேலோங்கியது, முதல் முறையாக.

"இப்படியே என் வாழக்கை பயணம் உன்னோடு தொடரக்கூடாதா" என்று சாராவின் மனம் துடிக்க,

'பார்த்த சில நிமிடங்களில் இது சாத்தியமா?' என்று அவளது இன்னொரு மனம் வாதிட தொடங்கியது.

அவளுக்கோ இந்த என்னம் தவறாக பட, அவள் மனதை அடகினாள்.

அவன் இழுத்த வேகத்தில், இசைகேர்ப்ப ஆட்டிவைத்தான் அர்ஜுன்.

சிலசமயங்களில் அவளின் நெற்றி அவன் மார்பில் முட்டி விட "தலை இப்படி வலிக்குது..." "மனுசனா இவன் மெஷின்!" என்று ஆச்சரியபட்டு போனாள்.

'ஹா வலிக்குதே, கத்த கூட முடியலயே, சுத்தி ஆளுங்க வேற இருக்காங்களே'.

இங்கு என்ன நடக்குது என்று சுதாரிக்கும் முன்பே, அவனின் கைப்பாவையாக மாறினாள்.

பாடலின் வரிக்கேற்ப அவளை ஆட்டிவைத்தான், பொம்மலாட்ட பொம்மைப் போல ஆனது அவளின் தற்போதைய நிலை.

நடனத்தில் அ, ஆ- னா கூட கற்றிடாத அவளோ, நடனத்தை கரைத்து குடித்தவனிடம் இணைந்து ஆட, திணறித்தான் போனாள்.

பார்வையாளர்கள் அனைவரும் ஜோடி பொருத்தத்தை பார்த்து வியக்காதவர் எவருமில்லை. இன்னொரு பக்கம் ரித்திகா "அடடேய் நம்ம அர்ஜுனா இது" என்று பார்த்துக்கொண்டு இருந்தது மட்டும் இல்லாமல், அவள் கையிலே இருந்த போனில் பதிவு படுத்தி கொண்டு இருந்தாள்.

ஆனந்தனுக்கு இது பழகிவிட்டது, அவர்கள் ஆடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான்.

அவன் இழுக்கும் திசைகளிலும், அவன் சுழற்றும் சுழலுக்கு, அசைந்து கொடுத்தாள் அவளையும் அறியாமல்.

பாடல் முடிந்து சிறிது நேரம் அவளின் களைத்துப்போன முகத்தை ரசித்தவன். கைத்தட்டலில் நினைவு பெற்று, அவளை விட்டுசற்று விலகி நின்றான். அவளோ அவனை முறைத்தவாரு இருந்தாள்.

அவளின் கோபத்தை மீறி எக்கச்சக்க வோல்ட்டேஜ் அவள் உடம்பில் பாய்ந்தது போல விறைத்து நின்றாள், சிறிது நேரம் சுயநினைவற்று.

கொடுத்த ஷாக் பத்தாது... இன்னும் உனக்கு தரட்டா என்று அர்ஜுன் சாராவை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி. இதழ்களை குவித்து ஒரு பறக்கும் முத்தம் கொடுக்க.

"ஐயோ...." என்று இன்னும், அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள்.

இந்த இடத்தை விட்டு எப்போ செல்வோம் என்று காத்து இருந்தவளுக்கு, சிறிது இடைவேளை கிடைக்க சிட்டாக பறந்தவிட்டாள் .

எப்படி அந்த அலுவலகம் விட்டு வெளியே வந்தாள் என்ற நினைவு இல்லை.

ஆட்டோ ஏறும் சமயத்தில் தான் பார்த்தாள், அவளின் பதற்றத்தில் அவளது போன் பையை விட்டு வந்ததை நினைத்து, தலையை அடித்துக்கொண்டு.

சிலபல யோசனையோடு அர்ஜுன் அறையை நோக்கி சென்றாள்.

தலையை மட்டும் உள்ளே விட்டு, "அவன் இருக்கானா..." என்பதை உறுதி செய்துகொண்டு, வேக எட்டுக்கள் எடுத்து வைத்து. அவள் கைப்பையை நோக்கி வேகமாக போய், அவள் மென்மையான கரங்களை நீட்ட.

அந்த கைப்பை அவள் கைகளில் சென்று அடைவதற்கு முன்பு, அர்ஜுன் கை அதனை பறித்தது.

"என்னுது கொடுடா" என்றாள் கோபமாக.

அதுலாம் தரமுடியாது "என்ன வச்சி இருக்கன்னு பாத்துட்டு தரேன் இரு" என்று அர்ஜுன் பொறுமையா பைகயை ஓபன் செஞ்சான்.

"ஆட்டோக்கு போனும்...." அவள் சொல்வது காதில் விழுந்தும்... அதற்கு பதில் அளிக்காமல்.

"போறதுனா போ நான் தடுக்கலையே" என்றான் நக்கலாக.

அர்ஜுன் உள்ள இருக்கிறத பாத்து ஒரே ஆச்சர்யம்!

மேக் அப் ஐட்டம், ஒன்று கூட இல்லை. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் பாதி தண்ணீர் காலியான நிலையில் இருக்க, அதை எடுத்து மீதி தண்ணியை பருகியவாரு அவளை பார்த்தான்.

'ஐயோ.... எச்ச செஞ்சி குடிச்சத குடிக்கிறானே' என்று நினைத்தவள் விழிகள் விரித்து அர்ஜுனை பார்க்க.

'என்ன தண்ணி வேணுமா?' என்று கேட்டான் சாராவிடம்.

இல்ல என்று தலை அசைத்தாள்.

"வேணா நா எதுக்கு, நீ குடிக்கும்போது பிடிங்கி குடிச்ச போல அவளோ பெருசா கண்ண காமிச்சு மெரட்டற" என்றான்.

"நா எச்ச செஞ்ச தண்ணி" என்றாள்.

"புரியல" என்றான்.

"வாய் வச்சி குடிப்பேன் தண்ணிய". என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

அவன் ரியாக்ஷன் ஐ பார்க்கும் ஆவளோடு சாரா அர்ஜுன் முகத்தை பார்க்க. அவனோ இவளுக்கு பெருசா ஒரு ஷாக் கொடுத்துட்டான்.

"லவர்ஸ் குள்ள குடிக்கலாம் தப்பில்ல" என்றான் அர்ஜுன். சாராவிற்கு அவனது பேச்சி எரிச்சல் தான் கிளப்பியது. சிறிது நேரம் சாராவை உத்து பார்த்தவன்.

"எங்கே உதட்டு சாயம்?"
அவளோ புரியாத பார்வையோடு அவனை பார்க்க.

"லிப்ஸ்டிக் எங்க காணோம்..." என்றான் இப்போது அவளுக்கு புரியும் வகையில்.

"அது யூஸ் செய்ய பிடிக்காது..." என்றாள்.

அவன் அவளை நம்பாமல், சட்டென்று அவளை நோக்கி இரண்டு எட்டு வைத்து அவன் விரல்களால் அவளது. பிங்க் நிற ரோஜா இதழ்களை அழுத்தி இருமுறை தேய்த்தான்.

"என்ன செய்ற?" என்றாள் அவனது கைகளை வேகமாக தட்டி விட்டு.

"செக் பண்ணேன் லிப்ஸ்டிக் போட்டு இருந்தது போல இருக்கு. அது எப்படி இவளோ பிங்க் ஆ இருக்கு, அவளின் இதழை சுட்டிக்காட்டி?"

"நான் வீட்டுக்கு போகனும், என் பையை கொடு" என்றாள்.

"நான் கேட்டதுக்கு பதில் வரல.." அவனது ஒற்றை புருவத்தை தூக்கி காண்பிக்க. ஒரு வினாடி மெய் மறந்து நின்றாள்.

அவள் தலையை சிலுப்பி கொண்டு... "நா போகனும்.." என்றாள்.

"எல்.கே. ஜி பாப்பா மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல, திரும்ப திரும்ப சொல்ற'' என்றான் கேலியாக.

"மாமாகிட்ட சொன்னா கூட்டிட்டு போய் விடப்போறேன், எதுக்கு என்ட இவ்ளோ தயங்கர" என்று புருவத்தை உயர்த்தி கேட்க.

அவளோ ஒரு நிமிடம் அவனிடம் மயங்கினாள். அதை மறைத்து இரண்டு விழிகளை அம்பாக்கி, அவன் மீது கோப பார்வை செலுத்தினாள். ஆனால் அர்ஜுனுக்கோ அவள் காதல் அம்பு விட்டது போல ரசித்துக்கொண்டு இருந்தான் சாராவின் விழிகளில்.

'பார்த்து ஒரு மணிநேரம் கூட ஆகல, அதுக்குள்ள முறைவைத்து பேசறான்' அர்ஜுன் மீது கொலைவெறி வந்தது.

அவனிடம் இருந்து அவளது கைப்பையை பிடிங்கிகொண்டு ஓடினாள்.

"டார்லிங் எங்க போனாலும் மாமா வாட்சிங் யூ." என்று கத்தினான் அர்ஜுன். சொன்னது பத்தாது என்று பறக்கும் முத்தம் ஒன்று கொடுக்க,

"போடா பொறுக்கி..." என்றாள் தூரம் சென்று கத்திவிட்டு ஓடினாள்.

"பொறுக்கி..." அவள் சொன்னதை மறுமுறை முணுமுணுத்து ரசித்துக்கொண்டு.

அவள் ஓடுவதை பார்த்து ரசித்
த நின்றான். தொடக்கத்தில் இவள் ஓடினாலும் வாழ்க்கை முழுவதும் ஓடுவது... அவனாக இருக்கும் என்று கூறிக்கொண்டு.....

21

ஆளைவிட்டா போதும் என்று ஓடிவிட்டாள், அங்கிருந்து. வீட்டுக்கு வந்த டையர்டுல தூங்கிட்டா.

ஆதி கால் செய்யவும்.. "சாரா ஓகே வா ஜாப்?" என்றான் .

சாரா சற்று தயங்கி விட்டு... "ஓகே தான் ஆதி, ஆனா அங்க இருந்த ஒருத்தன் ஓவரா பண்ணிட்டான் அதான் யோசிக்கிறேன்" என்றாள் சாரா.

ஆதி ஒடனே... "என்னது சாராவே ஒருத்தன பாத்து பயந்துட்டாலா!!!!!" என்றான் ஆச்சரியமாக.

'சாரா கெத்த விடாத....' என்று நினைத்தவள். "அநியாயமா ஒரு கொலை பண்ண வேணானு பாத்தேன், யார் செத்தா எனக்கு என்ன நாளைல இருந்து வேளைக்கு போக போறா இந்த சாரா" என்றாள் கெத்தாக.

ஆதி சிரித்துக்கொண்டு போனை வைத்தான். "இவ இம்ச இனி இருக்காது "என்று சற்று ஆறுதலாகவும் இருந்தது. சாராவிற்கு தெரியாம ஆதி இன்னொரு பிளான் போட்டான்," அர்ஜுனையும் சாரவையும் சேத்து வச்சா என்ன" என்று யோசித்தவன் யோசித்த வேகத்தில், "அட ச்சை நம்ம வில்லன் தான், ஆனா நல்ல வில்லன்" என்று அவனுக்கு அவனே அறிவுரை கூறிக்கொண்டான். அப்போது தெரியவில்லை இவங்க ரெண்டு பேரும் தான் சேரப்போறாங்கன்னு.

இருந்தாலும் ஆதிக்கு இந்த எண்ணம் வர காரணம், அன்று அர்ஜுன் சாராவை முதல் முதலாய் பார்த்த போது நடந்து கொண்டதை நினைத்து பார்த்தான் ஆதி.

ஒருமுறை ஆதி அர்ஜுன் ஒன்றாக செல்லும் போது சாராவை பார்த்த அர்ஜுன் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான். 'அவ என் friend ' என்று ஆதி சொல்லும் முன்பு.

சாராவை பின்தொடர்ந்து சென்றுவிட்டான் அர்ஜுன். அதை பிறகு சொல்ல ஆதிக்கும் நேரம் இல்லாமல் போக, ஒருநாள் சொல்லிடலாம் என்று வரும் போது ஆதி ரித்திகா மோதலில் எல்லாம் மறந்துவிட்டான் ஆதி.

குடும்பத்துடன் உள்ள உறவும் முறிந்து, தனிமரமாக பிசினஸ் பின்னாடி ஓடிக்கொண்டு இருந்தான் ஆதி, எல்லோரையும் மறந்து.

பார்த்த ஒடனே அர்ஜுனிடம் மயங்கிவிட்டாள் சாரா. ஆதி அர்ஜுன் எதாவது கிறுக்குதானம் செஞ்சி அடிவாங்குவான்னு நினச்ச ஆதிக்கு பெருத்த அடி, "சாரா அர்ஜுனை அவமானப் படுத்துவாள்" என்று நினைத்த ஆதிக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

மறுநாள் சாரா வேளைக்கு செல்ல. தயங்கி தயங்கி அவனது அறைக்கு வந்தாள். ரித்திகா தலையை அசைத்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினாள்.

"எனக்கு என்ன வேலை" என்று அர்ஜுனிடம் கேட்டவள்.

"அதுவா டான்ஸ் சொல்லி தரணும்" என்றான் அர்ஜுன் நக்கலாக. அத புரிஞ்சிக்காத சாரா, "அதுலாம் எனக்கு ஈசி, கிளாஸ்க்கு எந்தப்பக்கம் போகணும்" என்றாள் ஆர்வமாக.

அர்ஜுன் பதறியடித்து அவள் அருகில் வந்து "எதுவேணும்னா பண்ணு டான்ஸ் மட்டும் சொல்லிகொடுக்க போயிடாதே" என்றான் பதட்டமாக ஆரம்பித்து கிண்டலாக முடித்தான்.

"எனக்கு என்னதான் வேலை" என்றாள் எங்கோ பார்த்து.

"என்ன பார்த்து பேசுடி தங்கக்கட்டியே" என்றான் அவளது முகத்தை அவன் புறம் திருப்பி.

"இந்தா பாருயா இப்படி ஒரசிட்டு, தொட்டு பேசுற வேலையல்லாம் வேணா புரியுதா..." என்றாள் விரலை நீட்டி எச்சரித்தாள்.

அவள் நீட்டிய விரலில் குனிந்து முத்தமிட்டான் அர்ஜுன். அவன் செய்ததை பார்த்து ஷாக் ஆனவள் கையை அவன் ஷர்ட்ல தொடச்சி.... "ச்சீய் எச்சை...'' என்றாள் அர்ஜுனை முறைத்துக்கொண்டு.

"பாரா சொர்ணாக்கா வெளியே வரா" என்றான் நக்கலாக.

"சும்மா பேசிட்டு இருக்காத, என்ன வேலைன்னு சொல்லு மொதல்ல" என்றாள் சாரா.

"உனக்கு என்ன வேலைன்னா, என் கூடவே இந்த ரூம்ல இருக்கனும்... ஈவினிங் வரை என்றான்" என்றான் குதூகலமாக.

"ஹாப் டே தான வேலை. அது ஸ்டுடென்ட் அண்ட் ஸ்டாப்க்கு" என்றாள்.

"நானும் ஸ்டாப் தான" என்றாள்.

"டான்ஸ் சொல்லித்தர ஸ்டாப்க்கு அது, யூ ஆர் மை அசிஸ்டன்ட். நான் எப்போ கிளம்புரனோ அப்போதான் கிளம்பனும்" என்று சத்தம் இல்லாமல் குண்டை போட்டான் அவள் தலைமீது.

"ஹ்ம்ம்ம்..." என்றாள் தயக்கமாக.

அவளது சோகமான முகத்தை பார்க்க முடியாமல். "குட்டிமா என்னாச்சி".

"ஒன்னும் இல்ல" என்றாள்.

"என்ன பாரு.." என்றான் மெதுவாக.

சாரா தயங்கிக்கொண்டு பார்த்தாள்.

"இங்க வா என்னாச்சி, பாப்பா போல்டான ஆளுன்னு கேள்விப்பட்டேன்..." என்றான் குழந்தைகளுடன் பேசுவது போல.

"நான் போல்டு தான், ஆனா உன்ன பார்த்தா ஏதோ சரியா படல எனக்கு" என்றாள் நினைத்ததை அப்படியே.

அர்ஜுன் இவளை வைத்து சில மாதங்கள் விளையாட நினைத்தவன், இவளின் வார்த்தை அவனை மிகவும் பாதித்தது.

"இங்க பாரு சாரா இப்படி நீ பேசுறது எனக்கு ஹர்ட்டா இருக்கு. நான் உன்ன மூணு வருஷம் முன்னாடி, ஒரு முறை பார்த்ததை வச்சி இப்போவாரை கல்யாணம் பண்ணாம இருக்கேன்" என்றான் அர்ஜுன்.

"என்ன...!!!!" என்று ஆச்சர்யமாக அர்ஜுன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள்.

"உனக்கு என்மேல விருப்பம் எப்போ வருதோ அப்போ சொல்லலாம்ன்னு நினச்சேன், ஆனா உனக்கு என்மேல பயம்ன்னு எப்போ சொன்னியோ அப்போவே, இனி உன்ன தொந்தரவு செய்யமாட்டேன், சாரி சாரா..." அர்ஜுன் கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றான்.

சாராவின் வேலையை மாற்றினான் "டெய்லி எல்லா கிளாஸ்சும் சரியா நடக்குதான்னு, சரி பார்க்கிறது தான் உன்னோட வேலை" என்று விளக்கிவிட்டு சென்றான்.

ஒரு வாரம் அர்ஜுன் ஆபீஸ் பக்கமே வரல. எங்கே, சென்றால் அவளை வற்புறுத்த நேரிடுமோ என்று நினைத்து வரவில்லை.

ரித்திகா சாரா மற்றும் ஆனந்தன் அனைவரும் நெருங்கிய நண்பர்களைப் போல் ஆனார்கள் இந்த ஒரு வாரத்தில்.

பிரிவு காதலை உணர்த்தும் என்று அனுபவிச்ச யாரோ தான் கண்டிப்பா சொல்லி இருப்பாங்கன்னு சாரா நினைத்தாள்.

பொறுத்து பார்த்த சாரா ரித்திகாவிடம் கேட்டே விட்டாள் "எங்கே அவன்" என்று.. அதற்கு ரித்திகா சிரித்துக்கொண்டு.... "வீட்ல" என்றாள்.

"ஆபீஸ் வராம அங்க என்னத்த கழற்றான்" என்றாள் அதிரடியாக.

"என்ன சாரா உரிமை தூள் பறக்குது" என்றாள் ரித்திகா கேள்வியாக.

"என் நாளைய புருஷன நான் கூப்பிட்றேன், உனக்கென்ன" என்றாள் சாரா.

"சரிதான்" என்றாள் ரித்திகா அடக்கப்பட்ட புன்னகையோடு.

"ரித்தி அவனுக்கு கால் பண்றயா?" என்றாள் சாரா ரித்திகாவிடம் பரிதாபமாக.

"உன்ட அவன் நம்பர் இல்லையா?" என்றாள் ரித்து.

"இருக்கு எங்க இருக்கான்னு கேளு, நான் போய் பாக்கணும், அவன்ட சொல்லாத... ஷாக் குடுக்கலாம்" என்றாள் உற்சாகத்தோடு.

ரித்திகா அர்ஜுன்க்கு கால் செய்து ஸ்பீக்கர்ல போட்டு பேச ஆரம்பித்தாள்... "டேய்ய் என்னடா செய்ற, வராம"

"ரித்து தூங்கிட்டு இருக்கேன்" என்றான்.

"அம்மா எங்க" என்று ரித்திகாவிடம் கேட்க சொன்னாள் சாரா.

அம்மா இங்கதான் இருகாங்க... என்றான்.

"அர்ஜுன், என் ஒன்னுவிட்ட அண்ணனுக்கு ஒடம்பு சரி இல்ல பாத்துட்டுவரப் போறேன், ரெண்டு நாள் வரமாட்டேன்" என்றார் அம்மா.

"மா ஒடம்பு சரி இல்லாத புள்ளைய விட்டுட்டு போரியே அறிவு இருக்கா" என்றான் கிண்டலாக மீராவிடம்.

"ஆபிஸ் போக வலி உனக்கு, பொய் சொல்லி ஏமாத்திட்டு திரியுற" என்று மண்டைல நன்கு கொட்டு வைத்துவிட்டு சென்றார்.

"மா... வலிக்குது" என்று சிணுங்கினான்...

போன் பேசிவிட்டு திரும்பி பார்த்தாள் சாராவை காணோம்.. "அடிப்பாவி அம்மா இல்லனு சொன்னதும் அவனை பாக்க ஓடிட்டா" என்று சிரித்துக்கொண்டு வேலையை பார்க்க சென்றாள் ரித்திகா.

அர்ஜுன் வாசல் கதவை கூட பூட்டாமல் மேல் சட்டை அணியாமல், காபி போட்டுக்கொண்டு இருந்தான் சமையல் அறையில்.

சாரா மெதுவாக சென்று அவனது பின் இருந்து அணைத்தாள். திடீரென்று யாரோ அணைப்பது தெரிய பதறியவன், மொத்த காபியும் அவன் மீது கொட்டிக்கொண்டான்.

"ஆஆ...." என்று அலறியவன்.

"அச்சோ அர்ஜுன் சாரி.... லவ் யூ சொல்ல வந்தேன் இப்படி ஆய்டுச்சே" என்று புலம்பியவள். ஐயோ இப்படி சொல்லிவிட்டோமே என்று நாக்கை கடித்துக்கொண்டு வெட்கப்பார்வை பார்த்தாள். அர்ஜுன் அவளை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டு இருந்தான். அதை பார்த்தவளுக்கு இன்னும் வெட்கம் பீறிட்டு வந்தது. "காபி கொட்டிடுச்சில்ல தண்ணில கை வைங்க" என்றாள்.

"அதுலாம் ஒன்னும் இல்ல, சும்மா ஷாக் குடுத்தேன். இது ஆறிப்போன காபி தான்" என்றான் குறும்போடு. இடியட் எல்லாத்துலையும் விளையாட்டு, உன்னக்கு ஷாக் கொடுக்க வந்தா எனக்கு குடுக்கிறியா" என்றாள் கோபமாக..

"கேட்ட தொறக்கும் போதே உன்ன பாத்துட்டேன். சரி கொஞ்ச நேரம் விளையாட நினச்சேன்" என்றான் ஆசையாக.

"சரி மேடம் எதுக்கு வந்தீங்க" என்றான்.

"அதான் சொல்லிட்டேனே" என்றாள்.

"என் கண்ணை பார்த்து சொல்லு.."

மறுப்பாக தலை அசைத்து அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்..... அர்ஜுன் அவளை தொரத்திக்கொண்டு அவனது அறைக்கு போகுமாறு செய்து விட்டு, வெற்றியும் கண்டான். அவள் உள்ளே சென்ற சமயம் தானும் உள்ளே நுழைந்து கதவை அடைத்தான்.

"சாரா ப்ளஸ் என்னால கண்ட்ரோல் செய்ய முடில. ஒரே ஒரு கிஸ் மட்டும், மூணுவருஷம் கனவுல வாழ்ந்து வாழ்ந்து சலிச்சி போச்சி. இவ்ளோ வருஷம் யார் என்னன்னு கூட தெரியாம பைத்தியமா இருந்தேன்... ப்ளஸ் சீக்ரம் கல்யாணம் செஞ்சிக்கலாம் இன்னும் ஒரு நிமிஷம் கூட என்னால பிரிஞ்சி இருக்க முடியாது" என்றான்.

அவனின் காதலை எண்ணி நெகிழ்ந்து போனாள் சாரா, நான் வீட்ல பேசுறேன் அர்ஜுன் என்றாள். நானும் அம்மாட்ட சொல்றேன் நெஸ்ட் வீக் அக்கா கல்யாணம் முடிஞ்சதும் சொல்றேன் அர்ஜுன் என்றாள்.

அவனும் தலை அசைத்து. ஒரு சிறிய அறைக்கு அழைத்து சென்றான். "என்னடா இது ரகசிய அறை..." என்றாள்.

"அப்படியும் வச்சிக்கலாம்" என்று சாரா வை கூட்டிட்டு போனான். அவளுக்கு பிடித்த சில பொருட்கள். அவள் தொலைத்ததாக நினைத்த சில பொருட்களை அவள் அங்கே பார்த்தாள்.

"எரும எதுக்கு என்னோட செயின திருடி வச்சி இருக்க" அங்கு இருக்கும் சில பொருளை பார்த்தவள் "இடியட் எதுக்கு டா இதுலாம் வாங்கி வச்சி இருக்க". ஓவர் விலையை பாத்து அன்று மாலில் விட்டு சென்றவை அவை.

"அந்த செயின் விழுந்துடுச்சி, அத கொடுக்க தான் பின்னாடிவந்தேன், அத மறந்து உன் பின்னாடி அன்னைக்கு சுத்திட்டு, சைட் அடிச்சிட்டு இருந்தேன்" என்றான் அர்ஜுன் பெருமையாய்.

"அட ச்சி, எரும அன்னைக்கே வந்து என்ட கொடுத்து இருந்தா, இன்னும் சீக்கிரமா பிரிண்ட்ஸ் ஆகி இருக்கலாம் நம்ம, வேஸ்ட் டா நீ" என்றாள் அர்ஜுன் செய்த முட்டாள்தனத்தை எடுத்து சொல்ல.

"ஆமால.." என்றான் அர்ஜுன்.

"ப்ளிஸ் இத போட்டு வா. இமாஜின்ல பாத்து பாத்து, போர் அடிச்சிடுச்சி நேர்லயே பாக்குறேன் இன்னைக்கு".

"ம்ம்ம்" அவன் கையிலே இருந்த பிளாக் கலர் புடவையை வாங்கிக்கொண்டு, டிரஸ்ங் ரூமுக்குல் நுழைந்து பத்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.

அர்ஜுன் கற்பனையை விட அவளுக்கு சரியாக பொருந்தியது... அவள் கட்டியதால்தான் அந்த புடவையின் மதிப்பு கூடியது, என்று நினைத்தான்.

"ஹே.... சாரா கார்ஜியஸ்" என்று குதூகலத்தோடு அவளை கட்டிக்கொண்டான்..... ஒருவாரம், அனைத்து வேலையையும் அனைத்து உறவையும் மறந்து, பிடித்த இடம் பிடித்த உணவு என்று அந்த நகரத்தில் சுற்றி திரிந்தார்கள்....

ஒரு வாரம் தான் ஆகி இருக்கும் இருவரும் இணைந்து, இந்த நிலையில் வேறு ஒரு பொண்ணு கூட, அதுவும் அவளது அக்காவிற்கு மாப்பிள்ளை என்பது தெரிந்து, அவளது மனம் உடைந்து சிதறியது.

மண்டபத்தில் மணப்பெண் தொலைந்ததால்... தங்கையான இவளை அமர்த்தி விட்டார்கள் சுற்றி இருந்தவர்கள். அந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்து இருந்தால், அக்காவை போல ஓடி ஒளிந்து இருப்பாள். ஆனால் அங்கு முகம் சுருங்கி அமர்ந்து இருப்பது அவளவன் ஆச்சே.

அவளது பெற்றோர்க்கு இதில் விருப்பம் இல்லை. சாராவிடம் பெரியம்மா கேட்கும்போது இவள் தலையை அசைத்ததால் அமைதியாகி விட்டனர்.
 
Top