23.நவிலனின் கோதையானவள்
எதுக்கு அடிச்ச என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாம் என்று விழுந்த வேகத்தில் எழுந்து கவிதா கத்த…..
அந்த அடியை நான் தந்து இருக்கனும் கவி என்று வசந்த் சொன்னதும் அதிர்ந்து விழித்தாள் கவிதா..
என்ன பேசுறீங்க நான் என்ன தப்பா பேசிட்டேன் என்று மறுபடியும் அர்த்தமே இல்லாமல் கேட்க… ஓஓஓ அப்ப நீ பண்ணது தப்பு இல்ல நான் அடிச்சது தான் தப்புன்னு சொல்ல வர அப்படித்தானே என்று மங்கை கேட்க..
அம்மா உனக்கு புரியுதா இல்லையா நாளைக்கே எதாவதுன்னா என்று மறுபடி பேச மறுபடி ஓங்கி அறைந்து இருந்தார் மங்கை..
போதும் கவி உன்னைய அப்பா எந்த சூழ்நிலையிலும் ஏங்கிய கூடாதுன்னு நிறைய தாங்கிட்டார் அதான் இப்படி எல்லாம் பேச சொல்லுது…
அம்மா…
நிறுத்து என்ன இப்ப உனக்கு? எங்க சொத்து கை மாறிடுமோன்னு தானே பயம் உனக்காக அப்பா எழுதினது அந்த ஆபிஸ் அதை இப்ப வசந்த் தான் பார்த்துட்டு இருக்கார், இதுக்கு அப்புறமும் அவர் தான் பார்க்கபோகிறார்.
அப்ப எனக்கு இது தான் ன்னு பிரிச்சு விட பார்க்கிற தானே என்று மங்கையை பார்த்து கேட்க..
நீ தான் பிரிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிட்ட..
ஓஓஓ அப்ப மத்த எதுலையும் எனக்கு உரிமை இல்ல அப்படித்தானே என்றாள் கவிதா..
மத்தது என்ன இருக்கு கவி உங்க அப்பா உழைச்சு சம்பாதிச்சது அந்த ஆபிஸ் அப்புறம் இந்த வீடு. இந்த வீட்டை என் பேர்ல எழுதி வச்சு இருக்கார் இதுவும் என் காலத்துக்கு பிறகு உங்க இரண்டு பேய்க்கு தான் வேற என்ன உனக்கு வேணும் மத்த சீர் செனத்தி எல்லாம் உங்க அப்பாவே செஞ்சு தான் அனுப்பி இருக்கார் .
ஓஓஓ அப்ப ஹாஸ்பிடல் அந்த லேப் அப்புறம் இந்த ஸ்கூல் என்று முடிக்கும் முன்பே,அதெல்லாம் நவி சம்பாத்தியம் என்றார் மங்கை..
என்ன யோசனையில் கவிதா சிரித்தாள் என்று அவளுக்கே தெரியும் அவள் முகபாவனையை பார்க்கும் சூழலிலும் யாரும் இல்லை ஓஓஓ அப்ப எனக்கு எழுதி குடுத்துடுங்க என்று பேசியவளை பார்த்து மங்கை,அது உன் பேர்ல தான் இருக்கு கவி மறந்துட்டியா…
ம்ம்ம அப்புறம் அந்த ஹாஸ்பிடல் கூட எனக்கு ஷேர் இருக்கே…
அதுவரை அமைதியாக இருந்த நவிலன் அக்கா,என்ன பேச்சு இது உனக்கு இல்லாததா உனக்கு எல்லாத்துலையும் ஷேர் இருக்கு க்கா என்றான் நவிலன்..
ஓஓஓ… ஆனா உன்னோட அம்மா அப்படி சொல்லலையே என்று சொன்னதும் நவிலன் தான் பதறி இருந்தான் அக்கா என்ன பேச்சு இது அம்மா அப்படி எல்லாம் நினைக்கல க்கா..
நினைக்க மாட்டாங்க நவிலன் ஏன்னா எல்லாம் அவங்க பையன் பேர்ல இல்ல இருக்கு அப்ப அவங்க ஏன் தேவையில்லாத தை நினைக்கனும்.
மங்கை அவள் பேச பேச எதையும் யோசிக்கவில்லை விடுவிடுவென்று உள்ளே சென்று வெளியே வந்தவர் சில பாத்திரங்களையும் சில நகைப்பெட்டிகளையும் வைத்தவர் இதெல்லாம் உனக்கு தரவேண்டியது தான் உன் கல்யாணத்துக்கு போட்டது வேற அது இல்லாம இதுவும் உனக்கு தான் இதை பேத்தி பிறந்தா அப்ப தரனும் ன்னு அப்பா ஆசை அதான் எடுத்து வச்சு இருந்தோம் ஆனா எங்களுக்கு பேரன் மட்டும் ன்னு இருந்தது அதான் இப்ப தந்துடுறேன். நாளைக்கு இதை வச்சு பேச்சு வரக்கூடாது பாரு என்று அழுத்தமாக மங்கை சொல்ல..
ஓஓஓ அப்ப அத்துவிட முடிவு பண்ணிட்டீங்க..
அத்து விட நினைக்கல கவி உன்னோட தேவையை சரி செஞ்சு வைக்க பார்க்கிறேன்.
அப்ப எனக்கு பணம் பைத்தியமா..
அப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லையே
கவி பதில் பேசாமல் அவரையே பார்க்க..
அத்த என்ன இது அண்ணி உரிமையில் தானே பேசுறாங்க நீங்க ஏன் அதை பெரிசு படுத்துறீங்க அண்ணி அத்தை ஏதோ வருத்தத்தில் பேசுறாங்க நீங்க நாளைத் இருந்து ஸ்கூல் போங்க அது இனி உங்க பொறுப்பு தான் நீங்க பார்த்து என்ன செய்யுற ஈக்கோ அதை உங்க தம்பி சரின்னு சொல்லப் போறார் அவ்வளவு தான் ஏன் நவிலன் சரி தானே..
இவ வேற இது வேற பிரச்சினை ன்னு தெரியாம என்று நினைத்தவன்..
அக்கா ஏற்கனவே அம்மு சொல்லிட்டா நானும் சரி நீ ஸ்கூல் போன்னு சொல்லிட்டேன் நான் ஹாஸ்பிடல் லேப் இரண்டும் சமாளிக்க முடியாது அதுக்கு தான் மலர் பனி இரண்டு பேரும் பார்க்கட்டும் ன்னு நினைக்கிறேன்..உனக்கு லேப் ஹாஸ்பிடல் கொஞ்சம் சிரமம் இதே ஸ்கூல் ன்னா ஈஸி அப்படியே இங்க ஆபிஸ் நீ பார்த்தா, மாமா அவர் ஆபிஸ் பார்ப்பார் இல்லையா என்று சொன்னதும்..
ஓஓஓ எல்லாம் உங்க முடிவு இல்ல..
அக்கா எல்லாமே உனக்கு வசதிப்படி தான் முடிவு பண்ணேன் . நான் நினைச்சேன் அவ செயல்படுத்திக் டா அவ்வளவு தான் உன்னோட இடத்தை வேற யாரும் பார்க்க முடியாது அதுக்கான உரிமையும் தகுதியும் யாருக்கும் இல்ல அதேபோல் தான் அம்முக்கும் நீ தேவையில்லாம குழப்பிக்கிட்ட அவ்வளவு தான்.
அப்ப என்னைய பைத்தியம் ன்னு சொல்ல வர..
ஏன்க்கா என்று ஆயாசமாக நவின் பார்க்க…
இல்ல அப்படித்தானே இருக்கு நல்லா இருக்கிற வளை பார்த்தா பைத்தியம் மாதிரியும் ஏற்கனவே இருந்ததை நல்ல நிலையில் இருக்க மாதிரி தானே நடத்திட்டு இருக்கீங்க என்று பனியை கவிதா ஒரு பார்வை பார்க்க புன்னகைத்து கொண்டாள் பூம்பனி இதுவொன்றும் புதிது அல்லவே அவளுக்கு கேட்டு சலித்தது தான் என்ன இத்தனை வருடம் ராணி வினி என்று அவளை சார்ந்தவர்கள் இங்கு புகுந்த வீட்டு உறவுகள் அவ்வளவு தான் வித்தியாசம்…ஆனால் பேச்சு என்னவோ அவள் மனநலம் பாதிக்கப்பட்டவள் அதோட குடும்ப வாழ்க்கைக்கு தகுதியற்றவள் இந்த இரண்டு வாரங்களே இப்படி இருக்க இன்னும் காலம் என்று நினைக்கையில் தான் உண்மையாகவே பைத்தியம் ஆகி விட்டால் என்று எண்ணம் இரண்டு நாளாக குடைந்து கொண்டு இருக்கிறது வெளியே பிரச்சினை என்றால் வாசலில் செருப்பை கட்டுவது போல் கழட்டி விடலாம் ஆனால் வீட்டிற்குள் ? என்று தான் மனநிம்மதியை தொலைத்து இருந்தாள்.
எப்படியோ நான் வேற ன்னு கடைசில சொல்லாம சொல்லிட்டு இல்ல என்று மங்கையை பார்த்து கவிதா கேட்க..
மங்கை அதிராமல் தான் பார்த்தார் ஆனால் நவி தான் பதறி கொண்டு அக்கா என்று அவள் கையை பிடிக்க விடு டா என்றாள் அவன் கையை உதறி..
என்னக்கா இப்படி பேசுற கஷ்டமா இருக்கு எனக்கு இருக்க ஒரே உறவு நீ தானே ..
ஓஓஓ அந்த எண்ணம் வேறயா நம்பிட்டேன் என்னைக்கா இருந்தாலும் வேற வேற தானே என்றவள் நிற்காமல் வெளாயேறி விட..
ஒரு பெருமூச்சுடன் விடுங்க அத்த அவ எப்படியும் இதை இழுக்காம இருக்க மாட்டான்னு உங்களுக்கு தெரியும் தானே என்றான் வசந்த்…
புரியுது மாப்ள என் பக்க தவறு என்னனு தான் தெரியல இதுக்கு மேல எனக்கு இறங்கி போக தெரியல ஏன்னா இதுவரை வேற ஆனா இப்ப இவனை நம்பி ஒரு பொண்ணு அவ வாழ்க்கையை வாழ இங்க வந்து இருக்கா அப்ப அவளுக்கான இடத்தை சரியா ஏற்படுத்தி தரனும் தானே…
அத்த அதை சொல்லி தான் தெரியனுமா விடுங்க அத்த அவ எங்க போக போறா எல்லாம் கொஞ்ச நாள் அப்புறம் அடங்கிடப் போறா என்றவன் சிர நவி நான் கிளம்புறேன் பனி நீ எதையும் போட்டு யோசிக்காத சாரி டா மா..
விடுங்க அண்ணா நான் கல்யாணம் ன்னு வந்தா இதெல்லாம் எதிர்பார்த்து தான் இருந்தேன் என்றவள் புன்னகைக்க…,வசந்த் கிளம்பும் முன்பே மங்கை பனி என்று அவளை அருகில் அழைத்து ஒரு பெட்டியை தர…
என்ன அத்தை…
இதெல்லாம் உனக்காக காத்துட்டு இருந்தது கவிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டேன் உனக்கு தர வேண்டியதையும் மாப்ளையை வச்சிட்டு வந்துடுறேன் நாளைக்கு எந்த கசப்பும் வேண்டாம்..
அத்த என்று ஒரே குரலாய் வசந்த் பனி அழைக்க..
மங்கை, “இல்ல என்ன தான் நாம் எதார்த்தமான இருந்தாலும் காலமும் சூழலும் அதற்கு ஒத்து போகாது அதான் மாப்ள அது எல்லாம் கவி அம்மாவோடது இதெல்லாம் எனக்கு அவங்க அப்பா செஞ்சு போட்டது இரண்டு பேருக்கும் சமமா தான் வாங்கி கொடுத்தார் எந்த குறையும் வைக்கவில்லை ஆனா நான் தான் என் பொண்ணுக்கு ஏதோ ஒரு இடத்தில் அவள பெத்தவ நான் இல்லன்னு உணர வச்சுட்டேன் போல என்று தேம்பி விட வசந்த் நவிலன் இருவரும் அவரை அணைத்து ஆறுதல் படுத்த பனி அதிர்வில் சமைந்து நின்று விட்டாள்.
சரி விடுங்க அத்த நான் பார்த்துக்கிறேன் எனக்கு தெரியாத நீங்க எப்படின்னு நீங்க எதையும் குழப்பிக்க வேண்டாம்..
இல்ல இல்ல என்றவர் கண்ணை துடைத்து பனியை பார்த்து அவள் தான் இமைக்க மறந்து பார்த்து இருந்தாள். நவி பனியை கவனி என்றவர் நான் ரூம் போறேன் நீங்க போய் அவளை சமாதானம் செய்யுங்க என்று வசந்திடம் சொல்லிவிட்டு மங்கை நகர…,பார்த்துக்கோட நவி என்று கிளம்பிவிட்டான் வசந்த்.
எல்லோரும் கிளம்பி கால்மணி நேரம் ஓடியும் நவிலனும் பனியை உலுக்க வில்லை அவளும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை .புரியாத அறியாத வயது பிள்ளைகள் அல்லவே அதான் எதையும் கேட்கவோ விளக்கவோ இல்லாமல் அமைதி காத்தனர்..
சற்று நேரத்தில் பனியே தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவள் நைட் என்ன டிபன் செய்யட்டும் என்று கேட்டதும் ,பனி என்றான் தழுதழுப்பாய்…
விடுங்க நவி எதையும் விளக்க வேண்டாம் ஓரளவிற்கு புரியும் பார்த்துக்கலாம் காலம் தான் இருக்கே என்று அந்த பேச்சை தள்ளி இருந்தாள்.
எனக்கு பசியில்ல டா என்று நவிலன் செல்ல அதுக்கு அத்த சாப்பிடனும் எனக்கு பசிக்கும் என்றதும் சிரித்தான் சமையல் செய்ய சொல்லு சப்பாத்தி போடட்டும் எதாவது கிரேவி மாதிரி பண்ண சொல்லிட்டு அம்மு
சரி சரி ரூம் போகாதீங்க இங்கேயே இருங்க என்றாள் பனி..
டிரஸ் மாத்திட்டு வரேன் அம்மா ரூம் போகலாம் என்றான் நவிலன் வருவதற்குள் நடந்து முடிந்ததை தாங்காமல் என்னென்ன பேசப் போகிறோம் என்று அப்போது அறியவில்லை நவிலன்.
தொடரும்
Last edited: