24.நவிலனின் கோதையானவள்
வாரங்கள் கடந்து இருந்தது அந்த நிகழ்விற்கு பிறகு…வீடே நிசப்தமாக தான் இருந்தது வேலா வேலைக்கு எல்லா செயலும் நடைப்பெற வேண்டிய கட்டாயம் அதனால் எதையும் சிந்திக்கும் நிலையில் நவிலன் இல்லை. ஆனால் பனியால் அப்படி விட முடியவில்லை தானே சென்று கவிதாவை பள்ளியில் பொறுப்பு ஏற்க வைத்து இருந்தாள் .
நீங்க தான் அண்ணி இதை பார்த்துக்கணும் அதோட உங்களுக்கு தனியா டிபார்ட்மெண்ட் கூட ஒதுக்கி இருக்கு அதை உங்க திறமையால் மெருகேற்றனும் அது தான் என்னோட ஆசை என்றவள் அவளிடம் அந்த பள்ளியில் நீங்களும் முடிவெடுக்கும் விதமாக எழுதிய பாண்ட் பேப்பரை தந்து விட்டு வந்து இருந்தாள்.
அம்மு…
சொல்லுங்க நவி…
நீ பண்ணுறது ஒன்னும் சரியா வராது அம்மு…
ஏன் எடுத்ததும் அது சரி வராதுன்னு முடிவு பண்ணனும் அவங்க பண்ணது தப்பு தான் இல்லன்னு சொல்லல ஆனா அவங்களும் சில அழுத்தத்தில் இருக்காங்கன்னு ஏன் உங்களுக்கு புரியல ..
நாங்க எந்த விதத்திலும் அக்காவை தனிப்படுத்தினது இல்லையே…
தனிப்படுத்தினது இல்ல ஆனா அதீத அக்கறை வச்சு தனியா காட்டீட்டீங்க..
அம்மு…
ஆமா நவி அவங்க உங்க அக்கா தான் உங்க பொண்ணு தான் என் பொண்ணுக்கு என் அக்கா க்கு என்னவோ அதை நான் தான் செய்யுவேன் அதை முடிவும் நாங்க தான் பண்ணுவோம் ன்னு அவங்க மனசுல விதைக்க மறந்துட்டீங்க இல்ல..
என்ன சொல்லுற அப்ப இதுவரை பண்ணலையா?
ஏன் பண்ணல பண்ணிட்டு தான் இருக்கீங்க ஆனா அது அதிகப்படியா பண்ணிட்டீங்க அதான் அவங்க தனக்கு மட்டும் தான் அதுக்கு அப்புறம் தான் எதுவும் ன்னு தன் மூளைக்கு பதிய வச்சுட்டாங்க.. எப்படி நவி இதை நீங்க கவனிக்க தவறுனீங்க ? அவங்க ஏற்கனவே ஏதோ அழுத்தத்தில் இருந்து இருக்காங்க அதை நீங்க சரி பண்ணாம உனக்கு தான் முதல் உரிமைன்னு எல்லாத்தையும் அளவுக்கு அதிகமா வந்துட்டீங்க அது இப்ப விஷமா மாறி இருக்கு எதையும் ஏத்துக்கிற மனசு இல்லாம பண்ணிட்டீங்க அவங்களை நீங்களே தான் பொறாமை துரோகி எதிரி ன்னு அவங்க கண்ணுக்கும் மூளைக்கும் பதிய வச்சுட்டீங்க ?
அம்மு…
உண்மை அது தான் அவங்க பிறப்பு எப்படி உங்க அம்மா வாழ்க்கை எப்படி உங்க பிறப்பு எப்படின்னு எல்லாம் ஆராய வேண்டாம் இது தான் நம்ம வாழ்க்கை அதில் இதெல்லாம் தான் நம்ம உரிமையும் உணர்வும் ன்னு சொல்லி அதை சரி பண்ணி தவறவிட்டு தான் இவ்வளவு பிரச்சனைக்கு காரணம்.
ஒரு பெருமூச்சுடன் இப்ப என்ன பண்ணட்டும் அம்மு…
நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் அவங்களா சரி பண்ணிப்பாங்க நீங்க இருக்கிற வேலையை மட்டும் பாருங்க என்றவள்,அடுத்த அடுத்த வேலைகளில் மூழ்கி விட்டாள் சரியாக ஒரு வாரத்தில் கவிதா பள்ளியில் சார்ஜ் எடுத்து இருந்தாள் .
கங்கிராட்ஸ் அண்ணி இனி உங்க பொறுப்பு இது நான் இதுல இருந்து விடுதலை ஆகுறேன் இனி எந்த விஷயமா இருந்தாலும் நீங்களும் சாரங்கன் சாரும் தான் என்றவள் புன்னகைக்க..
சாரங்கன் , “ நீ விடுதலை பொறுப்பில் இருந்து தான் ஆனா உரிமை நீ தான் சில நேரம் சில பல மீட்டிங் நீயும் அட்டன் பண்ணனும் அதுக்கு சரின்னு நவிலன் சொன்னதால் தான் இவங்களையும் இங்க பவர் ஆஃப் பட்டதாரிக்கு ஒத்துக் கிட்டேன்..
கண்டிப்பா சார் ஆனா பாருங்களேன் அண்ணி செய்யுற வேலையில் நீங்க என்னைய கூப்பிட அவசகயமே வராது அண்ணி பக்காவா டீச்சிங் அண்ட் அட்மினிஸ்டிரேஸன் சரியா செய்வாங்க..
சாரங்கன், “சரி பார்க்கலாம் என்றவர் வாங்க உங்களுக்கான இடத்தை காட்டுறேன் அப்புறம் இவங்களுக்கு கைட் பண்ண ஒரு டீச்சர் என்று அவர் பனியை பார்க்க அரேஞ்ச் பண்ணிட்டேன் சார் மீனா மேம் பார்த்துப்பாங்க…
ஓகே…
சில பல வேலைகளை முடித்து கொடுத்து பனி கிளம்பி விட ஆரம்பமாகி இருந்தது கவியின் பணி..
மீனா, “ மேம் உங்களுக்கு எகனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட் என்று ஆரம்பிக்கவும் நானே பார்த்துக்கிறேன் மீனா என்றவள் நடந்து விட சரி என்று தோள் குலுக்கலுடன் நகர்ந்து விட்டாள் மீனா…பனி ஏற்கனவே சொல்லி இருந்தாள் கவி போல்ட் அவங்க அவங்களை பார்த்துப்பாங்க எதாவதுன்னா நீங்க ஹெல்ப் பண்ணுங்கன்னு அதனால் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சென்று விட…
எகனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட் வரவேற்போ படு பயங்கரம் …உள்ளே நுழைந்தவள் பார்த்தது அவர்கள் விருப்பத்திற்கு பாட்டும் ஆட்டமும் இருந்த கூட்டத்தை தான்…எப்போதும் இந்த துறையை பெரிதாக கண்டுக்காத இடம் தான் எல்லா பள்ளிகளிலும் ஏதோ படித்தோம் என்று படிக்க வந்தவர்கள் என்ற எண்ணம் ஆனால் நாட்டின் பொருளாதாரமே பார்க்கபோகிற மாணவர்கள் என்று யாரும் நினைத்தார் இல்லை… இன்று கண்ட கூட்டத்தை பார்த்த கவி…
ஹலோ எவரிபடி…
எஸ் கம் இன் என்ன இங்க பண்ணுறீங்க யார் வேணும் என்று பிள்ளைகள் துடுக்காக கேட்க..
நீங்க தான் இனி நான் தான் உங்க இன் சார்ஜ்..
ஓஓஓ புது வரவா எப்படி வரவேற்கிறது ?
டேய் புதுவரவு மேரிட் டா..
அப்படியா அப்ப மருமகளே மணமகளே வா வா ன்னு பாடிய வேண்டியது தான் என்றதும் மொத்த கூட்டமும் கொள்ளென சிரிக்க… வந்ததே கோவம் கவிதாவிற்கு
ஏய் நிறுத்துங்க உங்க சத்தத்தை என்று அவர்கள் சத்தத்தை விட கவிதா கத்தி விட..
அப்போதும் அடங்காத கூட்டம் பரவாயில்ல சவுண்ட் லைக்ஸ் குட் என்றதும் …
என்ன சேட்டையா என்றாள் கவிதா…
சரி சரி நீங்க வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்பினா பரவாயில்ல என்று பிள்ளைகள் கூச்சலிட…
அவங்க அவங்க இடத்தில் உட்கார்ந்தா சரியா இருக்கும் நான் கிளாஸ் எடுக்க போறேன்..
அப்படியா நீங்க என்னத்த சொல்லிதர போறீங்க…
நீங்க என்ன படிக்க வந்தீங்களோ அதை தான் என்றாள் அவர்களை போலவே..
பேஸ் பேஸ் நல்லா தான் இருக்கு இந்த பேச்சும் என்று பிள்ளைகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு அவரவர் இருக்கையில் அமர…
இதுவரை என்ன எப்படி நடத்தினால் கன்னு தெரியல பட் நீங்க ஒரு டேர்ம் முடிச்சு இருப்பீங்க இருந்தாலும் நாம் ஒரு குயிக் ரிவியூ பார்க்கலாம் என்றவள் கடகடவென இருந்த நாலு யூனிட்டை ஹிண்ட் கொடுக்க..அசந்து தான் போய் இருந்தனர் பிள்ளைகள் பிள்ளைகள் மட்டுமா வெளியே நின்று பார்த்து கொண்டு இருந்த பார்க்கனும் கூட ஆச்சரியம் தான் அப்ப இனி இந்த டிபார்ட்மெண்ட் பத்தி கவலைப்பட தேவையில்லை என்று அவர் நகர்ந்து விட..
அவ்வளவு சுலபத்தில் நடக்க விடுவோமா என்பது போல் பிள்ளைகள் பார்க்க..
உங்க போன டேர்ம் கிளாஸ் வொர்க் எடுத்து வைங்க நான் செக் பண்ணிட்டு என்ன பண்ணலாம் ன்னு சொல்லுறேன் என்றவள் கிளாசில் இருந்து வெளியேறி இருந்தாள்..
வாவ் நம்மகிட்ட பேசவே பயப்படற இந்த ஸ்கூல் ல இப்படி ஒரு டீச்சர் என்று சலசலத்து கொள்ள..இன்னும் எத்தனை நாளைக்கு ன்னு பார்க்கலாம் கைய்ஸ் வாங்க நம்ம நோட்ஸ் இருக்கிறதை என்னனு செக் பண்ணலாம்.
அந்த பள்ளியில் அடங்கவே அடங்காத டிபார்ட்மெண்ட் என்று பெய்ய பெற்றது தான் இந்த எகனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட் எங்கு சலசலப்பு என்றாலும் அதில் அவர்கள் தலையீடு இருக்கத் தான் செய்யும் அப்படித்தான் இந்த துறையும் அப்படி ஒரு பிடிவாதம் கொண்டவர்கள்.அதையெல்லாம் இங்க வேலை பார்த்த நாட்களில் புரிந்து கொண்ட பனி தான் கவிதாவை இதுக்கு ஏற்ற ஆள் என்று முடிவு செய்தாள் என்ன கவிதாவே இந்த ஸ்கூல் வேண்டும் என்று கேட்பாள் அதன் பிறகு தான் இந்த திட்டம் செயல்படும் என்று பனி அறியாத ஒன்று.
முதல் நாள் மலருடன் பனி சேர்ந்து தன் துறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்கிறாள். என்ன சீனியர் எப்படி இருக்கீங்க..
நான் நல்லா இருக்கேன் என்ன மேடம் கங்கு இந்த பக்கம் காத்து அடிக்குது என்றாள் மலர்.
இனி இங்க தான் தினமும் வீசும்.
எப்படி காதல் காத்தா இல்ல வேலை காத்தா…
உங்களை மாதிரி தான் கங்கா எந்த காத்துட்டு நீங்க சொல்லுங்க என்றாள் பனி..
அடிப்பாவி சேட்டை சேட்டை என்று அவளை தட்டிவிட்டு வேலையை பார்க்க..
என்னக்கா நீறைய ப்ரோஜெக்ட் வருமா..
ஏன் வராது மெடிக்கல் ஃபீல்ட் க்கு நிறைய ரிசர்ச் பண்ணுறதே இந்த டெக்னிக்கல் டிபார்ட்மெண்ட் தானே…
அது உண்மை தான் ஆனா டாக்டர் எதுக்கு இதை ரன் பண்ணனும் அவருக்கு தான் பெரிய ஹாஸ்பிடல் இருக்கே…
ஆனா அவர் விரும்பின பொண்ணுக்கு ஒரு ஆபிஸ் வேணும் இல்ல அதுக்கு த் இந்த டிபார்ட்மெண்ட் என்று சிரிக்க..
பனி தான் ஆச்சரியமாக பார்த்தாள் மலர் இயல்பாக இருப்பதில் சந்தோஷம் என்றாலும், எப்படி கடந்து மறந்தார்கள் என்று தான் அவள் மன அரிப்பே…
என்ன பனி யோசனை…
ஒன்னு இல்ல சீனியர் உங்க சிரிப்பு எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு…
ஏன் என் சிரிப்புக்கும் உன் ஆறுதலுக்கும் என்ன சம்பந்தம் என்றாள் சிரித்து கொண்டே…
ஒன்னு இல்லக்கா…உங்களை மாமா ரொம்ப சந்தோஷமா பார்த்துக்கிறாங்க அதான்
பின்ன பார்த்துக்கனும் இல்ல இல்லன்னா நடந்ததை நினைச்சு செத்துப் மாட்டார் என்று சொன்னதும்..
சீனியர் என்ன பேச்சு இது ?
உண்மையை தான் சொல்லுறேன் அவரை நீ இன்னும் பார்த்தது இல்ல தானே அவரே என்னைய தான் கட்டிப்பேன்னு அடம்பிடித்து கட்டினார் இன்னைக்கு என்னைய அழைச்சிட்டு போக வருவார் நீ கண்டிப்பா இன்னைக்கு பார்க்கலாம் அப்புறம் உனக்கே புரியும் என்று சொன்னதும் ஏதோ ஒன்று என்று நினைத்து கொண்டு சரி என்று தலையாட்டினாள் பனி…
என்ன அமைதியா இருக்க பனி ?
இல்ல சீனியர் சும்மா தான் …
எதையும் போட்டு குழப்பிட்டு இருக்காத பனி வாழ்க்கையில் அப் பவுன்ஸ் இருக்கத்தான் செய்யும் அதையெல்லாம் கடந்து வர வேண்டியது நம்ம தான் என்று மலர் மறைமுகமாக சொல்ல..பனியோ அன்று கல்லூரியில் நடந்த விஷயத்தை தான் அழுத்தி சொல்கிறார் என்று நினைத்து கொண்டாள்…
சரி சரி வா என்று மலர் அடுத்த வேலைக்கு தாவி விட அன்றைய பொழுது மடமடவென சென்று இருந்தது..
மாலை நேரமும் வந்து சேர மலரின் கணவனும் வந்து சேர்ந்து இருந்தார்… வந்து நின்ற வரை பார்த்து அதிர்ந்தாலோ இல்லையோ இப்படியான சூழ்நிலை மீண்டும் வரும் என்று நினைக்கவில்லை பனி மட்டும் அல்ல மலரும் நவியும் கூட நடுங்கி தான் போய் இருந்தனர்…
தொடரும்