• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

27.நவிலனின் கோதையானவள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
86
77
18
Salem

27.நவிலனின் கோதையானவள்​




வீட்டிற்கு வந்துவிட்ட மகளை போய் பார்க்கவே இல்லை தாய் தகப்பன் இருவரும் …

சாம்பசிவம், “ என்ன மனசுல ஓடுது கார்த்தி


இல்ல மாமா நான் கொஞ்ச நாள் எங்கேயாவது போய்ட்டு வரலாம் ன்னு நினைக்கிறேன்..

என்ன விஷயம்

மனசுக்கு சங்கடமா இருக்கு மாமா பாப்பாவை போய் பார்க்க முடியல மாப்ள அவளை கனடா அழைச்சிட்டு போறார் போல வர கொஞ்ச நாள் ஆகும் ன்னு சொன்னாங்க..

ம்ம்ம் என்று அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார் சாம்பசிவம்..

என்ன மாமாம எதுவும் சொல்லாம இருக்கீங்க ?

இதுல சொல்ல என்ன இருக்கு உன் விருப்பம் தான்…அப்புறம் ஒரு விஷயம் கார்த்தி

சொல்லுங்க மாமா

சாம்பசிவம், “எப்ப திரும்பறதா உத்தேசம்?

அது இன்னும் முடிவு பண்ணல மாமா ஏன் மாமா எதுவும் முக்கியமான வேலையா?

ஆமா கார்த்தி இன்னும் இரண்டு நாலு மாசத்துல விக்னேஷ் கிளம்புறான் ..

ஆமா மாமா சொன்னானே கொஞ்சம் இங்க இருக்க கம்பெனியில் வேலை முடிச்சிட்டு கிளம்பனும் ன்னு…

ஆமா அதுக்குள்ள அவன் கல்யாணத்தை முடிக்க சொல்லி சொல்லிட்டான் ..

ஓஓஓ சரி தான்..

என்ன சொல்லுறீங்க என்று அதுவரை வாய்மூடி அமர்ந்து இருந்த ராணி கேட்க..

சாம்பசிவம், “ ஏன் நான் சொன்னது உன் காதுல விழலையா… உன் பையன் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுறான்..

அதெப்படி நாலு மாசத்துக்குள்ள பண்ண முடியும் பொண்ணு பார்க்கனும் அது ஒத்து வரனும் அப்புறம் அந்த குடும்பம் நமக்கு ஏத்ததா இருக்கனும் என்று அவர் அடுக்கி கொண்டே போக…

நிதானமாக சாம்பசிவம் கார்த்தி என அனைவரும் பார்த்து கொண்டு இருக்க..

என்ன நான் பேசிட்டே இருக்கேன் நீங்க இப்படி அமைதியா பார்த்ததுண்டு இருக்கீங்க..

சாம்பசிவம், “எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க ன்னு தான் உன் பையன் சொன்னான் பொண்ணு பாருங்கன்னு சொல்லல..

எதே என்று எழுந்து விட…


என்ன பண்ணலாம் கார்த்தி நீ தான் பேசனும் உனக்கு தெரியும் தானே…

கார்த்திகேயன் திருதிருவென முழிக்க..

டேய் போதும் நீ அமைதியா இருந்தது பாப்பாவை இதை வச்சு நாம ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் அவளுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்.

ஆனா மாமா…

ஆனா ஆவென்னா எல்லாம் இல்ல நீ தான் பேசனும் பாப்பாவை வரச் சொல்லு அவளை வச்சு பேசி இரண்டு நாள்ல நிச்சயம் வைக்கலாம் அப்புறம் பாப்பா எப்ப திரும்பி வரான்னு பார்த்துட்டு அப்படியே விக்னேஷ் சொன்னதையும் சொன்னா அவ ஒரு முடிவு எடுப்பா என்றதும்…


…….


என்ன கார்த்தி அமைதியா இருக்க..

இல்ல மாமா இதைப்பத்தி நீங்க தான் முடிவு பண்ணனும் நான் என்ன இதுல…

டேய் இங்க ஆயிரம் பிரச்சினை இருக்கலாம் ஆனா எனக்கு எதாவதுன்னா நீ தான் வரனும் அதை யாரும் ஏன் எதுக்குன்னு கேட்க முடியாது கேட்கவும் கூடாது உனக்கு தான் எல்லா உரிமையும் அதே தான் என் மகன் மகள் விஷயத்திலும் உனக்கு தான் முதல் உரிமை…அவன் உன்னையே தான் பேசிச் சொல்லுவான் உனக்கு தான் தெரியும் நீ சொன்னா அங்க மறுப்பு இல்லன்னு


இல்ல மாமா அது என்று தடுமாற…

என்ன விஷயம் என்ன பேச சொல்லுவான் என்றா ராணி கேட்க..

சாம்பசிவம் ஒரு பெருமூச்சுடன் விக்னேஷ் ஒரு பொண்ணை விரும்புறான் அந்த பொண்ணை தான் கட்டிக்க போறான் அதைப்பத்தி கார்த்தி தான் பேசனும்..

ஏன் நாம் பேச வேண்டாமா அவங்க குடும்பம் எங்க இருக்கு பொண்ணு என்ன பண்ணுறா என்று ராணி கேட்க..


வீட்டிற்குள் நுழைந்தவாரே பொண்ணு பிஎஸ்சி மேல் படிச்சு இருக்கா நம்ம பனி வேலை செய்யுற ஸ்கூல் தான் வேலை செய்யுறா நம்ம பனி கூட ஸ்கூல் ல படிச்ச பொண்ணு அவளுக்கு அப்பா அம்மா இல்ல ஆசிரமத்தில் வளர்ந்து பொண்ணு பேர் யாழினி என்று உள்ளே வந்தான் விக்னேஷ்..

ராணி, “என்ன ஆசிரமத்தில் வளர்ந்து பொண்ணா…?


ஆமா உங்களுக்கு அதுல என்ன பிரச்சினை..

ஒன்னு இல்லாத பொண்ணை என் பையனுக்கு எடுக்க மாட்டேன்.


உங்களை யாரு எடுக்க சொன்னா அவ ஒன்னு இல்ல்தவன்னு யாரு சொன்னா…

ஆசிரமத்தில் இருக்கிறவளுக்கு பின்ன என்ன இருக்கிறது.


விக்னேஷ், “அவளோட படிப்பு அவ சம்பாத்தியம் நாலு பேரை படிக்க வைக்கிற அளவுக்கு சொத்து இதைவிட வேறு என்ன வேண்டும்”


டேய் என்று ராணி எகிற..

மாமா எனக்காக அவகிட்ட பேசனும் அவ முரண்டு பண்ணிட்டே இருக்கா நீ சொன்னா கேட்பா.. அவங்க அப்பா உன் ஃபிரண்ட் தானே பேசு மாமா அவ உங்களை அவ அப்பா ஸ்தானத்தில் வச்சு இருக்கா நீங்க பேசினா சீக்கிரம் அவளை கட்டிக்கிட்டு கிளம்பிடுவேன் என்று கார்த்திகேயனை கட்டிக்கொள்ள..

அவ்வளவு பிடிச்சு இருக்காடா ..


பின்ன இல்லையா…அவ ஏஞ்சல் மாமா…

கார்த்தி ஃபிரண்ட் பொண்ணா யாரு அது என்று ராணி யோசிக்க..

கார்த்திகேயன், “ எப்ப கல்யாணம் வைக்கலாம் மாப்ள…

மாமா…

ஆமா சொல்லு அவளும் என் பொண்ணு தான் என்ன நான் அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வர முடிவு பண்ணேன் கடைசி வரை வரலைன்னு சொல்லிட்டா அதான் நமக்கு தெரிஞ்ச பேயின் ஆசிரமத்தில் விட்டேன்.

தெரியும் மாமா பாப்பா எல்லாம் சொல்லி இருக்கா…சரி பாப்பாவை எப்ப பார்க்க போகலாம். அவளும் தான் வரனும் நான் அவ கல்யாணம் ஆகி செட் ஆகி வர வரை இந்த கல்யாணம் பத்தி பேசக் கூடாதுன்னு இருந்தேன். ஆனா நம்ம வீட்டில் பிரச்சினை ஓய்வே ஓயாது போல அதான் இந்த முடிவு என்று யாரையும் பேசவிடாமல் விக்னேஷ் தன் முடிவுகளை சொல்லிக் கொண்டே போக..

டேய் நிறுத்துடா என்று சத்தமிட..

என்னமா என்றான் காதை குடைந்து கொண்டு…


என்னடா விட்டா பேசிட்டே போற நான் இந்த விஷயத்துக்கு ஒத்துக்க மாட்டேன்.

உன்னையே யாரு மா ஒத்துக்க சொன்னா.

அப்ப நான் தேவையில்லையா…

நான் அப்படி சொல்லல ஆனா என் வாழ்க்கை இவங்களோட ன்னு நான் தான் முடிவு பண்ணனும் வாழப் போறது நான்.

ஓஓஓ அப்ப நாங்க இல்லாம தான் நீ வந்த அப்படித்தானே…

இந்த மாதிரி கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லம்மா நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா என்னைய விட்டுடுங்க என்னால மாமா மாதிரி உங்க கிட்ட போராட முடியாது..மாமா தான் எங்க அக்கா அக்கான்னு பொறுமையா இருக்கலாம் என்னால் எல்லாம் முடியாது பாப்பா விஷயத்தில் நீங்க பண்ணை நான் தடுக்கல ஏன்னா பாப்பாவை கல்யாணம் பண்ணுற எண்ணமே என்கிட்ட இல்ல அதுவும் இல்லாம நீங்க பேசுற அர்த்தமில்லாத துக்கு எல்லாம் நான் பதில் தந்தா நீங்க பாப்பாவை தான் இன்னும் கார்னர் பண்ணுவீங்க அதான் ஒதுங்கிட்டேன் . இப்ப பேசலாம் ஏன்னா நவி அண்ணா ரொம்ப அன்பு வச்சு இருக்காங்க அவளை எந்த இடத்திலும் விட்டுட மாட்டாங்க அதே நேரம் என் விஷயத்தில் பாப்பா தான் எல்லாமே அவளுக்கு தெரியும் எனக்கு என்ற பிடிக்கும் பிடிக்காதுன்னு வரை அவளை பேசுறதை விட்டுட்டு உங்க வேலையை மட்டும் இனி பாருங்க மாமா உங்களுக்கு வரவேண்டிய சொத்து இல்லாம அவர் சம்பாதிச்சு எங்க மூணு பேருக்கும் வேற சொத்தும் வாங்கி தான் வச்சு இருக்கார் . இதைவிட ஒரு உறவு என்ன செய்ய முடியும் ன்னு தெரியல என்றவன் நாளைக்கு போகலாம் மாமா பாப்பாவை பார்க்க…

ம்ம்ம் என்று கார்த்திகேயன் தலையசைத்தான் அம்சாவை பார்க்க அவர் தான் சிலையாகி இருந்தார். வீட்டிற்குள் என்னென்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாமல்.

இங்கே பரப்பி வைத்து இருந்த போட்டோ சில தகவல்களை பார்க்க பார்க்க ஒருபுறம் மகிழ்வாக இருந்தாலும் மறுபுறம் அவர்களை சார்ந்தவர்கள் எப்படி துடித்து இருப்பார்கள் என்று எண்ணாமல் இல்லை..

எப்படி நவிலா இதெல்லாம் என்று திணறலுடன் கேட்க..

எதுக்கு இந்த திணறல் இப்ப தானே சொன்ன தண்டனை இல்லையான்னு…

ஆனா இது என்று அவள் தயங்க..

அவங்க அவங்க கர்ம பலன் ன்னு ஒன்னு இருக்கு இல்ல…இதுவும் அவங்க தேடிக்கிட்டது தான் . இதோ இவன் செய்த அலட்சியத்தால் இவன் கிட்ட டீரிட்மெண்ட் வந்தேனே இவனை அடிச்சு காலை மொத்தமா முடிச்சு விட்டுட்டான். இவனுக்கு கார் ஆக்ஸிடென்ட் அதோ அவன் நடந்ததை ஏதோ ஒரு விதத்தில் தப்புன்னு நினைச்சு நினைச்சு அவனே மன உளைச்சலுக்கு ஆள் ஆகி எட்டு மாசத்துக்கு முன்னாடி சூசைட் பண்ணிக்கிட்டான்.

அதிர்வாய் பார்த்தவளை பார்த்து இதுல நாம எதுவும் பண்ணுறதுக்கு இல்ல அம்மு நம்ம வாழ்க்கையை நாம் சரியா புரிஞ்சுக்க மட்டும் முயற்சி பண்ணலாம் முடிஞ்சதையே நினைச்சுட்டு இருந்தா வாழ்க்கை நரகமாகிடும்.


எல்லாம் சரி தான் நான் இல்லன்னு சொல்லல ஆனா என்று அவன் முகம் பார்க்க …

அவளையே பார்த்து இருந்தவன் நானும் மனுஷன் தானே எனக்கும் நான் காதலிச்ச பொண்ணு கூட வாழனும் ன்னு ஆசை இருக்கு அம்மு நான் ஒன்னும் சாமியார் இல்லையே என்றவன் அறை விட்டு வெளியேறி இருந்தான்.


அவன் சொல்லி விட்டு சென்ற வார்த்தையில் படபடவென வர மெத்தையின் விரிப்பை இறுக்கமாக பற்றி இருந்தாள் பூம் பனி. மூளைக்கு புரிகிறது ஆனால் பயம் அவளை தடுக்கிறது அந்த நிகழ்வே அறுவெறுப்பாக இருக்கிறது… எங்கிருந்து நவிலனை அனுமதிப்பது அவள் நேரில் கண்டது அத்தனையும் வலியும் வேதனையும் பிடித்தமின்மையும் தானே… தனக்காக காத்து இருக்கிறான் உனக்காகவே வாழ்கிறான் என்று புரியாமல் இல்லை ஆனால் அந்த நிமிட தாக்கம் அதை எங்கே தொலைந்து அப்படி ஒரு நிகழ்வு மூளையில் பதியாமல் போய் இருந்தால் … எத்தனை எத்தனை சந்தோஷமான தருணங்கள் வாழ்வில் காத்து இருக்கிறது என்று உணராமல் இல்லை. அந்த நிமிட வேட்டைக்காக தானே சீனியரை ஒரு வழி செய்தனர் . என்று அங்கேயே மனம் சுற்றி வர அருகில் கட்டிலில் படுத்து இருந்தவனை கவனிக்கவே இல்லை பூம் பனி.


எவ்வளவு நேரம் அம்மு அந்த கழிசடையை நினைச்சுட்டு இருப்ப என்ற குரலில் திடுக்கிட்டாள் திரும்ப…

தூங்கு காத்து இருக்கிறது எனக்கு புதுசு இல்ல என்றவன் திரும்பி படுத்து விட…புதிதாய் அவன் காட்டம் இவளுக்கும் ஒரு ஏமாற்றத்தோடு ஏக்கத்தை உண்டாக்கி அவள் மனதை அசைக்க ஆரம்பித்து இருந்தது..



தொடரும்