28
ராதா மாதவன் அருகில் வரும் வரை கூட பொறுக்க முடியாதவன், அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.
"ராதை வந்துட்டியா, இப்போ தான், எனக்கு போன உயிர் திரும்ப வந்து இருக்கு"
'என்ன இவன் பைத்தியம் போல பேசிட்டு இருக்கான்'
மாதவனை ஒதுங்கி போன ராதா, தாரகை முன்நின்று கையில் ஒரு காகிதத்தை நீட்டினாள்.
"என்ன இது?"
"நீ எனக்கு முதலும் கடைசியுமாக கொடுத்தது" என்று அவளை வரைந்து தந்த பென்சில் ஸ்கெட்சை அவளிடமே கொடுத்தவள்.
"ரொம்ப நன்றி இனி இது என் கிட்ட இருக்கறதில் புரயோஜனம் இல்லை. ஹாப்பி மேரிட் லைப் தாரகை" என அவளை அணைத்துவிட்டு கிளம்பினாள்.
மாதவனின் மனம் பொசுங்கி... கருகியது, அவளது வார்த்தையை கேட்டு.
“தேங்க் யூ தாரகை என்னை யாருன்னு தெரியாமலேயே எனக்கு வரைஞ்சி தந்திருக்காங்க, பிரண்டா வச்சிக்கலாம் என்று நினைத்தேன், ஆனா நான் சாதாரண மனிசியாக கூட உனக்கு தெரியவில்லை என்று புரிந்துகொண்டதன் பிறகு இது எதுக்கு தேங்க் யூ”
"போறேன் மாதவன்" என்று அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்.
"ராதா ஒரு நிமிசம்"
"சொல்லுங்க மாதவன்"
"உனக்காக வாங்கியது" என்று ஒரு சிறு பெட்டியை கொடுத்தான்.
ராதா வாங்காமல் தயங்கி நிற்க.
"பிரண்டா வாங்கிக்கோ ராதா" இந்த வார்த்தை சொன்ன போது கூட தயங்கி நின்றாள்.
"சரி அப்போ நீ கொடுத்ததை நீயே வச்சிக்கோ" கையில் அணிந்திருந்த அந்த பெயர் பொறித்த பிளாட்டினம் ரிங்கை கழட்டி கொடுக்க போனான் மாதவன்.
"இல்லை வாங்கிக்கிறேன்" என ராதா வாங்கிக் கொண்டு.
"மாதவன் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்ன்னு நினைத்தேன், அதுக்கு நேரமே கிடைக்கவே இல்லை இப்போ சொல்லட்டா"
"ம்ம்ம்ம்..." மாதவன் தயக்கத்தோடு அவளது விழிகளை பார்த்தான்.
மாதவனுக்கு குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது, அவளது விழிகளை பார்க்கும் தைரியம் அவனுக்கு இருக்கவே இல்லை.
தலையை கவிழ்ந்து கொண்டு நின்றிருக்க.
"மாதவன் என் கண்ணை பாருங்க" அவனும் தயங்கிக்கொண்டே பார்க்க.
"நான் உன் கிட்ட நிறைய உரிமை எடுத்ததுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?"
இல்லை என்பது போல தலையை ஆட்டினான்.
"உன்னோட பேச்சு, பாசம் எல்லாத்திலும் என் அம்மாவை பார்த்தேன், கண்டிப்பிலும் எனக்கு பிடித்ததை செய்யும்போது என் அப்பாவை பார்த்து இருக்கேன்"
மாதவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்துகொண்டது, 'தன்னை இவ்வளவு உயரத்தில் வைத்து இருக்கும் இவளையா கஷ்டப்பட்டு விளக்கி வைத்தேன்' மனதால் ஏற்கனவே இறந்தவன், மீண்டும் அந்த நொடியில் மறுமுறை இறந்தான்.
"நான் கொஞ்ச நேரம் இல்லாதது போல பதறினாய் நினைவு இருக்கா? அப்போ என் அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து பார்த்தேன்… உன் பதற்றத்தில்" கண்கள் கலங்கி சொன்னாள் ராதா. " என் சந்தோஷத்துக்கு ரகுவரன் மாமாவும் சரி, கிருஷ்ணாவும் சரி தங்கம் போல தான் என்னை பார்த்துக் கொண்டார்கள். இருந்தும் அம்மா ஏக்கம் எனக்குள்ள இருக்கும் தூங்கும் போது அம்மா மடியில் படுக்கனும்னு நினைப்பு இருக்கும். அம்மா மடியில் படுத்து, அவங்க முகத்தை பார்த்துட்டே தூங்கனும்னு அவ்வளவு ஆசை எனக்கு ஆனா அது நடக்கவே இல்லை. தூங்கும் போது உன் முகத்தை பார்த்து படுக்கும் போது ஒரு சுகமா இருக்கும். உன் சரிப்புல என் அம்மா தெரிவாங்க" ராதா திரும்பி நின்று தன் கண்களை துடைத்துக் கொண்டவள்.
மீண்டும் திரும்பி நின்றாள்.
"மாதவன்... எனக்கு தெரியும் நான் உன்னை டார்சர் செஞ்சி இருக்கேன். சத்தியமா நான் வேணும்னு செய்யலை டா, எனக்கு உன் கிட்ட அளவுக்கு அதிகமான ஆசை... சொல்வதைவிட இத்தனை வருடங்கள் கிடைக்காத மொத்தத்தையும் உன்ட இருந்து எடுத்துக்க நினைத்தேன். பேசுவதில் தொடங்கி சண்டை வரை, ஆனா அது உன்னை டாமினென்ட் செய்வது போல் ஆகும்ன்னு கொஞ்சம் கூட நினைத்து பார்க்கலை டா தங்கம்... சாரி தங்கம் இல்லை மாதவன்" அழுகையை புறங்கையால் குழந்தை போல துடைத்துக் கொண்டே.
"எனக்கு முன்னவே தெரியலை... உன் மனசில் என்ன இருக்கும்னு. உன்னை அடிமை போல வைக்கனும்னு நினைக்கலை, முன்னவே தெரிந்து இருந்தா நான் கொஞ்சம் பார்த்து நடந்து இருப்பேன், உன் மேலையும் தப்பு இருக்கு. நீ நீயா இல்லாம எனக்கு ஏத்தது போல எதுக்கு மாறின சொல்லு, உனக்கும் நான் இப்படி இருக்கறதுதான் பிடிச்சி இருக்குன்னு ஒரு பிம்பம் உருவாகிடுச்சி டா" அவனது சட்டையை பிடித்து உழுக்கினாள்.
"எதுக்கு டா ஆசையை மனசு முழுக்க நிறைச்சி விட்டுட்டு பாதியில் போன, எனக்கு முன்னவே தெரியும், இது எல்லாம் நடக்கும்ன்னு, அதான் பிரண்டாவே இருந்துக்கலாம்ன்னு சொன்னேன் நீ கேட்டியா" மாதவ கண்ணனை சரமாரியாக அடித்தாள்.
அவள் ஆக்ரோசமாக அடித்ததில் அவளது நகம் பட்டு அவனது கன்னத்தில் ரத்தம் வடிந்தது.
"அச்சோ ரத்தம்..." தன் சாலால் துடைத்து விட்டவள்.
"கடைசியா ஒன்னே ஒன்னு நீ நிறுபிச்சிட்ட அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது'ன்னு நிறுபிச்சிட்ட உன்னை நம்பினேன்... எனக்கு அம்மாக்கு அம்மாவா அப்பாக்கு அப்பாவா இருப்பன்னு என்னை ஏமாத்திட்ட என் உயிரா நினைத்த என்னை குப்பையில் போட்டுட்ட" இரண்டு அடி நடந்து திரும்பி வந்தவள்.
"தெரிந்தோ தெரியாமலேயோ உன் வாழ்க்கையில் நடந்த அனைத்து கெட்டதுக்கும் நான் காரணமா ஆகிட்டேன், மன்னிச்சிடு குட் பாய், நான் சாகுற வரை உன்னையும் உன்னை சேர்ந்தவங்களையும் பார்க்க கூடாதுன்னு நினைக்கிறேன், குட் பாய்"
"ராதை..." அவளின் இரண்டு அடி பிரிவை கூட தாங்க முடியாமல் மாதவன் துடித்தான்.
"இனி... என்னை அப்படி கூப்பிடாதிங்க மாதவன், இனி நீங்க என்னை அப்படி கூப்பிடும் தகுதியை இழந்து ஒரு வருஷம் மேல ஆச்சி" என்று விறுவிறுவென காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
மாதவன் கண்ணீரோடு அவள் போகும் காரை ஒருவித தவிப்போடும் ஏக்கம் கலந்தும் பார்த்தான்.
அவசரத்தில் புத்தி மழுங்கி தான் எடுத்த ஒரு தவறான முடிவால் என் தேவதை எவள் ஒருவளின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தவிட கூடாது என்று நினைத்தானோ, அவளது கண்ணீருக்கு காரணமாகி போனான். இனி அவள் வாழ்க்கை கிருஷ்ணாவோடு அருமையாக தொடங்கும் என்று தூரம் இருந்து வாழ்த்தியவன், கையோடு தங்கையின் திருமணம் முடித்தே கிளம்பினான். அவன் வாழ்க்கை ராதாவின் நினைவோடு வட இந்தியா நோக்கி போனான்.
மூவரும் காருக்குள் அமைதியாக வரவும்.
கையில் இருந்த பெட்டியை திறந்து பார்க்கலாமா, வேண்டாவா என்று ஆராய்ச்சியில் இருந்தாள் ராதா.
"ராதா என்னாச்சி, ஏதோ யோசனையில் வர”
“எதும் இல்லை மாமா, மனசு ஏதோ பாரம் ஏறியது போல இருக்கு என்னாச்சின்னு தெரியலை" கிருஷ்ணாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் ராதா.
பின் அமர்ந்திருந்த அனு வெளியே வலிக்காதது போல நடித்தாலும் உள்ளே வலித்தது. தன் காதலன் தோளில், மனைவியாக சாய்ந்து வரும் தோழியை ஒருவித ஏக்கத்தோடு பார்த்தாள்.
'முதலில் இங்கிருந்து எங்காவது போயிடனும்' கண்கள் மூடி படுத்தவளின் கடை கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது.
அதனை மறைக்க தனது சாலின் நுனியை எடுத்து தன் மூகத்தில் போர்த்திக் கொண்டவள்... சத்தம் வராமல் கதறினாள்.
இரவு உணவு உண்ண கிருஷ்ணா வண்டியை நிறுத்த.
"அனு சாப்பிட வா" கிருஷ்ணா அழைக்க.
"இல்ல நீங்க போயிட்டு வாங்க எனக்கு பசிக்கலை" என்றவள் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.
"ராதா நீ இங்கவே இரு நான் பார்சல் வாங்கிட்டு வரேன்" என்று அனுக்கு துணையாக விட்டு போனான் ராதாவை.
'என்ன நடக்குது இங்க... இந்த கிருஷ்ணா பண்றது கொஞ்சம் கூட சரி இல்லையே' இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள், பின் சீட்டில் தஞ்சம் புகுந்தாள்.
அனுக்கு எடக்கு முடக்காக படுத்து வந்தது என்னவோ போல இருக்க... வெளி காற்றை வாங்க சிறிது தூரம் தள்ளி நின்றிருந்தாள்.
சாப்பாடு வாங்கி வந்த கிருஷ்ணாவிடம் ராதா ஏதோ ஒன்று கேட்க அதிர்ச்சியில் அவனது கண்கள் விரிந்தது.
அனு அருகில் வரவும் பேச்சு தடை பட்டது.
அனுவையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தார்கள்.
"அனு நீ முன்னாடி உட்கார்ந்துக்கோ, எனக்கு தூக்கம் வருது பின்னாடி படுத்துக்கிறேன்"
"சரி" என்றவள் கிருஷ்ணா அருகில் உட்கார்ந்து தலையை பிடித்துக் கண்டு அமர்ந்திருக்க.
"என்ன அனு மேடம் ரொம்ப அமைதியா வருவது போல தெரியுது"
"தலை வலிக்குது பாஸ்" என்றாள்.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு.
தைலத்தை எடுத்து தன் கையாலையே போட வந்தான்.
"பாஸ் கொடுங்க நானே போட்டுக்கிறேன்"
"உனக்கு தைலத்தை எங்கு போடனும்னு கூட தெரியாது இரு நானே போட்டு விடுறேன். நீ தலையை சாச்சிக்கோ" ராதாவை ஒரு பார்வை பார்த்தாள்.
அதை புரிந்துகொண்ட கிருஷ்ணா, "அந்த லூசு எதும் சொல்லமாட்டா" என்று கிருஷ்ணா பூசிவிட்டு, இதமாக மசாஜ் செய்து விடவும், அனு சிறிது நேரத்தில் வலி மறந்து தூங்கி போனாள்.
இவர்கள் மூவரும் வீட்டிற்கு போக.
கிருஷ்ணா தோளில் சுகமாக படுத்துக் கொண்டு தூங்கி வந்தவள், வண்டி நின்ற அதிர்வில் கண் முழித்து பார்க்க. கிருஷ்ணாவை அணைத்தது போல படுத்து இருப்பதை பார்த்து தூக்கி போட்டது.
"சாரி பாஸ்" என்று அனு வேகமாக எழுந்து கீழே போக.
"ராதா வீடு வந்திடுச்சி எந்திரி" அவளையும் எழுப்பி தானும் இறங்கினான் கிருஷ்ணா.
வீடே கோலாகலமாக இருந்தது, ரகுவரனும் மாமாவும் அனுவின் பெற்றோரும் வீட்டில் இவர்களுக்காக காத்து இருந்தார்கள்.
"அடே பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சி" ரகுவரன் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு உள்ளே போக.
அனு சுற்றி இருந்த அலங்காரத்தை பார்த்து.
"என்ன அலங்காரம் எல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டாள்.
"அதுவா மா என் மகன் கல்யாணத்தை நாங்க பார்க்கலையில்ல அதான் திரும்ப கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சி இருக்கோம்" ரகுவரன் சொன்னதை கேட்ட அனுவின் சிறு இதயம் வெடித்து சிதறியது போல உணர்ந்தாள்.
எதை தன் கண்ணால் பார்க்கக் கூடாது என்று ஓடி ஒழிந்தாளோ, அது இன்னும் சிறிது நேரத்தில் நடக்க இருப்பதன் அதிர்வு அனு முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
ராதா மாதவன் அருகில் வரும் வரை கூட பொறுக்க முடியாதவன், அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.
"ராதை வந்துட்டியா, இப்போ தான், எனக்கு போன உயிர் திரும்ப வந்து இருக்கு"
'என்ன இவன் பைத்தியம் போல பேசிட்டு இருக்கான்'
மாதவனை ஒதுங்கி போன ராதா, தாரகை முன்நின்று கையில் ஒரு காகிதத்தை நீட்டினாள்.
"என்ன இது?"
"நீ எனக்கு முதலும் கடைசியுமாக கொடுத்தது" என்று அவளை வரைந்து தந்த பென்சில் ஸ்கெட்சை அவளிடமே கொடுத்தவள்.
"ரொம்ப நன்றி இனி இது என் கிட்ட இருக்கறதில் புரயோஜனம் இல்லை. ஹாப்பி மேரிட் லைப் தாரகை" என அவளை அணைத்துவிட்டு கிளம்பினாள்.
மாதவனின் மனம் பொசுங்கி... கருகியது, அவளது வார்த்தையை கேட்டு.
“தேங்க் யூ தாரகை என்னை யாருன்னு தெரியாமலேயே எனக்கு வரைஞ்சி தந்திருக்காங்க, பிரண்டா வச்சிக்கலாம் என்று நினைத்தேன், ஆனா நான் சாதாரண மனிசியாக கூட உனக்கு தெரியவில்லை என்று புரிந்துகொண்டதன் பிறகு இது எதுக்கு தேங்க் யூ”
"போறேன் மாதவன்" என்று அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்.
"ராதா ஒரு நிமிசம்"
"சொல்லுங்க மாதவன்"
"உனக்காக வாங்கியது" என்று ஒரு சிறு பெட்டியை கொடுத்தான்.
ராதா வாங்காமல் தயங்கி நிற்க.
"பிரண்டா வாங்கிக்கோ ராதா" இந்த வார்த்தை சொன்ன போது கூட தயங்கி நின்றாள்.
"சரி அப்போ நீ கொடுத்ததை நீயே வச்சிக்கோ" கையில் அணிந்திருந்த அந்த பெயர் பொறித்த பிளாட்டினம் ரிங்கை கழட்டி கொடுக்க போனான் மாதவன்.
"இல்லை வாங்கிக்கிறேன்" என ராதா வாங்கிக் கொண்டு.
"மாதவன் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்ன்னு நினைத்தேன், அதுக்கு நேரமே கிடைக்கவே இல்லை இப்போ சொல்லட்டா"
"ம்ம்ம்ம்..." மாதவன் தயக்கத்தோடு அவளது விழிகளை பார்த்தான்.
மாதவனுக்கு குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது, அவளது விழிகளை பார்க்கும் தைரியம் அவனுக்கு இருக்கவே இல்லை.
தலையை கவிழ்ந்து கொண்டு நின்றிருக்க.
"மாதவன் என் கண்ணை பாருங்க" அவனும் தயங்கிக்கொண்டே பார்க்க.
"நான் உன் கிட்ட நிறைய உரிமை எடுத்ததுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?"
இல்லை என்பது போல தலையை ஆட்டினான்.
"உன்னோட பேச்சு, பாசம் எல்லாத்திலும் என் அம்மாவை பார்த்தேன், கண்டிப்பிலும் எனக்கு பிடித்ததை செய்யும்போது என் அப்பாவை பார்த்து இருக்கேன்"
மாதவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்துகொண்டது, 'தன்னை இவ்வளவு உயரத்தில் வைத்து இருக்கும் இவளையா கஷ்டப்பட்டு விளக்கி வைத்தேன்' மனதால் ஏற்கனவே இறந்தவன், மீண்டும் அந்த நொடியில் மறுமுறை இறந்தான்.
"நான் கொஞ்ச நேரம் இல்லாதது போல பதறினாய் நினைவு இருக்கா? அப்போ என் அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து பார்த்தேன்… உன் பதற்றத்தில்" கண்கள் கலங்கி சொன்னாள் ராதா. " என் சந்தோஷத்துக்கு ரகுவரன் மாமாவும் சரி, கிருஷ்ணாவும் சரி தங்கம் போல தான் என்னை பார்த்துக் கொண்டார்கள். இருந்தும் அம்மா ஏக்கம் எனக்குள்ள இருக்கும் தூங்கும் போது அம்மா மடியில் படுக்கனும்னு நினைப்பு இருக்கும். அம்மா மடியில் படுத்து, அவங்க முகத்தை பார்த்துட்டே தூங்கனும்னு அவ்வளவு ஆசை எனக்கு ஆனா அது நடக்கவே இல்லை. தூங்கும் போது உன் முகத்தை பார்த்து படுக்கும் போது ஒரு சுகமா இருக்கும். உன் சரிப்புல என் அம்மா தெரிவாங்க" ராதா திரும்பி நின்று தன் கண்களை துடைத்துக் கொண்டவள்.
மீண்டும் திரும்பி நின்றாள்.
"மாதவன்... எனக்கு தெரியும் நான் உன்னை டார்சர் செஞ்சி இருக்கேன். சத்தியமா நான் வேணும்னு செய்யலை டா, எனக்கு உன் கிட்ட அளவுக்கு அதிகமான ஆசை... சொல்வதைவிட இத்தனை வருடங்கள் கிடைக்காத மொத்தத்தையும் உன்ட இருந்து எடுத்துக்க நினைத்தேன். பேசுவதில் தொடங்கி சண்டை வரை, ஆனா அது உன்னை டாமினென்ட் செய்வது போல் ஆகும்ன்னு கொஞ்சம் கூட நினைத்து பார்க்கலை டா தங்கம்... சாரி தங்கம் இல்லை மாதவன்" அழுகையை புறங்கையால் குழந்தை போல துடைத்துக் கொண்டே.
"எனக்கு முன்னவே தெரியலை... உன் மனசில் என்ன இருக்கும்னு. உன்னை அடிமை போல வைக்கனும்னு நினைக்கலை, முன்னவே தெரிந்து இருந்தா நான் கொஞ்சம் பார்த்து நடந்து இருப்பேன், உன் மேலையும் தப்பு இருக்கு. நீ நீயா இல்லாம எனக்கு ஏத்தது போல எதுக்கு மாறின சொல்லு, உனக்கும் நான் இப்படி இருக்கறதுதான் பிடிச்சி இருக்குன்னு ஒரு பிம்பம் உருவாகிடுச்சி டா" அவனது சட்டையை பிடித்து உழுக்கினாள்.
"எதுக்கு டா ஆசையை மனசு முழுக்க நிறைச்சி விட்டுட்டு பாதியில் போன, எனக்கு முன்னவே தெரியும், இது எல்லாம் நடக்கும்ன்னு, அதான் பிரண்டாவே இருந்துக்கலாம்ன்னு சொன்னேன் நீ கேட்டியா" மாதவ கண்ணனை சரமாரியாக அடித்தாள்.
அவள் ஆக்ரோசமாக அடித்ததில் அவளது நகம் பட்டு அவனது கன்னத்தில் ரத்தம் வடிந்தது.
"அச்சோ ரத்தம்..." தன் சாலால் துடைத்து விட்டவள்.
"கடைசியா ஒன்னே ஒன்னு நீ நிறுபிச்சிட்ட அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது'ன்னு நிறுபிச்சிட்ட உன்னை நம்பினேன்... எனக்கு அம்மாக்கு அம்மாவா அப்பாக்கு அப்பாவா இருப்பன்னு என்னை ஏமாத்திட்ட என் உயிரா நினைத்த என்னை குப்பையில் போட்டுட்ட" இரண்டு அடி நடந்து திரும்பி வந்தவள்.
"தெரிந்தோ தெரியாமலேயோ உன் வாழ்க்கையில் நடந்த அனைத்து கெட்டதுக்கும் நான் காரணமா ஆகிட்டேன், மன்னிச்சிடு குட் பாய், நான் சாகுற வரை உன்னையும் உன்னை சேர்ந்தவங்களையும் பார்க்க கூடாதுன்னு நினைக்கிறேன், குட் பாய்"
"ராதை..." அவளின் இரண்டு அடி பிரிவை கூட தாங்க முடியாமல் மாதவன் துடித்தான்.
"இனி... என்னை அப்படி கூப்பிடாதிங்க மாதவன், இனி நீங்க என்னை அப்படி கூப்பிடும் தகுதியை இழந்து ஒரு வருஷம் மேல ஆச்சி" என்று விறுவிறுவென காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
மாதவன் கண்ணீரோடு அவள் போகும் காரை ஒருவித தவிப்போடும் ஏக்கம் கலந்தும் பார்த்தான்.
அவசரத்தில் புத்தி மழுங்கி தான் எடுத்த ஒரு தவறான முடிவால் என் தேவதை எவள் ஒருவளின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தவிட கூடாது என்று நினைத்தானோ, அவளது கண்ணீருக்கு காரணமாகி போனான். இனி அவள் வாழ்க்கை கிருஷ்ணாவோடு அருமையாக தொடங்கும் என்று தூரம் இருந்து வாழ்த்தியவன், கையோடு தங்கையின் திருமணம் முடித்தே கிளம்பினான். அவன் வாழ்க்கை ராதாவின் நினைவோடு வட இந்தியா நோக்கி போனான்.
மூவரும் காருக்குள் அமைதியாக வரவும்.
கையில் இருந்த பெட்டியை திறந்து பார்க்கலாமா, வேண்டாவா என்று ஆராய்ச்சியில் இருந்தாள் ராதா.
"ராதா என்னாச்சி, ஏதோ யோசனையில் வர”
“எதும் இல்லை மாமா, மனசு ஏதோ பாரம் ஏறியது போல இருக்கு என்னாச்சின்னு தெரியலை" கிருஷ்ணாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் ராதா.
பின் அமர்ந்திருந்த அனு வெளியே வலிக்காதது போல நடித்தாலும் உள்ளே வலித்தது. தன் காதலன் தோளில், மனைவியாக சாய்ந்து வரும் தோழியை ஒருவித ஏக்கத்தோடு பார்த்தாள்.
'முதலில் இங்கிருந்து எங்காவது போயிடனும்' கண்கள் மூடி படுத்தவளின் கடை கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது.
அதனை மறைக்க தனது சாலின் நுனியை எடுத்து தன் மூகத்தில் போர்த்திக் கொண்டவள்... சத்தம் வராமல் கதறினாள்.
இரவு உணவு உண்ண கிருஷ்ணா வண்டியை நிறுத்த.
"அனு சாப்பிட வா" கிருஷ்ணா அழைக்க.
"இல்ல நீங்க போயிட்டு வாங்க எனக்கு பசிக்கலை" என்றவள் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.
"ராதா நீ இங்கவே இரு நான் பார்சல் வாங்கிட்டு வரேன்" என்று அனுக்கு துணையாக விட்டு போனான் ராதாவை.
'என்ன நடக்குது இங்க... இந்த கிருஷ்ணா பண்றது கொஞ்சம் கூட சரி இல்லையே' இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள், பின் சீட்டில் தஞ்சம் புகுந்தாள்.
அனுக்கு எடக்கு முடக்காக படுத்து வந்தது என்னவோ போல இருக்க... வெளி காற்றை வாங்க சிறிது தூரம் தள்ளி நின்றிருந்தாள்.
சாப்பாடு வாங்கி வந்த கிருஷ்ணாவிடம் ராதா ஏதோ ஒன்று கேட்க அதிர்ச்சியில் அவனது கண்கள் விரிந்தது.
அனு அருகில் வரவும் பேச்சு தடை பட்டது.
அனுவையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தார்கள்.
"அனு நீ முன்னாடி உட்கார்ந்துக்கோ, எனக்கு தூக்கம் வருது பின்னாடி படுத்துக்கிறேன்"
"சரி" என்றவள் கிருஷ்ணா அருகில் உட்கார்ந்து தலையை பிடித்துக் கண்டு அமர்ந்திருக்க.
"என்ன அனு மேடம் ரொம்ப அமைதியா வருவது போல தெரியுது"
"தலை வலிக்குது பாஸ்" என்றாள்.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு.
தைலத்தை எடுத்து தன் கையாலையே போட வந்தான்.
"பாஸ் கொடுங்க நானே போட்டுக்கிறேன்"
"உனக்கு தைலத்தை எங்கு போடனும்னு கூட தெரியாது இரு நானே போட்டு விடுறேன். நீ தலையை சாச்சிக்கோ" ராதாவை ஒரு பார்வை பார்த்தாள்.
அதை புரிந்துகொண்ட கிருஷ்ணா, "அந்த லூசு எதும் சொல்லமாட்டா" என்று கிருஷ்ணா பூசிவிட்டு, இதமாக மசாஜ் செய்து விடவும், அனு சிறிது நேரத்தில் வலி மறந்து தூங்கி போனாள்.
இவர்கள் மூவரும் வீட்டிற்கு போக.
கிருஷ்ணா தோளில் சுகமாக படுத்துக் கொண்டு தூங்கி வந்தவள், வண்டி நின்ற அதிர்வில் கண் முழித்து பார்க்க. கிருஷ்ணாவை அணைத்தது போல படுத்து இருப்பதை பார்த்து தூக்கி போட்டது.
"சாரி பாஸ்" என்று அனு வேகமாக எழுந்து கீழே போக.
"ராதா வீடு வந்திடுச்சி எந்திரி" அவளையும் எழுப்பி தானும் இறங்கினான் கிருஷ்ணா.
வீடே கோலாகலமாக இருந்தது, ரகுவரனும் மாமாவும் அனுவின் பெற்றோரும் வீட்டில் இவர்களுக்காக காத்து இருந்தார்கள்.
"அடே பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சி" ரகுவரன் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு உள்ளே போக.
அனு சுற்றி இருந்த அலங்காரத்தை பார்த்து.
"என்ன அலங்காரம் எல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டாள்.
"அதுவா மா என் மகன் கல்யாணத்தை நாங்க பார்க்கலையில்ல அதான் திரும்ப கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சி இருக்கோம்" ரகுவரன் சொன்னதை கேட்ட அனுவின் சிறு இதயம் வெடித்து சிதறியது போல உணர்ந்தாள்.
எதை தன் கண்ணால் பார்க்கக் கூடாது என்று ஓடி ஒழிந்தாளோ, அது இன்னும் சிறிது நேரத்தில் நடக்க இருப்பதன் அதிர்வு அனு முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.