3.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
ரிஷி பாலா, “ சர்மா நாளைக்கு மினிஸ்ட்ரி ல இருந்து மீட்டிங் அரேஞ்ச்மெண்ட் பண்ண சொல்லி இருக்காங்க லாஸ்ட் மினிட் செடியூல் சேஞ்சஸ், இங்க தான் வராங்க பினான்ஸ் மினிஸ்டர் அதுக்கான மெயில் வந்து இருக்கு இதுவரை ஏன் எனக்கு நீங்க சொல்லல..
மேம் எனக்கு மெயில் ரிசிவ் ஆகல, மேம் எனக்கு சிசி போடல போல, நான் என்னனு விசாரிக்கிறேன் மேம் என்று சர்மா நகர,...
ரிஷி பாலா, “ ரிஷிபாலா ஸ்பீகிங் ..
எஸ் மேம் சொல்லுங்க நாளைக்கு பினான்ஸ் மினிஸ்டர் வராங்கன்னு மெயில் வந்ததா…
ஜஸ்ட் நவ் மேம், ஐம் ஆன் த வே உங்களை பார்க்க தான், வந்து பேசலாம் ன்னு இருந்தேன் என்று அந்த டிஜிபி சொல்ல..
ஓஓஓ வாங்க என்றவள் அடுத்த அடுத்த வேலைகளை துரிதப்படுத்தி அந்த வேலையில் மூழ்கிவிட ரிஷிக்கு தெரியாமல் போனது இது நிமாவை பார்க்க வருகிற விஷயம் என்று..
சர்மா, “ மேம் உங்களுக்கும் டிஜிபி க்கு மட்டும் தான் வந்து இருக்கு அப்புறம் இங்க எந்த அபிசியல் மீட்டிங் இல்ல இது என்ன விஷயம் ன்னு இதுவரை தெரியல என்று சர்மா சொல்லிக்கொண்டு இருக்க,மேம் என்று சல்யூட் வைத்தபடி நின்று இருந்தார் டிஜிபி.
வாங்க சார் என்றவள் போனை எடுத்து மினிஸ்டர் பிஏவுக்கு அழைத்தவள்,என்ன விஷயம் எங்கே தங்க போகிறார் என்று கேட்க மினிஸ்டர் நிமாவாகினி பங்களாவில் என்று சொல்லவும் ..
ஓஓஓ வேற எதுவும் அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணனுமா…?
நோ மேம் நாங்க இப்ப தான் நிமா மேம்க்கு பேசினோம் அவங்க சொல்லுவாங்க என்று முடித்து கொள்ள..
ஓகே என்று போனை வைத்த ரிஷி பற்களை கடித்தவர் எல்லாம் என் நேரம் என்று முணுமுணுத்தாள்…சார் என்று டிஜிபி யை அழைக்க..
எஸ் மேம்… மினிஸ்டர் நிமாவாகினி யை மீட் பண்ணி என்ன ஏதுன்னு கேட்டுக்கோங்க அங்க தான் மினிஸ்டர் தங்க போறார் என்று சொன்னதும் சர்மா ரிஷியை பார்க்க..
நீங்க டிஜிபி கூட போங்க சர்மா..மேம் எங்கன்னு விசாரிச்சுக்கோங்க என்று சொல்லி விட்டு நகர…
அந்த இரவு பொழுதில் அத்தனை உஷ்ணமாக இருந்தது ரிஷி மனது இந்த அரசியல் வாழ்க்கை அதுவும் அதற்குள் இருக்கும் பின்னல்கள் அனைத்தும் சாதாரணமானது அல்லவே எப்போது யாரை கீழே தள்ளும் யாரை புதைக்குழிக்குள் அனுப்பும் என்று அறிய முடியாதே.. இந்த பொண்ணு ஏன் தான் இப்படி இருக்கோ தெரியல என்று தலையை பிடித்து கொண்டு சாய்ந்து அமர்ந்து விட…
அம்மா விதுன் பேசுறேன் என்று குழந்தை ஓசை அவள் பர்சனல் போனில் ஒலிக்க…
சிறு புன்னகையுடன் அதை எடுத்த ரிஷி.
விது…
அம்மா என்றான் விதுன் ..
எங்கடா இருக்க சாப்டியா?
இனி தான் என்ன சமைச்ச அம்மா?
சமைக்கல இன்னைக்கு உங்க அக்கா வீட்டுக்கு இன்னும் வரல வந்தா தானே…
அட அம்மா அக்கா வரலைன்னா என்ன நான் இருக்கேன் இல்ல என்றவன் பேச்சில்..
விது எங்க இருக்க…
இங்க தான் நீ எப்ப வர வீட்டுக்கு…
அடேய் நான் பெத்த இரண்டும் என்னைக்கு தான் எனக்கு நிம்மதி தரதா இருக்கீங்க , ஒவ்வொரு நிமிடமும் வெடி வச்சுட்டே இருக்கீங்க என்றவர் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் என்றவர் வீடு வந்து சேர்ந்தது என்னவோ முக்கால் மணிநேரம் தாண்டி தான்.அதற்குள் விதுன் சமையலை, வீட்டிற்கு வேலைக்கு என்று வரும் ஆட்களை வைத்து அவனுக்கு அவன் அக்காவிற்கு அம்மாவிற்கு என பிடித்த உணவை சமைக்க வைத்து இருந்தான்.
வாங்க ரிஷி என்ன இது தான் பத்து நிமிஷமா?
டேய் வர வழியில் கொஞ்சம் வேலை டா அதான் அதை முடிச்சு குடுத்துட்டு வர லேட் ஆகிட்டு…
அதுசரி, எல்லா வீட்டுலையும் ஊர்ல இருந்து வர பிள்ளைங்களுக்கு அம்மா சமைச்சு காத்து இருப்பா இங்க பிள்ளைங்க சமைச்சு காத்துட்டு இருக்கனும் என்று விதுன் கேலி பேச..
அமைதியாக உள்ளே நுழைந்து கொண்டாள் ரிஷி…
ரிஷி ரிஷி சாரி ம்மா நான் சும்மா என்று குரல் கமற விதுன் கதவில் சாய்ந்து நிற்க..
அடேய் விதுனா அம்மா எதுவும் நினைக்க மாட்டா எப்ப டா வந்த என்றாள் நிமா..
இப்ப தான் வாகி…
என்ன வந்ததும் சண்டையா?
நான் ஏன் வாகி சண்ட போட போறேன் சும்மா விளையாட்டுக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வெளியே வந்த ரிஷி சாப்பிடலாம் உங்களுக்கு பசிக்கலையா ஏற்கனவே தலைவலி எனக்கு என்று டேபிளில் அமர..
நிமா, “ என்னாச்சு மா எதுக்கு தலைவலி…
நான் தான் இடுப்புலையே வச்சு இருக்கேனே இரண்டு பிசாசை அதுங்களால ல தலைவலி என்று ரிஷி முறைக்க..
அம்மா என்றாள் நிமா…
இப்ப எதுக்கு அந்த பினான்ஸ் மினிஸ்டர் இங்க வரார் என்று ரிஷி கத்த…
இது கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் ம்மா…
நிஜமா எதுவும் சரியா படல இரண்டு நாளா நான் கேள்விபடுற விஷயம் எல்லாம் உறுத்தலாவே இருக்கு…
என்ன கேள்விபட்டீங்க?
விதுன், “ கட்சியில் நடக்கும் பூசலை தவிர்க்க சில பல ஆதயங்களுக்காக நீ விரட்டப்படனும், இல்லயென்றால் அவர்கள் சொல்வதற்கு பணிஞ்சு போகனும்..
ஓஓஓ இரண்டு ஸ்பையும் என்னைய வாட்ச் பண்ண வேற ஆள் போட்டு இருக்கீங்க போல என்றாள் நிமா.
வாகி உன்னையே வாட்ச் பண்ண இல்ல உன்னைய பாதுகாக்க எனக்கு இருக்க ஒரே உறவு நீங்க இரண்டு பேர் தான் அப்ப எனக்கு பயம் இருக்கும் தானே என்று ரிஷி சொல்ல, அப்ப எனக்கு ஆயிரம் உறவு இருக்கோ என்று கேட்டவள் விதுனின் தோளில் கைபோட்டு ,விதுனா அந்த லேண்ட் மேட்டர் என்னாச்சு.?
மோட்ஸ் ப்ராபபலி பினிஸ்டு வாகி…
ம்ம் அப்ப அதை அம்மா பேருக்கு ரிஷிஸ்டர் பண்ணிடு ஒரு நாள் அழைச்சிட்டு போ..
என்ன ப்ராபர்டி எங்க எதுக்கு என் பேர்ல என்று ரிஷி அடுக்க..
இல்லம்மா இன்னும் ஆறு மாசத்துல உன் சர்வீஸ் முடியுது அதான் விது கூட போய் இருக்க சொல்லுறேன்.
ஓஓஓ அதுக்கு..
அதான் அவன் இருக்க பக்கமா இடம் வந்தது அதை வாங்க சொல்லி…
வாட் தமிழ்நாட்டுலையா…
ஆமா
நோ திரும்ப அங்க போக வேண்டாம் விது நீ வாங்கறதா இருந்தா இந்தப்பக்கம் வாங்கு நானே அவனுக்கு இந்த பக்கம்தான் டிரான்ஸ்பர் க்கு பேசி வச்சு இருக்கேன் நீ என்ன..
ம்மா தாய் வீட்டில் ஒரு வீடு வேண்டாமா நமக்கு என்று வாகி சிரிப்புடன் சொல்ல
ஸ்டாபிட் வாகி போதும் என்றவர் எழுந்து சென்றுவிட..
அக்கா என்றான் விதுன்..
இதுக்கெல்லாம் கலங்கலாமா டா விடு பார்த்துக்கலாம் எதையும் பேஸ் பண்ணனும் விது அம்மா ஒதுங்கி போகனும் ன்னு நினைக்கிறாங்க அது அவங்களோட நடந்த விஷயங்கள் அதனால இப்படி ரியாக்ட் பண்ணுறாங்க..
இருந்தாலும்…
பார்த்துக்கலாம் அந்த இடம் அம்மா பேருக்கு வந்தே ஆகனும் அவ்வளவு தான் என்றவள் எழுந்து விட..
நீயாச்சும் கூடவே இரு நான் சாப்பிடவே இல்ல கிடைச்சதை சாப்பிட்டு செத்து போய் இருக்கேன் ..
என்னடா கிடைச்சதை சாப்பிட்டு எப்படி செத்து போவ?
ஹேய் என்ன கிண்டலா..
அட நீ வேற ஏன்டா அப்புறம் அங்க கோயமுத்தூர் எப்படி இருக்கு?
அதுக்கென்ன நல்லா தான் இருக்கு..
ம்ம்ம் எப்ப சென்னை வரப்போற விதுன் என்று நிமா கேட்க… ஏன் என் வாயைபிடுங்கற எப்ப வரனும் என்ன பண்ணனும் ன்னு நீ தான் முடிவு பண்ண போற அப்புறம் என்னைய என்ன கேள்வி…
ஓஓஓ அப்ப உனக்கு எந்த ஐடியாவும் இல்ல..
…..
உன்னையே தான் கேட்கிறேன்.
இருக்கு ஆனா நீ ஏத்துக்க போறது இல்ல..
என்ன விஷயம் சார் மூளையில் வச்சு இருக்கிறது…
ப்ராக்டிகலா மூளையில் இருக்கிற விஷயம் அப்படின்னாலும் என் மனசுல தான் நிறைய தேங்கி இருக்கு வாகி, நான் அம்மாவை அங்க அழைச்சுட்டு போக விரும்பல எனக்கே அங்க மூச்சு முட்டுது அப்படி இருக்கும் போது…
ஓஓஓ தாய் பாசமா…
வாகி…
சொல்லுடா…
ப்ளீஸ் நாம ஏன் இங்கேயே செட்டில் ஆகக் கூடாது என்று விதுன் கேட்க..
சிரித்தவள் செட்டில் ஆகலாமே என்றவள் தாயின் அறையை ஒரு எட்டு பார்த்துவிட்டு விதுனை அழைத்து கொண்டு பின்வாசல் வழியாக வெளியேறியவள் காரில் அவனை அமர்த்தி கொண்டு கிளம்ப
எங்க போறோம் வாகி என்ன விஷயம்..
வாடா அக்காவோட வர தான் உனக்கு கசக்கும் என்றவள் ஒரு வீட்டின் வாசலில் வண்டி வந்து நிற்க..
இது யார் வீடு..
நம்ம வீடு தான் வாடா என்றவள் அழைத்து கொண்டு சென்றது என்னவோ ஒரு அண்டர் கிரவுண்ட்… உள்ளே செல்ல செல்ல பகலில் இருப்பது போல் இருக்க என்ன விஷயம் வாகி என்று சற்றே குரலை உயர்த்தி அவன் குரலில் திரும்பி பார்த்தவள் சிரிப்புடன் ஒரு அறையில் அவனை விட.. அங்கே ரிஷி அறைக்குள் நுழைந்து சிறிய ஜன்னலை திறந்து கொண்டு செல்வது போல் இருந்தது அதை தொடர்ந்து அந்த வழியில் சிறிய வெளிச்சத்தோடே செல்ல செல்ல அவர் சென்று அமர்ந்த இடம் ஒரு சிறிய மலை முகட்டில்…
வாகி என்று விதுன் பதற…
எதுக்கு பதட்டம் அம்மா இன்னைக்கு நேத்து இல்ல கிட்ட தட்ட பத்து வருஷமா இப்படி போய்ட்டு வந்துட்டு இருக்காங்க அம்மா வேணும் டா, அவங்களே அவங்களுக்கு தண்டனை தர மாதிரி தான் இருக்கு இந்த நடவடிக்கை. வேணாம் விது அம்மாவை அழைச்சுட்டு போ நான் சொன்னா அம்மா கேட்க மாட்டா ப்ளீஸ் என்று உள் இறங்கிய குரலில் சொல்ல வாகியை அணைத்து கொண்டவன் நான் இரண்டு நாள்ல கிளம்புலாம் ன்னு..
இப்ப வரமாட்டாங்க விது ஆறு மாசம் தானே நானே இதுக்கு வழி பண்ணுறேன் என்றவள்
, போலாம் டா என்று கிளம்பிய படி ரிஷிக்கு அடுத்த அடுத்த வேலையை அடுக்கி வைத்தாள் நிமா…அவள் அடுக்கிய வேலையில் வீட்டிற்கு வரமுடியா அளவிற்கு மாறி அடுத்த கட்ட காயத்தை நேரில் பார்க்க இருந்தார் ரிஷிபாலா…
காலமும் நேரமும் மாறலாம்
ஆனால் காட்சிகளை நாம்
அமைக்க முடியாதே
நமக்கு மாறும் காலம்
போலவே அனைவருக்கும் உண்டு தானே…
அதைத்தான்
காலம் உணர்த்தியது ரிஷிக்கு…
தொடரும்