30.நவிலனின் கோதையானவள்
சாம்பசிவம் பின்னே ஓடியவர் மாமா என்று அழைக்க, கார்த்தி இனி பேசிட்டு இருக்க நேரமில்லை அடுத்த வேலையை பார்க்கலாம் இவ யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டா இவளுக்கு பணம், கௌரவம், அதுவும் அந்த கௌரவம் பணத்தையும் பட்டையும் வச்சு , அதோட நின்னுச்சா யாரையும் எந்த எல்லைக்கும் போய் தாக்கும் குணம் அடிமையா நடத்துற பாங்கு அதுக்கு ஏத்த மருமகளையும் மருமகனையும் தான் தேடுறா கன்னையா தாண்டி எதுவும் இருக்க கூடாதுன்னு அகம்பாவம் என்று கடித்து துப்ப..
மாமா…
ஆமா கார்த்தி அதானே உண்மை நீ அவளுக்கே இளையவன் அதனால் இங்க அவளுக்கு பிரச்சினை இல்லை அதேநேரம் அம்சா வாய் பேசாது வசதியா போச்சு நானும் விட்டு கொடுத்து போறேன் இல்ல அதான் கொட்டம் அதிகமாகிடுச்சு …அவளுக்கு ஏத்த மாதிரி சில விஷயங்கள் நடக்கவும் தலைகால் புரியாம ஆட ஆரம்பிச்சுட்டா …இது முடிவு வேண்டாம் நான் முடிவு பண்ணிட்டேன் அவனுக்கு கல்யாணத்தை பண்ணிட்டு கிளம்பிடுறேன் இனி என் வாழ்க்கையில் இவ இல்ல.. இல்ல இல்ல இவ வாழ்க்கையில் நான் இல்ல அது தான் பொறுத்தமா இருக்கும்.
ராணி, “என்னங்க அதிர்ந்து விட…
கார்த்தி தப்பா எடுத்துக்காத என்னால் முடியல டா சரி நீ போய் பாரு என்றவர் கிளம்பிவிட..
கார்த்திகேயன் அம்சா கூட பனி நவிலன் மங்கை என்று பேசிவிட்டு இரண்டு மணிநேரத்தில் கிளம்பிவிட்டனர்.
பனி, “ என்ன அத்தான் யாழினி கிட்ட பேசுனீங்களா…
விக்னேஷ், “ இங்க தான் இருக்கேன் அவளை என்ன பண்ணுறது ன்னு தெரியல பாப்பா அட்மா நிக்குறா..எனக்கு மண்டை காயுது.. போனை குடுங்க அத்தான் என்றவள் யாழினிடம் பேச…
இல்ல பூவு எனக்கு குடும்பம் வேணும் ன்னு நினைக்கிறேன் ஆனா இங்க அது நடக்காது ன்னு தெரிஞ்சு எப்படி என்று யாழினி தயங்க…
உனக்கு அத்தானை பிடிச்சு இருக்கா இல்லையா அதுக்கு மட்டும் பதில் தா…
பூவு…
யாரு உனக்கு அப்ப அந்த மாமா வினி மட்டும் தான் குடும்பம் ன்னு நினைச்சு இருக்க அதான் நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரியல நாங்களும் அந்த குடும்பத்தில் இருந்தவங்க தான் அத்த மட்டும் தான் வேணாம் ன்னு சொல்லுறாங்க உனக்கே தெரியும் அத்தையை பத்தி நான் சொல்ல எதுவும் இல்ல நாங்க எல்லாம் உறவாட இருக்கோம் ஆனா நீ எங்களையும் ஒதுக்கி தான் இருக்கன்னு இப்ப தான் புரியுது என்றதும்…
பூவு என்ன பேசுற…
உண்மையை தானே சொல்லுறேன் உனக்காக அவன் ஆறு வருஷமா காத்துட்டு இருக்கான் ஆனா நீ உன்னையே மட்டுமே யோசிச்சிட்டு இருக்க என்று பேச எதிரே நவிலன் கைகட்டி பூம்பனியை பார்க்க அவள் சைகையில் என்னவென்று கேட்க தலையை சரித்து அவளையே பார்த்து கொண்டு இருந்தான் நவிலன்..
சரி பூவு கண்டிக்கிறேன் என்று யாழினி சொல்ல…
நிஜமாவா..
உண்மை தான் இல்லன்னு சொல்லல..
சரி நான் அப்பா கிட்ட பேசுறேன் என்றவள் போனை வைக்க..
பனி, “என்ன என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?
இல்ல இந்த வீரமங்கை வெளி உலகத்திற்கு மட்டுமே அப்படின்னு ஃபோர்டு போடலாம் ன்னு இருக்கேன்.
என்ன
ஒன்னு இல்ல ஒன்னுமே இல்ல என்றவன் சரி நான் ஹாஸ்பிடல் போறேன் இன்னைக்கு ராஜேஷ் வரான் ஜாயின் பண்ண சொல்லி இருக்கேன்.
வாவ் என்ன ஸ்பீட்…
ஆமா ஒவ்வொரு விஷயத்தையும் அந்தந்த காலத்தில் செஞ்சுடனும் இல்லன்னா அந்த தேங்கி போன விஷயம் நமக்கு ஒவ்வாததா போய்டும் இல்லையா…
ஆமா இல்லன்னு சொல்லல என்றவள் நவிலனை பார்த்து கொண்டே இருக்க…
என்ன அம்மு…
எந்த விஷயம் சொன்னாலும் அதுல எனக்கான மெஸேஜ் இருக்குன்னு எனக்கு புரியாம இல்ல மாத்திக்கிறேன் நவி சாரி என்றவள் வெளியேறி விட…
ப்ச் என்ன நவி அவளை எல்லா இடத்திலும் லாக் பண்ணிட்டு இருக்க அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் குடு என்று தன் மனதோடு பேசிக் கொண்டவன் …வீட்டிலிருந்து ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டான்..
மங்கை, “ என்ன பூவு..
ஒன்னு இல்ல அத்த அண்ணி ஸ்கூல் ல பிஸி ஆகிட்டாங்க நான் பக்கத்தில் எதாவது ஸ்கூல் போகலாம் ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் ..
மங்கை, “ போகலாம் டா ஆனா ஒரு நாலு மாசம் போகட்டும் அப்புறம் போ என்றவர் பூம்பனிக்கு சூப் எடுத்து வர..
எதுக்கு அத்த இது?
முதல்ல நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி எழு அப்புறம் வேலைக்கு போகலாம்.
ஏன் அந்த நல்லா தானே இருக்கேன்
இருக்க இருக்க நாளைக்கு என் பேரபிள்ளைகளை தாங்க உடம்பு மனசு இரண்டும் நல்லா இருக்கனும் இல்ல என் பூவு தைரியமான ஆள் தான் வெளியே எல்லாத்தையும் சரி பண்ண தெரிஞ்சவளுக்கு அவளையும் சரி செஞ்சுப்பான்னு எனக்கு தெரியும் அதான் வேலைக்கு அப்புறம் போகலாம் ன்னு என்றவர் ஒரு கவரை நீட்ட..
என்ன அத்தை
எடுத்து பாரு…
பிரிக்க அது பக்கத்தில் இருக்கும் பள்ளியின் விவரங்கள்..
அத்தை என்று விழிவிரிக்க…
ஆமா ஆமா நாலு மாசம் கழிச்சு தான் எடுக்க போறாங்க அதான் நாலு மாசம் கழிச்சு போகச் சொன்னேன் என்றவர் புன்னகைக்க..
நீங்க ஜெட் ஸ்பீட் அத்த
பின்ன என்ன மருமக கூட ஓட வேண்டாமா…
பக்கென சிரித்தவள் என்னோட ஓடப் போறீங்க..
ஆமா ஆமா. ஓட வைக்கிற வேலையை தான் பண்ணனும் நீங்க என்றவர் சரி நான் கொஞ்சம் சாயுறேன் ..
சரிங்க அத்த என்றவள் நவிலனுக்கு அழைக்க சொல்லுங்க வீர மங்கை…
அத்த என்று ஆரம்பித்தாள் பேசியதை சொல்ல..
நல்ல விஷயம் தான் என்றான் எதையும் தெரியாதது போல்..
இங்கே யாழினி விக்னேஷ் சொல்லியதை கேட்டு முடியவே முடியாது என்று நிற்க…கார்த்திகேயனை வரவைத்து இருந்தான் விக்னேஷ். கார்த்திகேயன் வர,என்னாச்சு என்று பதட்டமாக கேட்டவை பார்த்து அப்பா என்று யாழினி வர அவளை தோளோடு அணைத்து கொண்டவர்,என்னடா ம்மா…
பாருங்க அப்பா இந்த பூவு ஒரு பக்கம் என்னைய திட்டுறா இவரு ஒரு பக்கம் குண்டை தூக்கி போடுறார்..
என்ன விஷயம் என்று விக்னேஷை பார்க்க…
விக்னேஷ் தான் சொன்னதை சொல்ல…
எதுக்கு இவ்வளவு அவசரம் விக்கி…
மாமா புரியாம பேசாத என்ன வேணும்ன்னாலும் உங்க அக்கா பண்ணும் ந் ரிஸ்க் எடுக்க விரும்பல ..
அதுக்கு இப்படி பண்ணனுமா…
பின்ன வேற எதுவும் நல்லா ஐடியா இருக்கா என்று கேட்க..
என்னடா இப்படி சொல்லுற…
ஆமா என்னைய என்ன பண்ண சொல்லுற என்றவன் பனிக்குட அழைக்க…
சொல்லு அத்தான் ..
அடியேய் நீ சொல்லு உங்க அத்த என்ன பண்ணும் ன்னு தெரிஞ்சு நான் ஒன்னு சொன்னா இவ குதிக்கிறா என்று அவன் சொல்ல சொல்ல…
நான் வரேன் இரு …
வீட்டில் வேலை செய்பவர்களிடம் சொல்லிவிட்டு நவிலனுக்கு தகவலை தந்துவிட்டு கிளம்பி விட்டாள்.
பல மணிநேர பேச்சுக்கு பிறகு விக்னேஷ் முடிவு பண்ணியதை போல் வேலையை ஆரம்பித்து இருந்தனர்..
அடுத்த இரண்டு நாள் பனி பிஸியோ பிஸி நீங்க என்னைய எதிர்பார்க்காதீங்க…
என்ன பண்ண போறீங்க என்று கேட்க…
பின்ன என்ன பெஸ்டிஸ் இரண்டு பேருக்கும் கல்யாணம் என்றதும்…
என்னடி சொல்லுற இன்னைக்கு தான் அதைப்பத்தி பேசப்போறேன்னு சொன்ன..
ஆமா ஆமா என்றவள் நடந்து பேச்சு வார்த்தையை சொல்ல…
ஆச்சரியமாக பார்த்தவன் அப்ப சரி எப்படி அதுக்குள்ள எல்லாம் தயார் நான் ஆள் செட் பண்ணிட்டேன் என்றவள் கடகடவென அனைத்தையும் காட்ட…
மெல்ல சிரித்து கொண்டவன்..
இதுல இது அழகா இருக்கு அம்மு இதை நீ பிக் பண்ணேன்..
ஓகே பாஸ் அப்புறம் அம்மு இந்த இது பாரேன் என்று அவர்களின் கட்டிலுக்கு அருகில் இருந்த டிராவிலிருந்து ஒரு நகையை எடுத்து தர ஆடித்தான் போய் இருந்தாள் பனி. பின்னே இருக்காதா அவளையே அதில் கொண்டு வந்து இருந்தானே அதில் அவளோடு அவனும் என்று இருக்க அவ்வளவு நுணுக்கமான ஆனால் அவ்வளவு அகலமான நகையை பார்த்து வியந்தாள் இது ஷோகேஸ் ல வைக்கவா நவி
இல்ல என்னோட பொம்மை கழுத்துல வைக்க…
அம்மாடியோவ் இம்புட்டுமா…
இது மட்டும் தான் என்றவனை பார்க்க பார்க்க ஆசையா தான் இருந்தது.ஆனால் அவனுக்கு ஏத்தவளாக மாற்றி கொள்ள தான் நேரம் எடுக்கிறது என்ன செய்ய என்று நினைத்து கொண்டு இருந்தவளை இதை அன்னைக்கு அந்த புடவையோட போட்டுக்க அம்மு என்றவன் நான் தூங்க போறேன் இன்னைக்கு இந்த ராஜேஷ் பையனை ரெடி பண்ணுறதுக்குள்ள டயர்டு ஆகிட்டேன் என்றவன் படுத்ததும் உறங்கி போய் இருந்தான் நவிலன்.
அடுத்த இரண்டு நாட்கள் வேகமாக செல்ல வெள்ளி கிழமையும் வர இருந்தது…
அந்த இரண்டு நாட்களும் ராணி செய்வது அறியாமல் தவிக்க சாம்பசிவமோ மொத்தமாக ராணி வினி விக்னேஷ் என்று மூவருக்குமான விஷயங்களை செய்து முடித்து இருந்தார்.
பனி, “ அண்ணி பனி பேசுறேன்.
சொல்லு பனி என்றாள் கவிதா …
நாளைக்கு அண்ணாவை அழைச்சிட்டு வர்றீங்களா இங்க இந்த இடத்துக்கு என்று குறிப்பிட்ட கோவிலை சொல்ல
ஏன் என்ன விஷயம் ?
ஒரு சர்ப்ரைஸ் வாங்களேன் ப்ளீஸ் என்றவளை சரி வரேன் ஆனா சீக்கிரம் கிளம்பிடுவேன் ஸ்கூல் வேலை இருக்கு
கண்டிப்பா அண்ணி என்றவள் வசந்திடம் மட்டும் விஷயத்தை சொல்லி இருந்தாள்.
விடிந்தது வெள்ளி… காலையில் கிளம்பி கொண்டு இருந்த சாம்பசிவத்தை பார்த்து என்ன காலைல கிளம்பி இருக்கீங்க என்று ராணி கேட்க…
…..
பதில் சொல்லுங்க என்று ராணி மீண்டும் கேட்க…
பெரிசா விஷயம் எதுவும் இல்ல வந்தா சந்தோஷம் இல்லையா வேண்டாம் இதோ இதை இன்னைக்கு பதிவு பண்ண போறோம் வந்து கையெழுத்து போட்டன்னா நான் விடுதலை ஆகிடுவேன் உங்களுக்கு செய்ய வேண்டியதை செஞ்சுடுறேன் என்றதும், நான் தான் ஒன்னும் சொல்லலையே அப்புறம் ஏன் இப்படி என்று பேச…
அப்படியா அப்ப கிளம்பி வா..
எங்க..
சொன்னாதான் வருவியா..
இல்ல இல்ல வரேன் வினி கிளம்பு என்றவர் நேராக வந்து இறங்கினர் கோவிலில்…
கோலாகலமாக நல்ல ஜோடிப்புடன் ஆரம்பித்து இருந்தது விக்னேஷ் -யாழினி திருமணம்…
தொடரும்