32.நவிலனின் கோதையானவள்
அவன் தோளில் அத்தனை இலகுவாய் சாய்ந்து கண் மூடி இருந்தவளை பார்த்தவன்…என்ன அம்மு இறங்கு வீடு வந்துடுச்சு…
போகனுமா நவி..
என்னாச்சு டா..
இல்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம இருந்து இருந்தா நமக்கு கூட வாழ்க்கை சந்தோஷமா நகர்ந்து இருக்கும் இல்ல..
இப்ப சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்..
இருக்கே…
நவிலன், “அப்படியா?
ஆமா
என்ன குறைன்னு சொல்லு சரி கட்டிடுறேன்.
…..
என்னம்மா இவ்வளவு அமைதி…
நாம உங்க ஃபார்ம் ஹவுஸ் போகலாமா…?
அப்ப நம்ம பாரின் டிரிப்..
அது வேண்டாமே அப்புறம் எப்பவாவது ப்ளான் பண்ணலாமே என்று சொல்ல..
அம்மு…
ம்ம்ம்
நாம ஏன் டிரிப் போறோம் ன்னு தெரியும் தானே..?
தெரியும் நவி…அந்த என்வினார்மெண்ட் தான் என்னைய மாத்துமா நவி, என்னைய மாத்தி இந்த அளவுக்கு நடமாட வச்சதே நீங்க தானே, அதுக்கு அங்க போகனும் ன்னு இல்லையே நீங்க கூட இருந்தா போதும் என்று மெல்ல திக்கி திணறி சொல்லி விட…
அந்த வார்த்தையில் அவள் தலையின் மீது அழுத்தமாக தன் தாடையை பதித்தவன்..,அப்ப நாம ஃபார்ம் ஹவுஸ் போகலாம் அம்மு எத்தனை நாள்ன்னு சொல்லு..
இப்ப பாரின் டிரிப் எப்படியோ அந்த அளவுக்கு என்றாள் பூம் பனி…
நிஜமா…
ம்ம்ம்
அப்படியா…
எத்தனை தரவ கேட்பீங்க…
பூம் பனியை கிள்ளிவிட அவள் ஸ்ஸ் என்றதும் உண்மை தான் அம்மு நாம் போறது டிரீட்மெண்ட் மட்டும் இல்ல என்று அவள் காதோரோம் சொல்ல ..
தெரியும் தெரியும்..
ஹேய் நிஜமாவா டி
நவி என்று அவள் சிணுங்க..
அடியேய் கொஞ்சம் கொஞ்சமா ஷாக்கை தா இப்படி ஒரேயடியா தந்தா நான் பாவம் இல்லையா…
இல்ல
அம்மு
ம்ம்ம்
என்னாச்சு உனக்கு?
ஒன்னு ஆகல என்றவள் இன்னுமே அவனை தழுவி சாய..
மொத்தமாய் உடைந்து கொண்டது அவனது பூட்டப்பட்ட ஆசைகள் அனைத்தும் … புதியதாய் பறக்க ஆரம்பிக்கும் பறவை குஞ்சுகளை போன்று சிறகு முளைக்க ஆரம்பித்து இருந்தது நவிலனுக்கு, முதல் நெருக்கம் ஆசையோடு… இதுவரை இருந்த அன்பு கடமை என்று எல்லையை தாண்டி புதிதாய் மலர்ந்து இருந்தது அளவு கடந்த ஆசைகள். அதை வெளிப்படுத்த அவ்வளவு உற்சாகம் ஆனால் படபடப்பாய் இருந்தது .
அவள் நெருங்கி விட்டாள்
தன்னில் சேர்த்து கொள்ள..
யுகங்களாய்
காத்திருந்தவனுக்கு
பேராழிலாய்
இருந்தவனுக்கு
நெருங்கத்தான் அச்சம்
எங்கே தன் அளவில்லா
காதலும்
ஆசையும்
அவள் உணர்வுகளை
கையாளக் தெரியாமல்
சுழல் போல் புரட்டி விட்டாள்…
படபடப்பாய் அவளை அணைத்து கொண்டு கண் மூடி நிதானத்தை தேடி கொண்டு இருந்தான்.அவனும் சராசரி ஆண் மகன் தானே… எவ்வளவு அன்பு கொண்ட நெஞ்சமாய் இருந்தாலும் அவர்களின் அன்பை அளவுகடந்து பொழிவது அவர்களின் கூடலில் தானே… யாரிடமும் காட்ட முடியாத உணர்வு தனக்கே உரியவளிடம் மட்டுமே காட்டவும் பெறவுமாக இருக்கும் உணர்வுகளும் ஆசைகளும் அவனை பித்தம் கொள்ள செய்து கொண்டு இருந்தது…
சற்று நேரத்தில் தெளிந்தது என்னவோ பனி தான். ரொம்ப நேரமா வண்டியிலேயே உட்கார்ந்து இருக்கோம் நவி..
ம்ம்ம்
என்னாச்சுங்க..
…..
என்னங்க..
…..
நவி என்றவள் அவனை விட்டு விலக..
மீண்டும் அவளை இறுக்கி பிடித்தவனை என்னாச்சு நவி
தேடி பரிதவித்து தக்க வச்ச பொக்கிஷம் டி நீ பக்கத்திலேயே இரு..
ம்ம்ம் உள்ள போய்டலாம் உங்களோட தானே இருக்கேன்.
இருந்த தான் இல்லன்னு சொல்லல இந்த நிமிஷம் இந்த நொடி தானே நீ எனக்கானவளா வந்து இருக்க அதை நான் உணர்ந்துட்டு இருக்கேன் ப்ளீஸ் கொஞ்சம் பொறு ..
அட நவிலா இதுக்கு அப்புறம் எப்பவும் உன்னோட தானே நிதம் நிதம் உணரலாம் வாங்க நீங்க மட்டும் இல்ல நானும் என்று உதட்டை கடிக்க..
சொல்லுடி சொல்லாம நிறுத்திட்ட
ஒன்னு இல்ல..
அம்மு பல வருஷ காதல் தள்ளி நின்று ரசிச்சு நிறைச்ச காதல் இனி உன்னோட மௌனம் எனக்கு வேணாம் படபட பட்டாச பொறிஞ்சு தள்ளுவியே அதுல விழுந்தேன் இப்ப அதை உணரனும் அம்மு…
நிஜமா
ஆமா..
அப்புறம் பேச்சு மாறக் கூடாது..
கண்டிப்பா..
சரி நவிலா என்றவள் காரின் சீட்டை பின்னே நகர்த்த, என்ன என்ன சொல்லு நான் செய்யுறேன் என்று நவிலன் கேட்க., இரண்டு சீட்டையும் நகர்த்தியவள் அவன் மீதே சரிந்து விட மூர்ச்சையாகி தான் போனான் நவிலன்.
அடியேய் மனுஷனை இம்சை பண்ணுற
நீங்க தானே அந்த பனி வேணும் ன்னு கேட்டீங்க என்றவள் ,இந்த நார்மல் ஷேர்ட் எல்லாம் ஹாஸ்பிடல் போகும் போது மட்டும் போட்டா போதாதா… என்றதும் படக்கென திரும்பியவன்… அம்மு என்று தடுமாற..
என்னம்மா…
இது …
எது…என்றாள் குறும்போடு..
அப்ப நீ தான் என்கிட்ட பேசுன ஆமா தானே…
…..
ஹேய் பதில் சொல்லுடி…
ஆமா பேசினேன்.
என் நம்பர் உனக்கு எப்படி தெரியும்.
அட இதென்ன பெரிய பாதாள சுரங்கமா உங்க நம்பரை கண்டுபிடிக்க முடியாம போறதுக்கு…
அவளது சேட்டைகள் தெரியும் என்றாலும் இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை..
நீயாடி அது…
ஏன் எனக்கு என்ன?
உலகத்தை நினைச்சேன் டி அம்மு…
கலகலவென சிரித்தவள் எதுக்கு உலகம் நவிலன் ..
இல்ல அன்னைக்கு ஒருநாள் என்று பனியை பார்க்க..
அது பொதுநலம் பாஸ் …
அப்ப இது…
இது என்னோட நலம்..
ஹான்…
சுயநலம்..
அப்பப்பா எப்படி இந்த வாய் இத்தனை வருஷம் அமைதியா இருந்துச்சு…
எல்லாம் இங்க தான் இருந்தது என்ற பனியை இறுக்கி அணைத்து கொண்டவன் ஆழ மூச்செடுத்து அவள் தோள் வளைவில் இதழ் பதிக்க…
பனி, “இதென்ன கார்ல”?
அப்ப இதென்ன என்று அவள் அவன் மீது அமர்ந்து இருந்ததை காட்ட..
அதெல்லாம் நான் என்னோட இடத்தில் என்னோட கார்ல் தான் உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்ல…
நானும் தான் என்னோட இடத்தில் முத்தம் வைச்சேன்..
உங்க இடம் தான் ஆனா பார்க்கிறவங்க தப்பா இல்ல பார்ப்பாங்க..
எதே நம்ம வீட்டு கார் பார்க்கிங் ல…
ஆமா அதோ பாருங்க நீங்க ஆசையா வாங்கின அந்த ஆர் எக்ஸ் ஹண்ரட்டு… அப்புறம் அந்த ஜாதி மல்லி கொடி அதோ அந்த கல் பெஞ்ச் அப்புறம் என்று ஆரம்பிக்கும் முன்பே அவள் வாய் மூடியவன் அவளை தன் முகம் பார்த்து திருப்பி ஆச்சரியமாக எப்படி என்று கண்களால் கேட்க…
அதெல்லாம் அப்படித்தான் என்றவள்… உள்ள போகலாமா நவி…
இல்ல அம்மு வா என்றவன் கார் கதவை திறந்து,..அவளை அழைத்து கொண்டு வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் தோட்டத்தில் சென்று நிற்க சிரித்தவள் இந்த பெஞ்ச் அப்படி என்ன தான் உங்களுக்கு ஸ்பெஷல்?
வா சொல்லுறேன் என்றவன் அந்த பெஞ்ச் அருகில் இருந்த மகிழமரங்களின் இரு பக்கத்திலும் இருந்த கயிற்றை இழுக்க அது அழகாய் மேலே மடித்து வைக்கப்பட்டது போல் இருந்த ஊஞ்சலை கீழே இறக்கி இருந்தது…
கீழே ஏதோ விழுவதை போல் இருப்பதை பார்த்து அதிர்ந்து பின்னே நகர்ந்தவளை இடையோடு அணைத்து கொண்டவன் வா என்று அழைத்து சென்று அதில் பொருத்தப்பட்ட சிறிய பேட்டரி லைட்டை ஆன் செய்தவன் கயிறு ஊஞ்சல் என அனைத்தையும் ஆராய்ந்து விட்டு பனியை கையிலேந்தியவன் ஊஞ்சலிற்குள் அமர்த்தி விட்டு தானும் உள்ளே சென்றவன் அதன் மேல் இருந்த ஒரு இழுவையை இழுக்க அதுவோ நெட் போல மறைத்து கொண்டது…
வாய்பிளந்து பார்த்து கொண்டு இருந்தவளை அணைத்து கொண்டவன் எப்படி இருக்கு? இதுக்கு தான் இங்க வருவேன் நான் பேசினதை எல்லாம் ஒட்டு கேட்டியா இல்ல …
உங்க கிளாஸ் ல ஆள் வச்சு இருந்தேன்.
என்ன
ஆமா ஆமா என்றவள் அந்த ஊஞ்சலில் படுத்து விட…அவளையே பார்த்து இருந்தான் நவிலன்.
என்ன பாஸ்..
என்னைய எப்ப இருந்து விரும்புற அம்மு…?
லேட் லேட் ரொம்ப லேட் இந்த கேள்வியை நீங்க ஆறு வருஷத்துக்கு முந்தி இல்ல கேட்டு இருக்கனும்.
அம்மு…
ம்ம் ம்ம்
அப்ப நான் உன்னையே…
உங்களுக்கு முன்னவே என்றவள் அவன் இடையை கட்டி கொண்டு படுத்து விட…அப்படியே சரிந்து விட்டான் நவிலன்…பேச்சுக்களே இல்லை அவனிடம்.பனியும் அமைதியாக அந்த தருணத்தை உணர்ந்து கொண்டு இருக்க… திரும்ப அந்த கல்லூரி வாழ்க்கையை நினைக்கவோ உணரவோ பனிக்கோ நவிலனுக்கோ எண்ணம் இல்லை, அங்கே ஆரம்பித்தது அதோடு நிறுத்தி கொண்டனர் அதை அசை போட்டால் அத்தனையும் வந்து நிற்கும் நினைவடுக்கில் ..இதோ இப்போது இருக்கும் இனிமையான நிம்மதியானவற்றை மட்டுமே நினைக்க வேண்டும் என்று அமைதியாக இருக்க ..
அவன் மீது கொண்ட நேசத்தை வெளிப்படுத்தி விட்ட நிம்மதியில் உறங்கி இருந்தாள் பூம் பனி..
இங்கே பள்ளியில் இருந்து வந்த கவி மாமியும் மஞ்சுவும் கிளம்பிவிட்டனர் என்ற செய்தி அறிந்து இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தாள். ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை கூட என்கிட்டே சொல்லவே இல்ல முடிவு பண்ணி கிளம்பி போய் இருக்காங்க ப்ச் எல்லாரும் என்னைய மீறி போய்ட்டு இருக்காங்க என்று உறுமிக்கொண்டு இருந்தவளுக்கு நேரம் கடந்ததே தெரியவில்லை.
வசந்த், “நேரம் சரியாக ஒன்பது என காட்ட… பார்த்து இருக்கனும் மஞ்சு அம்மா பத்திரம் நீ பார்த்துப்பே ன்னு அடம் பிடிச்சதால் தான் அம்மாவை உன் கூட அனுப்புறேன் அம்மா எதுவா இருந்தாலும் போன் பண்ணுங்க..
சரி டா எதுக்கு இவ்வளவு பயம் அங்க தான் பக்கத்தில் எல்லாம் நவிலன் ஃபிரண்ட் குடும்பம் இருக்கே நான் பார்த்துக்கிறேன்.
இருந்தாலும் ம்மா…
ப்ச் அண்ணா நாங்க என்ன குழந்தையா நீ பயப்பட..
இல்ல மஞ்சு..
அண்ணா இப்ப தான் ரிலிப்பா இருக்கா யூ டோண்ட் வொர்ரி…
ம்ம்ம்…
அதான் இன்னும் மூணு மாசத்துல குட்டி சேம்ப் வரப்போறானே அப்புறம் என்ன ஆனா ஒன்னு அண்ணா, அண்ணி கிட்ட சேம்ப் இங்க வரப்போறான் ன்னு சொல்லிடாத அப்புறம் இங்கேயும் வந்துடுவாங்க என்று சொல்ல..
சிரித்தவன் போன் பண்ணானா..
இல்ல இல்ல சாயந்திரம் நவி மாமா போன் பண்ணாங்க போய்ட்டு பேசுன்னு அப்ப தான் அவன் வரதை சொன்னாங்க …
ஓஓஓ…
என்ன அண்ணா…
அவன் பேசுறது இல்ல மஞ்சு அவங்க அம்மா ரொம்ப படுத்தி எடுத்துட்டா அதான் நவிகிட்ட சொல்லி ஹாஸ்டல் போனான்..
புரியுது அண்ணா விடுங்க என்று சொல்ல வசந்த் போன் ஒலித்தது.. ஒரு பெருமூச்சுடன் எரிமலை கொந்தளிக்க தயாராக இருக்கிறது என்று போனை பாக்கெட்டில் போட்டு விட்டு நிற்க..மஞ்சுவும் அவன் தாயும் கிளம்பி இருந்தனர் கனடாவை நோக்கி….
தொடரும்.