34.நவிலனின் கோதையானவள்
இங்க இவ்வளவு பெரிய வீடு இருக்கு ஆனா என் மகன் என்று ராணி கத்தி கொண்டு இருக்க, வினி பயத்துடன் அமர்ந்து இருந்தாள்.
சாம்பசிவம், “ என்ன வினி தூங்கலையா..
இல்லப்பா பயமா இருக்கு…
ஏன்
அம்மா என்று திணற..
ஏன் உங்க அம்மாக்கு என்ன?
ரூம்ல அம்மா கத்தியை கையில் வச்சுட்டு நடந்துட்டே பேசிட்டு இருக்காங்க என்ன பண்ணுவாங்களோன்னு…
ஒரு பெருமூச்சுடன் நீ விக்கி ரூம்ல போய் லாக் பண்ணிட்டு தூங்கு என்றவர் எழுந்து அறையை எட்டி பார்க்க மகள் சொன்னது போல் கையில் கத்தியுடன் ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டு இருந்தாள் ராணி..என்ன ராணி பண்ணிட்டு இருக்க?
புசு புசுவென வந்த பெருமூச்சுடன் ,என்ன நினைச்சு என்னைய அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க? அந்த பொண்ணை போய் என் மகனுக்கு கட்டி வச்சு இருக்கீங்க?
ஏன் யாழுக்கு என்ன குறை..
எல்லாம் நிறை தான் குறையே இல்ல அதனால் தான் எல்லாமே முடிஞ்சு பெத்தவங்களையும் முழுசா முழுங்கிட்டு தனியா நின்னா அந்த விளங்காததை என் தம்பி தூக்கி ஏழரையை சுமந்தது மட்டுமில்லாம இதோ என் வீட்டுக்கு அந்த பீடையை கொண்டு வந்துட்டீங்க.
போதும் ராணி வார்த்தையை விடாத அந்த பொண்ணு உனக்கு என்ன கெடுதல் பண்ணிட்டான்னு இப்படி பேசுற அவ பேசுறது கூட யாருக்கும் சங்கடம் வரக் கூடாதுன்னு பேசுற பிள்ளை அவளை போய்.. ச்சே உன்னை எல்லாம் திருத்தவே முடியாது .இந்த வயசுக்கு மேல கோர்ட் படி ஏறி எனக்கு தான் அசிங்கம் நீ நீ ன்னு இருக்க உன்னோட எந்த விஷயத்திலும் இனி நான் இருக்க மாட்டேன். வினி என்று சத்தமாக அழைக்க விக்கி அறைக்கதவை திறந்து கொண்டு வேகமாக வந்தவள் மூச்சிரைக்க தாய் தந்தையை பார்க்க…
நான்…. நான் கட்டின வீட்டுக்கு போறேன் வினி உனக்கு அம்மா கூட இருக்கனும் ன்னு இருந்தா இங்க இரு இல்ல என்னோட வரனும் ன்னா வா நாளைக்கு உன் அண்ணா அண்ணி அங்க தான் வரப் போறாங்க என்று சொல்ல…
வரேன் பா என்றாள் அவசரமாக…
ராணி, “என்னடி சொல்லுற ?
பயமா இருக்கு மா உன்னோட இருக்க..
என்ன ?
ஆமா பயமா இருக்கு நீ கத்தியை வச்சு ஆட்டி ஆட்டி பேசுறதை பார்க்கும் போது எங்க உனக்கு பிடிக்கலன்னு எதையும் செய்யுவையோன்னு என்றவள் தன்னால் சாம்பசிவம் கையை பிடித்து கொள்ள ,சாம்பசிவம் ராணியை ஒரு பார்வையை பார்த்து விட்டு விதியை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார்..
ராணி, “ வேணாமா யாருக்கும் நான் வேணாமா போங்க போய்டுங்க விழ முடியாம இல்ல என்று கத்தியவர் வேகமாக வெளியே வர வாசலில் கார்த்திகேயன் நின்று இருந்தார்..
என்னடா பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு இங்க வந்து நிக்குற?
அக்கா….
போதும் போய்டு இந்த உறவே வேணாம் . என்னைய எடுத்து எரிஞ்சு பேசுற எந்த உறவும் எனக்கு தேவையில்லை என்றவர் கதவை அடைத்து விட..வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து இருந்த சாம்பசிவம் … என்ன பண்ணட்டும் கார்த்தி..
மாமா…
விடுடா அவளை மாத்த முடியாது நான் வினியை அழைச்சிட்டு வீட்டுக்கு போறேன் தனியா இருக்கட்டும் கார்த்தி அப்ப தான் உறவோடு அருமை தெரியும் அப்புறமும் புரியலன்னா அவளோட வாழ்ந்ததுக்கு அர்த்தமே இல்லை ன்னு நினைச்சுக்கிறேன் என்றவர் வா வினி கிளம்பு கார்த்தி…
ம்ம்ம்
என்னடா…
என்ன மாமா பண்ணுறது தனியா இருந்து எதாவது பண்ணிக்கிட்டா..
நமக்கு எதாவது பண்ணுவாளே தவிர அவளுக்கு ஒன்னும் ஆகாது என்றவர் கிளம்பலாம் என்றவர் கிளம்பி விட கார்த்தியும் வீடு நோக்கி சென்று இருந்தார்.
விக்னேஷ், “ யாழு…
ம்ம்ம்…
என்னடா அமைதியா இருக்க?
என்ன சொல்லனும் விக்கி நீங்க இப்படி அத்தையை ஒதுக்கி தான் கல்யாணம் பண்ணனுமா..?
அடியேய் அவங்க சம்மதிக்கனும் ன்னு வெயிட் பண்ணா கடைசி வரை கல்யாணம் பண்ண முடியாது…
அதுக்கு…
என்னடி பிரச்சினை?
பிரச்சினை நான் தான் விக்கி… உங்களுக்கு தெரியும் என்ன விஷயம் ன்னு…
தப்பான விஷயத்துக்கு எல்லாம் தலையாட்ட முடியாது யாழு…
இல்ல அது வந்து என்று தயங்க..
யாழு உன்னையே பத்தி எனக்கு தெரியும் உலகமே என்ன சொன்னாலும் என் யாழு தப்பு செய்ய மாட்டான்னு தெரியும் நீ ஏன் இவ்வளவு கலங்குற… யாரோ செய்யுற தப்புக்கு நீ ஏன் பொறுப்பு எடுத்துக்கனும். உன்னையே முதல்ல நீ நம்பு டா அப்புறம் மத்தது என்றவனை பார்க்க.. ம்ம்ம் என்றான்.
சரி என்றவள் அவன் தோள் சாய்ந்து அன்னைக்கு நான் அங்க வேணும் ன்னு போகல விக்கி, அங்க இருந்து என் ஃபிரண்ட் போன் பண்ணா காப்பாத்த சொல்லி நான் உடனே அப்பாக்கு போன் பண்ணேன். அப்பா எடுக்கல அதான் நான் என்றவள் போலீஸ் நம்பருக்கு அடிச்சு சொல்லிட்டு அங்க போனேன் என்றவளை பார்த்தவன் …
ஓகே டா முடிஞ்சது அதைப்பத்தி இனி எதுக்கு அதுவும் இல்லாம இதை நீ எனக்கு விளக்கனும் ன்னு இல்ல ஏற்கனவே எனக்கு தெரிஞ்சது தானே…
……
யாழு…
ம்ம்ம்…
யாழு மா..
சொல்லு..
ஏண்டி பேசறதுக்கா பர்ஸ்ட் நைட் வச்சாங்க..
பேச சொல்லி நான் சொல்லலையே…
யாழு..
ம்ம்ம்…
உனக்கு…
விக்கி நீங்களும் சின்ன குழந்தை இல்ல நானும் இல்ல அதைவிட இந்த விஷயத்தை பத்தி நிறைய ஊர் வாய் என்னைய பேசி பேசி தெரிஞ்சுக்கிட்ட விஷயம் அதிகம் அதனால் நீங்க ராகமெல்லாம் இழுக்க வேண்டாம் . ஆனா..
என்ன ஆனா…
கொஞ்ச நாள் போகட்டும் அத்தை நம்மளை ஏத்துக்கிட்டதும் என்றதும் வெடுக்கென அவளை பிரித்தவன் … இங்க பாருடி இந்த டயலாக் எல்லாம் வேணாம் நான் உன்னோட வாழனும் அவ்வளவு தான் உனக்கு டைம் வேணுமா கேளு அதுல நியாயம் இருக்கு இந்த அத்த சொத்தன்னு கதையெல்லாம் இனி இருக்க கூடாது என்றவன் கட்டிலில் படுத்து விட..
மூடி இருந்த அவன் இயைகளையே பார்த்து இருந்தவள் மெல்ல அவனருகில் படுத்து அவன் தோளை பிடித்து கொண்டு கண் மூடி இருந்தாள்.
அவனை பிடித்து கொண்டு கண் மூடியவளை பார்த்தவன் மெல்ல புன்னகைத்தான். ப்ச் இவ கிட்ட கோவத்தை காட்டிட்டோமே…இருந்தாலும் இந்த ஒப்பந்தத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன். ராணி ய பத்தி தெரிஞ்சும் பேசினா என்ன அர்த்தம் விடு டா விக்கி சீக்கிரம் நாட்டை விட்டு கிளம்பு அப்ப தான் வாழ்க்கை பிரகாசமான இருக்கும் என்று நினைத்து கொண்டு கண் அயர்ந்து இருந்தான் விக்னேஷ்.
அம்சா, “என்னங்க ?
கார்த்திகேயன், “எதுவும் சொல்லுறதுக்கு இல்ல மா அக்கா என்றவன் நடந்ததை கூற… அண்ணா சாப்பிட்டால்தான் ப்பா வினி பசி தாங்க மாட்ட..நீங்க ஒரு எட்டு போய் சாப்பாடு குடுத்துட்டு என்றவள் இருங்க நானும் வரேன்.
கார்த்திகேயன், “ நீ இரு பிள்ளைங்க இருக்காங்க இல்ல..
அட நாம் வெளாயே பூட்டிட்டு போகலாம் இருந்த டென்ஷன் ல பிள்ளைங்க உறங்கி இருக்கும்.
என்னடி சொல்லுற..
உண்மையை தான் சொல்லுறேன் ..
அடியேய் இன்னைக்கு மொத ராத்திரி..
எல்லாரும் மொத ராத்திரியிலேயே எல்லாமும் முடிஞ்சுடுதா அந்த முதல் ராத்திரி எதுக்கு?
எதுக்கு மா என்று கார்த்தி தாகத்தோடு கேட்க…
ஒவ்வொரு பொழுதும்
நிறைவாய்
குறைவாய்
தழும்பலாய்
விலகலும் தவிப்புமாய்
அடுத்த காலை பொழுதை எதிர்கொள்ள ஆயத்தமாய் ன்னு
அன்றைய நிகழ்வுகளை பகிர
வருவதே இரவுகள்..
அதிலும்
புதிய உறவில்
மெய் தீண்டலை தாண்டி
சொல்லவும் கேட்கவும்
உணரவும் எத்தனையோ விஷயங்கள் இருக்க…
அதை அறிந்து கொள்ள மட்டுமே
அந்த மெய் தீண்டல்
பழமையை உணர்ந்த இன்றைய
சந்ததிகள் இப்போது மெய்யை விட
உயிருக்கு தான் உணர்வு இருக்கும் ன்னு உணர்ந்த காலம் இது..
அதனால் அவங்க வாழ நீண்ட நெடிய இரவு காத்துட்டு இருக்கு நீங்க வாங்க என்று உணவை எடுத்து கொண்டு கிளம்பி இருந்தனர்.
ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பிய நவிலன் தவிப்போடு வீட்டை அடைந்து ஊஞ்சலை நெருங்க ஊஞ்சலுக்குள் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் பூம் பனி..
அம்மு தூங்கல…
கொஞ்சம் முன்னாடி தான் எழுந்தேன் ..என்னாச்சு நவி..
கவி அக்கா என்றவனை பார்த்தவள் அக்காவுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே..
அதெல்லாம் இல்ல ஆனா அவங்க மனசு.
பயம் நவி அவங்க மனசு முழுக்க பயம் அந்த பயம் தான் அவங்களை மொத்தமா மாத்தி இருக்கு இப்படி நிதமும் தன்னையே சுத்தி தான் எல்லாரும் இருக்கனும் ன்னு…
எதுக்கு பயப்படுனும் அப்படி நாங்க நடந்துக்கவே இல்லையே..
நவின் நீங்க டாக்டரா மட்டுமே யோசிக்குறீங்க சக மனுசனா பாருங்க உங்களை சுத்தி இருக்காங்க சொல்லி சொல்லியே இந்த வீட்டில் நமக்கு உரிமை இல்ல போல நம்ம அம்மாவே இல்லன்னு வரும் போது அப்புறம் எப்படி ன்னு அவங்களுக்கு திரும்ப திரும்ப சொன்னது தான் இவ்வளவு மாற்றம் எல்லாரையும் தனக்கு கீழ வச்சுக்கனும் ன்னு எண்ணம் வந்து இருக்கு…
ப்ச் புரியுது அம்மு ஆனா நாங்க..
திரும்ப அங்கேயே வரீங்க அவங்க அதை எல்லாம் கடந்து வந்துட்டாங்க இப்ப அவங்க எண்ணம் எல்லாம் எல்லாரும் எனக்கு தான் முதல்ல மதிப்பு தரனும் ன்னு நினைக்கிற இடத்தில் இருக்காங்க அதை எந்த எந்த இடத்தில் நிலைநாட்டுனுமோ அதை செய்யுறாங்க …
சிர விடுங்க போக போக சரி பண்ணலாம் ..இப்ப தூங்கலாம் ப்பா…
சாரி சாரி டா என்றவன் ஊஞ்சலுக்குள் வந்தவன் அவளை அணைத்தேகொள்ள அவனுக்கு வாகாய் சரிந்து படுத்தாள் பூம்பனி..அவள் நெருக்கமே போதும் என்று இருந்தது நவிலனுக்கு மெல்ல மலரும் மொட்டுகள் போல் அவள் பூத்தாள் போதும் . ஒவ்வொரு அசைவும் நிலையாக இருக்க பொறுமை அவசியம் என்று நினைத்தவன் அவளை தழுவி கொண்டு உறங்க..
விடியலில் என்னென்ன காத்து இருக்கிறது என்று உணராமல் போய் இருந்தனர் அனைவரும்..
அவரவர் பக்கம் அவரவர் நியாயம் என்று முடிவுகளை அள்ளி வீச காத்து இருக்க விடியலும் அதை ஏற்க காத்து இருந்தது.
தொடரும்