35.நவிலனின் கோதையானவள்
இரண்டு மாதங்கள் ஓடி இருந்தது . யாருமே எதிர்பார்க்காத வகையில் நாட்கள் கடந்து இருந்தது. கனடா சென்ற மஞ்சுவும் அவள் தாயும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.
வசந்த், “கவி டிக்கெட் போட்டுட்டேன் கிளம்பனும் பேக் பண்ணியா…?
கவிதா, “ நான் கண்டிப்பா வருமா வசந்த்..இன்னும் இரண்டு வாரத்தில் பசங்களுக்கு பரிட்சை வருது அதுவும் இல்லாம ஆடிட்டிங் வேற நம்ம கம்பெனில நீங்க போய் பையனுக்கு எல்லாம் பார்த்து செட்டில் பண்ணிட்டு வாங்க அங்க தான் மஞ்சு அத்தை ன்னு எல்லாரும் இருக்காங்களே என்று சொல்ல..
வசந்த், “ ஏன் கவி உனக்கு எங்களோட நேரம் ஒதுக்க விருப்பம் இல்லையா என்று கேட்டவுடன் செய்து கொண்டு இருந்த வேலையை ஒரு நொடி நின்று மீண்டும் தொடர்ந்தவள்..என்ன பேசுறீங்க நான் தான் ஒரு மாசமா சொல்லிட்டு இருக்கேனே, இங்க வேலை இருக்குன்னு… இந்த வருஷம் என்ன ஆனாலும் எகனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட் தான் முதல்ல இருக்கனும் ன்னு நானும் பசங்களை தயார் பண்ணி வச்சு இருக்கேன். இந்த நேரத்துல நான் அங்க வந்துட்டா அவங்க ஆறு மாசமா கஷ்டப்பட்டது என்னோட ஆறு மாச உழைப்பு எல்லாம் வீணாகிடும்.
ஓஓஓ….
சாரி வசந்த் என்னால இந்த முறை வரமுடியாது நீங்க கிளம்புங்க நான் நெக்ஸ்ட் டைம் ஜாயின் பண்ணிக்கிறேன்.
…..
என்னங்க…
நிறைய மாறிட்ட..
மாற்றம் ஒன்னு தானே மாறாதது ..
கவி தத்துவம் எல்லாம் பேசுற..இதுல தத்துவம் எங்க இருக்கு வசந்த் நிதர்சனம் தானே… நான் என் வழியை சரியா தேர்ந்தெடுத்து இருக்கேன் ன்னு நினைக்கிறேன் என்றவள் உங்களுக்கு எதாவது எடுத்து வைக்கணுமா கவின் க்கு எதாவது வேணுமான்னு கேளுங்க., ஏன் உன் பையனை நீ கேட்க மாட்டியா ?
விரக்தியாக சிரித்தவள் நான் தான் யாருக்கும் வேண்டாதவளா போய்ட்டேனே இதுவரை அவன் எனக்கு போன் பண்ணவே இல்ல . நானும் இத்தனை வருஷத்துல எல்லாரையும் அதட்டி உருட்டி தான் பாசத்தையும் உரிமையும் வாங்கி இருக்கேன் . தன்னால எதுவும் எனக்கு கிடைக்கல சாரி இதுவரை உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்தினதுக்கு என்றவள் எழுந்து செல்ல, கவி என்று அவளை இழுத்து அணைத்து கொண்டவன் அப்ப நான் உன் மிரட்டலுக்கு தான் இத்தனை வருஷமா குடும்பம் நடத்துறேனா டி…
தெரியலையே என்றாள் கவிதா…
கவிம்மா…
முடியல என்றவள் அவனை அணைத்தே கொண்டு அழ..
இங்க பாருடி உன்னையே யாரும் தப்பா நினைக்கல உன்னோட பயத்தை நாங்க புரிஞ்சுக்கிட்டோம் அதனால் தான் அப்படியே இருந்துட்டோம் . ஆனா கவின், மஞ்சு,பனி எல்லாரும் சின்ன பிள்ளைங்க தானே அதான் அவங்க என்று சொல்லாமல் நிறுத்த..
கவிதா, “என்னைய ஒதுக்கிட்டாங்க..
அடச்சீ உன்னையே யாரும் ஒதுக்கல டி உனக்கு யோசிக்க நேரம் தந்து இருக்காங்க அவ்வளவு தான்.
நேரம் வந்தவங்க என்னோட பேசவே இல்லையே…
கவிம்மா..
புரியுது விடுங்க எனக்கு வருத்தம் இல்ல நான் கடந்துட்டேன் நான் தான் யாரும் இல்லதவளா தானே இருந்தேன். இனி அதை ஏத்துக்கிற குணத்தை வளர்த்துக்கிறேன் என்றவள் நகர பார்க்க.. அவளை விடாமல் அணைத்து இருந்தவன் என்னடி பேச்செல்லாம் ஓவரா இருக்கு ?
உண்மையை தானே சொல்லுறேன். கவிம்மா உன்னையே யாரும் எதுவும் சொல்லல நீயே தான் தேவையில்லாம ஏதேதோ யோசிச்சு…ப்ச் விடு அதான் புரிஞ்சுக்கிட்ட இல்ல அப்புறம் என்ன?
அதனால் தான்அ கொஞ்சம் தள்ளியே இருக்கேன் என்னால அதுக்கு மேல எதுவும் பண்ண சொல்லாதீங்க அப்புறம் எதிர்பார்க்காதீங்க வலிக்குது..
சரி சரி நீ வரவேண்டாம் அவனை நான் கொண்டு போய் விட்டுட்டு செட்டில் பண்ணிட்டு அடுத்த வாரம் வந்துடுறேன்.
ஏன் நீங்க தான் இரண்டு மாசம் பிளான் வச்சு இருந்தீங்களே…
அதான் என் பொண்டாட்டி வரலையே நான் இங்க வந்து ஹனிமூன் போகலாம் ன்னு இருக்கேன் என்றதும் அவன் அமைப்பிலிருந்து விலுக்கென நிமிர..
வசந்த், “ எனக்கு ப்ரேக் வேணும் கலிப்பா வேலை வேலை சொத்து சம்பாத்தியம் இப்படியே இத்தனை வருஷம் போய்ட்டு என்று சலிப்பாக சொல்ல..
அந்த குரலில் கலங்கிக் தான் போய்விட்டால் கவிதா…ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல..
இல்ல இல்ல சீக்கிரம் என் வேலையை முடிக்க உந்தி விட்ட இப்ப ப்ரி ஜாலியா நமக்காக வாழலாம் நீ கூட ப்ரேக் எடுத்துக்க இந்த பேட்ஜ் கங்கு அப்புறம்..
பார்க்கலாம் ஆனா லீவ் போட்டு வேணும் ன்னா போகலாம் என்றதும்..
ம்ம்ம் என்றான் வசந்த்..இனி உங்களுக்காக வாழனும் ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்லுறீங்களோ அதுபடி…
நீ நீயாக இரு கவி வேற எதுவும் வேணாம் என்று வசந்த் அணைத்து
கொள்ள ஒரு அழகான சிறிய புரிதல் வந்து இருந்தது கவிதாவிற்கு
மங்கை, “ ஏன் நவி இப்பெல்லாம் அக்கா வரதே இல்ல போன் பண்ணாலும் அளவோடு தான் பேசுறா…
பனி, “ அத்த அண்ணிக்கு கொஞ்சம் டைம் குடுங்க இப்ப தான் அவங்களை அவங்க புரிஞ்சுக்க ஆரம்பிச்சு இருக்காங்க..புரியுது பூவு ஆனா மனசே சரியில்லை என் பொண்ணு என்கிட்டே உரிமையா பேசியே பல மாசம் ஆகிட்டு என்று மங்கை விசும்ப
அம்மா என்ன இது சின்ன பிள்ளை மாதிரி அக்கா எங்க போய்டுவா எப்பன்னாலும் நம்ம கிட்ட தான் அப்புறம் என்ன?
இருந்தாலும் அவ எனக்கு முதல் குழந்தை டா அவளை ஆசையா என்னோட நெஞ்சுலையே வச்சு வளர்த்தேன் யார் கைக்கும் தரமாட்டேன். அவளை ஒரு சொல்லு சொல்லு விடமாட்டேன் அப்படி வளர்ந்தவ இப்ப மொத்தமா ஒதுங்கி போய் நிக்குறா…
அத்த…
சொல்லு பூவு…
நாம் ஒரு இடத்துக்கு போய்ட்டு வரலாமா?
எங்க பூவு…
சொல்லுறேன் தயார் ஆகுங்க என்றவள் நவிலனை பார்க்க சிரித்து கொண்டவன் நான் இன்னைக்கு மலரை பார்க்க போகனும் ஏதோ கையெழுத்து கேட்டா நீங்க போய்ட்டு வாங்க என்றவன் நழுவி விட சிரித்து கொண்டவள் மங்கையை அழைத்து கொண்டு பள்ளியை நோக்கி சென்று இருந்தாள்.
பனி கிளம்பியதும்,போனை எடுத்த நவிலன் என்னாச்சு மாமா நான் சொன்னதை வச்சு செக் பண்ணீங்களா எதாவது தகவல் தெரிஞ்சா?
இல்ல நவி அங்க அக்கா இல்ல அவங்க வேற யாரோ..
ஓஓஓ இப்ப அப்பா எப்படி இருக்காங்க..
மாமா ஓகே தான் விக்கியை தான் என்னால் சமாதானம் செய்ய முடியல இப்ப அவன் வெளியே வேலைக்கு போகலன்னு நிக்குறான்.யாழு தான் எல்லாம் என்னான்னு தினம் அழுகை..
ப்ச் என்ன பசங்க மாமா அவங்க தான் புரியாம இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்காங்கன்னா இவனுக்கும் யாருக்கும் என்னவாம் புத்தி இல்லையா?சரி விடுங்க வேற இடத்தில் சொல்லி வைக்கிறேன் என்றவன் சொல்ல…
ஏன் நவி இதுவரை ஏடிஎம் யூஸ் பண்ணவே இல்லையா…
இல்ல மாமா அதே நேரம் அவங்க போன் கூட ட்ராக் பண்ண முடியல அவங்க வச்சு இருக்காங்களா இல்லையானும் தெரியல..
ம்ம்ம் என்னால் மாமாவை பார்க்கவே முடியல ரொம்ப கஷ்டமாக இருக்கு வெளியில சாதாரணமா இருந்தாலும் அக்காவை நினைச்சு…
சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் மாமா கவலையை விடுங்க
சரி மாப்ள நீங்க பாருங்க நான் மாமாவை பார்க்க போறேன் என்று கார்த்திகேயன் வைத்து விட…
ஒருபெருமூச்சுடன் அன்றைய நாள் கண் முன்னே வந்தது.. சாம்பசிவம் கிளம்பி வந்த பிறகு ராணி ஓயாமல் நடித்தவர் தீர்க்கமான முடிவோடு உறங்க சென்றவர் விடியற்காலை எழுந்து கிளம்பிவிட்டார்.. அவரின் சம்பாத்தியத்தில் வந்த சில படங்களை எடுத்து கொண்டு அதோடு சிறிய வகை பையில் துணிகளை எடுத்து கொண்டவர் அவருக்கு தேவையான வகையையும் எடுத்து கொண்டே கிளம்புவதாக லெட்டர எழுதி வைத்தவர் எந்த காலத்திலும் என்னை தேடி வரவேண்டாம் என்றும் ,நான் இருக்கும் இடம் தெரிந்தாலும் வந்து விட வேண்டாம் என்று சொல்லியே சென்று இருந்தார்.
இதோ இரண்டு மாதங்கள் ஆகி இருந்தது எந்த தகவலும் இல்லை முடித்த அளவிற்கு தேடி களைத்து இருந்தனர். நவின் டிடெக்டிவ் ஏஜன்சிகள் நான்கு பேரை அணுகி இருந்தான்.அவர் மீது ஆயிரம் கோபங்கள் இருக்கலாம் ஆனால் வீட்டில் ஒருவர் இல்லையென்றால் எதுவுமே ஓடாது அப்படித்தான் அனைவருக்கும் இருந்தது.
ராணி தன் தவறை உணரவேண்டும் என்று மட்டுமே சாம்பசிவம் நினைத்தாரே தவிர இப்படி எங்கேனும் போய் விட வேண்டும் என்று நினைக்கவில்லை .அவரை தனியாக விட்டால் தானாக புரிந்து கொள்வார் என்று நினைத்தால் ராணி கிளம்பி சென்று விக்கி யாழினி வாழ்க்கையை கேளிவி குறி ஆக்கிவிட்டார். இருவரின் வாழ்க்கையும் சங்கடத்தில் கழிவது யாருக்குமே விருப்பம் இல்லை இரண்டு மாதமாக தேடுகின்றனர் . தேடி காண்பது கிடைத்துவிட வேண்டும் என்று தினமும் போராட்டமாக…
மங்கை, “ இங்க எதுக்கு பூவு…
அட வாங்க அத்தை என்றவள் சாரங்கனை பார்த்து அவரிடம் பேசிவிட்டு எகனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட் பக்கம் மங்கையை அழைத்து செல்ல அங்கே ஒரே சிரிப்பும் சந்தோஷமும் ஆக இருந்தது..
மிஸ் நீங்க இருக்கீங்களே…
ஏன் டா எனக்கு என்ன நான் இருக்கேன் தான்…
இருக்கீங்க ஆனா இந்த டெஸ்ட் மட்டும் விடுவதே இல்ல..
டேய் நான் இவ்வளவு கெடிபிடி வைக்குறதே நீங்க எல்லாம் நல்லா இருக்கனும் ன்னு தான்.
இப்படியே தான் வந்ததும் இருந்து எங்களை டார்ச்சர் பண்ணுறீங்க..
டேய் நான் உங்களுக்கு டார்ச்சரா..
நீங்க எங்களுக்கு அழகான இனிமையான டார்ச்சரான டீச்சர் என்று மாணவர்கள் கவிதாவை கட்டி கொள்ள அங்கே சிரிப்பின் சத்தம் ஓங்கி இருந்தது.
சரி சரி என்னைய ஏமாத்துனது போதும் வாங்க டெஸ்ட் எழுத…
அட போங்க மிஸ் உங்க வீட்டில் உங்களை யாரும் தேட மாட்டாங்களா? ப்ளீஸ் மிஸ் எங்களுக்கு ப்ரேக வேணும்.
கண்டிப்பா தரேன்..
மிஸ் மிஸ்…
என்னடா… இந்த வீக் எண்ட் வெளியே போகலாமா…
என்ன..
ஆமா மிஸ் நாம் எல்லாம் போகலாம் ஜாலியா ஆனா அன்னைக்கு நீங்க சுடிதார் ல வரனும்..
டேய் நான் இன்னும் வரேன்னு சொல்லல..
அதெல்லாம் வருவீங்க எப்படியும் நீங்க ஸ்கூல் ல வந்து உட்கார்ந்து இருக்க போறீங்க அதுக்கு நாம எல்லாம் வெளியே போகலாம்.
ப்ச் என்ன பசங்களா..
மிஸ் நாங்க உங்களை மிஸ் பண்ணுவோம் ஸ்கூல் முடிய போகுது இல்ல போகலாம் மிஸ்.
ஓகே ஓகே ஒரு நிமிஷம் என்றவள் வசந்த் கங்கு போனை போட்டு கேட்க வசந்த் சம்மதித்து இருந்தான். நான் வர இன்னும் ஒரு வாரம் இருக்கு இல்ல போய்ட்டு வா ஆனா பத்திரம் கலிப்பா உனக்காக நான் காத்துட்டு இருக்கேன் தெரியும் தானே…
ம்ம் ம்ம் ….
என்ன அத்தை இப்ப சந்தோஷமா அவங்க சந்தோஷத்தையும் நிம்மதியையும் அவங்க தேடிக்கிட்டாங்க அவங்களை கொஞ்சம் பறக்க விடுங்க…
தொடர்ந்து பறந்தாலும்
இளைபார வீடு
வர வேண்டுமே
அப்போது அரவணைத்து கொள்
உறவே…
இப்போது பறக்கட்டுமே…
தொடரும்