என்ன என்ன? நான் சொன்னது உனக்கு தெளிவா கேக்கலையா? உன்னை பத்தி எனக்கு தெரியும். உனக்கு தான் என்னைபத்தி தெரியாதுன்னு சொன்னேன். இப்பவாவது புரிஞ்சுதா?" என்றான் குறும்புடன் கூடிய புன்முறுவலுடன்.
"தெளிந்த நீரில் தெரியும்
பிறைநிலா போல்...
சுடர்விட்டு பிரகாசிக்கும்
அவனின் முகம்
என்னையும் அறியாமல்...
என் மனதை ஒரேடியாக
அவன் பால் ஈர்க்கிறதே"
என்று அவன் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.
கண்ணை பறிக்கும் அழகான மலரின் தேனை பருகுவதுபோல் ஒருவரின் விழியை இன்னொருவர் பருக அங்கே இருவரின் விழிகளும் பேசிக்கொண்டன பல மொழிகளை மெளனமாக.
"உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்... மறுபடி..." ஷக்தியின் போன் அடிக்க. இருவரும் ஒருநிமிடம் தங்கள் நினைவுகளில் இருந்து தடுமாறினாலும் அவள் முகத்திலிருந்து தன் விழிகளை அகற்றாமல் காதில் போனை வைத்து பேசிக்கொண்டிருந்தான்.
அவனின் கூரிய விழிகள் தன்னை அம்பாய் துளைத்தெடுப்பதை தாங்கமுடியாமல் மஹாவின் விழிகள் தானாக தரையை நோக்கின.
அவளை பார்த்துக்கொண்டே, "ஹாய்! மாம்" என்று தன் அம்மாவிடம் பேசினான்.
“ எங்க இருக்க? ஊர்லருந்து வந்தா நேரா வீட்டுக்கு வரணும்னு தெரியாதா?" ஷக்தியின் அம்மா எதிர்முனையில் கேட்க.
"சாரி! சாரி! கொஞ்சம் பிஸி. அதான், இன்பார்ம் பண்ணல" என்றான் மஹாவை பார்த்து.
“ எப்போ தான் வருவ?" என்றார் கடுகடுத்த குரலில்.
"இன்னும் டவெண்ட்டி மினிட்ஸ்ல ஐ வில் பி தேர் மா” என்றான் கூலாக.
"சரி. வீட்டுக்கு சீக்கிரம் வாடா" என்று சிரித்தார்..
"லவ் யூ மாம்” என்றவுடன் மஹாவின் முகம் தானாக தன்னை நோக்குவதையும் கோவைப்பழத்தின் நிறம்கொண்டு அவளின் முகம் கனிந்திருப்பதையும கவனித்து கொண்டுதான் இருந்தான்.
"ஓகே பை!" என போனை கட் செய்தபடியே அவளை நோக்காமல்.
“என்ன இவன்? கல்யாணம் மட்டும் செஞ்சு கூட்டிகிட்டு வந்துட்டான். ஆனா, வீட்ல இருக்கறவங்கள பத்தி எதுவும் சொல்லலையேன்னு தானே நினைக்கிற?” என்று கேட்டான்.
அவளும் ‘ஆம் இல்லை’ என்று இருபக்கமும் தலையாட்டினாள்.
"நீ ரெண்டு பக்கத்துலயயம் தலையாட்றத பார்த்தா எனக்கு சிரிப்பு வருது. நானே சொல்றேன். எனக்கு அம்மா அப்பா அண்ட் ஒரே தங்கச்சி இருக்காங்க. கூடிய சீக்கிரம் நீயும் நம்ம வீட்ல ஒரு ஆளா சேர்ந்துடுவ. சரியா? அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்றான் பார்வையால் கெஞ்சியபடி.
“சுரேஷ் வீட்ல இருக்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க. நீ பயப்படாம இங்க இரு. உன் வீடு மாதிரி இங்க இருக்கலாம், ஆன்ட்டி உன்னை தன் மகளா பார்த்துப்பாங்க." என்றான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக.
"காலம் முழுக்க உன் கூட தான் இருக்க போறேன். அப்போ, ரொம்ப பொறுமையா என் முகத்தை பார்த்துட்டு இருக்கலாம். இப்படி என்னை நீ வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? இப்ப நான் போகணும் போகட்டுமா? இல்லை இங்கேயே உன்கூட இருக்கட்டுமா?" என்றவுடன் புது இடத்தில தனியே இருக்க வேண்டும் என்று பயந்தாலும் தன் கணவனின் வார்த்தைகளால் அவனை காணமுடியாமல் இதழ்களை கடித்தபடி தலை கவிழ்ந்தாள்.
“என் முகம் நோக்க
உன் உள்ளம் விரும்பினாலும்
என் விழி கதிரை காண
உன் இதயத்திற்கு தைரியமில்லையோ?”
“உன்னை இப்படி புது இடத்துல விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா தான் இருக்கு. இப்ப நான் போகணும். அம்மா.. அதான் உங்க அத்தை இன்னும் வரலன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நான் அவங்க முன்னாடி போய் நிக்கறவரைக்கும் நிறுத்தமாட்டாங்க" என்றவுடன் அவள் முகம் வாடுவதை பார்த்து.
"தினமும் கண்டிப்பா நான் வரேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். இவங்க எல்லாரும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க. நம்ம வீட்ல நான் நம்ம கல்யாணத்த பத்தி சொல்றவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று அவளை பார்த்தான்.
‘சரி’ என்று தலையாட்டியதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
"அண்ணா! நாளைக்கு கரெக்டா வந்துருடா. அண்ணி இங்க இருக்காங்க அதை ஞாபகம் வச்சுக்க" என்றான் சுரேஷ்.
அவனை திரும்பி பார்த்து முறைக்கும் ஷக்தியை பார்த்து,
“ஷக்தி! இனி இவள் உன்னோட சொத்து. நீ தான் நல்லா பார்த்துக்கணும். இங்க நாங்க நல்லா பார்த்துப்போம். ஆனாலும், நீ அப்படியே விடாம சீக்கிரமே வீட்ல எப்படியாவது சொல்ல ட்ரை பண்ணனும். ரொம்பநாள் ரெண்டுபேரும் தனியா இருக்கக்கூடாது புரியுதா?" சுரேஷின் அம்மா கூறுவதை தலையசைத்து கேட்டுக்கொண்டான் ஷக்தி.
“சரிங்க ஆன்ட்டி. நான் கண்டிப்பா சீக்கிரமா சொல்ல ட்ரை பண்றேன். நான் நாளைக்கு வரேன்" என்று சுரேஷ் பக்கம் திரும்பி, ”ரொம்ப பயந்து போயிருக்கா. கொஞ்சம் பார்த்துக்கோங்கடா, சுபாவ கூடயே இருக்க சொல்லு" என கிசுகிசுத்தவனை பார்த்து ”சரி" என்று சிரித்தான் சுரேஷ்.
வெளியே வந்து காரை எடுத்தவனின் சிந்தனையில் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் எண்ணங்கள் ஓடின.
ஷக்தி!
‘நான் ஷக்தி மாதவன், மாதவன் என்னோட அப்பா. எங்க மேல உயிரையே வச்சிருக்கார். ஆனா, வெளிய காட்டமாட்டார். அதனால, எங்களுக்கு அவர் எப்பவும் ஹிட்லர் தான்.
அம்மா சிவஷக்தி. அம்மா மேல இருந்த அளவுகடந்த அன்பாலே எனக்கு ஷக்தின்னு பேர் வச்சார் எங்க அப்பா. எங்க வீட்டோட ஆணிவேர் அம்மா தான், அவங்க சொல்றத மீறி அப்பா எதுவும் செய்ய மாட்டார்.
எனக்கு ஒரே ஒரு தங்கச்சி நிலா. வாலுன்னா வாலு.. ஒண்ணா நம்பர் வாலு பயங்கர சுட்டி.
அப்பறம் நான் தான் ஷக்தி. அப்பாக்கு நான் என்ஜினீயர் ஆகணும்னு ஆசை. ஆனா, எனக்கு எம்.பி.ஏ தான் படிப்பேன்னு படிச்சேன். எனக்கு பிடிச்சதை தான் செய்வேன். ஏன்? அவர் சொல்றத செய்யணுமன்னு அவர் எது சொல்றாரோ அதுக்கு ஆப்போசிட்தான் எப்பவும் செய்வேன்.
பிகாஸ் ஐ லவ் மை டாட். பட் அவருக்காக எனக்கு பிடிச்சதை விட்டுக்கொடுக்க முடியாது அப்டின்றத்துல மட்டும் உறுதியா இருப்பேன்.
சோ, வீட்ல எனக்கும் அப்பாக்கும் எப்பவும் கோல்டுவார் போயிட்டே இருக்கும். அம்மா தான் காம்ப்ரமைஸ் பண்ணுவாங்க.
இப்ப என் கல்யாணமும் அதுமாதிரியே எனக்கு பிடிச்ச பொண்ணோட நடந்துருச்சுனு தெரிஞ்சுது, அவ்ளோதான் என்னை என்ன செய்வார்னு தெரியாது’ என்ற யோசனையில் வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்குள் நுழைந்து பிரிட்ஜில் ஐஸ்வாட்டரை சில்லென குடித்தவனின் கண்கள் தானாக அவன் அன்னையை தேடியது.
உள்ளே இருந்து வந்த அம்மாவை பார்த்ததும் முதல்முறையாக தான் செய்த தவறு உறைக்க, அம்மாவின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்த்தபடி, ”அம்மா! நீங்க இன்னும் தூங்கலையா?” என்றான்.
"இல்லடா! நீ வராம எப்படி தூங்குவேன்? வாப்பா சாப்பிடுவே.” என்று வாஞ்சையுடன் கூறிய அன்னையிடம்,
"இல்லம்மா நான் சாப்பிட்டேன். நீங்க போய் தூங்குங்க, எனக்கும் ரொம்ப சோர்வா இருக்கு." என்று மழுப்பலான பதிலை கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து தன் ரூமிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டான்.
"தெளிந்த நீரில் தெரியும்
பிறைநிலா போல்...
சுடர்விட்டு பிரகாசிக்கும்
அவனின் முகம்
என்னையும் அறியாமல்...
என் மனதை ஒரேடியாக
அவன் பால் ஈர்க்கிறதே"
என்று அவன் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.
கண்ணை பறிக்கும் அழகான மலரின் தேனை பருகுவதுபோல் ஒருவரின் விழியை இன்னொருவர் பருக அங்கே இருவரின் விழிகளும் பேசிக்கொண்டன பல மொழிகளை மெளனமாக.
"உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்... மறுபடி..." ஷக்தியின் போன் அடிக்க. இருவரும் ஒருநிமிடம் தங்கள் நினைவுகளில் இருந்து தடுமாறினாலும் அவள் முகத்திலிருந்து தன் விழிகளை அகற்றாமல் காதில் போனை வைத்து பேசிக்கொண்டிருந்தான்.
அவனின் கூரிய விழிகள் தன்னை அம்பாய் துளைத்தெடுப்பதை தாங்கமுடியாமல் மஹாவின் விழிகள் தானாக தரையை நோக்கின.
அவளை பார்த்துக்கொண்டே, "ஹாய்! மாம்" என்று தன் அம்மாவிடம் பேசினான்.
“ எங்க இருக்க? ஊர்லருந்து வந்தா நேரா வீட்டுக்கு வரணும்னு தெரியாதா?" ஷக்தியின் அம்மா எதிர்முனையில் கேட்க.
"சாரி! சாரி! கொஞ்சம் பிஸி. அதான், இன்பார்ம் பண்ணல" என்றான் மஹாவை பார்த்து.
“ எப்போ தான் வருவ?" என்றார் கடுகடுத்த குரலில்.
"இன்னும் டவெண்ட்டி மினிட்ஸ்ல ஐ வில் பி தேர் மா” என்றான் கூலாக.
"சரி. வீட்டுக்கு சீக்கிரம் வாடா" என்று சிரித்தார்..
"லவ் யூ மாம்” என்றவுடன் மஹாவின் முகம் தானாக தன்னை நோக்குவதையும் கோவைப்பழத்தின் நிறம்கொண்டு அவளின் முகம் கனிந்திருப்பதையும கவனித்து கொண்டுதான் இருந்தான்.
"ஓகே பை!" என போனை கட் செய்தபடியே அவளை நோக்காமல்.
“என்ன இவன்? கல்யாணம் மட்டும் செஞ்சு கூட்டிகிட்டு வந்துட்டான். ஆனா, வீட்ல இருக்கறவங்கள பத்தி எதுவும் சொல்லலையேன்னு தானே நினைக்கிற?” என்று கேட்டான்.
அவளும் ‘ஆம் இல்லை’ என்று இருபக்கமும் தலையாட்டினாள்.
"நீ ரெண்டு பக்கத்துலயயம் தலையாட்றத பார்த்தா எனக்கு சிரிப்பு வருது. நானே சொல்றேன். எனக்கு அம்மா அப்பா அண்ட் ஒரே தங்கச்சி இருக்காங்க. கூடிய சீக்கிரம் நீயும் நம்ம வீட்ல ஒரு ஆளா சேர்ந்துடுவ. சரியா? அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்றான் பார்வையால் கெஞ்சியபடி.
“சுரேஷ் வீட்ல இருக்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க. நீ பயப்படாம இங்க இரு. உன் வீடு மாதிரி இங்க இருக்கலாம், ஆன்ட்டி உன்னை தன் மகளா பார்த்துப்பாங்க." என்றான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக.
"காலம் முழுக்க உன் கூட தான் இருக்க போறேன். அப்போ, ரொம்ப பொறுமையா என் முகத்தை பார்த்துட்டு இருக்கலாம். இப்படி என்னை நீ வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? இப்ப நான் போகணும் போகட்டுமா? இல்லை இங்கேயே உன்கூட இருக்கட்டுமா?" என்றவுடன் புது இடத்தில தனியே இருக்க வேண்டும் என்று பயந்தாலும் தன் கணவனின் வார்த்தைகளால் அவனை காணமுடியாமல் இதழ்களை கடித்தபடி தலை கவிழ்ந்தாள்.
“என் முகம் நோக்க
உன் உள்ளம் விரும்பினாலும்
என் விழி கதிரை காண
உன் இதயத்திற்கு தைரியமில்லையோ?”
“உன்னை இப்படி புது இடத்துல விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா தான் இருக்கு. இப்ப நான் போகணும். அம்மா.. அதான் உங்க அத்தை இன்னும் வரலன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நான் அவங்க முன்னாடி போய் நிக்கறவரைக்கும் நிறுத்தமாட்டாங்க" என்றவுடன் அவள் முகம் வாடுவதை பார்த்து.
"தினமும் கண்டிப்பா நான் வரேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். இவங்க எல்லாரும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க. நம்ம வீட்ல நான் நம்ம கல்யாணத்த பத்தி சொல்றவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று அவளை பார்த்தான்.
‘சரி’ என்று தலையாட்டியதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
"அண்ணா! நாளைக்கு கரெக்டா வந்துருடா. அண்ணி இங்க இருக்காங்க அதை ஞாபகம் வச்சுக்க" என்றான் சுரேஷ்.
அவனை திரும்பி பார்த்து முறைக்கும் ஷக்தியை பார்த்து,
“ஷக்தி! இனி இவள் உன்னோட சொத்து. நீ தான் நல்லா பார்த்துக்கணும். இங்க நாங்க நல்லா பார்த்துப்போம். ஆனாலும், நீ அப்படியே விடாம சீக்கிரமே வீட்ல எப்படியாவது சொல்ல ட்ரை பண்ணனும். ரொம்பநாள் ரெண்டுபேரும் தனியா இருக்கக்கூடாது புரியுதா?" சுரேஷின் அம்மா கூறுவதை தலையசைத்து கேட்டுக்கொண்டான் ஷக்தி.
“சரிங்க ஆன்ட்டி. நான் கண்டிப்பா சீக்கிரமா சொல்ல ட்ரை பண்றேன். நான் நாளைக்கு வரேன்" என்று சுரேஷ் பக்கம் திரும்பி, ”ரொம்ப பயந்து போயிருக்கா. கொஞ்சம் பார்த்துக்கோங்கடா, சுபாவ கூடயே இருக்க சொல்லு" என கிசுகிசுத்தவனை பார்த்து ”சரி" என்று சிரித்தான் சுரேஷ்.
வெளியே வந்து காரை எடுத்தவனின் சிந்தனையில் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் எண்ணங்கள் ஓடின.
ஷக்தி!
‘நான் ஷக்தி மாதவன், மாதவன் என்னோட அப்பா. எங்க மேல உயிரையே வச்சிருக்கார். ஆனா, வெளிய காட்டமாட்டார். அதனால, எங்களுக்கு அவர் எப்பவும் ஹிட்லர் தான்.
அம்மா சிவஷக்தி. அம்மா மேல இருந்த அளவுகடந்த அன்பாலே எனக்கு ஷக்தின்னு பேர் வச்சார் எங்க அப்பா. எங்க வீட்டோட ஆணிவேர் அம்மா தான், அவங்க சொல்றத மீறி அப்பா எதுவும் செய்ய மாட்டார்.
எனக்கு ஒரே ஒரு தங்கச்சி நிலா. வாலுன்னா வாலு.. ஒண்ணா நம்பர் வாலு பயங்கர சுட்டி.
அப்பறம் நான் தான் ஷக்தி. அப்பாக்கு நான் என்ஜினீயர் ஆகணும்னு ஆசை. ஆனா, எனக்கு எம்.பி.ஏ தான் படிப்பேன்னு படிச்சேன். எனக்கு பிடிச்சதை தான் செய்வேன். ஏன்? அவர் சொல்றத செய்யணுமன்னு அவர் எது சொல்றாரோ அதுக்கு ஆப்போசிட்தான் எப்பவும் செய்வேன்.
பிகாஸ் ஐ லவ் மை டாட். பட் அவருக்காக எனக்கு பிடிச்சதை விட்டுக்கொடுக்க முடியாது அப்டின்றத்துல மட்டும் உறுதியா இருப்பேன்.
சோ, வீட்ல எனக்கும் அப்பாக்கும் எப்பவும் கோல்டுவார் போயிட்டே இருக்கும். அம்மா தான் காம்ப்ரமைஸ் பண்ணுவாங்க.
இப்ப என் கல்யாணமும் அதுமாதிரியே எனக்கு பிடிச்ச பொண்ணோட நடந்துருச்சுனு தெரிஞ்சுது, அவ்ளோதான் என்னை என்ன செய்வார்னு தெரியாது’ என்ற யோசனையில் வீடு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்குள் நுழைந்து பிரிட்ஜில் ஐஸ்வாட்டரை சில்லென குடித்தவனின் கண்கள் தானாக அவன் அன்னையை தேடியது.
உள்ளே இருந்து வந்த அம்மாவை பார்த்ததும் முதல்முறையாக தான் செய்த தவறு உறைக்க, அம்மாவின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்த்தபடி, ”அம்மா! நீங்க இன்னும் தூங்கலையா?” என்றான்.
"இல்லடா! நீ வராம எப்படி தூங்குவேன்? வாப்பா சாப்பிடுவே.” என்று வாஞ்சையுடன் கூறிய அன்னையிடம்,
"இல்லம்மா நான் சாப்பிட்டேன். நீங்க போய் தூங்குங்க, எனக்கும் ரொம்ப சோர்வா இருக்கு." என்று மழுப்பலான பதிலை கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து தன் ரூமிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டான்.