6.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
சொல்லுடா இதுக்கு பதில் சொல்லுங்க என்று வர்மன் கத்த…
ரவிச்சந்திரன், “ வர்மா…
நீ இனி என்னைக்கும் என்கிட்டே பேசாத இதை நான் மன்னிக்கவே மாட்டேன்.
சாகித்யா என்று நிமா அழைக்க ஒழுங்கா போய்டு டி எதாவது பண்ணிட போறேன்.
என்ன மிஸ்டர் மரியாதை தெரியாதவங்களா இருக்கீங்க
உனக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு மத்தவங்களை தப்பா பேசுவதும், தவறா நினைக்கிறதும், அவங்களை மட்டம் தட்டுவதும் இருக்க உனக்கு எல்லாம் மரியாதை ஒரு கேடா…?
ஓஓஓ பரவாயில்லையே நான் தவறா தான் புரிஞ்சுக்கிட்டேன் ன்னு சரியா புரிஞ்சு வச்சு இருக்கீங்க என்று கொக்கி போட..
ஹேய் என்று அவளை நெருங்கி நின்றவன் ச்சே உன்னையே என்று நிறுத்தி விட…
முழுசா முடிங்க சாகித்யா ஏன் தயக்கம்?
இங்க பாரு உன்கிட்டே பேச எந்த விஷயமும் இல்ல நீ சென்ட்ரல் மினிஸ்டர் அவ்வளவு தானே நான் எங்க பார்க்கனுமோ அங்க பார்த்துக்கிறேன் என்றவன், எந்த சூழ்நிலையிலும் என்கிட்டே பேசிடாத சந்திரா என்று அவனிடம் உறுமி விட்டு லாலை பார்த்து சொல்லிவிட்டு வெளியே வர அவனுக்கான வாகனம் வந்து இருந்தது. வேகமாக வெளியேறியவன் வண்டி ஏற வர, அவன் வண்டிக்கு பின்னே ரிஷி அவள் வாகனத்தில் இருந்து இறங்கி இருந்தாள். இறங்கியவள் எந்த வித பாவனையும் காட்டாமல் உள் நோக்கி செல்ல…
ஒரு நிமிஷம் என்று வர்மன் நிறுத்த..
சொல்லுங்க சார்..
நீங்க இங்க எத்தனை வருஷமா வேலை பார்த்துட்டு இருக்கீங்க என்றான்.
அது என்ன விஷயம் ?
இல்ல நீங்க ஒரு கலெக்டர் உங்களுக்கு இந்த ஊரோடு நிறைய டீடெய்ல்ஸ் தெரிஞ்சு இருக்கும் அதுக்கு தான்..
நான் இங்க பல வருஷமா இருக்கேன் நீங்க என்ன விஷயம் வேணும் ன்னு சொல்லுங்க எனக்கு தெரிஞ்சதை சொல்லுறேன் என்று ரிஷி சாதாரணமாக சொல்ல…
மனதில் அத்த என்னைய உனக்கு தெரியலையா இல்ல தெரியாத மாதிரி இருக்கியா என்று நினைத்தவன் ஒன்னு இல்ல மேம் ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி இங்க ஒருத்தவங்க இருந்தாங்க அவங்களை பத்தி தெரிஞ்சுக்க தான்..
நான் இங்க வந்து இருபது வருஷம் தான் இருக்கும் சார் ஆனா அதுக்கு முன்ன தெரியாதே என்று சொல்லவும் …
ஓஓஓ …நீங்க மட்டும் தானா இல்ல உங்க ஃபேமிலி என்று நிறுத்த..
சிரித்தவர் எனக்கு இரண்டு பிள்ளைங்க சார் ஏன் கேட்குறீங்க என்றாள் ரிஷி..
இல்ல சும்மா தான் உங்க வீட்டில் இருக்கிறவங்களுக்கு எதுவும் தெரியுமோ ன்னு என்று கேட்க..
சாரி சார் தெரியாது என்றதும் ..,ஓகே மேம் டேக் கேர் என்றவன் வண்டியில் ஏறிவிட..
ரிஷி வீட்டிற்குள் வந்தவள்,லால் எங்கே என்று பார்வையை சுழற்ற..
வாம்மா என்ன தேடுற என்றாள் வாகி…
சார் எங்க?
அவர் ரூம்ல...
அந்த தம்பி கிளம்பிட்டு போல.. அது யாரு வாகி…
அவங்க சும்மா இந்த எசிகேஷன் டிபார்மெண்ட் மேட்டரா வந்தாங்க நீங்க வாங்க நம்ம ரூம் போகலாம். இல்லடி அவருக்கு எதுவும் வேணுமா இல்ல கிளம்புறாருன்னு ..
கிளம்பிடுவார் இன்னும் அரைமணிநேரத்துல..
பேசி முடிஞ்சதா?
முடிஞ்சது ம்மா ஏன் இவ்வளவு கேள்வி என்று புன்னகையுடன் நிமா கேட்க..
ஏன் டி பேச மாட்டா எதாவது நிம்மதி இருக்கா? சாதாரணமா வாழ முடியுதா? எப்ப பாரு பரபரப்பு ன்னு சொன்னா கூட தகும். எப்பவும் நம்ம பேசுறது சந்திக்கிறது எல்லாத்துலையும் திருட்டுதனம் .. யாருக்காக நாம இப்படி வாழனும் சொல்லு நிம்மதியே இல்ல வாகி…
அம்மா… நான் தான் ஊருக்கே நீ தான் என் அம்மா விது என் தம்பி ன்னு சொல்லிடலாம் ன்னு சொன்னேன் அதுக்கு நீ என்ன சொன்ன வேணாம் டி நாம சந்தோஷமா இருக்க முடியாது இன்னொரு இழப்பை என்னால் தாங்க முடியாதுன்னு சொன்ன..
அப்ப நான் சொன்னதுல எதாவது தப்பும் தவறும் இருக்கா வாகி…
நிச்சயமா இல்ல ஆனா எதுக்கு பயந்து ஒளிஞ்சு வாழனும் நாம என்ன தப்பு பண்ணோம்.
தப்பு எதுவும் இல்ல வாகி ஆனா நாம இங்க இருக்கிறது தெரிஞ்சா நிறைய விஷயங்கள்…ப்ச் விடு என்றவர் சரி லால் சாரை எப்ப அழைச்சிட்டு போய் ஏர்போர்ட் ல விடனும்?
நிமாவாகினி, “ அதுக்கு நீ ஏன்?, அவரே கிளப்பிடுவார் நான் காட்ர்ஸ் அனுப்பி விடுறேன் என்றவள் நீ வீட்டுக்கு போ என்ன இன்னும் ஆறு மாசம் தானே நீ ஜாலியா இரும்மா என்றவள் தாயை திரும்ப அனுப்பி விட்டு போனை எடுத்தவள்.,எங்க டா இருக்க?
ஏன் வாகி என்றான் ரகசிய குரலில்
அடேய் எருமை தனியா என்னத்துக்கு போன முதல்ல நீ கிளம்பு உனக்கு தேவையான ஆள் உன்னையே தேடி வருவான் என்று சொல்ல…
நான் வந்த வேலையை நான் தான் பார்க்கனும் வாகி என்று விது சொல்ல..
நீ நல்ல நேர்மையான ஐபிஎஸ் தான் ஒத்துக்கிறேன் . ஆனா இங்க சேப் இல்ல வந்துடு… அங்க உனக்கு கார் ரெடியா இருக்கு கிளம்பு டா என்றவள் ,வண்டி எடு போகலாம் என்றாள் வேந்தனை பார்த்து…
ரவி அண்ணா எங்க?
வேந்தன் அவளை முறைத்தவன் எதுக்கு என்பது போல் பார்க்க…
என்னாச்சு ஏன் இப்படி முகம் போது…
போதும் வாகி அவனை நல்லா சிக்க வச்சுட்டு நீ பாட்டுக்கு வந்தா என்ன அர்த்தம்
உங்களுக்கு அவரை பத்தி தான் தெரியுமே? நான் ரவி அண்ணாவை நல்லவிதமாக சொன்னா அப்புறம் அண்ணாவை துரோகி ரேஞ்சுக்கு நடத்துவார் .இப்ப மட்டும் என்ன வாழுது?
இப்ப கொஞ்சம் கம்மியா இருக்கும் ஏச்சும் பேச்சும்.
இப்ப அடுத்து என்ன பிளான்.?
என்ன பிளான் ன்னா விது வந்து இருக்க விஷயத்தை பகிரங்கமாக வெளியே கொண்டு வந்துட வேண்டியது தான்..
எதுக்கு வாகி அது அவனோட வேலை நீ தலையிட்டா அப்புறம் அவனுக்கு சங்கடம் தானே அவன் டிபார்ட்மெண்ட் ல எப்படி அவனை மதிப்பாங்க..
வேந்தா உனக்கு புரியல இந்த கேஸ் அவனை டார்கெட் பண்ணி அனுப்பி இருக்காங்க அவனால் அங்க பிரச்சினை அவங்களுக்கு என்றவள் நடந்ததை கூற அப்ப இதுலையும் வர்மா தலையிட்டு இருக்கானா…?
அவர் என்ன பண்ணுவார் மிஸ்டர் . ராமைய்யா என்ன சொல்லுராறோ அது தானே முடிவு…
ப்ச் என்ன வாகி எவ்வளவு பெரிய விஷயம் அதுவும் இந்த டிரக் ன்னால எவ்வளவு பொண்ணுங்க என்று பேச…
விடு வேந்தா பார்த்துக்கலாம் என்றவள் விதுவை அழைக்க ஆள் அனுப்பி விட்டதை சொன்னவள் இனி ஆட்டத்தை நேரா தொடங்கலாம் ன்னு என்று பார்க்க..
வேந்தன்,நிஜமா என்று கண்கள் மின்ன கேட்க.
ஆமா அதான் நேர்ல பார்த்துட்டாரே அப்ப இனி பொது வெளியில் தலையை காட்ட வேண்டியது தான் என்றவள் அந்த டிரக் சப்ளையர் ரிஷிபாலாவின் உத்தரவின் படி காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும் இந்தியா முழுவதும் பல பெண்களை இதற்கு அடிமையாக்கி அவர்களை கடத்தி இருப்பது வரை தெரிய, இதில் பல முக்கிய புள்ளிகள் தங்களின் தேவைக்கு இவர்களின் மூலம் பெண்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது வரை அந்த நடு இரவில் நேரடி ஒலிபரப்பு நடக்க, இரவு வீடு வந்து சேர்ந்த வர்மனுக்கு மற்றொரு அழுத்தமாய் காதில் ஒலித்து கொண்டு இருந்தது இந்த செய்தி.
அந்த நடு இரவிலும் ராமைய்யா அந்த ஆபிஸ் அறைக்குள் சரக்கென நுழைந்தவர்…என்ன வர்மா இதெல்லாம் அந்த விதுன் ரிஷி என்ன பண்ணிட்டு இருக்கான் அவனை தானே அனுப்பினோம். இவனை ரகசியமா பிடிக்க சொல்லி, அப்புறம் எப்படி அதுவும் இங்க இந்த இடத்தில் அது யார் அது ரிஷி பாலா எங்கயோ இருக்க ஒரு சின்ன மலைப்பிரதேசம் அங்க இருக்க ஒரு லேடி போய் என்று படபடவென அவர் வார்த்தைகளை கொட்ட..
தாத்தா என்றவன் நானும் இப்ப தான் பார்க்கிறேன் இருக்க என்ன ஏதுன்னு பார்க்கலாம்.
இதுக்கு மேல என்னத்த பார்க்க அங்க அகத்தியன் போனை போட்டு நீங்க எல்லாம் பார்த்துப்பீங்கன்னு தானே நான் ஒதுங்குனேன் இப்படி நடந்துட்டே இப்ப என்ன பண்ண நாளைக்கு எதாவது ன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். என்ன உங்க பொண்ணு உங்க வீட்டோட இருக்க தைரியமா உங்க பெரிய மகனும் உங்க சின்ன மகனும் இப்பவும் எங்க குடும்பத்தில் தான் சம்பந்தம் பண்ணி இருக்கு இதுல நான் மட்டும் இல்ல நீங்களும் தான் என்று வார்த்தைகளை விட..
நிறுத்து அகத்தியன் என்ன விட்டா பேசிட்டே போற? யார்கிட்ட பேசுறோம் ன்னு யோசிச்சுட்டு பேசு என்றவரை ..
அகத்தியன், “ எல்லாம் தெரியும் நீங்க பண்ண அத்தனை வேலையும் தெரியும் குடும்ப விளக்கையே அணைச்ச விஷயமும் தெரியும் என்று போனை பட்டென வைத்து விட அந்த கோபத்தை தான் காட்ட கீழ் இறங்கி வந்து இருந்தார்.
என்ன சொல்ல வரார் தாத்தா? மாமாங்க இரண்டு பேரும் அங்க இருந்தா…
உன் மகன்கள் என் பிடியில் ன்னு சொல்ல வரான்..
ஓஓஓ அந்த அளவுக்கு நாங்க கோழைங்க இல்லன்னு சொல்லுங்க மாமாங்களை நீங்க அங்க விட்டு வச்சது போதும் எதுக்கு அவங்களுக்கு சொத்து பத்து இல்லையா இல்ல நல்ல குடும்பம் தான் இல்லையா எதுக்கு போகனும் என்றவனின் பேச்சை கேட்டு கொண்டாலும்.,அது சரி வராது வர்மா சில விஷயங்களை மாத்த முடியாது உங்க அம்மா இங்கனவே இருந்த மாதிரி தான் அவங்க பிள்ளைகளும் என்று ராமைய்யா சொல்ல..
ஏன் அம்மா இங்கனவே இருக்க ஆசைப்பட்டாங்க? எல்லாம் அவங்க தங்கைக்கு பண்ணது தானே இதுல அம்மா எங்க இருந்து வந்தாங்க?
ஆனால் அதற்கு பதில் சொல்லும் நிலையில் ராமைய்யா இல்லை.. சொல்ல வந்தால் நடந்த அத்தனையும் இல்ல வெளியே வரும் அதுவும் இப்போது நடந்து கொண்டு இருப்பதே பல விஷயங்களை வெளியே கொண்டு வந்து விடுமோ என்று தானே வர்மனை வைத்து காய் நகர்த்தி கொண்டு இருக்கிறார். அவர் நினைத்தது ஒன்று ஆனால் வர்மன் பொதுவான தொழில் விஷயத்தை பேசிக்கொண்டு வருகிறேன் என்று அவர் பேசும் முன் முடித்து சென்று விட்டானே அதை அப்போதே பேசி முடித்து இருந்தால் இப்போது இதை வெளியே வர விடாமல் தடுத்து இருக்கலாமே என்று அவர் நினைத்து கொண்டு இருக்க.
என்னாச்சு தாத்தா…
ஒன்னு இல்ல தொழிலை சரியா சரிகட்டுவேன்னு போனியே என்னாச்சு முடிச்சுட்டியா..?
இல்லை என்பது போல் தலையசைக்க…
இப்ப அந்த பிரச்சனையை என்ன பண்ணுவ இங்க இருக்கவனுங்க எல்லாம் இன்னொரு லாங்குவேஜ் ன்னு அதுக்கு ஒரு புது டிரெண்டு கொண்டு வரலாம் ன்னு பிளான் போட்டுட்டு இருக்காங்க இப்ப அந்த பொண்ணு இப்படி பண்ணா என்ன பண்ண…
….
என்ன அமைதியா இருக்க அப்ப நான் சொன்னது சரி தானே அதுக்கு உன் பதில் என்ன என்று கேட்க அதற்கான பதில் ஒரு பக்கம் கசப்பாக இருந்தாலும் மற்றொரு புறமோ இனிமையான நினைவுகளை கொண்டு வந்து இருந்தது…
தொடரும்