• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

9.நவிலனின் கோதையானாள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
86
77
18
Salem

9.நவிலனின் கோதையானாள்​




வசந்த், “கவி என்ன பண்ணுற?

என்ன பண்ணனும் உங்களுக்கு? ஏன் கிளம்பலையா..?

கவி நாளைக்கு நீ ஆபிஸ் வரனும் அதுக்கு தான் வெயிட் பண்ணுறேன் நீ வந்தா இன்னைக்கு சைன் பண்ண வேண்டிய வேலை எல்லாம் நிறைய இருக்கு நவி போட்டு முடிச்சிட்டான் நீ தான் இனி வந்து பார்க்கனும்..

கவி அமைதியாக இருக்க..

என்ன கவி…

இந்த கம்பெனி உங்க பேருக்கு மாத்திக்கோங்க..

என்ன திடீர்னு…


இல்ல இனி நான் இந்த வேலையை பார்க்கல..

பின்ன வேற என்ன பார்க்கலாம் ன்னு இருக்க கவி என்றார் வசந்த்..

இதோ உங்க பையன் படிப்பை முடிக்க போறான் இப்ப காலேஜ் விஷயமா என்று முடிப்பதற்குள் வசந்த் அது தான் நவி எல்லாத்தையும் பார்த்து முடிச்சிட்டானே..

எல்லாம் சரி தான் நான் பேசிக்குறேன் நான் இப்ப அம்மா வீட்டுக்கு கிளம்பலாம் ன்னு இருக்கேன்..

என்ன திடீர்னு என்று படபடப்பாக வசந்த் பார்க்க

ஏன் எங்க அம்மா வீட்டுக்கு நான் போகக் கூடாதா இதென்ன கேள்வி என்னைய அழைச்சிட்டு போய் விட்டுட்டு நீங்க ஆபிஸ் போங்க..

நான் மட்டும் போய் என்ன பண்ண போறேன் நீ வந்தா தான் அங்க வேலையே..

அப்ப நவி கிட்ட சொல்லுங்க அவன் எல்லாத்தையும் எடுத்துட்டு வரட்டும் வாங்க கிளம்பலாம் என்று சொன்னதும் நீ ரெடி ஆகி வா நான் நவிகிட்ட பேசிட்டு வரேன்.

அவசரமாக வெளியேறி வந்த வசந்த் மச்சான் …

நவி, “சொல்லுங்க மாமா..

புயல் உங்க வீட்டை நோக்கி வருது மச்சான் நீங்க வீட்டுக்கு வந்துடுங்க தங்கச்சி எங்க இருக்கு..

அவ ஸ்கூல் ல இருக்கா மாமா..

என்ன புயல் எதுக்கு இப்படி படபடக்குறீங்க..

வசந்த் கவிதா பேசியதை சொல்ல..

நவிலன் யோசனையுடன் சரி வாங்க அதுக்கு ஏன் பதறிட்டு இருக்கீங்க?

உனக்கு புரியலை அவ அமைதியா இருந்தா எதோ வில்லங்கமான பேசப் போறான்னு அர்த்தம் எங்க அம்மா அதுக்கு தான் பின்னாடி போர்சன் ல இருக்க வீட்டில் இருந்துட்டாங்க ஏதோ தங்கச்சி இருக்க போய் கவலை இல்ல இப்ப அவளும் கிளம்புறா என்ன பாடு படப்போறனோ தெரியல

அட வாங்க மாமா பார்த்துக்கலாம் என்றவன் அப்போது தான் நேரத்தை பார்க்க நேரம் ஐந்தை கடந்து இருந்தது.. ஐஞ்சு ஆச்சு கிளம்பி இருப்பா என்று நினைத்து டிரைவருக்கு போனை போட..

சார் இன்னும் மேடம் வெளியே வரல..

ஓஓஓ சரிங்க அண்ணா நான் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு போன் பண்ணுறேன் என்றவன் உடனே பனிக்கு அழைக்க அதுவரை யோசனையோடு அமர்ந்து இருந்தவள் ஹலோ என்று போனை எடுத்து பேச..


அம்மு கிளம்பலையா ஐஞ்சு ஆச்சு என்றதும் தான் சுற்றி பார்க்க மீனா மட்டும் அமர்ந்து இருக்க வெளியே ஒரு செக்யூரிட்டி நின்று இருந்தார்..

இதோ கிளம்பிட்டேன்..

இல்ல இல்ல அங்கேயே இரு நான் ஒரு கால் மணிநேரத்தில் வரேன்..

ம்ம்..

வேற யாராவது உன்கூட இருக்காங்களா..

மீனா அக்கா இருக்காங்க..

ஓஓஓ சரி வெளியே நம்ம கார் இருக்கு அவங்களை அதுல அனுப்பி விடு நான் வந்துடுறேன்..

ம்ம்

என்ன அம்மு

ஒன்னு இல்ல


சரி எதையும் பெரிசா யோசிக்காத வந்துட்டேன் என்று போனை வைத்து இருந்தான் நவிலன்.

மீனா அக்கா வாங்க கிளம்பலாம் ..

யோசிச்சு முடிச்சிட்டியா பனி…

அக்கா..

பனி யோசிக்க யோசிக்க நிறைய விஷயங்கள் சாதாரணமா இருந்தது எல்லாம் பூதாகரமாகவும் பெரிய விஷயம் எல்லாம் ஒன்னுமில்லாததாகவும் தெரியும் அதனால் போற போக்குல போகட்டும் ன்னு நாம் வாழ்ந்துட்டு போகலாம் முடிஞ்சை பத்தி யோசிக்காத இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு போ உனக்காகவே உன் வீட்டுகாரர் யோசிக்கிறார் ன்னு கேள்விப்பட்டேன் வாழ்க்கை அழகா இருக்கும் யோசிக்காம வாழ்ந்து பார்த்துடு பனி..

சரிக்கா என்றவள் கண்கலங்கி மீனாவை கட்டிக்கொள்ள

மீனா, “சரி சரி அவர் வராரா உன்னை அழைச்சிட்டு போக”


ஆமா அக்கா வாங்க நீங்க வெளியே நம்ம கார் இருக்கு லேட் ஆச்சு உங்களை டிராப் பண்ண சொல்லி இருக்காங்க வாங்க அக்கா..


இல்ல பனி நடந்து போற தூரம் தான் நான் அப்படியே போய்டுவேன்..

இல்ல இல்ல அவரு திட்டுவார் வாங்க என்று அனைத்தையும் எடுத்து கொண்டு வெளியே வர..

செக்யூரிட்டி, “வேலை முடிஞ்சா மேடம் உங்க ரூம்ல போகனுமா என்று பனியை கேட்க..


அச்சோ அண்ணா எப்பவும் போல இருக்க என்ன நீங்க?

இல்ல பாப்பா உங்க இடத்துக்கு ஒரு மரியாதை தரனும் இல்லன்னா எல்லாரும் நம்மளை ஏறி மிதிச்சிடுவாங்க…


அண்ணா…

உலகம் நல்லதை விட கெட்டதை சீக்கிரம் பிடிச்சிக்கும் பாப்பா அதனால் நமக்கு நாம் சுயநலமாக இருக்கிறது தப்பு இல்ல யாருக்கும் துரோகம் பண்ண சொல்லல ஆனா நாம தெளிவா இருந்துக்கனும் அவ்வளவு தான்…வீட்டுக்கா இல்ல வேலை இருக்கா பாப்பா..

வீட்டுக்கு தான் அண்ணா..

சார் வராரா…

ஆமா அண்ணா என்றவள் தயங்கி இருவரையும் பார்க்க..

போகலாம் வாங்க என்று மீனா அழைக்க ஸ்கூல் கேட்டை நோக்கி மூவரும் வந்தனர் கேட்டை நெருங்கிய நேரம் நவிலனும் வந்து சேர்ந்தான்…

ஹாய் அண்ணா இங்க தான் இருக்கீங்களா?

ஆமா தம்பி பாப்பா கிளம்பலையா சரி வேலையா இருக்கும் ன்னு..

ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..

இருக்கட்டும் தம்பி..

சிஸ்டர் நீங்க நம்ப பார்வையே வீட்டுக்கு போட்டுக்க என்றான் நவிலன் மீனாவை பார்த்து..

அட இருக்கட்டும் சார் … நான் நடந்து போய்டுவேன் ஒரு கால் மணிநேரம் தான்..

நோ நோ நீங்க கார்ல போங்க என்றவன் டிரைவரை அழைத்து மீனாவை காரில் அனுப்பி வைத்து விட்டு போகலாமா அம்மு..

ம்ம்..

வரேன் அண்ணா..

சரிங்க தம்பி போய்ட்டு வாங்க பாப்பா என்றார் செக்யூரிட்டி..

பூம்பனி பனியை போல் நடந்ததை எல்லாம் யோசித்து உறைந்து தான் போய் இருந்தாள்..

அப்ப நம்மை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு அப்ப நம்மளை எல்லாரும் எப்படி நினைப்பார்களோ என்று யோசித்தபடி ஏற

நவிலன், “என்ன இவ இவ்வளவு யோசிக்கிறா நாம் தான் எல்லாத்துக்கும் ஆள் வச்சு இருக்கோம் ன்னு தெரிஞ்சா என்ன என்ன யோசிப்பாளோ தெரியலையே என்று நினைத்து கொண்டவன் ..,அம்மு..

ம்ம்

என்னடா யோசனை..

என்னைய பத்தி இன்னும் யார் யாருக்கு தெரியும் என்று பட்டென கேட்டுவிட…

உன்னையே பத்தி யாருக்கு தெரியும் என்றாரே பார்க்கலாம்…

ப்ளீஸ் நவி நீங்க என்ன பண்ணி வச்சு இருக்கீங்க ன்னு எனக்கு ஒன்னுமே புரியல..

உனக்கு எதுவும் புரியவேண்டாம் ஜாலியா ஸ்கூல் ஆபிஸ் ன்னு வா உன் வேலையை பாரு அப்படியே என்னையும் பார்ப்பியாம் அம்மு என்றான் நவிலன்..

அவனின் பேச்சில் பனி அவனை முறைக்க..

இப்படி முறைக்காதடி ஆறு வருஷமா தனி லவ் பண்ணிட்டு இருக்கேன் எப்ப தான் இரண்டுபேரும் லவ் பேர்ட்ஸ் ஆ சுத்துறது என்று நவின் கேட்க..

பனி, “இது என்னது மிஸ்டர் நவிலநேயன் என்று தாலியை தூக்கி காட்ட..

லைசென்ஸ் வாங்கிட்டு கூட லவ் பண்ணலாம் பி12..

ஆனா இந்த பி12 இப்ப லவ் பண்ணுற ஐடியால இல்ல என்றாள் பனி..

நீ பண்ணலாம் வேண்டாம் என்னோட லவ் அக்செப்ட் பண்ணா போதும் அம்மு இப்போதைக்கு என்றான் நவிலன்.


பனி அமைதியாகவே வர..

சரி சரி எதையும் போட்டு குழப்பிக்காத வீட்டுக்கு போகலாம் என்று கிளம்பி இருக்க..

இங்கே கவிதா வசந்தை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்து இருந்தாள்..

மங்கை, “வாங்க மாப்ள வா கவி…

மணி அக்கா காபி…

வரேன் ம்மா என்றவர் காபி தயாரிக்க..

மங்கை, “வசந்தை பார்த்து என்ன விஷயம் என்று பார்க்க..

வந்தோம் கண்ணாலேயே தெரியலையே என்று ஜாடை காட்ட

அமைதியாக அமர்ந்து இருந்த கவியை பார்த்து என்ன கவி ஏன் அமைதியா இருக்கா என்னாச்சு..

ஒன்னு இல்லம்மா

இல்லையே உன் முகமே சரியில்லையே…

ஒன்னு இல்ல நவி எப்பமா வர்றான்


தெரியல கவி போன் பண்ணேன் எடுக்கல

உன் மருமக எங்க ரூமை விட்டு வெளியே வரலையா..


மங்கை, “பனி நவி கூட ஆபிஸ் போய் இருக்கா..

என்ன ஆபிஸ்ஸா



ஆமா

அதுக்குள்ள அவளை ஆபிஸ் அழைச்சிட்டு போகனுமா என்றாள் கவிதா..

இதுல என்ன இருக்கு கவி இனி அவளும் தானே பார்க்கனும்

அவ எதுக்கு மா பார்க்கனும் அது என்ன அவ வீட்டு சொத்தா…

கவி இப்படி பேசாத என்ன பேச்சு இதெல்லாம் நவி என்ன நினைப்பான்

அவன் என்னம்மா நினைக்கிறதுக்கு இருக்கு உண்மையை தானே சொல்லுறேன் அதுல அவளுக்கு என்ன உரிமை இருக்கு..

எனக்கு என்ன உராமையோ அந்த உரிமை அவளுக்கும் இருக்கு அக்கா என்றான் நவிலன்..

திடுக்கிட்டு மங்கை நிமிர்ந்தேன் என்ன பிரச்சினை பண்ண போறாளோ தெரியலையே நவி வேற இப்படி கேட்கிறான் என்று பார்க்க..

அதெப்படி டா..

ஆமா அக்கா உனக்கு எவ்வளவு உரிமையோ அதுல மாமாக்கு உரிமை இருக்கு தானே…

அதெப்படி அவரோட பொருளுக்கு தான் அவருக்கு உரிமை என்று சொல்லிவிட வசந்த் தான் அவமானமாகி நான் கிளம்புறேன் மச்சான்..

அட என்ன மாமா அதுக்குள்ள இருக்க அவ பேசுவதை நீங்க பெரிசா எடுத்துட்டு இனி நீங்க சம்பாதிச்சு அவளுக்கு தராதீங்க அவளே சம்பாத்தியம் பண்ணட்டும் அப்ப தான் அவளுக்கு பொறுப்பு வரும் என்று சொன்னதும் திருதிருவென கவிதா முழிக்க..

சரி மச்சான் அப்ப இனி ஆபிஸ் அவளே பார்க்கட்டும் நான் என் பிசினஸை இத்தனை நாள் ஆள் வச்சு பார்த்ததுண்டு இருந்தேன் அதனால் அதுல நிறைய பிரச்சினை இப்ப நான் ஃப்ரீ மா வேலை பார்க்கலாம்..

கவிதா, “அதெல்லாம் முடியாது நான் ஆபிஸ் போகமாட்டேன்..

ஏன் க்கா என்றான் நவிலன்


பின்ன இத்தனை நாள் நீங்க தானே பார்த்தீங்க எனக்கு அங்க எதுவும் தெரியாது..

இனி தெரிஞ்சுக்க என்றான் நவிலன்..

இல்ல அவர் ஆபிஸ் பார்க்கட்டும் நான் அங்க வரல

அப்ப உன் வேலையை நான் பராக்க முடியாதே நான் சம்பளம் இல்லாம இத்தனை வருஷமா பார்த்ததுட்டு இருக்கேன் கவி என்றான் வசந்த்


அதனால் என்னங்க நீங்க தானே என்னுடைய தை பார்க்கனும்

எதுக்கு

என்ன புதுசா கேள்வி கேட்குறீங்க

ஆமா உன்னுடையதில் எனக்கு எந்த உரிமையும் இல்லன்னு சொல்லும் போது அப்ப அதுல நான் என்ன பண்ணனும்? இனி நீயே பார்த்துக்க என்றவன் மச்சான் இனி நான் ஆபிஸ் வரல நீங்க தான் பார்க்கனும் நான் என் பிசினஸை பார்க்கிறேன்..

அதெல்லாம் முடியாது நான் இனி ஸ்கூல் பார்க்கலாம் ன்னு இருக்கேன் என்று கவிதா சொல்ல


வசந்த் அதிர்ந்து நவிலனை பார்க்க…


எந்த ஸ்கூல் க்கா..

நம்ம ஸ்கூல் தான்..

நம்மளதா நம்ம அப்பா எப்ப ஸ்கூல் நடத்தினாரு என்று கவிதை துளையிடும் பார்வை பார்க்க…

என்ன நவிலா இப்படி பேசுற

வேற எப்படி க்கா பேசனும் என்றவனை பனி என்னங்க என்று பேச வரும் போதே நிறுத்துடி கேடுகெட்டவ எல்லாம் வாக்காலத்து பேசுறியா என்று கத்த அதிர்ந்து ஒரு அடி நவிலனை விட்டு விலகி நின்றாள் பூம் பனி…



தொடரும்










 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
399
100
43
Tirupur
இந்தக் கவி வில்லங்கத்தை ஆரம்பிச்சிட்டாளா? இவளை என்ன செய்ய? நல்லா நாலு அறை குடுத்தா என்னன்னு தோணுது? குடுக்குற அறையில இனி வாயே திறக்கக்கூடாது 😠
 
  • Like
Reactions: Lakshmi kandhan

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
86
77
18
Salem
இந்தக் கவி வில்லங்கத்தை ஆரம்பிச்சிட்டாளா? இவளை என்ன செய்ய? நல்லா நாலு அறை குடுத்தா என்னன்னு தோணுது? குடுக்குற அறையில இனி வாயே திறக்கக்கூடாது 😠
மிக்க மகிழ்ச்சி சகோதரி
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,745
606
113
45
Ariyalur
ரொம்ப ஹார்சா எழுதிட்டேனா சரி குறைச்சிடலாம் மிக்க மகிழ்ச்சி
கவிதா பேச்சை சொன்னேன் சகி 😄😄😄😄வில்லிஸ் இப்படி பேசினாதான் நல்லா இருக்கும் 👍👍👍👍👍👍👍👍👍