இதழ்:-31
தமிழின் பிறந்தநாளிற்கான ஏற்பாடுகள் களைகட்டி இருந்தன.கடந்த நான்கு வருடங்களாக அந்த குடும்பம் எந்த விழாவையுமே கொண்டாடவில்லை.அந்த பாசக்கூட்டில் இருந்து ஒரு பறவை பிரிந்திருக்கும் போது எப்படி மற்றவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.இதோ இப்போது அந்த பறவை கூடு திரும்பிவிட்ட மகிழ்ச்சியில் தமிழின் பிறந்தநாள் ஏற்பாடுகள் அட்டகாசமாக நடைபெற்றன.
பிறந்தநாள் விழாவிற்கான முழு ஏற்பாட்டையும் இளையவர்கள் தாங்களே செய்வதாக தங்கள் பொறுப்பில் ஏற்றிருந்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் நடக்கும் ஒரு கொண்டாட்டம் என்பதனால் சற்று பெரியளவிலேயே செய்ய தீர்மானித்திருந்தனர்.
நாளை பிறந்தநாள் என்ற நிலையில் அனைவரும் உற்சாகமாக விழா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். கேக் தயாரிப்பு மற்றும் ஆடை அலங்காரம் என்பவற்றை வினியும் தாரணியும் தாய்மாருடன் கலந்துபேசி ஏற்பாடு செய்ய விழாவை தோட்டத்திலேயே நடத்துவதால் தோட்டத்தை அதற்கேற்ற விதத்தில் ஒழுங்குசெய்யும் பொறுப்பை பையன்கள் ஏற்றிருந்தனர். விழாவிற்கு தேவையான உணவுகளை ஆர்டர் கொடுப்பது மற்றும் விழாவிற்கு விருந்தினர்களை அழைக்கும் பொறுப்பு தந்தையர்களுக்கு போக தாய்மார் சிற்றுண்டிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.ஆக மொத்தம் அந்த வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்க பேசி சிரித்தபடியே மகிழ்ச்சியுடன் அனைவரும் வளைய வந்தனர்.வீடே கலகலவென்று இருந்தது.
நிலவன் மட்டும் இன்னும் வந்திருக்கவில்லை.அன்று மாலை கண்டிப்பாக வந்துவிடுவதாக தங்கையிடம் வாக்கு கொடுத்திருந்தான்.வினிக்கு தான் அவனை எப்போது காண்போம் என்று ஏக்கமாக இருந்தது.ஆனால் அதையே எண்ணிக்கொண்டிருக்க முடியாமல் அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தன.
கேக் (கட்டிகை or கடினி) தயாரிப்பு வினியினுடையது.தமிழுக்கு அது இன்ப அதிர்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக கேக் தயாரிப்பை தன் வீட்டிலேயே செய்தாள்.தாரணியும் அருகிலிருந்து அவளுக்கு உதவினாள்.
கேக்கை ஏற்றவிதத்தில் வெட்டி வடிவமைத்தவள் ஏய் தரு நல்லா இருக்கா?? என்றாள்.
ம்ம் சூப்பர் வினிக்கா.மேலே ஐசிங் அலங்காரத்தையும் முடித்தால் இன்னும் செமையா இருக்கும்.
ம்ம் அடுத்து அந்த வேலை தான்.மேலே என் அறையில் அதற்கு தேவையான பொருட்கள் ஒரு கவரில் வைத்திருக்கிறேன்.எடுத்து வருகிறாயா.
இதோ வினிக்கா!!! என்ற தாரணி மாடியேறிப் போனாள்.வினியின் அறையை நெருங்கி திறக்கும் போது எதிரே இருந்த அறைக்கதவு திறந்து மித்திரன் வெளிப்பட்டான்.
நின்று ஆர்வமாக திரும்பி பார்த்தாள்.இப்போதெல்லாம் அவனைக் காண்பதே அரிதாக இருந்தது.அப்படியே நேரில் காண நேர்ந்தாலும் ஒரு வெற்றுப் பார்வையுடன் விலகிப் போனான்.தாரணியின் மனம் இப்போதெல்லாம் அவனின் குறும்பு பார்வைக்காகவும் சீண்டல் பேச்சுக்காகவும் மிகவும் ஏங்கியது.
ஆர்வமாக தன முகம் நோக்கியவளை ஒரு கணம் பார்த்தவன் பின் அதே வெற்றுப் பார்வையுடன் விலகிச் சென்றுவிட்டான்.
தாரணிக்கு கோபம் வந்தது. அவன் எதற்காக இப்படி நடந்துகொள்கிறான் என்று அவளுக்கு தெரியும்.அன்று அவன் எடுத்துக் கொடுத்த உடைகளை அவள் வாங்கிக் கொள்ளவில்லையாம்.அந்த கோபத்தில் தான் இப்படி நடந்துகொள்கிறான்.அவனின் கோபத்தில் எதுவித நியாயமுமே இல்லை என்று தாரணிக்கு தோன்றினாலும் அவனின் கோபமும் பாராமுகமும் அவள் மனதைப் பாதிக்கத்தான் செய்தது.
சிறு பெருமூச்சுடன் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே சென்ற போது மித்திரன் வினியின் அருகே அமர்ந்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தான்.இவளைக் கண்டதும் அவன் சிரிப்பு மறைந்தது.தாரணிக்கு வருத்தமாக இருந்தது. எப்படியாவது அவன் கோபத்தை குறைத்துவிட வேண்டும் என்ற வேகம் எழ வினியிடம் சென்று பொருட்களைக் கொடுத்துவிட்டு அவள் அருகிலேயே அமர்ந்தாள்.
வினி பொருட்களைப் பிரித்து இரண்டு பௌல்களில் ஐசிங்க்கு தேவையான பொருட்களைப் போட்டு ஒன்றில் நீல நிறத்தை கலந்து மாஜரீனில் ஐசிங் சுகரும் கலரும் நன்றாக கரையுமாறு கலக்க சொல்லி தாரணியிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை வெறுமனே கலக்குமாறு மித்திரனிடம் கொடுத்தாள்.தான் கேக்கை அலங்கரிக்க தேவையான ஐசிங் பூக்களை தயாரிப்பதில் ஈடுபட்டாள்.
ஆகா தெரியாம உன்கிட்ட வந்து மாட்டிகிட்டேன் போலவே!!! என்று பொய்யாய் அலறினாலும் மித்திரனும் அவர்களுக்கு உதவினான்.
மாஜரீனில் ஐசிங் சுகர் கரைய கரைய மித்திரனின் கோபத்தை எப்படிப் போக்குவது என்று சிந்தித்தபடியே இருந்தாள் தாரணி. ஐசிங் ம்ம் தயாராக அவளுக்கும் ஒரு யோசனை உதித்தது.அதன் படி
வினிக்கா நேற்று என் தோழி ரியால்ல அவளுக்கு அவ அம்மா செம திட்டாம்.
எதற்கு சம்பந்தமில்லாத இந்தப் பேச்சு என்று தோன்றினாலும் ம்ம் ஏனாம்??? என்றாள் வினி.
அவ பெரியப்பாவோட உறவுக்கார பையன் ஒருத்தன் ஊர்ல இருந்து வந்திருக்கானாம்.இவ அவ பெரியம்மா பொண்ணோட ஷாப்பிங் போனப்போ அவனும் கூட வந்திருக்கான்.
ம்ம்
அவ பெரியம்மா பொண்ணும் இவளும் ஏதோ துணி எடுத்தப்போ அந்த பையன் ரெண்டுக்கும் சேர்த்து பணம் கொடுத்துட்டானாம்.இவளும் எதுவும் பேசாம அதை வாங்கிட்டு வந்து வீட்டில சொல்லியிருக்கா. அதுக்கு தான் அவ அம்மா இப்படிதான் யார் எதுகொடுத்தாலும் வாங்கிட்டு வருவியான்னு செம திட்டாம்.
ம்ம் அவ அம்மா திட்டினதில நியாயம் இருக்கு தானே தரு.அடுத்தவங்க அதுவும் ஒரு பையன் எதையாவது வாங்கி கொடுத்தா இப்படித்தான் எதுவும் சொல்லாம வாங்கிட்டு வாறதா?? ஒண்ணு அதை மறுத்திருக்கணும் இல்லைன்னா அதற்குரிய பணத்தை அந்த பையனிடம் கொடுத்திருக்கணும்.உரிமையில்லாத இடத்தில எதையுமே சும்மா பெறுவது தப்பு தானே.
தாரணிக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது.அவளுக்கு தெரியும் வினி இப்படித்தான் சொல்லுவாள் என்று.ஓரக்கண்ணால் மித்திரனைப் பார்த்தாள்.அவன் கர்ம சிரத்தையாய் ஐஸிங்கை கலக்கிக் கொண்டிருந்தான். தாரணி அத்தோடு விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவளோ அவனுக்கு மேலும் தன பக்க நியாயத்தை விளக்கிவிடும் நோக்குடன் தொடர்ந்து
ஆமாம் வினிக்கா நானும் அவளிடம் அதைத்தான் சொன்னேன்.ஒரு மூன்றாவது ஆளிடம் இருந்து அதுவும் ஒரு ஆணிடம் இருந்து நீ இப்படி வாங்கியது தப்பு என்று.!!! நான் சொன்னது சரிதானே வினிக்கா என்று கேட்டபடியே மித்திரனைப் பார்த்தாள்.
அதுவரை தலையை குனிந்தவாறே ஐஸிங்கை கலக்கிக் கொண்டிருந்தவன் தாரணியின் பேச்சைக் கேட்டு சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான்.அவன் கண்கள் இரண்டும் கோபத்தில் ஜொலித்தன.
அது ஏன் என்று புரியாமல் அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே முகம் இறுக கலக்கிய ஐசிங் கலவையை பட்டென்று வைத்துவிட்டு நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன் வினி என்றுவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
அவனின் கோபத்தின் காரணம் அறியாமல் தாரணியின் மனம் கலங்கியது. அவளின் கலங்கிய முகத்தைக் கண்டு என்னாச்சு தரு?? என வினி வினவ சட்டென புன்னகையைப் பூசிக்கொண்டவள் எதுவுமில்ல வினிக்கா என்றபடி வினிக்கு உதவுவதில் கவனத்தைச் செலுத்தினாள்.
கேக் வேலைகளை ஓரளவுக்கு முடித்த இருவரும் மீதி இருந்த கேக்கை அலங்கரிக்கும் வேலைகளை மட்டும் மறுநாள் காலைக்கு என ஒதுக்கிவிட்டு குளித்து உண்டுவிட்டு அலங்காரத்திற்கு தேவையான சில பொருட்களை வெளியே சென்று வாங்கி வந்தனர். பின் விழா வீட்டுக்கு சென்று தமிழ் அணிய வேண்டிய ஆடை மற்றும் அலங்காரம் என்பவற்றை முடிவு செய்தனர்.
தமிழுக்கு நீலநிறம் மிகவும் பிடிக்கும் என்பதால் நீல நிறத்தையே மையப்படுத்தி அனைத்தையும் வடிவமைத்தனர்.மேலும் தோட்டத்தில் விழா நடப்பதால் அந்த பசுமைக்கு ஏற்றமாதிரி அங்கங்கே பச்சையும் இணைந்திருந்தது.
தமிழ் அணிய வேண்டிய ஆடை அணிமணிகள் என அனைத்தையும் ஒழுங்குபடுத்தினார்கள்.தமிழுக்கான ஆடையை வினியே தேர்வு செய்திருந்தாள்.எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்துவைத்துவிட்டு தோட்டத்தில் நடக்கும் ஏற்பாட்டை கவனிக்க சென்றனர்.
செந்துவும் சுவே நிவேயும் தோட்டக்காரரின் உதவியுடன் நன்றாகவே இருந்த தோட்டத்து தரையை மேலும் சற்று சீரமைத்து ஒரு பக்கத்தில் விழா அரங்கை வடிவமைத்திருந்தனர்.தோட்டத்து செடிகொடிகள் எல்லாம் விளக்கு சரங்கள் போர்த்தப்பட்டு கண்சிமிட்டி சிரித்துக்கொண்டிருந்தன.செடிகளில் அங்கங்கே விதவிதமான நிறங்களில் காகிதப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
விழா அரங்கின் திரைச்சீலையும் மேசை விரிப்புகளும் பலூன்களும் மட்டும் மறுநாள் காலைக்கு என ஒதுக்கி வைக்கப்பட்டன.
அனைத்தையும் பார்வையிட்ட வினியும் தருவும் டேய் அசத்துரீங்கடா!! பக்காவா இருக்கு.அதுவும் அந்த செடிகளில் எல்லாம் பூக்களை பூக்க செய்தது செமையா இருக்குடா.யாரோட யோசனைடா இது.
தமக்கைகளின் பாராட்டைக் கேட்டு புன்னகைத்தவர்கள் அது மித்திரன் அண்ணாவோட யோசனை வினிக்கா.அவர்தான் அதெல்லாம் பண்ணினார்.செமையா இருக்கில்ல.
ம்ம் ஆமா ரொம்ப நல்லா இருக்கு.தமிழ் இதையெல்லாம் பார்த்தா துள்ளிக் குதிப்பா.
ஹ ஹ....ம்ம் ஆனா அவளுக்கு இதையெல்லாம் இப்போ காட்டக் கூடாது.நாங்க திட்டம் போட்டது போல இரவு சரியா பனிரண்டு மணிக்கு அவளை இங்கே கூட்டிட்டு வந்து கேக் வெட்ட சொல்லணும்.அப்போ இதையெல்லாம் பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவா.
ம்ம் அது சரி தான் வினிக்கா ஆனா அவகிட்ட இருந்து எப்படி இதையெல்லாம் மறைக்கிறது.இப்போ வெளியே போய் இருக்கிறவ வந்ததும் தெரிஞ்சுடுமே?? செந்தூ கவலையாக வினவவும்
வினி மர்மமாக புன்னகைத்தபடியே அது தான் அவள சின்ன மாமா கூட வெளியே கிளப்பிட்டன்.இருட்ட முதல் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாதுன்னு மாமாக்கு உத்தரவு போட்டாச்சு.
மாமா எப்படியும் எட்டுமணிக்கு முதல் அவளைக் கூட்டிட்டு வரமாட்டார்.அதுக்கப்புறம் அவ வரும் போது தோட்டத்து விளக்கு எல்லாத்தையும் அணைச்சிட்டா எதுவுமே தெரியாது தானே?? அப்புறம் எங்க திட்டம் போல பன்னிரண்டு மணிக்கு அவளை கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுக்கலாம் எப்படி???
அட செம பிளானிங் வினிக்கா.அப்படியே செய்திடலாம்.ஆனா நிலவத்தானும் அதுக்குள்ள வந்திடணும்.அப்போதான் அவளுக்கு முழு சந்தோசமும் கிடைக்கும்.என்றான் செந்தூ.
செந்தூவும் தமிழும் ஒரே வயது ஒரே கல்லூரி என்பதால் நண்பர்கள் போலத் தான் பழகுவார்கள்.ஒருமையில் தான் பேசிக்கொள்வார்கள்.
அதைக் கேட்ட தாரணி.ம்ம் ஆமாம் டா.ஆனால் அத்தான் கண்டிப்பா சொன்ன மாதிரி வந்துடுவார்.என்றாள்.
நிலவனும் சொன்னது போலவே அன்று இரவு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான்.
ஏற்பாடுகளை எல்லாம் முடித்துவிட்டு கண்டிப்பாக நாளை தான் செய்தாக வேண்டும் என்கிறமாதிரியான சிறு சிறு வேலைகளை மட்டும் மறு நாளுக்கென ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கூடத்தில் அமர்ந்து தாய்மார் செய்த சிற்றுண்டியை சுவை பார்க்கிறோம் என்ற பெயரில் அதை காலிபண்ணியபடியே வளவளத்தபடி இருந்தனர்.
அப்போது தான் நிலவனின் கார் கிரீச்சிட்டபடி வாசலில் வந்து நின்றது.அனைவர் பார்வையும் ஒன்றாக ஆர்வத்துடன் வாசலுக்கு தாவ உள்ளே வந்தவனைக் கண்ட சின்னவர்கள் ஹே அத்தான்ன்ன் ............வாங்க வாங்க. ஹப்பா வந்துட்டீங்களா .....எப்போ வருவீங்கள் என்று காத்துட்டே இருந்தோம்.என்றனர் கோரசாக
அவர்களின் உற்சாகத்தைக் கண்டு புன்னகைத்தவன் எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போலவே!! ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு.அழகா செய்திருக்கிறீங்கடா என்றான் பாராட்டாக
ஆமாத்தான். ரொம்ப பெரிய ஏற்பாடு தான்.எல்லாம் திட்டமிட்டது வினிக்கா தான்.நாங்கள் எல்லாம் நடைமுறைப் படுத்த உதவினோம் அவ்வளவுதான்.என்றாள் தாரணி சிரித்தபடியே.
வினியின் பெயரை தாரணி எடுத்தது நிலவனின் பார்வையை வினியின் புறம் திருப்புவதற்காகத்தான்.ஏனெனில் உள்ளே வந்ததில் இருந்து அவன் பார்வை வினியின் புறம் திரும்பவே இல்லை.வினி அவனையே இமை கூட வெட்டாது நோக்கியபடியிருந்ததை கவனித்ததால் தான் தாரணி நிலவனின் கவனத்தை வினியின் புறம் திருப்ப முயன்றாள்.
ஆனால் தாரணி பேசியது காதில் விழுந்தது என்பதற்கு அறிகுறியாக அவளை நோக்கி சிறு புன்னகை சிந்தியவன் எல்லாரும் பேசிட்டு இருங்க நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வருகிறேன் என்று விட்டு மாடிக்கு விரைந்தான்.அவன் பார்வை தற்செயலாய்க் கூட வினியைத் தீண்டவே இல்லை.
தாரணி கேள்வியாக வினியைப் பார்க்க அவள் தாரணியைப் பார்த்து அமைதியாகப் புன்னகைத்தாள்.
அவர்கள் திட்டம் போட்டபடியே அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு எல்லோரும் தோட்டத்தில் கூடினர்.தூங்கிக் கொண்டிருந்த தமிழை நிலவன் சென்று எழுப்பி கண்ணைப் பொத்தியபடியே தோட்டத்துக்கு அழைத்துவந்தான்.தோட்டத்தில் ஒரு சிறிய மேசையில் கேக் வீற்றிருக்க அதன்மேல் மெழுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது.நிலவன் தமிழை அழைத்து வந்து அந்த கேக்கின் முன் நிறுத்தி கைகளை விலக்கவும் தோட்டத்து விளக்குகளெல்லாம் ஒளிர்ந்தது.கூடவே அனைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஒலித்தது.
தமிழின் விழிகள் ஆனந்தத்தில் விரிந்தது.முகம் முழுக்க மகிழ்ச்சி மின்ன தேங்க்ஸ்ணா என்றபடி அருகில் நின்ற தமையனின் தோள் சாய்ந்தாள்.தங்கையின் தலையை இதமாய் வருடிவிட்டு அவளுக்கு ஒரு அழகிய கழுத்தாரத்தைப் பரிசளித்தான் அண்ணன்.
அதைக் கண்ட தாரணி ஏய் உனக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்தது வினிக்காவும் நாங்களும் நன்றி மட்டும் அத்தானுக்கா என்றாள் பொய்க் கோபம் காட்டி.
அதைக்கேட்டு அனைவரும் சிரிக்க தமிழும் புன்னகையுடன் நான் அண்ணாக்கு சொன்ன நன்றி அவர் எனக்காக வந்ததற்காக என்றவள் வினியின் கையைப் பற்றி ரொம்ப நன்றி வினிக்கா என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.வினியும் பதிலுக்கு அவளை அணைத்து வாழ்த்துச் சொன்னதோடு அவளுக்கு ஒரு மோதிரத்தை அணிவித்துவிட்டாள்.அதன் பின் ஒவ்வொருவரும் வாழ்த்து சொல்லி தங்களின் பரிசினையும் கொடுத்தனர்.மித்திரன் வாழ்த்துக்கள் மா என்று கூறி அழகிய பெரிய கரடி பொம்மை ஒன்றை கொடுத்தான்.கூடவே என்னிடமிருந்து இந்த பரிசினை வாங்கி கொள்ளலாம் தானே?? என்று கேட்டான்.அவனின் கேள்விக்கான காரணம் புரியாமல் என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? கொடுங்கள்.என்று கூறி மகிழ்ச்சியுடன் அவனின் பரிசைப் பெற்றுக்கொண்டாள் தமிழ்.
மித்திரனின் பார்வை தாரணியிடம் பாய்ந்து மீண்டது.
மறுநாள் வெளி விருந்தாளிகள் வருவதால் அந்த இரவு நேர கொண்டாட்டத்தை குடும்பத்தினருக்கு மட்டுமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நான் கொண்டாடிய பிறந்தநாளிலேயே இது தான் சிறப்பானது.இந்த நாளை என்னால் மறக்கவே முடியாத ஒரு நாள் ஆக்கிய உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி
எனக்காக எல்லாரும் எவ்ளோ செய்திருக்கீங்கள்.இந்த தூங்குமூஞ்சி கூட பன்னிரண்டு மணிக்கு விழித்திருக்கிறதே என்று பேச்சின் முடிவில் செந்தூவை சீண்டினாள் தமிழ்.
போயும் போயும் உனக்காக வாழ்த்து சொல்ல விழித்திருந்தேன் பார் எனக்கு இது தேவைதான். என்று செந்தூ கடுப்புடன் சொல்ல மீண்டும் ஒரு கலகல நகையோசை அங்கே அரங்கேறியது.
அதன் பின் வந்த சில மணித்துளிகள் அவர்களின் உற்சாகத்திலும் சிரிப்பொலியிலும் அந்த தோட்டமே அதிர்ந்தது.அவ்வளவு கலகலப்பிலும் கூட நிலவன் வினி இடையே இறுக்கமே நிலவியது.வினியின் பார்வை அவ்வப்போது காதலுடன் அவன் புறம் பாய்ந்தாலும் நிலவனின் சாதாரண பார்வை கூட அவள் மேல் பதியவில்லை.
உனக்கு இருக்குடா மவனே!!!!!!!! பல்லைக் கடித்தாள் வினி.
சரி சரி எல்லோரும் போய் படுங்கள்.நாளைக்கு தான் விழா.கொஞ்சமாவது தூங்கினால் தான் நாளைய ஏற்பாடுகளை உற்சாகமாக கவனிக்க முடியும்.என்று ஜெகநாதன் கூற அனைவரும் கலைந்து சென்றனர்.
தமிழின் பிறந்தநாளிற்கான ஏற்பாடுகள் களைகட்டி இருந்தன.கடந்த நான்கு வருடங்களாக அந்த குடும்பம் எந்த விழாவையுமே கொண்டாடவில்லை.அந்த பாசக்கூட்டில் இருந்து ஒரு பறவை பிரிந்திருக்கும் போது எப்படி மற்றவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.இதோ இப்போது அந்த பறவை கூடு திரும்பிவிட்ட மகிழ்ச்சியில் தமிழின் பிறந்தநாள் ஏற்பாடுகள் அட்டகாசமாக நடைபெற்றன.
பிறந்தநாள் விழாவிற்கான முழு ஏற்பாட்டையும் இளையவர்கள் தாங்களே செய்வதாக தங்கள் பொறுப்பில் ஏற்றிருந்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் நடக்கும் ஒரு கொண்டாட்டம் என்பதனால் சற்று பெரியளவிலேயே செய்ய தீர்மானித்திருந்தனர்.
நாளை பிறந்தநாள் என்ற நிலையில் அனைவரும் உற்சாகமாக விழா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். கேக் தயாரிப்பு மற்றும் ஆடை அலங்காரம் என்பவற்றை வினியும் தாரணியும் தாய்மாருடன் கலந்துபேசி ஏற்பாடு செய்ய விழாவை தோட்டத்திலேயே நடத்துவதால் தோட்டத்தை அதற்கேற்ற விதத்தில் ஒழுங்குசெய்யும் பொறுப்பை பையன்கள் ஏற்றிருந்தனர். விழாவிற்கு தேவையான உணவுகளை ஆர்டர் கொடுப்பது மற்றும் விழாவிற்கு விருந்தினர்களை அழைக்கும் பொறுப்பு தந்தையர்களுக்கு போக தாய்மார் சிற்றுண்டிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.ஆக மொத்தம் அந்த வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்க பேசி சிரித்தபடியே மகிழ்ச்சியுடன் அனைவரும் வளைய வந்தனர்.வீடே கலகலவென்று இருந்தது.
நிலவன் மட்டும் இன்னும் வந்திருக்கவில்லை.அன்று மாலை கண்டிப்பாக வந்துவிடுவதாக தங்கையிடம் வாக்கு கொடுத்திருந்தான்.வினிக்கு தான் அவனை எப்போது காண்போம் என்று ஏக்கமாக இருந்தது.ஆனால் அதையே எண்ணிக்கொண்டிருக்க முடியாமல் அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தன.
கேக் (கட்டிகை or கடினி) தயாரிப்பு வினியினுடையது.தமிழுக்கு அது இன்ப அதிர்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக கேக் தயாரிப்பை தன் வீட்டிலேயே செய்தாள்.தாரணியும் அருகிலிருந்து அவளுக்கு உதவினாள்.
கேக்கை ஏற்றவிதத்தில் வெட்டி வடிவமைத்தவள் ஏய் தரு நல்லா இருக்கா?? என்றாள்.
ம்ம் சூப்பர் வினிக்கா.மேலே ஐசிங் அலங்காரத்தையும் முடித்தால் இன்னும் செமையா இருக்கும்.
ம்ம் அடுத்து அந்த வேலை தான்.மேலே என் அறையில் அதற்கு தேவையான பொருட்கள் ஒரு கவரில் வைத்திருக்கிறேன்.எடுத்து வருகிறாயா.
இதோ வினிக்கா!!! என்ற தாரணி மாடியேறிப் போனாள்.வினியின் அறையை நெருங்கி திறக்கும் போது எதிரே இருந்த அறைக்கதவு திறந்து மித்திரன் வெளிப்பட்டான்.
நின்று ஆர்வமாக திரும்பி பார்த்தாள்.இப்போதெல்லாம் அவனைக் காண்பதே அரிதாக இருந்தது.அப்படியே நேரில் காண நேர்ந்தாலும் ஒரு வெற்றுப் பார்வையுடன் விலகிப் போனான்.தாரணியின் மனம் இப்போதெல்லாம் அவனின் குறும்பு பார்வைக்காகவும் சீண்டல் பேச்சுக்காகவும் மிகவும் ஏங்கியது.
ஆர்வமாக தன முகம் நோக்கியவளை ஒரு கணம் பார்த்தவன் பின் அதே வெற்றுப் பார்வையுடன் விலகிச் சென்றுவிட்டான்.
தாரணிக்கு கோபம் வந்தது. அவன் எதற்காக இப்படி நடந்துகொள்கிறான் என்று அவளுக்கு தெரியும்.அன்று அவன் எடுத்துக் கொடுத்த உடைகளை அவள் வாங்கிக் கொள்ளவில்லையாம்.அந்த கோபத்தில் தான் இப்படி நடந்துகொள்கிறான்.அவனின் கோபத்தில் எதுவித நியாயமுமே இல்லை என்று தாரணிக்கு தோன்றினாலும் அவனின் கோபமும் பாராமுகமும் அவள் மனதைப் பாதிக்கத்தான் செய்தது.
சிறு பெருமூச்சுடன் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே சென்ற போது மித்திரன் வினியின் அருகே அமர்ந்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தான்.இவளைக் கண்டதும் அவன் சிரிப்பு மறைந்தது.தாரணிக்கு வருத்தமாக இருந்தது. எப்படியாவது அவன் கோபத்தை குறைத்துவிட வேண்டும் என்ற வேகம் எழ வினியிடம் சென்று பொருட்களைக் கொடுத்துவிட்டு அவள் அருகிலேயே அமர்ந்தாள்.
வினி பொருட்களைப் பிரித்து இரண்டு பௌல்களில் ஐசிங்க்கு தேவையான பொருட்களைப் போட்டு ஒன்றில் நீல நிறத்தை கலந்து மாஜரீனில் ஐசிங் சுகரும் கலரும் நன்றாக கரையுமாறு கலக்க சொல்லி தாரணியிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை வெறுமனே கலக்குமாறு மித்திரனிடம் கொடுத்தாள்.தான் கேக்கை அலங்கரிக்க தேவையான ஐசிங் பூக்களை தயாரிப்பதில் ஈடுபட்டாள்.
ஆகா தெரியாம உன்கிட்ட வந்து மாட்டிகிட்டேன் போலவே!!! என்று பொய்யாய் அலறினாலும் மித்திரனும் அவர்களுக்கு உதவினான்.
மாஜரீனில் ஐசிங் சுகர் கரைய கரைய மித்திரனின் கோபத்தை எப்படிப் போக்குவது என்று சிந்தித்தபடியே இருந்தாள் தாரணி. ஐசிங் ம்ம் தயாராக அவளுக்கும் ஒரு யோசனை உதித்தது.அதன் படி
வினிக்கா நேற்று என் தோழி ரியால்ல அவளுக்கு அவ அம்மா செம திட்டாம்.
எதற்கு சம்பந்தமில்லாத இந்தப் பேச்சு என்று தோன்றினாலும் ம்ம் ஏனாம்??? என்றாள் வினி.
அவ பெரியப்பாவோட உறவுக்கார பையன் ஒருத்தன் ஊர்ல இருந்து வந்திருக்கானாம்.இவ அவ பெரியம்மா பொண்ணோட ஷாப்பிங் போனப்போ அவனும் கூட வந்திருக்கான்.
ம்ம்
அவ பெரியம்மா பொண்ணும் இவளும் ஏதோ துணி எடுத்தப்போ அந்த பையன் ரெண்டுக்கும் சேர்த்து பணம் கொடுத்துட்டானாம்.இவளும் எதுவும் பேசாம அதை வாங்கிட்டு வந்து வீட்டில சொல்லியிருக்கா. அதுக்கு தான் அவ அம்மா இப்படிதான் யார் எதுகொடுத்தாலும் வாங்கிட்டு வருவியான்னு செம திட்டாம்.
ம்ம் அவ அம்மா திட்டினதில நியாயம் இருக்கு தானே தரு.அடுத்தவங்க அதுவும் ஒரு பையன் எதையாவது வாங்கி கொடுத்தா இப்படித்தான் எதுவும் சொல்லாம வாங்கிட்டு வாறதா?? ஒண்ணு அதை மறுத்திருக்கணும் இல்லைன்னா அதற்குரிய பணத்தை அந்த பையனிடம் கொடுத்திருக்கணும்.உரிமையில்லாத இடத்தில எதையுமே சும்மா பெறுவது தப்பு தானே.
தாரணிக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது.அவளுக்கு தெரியும் வினி இப்படித்தான் சொல்லுவாள் என்று.ஓரக்கண்ணால் மித்திரனைப் பார்த்தாள்.அவன் கர்ம சிரத்தையாய் ஐஸிங்கை கலக்கிக் கொண்டிருந்தான். தாரணி அத்தோடு விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவளோ அவனுக்கு மேலும் தன பக்க நியாயத்தை விளக்கிவிடும் நோக்குடன் தொடர்ந்து
ஆமாம் வினிக்கா நானும் அவளிடம் அதைத்தான் சொன்னேன்.ஒரு மூன்றாவது ஆளிடம் இருந்து அதுவும் ஒரு ஆணிடம் இருந்து நீ இப்படி வாங்கியது தப்பு என்று.!!! நான் சொன்னது சரிதானே வினிக்கா என்று கேட்டபடியே மித்திரனைப் பார்த்தாள்.
அதுவரை தலையை குனிந்தவாறே ஐஸிங்கை கலக்கிக் கொண்டிருந்தவன் தாரணியின் பேச்சைக் கேட்டு சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான்.அவன் கண்கள் இரண்டும் கோபத்தில் ஜொலித்தன.
அது ஏன் என்று புரியாமல் அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே முகம் இறுக கலக்கிய ஐசிங் கலவையை பட்டென்று வைத்துவிட்டு நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன் வினி என்றுவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
அவனின் கோபத்தின் காரணம் அறியாமல் தாரணியின் மனம் கலங்கியது. அவளின் கலங்கிய முகத்தைக் கண்டு என்னாச்சு தரு?? என வினி வினவ சட்டென புன்னகையைப் பூசிக்கொண்டவள் எதுவுமில்ல வினிக்கா என்றபடி வினிக்கு உதவுவதில் கவனத்தைச் செலுத்தினாள்.
கேக் வேலைகளை ஓரளவுக்கு முடித்த இருவரும் மீதி இருந்த கேக்கை அலங்கரிக்கும் வேலைகளை மட்டும் மறுநாள் காலைக்கு என ஒதுக்கிவிட்டு குளித்து உண்டுவிட்டு அலங்காரத்திற்கு தேவையான சில பொருட்களை வெளியே சென்று வாங்கி வந்தனர். பின் விழா வீட்டுக்கு சென்று தமிழ் அணிய வேண்டிய ஆடை மற்றும் அலங்காரம் என்பவற்றை முடிவு செய்தனர்.
தமிழுக்கு நீலநிறம் மிகவும் பிடிக்கும் என்பதால் நீல நிறத்தையே மையப்படுத்தி அனைத்தையும் வடிவமைத்தனர்.மேலும் தோட்டத்தில் விழா நடப்பதால் அந்த பசுமைக்கு ஏற்றமாதிரி அங்கங்கே பச்சையும் இணைந்திருந்தது.
தமிழ் அணிய வேண்டிய ஆடை அணிமணிகள் என அனைத்தையும் ஒழுங்குபடுத்தினார்கள்.தமிழுக்கான ஆடையை வினியே தேர்வு செய்திருந்தாள்.எல்லாவற்றையும் சரிபார்த்து எடுத்துவைத்துவிட்டு தோட்டத்தில் நடக்கும் ஏற்பாட்டை கவனிக்க சென்றனர்.
செந்துவும் சுவே நிவேயும் தோட்டக்காரரின் உதவியுடன் நன்றாகவே இருந்த தோட்டத்து தரையை மேலும் சற்று சீரமைத்து ஒரு பக்கத்தில் விழா அரங்கை வடிவமைத்திருந்தனர்.தோட்டத்து செடிகொடிகள் எல்லாம் விளக்கு சரங்கள் போர்த்தப்பட்டு கண்சிமிட்டி சிரித்துக்கொண்டிருந்தன.செடிகளில் அங்கங்கே விதவிதமான நிறங்களில் காகிதப் பூக்கள் பூத்துக் குலுங்கின.
விழா அரங்கின் திரைச்சீலையும் மேசை விரிப்புகளும் பலூன்களும் மட்டும் மறுநாள் காலைக்கு என ஒதுக்கி வைக்கப்பட்டன.
அனைத்தையும் பார்வையிட்ட வினியும் தருவும் டேய் அசத்துரீங்கடா!! பக்காவா இருக்கு.அதுவும் அந்த செடிகளில் எல்லாம் பூக்களை பூக்க செய்தது செமையா இருக்குடா.யாரோட யோசனைடா இது.
தமக்கைகளின் பாராட்டைக் கேட்டு புன்னகைத்தவர்கள் அது மித்திரன் அண்ணாவோட யோசனை வினிக்கா.அவர்தான் அதெல்லாம் பண்ணினார்.செமையா இருக்கில்ல.
ம்ம் ஆமா ரொம்ப நல்லா இருக்கு.தமிழ் இதையெல்லாம் பார்த்தா துள்ளிக் குதிப்பா.
ஹ ஹ....ம்ம் ஆனா அவளுக்கு இதையெல்லாம் இப்போ காட்டக் கூடாது.நாங்க திட்டம் போட்டது போல இரவு சரியா பனிரண்டு மணிக்கு அவளை இங்கே கூட்டிட்டு வந்து கேக் வெட்ட சொல்லணும்.அப்போ இதையெல்லாம் பார்த்தா ரொம்ப சந்தோசப்படுவா.
ம்ம் அது சரி தான் வினிக்கா ஆனா அவகிட்ட இருந்து எப்படி இதையெல்லாம் மறைக்கிறது.இப்போ வெளியே போய் இருக்கிறவ வந்ததும் தெரிஞ்சுடுமே?? செந்தூ கவலையாக வினவவும்
வினி மர்மமாக புன்னகைத்தபடியே அது தான் அவள சின்ன மாமா கூட வெளியே கிளப்பிட்டன்.இருட்ட முதல் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாதுன்னு மாமாக்கு உத்தரவு போட்டாச்சு.
மாமா எப்படியும் எட்டுமணிக்கு முதல் அவளைக் கூட்டிட்டு வரமாட்டார்.அதுக்கப்புறம் அவ வரும் போது தோட்டத்து விளக்கு எல்லாத்தையும் அணைச்சிட்டா எதுவுமே தெரியாது தானே?? அப்புறம் எங்க திட்டம் போல பன்னிரண்டு மணிக்கு அவளை கூட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுக்கலாம் எப்படி???
அட செம பிளானிங் வினிக்கா.அப்படியே செய்திடலாம்.ஆனா நிலவத்தானும் அதுக்குள்ள வந்திடணும்.அப்போதான் அவளுக்கு முழு சந்தோசமும் கிடைக்கும்.என்றான் செந்தூ.
செந்தூவும் தமிழும் ஒரே வயது ஒரே கல்லூரி என்பதால் நண்பர்கள் போலத் தான் பழகுவார்கள்.ஒருமையில் தான் பேசிக்கொள்வார்கள்.
அதைக் கேட்ட தாரணி.ம்ம் ஆமாம் டா.ஆனால் அத்தான் கண்டிப்பா சொன்ன மாதிரி வந்துடுவார்.என்றாள்.
நிலவனும் சொன்னது போலவே அன்று இரவு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான்.
ஏற்பாடுகளை எல்லாம் முடித்துவிட்டு கண்டிப்பாக நாளை தான் செய்தாக வேண்டும் என்கிறமாதிரியான சிறு சிறு வேலைகளை மட்டும் மறு நாளுக்கென ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கூடத்தில் அமர்ந்து தாய்மார் செய்த சிற்றுண்டியை சுவை பார்க்கிறோம் என்ற பெயரில் அதை காலிபண்ணியபடியே வளவளத்தபடி இருந்தனர்.
அப்போது தான் நிலவனின் கார் கிரீச்சிட்டபடி வாசலில் வந்து நின்றது.அனைவர் பார்வையும் ஒன்றாக ஆர்வத்துடன் வாசலுக்கு தாவ உள்ளே வந்தவனைக் கண்ட சின்னவர்கள் ஹே அத்தான்ன்ன் ............வாங்க வாங்க. ஹப்பா வந்துட்டீங்களா .....எப்போ வருவீங்கள் என்று காத்துட்டே இருந்தோம்.என்றனர் கோரசாக
அவர்களின் உற்சாகத்தைக் கண்டு புன்னகைத்தவன் எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போலவே!! ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு.அழகா செய்திருக்கிறீங்கடா என்றான் பாராட்டாக
ஆமாத்தான். ரொம்ப பெரிய ஏற்பாடு தான்.எல்லாம் திட்டமிட்டது வினிக்கா தான்.நாங்கள் எல்லாம் நடைமுறைப் படுத்த உதவினோம் அவ்வளவுதான்.என்றாள் தாரணி சிரித்தபடியே.
வினியின் பெயரை தாரணி எடுத்தது நிலவனின் பார்வையை வினியின் புறம் திருப்புவதற்காகத்தான்.ஏனெனில் உள்ளே வந்ததில் இருந்து அவன் பார்வை வினியின் புறம் திரும்பவே இல்லை.வினி அவனையே இமை கூட வெட்டாது நோக்கியபடியிருந்ததை கவனித்ததால் தான் தாரணி நிலவனின் கவனத்தை வினியின் புறம் திருப்ப முயன்றாள்.
ஆனால் தாரணி பேசியது காதில் விழுந்தது என்பதற்கு அறிகுறியாக அவளை நோக்கி சிறு புன்னகை சிந்தியவன் எல்லாரும் பேசிட்டு இருங்க நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வருகிறேன் என்று விட்டு மாடிக்கு விரைந்தான்.அவன் பார்வை தற்செயலாய்க் கூட வினியைத் தீண்டவே இல்லை.
தாரணி கேள்வியாக வினியைப் பார்க்க அவள் தாரணியைப் பார்த்து அமைதியாகப் புன்னகைத்தாள்.
அவர்கள் திட்டம் போட்டபடியே அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு எல்லோரும் தோட்டத்தில் கூடினர்.தூங்கிக் கொண்டிருந்த தமிழை நிலவன் சென்று எழுப்பி கண்ணைப் பொத்தியபடியே தோட்டத்துக்கு அழைத்துவந்தான்.தோட்டத்தில் ஒரு சிறிய மேசையில் கேக் வீற்றிருக்க அதன்மேல் மெழுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது.நிலவன் தமிழை அழைத்து வந்து அந்த கேக்கின் முன் நிறுத்தி கைகளை விலக்கவும் தோட்டத்து விளக்குகளெல்லாம் ஒளிர்ந்தது.கூடவே அனைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஒலித்தது.
தமிழின் விழிகள் ஆனந்தத்தில் விரிந்தது.முகம் முழுக்க மகிழ்ச்சி மின்ன தேங்க்ஸ்ணா என்றபடி அருகில் நின்ற தமையனின் தோள் சாய்ந்தாள்.தங்கையின் தலையை இதமாய் வருடிவிட்டு அவளுக்கு ஒரு அழகிய கழுத்தாரத்தைப் பரிசளித்தான் அண்ணன்.
அதைக் கண்ட தாரணி ஏய் உனக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்தது வினிக்காவும் நாங்களும் நன்றி மட்டும் அத்தானுக்கா என்றாள் பொய்க் கோபம் காட்டி.
அதைக்கேட்டு அனைவரும் சிரிக்க தமிழும் புன்னகையுடன் நான் அண்ணாக்கு சொன்ன நன்றி அவர் எனக்காக வந்ததற்காக என்றவள் வினியின் கையைப் பற்றி ரொம்ப நன்றி வினிக்கா என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.வினியும் பதிலுக்கு அவளை அணைத்து வாழ்த்துச் சொன்னதோடு அவளுக்கு ஒரு மோதிரத்தை அணிவித்துவிட்டாள்.அதன் பின் ஒவ்வொருவரும் வாழ்த்து சொல்லி தங்களின் பரிசினையும் கொடுத்தனர்.மித்திரன் வாழ்த்துக்கள் மா என்று கூறி அழகிய பெரிய கரடி பொம்மை ஒன்றை கொடுத்தான்.கூடவே என்னிடமிருந்து இந்த பரிசினை வாங்கி கொள்ளலாம் தானே?? என்று கேட்டான்.அவனின் கேள்விக்கான காரணம் புரியாமல் என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? கொடுங்கள்.என்று கூறி மகிழ்ச்சியுடன் அவனின் பரிசைப் பெற்றுக்கொண்டாள் தமிழ்.
மித்திரனின் பார்வை தாரணியிடம் பாய்ந்து மீண்டது.
மறுநாள் வெளி விருந்தாளிகள் வருவதால் அந்த இரவு நேர கொண்டாட்டத்தை குடும்பத்தினருக்கு மட்டுமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நான் கொண்டாடிய பிறந்தநாளிலேயே இது தான் சிறப்பானது.இந்த நாளை என்னால் மறக்கவே முடியாத ஒரு நாள் ஆக்கிய உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி
எனக்காக எல்லாரும் எவ்ளோ செய்திருக்கீங்கள்.இந்த தூங்குமூஞ்சி கூட பன்னிரண்டு மணிக்கு விழித்திருக்கிறதே என்று பேச்சின் முடிவில் செந்தூவை சீண்டினாள் தமிழ்.
போயும் போயும் உனக்காக வாழ்த்து சொல்ல விழித்திருந்தேன் பார் எனக்கு இது தேவைதான். என்று செந்தூ கடுப்புடன் சொல்ல மீண்டும் ஒரு கலகல நகையோசை அங்கே அரங்கேறியது.
அதன் பின் வந்த சில மணித்துளிகள் அவர்களின் உற்சாகத்திலும் சிரிப்பொலியிலும் அந்த தோட்டமே அதிர்ந்தது.அவ்வளவு கலகலப்பிலும் கூட நிலவன் வினி இடையே இறுக்கமே நிலவியது.வினியின் பார்வை அவ்வப்போது காதலுடன் அவன் புறம் பாய்ந்தாலும் நிலவனின் சாதாரண பார்வை கூட அவள் மேல் பதியவில்லை.
உனக்கு இருக்குடா மவனே!!!!!!!! பல்லைக் கடித்தாள் வினி.
சரி சரி எல்லோரும் போய் படுங்கள்.நாளைக்கு தான் விழா.கொஞ்சமாவது தூங்கினால் தான் நாளைய ஏற்பாடுகளை உற்சாகமாக கவனிக்க முடியும்.என்று ஜெகநாதன் கூற அனைவரும் கலைந்து சென்றனர்.