கதையில் வரும் நபர்கள் ருத்ரசமரன், வீணா சாத்விகா , ராமகோபாலன், சம்பூர்ணா, மற்றவர்கள் எல்லாம் கதையின் போக்கில் வருவார்கள்
வாழ்த்துகள்கதையில் வரும் நபர்கள் ருத்ரசமரன், வீணா சாத்விகா , ராமகோபாலன், சம்பூர்ணா, மற்றவர்கள் எல்லாம் கதையின் போக்கில் வருவார்கள்
ஆக மொத்தம் அக்ரஹாரத்து மாமியோட கதைனு சொல்லுங்கோ.. நேக்கு ஆர்வமா இருக்கறது சீக்கிரமா முதல் எபியை போடுறேளா வாழ்த்துகள் ஓதர்ஜி.நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே டீசர்
ஹாய் டியர்ஸ் கதைக்கு சின்னதா ஒரு முன்னோட்டம் தரலாமேனு வந்தேன். படிச்சு பாருங்க.
"இதோப் பாருங்கோ நீங்க மிரட்டினா பயந்துண்டு போக நான் ஒண்ணும் எல்கேஜி குழந்தை இல்லையாக்கும். ஐம் போஸ்ட் க்ராஜுவேட்... **** கம்பெனி ல டீசண்ட் போஸ்டிங்கில் இருக்கறவன். எங்காத்துல வந்து நெஞ்சை நிமிர்த்திண்டு பேசினா பயந்துடுவேன்னு நினைப்போ... நீங்க முதல்ல ஆத்தை விட்டு வெளியே போங்கோ "என்று சத்தம் போட்டான் ராமகோபாலன்.
எதிரில் இருந்தவனோ எதற்கும் அசைந்து கொடுத்தானில்லை.
இப்போ வெளியேப் போறேளா... போலீஸை கூப்பிடவா... அத்திம்பேர் பார்த்துண்டே இருக்கேளே ஏதானும் சொல்லுங்கோ... என அருகில் இருந்த நபரையும் துணைக்கழைத்துக் கொண்டான் அவன்.
எதிரில் இருந்தவன் பார்வையில் கிஞ்சித்தும் மாற்றமில்லை.' நீ யாரை வேண்டுமானாலும் கூப்பிடு 'என்பது போல அழுத்தமாக அமர்ந்திருந்தான்.
"சொல்லிண்டே இருக்கேன் உன் நோக்கத்திற்கும் ஜடமாட்டம் உட்கார்ந்து இருக்கியே ?!"என்று அதட்டியவன் தொலைபேசியில் 100 ஐ அழுத்த போனான்.
"ஹேய்!!" என்றவன் இணைப்பைத் துண்டிக்கும்படி சைகை காட்ட ராமகோபாலன் அசரவில்லை. அழைப்பை விடுக்க எண்ணை அழுத்தி விட்டான். அடுத்த நொடியே தொலைபேசி சுக்கு சுக்காய் உடைந்திருந்தது.
"ஹேய்! அராஜகம் பண்ணறியா...?"என்று அவனிடத்தில் பாய
"ஏய் !மூச் பேசக் கூடாது" என்று எச்சரிக்கை விடுத்து," மறுபடியும் வருவேன். வரும் போது... "என்று அவன் நிறுத்திய தொனியிலேயே ராமகோபாலனால் அத்திம்பேர் என அழைக்கப்பட்டவர்," நீங்க போங்கோ நான் எல்லாம் சுபமா முடிச்சு தரேன்" என்று இறைஞ்சும் தொனியில் பேசி அனுப்பி விட்டார்.
"ம்ம்ம் !"என்றவன், அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்ற நொடியில் அவள் வெளியே வந்து நின்று பெருமூச்சு விட்டாள்.
சட்டென்று உள்ளே வந்தவன் " என் கிட்ட அவ்வளவு பயமா சாத். இதுவும் நல்லா தான் இருக்கு "என்று சிரித்தபடி சென்று விட்டான்.
Thanks ma first epi potuten padingaஆக மொத்தம் அக்ரஹாரத்து மாமியோட கதைனு சொல்லுங்கோ.. நேக்கு ஆர்வமா இருக்கறது சீக்கிரமா முதல் எபியை போடுறேளா வாழ்த்துகள் ஓதர்ஜி.